“என்ன விஷயமா பார்க்க வந்தீங்க?”
“எங்களை உங்களுக்குத் தெரியுது இல்லையா…”
“தெரியும், நீங்க அந்த எஸ்.கே.எஸ் ஆளுங்க தான. எதுக்கு வந்தீங்க சொல்லுங்க.”
“இல்ல… இந்த வருஷம் குளத்தில மீன் பிடிக்கிற ஏலத்தை எங்களுக்கே முடிச்சு தரனும்.” வந்தவரில் ஒருவர் தலையைச் சொரிந்து கொண்டே சொல்ல… ரிஷி பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.
இதுக்குத் தான் வந்தாங்களா… ஒரு நிமிஷம் கலங்க வச்சிட்டாங்களே என நினைத்த சாதனா “வாங்க ராதா..” தோட்டத்தைச் சுத்தி பார்ப்போம் என முன்னால் நடந்தாள்.
“அம்மா ! அந்தப் பக்கம் இல்லைமா… இந்தப் பக்கம்.” எனப் பின்பக்கமாக அவர்களை அழைத்துக்கொண்டு ராதா சென்றாள்.
பின்னாலும் ஒரு இரும்பு கதவு இருக்க… அதைத் திறந்து வெளியே சென்றால்… பெரிய தோப்பு இருந்தது. கண்ணுக்கு தெரிந்த வரை அத்தனையும் தென்னை தான்.
பெண்கள் முவரும் பேசிக்கொண்டே நடக்க… நடுவில் மாட்டுக் கொட்டகை வந்தது. அதில் நிறைய மாடுகள் நின்றது. அத்தனையும் நாட்டு மாடுகள்.
“இவ்வளவு மாடா….” சுதா வியக்க…
“பெரிசா பால் எல்லாம் கிடைக்காது. மரத்துங்களுக்குப் போட உரம் வேணும் இல்ல… அதுக்கு.”
ராதா விளக்க மற்ற இரு பெண்களும் ஆர்வமாகக் கேட்டுக்கொண்டனர்.
இன்னும் சற்றுத் தூரம் சென்றதும், வயல் வெளி இருந்தது. பச்சை பாய் விரித்தது போல் பார்க்கவே பசுமையாகக் கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருந்தது.
“நீங்க வீட்ல சாப்பிடுறீங்க இல்லமா அரிசி, அது இங்க இருந்து விளைஞ்சு வந்தது தான்.”
“அப்படியா…” என்ற சாதனா, பரவயில்லையே நம்ம மாமனார் அரசியல்ல இருந்தாலும் விவசாயமும் நல்லா பார்கிறாரே… என நினைத்தவள், அதை அப்படியே சொல்ல…
“இதெல்லாம் பார்க்கிறது பெரிய ஐயா இல்லமா… நம்ம சின்ன ஐயா தான்.”
[the_ad id=”6605″]“இதுவும் ஒரு சொத்துன்னு தான் பெரிய ஐயா வாங்கிப் போட்டாங்க. ஆனா நம்ம சின்ன ஐயா பொறுப்பு ஏத்த பிறகு தான். இந்தத் தோட்டம் இவ்வளவு செழுமையா இருக்கு….” இதைச் சொல்லும் போதே ராதாவுக்கு அவ்வளவு பெருமை.
பரவாயில்லை வெளிநாட்டில படிச்சாலும், விவசாயத்துல நம்ம ஆளுக்கு ரொம்ப ஆர்வம் தான் போல.. எனச் சாதனா நினைத்துக் கொண்டாள்.
முழுத் தோட்டத்தையும் பார்க்க அரை நாள் வேண்டும். இருட்ட துவங்கியதால்…. கால்வாசி தூரத்திலேயே திரும்பி வந்தனர்.
“நீ போ ராதா… நாங்க மெதுவா வரோம்.” எனச் சொல்லி அவளை அனுப்பிவிட்டு மற்ற இருவரும் பேசியபடி வந்தனர்.
“சுதா, நான் உங்க கிட்ட ஒன்னு கேட்கலாமா…”
“கேளுங்க சாதனா…”
“நீங்க ரிஷியை பார்த்து ஏன் பயப்படுறீங்க? அவரும் உங்ககிட்ட சரியா பேசி நான் பார்க்கலையே…”
“ரிஷி அண்ணாவுக்கு என் மேல கோபம்.”
