சரண் – 17
சோகம் எதுவும் சுமையே இல்லை
சுகங்கள் கூட சுகமே இல்லை
ஆதரவை தந்தால் கூட
அதையும் இங்கு அறிந்தாய் இல்லை
வந்ததுண்டு போனதுண்டு
உன் கணக்கில் ரெண்டும் ஒன்று
வரவும் உண்டு செலவும் உண்டு
உன் கணக்கில் வரவே உண்டு
ஊர் எங்கள் பிள்ளை என்று
இன்று சொல்லக் கூடும்
உலகம் உந்தன் சொந்தமென்று
உந்தன் உள்ளம் பாடும்
நீ யாரோ அன்பே அமுதே….
“ம்மா…” என்றவன் அவரையேப் பார்த்தபடி இருக்க, “நான்.. எனக்கு சொல்லத் தெரியலடா கண்ணா. வெற்றி என்னை அம்மான்னு கூப்பிடுறதைக் கேட்க ஆசையா இருக்குடா தம்பி.. அவன் என்னை அம்மான்னு கூப்பிடுவானா.?” என்று முகத்தை மூடி அழ,
இதுவரை வனிதா அழுது புகழ் பார்த்ததே இல்லை. முதன்முதலாக அழுததைப் பார்த்தது, அவனுக்கு சொல்ல முடியாத வலியைக் கொடுத்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அந்த அழுகையில் கொஞ்சமும் பாதிக்கப்படாதவனாகக் காட்டிகொண்டு, அவரை அலட்சியமாக பார்த்து, “உங்களுக்கு எந்த போதிமரத்துல ஞானம் கிடைச்சதுன்னு சொன்னா, நானும் தெரிஞ்சுக்குவேன்..” என்றான் குரலில் காரமும், நக்கலுமாக,
“புகழ்…” என்றார் அதிர்ச்சியாக, “ஆமாம் புகழ்தான், அந்த ஒரு பேரு தானே உங்களுக்குத் தெரியும். வேற என்ன தெரியும். எப்போ பாரு புகழ், புகழ் புகழ்தான். ஏன் வேற பேரு உங்க வாயில வராதா..? ஆமாம் எப்போ இருந்து உங்களுக்கு வெற்றின்னு ஒரு மகன் இருக்கான்னு ஞாபகம் வந்துச்சு. நான் இல்லாம போனாதான் அவன் உங்களூக்கு ஞாபகத்துல வர்ரானா என்ன..?”
“எப்படி ரெண்டு கண்ணையும் வேற வேறையா பார்க்க முடியும்… நீங்க என்ன செஞ்சு வச்சுருக்கீங்க தெரியுதா..? போன இடத்துல எனக்கு என்ன வேணா நடந்துருக்கட்டும். நான் வராமலே போயிருந்தா என்ன செஞ்சிருப்பீங்க.. என்னை மறந்துட்டு அவனை மகனா நினைச்சிட்டு இருந்துருப்பீங்க. உங்களுக்கு அது ஒன்னும் கஷ்டம் இல்லையே.. நான் இல்லைன்னா அவன். அவன் இல்லைன்னா நான்.. அப்படித்தானே.. என்ன அம்மா நீங்க..” என்று காட்டம் கொஞ்சமும் குறையாமல் பேசியவனின் பேச்சை “புகழ்…: என்ற பாலனின் கர்ஜனை நிறுத்தியது.
உக்கிரமாக முறைத்து கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே வந்தார் பாலன், மனைவியைத் தன்னோடு இறுக்கிக் கொண்டவர், “யாருக்கிட்ட பேசுறன்னு உனக்கு முதல்ல ஞாபகம் இருக்கா..? பெரியவங்ககிட்ட எப்படி பேசனும்ன்னு தெரியாதா..? தப்பே செய்திருந்தாலும் உன் அம்மாவை இப்படித்தான் பேசுவியா..? ஏற்கனவே குற்ற உணர்ச்சியில செத்துட்டு இருக்கவள நீயும் சேர்ந்து காயப்படுத்துறியா..? என்ன தாண்டா உங்களுக்குப் பிரச்சினை.”
