அத்தியாயம்….18
“மணி கிட்ட ஏதோ மாற்றம் தெரியல…?” என்று வசுந்தரா வாசுதேவனிடம் கேட்டாள்.
“எனக்கு என்ன தெரியும்.” என்று வாசுதேவன் வசுந்தராவை எடுத்தெரிந்து பேசுவத போல் பேசினான்.எப்போதும் வசு தான் சின்ன விசயத்திற்க்கு கூட, முறுக்கிக் கொள்வாள்.
வாசு தான் அவளிடம் சமாதானம் பேசி தன் வழிக்கி கொண்டு வருவான். வாசுதேவனின் இந்த எடுத்தெரிந்து பேசுவது வசுந்தராவுக்கு புதியது.
“என்ன பேச்சு எல்லாம் ஒரு மாதிரியா இருக்கு வாசு …?” என்று எப்போதும் கேட்பது போல் தான் வசுந்தரா வாசுதேவை பார்த்து கேட்டாள்.
“ஆமா ஆமா மத்தவங்க பேச்சு எல்லாம் புதுசா போனதால …இப்போ என் பேச்சும் உனக்கு புதுசா தான் தெரியும்.” என்று சொல்ல.
“வாசு என்ன ஒரு மாதிரியா பேசுற…?” என்று அவனை உலுக்கி கேட்டதற்க்கு….
“பின் என்ன வசு. மணி நம்ம என சொன்னாலும் அவ வீட்டில் வாய் திறக்க மாட்டாள். அவ பேசுவதே என்னிடம் மட்டும் தான். அதனால் கவலை படாதேன்னு சொன்ன…
அதை நம்பி நான் பாட்டுக்கு வீட்டில் எக்க சக்கமா கதை அளந்து விட்டு இருக்கேன். இப்போ எல்லாம் என்னன்னு தெரியல… அப்பத்தா மணிய பத்தி பெருமையா பேசிட்டு இருக்காங்க. போதாதுக்கு இந்த வீரா வேற சிட்டு சிட்டுன்னு அவள் சொன்னத கேட்டுட்டு…
சமயத்துக்கு நாம காதல் கல்யாணம் செய்துக்குறோமா… இல்ல அவங்களான்னு… எனக்கே கொஞ்சம் குழப்பமா இருக்கு.
இதோட நாம செஞ்சது மட்டும் என் வீட்டுக்கு தெரிஞ்சது… அவ்வளவு தான். என் குடும்பம் என்னை வீட்டை விட்டே வெளிய அனுப்பிடுவாங்க. உன்னை நம்பிய பாவத்துக்கு எனக்கு நடுதெருவு தான் போல…”
[the_ad id=”6605″]
விமான நிலையத்தில் மணிமேகலை வந்து இறங்கியதில் இருந்து, அவள் பேசும் பேச்சும்…அவள் நடந்துக் கொள்ளும் முறையும், வசுந்தரா சொன்னதற்க்கு எதிர் பதமாகவே இருந்தது.
கூட இந்த வீரா வேறு, என்னவோ பல வருஷம் காதலிச்சி …பல வருட காதல் கைய் கூடுவது போல சிட்டு சிட்டுன்னு சுத்திட்டு இருக்கான். அவள் என்னன்னா யாரு மாப்பிள்ளைன்னு தெரியாமயே இவன் கண் அசைவுக்கு ஆடுறாள்.
வசுந்தரா சொன்னதை நம்பி நாம் இப்படி இறங்கியது தவறோ… என்று மனதில் வந்த பயத்தில், வாசுதேவனின் நாக்கு வார்த்தைகள் சாட்டையாய் கொட்டியது.
