அத்தியாயம் 6
இவ்வாறாக நாட்கள் பல நகர்ந்தன. பரீட்சைகள், கணிப்பீடுகள் என பல்கலைக்கழகத்தின் ஒரு வருடம் கழிந்து விட்டது. அன்று ஏப்ரல் விடுமுறைக்காக அனைத்து மாணவர்களும் தத்தமது வீடுகளை நோக்கிப் புறப்பட்டனர். “சுமி உன்னோட திங்ஸ் எல்லாம் ரெடி பண்ணிட்டியா? ஸ்வட்டர் இருந்தா எடுத்துக்கோ, இல்ல தேவையில்ல அங்கயே வாங்கிக்கலாம் என்றாள்” மதி.
“என்னடீ நீ பாட்டுக்கு ஸ்வெட்டர் என்டெல்லாம் சொல்ற? ஏன் ரிங்கோ போறதுக்கு ஸ்வெட்டர் எல்லாம், அங்க அடிக்கிற வெயிலுக்கு வெள்ளக்காரன் போல திறந்து போட்டுத்தான் தெரியனும், லூசு” என்று சுமி கூறினாள். “ச்சீ என்ன பேச்சுடி இதெல்லாம்? இப்போ வர வர நீ கெட்டுப் போயிட்டடீ. நீ உங்க ஊருக்குப் போற என்டு யார் சொன்னது? நீ இப்போ பதுளைக்கு தான் வர போறாய், அம்மா போன வெகேஷக்கே உன்ன கூட்டிட்டு வர சொன்னாங்க, இந்த முறை ஷீவர் பண்ணி சொல்லிட்டேன் நீ வருவ என்டு, எனக்கு அங்க போயிட்டு எல்லார்கிட்டயும் பதில் சொல்லிட்டு இருக்க முடியாது, பேசாம கிளம்புற வழியைப் பாருடி என்றாள் மதி.
“நீ பாட்டுக்கு கிளம்ப சொல்றியே…பாட்டியும் மாமாவும் எனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க, அவங்ககிட்ட ஒரு வார்த்தை கூட கேட்க இல்ல சும்மா விளையாடாமா போடீ” என்று அவளுடைய வேலையை பார்க்க ஆரம்பித்தாள் சுமி. “ஹலோ பாட்டிமா நான் மதி பேசுறேன், பாருங்க இந்த சுமிய வீட்டுக்கு வர மாட்டேங்கிறா, இந்த பேத்திக்காக அவள என் கூட அனுப்பி வைக்கிறேன் என்டு நேத்து நைட் சொன்னீங்க தானே” என்று மதி சுமியின் பாட்டியிடம் பேச,
இது “இது எப்படி நடந்திச்சு திருடீ” என்றவாறு சுமி போனை வாங்கினாள். “அம்மா சுமி போயிட்டு வாடா செல்லம், மாமா கூட நேத்தே சொல்லிட்டான் உன்ன போக சொல்லி, மதி அவனோடயும் பேசிட்டாம்மா, கவனமாப் போயிட்டு கவனமா வாடாம்மா” என்று போனில் ஒரு முத்தத்தை விட்டெறிந்தாள். சுமி; பதிலை பாட்டியிடம் கொடுக்க முதல் போனை பறித்த மதி “தாங்ஸ் பாட்டிமா உம்ம்ம்;மா” என்று போனை கட் பண்ணி விட்டு மகிழ்ச்சியில் சிறு பிள்ளை போல துள்ளிக் குதித்தாள்.
“இதெல்லாம் எப்போ நடந்திச்சு, எனக்கே தெரியாமா என் பாட்டிய கவுத்திட்டியா? என்று சுமி கேட்க “உன் பாட்டிய நான் கவுத்திட்டத பத்தி மட்டும் சொல்றியே என்னோட டோடல் பெமிலியும் நீ போட்ட ஒரு ஸ்மைல் பந்துலயே ஓல் அவுட் அது தெரியாமா சும்மா சீன் போட்டுட்டு இருக்காதடீ” என்று பதிலுக்கு கதைத்தாள். மதி சாதாரணமாகவே இவ்வாறு பேசுவது இல்லை.
