பிழை : 2
செயற்கரிய யாவுள நட்பின்? அதுபோல
வினைக்குஅரிய யாவுள காப்பு?
(பொருள்: தூய்மையான நட்பைப் போன்று சிறந்ததாக எந்த உறவுகள் உள்ளன? நாம் ஒரு செயலைச் செய்யும் பொழுது அந்த நட்பைப் போன்று சிறந்த பாதுகாப்பைத் தருவது வேறு எது உள்ளது?).
திருக்குறள் அதிகாரம்: 79
“நட்பு“….
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கலில் மிகவும் அழகான மாநிலம்.. இயற்கை வளம் மிகுந்த கண்கவர் மாநிலம்.. இந்தியாவிலேயே அதிக மழை பொலிவு நகரங்களை கொண்ட இயற்கையாக அமைந்த மலைகளும்… காடுகளும்… மலைகளை இணைக்கும் இயற்கையாக மரத்தின் வேறுகளால் உருவான அழகிய பலங்களை கொண்ட குளிருக்கு பெயர்போன அழகான மாநிலம் மேகாலயா… முன்னர் அசாம் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது… இன்று தனி மாநிலமாக உள்ளது. காசி இன மக்களை அதிகம் கொண்ட மாநிலம் மேகாலயா.
மேகாலயா மாநில தலை நகர் ஷில்லாங்… ஷில்லாங்கில் அமைந்துள்ள புகழ் பெற்ற கல்வி நிலையம் இந்திய மேலாண்மை நிறுவனம்(IIM) , அங்கே முதுகலை முதலாம் ஆண்டு மேலாண்மை வகுப்பில் இந்திய பொருளாதாரம் (Indian Economy) வகுப்பு எடுத்துக்கொண்டு இருந்தான் பார்த்திபன்…
இருபத்தி ஒன்பது வயது அழகிய ஆண்மகன். படிப்பிலேயே உயர்ந்தவன்… ஆறடி உயர அழகிய தமிழ்மகன்… பார்த்திபன் பார்த்த உடனே சொல்லிவிடலாம் தமிழன் என்று… ஆறடி உயரத்திற்கு ஏற்றாற்போல அழகான உடற்கட்டு உடையவன் தொடர் உடற்பயிற்சியால்… நிறம் தமிழருக்கே உரிய மாநிறம்… கன்னக்குழி அழகன்… சிரிக்க வேண்டாம் அவன் முகத்தில் என்ன செயல் செய்தாலும் ஆழமாக இரு கன்னத்திலும் குழிவிழும்… சிரித்தாள் எதிரில் இருப்பவர் அவ்வளவு தான் அவன் சிரிப்பில் தன்னிலை மறந்துவிடுவார் அந்த அளவு வசிகரமானவன்.
[the_ad id=”6605″]
அழகான ஆங்கில உச்சரிப்பில் அவன் வகுப்பு எடுக்க அங்கிருந்த மாணவர்கள் எல்லாம் அவன் வகுப்பு எடுக்கும் முறையும் அவன் விளக்கும் முறையையும் எளிதாக நன்றாக புரியும் படி அவன் எடுக்கும் வகுப்பை கவனித்தார்கள் என்றால்…. அங்கிருந்த மாணவியர்கள் அனைவருமே ஒன்றுபோல அவனை மட்டுமே பார்த்திருந்தார்…. அவன் பேசும்போது விழும் கன்னக்குழியில் விரும்பியே விழ ஆசை கொண்டனர் அனைவரும்…
அவனையே பார்த்திருந்தாலும் அவனுடைய வகுப்பை நன்றாக கவனித்தனர்… இல்லையென்றால் அவன் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது…. எப்பொழுது என்ன கேள்வி யாரை கேட்பான் என்று சொல்ல முடியாது…. அவன் கேள்விக்கு சரியான பதில் வரவில்லை என்றால் அவனின் அடுத்த செயல் கடுமையாக இருக்கும்…. அவன் கொடுக்கும் வேலையை (Assignment) முடிக்க முடியாமல் திணற வேண்டும்…. அதற்கு பயந்துகொண்டே மாணவிகள் அவனையும் பார்ப்பர் அதே சமயம் பாடத்திலும் கவனமாக இருப்பர்…
பார்த்திபன் கல்லூரியில் இருக்கும் நேரம் முழுவதுமே ரொம்ப கடுமையானவனாக தான் இருப்பான்…. ஆனால் உண்மையில் அவன் மிகவும் மகிழ்ச்சியான மனிதன்…. கல்லூரியில் கொஞ்சம் கடுமையாக இருந்தால் மட்டுமே மாணவர்களிடம் நல்ல தேர்ச்சி கிடைக்கும் என்பது அவனுடைய தனிப்பட்ட கருத்து… ஆனால் நல்ல ஆசிரியர் அவன்… அவன் வகுப்பு எடுக்கும் முறை மிக அருமையாக இருக்கும். எளிதில் புரியும் படியும் சந்தேகம் கேட்டாலும் நன்றாக சொல்லி கொடுப்பான்.