சுதா சொன்னதும், சாதனா அவளை ஏன் என்பது போல் பார்க்க…
[the_ad id=”6605″]“எங்க கல்யாணத்து அன்னைக்கே எங்க வீட்டுக்கும், எங்க மாமியார் வீட்டுக்கும் சண்டை வந்துடுச்சு. அப்புறம் அது தினம் தினம் வளர… என்னோட அண்ணன், நீ இங்க இருக்க வேண்டாம்னு என்னை மாமியார் வீட்ல இருந்து இழுத்திட்டு போய்டுச்சு…”
கதை மிகவும் சுவாரசியமாக இருக்க… சாதனா ஆர்வமாகக் கவனித்தாள். அவளுக்கு இதில் ரிஷி எங்கே வருகிறான் எனத் தெரிந்து கொள்ளும் ஆர்வம்.
“எங்க அண்ணன் சும்மா இல்லாம போலீஸ்ல வரதட்சனை கேட்டுக் கொடுமை படுத்திறதா…எங்க மாமியார் வீட்டு மேல என்னைப் புகார் கொடுக்கச் சொல்லுச்சு…. இல்லைனா குடும்பத்தோட நாங்க தற்கொலை பண்ணிப்போம்னு சொல்ல… நானும் வேற வழியில்லாம அப்படிச் செஞ்சிட்டேன்.”
“எனக்குப் புதுசா வந்த மாமியார் வீட்டை விடப் பெத்தவங்களும், கூடப் பிறந்தவங்களும் தான் முக்கியமா தோனுச்சு. ஆனா அது ரொம்பத் தப்பு தான்.”
“அப்ப ரிஷி அண்ணன் வெளிநாட்டுக்கு வேலை விஷயமா போய் இருந்தாங்க. என் மாமனார், மாமியாரோட என் வீட்டுக்காரரையும் சேர்த்துப் போலீஸ் ஸ்டேஷன் கொண்டு போய்ட்டாங்க. அதுல போலீஸ் இவர அடிச்சிட்டாங்க போலிருக்கு.”
“இந்த விஷயம் தெரிஞ்சதும், ரிஷி அண்ணன் உடனே வெளிநாட்டில இருந்து வந்துட்டாங்க. என்கிட்டே ஒருவாரத்தைக் கேட்காம அவனை எப்படி அர்ரெஸ்ட் பண்ணீங்கன்னு போலீஸ்காரங்க கிட்ட சண்டை போட்டாங்க.”
“என் அண்ணனையும் ஆள் வச்சு தூக்கிட்டு போய் அடி வெளுத்துட்டாங்க. என்னையும் வந்து ரொம்பத் திட்டினாங்க. பிறகு எல்லோரும் அலறி அடிச்சுப் போய்க் கம்ப்ளைன்ட் வாப்பஸ் வாங்கினோம்.”
“நான் கொஞ்ச நாள் எங்க வீட்ல தான் இருந்தேன். இவர்கிட்ட நிறையத் தடவை மன்னிப்பு கேட்டதும், இவர் என்னைச் சேர்த்துகிட்டாரு . ஆனா ரிஷி அண்ணன் இன்னும் என் மேல கோபமா தான் இருக்காங்க.”
சாதனாவிற்கு ரிஷியின் கோபம் நியாயம் என்றே தோன்றியது. தீனா மாதிரி ஒரு கணவன் கிடைக்கச் சுதா கொடுத்து அல்லவா வைத்திருக்க வேண்டும். வீண் பழி சுமத்திய மனைவியைத் திரும்பச் சேர்த்துக் கொண்டதும் இல்லாமல்… பழைய பகையை மறந்து, அவளைப் பிறந்த வீட்டிற்கு சீராட அனுப்பியும் வைக்கிறானே… இதற்கு மேல் அவன் நல்லவன் என்பதற்கு என்ன சான்று வேண்டும்?
சுதா தன் கதையைச் சொல்லி முடிக்க… சரியாக வீடும் வந்திருந்தது. வீட்டில் ரிஷியையும் காணவில்லை… நாய்களையும் காணவில்லை… தீனா மட்டும் இருந்தான்.