“தெரிஞ்சோ தெரியாமலோ ஒரு தப்பு செய்தா.. பெரிய தப்பு தான். யாருமே, எந்த அம்மாவும் செய்யாத தப்பு தான். இல்லைன்னு சொல்லல, அதுக்காக ஆளாளுக்கு அவளை குற்றம் சொல்லுவீங்களா.. அவ உங்க அண்ணன் மேல பாசம் காட்டலன்னாலும், அந்த வருத்தம் துளியும் இல்லாம தான் என் அம்மா அவனை வளர்த்துருக்காங்க. தப்பை தண்டிக்குறதும் மன்னிக்குறதும் பாதிக்கப்பட்ட அவங்க ரெண்டு பேருமே முடிவு செய்யட்டும். இடையில யாரும் போகாதீங்க. உன்னையும், உன் மங்கையையும் தான் சொல்றேன்.” என்றார் அனலோடு.
“வாங்க.. எங்க இன்னும் உங்களைக் காணோமேன்னு பார்த்தேன். உங்களால தான் இவங்க இப்படி இருக்காங்க. உங்களுக்கு உங்க மனைவி முக்கியமா இருக்கலாம். ஆனா எனக்கு..? என்ன செஞ்சுருக்காங்க தெரியுதா.. சந்தோசமா, ஒற்றுமையா ஒன்னா வளர்ந்துருக்க வேண்டிய எங்களைப் பிரிச்சு, எவ்ளோ கஷ்டத்தைக் கொடுத்துருக்காங்க. செய்றது எல்லாம் செஞ்சிட்டு, இப்ப வந்து என் பையன் வேணும், பேசனும்ன்னு சொல்லிட்டு.. இங்க இருந்து முதல்ல அவங்களைப் போகச் சொல்லுங்க” என மீண்டும் மீண்டும் வனிதாவையே சாடிக் கொண்டிருந்தான்.
“புகழ்.. ஜஸ்ட் எனஃப்.. இதுக்கு மேல ஒரு வார்த்தை யாரும் பேசக்கூடாது. இப்போ அது பிரச்சினை இல்லை. இந்தப் பிரச்சினையை வெற்றியும், உன் அம்மாவும் பேசித் தீர்த்துக்கட்டும், இத்தனை நாள் எப்படி எல்லாரும் வேடிக்கைப் பார்த்தோமோ, அப்படித்தான் இனியும் பார்க்கனும்.” என்றவர், “நீ ரெஸ்ட் எடு… நாங்க வெளிய இருக்கோம்..” என்று பேச்சை அத்தோடு முடித்துவிட்டு, மனைவியை அழைத்துக் கொண்டு வெளியேறினார்.
அவனுக்கு மனதே ஆறவில்லை. என்றாகினும் ஒரு நாள் இதைப் பற்றி பேசும் போது நாலுவார்த்தையாவது, தாயை வருத்தப்படும்படி பேசவேண்டும் என்று நினைத்திருந்தான் தான். அது இன்றே அமையும் என எதிர்பார்க்கவில்லை. கிடைத்தது சாக்கென்று வைத்து விளாசிவிட்டான். ஆனாலும் தன் மேல் உயிரையே வைத்திருந்தவரை வருத்தப்படுத்தி விட்டோமே என்று மனம் வருந்திப் போனான்.
“ச்ச்சே.. எல்லாம் இவராலதான். இவர் நினைச்சிருந்தா அன்னைக்கே எல்லாத்தையும் சரி செய்துருக்கலாம். அவங்க இஷ்டத்துக்கு விட்டுட்டு, இப்போ எல்லா கஷ்டமும் எங்களுக்குத்தான்..” எனத் தந்தையையும் விட்டுவைக்காமல், திட்டி வாய்விட்டு புலம்பியபடியே உறங்கிப் போனான்.
“புகழ் பேசினதுல என்ன தப்பு. நான் செஞ்சதைத்தானே சொன்னான். நீங்க ஏன் டென்ஷன் ஆகுறீங்க. எனக்கு கஷ்டமா இல்ல..” என்று சொல்லி முடிக்குமுன்னே வெடித்து அழ ஆரம்பித்திருந்தார் வனிதா.
