Skip to content
Post Views: 213
அங்கே இருந்த எல்லோரும் அன்பு பேசுவது சரி என்று அமைதியாக இருக்க.
பதில் சொல்லுங்கட, உன் வீட்டு பொண்ண எனக்கு பிடிச்சுருக்குன்னு சொல்லி தாலி கட்டவா என்றவன். பெரியசாமியை பார்த்து உனக்கு நிச்சயம் பண்ண பொண்ண நான் தாலி கட்டி எனக்கு பிடிச்சுருக்கு சொன்னா என்னடா பண்ணுவ என்று கேட்டவுடனே.
Advertisement
பெரியசாமி அன்புவின் மேல் பாய்ந்து இருந்தான். அடிக்க.
Advertisement
ஆண்டவர் கனி தம்பியை பிடித்து இழுத்து வந்தான்.
Advertisement
டேய் என் பார்கவி மேல் கைய வச்சுப்பாரு. உனக்கு இருக்கு என்று கத்தினான்.
Advertisement
டேய் சொன்னதுக்கே வலிக்குது உனக்கு. உன் அண்ணன் எனக்கு பேசி வச்ச திவ்யா கழுத்தில் தாலி கட்டுனா நான் சும்மா விடுவேனா என்று அன்புவும், பெரியசாமியும் மாறி, மாறி சத்தம் போட.
ஊர் தலைவர் எழுந்து வந்து இரண்டு பேரையும் சமாதானம் பண்ணியவர்.
நாளைக்கு ஆண்டவர் கனி தாலி கட்டுன பொண்ணும், அவங்க அப்பா, அம்மாவையும் வர சொல்லுங்க. அவங்க வந்து பேசட்டும் மத்த யாரும் பேச வேண்டாம்.
பொண்ண பெத்த வங்க என்ன முடிவு சொல்லுறாங்களோ அதன் படி செய்யலாம் என்று முடிவு பண்ணி நாளை காலையில 10 மணிக்கு ஊர் கூட்டத்துக்கு வந்துருக்கப்பா என்று அனைவரையும் அனுப்பி வைத்தார்.
பெரிய சாமி அன்புவை முறைத்தபடி வெளியில் வந்தான்.
அனைவரும் அவர், அவர் வீட்டுக்கு செல்ல இரவு 10 மணிக்கு மேல் ஆகியிருந்தது.
அன்பு வீட்டு வந்ததும் தன் அம்மாவை திட்டி கொண்டு இருந்தான். உங்களை யாரு அவளை வெளியே கூட்டிட்டு போக சொன்னது. நான் சொல்லிட்டு தானே போனேன்.
நான் எங்கேடா அவளை விளக்கு பூஜைக்கு கூட்டிட்டு போனேன், உங்க அப்பா தான் மருமக ஆசைப்படுது கூட்டிட்டு போன்னு சொன்னாரு. நாளைக்கு வேணி வந்த என்ன பதில் சொல்வேன் என்று புலம்பிக்கொண்டு இருந்தார் நளினி.
டெல்லியில உள்ள திவ்யாவின் அம்மாவுக்கு நடந்ததை சொல்லி நாளைக்கு வருமாறு சொல்லிவிட்டனர்.
வேணி அவரின் கணவரிடம் அனைத்தையும் சொல்லி புறப்பட தயாராக இருந்தார்.
இங்கே ஆண்டவர் கனியின் குடும்பம் வீடு வந்து சேர இரவானது.
யோகா லட்சுமியின் அறைக்கு வந்து பார்க்க.லட்சுமி திவ்யாவை அழதமா என்று சமாதானம் பண்ணி கொண்டு இருந்தார். அவளோ யார் சொல்வதும் காதில் விலாமல் அழுது , அழுது முகம் வீங்கி போய் கண்ணீரோடு அமர்ந்து இருந்தாள்.
லட்சுமி யோகாவை பார்த்து இந்த பொண்ணு கண் முளிச்சதுல இருந்து அழுகுது. என்ன சொன்னாழும் சமாதானம் ஆகல. நீ கொஞ்சம் பேசு யோகா என்று தங்கையிடம் சொல்ல.
யோகா திவ்யாவின் அருகில் வந்த கட்டிலில் அமர்ந்தார்.
திவ்யா நிமிர்ந்து யோகாவை பார்க்க இவர் இங்கே யார் எப்படி என்று யோசித்தவள்.
