பிழை : 4
ஞாலம் கருதினும் கைகூடும், காலம்
கருதி இடத்தால் செயின்.
(பொருள்: ஒருவன் தான் செய்ய வேண்டிய செயலுக்கேற்ற காலமறிந்து அதற்குரிய இடத்தையும் தேர்ந்து செய்வானாயின் இந்த உலகையே அடைய விரும்பினாலும் கைகூடும்).
திருக்குறள் அத்தியாயம்: 49
“காலமறிதல்“….
மகிழ் தனது வெளிநாட்டவர்கள் ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடித்தவன் அவர்களை சொர்ணாவுடம் மதிய விருந்தில் கலந்துக்கொள்ள அனுப்பினான்… அவர்களுடன் அவள் செல்லும்பொழுது அவளுக்கு துணைக்கு தன்னுடைய தனிப்பட்ட மேலாளர் ப்ரதீப்பையும் துணைக்கு அனுப்பினான்… சொர்ணா அங்கே கண்டிப்பாக அவர்களை மதித்து நடக்க மாட்டாள் என்று தெரிந்தே….
அவன் இன்று ஒரு முக்கிய பதவி ஒன்றிற்கு நேர்முக தேர்வு வைத்திருந்தான் … அந்த பதவிக்கு தானே தான் தேர்வு நடந்த வேண்டும் என்று அவன் முன்பே நினைத்திருந்தால் அவன் அந்த ஒபாந்ததாரர்களுடன் மதிய உணவில் கலந்துகொள்ளவில்லை…
காலையில் இருந்து உணவு எடுத்துக்கொள்ளத்தது சிறிது பசியாக இருக்க அருகில் இருக்கும் உணவகத்தில் இருந்து மதிய உணவை வர வைத்தவன்… அவசர அவசரமாக அதை சாப்பிட்டுவிட்டு நேர்முகத்தேர்வை நடந்த சென்றான்….
மதிவதனி அன்று காலை உணவை தன்னுடைய மகள் மகிழ்வதனிக்கு ஊட்டிவிட்டவள்… அவளை அன்று பள்ளியில் கொண்டு விட அவளை தயார் செய்தாள்.
அவர்களை கண்டு அவர்கள் அருகில் வந்த பார்த்திபன் மதி கைகளில் இருந்த மகிழில் பள்ளி சீருடையை வாங்கி அருகில் வைத்தவன் மகிழ் அவள் விரும்பி அணியும் ஆடை ஒன்றை எடுத்து கொடுத்து அவளுக்கு அணிய சொல்ல… மதி, “என்ன பார்த்திபா பாப்பா ஸ்கூல் யூனிஃபார்மை கொடு… பாரு ஸ்கூலுக்கு மணியாகுத்துல…?” என்று சொல்ல… அவன் அவர்கள் அருகில் சென்று அமர்ந்தவன் மதி கையில் இருந்து அந்த தான் கொடுத்த ஆடையை வங்கியவன்… அதை குழந்தைக்கு அணிவித்துக்கொண்டே “இன்று பாப்பா ஸ்கூல் போகலை…. பார்த்திப்பாவும் காலேஜ் போகலை…” என்று சொல்லவும்.. ஏன்..? என்பதைப்போல இருவரும் அவனை பார்க்க.
“நாம எல்லாம் வெளில போகலாமா..? அப்பா நேத்து குட்டிமாவ வெளில குட்டிபோறேன்னு சொல்லி மறந்துட்டேன்ல…?” என்று சொல்ல… ஐ ஜாலி ஜாலி பார்த்திப்பா என்று சொல்லி மகிழ் அவன் கழுத்தை கண்டிக்கொண்டு அவனை செல்லம் கொஞ்சினாள்…
[the_ad id=”6605″]
அவன் அவளை வெளியே அழைத்து செல்கிறேன் என்று சொன்ன மகிழ்ச்சியில்…. பொதுவாகவே மகிழ் பாப்பாவை வெளியே அழைத்து செல்ல மாட்டார்கள் அங்கே பனி அதிகம் பொழியும் காரணமாக…. இன்று தனது பார்த்திப்பா விடுமுறை எடுத்து வெளியே அழைத்து செல்கிறேன் என்று சொன்னதும் அந்த சின்ன வாண்டுக்கு சந்தோசம் பிடிபடவில்லை….