அங்கிருக்கும் பெண்கள் தன்னையே பார்ப்பது அவனுக்கு புரிந்தது… அவனுக்கு எரிச்சலும் கூட வந்தது… அதே சமயம் தன் மனதில் இருக்கும் அவள் எதிரில் அதே வகுப்பில் அமர்ந்து அவன் எடுக்கும் வகுப்பை கவனிப்பது போல… என்றோ நடந்த நினைவு பசுமையாக அவன் மனதில் இன்றும் இருப்பதால்… அன்று இருந்த பரவச மனநிலை இன்றும் இருப்பதை உணர்ந்தவன்…. அந்த அழகிய ரக்ஸாஸி முகம் கண்முன்னே தோன்ற… தனக்குள் நிகழ்ந்த பரவசத்தை மறைக்க முடியாமல் சின்னதாய் மிகவும் சின்னதாய்… ஒரு புன்முறுவல் அவன் செய்ய அதற்கே அவன் கன்னங்களில் அழகாய் ஆழமாய் குழி விழ, அங்கிருந்த மாணவர்கள் அனைவருமே ஒரு நிமிடம் அவன் முகத்தையே காண…
[the_ad id=”6605″]
அதில் அவனுக்கு சற்று வெட்கமும் வர மனதுக்குள்ளேயே, ‘அடி சின்னா உன்னால பாரு என்னோட மாணவர்களிடம் அசிங்கமா போய்டுச்சு…’ என்று மனதுக்குலேயே அவளிடம் பேசினான். அடுத்த நொடி ஏதும் இல்லத்தைப்போல வகுப்பு எடுக்க ஆரம்பித்தான்….
அன்றைய நாள் அவனுக்கு இனிமையாக அவளின் நினைவுகளுடன் செல்ல…. மாலை ஆனதும் ஊருக்கு வெளியே சற்று தொலைவில் இருக்கும் தன்னுடைய இல்லத்திற்கு அவனுடைய கார் ஜாகுவார் க்ஸ்.எப்ல் சென்றான்…
ஊருக்கு வெளியில் அமைந்திருந்தது பார்த்திபனின் வீடு… அது மலை பிரதேசம் என்பதை அழகாய் எடுத்து காட்டுவதை போல அவன் வீடு ஒரு அழகிய டீ மற்றும் காய்கனி தோட்டத்திற்கு நடுவே அமைந்திருந்தது… அந்த தோட்டம் முழுவதிற்கும் சொந்தக்காரன் பார்த்திபன் ஒருவனே அனைத்தையும் அவனுடைய சொந்த உழைப்பால் வாங்கியதே… அந்த வீடும் அவன் இந்த தோட்டம் வாங்கிய பொழுதே சேர்ந்து வாங்கியது… இப்பொழுது அவனுக்கு கீழே அந்த தோட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மேகலாயாவை சேர்ந்த தின கூலிகள் வேலை செய்கின்றனர்…
வீட்டிற்கு வந்தவன் வாயிலில் நின்று ஒலி எழுப்ப, அவன் வந்தது தெரிந்து அவனுக்கு கேட் திறந்து விட வெளியே வந்தாள் மதிவதனி… அந்த வானத்தில் இருக்கும் மதியே பெண்ணாக வந்தது போல அந்த நிலவையே தோற்கடிக்கும் அழகியாக சிரித்த முகமாக இருபத்தி ஆறு வயது மங்கை…
“வா பார்த்திபா…” என்று தலை அசைத்து அவனை வரவேற்றாள்… உள்ளே வந்து காரை நிறுத்தியவன்… “என்னடா மதி இன்னைக்கு நாள் எப்படி போச்சு… எங்கே என்னோட செல்ல குட்டி…? நான் வந்தும் இன்னும் வெளியே வரல..?” என்று அவளிடம் கேட்டுக்கொண்டே வீட்டுக்குள் கண்களால் தேட… அவனை கண்டு மதியும் கைகளை கட்டிக்கொண்டு அமைதியாக அவனை காண… அவன் “எங்க இருக்க செல்லம்…?” என்று வீட்டுக்குள் வந்தததில் இருந்து தேட…. அவன் தேடிக்கொண்டு இருக்கும் மூன்று வயது நிறைந்த மகிழ்வதனி அவளுடைய அப்பா தேடுவதை பொருட்படுத்தாமல் அமைதியாக அங்கிருந்த அறை ஒன்றில் அமர்ந்திருந்தாள்…
பார்த்திபனும் அவளை தேடிக்கொண்டு அந்த அறையில் அமர்ந்திருந்தவளை கண்டுபிடித்தவன்… அவன் வந்தது தெரிந்தும் அவனை காணாமல் அந்த அறையின் சுவற்றையே பார்த்துக்கொண்டு இருந்தவளின் கோபம் கண்டு… ஆனால் எதற்கு என்று தெரியாமல் அவளை எப்பொழுதும் செல்லமாக அழைக்க பயன்படுத்தும் செ…கு…(செல்ல குட்டியின் சுருக்கம்) என்று அழைக்க என்றும் போல இன்றும் தனது ஆசை அப்பா தன்னை கொஞ்சும் போது மட்டும் உபயோக படுத்தும் செ…கு வை கேட்டு கோபம் விட்டவளாக அவனை திரும்பி பார்த்தாள் குழந்தை….
