வெளி வந்த வசு எப்படி பார்ப்பது என் று கையைய் பிசைந்து தவித்து நிற்கையில்… வாசு சைகையில் கோயிலில் என்று சொல்லி விட்டு சென்று விட்டான். அவன் சைகையை புரிந்துக் கொண்ட வசு செருப்பை மாட்டிக் கொண்டு கோயிலை நோக்கி சென்றாள்.
அது மதியம் நேரம் என்பதால் கோயில் நடையை சாத்தி இருந்தார்கள். எங்கே வாசு என்று சுற்றி பார்த்தவளுக்கு, பின் குளத்தில் வாசு கள் எரியும் சத்தத்தில், அங்கு நோக்கி சென்றது மட்டுமே அவள் அறிவாள்.
அவளின் வாயை அடைத்து விட்டு யாரும் பார்க்கா வண்ணம் மறைவில் வசுவை கொண்டு சென்ற வாசு…வசுவிடம் தன் காதல் பகிர்வதற்க்கு முன் தன் முத்தத்தை பதித்து விட்டான்.
வாசு அவன் முத்தத்தில் திகைத்து போய்… “என்ன செய்யிறிங்க விடுங்க யாராவது பாக்க போறாங்க…” என்று சொல்லியும் அவள் உதட்டை விடாது இருந்தவன் ஒரு கட்டத்திற்க்கு மேல்…அவள் மூச்சு விடவில்லை என்றால் நிலமை மோசமாகும் என்பதை உணர்ந்த பின் தான் வாசு வசுவை விடுவித்தான்.
வசுவுக்கு வாசுவின் முகத்தை நிமிர்ந்து பார்க்கவே மிக கூச்சமாக இருந்தது.அவளுக்கு வாசுவை பிடிக்கும் தான். ஆனால் இப்படி…அவள் யோசிக்கும் போதே அவளின் வசுவின் முகத்தை நிமிர்த்தி தன்னை பார்க்க வைத்த வாசு..
“நீ என்னை காதலிக்கிற தானே…?” என்று தன் காதலை சொல்லாது அவள் காதலை கேட்டான்.
அதற்க்கு வசுந்தரா… “ஆமாம்.” என்று தலையாட்டவும்..
“அப்போ ஏன் இந்த முத்தத்துக்கு இப்படி கில்டியா பீல் ஆகுற…இதுக்கே இப்படின்னா…இன்னும் எவ்வளவோ இருக்கே அதுக்கு என்ன செய்வ…” என்று கேட்டவனை அதிர்ந்து போய் தான் பார்த்தாள் வசுந்தரா…
“வசு நீ என்னை உண்மையா காதலிக்கிற தானே…” என்று திரும்பவும் கேட்டான்.
“உங்கல இரண்டு மாசம் பாக்காதது எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்தது தெரியுமா…?” என்று அந்த பேச்சின் மூலம் தன் காதலை வசு வெளிப்படுத்தினாள்.
“அதுக்கு தான் நான் ஒரு ஐடியா வெச்சி இருக்கேன்.” என்று சொன்னவன் தன் திட்டத்தை சொல்ல ஆராம்பித்தான்.
“மணி வீட்டில் யார் கிட்டேயும் பேசுறது கிடையாது. அதனால நீ உன் வீட்டில் மணி என் கிட்ட சொல்லி உனக்கு வேலைக்கு ஏற்பாடு செய்ய சொன்னதா சொல். நான் உனக்கு வேலைக்கு ரெடி பண்ணிட்டேன். அதுவும் என் ஆபிசிலேயே…என்ன புரிஞ்சுதா…?” என்ற வாசுவுக்கு தன் தலையாட்டல் மூலம் சம்மதம் தெரிவித்தாள் வசுந்தரா…
அவர்கள் திட்டப்படி சென்னையில் ஒரே ஆபிசில் தான் கொஞ்ச நாள் வேலை பார்த்தார்கள். பின் ஒரே ஆபிஸ் என்ற நிலை தான்டி ஒரே வீடு என்ற நிலைக்கு தள்ளப்பட்டு, பின் இப்படியே ஒரு ஆண்டும் ஆறு மாதமும் கடந்த நிலையில் தான், வசுவுக்கு ஒரு நல்ல இடத்தில் சம்மந்தம் அமைந்திருப்பதாய் வீட்டில் இருந்து செய்தி வந்தது.