அவளது பேச்சிலும், துள்ளலிலும் சுமியின் வருகையை இட்டு மதி எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறாள் என்பதை சுமி அறியாமலில்லை. மறுவார்த்தை பேசாமல் சுமி மதியுடன் கிளம்பினாள். இருவரும் கொழும்பிலிருந்து பதுளை நோக்கிச் செல்லும் பஸ்ஸிலே ஏறிக் கொண்டார்கள். பல்கலைக்கழகத்திலிருந்து இருபது ரூபாய் கொடுத்து புறக்கோட்டைக்குச் சென்றே பஸ’ ஏற வேண்டும். மதி இருவர்களுக்கும் என்று முன்னமே சீட்டுக்களை பதிவு செய்திருந்தாள்.
கிட்டத்தட்ட ஏழு மணித்தியாலங்கள் வேண்டும் கொழும்பிலிருந்து பதுளை செல்வதற்கு. கொழும்பு தாண்டிய பதுளையை நெருங்கிய பாதைகளில் இயற்கை அன்னை தன் அழகை கொட்டி நீவி விட்;டிருந்தாள். அதன் அழகை இரசித்தவாறே சுமியுடைய பதுளை நோக்கிய பயணம் அழகான தாகவும், நினைவுகள் கூடியதாகவும் மாறியது. மதியின் தோளில் தலை சாய்த்தவாறே சுமி தூங்கிப் போக அவளுடைய தலையை மெதுவாக தடாவிக் கொடுத்து விட்டாள் மதி. அவர்கள் இறங்க வேண்டிய இடமும் வந்தது.
அங்கே அவர்களுக்காக காத்திருந்தது, மதியுடைய பெரியப்பா, அதாவது அருணாச்சலத்தினுடைய இரண்டாவது அண்ணனான கந்தவாமி பெரியப்பாவின் மகன் விஷ்வா. விஷ’வாவைக் கண்டதும் மதி “அண்ணா” என்று தாவி ஓடி மார்பில் சாய்ந்து கொண்டாள். விஸ்வா மதியை ஆதரவாக அணைத்துக் கொடுத்தவன் தனது தலையை லேசாக உயர்த்திய போது தான் சுமியைக் கண்டான்.
“அண்ணா இது சுமி என்னோட பெஸ்டீ” என்று சுமியை அறிமுகம் செய்து வைத்தாள். சுமி அவனைப் பார்த்து ஒரு மெல்லிய புன்னகையை சிந்திவிட்டு அவர்களை ஏற்றிச் செல்ல வந்த காரில் ஏறிக் கொண்டாள். மதி பல்கலைக் கழகத்தில் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் சொன்னாள், ஆனால் அங்கு ஸ்ரீ பற்றிய விடயம் மற்றும் விதிவிலக்காக இருந்தது, அது தேவையற்றது என்று கூட அவள் நினைத்திருக்கலாம்.
மதி சொல்வதையெல்லாம் ஆம் ஆம் என்று தலையை ஆட்டி கேட்டுக் கொண்டே வந்தான் விஷ்வா. அவன் யாரிடமும் அவ்வளவு அதிகமாகப் பேச மாட்டான், அதிகமாக பேசுபவர்களைக் கண்டாலும் அவனுக்கு பிடிக்காது. மதி அவர்களது குடும்பத்தின் கலங்கரை விளக்கம் என்பதால் அவள் சொல்லும் விடயங்கள் அவனுக்கு தேவையற்றது என்றாலும் விரும்பி கேட்டுக் கொண்டு வருவான்.
