மணிமேகலை வேண்டுதல் வைத்த அதே வேளயில்… நட்சத்திர அந்தஸ்த்து கொண்ட தங்கள் ஒட்டலில்… அதில் வேலை செய்பவனை காயோ காய் என்று காய்த்துக் கொண்டு இருந்தான் ஜான்.
அதுவும் சமையல் செய்யும் அறையில், அவர்கள் சமையல் செய்யும் மின் அடுப்பில் ஏதோ ஒரு மூலையில் இருந்த எண்ணை பிசுக்கை தன் விரலால் தொட்டு காண்பித்து…
“என்ன இது…? ஒரு ஒரு ஆயிட்டம் சமைத்த பின்னும் மின் அடுப்பை துடைக்க வேண்டும் என்று டாடி சொல்லி இருக்கார் தானே…ஏன் துடைக்கவில்லை.” என்று திட்டிக் கொண்டு இருந்தான்.
“சார் நான் துடச்சேன் சார். நல்லா தான் சார் துடச்சேன்.” என்று ஜான் விக்டர் நம்ப வேண்டுமே என்று, நல்லா என்பதில் அழுத்தம் கொடுத்து சொன்னான் அந்த தமிழ்நாட்டு நளபாகன் .
“துடச்சேன் என்று சொல். நல்லா துடச்சேன் என்று பொய் சொல்லாதே…இனி இது போல் பார்த்தேன் வேலைய விட்டு தூக்கிடுவேன்.” என்ற மிரட்டலோடு அந்த சமையல் அறையை விட்டு, அடுத்த கண்காணிப்பான நீச்சல் குளத்தை நோக்கி சென்றான்.
இதை எல்லாம் தன் நிர்வாக அறையில் இருந்து பார்த்துக் கொண்டு இருந்த வில்சன்…”மொத்த பொறுப்பையும் இவன் ஏத்துட்டா நான் நிம்மதியா என் மலர் கூட இருப்பேன். எங்கே விடறான். வயசுல சம்பாதிக்கனும் என்று பணத்து பின் ஓடுறோம். பின் அதை காப்பந்து பண்ண ஓடுறோம்.
ஆனால் இந்த காலத்து பசங்க மட்டும் தன் விருப்பம்…தங்கள் ஆத்ம திருப்தின்னு சொல்லி அவங்க வழிய பார்க்குறாங்க.” என்று புலம்பிக் கொண்டு இருந்தார் வில்சன்.
[the_ad id=”6605″]
அவர் சொல்வதும் ஒருவகையில் சரியே…வயதில் மலர்விழியை விரும்பி திருமணம் செய்தவர், மனம் ஒத்து வாழ்க்கை வாழ்ந்தாலும், அதிக நேரம் தன் மனைவியோடு செலவிட முடியவில்லையே…என்ற ஏக்கம் அவர் மனதில் இருந்து கொண்டு தான் இருந்தது.
மகன் வளர வளர..சரி கொஞ்ச காலம் தானே… தன் அத்தனை ஓட்டல்களையும் தன் மகன் பார்த்துக் கொள்வான் என்று நினைத்தாலுமே…மகன் விரும்பிய படிப்பையே படிக்க வைத்தார்.
அவரை பொறுத்த வரை தொழில் செய்ய, அதன் படிப்பு தேவையில்லை. அனுபவம் இருந்தால் போதும் என்பதே வில்சனின் எண்ணம். அவர் எண்ணத்திற்க்கு ஏற்ப தான் வில்சனின் அப்பா ஆராம்பித்த இந்த ஒட்டலை, அதன் சார்ந்த படிப்பை படிக்கா விட்டாலும், இதோ தன் தந்தை கொடுத்த ஒட்டல்களை இந்த அளவுக்கு உயர்த்தி இருக்கிறேன் என்று நிரூபித்து இருக்கிறார்.
அதனால் மகன் ஆசைப்பட்ட படிப்பை படித்து முடித்ததும், தன் தொழிலை கையில் எடுப்பான் என்று காத்திருந்த வில்சனுக்கு, அவர் மகன் ஜான் ஏமாற்றத்தையே பரிசாய் கொடுத்தான்.