அவனோட சிறிது நேரம் பேசிய சாதனா மாடிக்கு சென்று குளித்துவிட்டு வந்தாள். அதன் பிறகும் ரிஷி ரொம்ப நேரம் சென்று தான் வந்தான்.
அவன் குளித்து விட்டு வந்ததும் சாப்பிட சென்றனர். அப்போது மீண்டும் யாரோ அவனிடம் பேச வர….
“ரிஷி, இதுக்கு மேல நீங்க லேட் பண்ணா நான் மயக்கம் போட்டு விழுந்திடுவேன். ரொம்பப் பசிக்குது வாங்க.” சாதனா சொல்ல…
“நீங்க சாப்பிட ஆரம்பிங்க நான் சீக்கிரம் வரேன்.” என்றவன், சொன்னது போல் சீக்கிரமே வந்துவிட….
சூடான சப்பாத்திக்கு சிக்கன் குருமாவும் அதோடு சாதனாவிற்கு முட்டை குருமாவும் செய்யப்பட்டு இருந்தது. தோட்டத்தில் வேறு நிறைய நடந்ததால்… எல்லோருமே நல்ல பசியில் இருந்தனர்.
சாப்பிட்டதும் ஹாலில் வந்து உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.
“இதே மத்த ப்ரண்ட்ஸ் வந்திருந்தா… இந்நேரம் ஒரே கலாட்டாவா இருந்திருக்கும்.” தீனா சொல்ல…
“ஏன் என்ன பண்ணுவீங்க?” சாதனா கேட்க….
“கோழி வறுவல், தண்ணி அப்புறம் சீட்டு கச்சேரின்னு விடிய விடிய ஒரே மஜாவா இருக்கும்.”
“ஓ… இதுதான் நீங்க வேலை பார்க்கிற லட்சனமா ரிஷி.”
“ஏய் நான் இல்ல… அவனுங்க தான். எனக்குத் தண்ணி அடிச்சாலே தலை வலி வந்திடும். பிறகு நான் எப்படி வேலை பார்க்கிறது. அதனால நான் குடிக்க மாட்டேன்.”
“இது ரொம்பத் தப்பு ரிஷி. உங்க ப்ரண்ட்ஸ் குடிக்கிறதுக்கு நீங்க ஹெல்ப் பண்றது ரொம்பத் தப்பு.”
[the_ad id=”6605″]“அவனுங்க நான் சொல்லி கேட்கிற ஆளுங்க இல்லை…”
“அவங்க வேற எங்க வேணா குடிக்கட்டும். ஆனா இங்க நம்ம வீட்ல வேண்டாம். அவங்க குடிக்கிறது அவங்க குடும்பத்தைச் சேர்ந்தவங்களுக்கு எவ்வளவு மன வருத்தமா இருக்கும். நமக்கு ஏன் அந்தப் பாவம்.”
“வெளிநாட்டில படிச்சிட்டு வந்தாலும் எவ்வளவு நல்லா விவசாயம் பண்றீங்க. இங்க எவ்வளவு பேர் வேலை பார்க்கிறாங்க. உங்க மேல எல்லோரும் ரொம்ப மரியாதை வச்சிருக்காங்க. நீங்க உங்க ப்ரண்ட்ஸ் கூடிட்டு வந்து இப்படிப் பண்ணா… அவங்க எல்லாம் என்ன நினைப்பாங்க?”
“நம்மால ஒருத்தர் வாழ்ந்ததா தான் இருக்கணும், அழிஞ்சதா இருக்கக் கூடாது. ப்ளீஸ் ரிஷி…”
சாதனா ஒரு மருத்துவர் என்பதால்… அவளுக்கு இந்தக் குடியால் ஏற்படும் அவலங்களைப் பற்றி நன்றாகத் தெரியும். முதலில் நண்பர்களோடு விருந்து என்ற பேரில் குடிக்க ஆரம்பிப்பவர்கள் தான். பின்பு, முழு நேரம் குடித்து வீணாகிப் போகின்றனர்.
