மனம் மயங்குதே
எபிசொட்-11
அவன் கூறியதை கேட்டு அவர்களுக்கு ஒரே சந்தோசம் , அதன் பின் அவர்கள் அறைக்கு வந்தார்கள் , அறை மிகவும் விசாலமாக இருந்தது , அந்த அறையில் உள்ள படுக்கை அழகான ரோஜா பூ இதழ் நிறத்தில் இருந்தது , அந்த மெத்தை உரை ரொம்ப பஞ்சு போல் இருந்தது , அவர்கள் அறை அழகாக இருந்தது , இதை பார்த்து அவர்களுக்கு மகிழ்ச்சி அவனிடம் நன்றி கூறினார்கள் . அதன் பின் அவர்களை இரவு உணவு உண்ண அழைக்க சமையல்காரன் வந்தான் , அவன் அவர்களிடம் இரவு உணவு தங்களுக்கு என்ன வேண்டும் என்று வினவினான் , அதன் பின் அவர்கள் தங்களுக்கு ஆனா உணவுகளை சொன்னார்கள் அதை அவனும் சமைத்து கொடுக்கிறான் ஒரு அறை மணி நேரம் கழித்து கீழயே வரவும் என்று கூறினான்
அவர்களும் சரி என்று சொல்லி படுக்கையில் படுத்தார்கள் . அவர்களுக்கு ஒரே சந்தேகம் எப்படி இவ்ளோ பெரிய மனிதன் அவர் வீட்டில் யருகேன்று தெரியாத நம்மை தங்க வைப்பார் , இப்படி அவரது சொந்தம் போல் நம்மை பார்த்து கொள்வார் . இதில் என்னவோ இருக்கிறது என்று புரிந்து கொண்டார்கள் , ஆனால் என்னவென்று அவர்களால் யூகிக்க கூட முடியவில்லை , அவர்களுக்கு என்ன வென்றால் ஒரு வேலை அவன் தியாவை காதலித்தால் அவளிடமே சொல்லிவிடலாம் , அப்படி இருக்காது , நம்மை சகோதர பாசத்தோடு அழைத்திருக்கிறார் , தாங்களும் எல்லை மீறாமல் ஒரு சகோதரர் என்னும் எண்ணத்தில் பழக வேண்டும் என்று முடிவு செய்தார்கள் . தியா வும் , ” அது தான் சரி , நானும் அவரை ஒரு நல்ல நண்பனாக மட்டும் நினைப்பான் அதை தவிர என் மனதில் ஒன்றும் இருக்காது என்று யோசித்தாள்” .
இரவு உணவு உண்ண அழைப்பு வந்தது , அவர்கள் கிழ போனார்கள் , டைனிங் டேபிள் ரொம்ப விசாலமாக இருந்தது , அவர்களுக்கு முதல் சூப் குடுக்க பட்டது அதன் பின் அவர்கள் கேட்ட உணவு கொடுக்க பட்டது , அஜய் அவர்களிடம் , ” கூச்சப்படாமல் சாப்பிடுங்க , இது உங்க வீடு ” என்று கூறினான் . பின் அவன் அவர்களிடம் தியா வின் பெயர் தனக்கு தெரியும் மிதி இருக்கும் இருவரின் பெயர்களை கேட்டான் . அதற்கு அவர்கள் , ஒருவர் தன பெயர் கங்கா என்றும் மற்றொருவர் தன் பெயர் கார்த்திகா என்று கூறினாள். பின் அவர்களிடம் அவர்களை பற்றி விசாரித்தான் . அவன் நல்ல பழகியவன் போல நன்று பேசினான் , அவன் பேச்சு அவர்களுக்கு ரொம்ப பிடித்தது , அவர்கள் சாப்பிட்டு முடித்து உறங்க சென்றார்கள் . அவனும் தூங்க சென்றான் , அவன் ரொம்ப நாட்கள் கழித்து இன்று தான் ஒழுங்காக தூங்குகிறான். அவர்களுக்கு முதல் சரியாக துக்கம் வர வில்லை , அவர்கள் புரண்டு கொண்டு தான் இருந்தார்கள் , பின் கங்கா மட்டும் ரூமை விட்டு வெளியே வந்தாள், அவள் படிக்கட்டு விட்டு கிழ இறங்குகிறான் , கதவு பூட்டி இருந்தது , அவள் அங்கு இருக்கும் ஜன்னல் வழியாக வெளியே எட்டி பார்த்தாள், வெளியே செக்யூரிட்டி விடிய விடிய முழித்து இருந்தார்கள் , அவளுக்கு வியப்பு கிட்ட தட்ட 100 பேருக்கு மேலே இருப்பார்கள் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்தார்கள் , அவ்ளோ நேரம் அவளுக்கு அவனுடைய செல்வாக்கு தெரிய வில்லை , ஆனால் இப்போது அவள் நடுங்குகிறாள் , அவன் திடீர் என்று தண்ணீர் குடிக்க கிழ வந்தான் , அவள் அரண்டு நிற்பதை பார்த்தான் . அஜய் அவளை பார்த்து ,”கங்கா உனக்கு என்னாச்சு , ஏன் இப்படி பேய் அறைந்த மாறி இருக்க ” கங்கா அவனை பார்த்து , ” சார் , நீங்க எவ்ளோ பெரிய மனிதர் , நீங்க காரணம் இல்லாமல் யாருனு தெரியாத பெண்களை உங்கள் வீட்டில் வைக்க மாட்டீங்க , உண்மையை சொல்லுங்க சார் , நீங்க எதுக்கு எங்களை இங்க தங்க வச்சுருக்கீங்க , நீங்க சொல்கிற பதிலில் தான் நாங்க இங்க இருக்கணுமா போணுமா என்று முடிவு செய்யணும் , சார் இதுவரைக்கும் நீங்க என் கண்களுக்கு நல்லவராக தான் தோணுது ஆனால் வெளியே நிற்கும் படைகளோ உங்கள் செல்வாக்கு எனக்கு பயமாக இருக்கிறது , நீங்க எங்களை உங்க தங்கச்சி என்று சொன்னதை நம்பி தான் நாங்க வந்திருக்கிறோம் சொல்லுங்க சார் உண்மையை , ” அஜய் அவளை பார்த்தான் ,” கங்கா , நீ யூகித்தத்து சரி தான் , நான் எதற்கு உங்களை இங்கே தங்க வைக்க வேண்டும் ஆனால் நீ நினைக்கிற மாறி நான் உங்களை ஏமாற்ற வில்லை , நீ எந்த யோசனையில் என்னிடம் கேட்கிறாய் என்று எனக்கு நல்ல புரியுது , நீ நினைக்கிற மாறி ஒன்னும் இல்லை , நான் சொல்வதை யாரிடமும் சொல்ல கூடாது எனக்கு வாக்கு குடு , ” என்றான் . அவளும் சரி நான் சொல்ல மாட்டான் என்றாள் , அவன் அவளிடம் ,” நான் தியாவை காதலிக்கிறேன் , அவளை பற்றி எனக்கு ஒன்னும் தெரியாது என்னை அவளுக்கு புடிக்கணும் அதுக்காக தான் , நீ அவளிடம் சொல்லாதே தெரிந்தால் அவள் போய்விடுவாள் நான் தப்பான எண்ணத்தில் இல்லை , எனக்கு அவளை ரொம்ப பிடித்திருக்கிறது , அவளை கல்யாணம் பண்ணனும் என்று தோன்றுகிறது , ” என்றான் .