நான் ஆண்டவர் கனியின் சித்தி, இவ என் அக்கா என்று லட்சுமியை அறிமுகம் படுத்தியவர். பின்பு மீனாட்சி ஆண்டவர் கனியோட தங்கச்சி என்று கூற.
திவ்யா ஓ.. என்று மனதில், தங்கச்சி பொண்ண, காப்பாத்தி குடுத்ததற்காக வா, என்னை இவர் கல்யாணம் பண்ணார். திடிர்னு ஏன்னு இப்படியின்னு நெனச்சேன். எப்பையும் மூஞ்ச திருப்பற ஆலு, பக்கத்துல வான்னு கூப்பிட்டப்போ நான் உஜாரா ஆகியிருக்கனும் தப்பு பண்ணிட்டேன் என்று கண்கலங்க.
யோகா அழுகதடா, என்று அருகில் அமர்ந்து கண்களை துடைத்து விட்டு தலை வருட.
ஆண்டி என்று யோகாவை அணைத்து கொண்டு ஓ என்று அழதவளை.
அவளின் முதுகை தட்டி கொடுத்தவர். அழாத திவ்யாமா, தப்பு தான், எங்க பையன் பண்ணுனது தப்புதான். அதற்கு நீயேன்டா அழுவுற. அழாதடா, தப்பு பண்ணுனது அவன், அவன்ட்ட போய் கேளு ஏன் இப்படி பண்ணன்னு, அவன திட்டு, அடி நீயேன்டா ம்மா அழுவுற அழாதடா பாரு முகம் வீங்கி இருக்க. உனக்கு ஏற்கனவே உடம்பு சரியில்ல எதாவது உடம்புக்கு ஆகிற போகுது, என்று திவ்யாவிடம் பேசி கொண்டே சமாதானம் பண்ண அவளிடம் பேச்சு குடுத்தவர்.
மீனாட்சி என்றவர் அவளை அழைத்து தண்ணி கொண்டு வா என்று சொல்ல.
மீனாட்சி கிச்சன் சென்று தண்ணி எடுத்து வந்தாள்.
அதை வாங்கி திவ்யாவிடம் குடுத்து குடி என்று குடிக்க வைத்தவர். போய் மூஞ்ச கழுவு என்று அவளை ரெஸ்ட்ரூம் நோக்கி அனுப்பி வைத்தார். அக்காவிடம் சாப்பிட எடுத்துட்டு வர்றேன் என்று வெளியில் வர அனைவரும் ஹாலில் அமர்ந்து இருந்தனர்.
மீனாட்சியை அழைத்து எல்லாரையும் சாப்பிட வை, என்று சொல்லி விட்டு, லட்சுமிக்கும், திவ்யாவுக்கு சாப்பிட இட்லி எடுத்து சென்றார்.
அக்காவின் கையில் ஒரு தட்டை குடுத்த யோகா சாப்பிட சொல்ல. அவரோ திவ்யாவை கண் காண்பித்தார்.
நான் பாத்துக்கிறேன் என்று திவ்யாவின் அருகில் வந்து அமர்ந்து சாப்பிடுடா என்றார்.
அவளோ வேண்டாம் ஆண்டி என்று தலையாட்ட.
யோகா கையில் இட்லியை பிய்த்து திவ்யா வாய் அருகே ஊட்ட வர.
வேண்டாம் ஆண்ட்டி என்று அழுதவளை.
வேண்டாம்டா அழாகாத, உங்க அப்பா, அம்மா காலையில வருவாங்க. அவங்கல பாக்க உனக்கு தெம்பு வேணாமா என்று பேசிக்கொண்டே அவள் அசந்த நேரம் பார்த்து இட்லியை அவள் வாயில் வைத்து ஊட்டி இருந்தார். இரண்டு இட்லி தான் சாப்பிடு.
நாளைக்கு ஊர் கூட்டத்துக்கு நம்மல வர சொல்லி இருக்காங்க என்று திவ்யாவிடம் பேசிக்கொண்டே இட்லியை ஊட்டி முடித்தவர், அவ்வளவு தான் நல்லா தூங்கு. அக்கா பக்கத்துல இருப்பா. நான் அடுத்த ரூம்புல தான் இருப்பேன் ஏதாவதுனா கூப்பிடு என்று திவ்யாவிடம் சொல்லி விட்டு.
லட்சுமி சாப்பிட்ட தட்டை எடுக்க வந்த யோகாவை கண்ணீர் மல்க பார்த்தார் லட்சுமி.