“சரி இனிமே இங்க வந்து குடிக்கக் கூடாதுன்னு சொல்லிடுறேன்.” முதல் முறையாகச் சாதனா ஒன்று சொல்லி ரிஷி ஒத்துக்கொண்டு இருக்கிறான். சாதனாவிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
தீனாவும், சுதாவும் கீழே இருந்த அறையிலேயே தங்கிக்கொள்ள… ரிஷியும் சாதனாவும் மாடிக்கு சென்றனர். ரிஷி கையேடு கணக்குப் புத்தகங்கள் கொண்டு வந்ததால்… மாடி ஹாலில் அமர்ந்து கணக்கு வழக்குகளைச் சரி பார்க்க… சாதனா அறைக்குள் சென்று உடை மாற்றி விட்டு வந்து அவன் எதிரில் அமர்ந்தாள்.
“தூங்கலையா ரிஷி…”
“நான் தூங்க நேரம் ஆகும். நீ போய்ப் படு.”
“பெரிசா பண்ணைக்கு வான்னு கூடிட்டு வந்திட்டு என்னைக் கண்டுக்கவே இல்லை…” சாதனா குறை பட….
“நான் உன்னைக் கூப்பிடலை, நீயா தான் வந்த….பிறகும் நான் உனக்காகச் சுதாவை வர வச்சேன். இதுக்கு மேல என் மேல குறை சொல்ல என்ன இருக்கு?”
“சுதா வந்தது சந்தோஷம் தான். ஆனா அதுக்காக நீங்களும் சுதாவும் ஒண்ணா… நீங்க என் கூட வந்து தோட்டத்தைச் சுத்தி காட்டி இருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்.”
“நான் இங்க வேலை பார்க்க தான் வந்தேன். உனக்குச் சுத்தி காட்ட இல்லை…”
“உங்க நாய்கள் கிட்ட எல்லாம் கொஞ்ச நேரம் இருக்கு. ஆனா என்னோட கொஞ்சம் நேரம் இருக்க முடியலையா….”
“அதுங்க நான் இஷ்ட்டபட்டு வளர்க்கிற நாய்ங்க.” சாதனா கேள்விக்களாகக் கேட்க ரிஷியும் பொறுமை இழந்து பட்டென்று பதில் சொல்லி விட… அவள் முகம் வாடி விட்டது.
“ஓ… உங்க விருப்பம் இல்லாம உங்க லைப்ல வந்தவ நான்னு சொல்றீங்களா…”
“இப்ப என்னை வேலை பார்க்க விடுவியா மாட்டியா…”
தான் கேட்டதற்கு ரிஷி பொய்யாகக் கூட அப்படி எல்லாம் இல்லை என்று சொல்லாதது சாதனாவிற்குக் கஷ்ட்டமாக இருந்தது.
கல்யாணம் பண்ணி கொண்டதற்காக வேறு வழியில்லாமல் தன்னோடு வாழ்கிறான் என்பது முன்பே தெரிந்தாலும், அதை ரிஷி அமோதிப்பது போல் நடந்து கொண்டது மனதை வலிக்கச் செய்தது. சாதனா சட்டென்று அங்கிருந்து எழுந்து அறைக்குள் சென்று படுத்து விட்டாள்.
ஒரு மணி நேரம் சென்று ரிஷி வந்த போதும், சாதனா உறங்க வில்லை… ஆனால் கண்ணைத் திறக்காமல் படுத்திருந்தாள். அவள் அருகில் வந்து படுத்த ரிஷி அவளை அணைக்க…. சாதனா அவன் கையைத் தட்டி விட்டாள்.
“உங்களுக்குத் தான் என்னைப் பிடிக்காது இல்ல… அப்புறம் எதுக்கு என்னைத் தொடுறீங்க?”
“நான் உன் கழுத்தில தாலி கட்டி இருக்கேன். அதுக்குக் காரணம் நான் இல்லை…. நீ தான். அப்ப எனக்கு உரிமை இருக்கு தான…”
சாதனா கேட்டதற்கு ரிஷியும் திமிராகப் பதில் சொல்ல… தன் மீது விருப்பம் இல்லாமல் அவன் உறவு கொள்வது பிடிக்கவில்லை என்றாலும், சாதனா அவன் விருப்பத்திற்கு உடன்பட்டாள்.
விருப்பம் இல்லாமல் அவனும், கட்டாயத்திற்காக அவளும் என்று நேர்ந்த அந்தக் கூடல் இருவருக்குமே ரசிக்கவில்லை….
[the_ad id=”6605″]