“தம்பி சொல்ற மாதிரி, அன்னைக்கே நீங்களும், அத்தையும் முடியாது, நீ இப்படித்தான் இருக்கனும், இங்கத்தான் இருக்கனும், வெற்றி நம்ம கூட தான் இருப்பான்னு கட்டாயப் படுத்தியிருந்தாலோ, இல்லை எமோஷனல் ப்ளாக்மெயில் செய்துருந்தாலோ நான் கேட்டுருப்பேன். என் இஷ்டத்துக்கு விட்டு..” என்றவர் அழுது கொண்டே இருக்க,
மனைவியின் பேச்சில் அதிர்ந்தே போனார் பாலன். அதோடு சிறுபிள்ளை போல பேசும் மனைவியை நினைத்து லேசாக சிரிப்பும் வந்தது. அன்று எத்தனைக் கெஞ்சியிருப்பார். கேட்கவே இல்லையே. அப்போது யார் பேச்சையும் கேட்கும் நிலையிலும் இல்லை. இன்றைய சூழலில் அதைப்பற்றி பேசி, தேவையில்லாத மன வருத்ததைக் கிளப்ப பாலனும் முனையவில்லை.
மாறாக “வதா.. போதும்… அழறதை நிறுத்து, உன்னை சும்மாவே பார்க்க முடியாது, அப்புறம் அழுதா சுத்தமா பார்க்க முடியாது. ஃபர்ஸ்ட் என்ன பிரச்சினை உனக்கு அதைச் சொல்லு, என்ன செய்றதுன்னு பிறகு யோசிக்கலாம்..” என்றார் அழுத்தமாக, தெளிவாக.
“ப்ச்..” என்று சலிப்படைந்து, “ஒன்னுமில்ல..” என்றவர் “நான் கொஞ்சம் கோவிலுக்குப் போயிட்டு வர்ரேன். புகழ் சர்ஜரி முடிஞ்சதும் பூஜைக்கு சொல்லியிருந்தேன்,” என கிளம்ப போக, அப்போது தான், நாச்சியாரை வீல் சேரில் தள்ளியபடி மணி வந்து கொண்டிருந்தாள்.
தனியாக வந்தவளைப் பார்த்ததும், அவளிடம் நகர்ந்தவர்கள், “ஏய்.. ஆச்சியை வச்சிட்டு, கார் நீ ட்ரைவ் பண்ணியா..” என்றார் வனிதா கோபமாக.
“மம்மி.. உனக்கு என்னைத் திட்டலன்னா தூக்கமே வராதா.. உன் அருமை புத்திரன் அப்படியே என்னை வண்டி ஓட்ட விட்டுருவானா.. அவன் பொண்டாட்டிக்கிட்ட அடிவாங்குறதை நாங்க பார்க்கக் கூடாதுன்னு, எங்களை தொரத்தி விட்டுட்டான். நானே பார்த்துட்டு இருந்த நல்ல மூவியை பார்க்க முடியலன்னு ஃபீல் பண்ணிட்டு இருக்கேன். நீ வேற, உனக்கு என்னைப் பார்த்தா எப்படி இருக்கு..” என்றுக் கடுகெனப் பொறிந்தவளின் தலையில் கொட்டியவர்,
“இந்தப் பேச்சு மட்டும் இல்லைன்னா, உன்னையெல்லாம் காக்கா தூக்கிட்டு போயிருக்கும். என்ன பேச்சு உன்னைவிட எத்தனை வயசு மூத்தவன், அவன் இவன்னு மரியாதை இல்லாம பேசுற. இன்னொரு தடவை பேசு, தோசைக்கரண்டியை பழுக்க வச்சு வாயிலயே இழுத்து விடுறேன்..” என
பதிலுக்கு மகளும் பேசப்போக, “விடும்மா.. அவளுக்கு என்ன தெரியும்.. சின்ன பிள்ளதானே போகபோக சரியாகிடும். வீட்டுக்கு வரும்போதே ரெண்டு பேரும் மூறைச்சிட்டு வந்தாங்க. ஏதோ சரியில்ல போலன்னு, நான் தான் மணியை கூப்பிட்டு வந்தேன். சிவம் வந்துருக்கான் பாரு. அவன் தான் கார் ஓட்டிட்டு வந்தான். பிள்ளையைத் திட்டாத..” என பேத்தியை சப்போர்ட் செய்து, மருமகளிடம் பேச,
“என்ன ஆச்சி இது.. என்ன மாமியார் நீங்க, உங்களுக்கு யாரு மாமியார் போஸ்ட் கொடுத்தது. இப்படியெல்லாம் இருக்கக் கூடாது ஆச்சி. எப்பவும் கட் பன்ற சிசரா இருக்கனுமே தவிர, ஒட்டிவிடற கம்(gum)மா இருக்கக் கூடாது” என்றவளை வனிதா அடிக்க வர, “நான் புகழைப் பார்க்க போறேன்..” என்று சிட்டாக பறந்துவிட்டாள்.