வாசுவும் வசுவும் திருமணம் செய்தாக வேண்டும். அதாவது செய்தே ஆகவேண்டும் என்ற நிலையில் தான் இருந்தனர். நாள் கணக்காய் இருந்த நாட்கள் மாதக்கணகாய் மாறி போனால்…அவ்வளவு தான் என்ற நிலையில் இருந்தனர் வசுவும் வாசுவும்… பின் ஒரு முறை சொன்ன பொய் வீட்டில் தொடர்ந்தது.
ஆம் வீட்டில் வாசுதேவன் தன் அப்பத்தாவிடம் “மணிக்கு அவ பிரண்டே இங்கு மருமகளா வரனும் என்று ஆசை.” என்று சொல்லி மென்று முழுங்கி நின்றான்.
அதற்க்கு தெய்வநாயகி… “எப்போது இருந்துடா நீ மணி ஆசையெல்லாம் நிறைவேத்த ஆராம்பிச்ச…?” அதே வீட்டில் இருக்கும் தெயநாயகிக்கு தெரியாதா…?யார் ஆசை இது என்று…
“எனக்கும் ஆசை தான்.” என்று சொன்னதும்…
[the_ad id=”6605″]
“ம் அத சொல்லு முதல்ல…இதுக்கு ஏன் நீ மணிய பிடிச்சி இழுக்குற…” என்று தெய்வநாயகி கேட்டார்.
“இல்ல அப்பத்தா அவளுக்கும் ஆசை தான். இது வசு தான் என் கிட்ட சொன்னா…” என்று வாசுதேவனின் இந்த பேச்சை தெய்வநாயகி நம்பினார்.
ஏன் என்றால் சிறு வயதில் இருந்தே இது இரண்டும் தானே ஒன்னா சுத்துதுங்க…மணி யாரோடும் அவ்வளவு பழக மாட்டாள். பேசவும் மாட்டாள். பேசும் ஒரே தோழி வசுந்தரா தான். அப்போ தன் மனதில் நினைத்ததை சொல்லி இருப்பாள் என்று நம்பினார் தெய்வநாயகி.
“சரிடா வசுவும் நம்ம இனம் தான். இடமும் நமக்கு சமமா இல்லேன்னாலும் பரவாயில்ல தான். ஆனால் வீட்டில் வயசு பெண்ணை வெச்சிட்டு பைய்யனுக்கு பண்றது அவ்வளவு நல்லா இல்லேன்னு தான் நான் சொல்லுவேன்.
முதல் தடவை அவ கிட்ட கேட்காம கல்யாணம் பண்ண பேசினேன். இப்போ வெளிநாட்டுக்கு போய் எல்லாம் ;படிச்சி இருக்கு…
அதுக்கு ஏத்தாப்பல மாப்பிள்ளை பார்க்கனும். அதுக்கு எந்த மாதிரி படிச்ச பையன் தேவைன்னு மணி கிட்ட கேட்டு மாப்பிள்ளை பார்த்து அவளுக்கு முதல்ல முடிச்சிட்டு, அடுத்த முகூர்த்த்த்திலேயே உங்களோடதை முடிச்சிடலாம்.” என்ற தெய்வநாயகியின் இந்த பேச்சில், சாதரணமாக இருந்து இருந்தால் வாசுவுன் மகிழ்ந்து தான் போய் இருப்பான்.
ஆனால் இப்போது தெய்வநாயகியின் பேச்சில் மகிழும் நிலையில் வாசு இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ‘என்னது மணிக்கு மணியே கேட்டு மாப்பிள்ளை பாக்க போறிங்கலா…?அப்போ எனக்கு இந்த ஜென்மத்துல கல்யாணம் ஆனா மாதிரி தான்.’ என்று மனதில் நினைத்துக் கொண்டான்.
அவனுக்கு தான் மணியின் கனவை பற்றி வசுவின் மூலம் தெரிந்து வைத்திருந்தானே…அப்போது அவனுக்கு அது பெரிய விசயமாக தெரியவில்லை. அவள் வாழ்க்கை அவள் விருப்பம். அதோடு அவள் பெற்றோரை எங்கும் அழைத்து செல்ல அவளுக்கு உரிமை இருக்கிறது.
அப்போது இப்படி தான் நினைத்தான். ஆனால் அவளுடைய கனவு தன் காதலை தகற்க்கும் என்றால், அவள் கனவை தகர்த்தெறிய வாசு சிறிதும் யோசிக்கவில்லை.
