அப்போ அவ சொன்ன… “அவனுக்கும் கொடுத்துட்டாங்க…எனக்கு கொஞ்சமா கொடுத்தாங்க. எனக்கு ரொம்ப கொடுத்தா செத்தது போல ஆயிடுவேன் நல்லா இருக்காது என்ன என்னவோ சொல்றாங்க வீரா. சீக்கிரம் வா…சீக்கிரம் வா.எனக்கு ரொம்ப பயமா இருக்கு.வீரா அவங்க வர சத்தம் கேட்குது.” என்று சொன்னது மட்டும் தான் கடைசியா அவ பேசியில் என்னிடம் பேசியது.
அவள் சொன்ன ஓட்டல், நான் தங்கி இருந்த இடத்தில் இருந்து ரொம்ப பக்கம் தான். அதனால் தான் அவள் கடைசியா பேசிக் கொண்டு இருக்கும் போதே நான் அந்த ஓட்டலின் பார்க்கிங் ஏரியாவுக்கு வந்து சேர்ந்து விட்டேன்.
அவ சொன்ன உன் பிரன்சுங்க என்றதில் இருந்து, அங்கு இருந்த ரிசப்ஷனிஸ்ட்டிடம் என் பிரன்டில் நான்கு பேரின் பெயர் சொல்லி, ரூம் புக் செய்து இருக்காங்காலான்னு கேட்டேன்.
நான் ஒரு பெயர் சொல்லாது நான்கு பெயர் சொல்லி கேட்கவும், அவங்க என்னை சந்தேகமா பார்த்ததை பார்த்துட்டு நிலைமையின் தீவித்தை சொன்னதும்…
அவங்களும் ஆமா ஆமா ஒரு வெளிநாட்டு பெண்ணோடு தான் வந்தாங்க. ஆனா மூன்று ரூம் புக் செய்து இருக்காங்க என்று சொல்லி கொண்டே அந்த ரூமோட சாவிய எடுத்துட்டு என் கூட வந்தாங்க.
அதிர்ஷ்ட்ட வசமா நாங்க திறந்த முதல் அறையிலேயே தான் லாலி இருந்தா…நல்ல வேலை நிலமை ரொம்ப மோசமாக ஆகலே..ஆனா கொஞ்சம் லேட் செய்து இருந்தாலும், நிலமை எங்க கை மீறி போய் இருக்கும்.
அப்புறம் அந்த ஓட்டலின் மேனஜர் வந்து, இதை வெளியில் சொல்லாதிங்க. எங்க ஓட்டல் நேம் தான் கெட்டு போயிடும் என்று சொன்னதை கேட்டு, நானும் அமைதியா லாலியின் மயக்கம் தெளியும் வரை காத்திட்டு இருந்தேன்.
அதுவும் இல்லாம அந்த ஓட்டல் மேல எந்த தப்பும் இல்லை. அதனால் தான் அந்த ஓட்டல் மேல் எந்த ஆக்க்ஷனும் எடுக்கல..லாலிக்கு மயக்க மருந்தின் அளவு குறைவா கொடுத்ததாலே சீக்கிரத்திலேயே அவ தெளிஞ்சிட்டா…
காலையில் தான் லாலியோட அண்ணனுக்கு மயக்கம் தெளிந்து ஒரு நிலைக்கே வந்தான். ஓட்டல் மேல ஆக்ஷன் எடுக்கலேன்னாலும் அந்த நாளு பசங்க மேல காலேஜ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் படி செய்துட்டேன்.
[the_ad id=”6605″]
நான் முதலிலேயே லாலி இந்தியா வந்ததும், இந்த பசங்க பார்வை சரியில்லேன்னு நான் லாலி கிட்டேயும் சொன்னேன். லாலியோட அண்ணன் கிட்டேயும் சொன்னேன்.
ஆனா கேட்காம அவங்க சொன்ன வீரா ஒரு பட்டிக்காடு. அவன் குளம், கோயில். இப்படி தான் சுத்தி காட்டி இருப்பான்.