பேத்தியின் விளையாட்டில் சிரித்தவர், மருமகளின் முகத்தில் தெரிந்த வருத்தத்தில் “அதுதான் அவனுக்கு ஒன்னும் இல்லன்னு சொல்லிட்டாங்களே வனிதா.. இன்னும் என்ன..? வேர எதுவும் பிரச்சினையா..” என்றார் யோசனையாக,
“பிரச்சினைதான்.. பெரிய பிரச்சினைதான். உங்க மருமகளுக்கு பெரிய மகன் அம்மான்னு கூப்பிடனும்ன்னு ஆசை வந்துருக்கு..” என,
“பாலா.. இதுல என்னப் பிரச்சினை. வெற்றி இவளை விட்டு வேற யாரை அம்மான்னு கூப்பிடுவான். இப்போ வனிதாவே ஆசைப்படும் போது அவன் கூப்பிடாமா எங்க போகப் போறான். உனக்கு என்ன இவ்ளோ கோபம், ஏன் நீ மருமக வருத்தப்படுற மாதிரி பேசிட்டியா.. உனக்கு எத்தனை தடவை சொல்லிருக்கேன் பாலா, யாரையும் மனசு வருத்தப்படுற மாதிரி பேசக்கூடாதுன்னு.” என மகனிடம் பாய,
“அத்தை அவர் ஒன்னும் சொல்லல, அவர் எனக்கு சப்போர்ட் தான் பண்ணார். ஆனா நான் செஞ்சது எல்லாம் மனசுல ஒரு ஓரமா உறுத்திட்டுத் தானே இருக்கும். அது இப்படி எப்போவாது ஒரு சூழல்ல கோபாமா வர்ரது தானே. எனக்கு வருத்தமெல்லாம் இல்லை அத்தை. சொல்லப் போனா எனக்கு சந்தோசம் தான். நான் செய்த தப்பை சுட்டிக்காட்டி பேசுறது. அப்போ தானே நான் செய்த பாவத்தோட அளவு எனக்குத் தெரியும்..” என அதுவரை நின்றிருந்த அழுகை மீண்டும் தொடங்கியது.