வசுந்தராவுக்கு வாசுதேவனின் இந்த பேச்சுகள் புதியதாய் இருந்தது. இது வரை வாசு வசுந்தராவை கடிந்து கூட ஒரு வார்த்தை பேசியது கிடையாது. வெறும் பார்வையால் இரண்டு வருடம் காதல் கடக்க…
இவன் தன்னிடம் பேச மாட்டானா…இவன் சும்மா தான் நம்மை பார்த்தானா… என்று யோசிக்கும் வேளயில் அவனாய் வந்து தான் பேசி, தான் வேலை பார்க்கும் இடத்திலேயே தனக்கு வேலைக்கு ஏற்பாடு செய்து…தன்னோடு தங்க வைத்து…ஒரு கணவன் மனைவி போலவே தான் இருவரும் வாழ்ந்து வந்த காலத்தில் கூட…
வசுந்தரா தான் கோபத்தில் வார்த்தைகளை விட்டு இருக்கிறாள். ஆனால் வாசு…எப்போதும் பொறுமை தான். அப்போது எல்லாம் நாம் வாசுவை தேர்ந்தெடுத்தது தப்பே இல்லை என்று தான் நினைத்துக் கொள்வாள்.
ஆனால் இன்றைய அவன் பேச்சில்…கோபத்தோடு அந்த விட்டெறிந்த தனமான அவன் சொற்கள் அவளை பலமாக தாக்கியது.
அதுவும் அவன் வார்த்தையில் இருந்த என் வீடு. நான் நடுத்தெருவில் தான் நிற்கனும். எதிலும் தன்னை சேர்க்காது அவன் மட்டும் பேசுவது போல் பேசியதை கேட்டு…
“இந்த அறிவு இதோ இதை கொடுக்கும் போதே இருந்து இருக்கனும்.” என்று வசுந்தரா தன் வயிற்றை காட்டி சொன்னாள்.
“நான் என்னவோ உனக்கு இதை வலுக்கட்டாயமா கொடுத்த்து போல சொல்ற…நீயும் பிடிச்சி தானே இருந்த…”என்ற வாசுதேவனின் இந்த பேச்சுக்கு வசுந்தராவால் பதில் சொல்ல முடியாது சிலையாக நின்று விட்டாள்.
அவளின் தோற்றம் வாசுதேவனுக்கு என்னவோ போல் இருக்க…
“சரி வசு விடு. நீயும் ரொம்ப பேசிட்ட… நானும் அதுக்கு பதில் சொல்றேன்னு ரொம்ப பேசிட்டேன். இதோட இந்த பேச்சை விடு. நமக்கு இதோட பெரிய விசயம் தலைக்கு மேல இருக்கு. நான் மணியிடம் பேச சொன்னனே பேசினியா…?”
மனதை தைப்பது போல் பேசி விட்டு…பின் எதுவும் நடவாதது போல் அடுத்து என்ன என்று பேசும் வாசுதேவை எதிர்த்து பேச முடியாது…
“ம் பேசுறேன். தனியா கிடைக்க மாட்டேங்குறா கிடச்சதும் தான் பேசனும்.” என்று சொன்ன வசுந்தராவின் பேச்சில் அவ்வளவு சோர்வு தெரிந்தது.
மற்றைய மசக்கை பெண்கள் போல் இல்லாது, வசுந்தராவுக்கு வாந்தி என்பது அவ்வளவாக இல்லை. காலையில் ப்ரஷ் செய்யும் போது மட்டும் வெறும் வயிற்றில் கொஞ்சம் குமட்டுவது போல் இருக்கும். அதுவும் வாந்தி போல் எல்லாம் வராது.
அதனால் இந்த விசயம் யாருக்கும் தெரியாது அவளாள் பார்த்துக் கொள்ள முடிகிறது. ஆனால் மசக்கைக்கே உண்டான சோர்வு…சாப்பாடு ஏற்றுக் கொள்ளாதது. பின் இது போல் இருக்கும் சமயத்தில் ஒரு சில பெண்களுக்கு ஏற்பாடும் ஹார்மோன் மாற்றம்..இதனால் அவள் கொஞ்சம் தடுமாறிக் கொண்டு தான் இருந்தாள்.