நாங்க கூட்டிட்டு போறேன் பாருங்க ஒரு இடம். சும்மா சமையா இருக்குமுன்னு சொன்னதோடு, வீரா கிட்ட சொல்லாதேன்னு லாலிகிட்டேயும் அவ அண்ணன் கிட்டேயும் சொல்லி கூடிட்டு போய் இருக்காங்க.
அப்புறம் இப்படி ஆனதில் , நீ சொன்ன வீரா. நான் தான் கேக்கல…அதுவும் அவங்க சொன்ன வெளிநாட்டு பெண் தானே இது எல்லாம் அங்கு சாதரணம் தானே…இதுக்கு ஏன் இப்படி அடம் பிடிக்கிற…
நாங்களும் எத்தனை நாளுக்கு தான் உள்நாட்டு சரக்கையே அடிக்கிறது. எங்களுக்கும் பாரின் சரக்கு அடிக்க ஆசை இருக்காதேன்னு கேட்டு இருக்கானுங்க.
அது தான் லாலி என் கிட்ட சொன்னா…நான் இப்போ வர்ஜீன் கிடையாது. நான் இரண்டு பாய் பிரண்ட் கூட லிவிங் டு கெதரில் இருந்து இருக்கேன். ஆனா அது எல்லாம் நான் ஆசை பட்டு..நடந்த விசயம் அது. இப்படி போஸ் பண்றது தப்பு இல்லையா…இது ஏன் உங்க பிரன்சுங்களுக்கு புரியலேன்னு கேட்டா…
அது தான் நான் இங்கு இப்படி தான். பெண்கள் மனதை பாக்க மாட்டாங்க..சொல்லி அனுப்பி வெச்சேன். அது தான் என் பெயரை சொன்னாலே என்னவோ கடவுள் பெயர் சொன்னது போல் பீல் ஆவா.
அது தான் நான் உன்னை பாத்துக்கனும் என்று சொன்னதும், லாலி அப்படி பார்த்துக்கிட்டா..அதுவும் இல்லாம அடுத்த வாரம் அவ இந்தியா வர்றா…” என்று லாலியுடனான தன் நட்பை வீரேந்திரன் சொல்லி முடித்தான்.
முதலில் வீரா லாலியை காப்பாற்றியது…அதை கேட்டு பரவாயில்ல வட்டிக்காரனுக்கு பணம் மட்டுமே முக்கியம் இல்லை. மனமும் இருக்கிறது என்று நினைத்த மணிமேகலை.
லாலி இந்தியா வர்றா…என்று வீரேந்திரன் சொன்னதும்…மணிமேகலைக்கு மிகவும் சந்தோஷமாக ஆகிவிட்டது.
நம்மை அந்த வெளிநாட்டு பறவை எப்படி கவனித்தாள். நாமும் அவளை நன்கு பார்த்து அனுப்பனும் என்று நினைத்தவள்…
பின் மணிமேகலைக்கு ஏதோ நியாபகம் வந்து… “ஓ உங்க கல்யாணத்துக்கு வர்றாங்கலா…? என்று கேட்டு விட்டு…
தொடர்ந்து… “நீங்க லாலியை பத்தி கவலை படாதிங்க. கல்யாண மாப்பிள்ளையா நீங்க உங்க கல்யாணத்தை அனுபவிங்க. நான் லாலியை கவனித்து கொள்கிறேன்.” என்று சொன்னாள்.
வீராவின் இன்றைய பேச்சில்…வட்டிக்காரன் ஒன்றும் அவ்வளவு கெட்டவன் கிடையாது. கொஞ்சம் கொஞ்சம் நல்லவன் தான். சின்ன வயசு வீரா, அவன் கிட்ட உள்ளே ஒளிஞ்கிசிட்டு தான் இருந்து இருக்கான் என்று நினைத்தவளாய்…வீரேந்திரனின் சிட்டாய் பேசினாள்.