பார்த்திபனுக்கு தெரியும் குழந்தை கோபமாக இருக்கும் போது செ…கு…என்று அழைத்தால் என்ன கோபம் என்றாலும் அதை விட்டு அவனிடம் ஓடி வருவாள் என்பது… அவனின் எண்ணம் உண்மை என்பதை போல அவனை திரும்பி பார்த்த குழந்தை…. அதே வேகத்தில் அவன் அருகில் வந்து அவனை கட்டிக்கொண்டு “பாத்திப்பா நீங்க ஏன் இன்னைக்கு சீக்கரம் வரல…? நீங்க இன்னைக்கு பாப்பாவை வெளில கூட்டி போய் பார்பி டால் வாங்கி தரேன் சொன்னிங்களே…?” என்று மழலை மாறாமல் அவனை கேட்க…
அப்பொழுதே அவனுக்கு ‘இன்று குழந்தையை வெளியே அழைத்து செல்வேன்…’ என்று அவளிடம் சொன்னது ஞாபகம் வர… மனதுகே ‘அடியே சின்னா உன்னால உன்னையே நினைச்சிட்டு இருந்ததால குழந்தையை வெளிய அழைச்சிட்டு போறேன்னு சொன்னது கூட மறந்துருச்சே… இன்னும் உன்னால என்ன என்ன கஷ்டம் எனக்கு வர போகுதோ தெரியலையே…?’ என்று மனதுக்குள்ளேயே வேதனை பட்டவன்… தனது கைகளில் இருந்த குழந்தையையும் சற்று தள்ளி நிற்கும் மதியையும் பார்த்தவன்… ‘தான் இப்படி அவளுடைய நினைவிலேயே இருக்க கூடாது… இது மதிக்கு செய்யும் துரோகம்…’ என்று நினைத்து சங்கடபட்டவன்…. குழந்தையிடம் “ரொம்ப சாரிடா செல்ல குட்டி… அப்பா உன்ன கண்டிப்பா நாளைக்கு வெளில அழைச்சிட்டு போய் உனக்கு பிடிச்ச மாதிரி பார்பி டால் ஒன்னு இல்லை ரெண்டு வாங்கி தரேன் ஓகேவா…?” என்று அவளை சமாதான படுத்த.
[the_ad id=”6605″]
குழந்தையும் அவன் சொன்னதை கேட்டதும் யோசனை செய்வதை போல கன்னத்தில் ஒருவிரலை வைத்து சற்று யோசிப்பது போல செய்துவிட்டு… “சரி பாத்திப்பா பாப்பாக்கு ஓகே… ஆனா டூ பார்பி வேண்டாம் ஒன் பார்பி மட்டும் போதும்…” என்று அவனிடம் சொன்னதும்…. குழந்தை மதியை பார்த்து அழகாய் சிரித்துக்கொண்டே “அம்மா பாப்பா குட் கேர்ள்… அப்பாட்ட ஒன் பார்பி போதும் சொல்லிட்டா…” என்று சொல்லி சொல்லி அழகாய் சிரித்துக்கொண்டே அவளுடைய அப்பா கழுத்தை கட்டிக்கொண்டு அவனுக்கு கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தது…
அவர்களை பார்க்க மிகவும் அழகிய குடும்பமாக தெரிந்தது… காலமெல்லாம் அவர்கள் இந்த மகிழ்ச்சியுடன் இருக்க முடியுமா…. அழகிய மதியை சுழற்றி அடிக்க அசுர கற்று நெருங்கி வந்தால் அவளின் நிலைமை… இந்த அழகிய குடும்பம் பிரிவை சந்திக்க நேர்ந்தால்???
காலமெல்லாம் அவள் ஞாபகம்
என்னை விட்டு போகாமல்
நான் இன்னும் வேதனை பட
என்னை நம்பிய இரு உயிருக்கு
துரோகம் இழைக்க வேண்டுமோ
அவளை மறக்க முடியாமல் தவிக்க
உடன் இருப்பவள் காப்பாளோ
அன்றி அவள் உயிரை பிரிப்பாளோ
அவளே நான் விரும்பி செய்த
என் விருப்பப்பிழை.
_ பிழை விருப்பமாகும்.