ஆனால் இந்த தடுமாற்றங்கள் அனைத்தும் வாசுதேவனின் காதல் கொண்டு…நாம் கடந்து விடலாம் என்று அவள் இருக்க..இன்றைய அவனின் பேச்சில் வசுந்தராவின் காதல் கொஞ்சம் ஆட்டம் கண்டது.
அதனால் அவளின் சோர்வு அப்பட்டமாய் முகத்தில் தெரிய அதை பார்த்த வாசுதேவனுக்கு என்ன தோன்றியதோ…
[the_ad id=”6605″]
“மணி பேச்சில் நான் கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டேன் வசு. மனசுல வெச்சுக்காதே…”என்று சொன்னவனுக்கு, வசுந்தரா எதுவும் சொல்லாது அமைதியாகி விட்டாள்.
ஆனால் மனதில் ‘இவனுக்கு இருக்கும் டென்ஷன் எனக்கும் தானே…இதோ இவனே இப்போது நான் உன் விருப்பம் இல்லாமலாயா தொட்டேன் என்கிறானே…என் விசயம் வெளியில் தெரிந்தால்…இதோ இவனை விட்டு விடுவார்கள்.
ஆம்பிள்ளை அப்படி தான் இருப்பான். பொம்பளைங்க தான் பாத்து பதுவுசா நடந்துக்கனும். அது தான் பழ மொழி எல்லாம் இருக்கே… முள்ளு மேல் சேலை விழுந்தாலும், சேலை மீது முள் பட்டாலும் சேதாரம் சேலைக்கு தான் என்று.
அது போல் ஊர் சனங்கள் வாய்க்கு வந்ததை பேசி விட்டு சென்று விடுவார்கள். அப்படி இருக்கும் போது இவனோடு எனக்கு தானே டென்ஷன் அதிகமாய் இருக்கும்.நான் இது போல் ஏதாவது பேசினா.. என்னை விட்டு விடுவானா…முதலில் விட்டு தான் இருந்தான்.இப்போது மட்டும் ஏன்… இப்படி…? நிஜமாகவே அவளுக்கு புரியாது மனதில் எதை எதையோ நினைத்து குழம்பி போனவளாய்…ஷாப்பிங்காவது ஒன்றாவது என்று அவள் கிடைத்த இடத்தில் படுத்துக் கொண்டாள்.
மாலையில் எழுந்த மணிமேகலையின் உடம்பு மட்டும் இல்லை. மனதும் கொஞ்சம் தெம்பானது போல் தான் இருந்தது. இனி எதையும் மாத்த முடியாது.
அதனால் பதட்டத்தோடு ஏன் இந்த கல்யாணத்தை எதிர் நோக்க வேண்டும். சோனாலி சொன்னது போல் மாப்பிள்ளை எனக்கு ஏத்த மாதிரி நல்லவனாய் அமைந்தால்…
முதலில் வீரேந்திரனிடம் யார்…? மாப்பிள்ளை என்று கேட்க வேண்டும் என்று அவள் நினைக்கும் போதே வீரேந்திரனே அவள் முன் வந்து நின்றான்.
“இப்போ பெட்டரா இருக்கா சிட்டு.” என்று கேட்டவன் அவளிடம் காபி கப்பை நீட்டினான்.
“ம்…” என்று மணிமேகலை ஒரே எழுத்து சொன்னாலும், அவள் முகம் ஆயிரம் வார்த்தை சொல்வது போல் பிரகாசித்து இருப்பதை பார்த்து வீரேந்திரன்…
“பரவாயில்ல. நான் நினச்சதுக்கு மேலேயே தெளிஞ்சிட்ட போல.” என்று கேட்டுக் கொண்டே தன் கையில் உள்ள காபியை ஒரு முழுங்கு குடித்து விட்டு, அவளின் பக்கத்தில் வந்து அமர்ந்தான்.
பக்கத்தில் என்றால் நெருக்கமாக எல்லாம் இல்லை. கொஞ்சம் இடைவெளி விட்டு தான் வீரேந்திரன் அமர்ந்தான். ஆனால் அமர்ந்த இடம் கட்டில். மணிமேகலைக்கு அவன் பக்கத்தில் வந்து அமர்ந்ததுமே ஒரு மாதிரியாகி விட்டது.