“மதி சீக்கிரம் கிளம்பு” என்று சொல்ல அவள், “சரி பார்த்திபா” என்று சொல்லி அங்கிருந்து எழுந்து அவளுடைய அறைக்கு சென்றாள்…
அவள் செல்வதை கண்டவன் என்ன தான் நான் மகிழ்ச்சியாக இவளை பார்த்துக்கொண்டாலும் அவள் கண்களில் ஒரு உயிர்ப்பு என்பது இல்லை… ‘சின்ன வயதில் எப்படி இருப்பாள்… அவள் சிரிப்பு, அவளுடைய சுறுசுறுப்பு எல்லாம் இந்த கடந்த சில ஆண்டுகளாய் எங்கே தான் போனது..?. ஆனால் கண்டிப்பாக நான் என்னதான் நன்றாக பார்த்துக்கொண்டாலும் அவள் இப்படி தான் கடைசிவரை இருப்பாளோ..?’ என்று மனத்துக்குள்ளேயே அவன் மதியவளை நினைத்து வருந்தியவன், குழந்தை அவனை அழைப்பதை கண்டவன் அவள் கேட்டும் கேள்விகளுக்கு பதில் அளித்தவாரே அவளை கைகளில் ஏந்தியவன் கார் இருக்கும் இடத்திற்கு வந்தான்.
மதியும் பார்த்திபன் சொல்லை கேட்டவள் அமைதியாக வந்து காரில் அமர்ந்தாள்… அவள் சில வருடங்களாகவே சரியாக பேசுவது கிடையாது.
அமைதியாக பெரியவர்கள் வர குழந்தை அமைதியாக இருக்குமா என்ன மகிழ் மட்டும் பார்பவை அனைத்தையும் பற்றி ஏதாவது கேள்வி கேட்டுக்கொண்டே வந்தாள். அவளுக்கு மூன்று வயது முடிந்து இரண்டு மாதமே ஆகிறது.. இந்த வயதிலேயே பேச்சு மிக தெளிவாக அழகாக வந்தது அவளுக்கு… ரொம்பவே புத்திசாலி கூட… ஒரு விஷயத்தை ஒருமுறை சொல்லிக்கொடுத்தலே அதை உடனே புரிந்துக்கொள்ளும் தன்மை அவளுக்கு இயற்கையாகவே இருந்தது.
சில்லாங் மாநகரத்தின் நடுவே அமைந்திருக்கும் அந்த பெரிய வணிக வாளாகத்திற்கு அவர்களை அழைத்து வந்தவன்… முதலில் குழந்தைக்கு அவன் முன்பே வாங்கி தருகிறேன் என்று சொன்ன அந்த பார்பி பொம்மையை வாங்கி கொடுத்தவன்.. அடுத்து மதி மற்றும் குழந்தைக்கு சில ஆடைகள் மற்றும் வீட்டில் அணிந்து கொள்ள தகுந்த சிறிய நகைகளையும் வாங்கினான்…
அவன் வாங்குவதை கண்ட மதி அவனுக்கு ஏதுமே வங்காததை கண்டவள் “பார்த்திபா உனக்கு ஒன்னும் வாங்களையே உனக்கு காலேஜ் போட்டுபோக கொஞ்சம் உடை எடுக்கலாம் இல்லையா..?” என்று கேட்க…
“நீ எனக்கு செலக்ட் பண்றியா மதி…?” என்று ஆவலாக அவன் கேட்க… “கண்டிப்பா பார்த்திபா” என்று சொன்னவள் அவனுக்கான உடைகளை தெரியு செய்தாள்… சற்று மகிழ்ச்சியாக காணப்பட்டாள் அவனுக்கு உடை தேர்வு செய்யும் பொழுது….
அனைவருக்கும் தேவையாக பொருட்கள் ஆடைகள் அனைத்தையும் வாங்கியவர்கள் மதியம் உணவு நேரம் ஆக அந்த வளாகத்திலேயே இருக்கும் ஒரு உணவகத்தில் மதியம் சில்லாங் மாநகர சிறப்பு உணவு வகை சிலவற்றையும் தென் இந்திய உணவு வகை சிலவற்றையும் உண்டனர்… கடையில் வாங்கிய பொருட்கள் அடங்கிய பைகள் அனைத்தையும் பார்த்திபன் கைகளில் எடுத்துக்கொண்டு கார் நிறுதிருக்கம் இடம் நோக்கி சென்றான்.
[the_ad id=”6605″]
அவர்களை அந்த வளாகம் வாசலிலேயே நிற்க சொல்லிவிட்டு… சற்று நேரம் கழித்தே காருடன் வந்தவன் அவர்களையும் அழைத்துக்கொண்டு தங்களது இல்லம் நோக்கி சென்றான்… மகிழ் காரிலேயே தூங்கிவிட அவளை கைகளில் ஏந்திய மதி தங்கள் அறையில் சென்று படுக்க வைத்தாள்.
குழந்தை மதியின் கழுத்தை கட்டிக்கொண்டு தூக்கத்திலேயே அவளை நகரவிடாமல் செய்ய அவளும் மதியின் அருகிலேயே படுத்து கண்களை மூடினாள்… மூடிய கண்களில் கடந்த காலம் வர சுகங்களை மட்டும் விரும்பும் மனம் அப்பொழுது நடந்த சுகமங்களை நினைத்துக்கொண்டே அமைதியாக உறங்கினாள்..