விஷ்வா இரகசியமாக மதியிடம் “என்ன உன்னோட பிரண்டு வாயே திறக்க மாட்டாங்களா? ரொம்ம சைலன்டோ என்று கேட்டான். மதிக்கோ சிரிப்பு வந்து விட்டது. எதுவுமே சொல்லாமல் “வாய திறந்தா மூடவே மாட்டாள், பார்க்க தானே போற அண்ணா? என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள். சுமிக்கு விஷ’வா மதியிடம் வினவியது கேட்ட போதும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அமைதியாகவே இருந்தாள்.
மதி பல்கலைக் கழகத்தில் சுமியைத் தவிர அவ்வளவாக யாரிடமும் பேசியது கிடையாது. ஆனால் தனது குடும்பத்திடம் அதிகமாக பேசுவாள், அவளது பேச்சில் எல்லாம் அவளது குடும்பத்தை பிரிந்திருந்த துயர் அப்பட்டமாக தெரிந்தது.
சுமி மதியின் குடும்பத்தினரை பார்ப்பதற்கென காத்திருந்தாள், அதற்கு சற்று தாமதிக்காமல் மதியின் வீடும் வந்தது. கலைப் பீடமே வியந்து பார்க்கும் அழகிகள் இருவரும் ஒன்றாக வந்து இறங்கும் போது விஷ்வாவின் அம்மா ஆர்த்தித் தட்டோடு வந்து நின்றார். “வாமா மதி, வாமா சுமி என்று வரவேற்றவராக ஆர்த்தி எடுத்தார். அங்கே அவர்களின் நடத்தை எதுவுமே சுமியையும் மதியையும் பிரித்து பார்ப்பதாகவே இருக்கவில்லை. மதியிடம் காட்டும் அதே பரிவையும், அக்கறையையும் சுமியிடமும் காட்டினார்கள்.
சுமி வந்து இரண்டாவது நாள் அன்று குடும்பத்துடன் அனைவரும் தங்களது ஊர் திருவிழாவுக்கு போகத் தீர்மானித்தவர்களாக புதிய ஆடைகளை அணிந்து கொண்டார்கள். சுமியோ நான்கைந்து சுடிதார்களை மாத்திரம் எடுத்து வந்தாள். இங்கே எங்கே சாரி தேடிப் போவது, மதி வேறு சொல்லிவிட்டாள் கண்டிப்பாக சாரி அணிய வேண்டும் என்று, முன்னமே சொல்லியிருந்தால் கொழும்பிலேயே வாங்கியிருக்கலாமே, வரவில்லையென்று சொல்லவும் முடியாது, கட்டாயமாக புதிய சாரி அணிய வேண்டும், ஆண்கள் என்றால் சிறியதில் இருந்து பெரியது வரைக்கும் பட்டு வேஷ்டி அணிய வேண்டும் என்ற வழக்கம் வேறு அவர்களிடம் உள்ளது, சரி மதி குளித்து விட்டு வந்ததும் அவளிடம் கேட்டுக் கொள்ளலாம் என்று கட்டிலில் உட்கார்ந்து விட்டாள். மதி மதி என்று யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்டது.
அது விஷ்வாவின் குரல், ஏனோ தெரியவில்லை சுமிக்கு விஷ்வாவைப் பார்த்த முதல் நாளே அவனிடம் வம்பிழுக்க வேண்டும் போல இருந்தது. எழுந்து கதவைத் திறந்தாள், சுமி அப்போதே குளித்து விட்டு டவளை தலையில் சுற்றியிருந்தாள். கதவைத் திறந்து விட்டு வேண்டுமென்று அங்கும் இங்கும் தேடுவதைப் போல் பாசாங்கு செய்தாள்.
பொறுமையிழந்த விஷ்வா “ஹலோ என்ன தேடுறிங்க? என்று சற்று முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு கேட்டான். “இல்லீங்க ”னை கத்தின சத்தம் கேட்டிச்சு, அது தான் ”னை எங்கேன்டு தேடுறேன்” என்றாள் சிரித்துக் கொண்டே. விஷ்வா பார்க்கும் போது தனது புன்னகையை மறைத்து விட்டு முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டாள்.