அப்பத்தா மணியிடம் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க கேட்டாள். கண்டிப்பாக தன் கனவை பற்றி சொல்ல மாட்டாள். ஏதாவது தான் சாக்கு சொல்வாள். பின் அங்கு வேலை வாங்கி இங்கு வர மறுத்தால்…தன் காதல் ..என்பதை விட தன் குழந்தை இது தான் அவனுக்கு பெரியதாக தோன்றியது.
அதனால் உடனே வாசு… “மணிக்கு மாப்பிள்ளை எல்லாம் பாக்கதேவையில்லை.” என்று வாசுதேவன் சொன்னது தான் தாமதம்…
“என்ன அவளும் யாரையாவது விரும்புறாளா…” என்று சொல்லிக் கொண்டே…
“ஏய் வரா…” என்று கத்தி அழைத்து விட்டார்.
“அய்யோ அப்பத்தா அது விரும்பவும் எல்லாம் இல்ல. மணிக்கு நம்ம வீராவை பிடிக்குமுன்னு வசு சொன்னா..
என் விருப்ப ..படி என் கல்யாணம் நடந்தா ..நாம ஒரே ஊரில் ஒரே குடும்பத்தில் இருப்போமுன்னு மணி அடிக்கடி சொல்வான்னு வசு சொன்னா…” என்று வாசுவின் பேச்சு அனைத்தும் தெய்வநாயகிக்கு நம்பும் படி தான் இருந்தது.
ஒரு ஆறு மாதமாகவே வீரா அடிக்கடி இங்கு வருவது. அதுவும் வரலட்சுமியிடம்… “அத்தை அத்தை…” என்று பேசுவது… போகும் போது கமலக்கண்ணனின் கைய் பற்றி செல்வது.
கூடவே தன் மகள் சங்கரி வரும் போது எல்லாம் முதலில் தன் அண்ணன் மகளை மணி இல்லை சிட்டு என்று மட்டும் அழைப்பவள்… இப்போது எல்லாம் மணியை பற்றி பேசும் போது, வாய் நிறைய மருமகள் என்று ஒரு உரிமையுடன் சொல்வது… இப்படி அனைத்தையும் நினைத்து பார்த்த தெய்வநாயகி இது உண்மை என்றே நம்பினார்.
நம்பியதை செயலாக்க…தன் பேரனை அழைத்து… “உனக்கு மணியை பிடிக்குமா…?” என்ற அம்மத்தாவின் கேள்வியில்…நம்ம அம்மா தான் ஏதோ சொல்லி இருக்காங்க…என்று தப்பாய் புரிந்துக் கொண்டு…
“அம்மத்தா இது பற்றி சிட்டு விருப்பத்தை தெரிஞ்சிட்டு …அப்புறம் உங்க கிட்ட பேசலாமுன்னு நினச்சிட்டு இருந்தேன் அம்மத்தா…ஆனா இந்த அம்மா இப்படி உலறி வைப்பாங்கன்னு நினைக்கல…” என்று வீரேந்திரன் பேச்சுக்கு…
[the_ad id=”6605″]
“உங்க அம்மா உலறலடா வாசு தான் சொன்னான்.” என்ற தெய்வநாயகியின் பேச்சில்…
“வாசுவா வாசு என்ன சொன்னான்…? நான் அவன் கிட்ட எதுவும் சொல்லலையே…” என்று சொன்னதற்க்கு..
“நீ அவன் கிட்ட இது என்ன எதுவும் சொன்னது இல்லேன்னு எனக்கு தெரியும் வீரா…மணி உன் மீது விருப்பமுன்னு வசு கிட்ட சொல்லி இருக்கா…வசு வாசு கிட்ட சொன்னான்.” என்ற தெய்வநாயகியின் பேச்சு…வீரேந்திரனுக்கு இன்னும் குழப்பத்தை தான் ஏற்படுத்தியது.
‘வசுவும் வாசுவும் பேசினாங்கலா…? அதுவும் இதை பற்றி…?ஏன்…?” மனதில் நினைத்ததை தன் அம்மாத்தாவிடம் கேட்டு விட்டான்.
“ஓ நான் இதை சொல்லலே… வசுவும் வாசுவும் விரும்புறாங்கலாம். அது தான் வாசுவுக்கு எல்லாம் தெரியும்.” என்று சொன்னார்.