அதற்க்காக வீரேந்திரனை தவறாக எல்லாம் மணிமேகலை நினைக்கவில்லை. ஆனால் தனி அறையில் கட்டில் மேல் இப்படி அருகருகே அமர்ந்து இருப்பது அவளுக்கு ஒரு மாதிரி கூச்சத்தை கொடுத்தது.
அதுவும் இல்லாது இப்போது யாராவது வந்தால் என்ன நினைப்பார்கள் என்றும் கூடவே எண்ணம் எழ…எழுந்து விடலாமா…? என்று யோசித்தவளுக்கு, விடை வேண்டாம்.
இப்போது நீ சட்டென்று எழுந்தால், அது அவனின் ஒழுக்கத்தை தாக்குவது போல் ஆகும் என்று நினைத்து கொஞ்சம் நெளிந்து கொண்டே தான் அவன் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துக் கொண்டு இருந்தாள்.
“நீ இப்போ வரும் போது லாலி பர்சனல் விசயமா ஜெர்மனி போக வேண்டியதா ஆயிடுச்சி. அதான் உன்னை வழி அனுப்ப வர முடியலேன்னு சொன்னா…” என்று வீரேந்திரன் சொன்னதற்க்கு…
“ம் என் கிட்ட அவங்க சொன்னாங்க…வுட்பிய சந்திக்க போறாங்கன்னு. எனக்கு தான் அதை கேட்டு கொஞ்சம் ஷாக்.” என்று யாராவது வந்து விடுவார்களோ…தங்களை தப்பா நினைப்பார்களோ என்றே மணிமேகலையின் மனதில் இருந்ததால், வீரேந்திரனிடம் தான் என்ன சொல்கிறோம் என்று தெரியாது, தன் மனதில் இருந்ததை அப்படியே சொல்லி விட்டாள்.
“லாலி அவ ப்யூச்சர் ஹஸ்பெண்ட்டை பாக்க போவதில் உனக்கு என்ன ஷாக்.” என்று வீரேந்திரன் கேட்கவும் தான்…’அய்யோ உலறி வெச்சிட்டனே…என்று தன் நாக்கை கடித்துக் கொண்டு என்ன சொல்வது என்று யோசித்தாள்.
மணிமேகலை சிறு வயதில் ஏதாவது தப்பு செய்து விட்டால், இப்படி தான் நாக்கை கடித்துக் கொள்வாள். அதே போல் செய்யவும்..
“சிட்டு உன்னை பத்தி எனக்கு நல்லா தெரியும்.என் கிட்ட என்ன சொல்லி தப்பிக்கலாம் என்று எல்லாம் யோசிக்காதே….நான் தப்பா எல்லாம் நினச்சிக்க மாட்டேன். சொல்லு நிஜத்தை சொல். என்ன நினச்சி நீ அதிர்ச்சி ஆனாய்.” என்று கேட்கவும்,
வீரேந்திரன் சொன்ன… “உன்னை தப்பா நினைக்க மாட்டேன்.” என்ற வார்த்தையில் தைரியம் பெற்றவளாய்…
“இல்ல நான் அங்கு போனதில் இருந்து அவங்க எனக்கு ஏதாவது உதவி செய்தா…தேங்ஸ் சொல்லுவேன். அதுக்கு அவங்க நீ என் வீரா அனுப்பிய பெண். உன்னை என் வீரா நல்லா பார்த்துக்க சொன்னார்.
இப்படி தான் அவங்க சொல்வாங்க. நான் அவங்க பேசுனதை வெச்சி…வெச்சி…” என்று மணிமேகலை அடுத்து சொல்ல முடியாது கொஞ்சம் இழுத்து நிறுத்தவும்.