விஷ்வா யாரிடமும் அதிகமாகப் பேச மாட்டான். சுமியின் பேச்சோ அவனுக்கு எரிச்சலைத் தந்தது. “மதி சாரி வாங்கி வர சொன்னா, அவகிட்ட கொடுங்க” என்று கிளம்பினான்.
“ஏங்க நீங்க யாருக்கிட்டயும் அதிகம் பேச மாட்டீங்களா? உங்க பெமிலி ஆட்கள தவிர” என்று விஷ்னுவிடம் கேட்டாள் சுமி.
“வீட்டுக்கு வாறவங்கள எங்கட பெமிலில இருந்து பிரிச்சுப் பார்க்கிற பழக்கம் எங்களுக்கில்ல” என்று அவன் போகப்பார்க்க
“அப்போ ஏன் ஏங்கிட்ட பேச மாட்டேங்கிறீங்க” என்றதுக்கு
“எனக்கு யார்கிட்டயும் தேலையில்லாம பேசி பழக்கம் இல்லீங்க” சொல்லி விட்டு மீண்டும் கதைக்கு பிடித்து விடுவாளோ என்று அந்த இடத்திலிருந்து கிளம்பி விட்டான். அவனது நடையில் ஒரு கம்பீரம் இருந்தது, அவனது ஆடை சாதாரணமாக இருந்தாலும் அதில் அவன் ராஜா போலவே இருந்தான். அவனது கடுமையை இரசிக்க சுமிக்கு மிகவும் பிடித்திருந்தது. அதை விடவும் அவனது குடும்பத்திலிருந்து சுமியை பிரித்துப் பார்க்கவில்லை என்ற வார்த்தை அவளுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது.
சாரியை வாங்கிக் கொண்டு சுமி செல்லவும், மதி குளியளறையில் இருந்து வரவும் சரியாக இருந்தது. “இந்தாடீ உன்னோட ஹிட்லர் அண்ணன் இத தந்திட்டுப் போனாரு, அவருக்கு உன்ன பார்த்தா மட்டும் தான் சிரி;ப்பு வரும் போல, பயபுள்ள சிரிக்கவே மாட்டேங்குது” என்று தனது வருத்தத்தை இயல்பான முறையில் சொன்னாள் சுமி.
“ஏய் எண்ணோட அண்ணனயா ஹிட்லர் என்டு சொன்ன, கொன்னுடுவேன் பாத்துக்க, அவன் சிரிச்சு நீ பார்த்தில்ல அது தான் சொல்ற நீ, இது எனக்கில்ல உனக்குத் தான் சாரி, எடுத்துக்கோ, நான் தான் உனக்கு புது சாரி வேணும்டு அண்ணாக்கிட்ட சொல்லி இருந்தேன். எடுத்து கட்டிக்கோ” என்றாள் மதி.
“உங்க அண்ணனையா கட்டிக்க சொல்ற” என்றாள் சுமி விதண்டாவாதமாக.
“ஆசதான், சாரிய எடுத்து கட்டிக்கோடீ, உன்னோட டேஸ்டெல்லாம் அவனுக்கு தெரியாது, பட் சாரி நல்லா செலக்ட் பண்ணுவான், அவனுக்கு கேல்ஸ் சாரி வெயார் பண்ணினா ரொம்ப புடிக்கும்” என்று மதி விஷ்வாவைப் பற்றி ஒரு அறிமுகத்தை கொடுத்து விட்டாள்.