ஏன்கா நீ வேற கண்னத்தொட, பாத்துக்கலாம் நம்ம பிள்ளைங்க தானே. அக்காளிடம் தைரியம் சொல்லி விட்டு வெளியில் வர அனைவரும் சாப்பிட்டு கொண்டு இருந்தனர்.
ஆண்டவர் கனி மட்டும் சோபாவில் கண்மூடீ அமர்ந்து இருந்தான்.
ஏன்டி மீனாட்சி உன் பெரிய அண்ணே சாப்டானா.
இல்ல சித்தி வேணாமா.
யோகா மனதில் ஆண்டவர்கனியை பண்ணுறத எல்லாம் பண்ணிட்டு சாப்பிடமாட்டானா போடா என்று புலம்பிய படியே கிச்சன் சென்றார்.
சித்தியின் சத்தம் கேட்ட ஆண்டவர் கண் திறந்து பார்த்தவன். யோகாவை காண கிச்சன் சென்று சித்தி என்று யோகாவின் தோளில் கைவைத்தான்.
போடா என்று அவனின் கையை தட்டி விட்டார்.
மீண்டும் சித்தி என்று அவரை பின் இருந்து சாரி சித்தி என்ற அணைத்து கொள்ள.
போடா. என்று அவனை தல்லி நிருத்தியவர் சித்தி, நொத்தியின்னு இனிமே என் கிட்ட வராத. நான் வளர்த்தவனா நீ போடா என்று கண்கலங்க.
சாரி சித்தி, எனக்கு வேற வழி தெரியல.
ஏன்டா என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே.
அவள எனக்கு பிடிச்சுருந்துச்சு சித்தி, ஆன அவ கீலூர் ஸ்ரீ ஜெயமோட சொந்தமுன்னு தெரிஞ்சு வேண்டாமுன்னு நெனச்சேன். ஆன அவ நம்ம மீனாட்சி பொண்ண உயிர குடுத்து காப்பாத்து நாளோ அப்பவே முடிவு பண்ணிட்டேன். அவள விட்டு யாரையும் என்னால கல்யாணம் பண்ண முடியாதுன்னு தோணுச்சு சித்தி.
அதுக்காக கோவிலுல வச்சு தாலி கட்டுவீயா.
என்னைய,! என்ன பண்ண சொல்லுறீங்க. அவள அன்புக்கு கல்யாணம் பண்ண பேசி முடிச்சுட்டுடாங்க. என்னால அவங்க வீட்டுக்கு எல்லாம் போயி பேசி எல்லாம் கல்யாணம் பண்ண முடியாது. நான் போனாலும் திவ்யாவை எனக்கு கல்யாணம் பண்ணி தரமாட்டாங்க.
அதனால அந்த பொண்ணு விருப்பம் இல்லாமா தாலி கட்டுவீயா. போடா நான் உன்கிட்ட இருந்து இத எதிர்பாக்கலடா.
சித்தி சாரி சித்தி.
அத விடு நாளைக்கு திவ்யா அம்மா, அப்பா கூட்டத்துக்கு வருவாங்கல அவங்க ஏதாவது பிரச்சனை பண்ண.
அப்படி எதுவும் நடக்காது சித்தி. கூட்டத்துல இரண்டு பேர கரெக்ட் பண்ணி வச்சுருக்கேன்.
அட பாவி பயலே. நடத்து, நடத்து நல்லா இருந்த சரிதான். சரி ரொம்ப நேரம் ஆச்சு சாப்பிடு என்று இட்லியை தட்டில் வைத்து கொடுத்தார்.
ஆமா என் பொண்டாட்டி சாப்டாளா.
சாப்டா, நான் தான் ஊட்டி விட்டேன். பாவம் டா ரொம்ப அழுகுற.
இரண்டு நாள் அழட்டும் சித்தி நான் அப்பறம் சமாதானம் பண்ணிக்கிறேன்.
சரிடா போய் தூங்கு காலையில கூட்டத்துக்கு போகனும்.
சரி சித்தி என்று அவன் அறைக்கு சென்றான்.
யோகா நாளை விடியிற பொழுது எல்லாருக்கும் நல்லதாக இருக்கட்டும் என்று தூங்க சென்றார்.
விடியற் காலை 5 மணி ஆண்டவர் கனி வீட்டு வாசலில் திவ்யாவின் அம்மா வேணி. யாருடா வீட்டுல என் பொண்ணை தாலி கட்டுனது. அவனை வர சொல்லு என்று சத்தமிட்டார்…….
error: Content is protected !!