ஆம் அவன் படித்த நான்கு பட்டத்திற்க்கு பின் ஏதோ டாக்ட்டரேட் பண்ண போறேன் என்று சொன்னவனை… ஏதோ யோசனையில் பார்த்தவர்…
சரி அவனுக்கு படிப்பு பிடித்தம். படித்த பிறகு நம் தொழிலுக்கு தானே வரவேண்டும் என்று நினைத்தவர் முன் ஒரு நாள்… “டாடி நான் டாக்ட்டரேட் பண்ணி முடிச்சிட்டேன். நான் ஆசை பட்டது போல் நான் படித்த கல்லூரியிலேயே நான் கற்பிக்க போக போகிறேன்.” என்று சொல்லி கூடை நெருப்பை அவர் தலையில் அள்ளிக் கொட்டினான்.
வில்சன்… “ஜான் அப்போ நம்ம தொழில்…” என்று கேட்டதற்க்கு,… “அது தான் நீங்க இருக்கிங்கலே…” என்று சர்வ சாதாரணமாக ஜான் சொன்னான்.
“எனக்கு அடுத்து இதை நீ தானே பார்த்துக்கனும் ஜான்.” என்று வில்சனை தொடர்ந்து பேச விடாது…
“அது தான் நீங்களே சொல்லிட்டிங்களே டாட். உங்களுக்கு அடுத்து. நீங்க இப்போவும் யங்கா தான் இருக்கிங்க டாட். நீங்க அம்மாவை லவ் பண்றதை பார்த்து எனக்கே லேசா பொறாமை வருதுன்னா பாருங்க. நீங்க அதுக்குள்ள எல்லாம் ரிட்டேர்மென்ட் வாங்க நான் விட மாட்டேன். வேணும்னா நான் அப்போ அப்போ வந்து ஒட்டலை பார்த்துக்குறேன்.” என்று பொறுப்பை தன்னிடம் தள்ளி விட்ட மகனை தன் அறையில் இருந்த கேமிரா மூலம் ஜான் வந்தது சமையல் அறைக்குள் சென்றது.
பின் இதோ நீச்சல் குளத்தின் அருகில் சென்றுக் கொண்டு இருப்பதை அனைத்தையும் தன் முன் இருந்த கணினி மூலம் பார்த்துக் கொண்டு இருந்தவருக்கு, ஒரு பெரும் மூச்சு தன்னால் எழுந்தது.
தன் மகனிடம் இருந்த ஆளுமை திறமையை பார்த்து பெருமை படுவதா…? தன் திறமையை தொழிலில் காட்டாது தன் விருப்பம் போல் வேலைக்கு செல்பவனை நினைத்து வருத்தம் கொள்வதா…? என்று தெரியாது இருந்தார்.
இனி தான் என்ன சொன்னாலும் தன் மகன் கேட்க மாட்டான். சிறு வயது முதலே…ஜான் தான் நினைத்ததை மட்டும் தான் மற்றவர்களை செய்ய வைப்பான். அவனுக்கு பிடித்தம் இல்லாத ஒன்றை அவனிடம் திணிக்க முடியாது. என்று அவன் தந்தையாய் நன்கு உணர்ந்து இருந்ததால்…இனி அவனே விரும்பி தொழிலை ஏற்றால் தான் உண்டு.
தன் முன் இருந்த மனைவியின் புகைப்படத்தை பார்த்து… “மலர் உன்னோட செலவிட எனக்கு நேரம் எப்போ கிடைக்குமோ…?” என்று மனைவியின் நிழலிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது அங்கு வந்த ஜான்…
“டாட் எப்போவும் உங்களுக்கு அம்மா நியாபகம் தானா…அம்மா பார்த்த நேரம் போய் பிஸ்னஸையும் கொஞ்சம் பாருங்க டாட்.” என்று ஜான் தன் தந்தையை கிண்டல் செய்தான்.
“ஜான் அது தான் மொத்தமா உன்னை பார்த்துக்க சொல்றேன்.” தன் முன் இருந்த கணினியை காண்பித்து… “இங்கு வந்ததில் இருந்து நீ செய்த்தை பார்த்துட்டு தான் இருந்தேன். நீ மட்டும் நம் தொழில் மீது கவனம் செலுத்தினா.. இந்த கலிபோனியாவிலேயே இன்னும் முன்று ஸ்டார் ஒட்டல் ஆராம்பிச்சிடலாம்.”