“ஏண்டீ மதி உங்க அண்ணன் யாரையாவது லவ் பண்றானா? என்ற சுமியின் கேள்விக்கு மதி பலமாக சிரித்து விட்டு “ஆமாண்டீ அவன் யாரையும் லவ் பண்ணிறப் போறான், அவனுக்கு இந்த லவ் எல்லாம் செட் ஆகாது, அம்மாப்பிள்ளைடீ, எங்க பெமிலில உள்ள கேல்ஸ’ அஹ் தவிர அவன் வேறு யார்கிட்டயும் அதிகம் பேச மாட்டான், ஊரே அவன் பின்னாடி சுத்தும், நீ திருவிழாக்கு வறத் தானே போற அப்போ பாரு, அது சரி ஏன் அவன பத்தி நீ கேக்குற? என்று மதி வினவ “ இல்லடீ நிலம் சும்மா இருந்தா நான் ஒரு பட்டாவ போட்டு, இடத்தை ஆக்கிரமிக்கலாம் என்டு தான் கேட்டேன்” என்றாள் சுமி.
“அதுக்கென்ன ரை பண்ணி பாரு, என்னவொன்னு விளைவுகள் தான் பாரதூரமா இருக்கும். வாயடிச்சிட்டு இருக்காம போய் ரெடியாகு போடீ” என்று மதி சுமியை குளியறையை நோக்கி தள்ளி விட்டாள்.
எல்லோரும் கோயிலுக்குச் செல்ல தயாரானார்கள். “ இதோ மதியும் வந்தாச்சு, ஏம்மா மதி சுமி எங்கே” என்றார் மகேஸ்வரி.
மதி பஞ்சு மிட்டாய் நிற சாரி அணிந்திருந்தாள், அவளுடைய நிறமும் சாரியின் நிறமும் ஒன்றை ஒன்று விஞ்சுவது போலவே காணப்பட்டன. அந்த சாரி மதியின் அழகை மெருகூட்டியது. “அம்மா அவள் அப்பவே குளிச்சிட்டாள், இப்போ வந்திடுவா, என்கிட்ட வாறேன் என்று சொன்னாள்” என்று மதி கூறி முடிப்பதற்குள் சுமி மாடியிலிருந்து இறங்கி வந்தாள்.
மதியின் விழிகள் ஒரு கணம் அது தன்னுடைய நண்பியா என நம்ப மறுத்தது. வெறும் டொப்புக்குள்ளும், சல்வாருக்குள்ளும் மட்டும் ஒழித்து வைத்திருந்த அவளது அழகு சாரி அணிந்ததும் கரை புரண்யோடியது. “அம்மா போலாமா என்ற விஷ்னுவின் கதை அங்குள்ளவர்களின் காதில் விழவில்லை. அப்படி எதைக் கண்டு லயித்துப் போயிருக்கிறார்கள் என்று அவர்களின் விழி பதிந்து போன திசையை நோக்கினான்.
சுமி தயங்கியபடி மாடியிலிருந்து இறங்கி வந்தாள். நீல நிறப் பட்டுப் புடலையில் ஓரம் எல்லாம் தங்க நிறத்தில் ஆக்கப்பட்டிருந்தது. அதற்கு ஏற்றாற் போல ஜாக்கேட், பிளீட் எல்லாம் அழகாக எடுத்து, கூந்தலில் கொஞ்சத்தை இலேசாகப் பிண்ணி விட்டிருந்தாள். சாரியின் பிளீட்டினை பிடித்தவாறே கீழே இறங்கி வந்தாள். இவளுடைய மெல்லிடையில் அந்த சாரி அழகாக ஒட்டியிருந்தது.
தாமரைப் ”க்கள் போன்று மேலெழுந்திருந்த அவளது கொங்கைகள், கழுத்தில் இருக்கிறதா இல்லையா என்பதைப் போல கழுத்துடன் ஒட்டியிருந்த நூல் போன்ற தங்கச் சங்கிலி, அதற்குப் பாரமில்லாதவாறு இதயம் வடிவிலான பென்டென், அதன் நடுப்பகுதியில் ஒரு புள்ளி, அதற்கு மேல் அவளது முகம், அதன் வசீகரத்தைக் கூட்டும் புன்னகை என கலக்கிக் கொண்டிருந்தாள் சுமி.