பதிலுக்கு வீரேந்திரனும்… “கல்யாண பெண் நீ… லாலியை கவனிச்சிப்பியா…? “ என்ற வீராவின் பேச்சை சரியாக உள்வாங்காது…
“ஏன் பாத்துக்க மாட்டேனா…?” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே… வீராவை அதிர்ச்சியுடன் பார்த்தவள்…
“நீ…ங்..க எ..ன்ன சொன்…னிங்க…?” தான் கேட்டது சரியா…? என்ற வகையில் திரும்பவும் கேட்டாள்.
“என் கல்யாணத்தில் கல்யாண பெண்ணே நீ தான். நீ லாலியை கவனிக்க முடியுமா…?” என்று தெள்ள தெளிவாக விளக்கிய வீராவின் பேச்சை நம்ப முடியாது அவனை பார்த்தவள்…
“ஏன்…?” என்ற கேள்விக்கு…வீராவின் பதில்…
“உனக்கு வசு, வாசுவின் காதலியா மட்டும் தான் தெரியும். எனக்கு வசு வாசு குழந்தையின் அம்மாவா தெரிந்ததால்…” தன் வார்த்தையை முடிக்காது மணிமேகலையை வீரேந்திரன் பார்க்க…
[the_ad id=”6605″]
அவள் முகத்தில் தெரிந்த அதிகப்பட்ட அதிர்ச்சியை பார்த்த வீரேந்திரனுக்கு…. ‘இவளின் இந்த அதிர்ச்சிக்கு காரணம்…தன்னோடனான இவளின் திருமணமா…?இல்லை வசு கற்பமாக இருப்பதினாளா…?’ என்று மனதில் நினைத்ததை வீரேந்திரன் கேட்டு விட்டான்.
“இப்போ எதுக்கு இவ்வளவு ஷாக் சிட்டு. உனக்கும் எனக்கும் கல்யாணம் செய்துக்க வேண்டிய முறை இருக்கு தானே…வாசு உன்னை வெச்சி ஏதோதே வீட்டில் பேசும் போதே எனக்கு அவங்க விசயம் தெரிஞ்சிடுச்சி…
வசு அவ கற்பத்தை கன்பாம் பண்ண போன ஹாஸ்பிட்டலில் தான் என் பிரன்ட் டாக்டரா இருக்கான். அவனுக்கு வசுவை தெரியலேன்னாலும், வாசுவை தெரியும். அன்னைக்கே போன் போட்டு என் கிட்ட சொல்லிட்டான். அப்புறம் விசாரிச்சதில் அவங்க இரண்டு பேரும் ஒரே வீட்டில் தான் இருந்தாங்கன்றதும் எனக்கு தெரிய வந்தது.
அதே வாரத்தில் ஒரு நாள் வீட்டுக்கு வந்த வாசு …உனக்கு என்னை பிடிக்குமுன்னு நீ வசுவிடம் சொன்னதாகவும், உனக்கு வசு அண்ணியா வந்தா நல்லா இருக்கும் என்று சொன்னாதாவும் சொன்னான்.
அது பொய்யுன்னும் எனக்கு தெரியும். ஆனா நான் அமைதியா இந்த கல்யாணத்திற்க்கு உன் கிட்ட கேக்காம ஒத்துக்க காரணம்…வசு வாசுவின் காதலியா மட்டும் இருந்து இருந்தா பரவாயில்லை.
ஆனால் இப்போ நான் ஏதாவது பேசி, வீட்டில் இருக்க பெரியவங்களுக்கு இந்த விசயம் தெரிய வந்தா…சொல்லு இந்த விசயம் நம்ம வீட்டுக்கும்,ஊருக்கு தெரிஞ்சா…என்ன ஆகும். அதான் நான் அமைதியா இருந்துட்டேன்.
ஒரு சில வாட்டி இதை பத்தி நான் உன் கிட்ட பேசலாமுன்னு கூட யோசிச்சேன். ஆனா அப்போ உனக்கு அந்த பயிற்ச்சியின் தேர்வு நடந்துட்டு இருக்க சமயம்.