வீரேந்திரன் மனதில் மணிக்கு தன்னை பிடிக்கும். தன் சிட்டுக்கு தன்னை பிடிக்கும் என்ற பேச்சே வேறு எதுவும் யோசிக்க விடாது செய்தது. இதே காதல் அவன் கண்ணை மறைக்கவில்லை என்றால் யோசித்து இருப்பானோ…
வேலைக்கே மணியின் பெயரை உபயோகித்தவர்கள்…அவர்கள் காதலுக்கு தங்களை உபயோகித்து இருக்க மாட்டார்களா…?குறைந்த பட்சம் சந்தேகமாவது பட்டு இருப்பான்.
ஆனால் ஆசை கொண்ட மனது..தன் மனதுக்கு சாதகமானதை மட்டும் நினைக்க வைத்தது. அதன் விளைவு எப்போது என்ன..?என்று மட்டும் பேச்சை வைத்துக் கொள்ளும் வாசுவின் எதிரில் போய் நின்றான்.
“சிட்டுக்கு என்னை பிடிக்குமுன்னு சொன்னாளா…?” என்று ஆர்வமுடன் தன்னை கேட்கும் வீரேந்திரனை வாசுதேவன் சந்தேகத்துடன் பார்த்தான்.வாசு இந்த திருப்பத்தை எதிர்பார்க்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
தன் அப்பாத்தாவிடம்… “மணி வீராவின் மீது விருப்பம் .” என்று சொல்ல காரணம்…தன் பேரன் என்றால் அப்பத்தா ஒத்துக் கொள்வார்கள் என்று தான்.
ஆனால் அதை வசுவிடம் சொல்லும் போது தான்… அவள் சொன்ன… “வீராவுக்கும் விருப்பம் இருக்கனும்ல…” என்று கேட்டதும் தான் வாசு….
“அய்யோ இதை நான் நினைக்கலையே…” என்று சொல்லி மண்டையில் குட்டிக் கொண்டான்.
வாசுவுக்கு வீராவை பற்றி தெரியும். தன் மீது எதையும் திணிக்க விட மாட்டான். அதே போல் தான் மற்றவர்களின் மீது எதையும் திணிக்க மாட்டான். வீரா வேண்டாம் என்று சொன்னால் என்ன செய்வது என்று கவலையாகி விட…
“சரி விடு வாசு. பார்க்கலாம். நீங்க நினச்ச படி நடந்தா பரவாயில்ல.இல்லேன்னாலும் நாம கல்யாணம் செய்து தான் ஆகனும் வாசு.” என்று வசு சொன்னதும்..
வாசுவும் …”சரி.” என்பது போல் அவள் கையை பற்றிக் கொண்டவனுக்கு, வீட்டை எதிர்த்து திருமணம் செய்துக் கொண்டால் தனக்கு எதிராய் என்ன என்ன திரும்பும் என்று நினைக்கும் போதே அவனுக்கு மலைப்பாய் இருந்தது.
அப்படி மலைத்தி போய் நின்றவனின் முன் போய் ஆர்வமாய்… “சிட்டுக்கு என்னை பிடிக்குமா…?” என்ற வீராவின் கேள்வியே இவனுக்கு எவ்வளவு அவளை பிடிக்கும் என்று தெரிந்து போக.. பின் என்ன வாசு பக்கா வாய் காயை நகர்த்தி இதோ. கல்யாணத்திற்க்கு சாமி கும்பிடும் நிலையில் கொண்டு வந்து நிறுத்து விட்டான்.
***************************************************************கலிபோனியாவில்…
“தோ பாரு மணி சர்ச்சில சில பார்மால்டிஸ் எல்லாம் இருக்கு அதை எல்லாம் நாங்க பாத்துக்குறோம். ஈவினிங் ரிசப்ஷனுக்கு ட்ரஸ்ஸாவது நீ வந்து எடுக்க வேண்டாமா…?” என்று ஆதாங்கத்துடன் மலர்விழி கைய் பேசியில் மணிமேகலையிடம் கேட்டார்.
மலர் விழி மணிமேகலையிடம் பேசிக் கொண்டு இருக்கும் போதே இந்த பெண் என்ன…?இப்படி எதிலும் ஆர்வம் இல்லாம இருக்கு. தன் கணவர் சொன்னது போல் இவங்க கல்யான வாழ்க்கை எப்படி அமையும்…?
[the_ad id=”6605″]
தன்னோட கல்யாணத்தப்ப தன் நிலையோடு மணிமேகலையின் நிலை ஒன்றும் அவ்வளவு மோசம் இல்லையே… அந்த நிலையிலும் வில்சன் கைய் பற்ற நான் எவ்வளவு ஆசையாக இருந்தேன்.