கடையில் வாங்கிய பொருட்கள் அனைத்தையும் குழந்தையின் அறையில் வைத்த பார்த்திபன் அவர்கள் இருவரும் அமைதியாக உறங்குவதை கண்டவன் அவனும் சற்று ஓய்வெடுக்க நினைத்தவனாக அவனும் உறங்க சென்றான்.
மகிழ் மதியம் தொடங்கிய நேர்முக தேர்வு முடிய மாலை நான்கு மணியாக… வேலையை முடித்துக்கொண்டு சற்று நேரம் காய்கனி பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு செல்ல நினைத்தவனாக கிளம்ப… அதற்குள் அவன் தனிப்பட்ட மேலளர் பிரதீப்ம் வந்திருக்க அவனிடம் மற்ற வேலைகளை பார்த்துக்கொள்ள சொல்லியவன் அலுவலகத்தை விட்டு வெளியேறி தனது கார் இருக்கும் இடம் நோக்கி சென்றான்.
அவன் காரை நெருங்குவதற்குள் எதிர்பாரா விதமான அன்று நேர்முக தேர்வுக்கு வந்திருந்த ஒருவனின் இருசக்கர வாகனம் சரியாக வேலை செய்யாத காரணமாக அருகில் வந்த மகிழின் மீது மோத அவனும் சுதாரித்து நகரும் முன்னே அந்த விபத்து நடக்க மகிழில் காலில் நல்ல அடியும் அவன் அடிபட்டு கீழே விழுந்ததனால் தலையிலும் அடிபட மயக்க நிலைக்கு சென்றான்… அவனுடைய அலுவலகத்திலேயே அவனுக்கு விபத்து என்பதால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டான்…
[the_ad id=”6605″]
அதே நேரம் குழந்தையுடம் மதியம் உறக்கத்தில் இருந்த மதி ஏதோ கேட்ட கனவு கண்டவள் அலறி அடித்துக்கொண்டு படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தாள். அவளுக்கு ஒரு நிமிடம் தான் எங்கே இருக்கிறோம் என்பது தெரியாதவளாக தடுமாறினாள்… அந்த குளிரிலும் அவளுக்கு வேர்க்க தன் நெற்றியில் துளிர்த்த வியர்வையை துடைத்தவள் அருகில் இருக்கும் தண்ணீரை எடுத்து கொஞ்சம் பருகியவள் தன்னை ஆசுவாச படுத்திக்கொண்டாள்…
ஆனாலும் அவளுக்கு அந்த கனவின் தாக்கம் இருக்க அருகில் உறங்கும் குழந்தையை பார்த்தவள் அவள் நன்றாக உறங்குவதை உறுதி படுத்திக்கொண்டவள் தங்கள் அறையில் உள்ள பால்கனியில் சென்று அங்கிருக்கும் ஊஞ்சலில் அமர்ந்தவள். தனக்கு முன்னாள் தெரியும் தோட்டத்தை பார்த்துக்கொண்டு அமர்ந்தவளின் கவனம் முழுவதும் தான் கண்ட கனவிலும் கனவில் வந்த அவளின் உயிரானவனின் ஞாபகம் மட்டுமே… கனவின் தாக்கம் அவளின் கண்களில் கண்ணீராய் இருங்க… மனத்துக்குள்ளேயே அவளுடைய கடந்த காலம் விரிய கண்களை இறுக மூடியவள் அந்த ஒரு நாள் ஞாபகம் தாக்க தனக்குள்ளேயே இறுகி போய் அமர்ந்திருந்தாள்.
எதிர்ச்சியாக அவளுடைய அறைக்கு வந்த பார்த்திபன் அவளை அறையில் காணாமல் பால்கனி பக்கம் வந்தவன் அவள் அமர்ந்திருக்கும் விதத்தையும் அவள் கண்களில் இருந்த கண்ணீரும் அவனை வாட்ட என்ன செய்து நான் இவள் கவலையை நான் போக்க போறேன் என்று தெரியாமல் தடுமாறி நின்றான்.
காலம் தான் சில ஞாபகம்
அழியாமல் பாதுகாக்க
நானும் தான் என்ன செய்வேன் அன்பே
ஞாபகங்களை சுமந்துகொண்டே….
உயிர் விடும் வேதனையை நீ
சுமக்க அன்பே நானும் அதை உணர்வேன்…
சோகங்கள் உன்னோடு இருக்க
நானும் உன்னை கண்டு உன்
சோகம் களைய நினைப்பேன் அன்பானவளே
நீயும் எந்தன் உயிரல்லவோ…
காலம் தான் மனம் திறக்க நானும்
உன்னை காக்க காத்திருப்பேன்.
_ பிழை விருப்பமாகும்.