“வதா… அழாத ப்ளீஸ்.. நீ அழனும்னோ, வருத்தப்படனும்னோ நான் பேசல, எனக்குத் தெரியும் உன்னை. யூ ஆர் எ குட் மதர்… ப்ளீஸ் அழாத.. நான் வெற்றிக்கிட்ட பேசுறேன். உங்கிட்ட பேசாம வேற யாருக்கிட்ட பேசப்போறான். நீ டென்ஷன் ஆகாத. நான் அவன்கிட்ட பேசுறேன்..” என பாலன் சமாதானம் செய்ய,
நாச்சியும் “ஆமா வனிதா, கல்யாணத்துக்குப் பிறகு வெற்றிக்கிட்ட நிறைய மாற்றம். எங்க தனியாவே நின்னுடுவானோன்னு பயந்துட்டு இருந்தேன். ஆனா மங்கை கூட அவன் வாழ்ற வாழ்க்கையைப் பார்க்கும் போது, மனசு நிறைஞ்சுப் போகுது. நாம சொன்ன மாதிரி சீக்கிரம் ஒரு குழந்தையைப் பெத்துக் கொடுத்துட்டா போதும். அதுக்குள்ள இந்த புகழு பையனுக்கு ஒரு கல்யாணத்தை முடிச்சு, கோயம்புத்தூர்ல விட்டுட்டு, நீங்க இங்க வந்துடுங்க. அப்போதான் பேரன் பேத்தியோட சந்தோசமா இருக்க முடியும்..” என முடிக்க,
“ஆனா அத்தை, கட்டாயப்படுத்தி ஒரு உறவு, அது நிலைக்குமா தெரியாது.. நீங்க யாரும் வெற்றிக்கிட்ட இதைப் பத்தி பேசவேணாம். நீங்க எல்லாம் சொல்லித்தான் எனக்கு அவனைப் பத்தி தெரியனுமா.. இல்லை எனக்குத் தெரியனுமா..? தப்பு செய்தது நான். நானே அவன்கிட்ட பேசுறேன். நானே மன்னிப்பும் கேட்குறேன். அது மட்டும் தான் நான் வெற்றிக்கு செய்த பாவத்திற்கான தண்டனை..” என்றவர், கண்ணீர் முகத்தைத் துடைத்துவிட்டு, “அவனே வருவான்னு தோனுது, அவனுக்காக இல்லை புகழுக்காக. தம்பிக்காக பேச அவன் வருவான்.. ரெண்டு பேரும் ஏதோ ஒரு ப்ளான்ல இருக்காங்க, அனேகமா அது எங்கிட்ட வந்து தான் முடியும்ன்னு நினைக்கிறேன்” என்றார் மெல்லிய புன்னகையோடு.
மனைவியின் பேச்சில் பாலனுக்கும் மெல்லிய புன்னகை. மருமகள் மகனை சரியாக கணித்திருக்கிறாள் என்ற பெருமை நாச்சியாருக்கு. வெற்றி அப்படித்தான். அவனுக்கு ஒன்று என்றால் யாரிடமும் ஒரு வார்த்தைக் கூட, கேட்க மாட்டான். ஆனால் புகழ் என்று வந்துவிட்டால், அவன் யாரிடமும் இறங்கிப் போகத் தயங்கமாட்டான். அதை புகழும் உணரவே செய்தான்.
அரூபியைப் பற்றி புகழ் ஆரம்பிக்கும் முன்னே வெற்றி ஆரம்பித்து விடுவான் என்று பாலனுக்குத் தெரியும். அதற்கான வேலைகளில் தானே இந்த மூன்று நாட்களாக ஓய்வே இல்லாமல் ஓடிக்கொண்டிருந்தான். இப்போது வனிதா சற்று நெகிழ்ந்த நிலையில் இருக்க, இந்த சூழலில் வெற்றியே ஆரம்பிக்கட்டும் என்று நினைத்து “நீ சொல்றதும் சரிதான். வெயிட் செய்து பார்ப்போம்.. இப்போ ரூமுக்கு போலாம். அவ போய் நேராமாச்சு. தூங்குறவனை எழுப்பி விட்டுற போறா..” என தாயின் வீல்சேரைத் தள்ளியபடியே நடந்தார் பாலன்.
சற்று நேரத்திற்கு முன் வீட்டிற்கு வந்து காரை நிறுத்தியவன், இறங்கமாட்டேன் என சண்டித்தனம் செய்தவளை, மீண்டும் தூக்கிக்கொண்டு உள்ளே நடக்க, ஹாலில் இருந்த நாச்சியார் யோசனையோடு பார்த்துவிட்டு, மணியை அழைத்துக் கொண்டு ஆஸ்பிடல் கிளம்பிவிட்டார்.
“விடுங்க.. என்னை இறக்கி விடுங்க.. எதுக்கு இப்போ என்னை கூப்பிட்டு வந்தீங்க, நான் அங்க இருக்கேன்னு சொன்னா உங்களுக்கு என்ன பிரச்சினை. புகழ் மாமா சரியானா தான் எனக்கு நிம்மதி. நீங்க ஏன் இப்படி இருக்கீங்க. என்னை உடனே கொண்டு போய் ஹாஸ்பிடல்ல விடுங்க. கூடப்பிறந்த தம்பிக்கு சர்ஜரி நடக்கும் போது கூட நீங்க இங்க இல்ல. அப்படியென்ன பெரிய பொடலங்கா வேலை. எப்பவும் நீங்க சொல்றதையே செய்ய்யனும்னு என்ன கட்டாயம். நீங்க சொல்ற எதையும் நான் கேட்க மாட்டேன்..” என வீட்டில் சாமியாடிக் கொண்டிருந்தவளை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தான்.