ஆனால் இந்த பெண் திருமணத்திற்க்கு தேவையானதை வாங்க கூட எல்லாம் நீங்கலே வாங்குகன்னு சொல்லிட்டா…
இப்போ ரிசப்ஷனுக்கு ட்ரஸ் எடுக்கவும் நீங்களே எடுங்கன்னா என்ன அர்த்தம்…? அதனால் திட்ட வட்டமாய் மலர் விழி மணிமேகலையிடம் “நீ வந்து தான் ஆகவேண்டும்.” என்று சொல்லி விட்டார்.
அதன் படி அன்று இந்தியவர்களின் உடை இருக்கும் அந்த பெரிய மாலில் வில்சன் விக்டரின் குடும்பம் காத்திருக்க… மணிமேகலை சோனாலியோடு வந்து சேர்ந்தாள்.
ஜான் விக்டர் தான் மணிமேகலையை பார்த்ததும் கண்கள் மின்ன… “ மேகலை.” என்று அழைத்துக் கொண்டே அவள் பக்கத்தில் போய் நின்றுக் கொண்டான்.
மணிமேகலை எப்போதும் போல்… “ஜான் சார்.” என்று அழைப்பில் ஏதோ பேசிக் கொண்டு இருந்தாள்.
இவர்களை பார்த்துக் கொண்டே தான் மலர்விழி அனைவருக்கும் தேவையான துணிகளை எடுத்துத்தது. சோனாலிக்கும் அழகிய லெகங்கா எடுத்துக் கொடுத்தார். அனைத்தும் கைய் பாட்டுக்கு செய்துக் கொண்டு இருந்தாலும், அவரின் மனது ஏதோ தவறு செய்கிறோமோ..இந்த கல்யாணத்தால் ஜான் சுகப்படுவானா…?தவறு செய்கிறோமா…? என்று யோசித்துக் கொண்டு இருக்கும் போது…
சில் என்று உடையும் சத்தமும்..கூடவே மணிமேகலையின்…, “அச்சச்சோ…” என்ற பேச்சும் தன் நினைவில் இருந்து கலைந்தவராய் என்ன என்று பார்த்தார்.
அங்கு ஒரு சிறு குழந்தை தன் கையில் வைத்திருந்த கண்ணாடி க்ளாஸில் இருந்த ஜூசை மணியின் உடையில் கொட்டி விட்டு…பாவம் போல் நின்றுக் கொண்டு இருந்தாள்.
மணி குழந்தையின் முகத்தை பார்த்து… “இட்ஸ் ஓகே…” என்பது போல் அக்குழந்தையின் கன்னத்தை தட்டி அவளை அனுப்பியவள்…
ஜானிடம்… “வாஷ் பண்ணிட்டு வர்றேன்.” என்று சொல்லி தன் கைய் பேசியை தன்னை பார்த்துக் கொண்டு இருந்த மலர் விழியிடம் … “இதை வெச்சிக்கோங்க ஆன்டி.” என்று சொல்லி கொடுத்து விட்டு சென்றாள்.
இது வரை குழப்பத்தோடு இருந்த மலர் விழி… மணிமேகலை கொடுத்து சென்ற கைய் பேசியில் அழைத்த அவள் அன்னையின் அழைப்பில்…மலர் விழியின் முகத்தில் குழப்பம் போய் அங்கு பதட்டம் குடிக் கொண்டது.
அந்த பேசியில் இடம் பெற்று இருந்த புகைப்படத்தை சோனாலியிடம் காண்பித்து… “.
“இ…து யா…ர்…?” என்று கேட்டாள். அந்த அழைப்பில் தெளிவாக மணிமேகலை அம்மா…என்று தான் பதிவு செய்து வைத்திருந்தாள். இருந்தும் யாரையாவது அம்மா என்று பதிவு செய்து இருந்தால்…இருக்க வேண்டும் என்று நினைத்து மலர்விழி கேட்டார்.
ஆனால் மலர்விழியின் அந்த எதிர் பார்ப்பை பொய்யாக்கும் வகையாக… “இவங்க மணியோட அம்மா ஆன்டி.” என்று சொன்ன சோனாலி கூடுதல் தகவலாய்…
“மணி அவங்க அம்மா மாதிரியே இருக்கா…” அந்த வார்த்தையை மலர்விழியின் காதில் கேட்காது அவர் நினைவு தப்பி தரையில் வீழ்ந்திருந்தார்.