இந்த சமயத்தில் இதை பத்தி பேசி உன்னையும் ஏன் குழப்பனும். அதுவும் இல்லாம வேறு சாய்ஸ்..அதாவது நம்ம கல்யாணம் நடக்க வேண்டாம் என்ற எண்ணம் இருந்தா இதை பத்தி உன் கிட்ட பேசி இருக்கலாம்.
நடந்து தான் ஆக வேண்டும் என்ற பட்சத்தில்…சரி நீ இங்கே வந்த பிறகே சொல்லிக்கலாம் என்று விட்டு விட்டேன்.”
என்ன நிலை என்று அனைத்தும் சொல்லி முடித்த வீரா…தான் இவ்வளவு சொல்லியும் மணிமேகலையின் முகத்தில் இருந்த குழப்பம் தெளியாததை பார்த்து…
“உனக்கு இதில் விருப்பம் இல்லேன்னா வேண்டாம். இதை இப்படியே இந்த இடத்திலேயே நிறுத்திடலாம் சிட்டு.
நாம மத்தவங்களுக்கு பார்க்க வேண்டியது தான். ஆனால் அந்த மத்தவங்களுக்கு பார்ப்பது என்பது, நம்மை எந்த விசயத்திலும் பாதிக்காது இருக்கனும். அப்படி இல்லேன்னா நாம யாரையும் பாக்கனும் என்ற அவசியம் இல்ல. நம்மோடு தான் மத்தது எல்லாம். என்று வீரேந்திரன் சொல்லி முடிக்க…
“அய்யோ நான் எனக்காக யோசிக்கல…உங்களுக்காக தான்.” என்று அடுத்து என்ன சொல்வது என்று மணிமேகலை தயங்கினாள்.
“எனக்காகன்னா எனக்கு புரியல சிட்டு…”
“இல்ல வசுவும், வாசுவையும் பாத்து, உங்களுக்கு விருப்பம் இல்லாத கல்யாணம் நீங்க செய்துக்கனுமா..?அதை பத்தி தான் யோசிச்சிட்டு இருந்தேன்.” என்று மணிமேகலை ஒரு வழியாக தன் மனதில் நினைத்ததை சொல்லி விட்டாள்.
“அப்போ உனக்கு இதில் விருப்பமா…சிட்டு…?” என்று கேட்ட அவன் குரலில் என்ன இருந்தது… என்று மணிமேகலைக்கு தெரியவில்லை.
ஆனால் அவன் குரலில் இருந்த மென்மையில், எனக்கு விருப்பம் இல்லை என்று மணிமேகலையால் சொல்ல முடியவில்லை.
“எனக்கு விருப்பம் தான். ஆனா நீங்க…” என்று சொல்லிக் கொண்டே வீரேந்திரனை தயக்கத்துடன் மணிமேகலை நிமிர்ந்து பார்த்தாள்.
மணிமேகலையின் முகத்தை மறைத்துக் கொண்டு இருந்த முடியை அவளின் காதுக்கு பின் புறம் விட்ட வாறே… “நான் சொன்னதை நீ கவனிக்கலையா சிட்டு. யார் என்றாலும், நமக்கு பாதகமா இல்லாததை தான் செய்யனும். மத்தவங்களுக்காக என் வாழ்க்கையை நான் அழிச்சிக்க மாட்டேன்.
எனக்கு பிடிக்காததை எதையும் எனக்கு திணிக்க முடியாது. அதுக்கு நான் விடவும் மாட்டேன். உன்னை பிடிக்கலேன்னா…வாசு வசு என்ன என் அப்பா அம்மாக்காக கூட உன்னை நான் கல்யாணம் செய்துக்க மாட்டேன். உன்னை பிடிச்சி இருக்கு…அதுக்காகவும் தான் உன்னை நான் கல்யாணம் செய்ய ஒத்துக் கொண்டேன் போதுமா…இப்போ சொல். உனக்கு என்னை பிடிச்சி இருக்கா…?” என்ற அவன் கேள்வியில் கொஞ்சம் திணறி போனவளாய் வீரேந்திரனை பார்த்தாள்.