“வாயை கொஞ்சம் மூடுடி, வெளியே எல்லாருக்கும் கேட்கப் போகுது, அப்புறம் உன் மானம் தான் போகும்.” என்றான் இழுத்துப் பிடித்த பொறுமையோடு,
“ஏன் உங்க மானம் போகாதா.. நானா உங்களை கட்டிபிடிச்சு தூக்கிட்டு வந்தேன். அதெல்லாம் ஆச்சி இந்நேரம் உங்க பாசமலரை கூப்பிட்டு வெளியப் போயிருப்பாங்க. என்ன வேனும் உங்களுக்கு, சீக்கிரம் சொல்லுங்க… நானும் ஹாஸ்பிடல் போறேன்…” என்றுத் துடித்தவளை,
அப்படியே மெத்தையில் போட்டவன், “ஏன்டி வாயை மூடு.. மூடுன்னு சொல்றேன். உன் வாயும் கேட்காது, காதும் கேட்காது. இரு நானே மூடறேன்…” என்றவன் நொடியும் தாமதிக்காமல் இதழை மூட, “ம்ம்..ம்ம்ம்..” என்றுத் திமிறியவளை விடாமல், தன் உடல் முழுவதும் உரசுமாறு மொத்தமாய் அவன் மேல் விழுந்தான்.
திமிறியவள், திமிறியபடியே இருக்க, “வனிமா உனக்கு மூனு வருஷம் டைம் கொடுத்துருக்காங்களே, அதை யூஸ் பண்ண வேண்டாமா..? தீயா வேலை செய்தாதான் இந்த த்ரி யேர்ஸ் கேப்ப ஹேண்டில் செய்ய முடியும். அதுக்குப்பிறகு நாமளேக் கேட்டாலும் கொடுக்க மாட்டாங்கடி. உன் புகழ் மாமா உன்னை காலேஜ்க்கு த்ஹுரத்தி விட்டுருவாண்டி..” என இதழை விடுவிக்காமலே, இதழகளுக்குள்ளேப் பேச,
‘காலேஜ்..’ என்றதுமே திமிறலை விட்டவள், “என்ன காலேஜா.. மறுபடியும் முதல்ல இருந்தா..” என மீன் விழிகள் தெறிக்க, விழி விரிக்க, அதுவரை கொடுத்த வன்மையான முத்ததை, மென்மையாக மாற்ற, முத்தத்தில் மயங்கி முல்லையாகத் துவண்டவள், பற்றுக்கோலாய் கணவனின் கரங்களால் மாலையிட,
“குட்டி வனி வேண்டாமா கண்ணம்மா..” என்று அவன் காதுக்குள் முணுமுணுத்தபடியே, காதுமடலை உரசி தாபத்தோடு அவன் கரங்கள் இடையில் அழுந்தியபோது, அழுந்தியக் கரங்களோடு போட்டிப் போட்டுக் கொண்டு அவனிதழ்களும் பெண்ணவளின் மேனியில் ஊர்வலம் போக,
“குட்டி வனி வேணாம்… குட்டி வெற்றி தான் வேணும் எனக்கு.. அப்படின்னா ஓகே” என கணவன் தந்த மயக்கத்திலேயே அவனுக்கு சம்மதம் சொல்ல, மனைவியின் வெட்கத்தை ரசித்தவன், அவளின் வெட்கப் போர்வையோடு சேர்ந்து அவளைத் தழுவியிருந்த புடவையையும் விலக்க, கணவனின் காதலிலும், காமத்திலும் முற்றிலுமாகக் கலந்து, கரைந்து காணாமல் போய் கொண்டிருந்தாள் வனமங்கை.