“ம் சொல்லு. நான் தான் தப்பா நினைக்க மாட்டேன்னு சொல்றேன்ல…தைரியமா சொல்.” என்று சொல்லவும்…
“நீங்களும் அந்த வெளிநாட்டு பறவையும் விரும்புறிங்களோன்னு நினச்சிட்டேன்.” என்று மணிமேகலை சொல்லி முடிக்கவும்…
வீரேந்திரன் புரை ஏறும் அளவுக்கு சிரிக்கவும்…
“இப்போ நான் அவ்வளவு பெரிய ஜோக் எல்லாம் சொல்லலே…இன்னும் சொல்ல போனா நான் ஜோக்கே சொல்லலை…” மூச்சில் அணல் காற்று வீச பேசினாள்.
[the_ad id=”6605″]
தான் சொன்னதற்க்கு வீரேந்திரன் கோப்ப்பட்டு இருந்தாலும் அவளுக்கு பரவாயில்லையாக இருந்து இருக்கும். இது போல் சிரிப்பது தன்னையே பார்த்து சிரிப்பது போல் இருக்க.. சிறுவயது பழக்கத்தில் பேசுவது போல் மணிமேகலை வீரேந்திரனிடன் பேசினாள்.
மணிமேகலையின் இந்த உரிமை பேச்சை வீரேந்திரன் ரசித்தாலும், அதை வெளியில் காட்டாது… “சாரி சிட்டு. சாரி. அது நீ லாலியை வெளிநாட்டு பறவைன்னு சொன்னலே அதை கேட்டு தான் எனக்கு சிரிப்பு வந்துடுச்சி… இனி சிரிக்கல சரியா…” என்று கேட்டவன்..
பின்… “இது போல் நீ என்னை பத்தி என்ன நினச்சாலும், தைரியமா கேட்கலாம் சிட்டு. நான் தப்பா நினைக்க மாட்டேன்.
அதே போல் தான் உன்னை பத்தியும் நீ எதுன்னாலும், என் கிட்ட தைரியமா சொல்லலாம். என்ன புரியுதா…?” என்று கேட்டவன் மணிமேகலையின் பதிலை எதிர் பாராது அவள் கேட்ட கேள்விக்கு பதிலாய்…
“லாலியோட அண்ணனும் நானும் M.B. A ஒன்னா தான் சென்னையில் படிச்சோம். அப்போ லாலி அவன் பிரண்சுங்க கூட இந்தியாவை சுத்தி பாக்க வந்த போது தான் நான் அவளை முதன் முதலா பார்த்தது.
இங்கு அவங்களுக்கு சுத்தி காட்டினது நான் தான். அப்போ ஒரு நாள் இங்கு ஏதோ பார்ட்டி அட்டண் செய்யனும் என்று என்னை கழட்டி விட்டுட்டு…அவ பிரண்ஸ் கூட போனா…
நானும் சரின்னு அன்னைக்கு போகமா வீட்ல இருந்தேன். அப்போ நடுயிரவு ஒரு பதினொன்னு இருக்கும் லாலி கிட்ட இருந்து போன்…
“வீ..ரா நீ.. வா…” என்று அவள் அழைத்த அழைப்பில் அவள் பேச்சில் அவ்வளவு தெளிவு இல்லாததை பார்த்து…
முதல்ல அவ அளவுக்கு மீறி மது எடுத்துட்டு இருக்கா..அதான் இப்படி குழறி பேசுறான்னு தான் முதல்ல நினச்சேன்.
ஆனா அவ சொன்ன… “இ..ங்கு உ..ன் பிர..ண்ஸ் எ..னக்கு தெரியாம ஏதோ கல..க்கிட்டாங்க. எ..னக்கு கொஞ்..சம் கொஞ்..சமா நினைவு தப்புதுன்னு.” சொன்ன அவள் பேச்சை கேட்டு நான் ரொம்ப பயந்துட்டேன்.
“உன் அண்ணா எங்கேன்னு …?” கேட்டேட்டே அவ எங்கு இருக்கான்னு கேட்டுக் கொண்டே என் வண்டிய எடுத்துட்டேன்.