“நான் ஒன்னும் அவ்வளவு கஷ்ட்டமான கேள்வி எல்லாம் கேட்கலையே…பிடிச்சி இருக்குன்னா பிடிச்சி இருக்குன்னு சொல்லு…இல்லேன்னா இல்லேன்னு சொல்லு,” என்ற அவன் பேச்சில்…
மணிமேகலைக்கு சட்டென்று அவனை பிடிச்சி இருக்கு என்று சொல்ல ஏனோ மனம் வரவில்லை. இரு வாரம் முன் ஒருவனை திருமணம் செய்ய இருந்தேன்.
அவன் இல்லாது போக இவன்…இப்போது எப்படி நான் என் விருப்பதை சொல்வது. என்னால் சரியாக எதுவும் யோசிக்க கூட முடியவில்லை.
அதுவும் தன்னிடம் அவன் எந்த ஒளிவு மறைவும் இன்றி பேசுகிறான். ஆனால் நான்…?என்னை பற்றி என்னால் சொல்ல முடியுமா…?சொன்னால் என்ன நினைப்பான்.
கடவுளே இவன் தான் மாப்பிள்ளை என்று முன்னவே சொல்லி இருக்கலாமே…ஒரு சமயம் சொல்லி இருந்தால் நான் இன்னொருவருடனான என் திருமணத்தை பற்றி பேசி இருக்க மாட்டனே… என்ன சொல்வது என்று ஒரு முடிவு தெரியாது…
பொதுவாய்… “உங்கல பிடிக்கலேன்னு சொல்ல எந்த ஒரு ரீசனும் இல்ல.” என்று சொல்லும் போதே மணிமேகலைக்கு நாக்கு கூசியது என்று சொல்லலாம்.
என்னை பத்தி தெரிந்தால் என்ன நினைப்பான்…?அவள் மனதில் அதுவே குழம்ப…
வீரேந்திரன் சொன்ன… “பரவாயில்ல பிடிக்கலேன்னு சொல்லலையே அதுவே போதும்.” என்று சொன்ன குரலில் இருந்த பேதத்தை உணர்ந்து..
[the_ad id=”6605″]
மணிமேகலை ஏதோ சொல்ல வர… “இல்ல சிட்டு உன் மனசுல இருக்கிறதை சொன்னதே எனக்கு போதும். பரவாயில்லை.” என்று மணிமேகலையிடம் வீரேந்திரன் சொல்லும் போதே…
‘இவளுக்காக நான் வருட கணக்கில் காத்திருக்க. இவள் சொல்கிறாள் என்னை மறுக்க காரணம் இல்லையாம். அதனால் திருமணம் செய்துக் கொள்கிறாளாம்.’
சரி அடுத்த காரியம் பார்க்கலாம் என்று வீரேந்திரன்.. “என்ன ஷாப்பிங் போகலாமா…?” என்று அழைத்தான்.
தயக்கத்துடன் தன்னை பார்த்த மணிமேகலையிடம் வீரேந்திரன்… “ஏதாவது கேட்கனுமா…?” என்று கேட்டதற்க்கு,
மணிமேகலை… “ஆமாம்.” என்று தலையாட்டினாள்.
ஆடிய அவள் தலையை பிடித்து நிறுத்தியவன்… “கேள்…” என்று சொல்ல…
“இல்ல நாம கல்யாணத்திற்க்கு அப்புறம் நாம அதே ஊரில் தான் இருக்கனுமா…?” என்ற கேள்வியில்..
‘இது என்ன பேச்சு என்பது போல் அவளை பார்த்தவன்… “ஆமா அது நம்ம ஊரு தானே…நாம அங்கயே தான் இருக்க போறோம். அதுவும் இல்லாம..என் பணத்தின் முக்கால் வாசி பாகம் அந்த ஊரில் தான் முடங்கி இருக்கு.” என்ற அவன் பேச்சில்…
‘ஆமா உன் பணத்தையும் அங்கயே முடக்கு…என்னையும் அங்கயே முடக்கி போடு..’ என்று நினைத்ததை சொல்லாது அவனோடு கடைக்கு கிளம்பினாள்.