அவளது சாதாரமான அலங்காரமே அவளின் அழகை அள்ளிக் கொடுத்தது.
சுமியின் வதனத்தினை ஏந்தி விஷ்னுவின் அம்மா, மதியின் அம்மா என மாறி மாறி முத்தமிட்டார்கள், சுமி கண்கலங்கி விட்டாள், அங்குள்ள பெரியவர்களின் காலில் விழுந்து அழகு மங்கையர் இருவரும் ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டணர்.
சுமியினுடைய அழகு விஷ்னுவின் மனக்கண்முன் அவனுக்கே நன்கறிந்த ஒரு உருவத்தை மின்னல் போல் பளிச்சிடச் செய்தது. சுமியுடைய அழகில் ஏதோ குறையிருப்பதாக விஷ்னுவிற்குத் தோன்றியது. என்ன என்று யோசிப்பதறகுள் “ஏம்மா மதி நீ ” வச்சிருக்கியே கூந்தலில, சுமிக்கும் கொடும்மா என்று கூறினார் மகேஸ்வர். அம்..மா அது வந்து அவளுக்கு ” தலைல வைக்கிறதென்டா கொஞ்சம் அலர்ஜி, அது தான் என்று கூற
சுமி அதைத் தடுத்து “பரவாயில்ல அம்மா நான் வச்சுக்கிறேன், எல்லா நேரமும் இல்ல தானே, கோயிலுக்கு போறப்போ பாட்டி கூட ” வச்சு விடுவாங்க” என்றாள் சுமி.
“விஷ்வா சாமி படத்துக்கு முன்னால இருக்கிற மல்லிகைப் ”வ எடுத்திட்டு வாப்பா என்றார் விஷ்னுவின் தாய் லதா. அம்மா நானா என்று ஒரு பார்வை பார்த்தவனை கவனிக்க சுமியின் கண்கள் தவறவில்லை. “விஷ்னு என்னடா யோசிக்கிற போய் எடுத்திட்டு வா” என்று மீண்டும் கூற சரி என்று தலையசைத்து விட்டு சென்று சாமியறையை நோக்கி விரைந்தான் விஷ்னு.
அவனது சிறு பிள்ளைத் தனத்தை நினைத்து தனக்குள் சிரித்தாள் சுமி. “சுமிக்கா உங்களுக்கு சாரி ரொம்ப அழகா இருக்கு என்று சதீஸ் கூற “ தங்ஸ்டா தம்பி என்றவள் மதியின் அருகில் சென்று “எனக்கு இந்த சாரியெல்லாம் ஒத்து வராதுடீ, உனக்காக மட்டும் தான் கட்டிக்கிட்டேன் என்றாள் சுமி, ஏன் என்பது போல பாரத்த மதியிடம்
“ இல்லடீ இந்த சாரியக் கட்டிக்கிட்டா வெட்கப்பட்டு தொலைக்க வேண்டியதா இருக்கு, அதுவும் உங்க அண்ணனைப் பார்க்கிறப்ப ஐயோ தாங்க முடியலடீ என்றாள் சுமி. அவள் இரகசியம் என்று கதைத்தது அங்குள்ள அனைவருக்கும் கேட்டுவிட்டது. அனைவரும் சிரித்து விட்டு அவளைப் பாவமாகப் பார்த்தார்கள். சுமிக்கு கூச்சமாகப் போய்விட்டது.
பாட்டி அடிக்கடி அவளிடம் சொல்லுவதுண்டு, உனக்கு எதை எதை எங்கே பேச வேண்டும் என்று தெரியாது என்பதை அவள் இன்று உணர்ந்து கொண்டாள். விஷ்னுவை வேறு இழுத்து சொல்லி விட்டோம் அவரின் பெற்றோர் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை என்று லதாவின் முகத்தைப் பார்த்தாள் சுமி.
அவள் மங்காத அதே புன்னகையுடன் சுமியின் குழந்தைத் தனத்தை இரசித்தார். அப்பாடா மகன் தான் ஹிட்லர், பெத்தவங்க காந்தி ரிலேஷன்ஸ் என்று தனக்குள் நினைத்தவள் நாக்கை கடித்துக் கொண்டு கண்ணை மூடித் திறந்தாள் சுமி. நல்ல வேளை இது விஷ்னுவின் காதில் கேட்கவில்லை என்று அனைவருக்கும் உள்;ர ஒரு நிம்மதி. ஏனெனில் கடந்த சில வருடங்களாகவே அவனது கண்டிப்பான கொள்கைகள் குடும்பம் அற்pந்த விடயம் தானே என்பதால்.
விஷ்னு இரண்டு முழம் ”வைக் கொண்டு வந்து லதாவிடம் நீட்டினாள். பொறுமையிழந்த சுமி “ ஏங்க இது தலைக்கு வைச்சு விடவா, இல்ல சைக்கள் கேப்ல ” விற்கிறதுக்கு என்னைய ரெடி பண்றிங்களா? என்றாள் நக்கலாக. அங்குள்ளவர்களுக்கு சிரிப்பு வந்தாலும் விஷ்னுவின் முகத்தைப் பார்த்து விட்டு அடங்கிப் போனார்கள்.
சதீஸினால் சிரிப்பை அவ்வளவு சீக்கிரம் அடக்க முடியாது. அதனால் பளீர் என்று சிரித்து விட்டான். அவனை விஷ்னு முறைக்க “ அம்மா ”ஜைத் தட்டெல்லாம் எடுத்து வச்சிட்டீங்களா? நான் பார்த்திட்டு வாறேன்” என்று அந்த இடத்தை விட்டு நழுவினான்.
அந்த குடும்பத்தில் உள்ளவர்களில் மதியைத் தவிர விஷ்னுவின் பெற்றோர் கூட அவனிடம் அவ்வாறு நக்கலாகவோ, நையாண்டியாகவோ பேசுவதில்லi, மதி பேசினாலும் அவளுக்கு அவளது எல்லை தெரியும். சுமியின் பேச்சு ஆரம்பத்திலிருந்தே விஷ்னுவிற்குப் பிடிக்கவில்லை என்றாலும், அந்தக் குடும்பத்திற்காகவும் மதியின் முகத்திற்காகவும் பொறுமை காத்து வந்தான்.
சுமியின் பேச்சைக் கணக்கெடுக்காதவன் போல காரை நோக்கி விரைந்தான். சுமிக்கு விஷ்னுவின் அலட்சியம் வலித்தது. ஆனாலும் லதா அதைப் பெரிது படுத்திக் கொள்ளாதே என்றவாறு சுமியை அன்பாக அணைத்து தலையில் ” வைத்து விட்டார்.
“சாரி செலக்ட் பண்ணினாலும் பண்ணினான், சூப்பரா தான் செலக்ட் பண்ணி இருக்கான் எங்க அண்ணன்” என்று மதி அவளிடம் சொல்ல போடீ என்றவாறாக காரை நோக்கி அனைவரும் சென்றனர்.
அவர்களுக்கென இரண்டு கார்கள் அங்கே காத்திருந்தன. ஒரு காரை அருனாச்சலமும் இன்னொரு காரை விஷ்னுவும் ஓட்டிச் சென்றனர். அருனாச்சலம், கந்தசாமி உட்பட அனைத்து ஆண்களும் அருணாச்சலம் ஓட்டிச் சென்ற காரிலும், மதி சுமி உட்பட அனைத்துப் பெண்களும் விஷ்வா ஓட்டிச் செல்லும் காரில் ஏறிக் கொண்டனர்.
சுமி காரில் ஏற வரும் போது விஷ’னு ஒரு ஓரப் பார்வையில் சுமியின் அலங்காரத்தில் இருந்த குறை தலைக்கு ” வைத்ததன் மூலம் இல்லாமற் செய்யப்பட்டது என்பதை கண்டு கொண்டான்.