இந்த வயதில் தொழில், பணம் பெருமை என்று பேசினால் மசிந்து விடுவார்கள். பேசி பார்க்கலாமே..தன் மகனை பற்றி தெரிந்திருந்தும், ஒத்துக் கொண்டால் நல்லா இருக்குமே என்ற ஆசையில் வில்சன் பேசினார்.
“டாட் டாட்…நான் பிஸினஸை பார்த்துக்க மாட்டேன்னா சொன்னான். இப்போ என் விருப்ப படி இருக்கேன். பின் எனக்கு எப்போ தோனுதோ… கண்டிப்பா நீங்க நினச்சது போல் நம்ம பிஸினஸை கையில் எடுத்ததும் எல்லாம் இடத்திலும் … நம்ம விக்டர் ஓட்டல் தான் பார்க்கும் இடத்தில் எல்லாம் கண்ணில் படும்.” என்று சொன்னவன்..
பின் தன் கை கடிகாரத்தில் நேரத்தை பார்த்தவன்… “சரி டாட் நான் கிளம்புறேன். ஈவினிங் பிரண்ஸ் கூட ஒரு பார்ட்டி இருக்கு. நாளையில் இருந்து காலேஜ் ஓபன். இதுக்கெல்லாம் நேரம் ஒதுக்க முடியாது.” என்று சொல்லி சென்று விட்டான்.
மணிமேகலைக்கு தங்கும் விடுதியில் தன்னோடு தங்கி இருக்கும் பெண்ணின் பெயர் சோனாலி. அவளும் இந்தியன் தான். என்ன ஒன்று அவள் நார்த்தில் இருந்து வந்து இருக்கிறாள். மொழி பிரச்சனை கொஞ்சம் இடித்தாலும், இந்தியா என்ற அந்த உணர்வே இருவருக்கும் ஏகாத்திற்க்கு வித்தியாசம் இருந்தாலும், அவர்களை நட்பு வட்டத்திற்க்குள் இணைக்க, இந்தியன் என்ற ஒன்றே போதுமானதாய் இருந்தது.
இன்று முதல் நாள் கல்லூரி செல்ல இருப்பதில், என்ன உடை உடுத்துவது என்று மணிமேகலை தான் எடுத்து வந்த ட்ரஸ் அனைத்தையும் மெத்தையில் போட்டு… தன் விரலை உதட்டில் வைத்து தட்டிக் கொண்டே அவள் யோசித்து முடிப்பதற்க்குள், சோனாலி குளித்து முடித்து விட்டு, ஒரு சாயம் போன ஜீன்ஸை மாட்டியவள் தன் செம்பட்டை முடியை ஒரு ஹார் பேண்டில் அனைத்தையும் சேர்த்து இணைத்து விட்டு உதட்டுக்கு லேசாக லிப் பாமை பூசியவள் மணியை கண்ணாடியின் வழியாக பார்த்துக் கொண்டே…
[the_ad id=”6605″]
“இன்னுமா நீ டிசைட் செய்யல…?” என்று கேட்டவளின் முகத்தை மணிமேகலை பார்க்காது, அங்கு பரப்பி போட்ட தன் உடைகளை பார்த்துக் கொண்டே…
“ஒரே குழப்பமா இருக்கு சோ…” என்று இப்போதும் குழப்பமாகவே சொல்லும் மணியின் அருகில் சென்ற சோனாலி…
நீல நிற அனார்க்காலி உடையை எடுத்து அவள் கையில் திணித்தவள்… “இதை போட்டுட்டு வா…” என்று சொன்னாள். சோனாலி எடுத்து கொடுத்த உடை அழகாக இருந்தாலுமே…
மணிமேகலை உடையை பார்த்த வாறே… “இது கொஞ்சம் பட்டிகாடு மாதிரி இருக்காது.” என்று மணிமேகலை சோனாலியை பார்த்து சந்தேகத்துடன் கேட்டாள்.
மணிமேகலை எப்போதும் உடை விசயத்தில் குழப்பம் கொள்ளவே மாட்டாள். அனைத்து உடையுமே அவள் உடலுக்கு கச்சிதமாய் பொருந்தும். அது அவளுக்கே தெரியும் தான். இன்று குழம்ப காரணம், இந்த கல்லூரியில் அனைத்து நாட்டில் இருந்தும் வருவர். அவர்கள் முன் தான் எந்த விதத்திலும் தாழ்ந்து போக கூடாது என்ற காரணத்தினால் தான், இன்று உடை விசயத்தில் இவ்வளவு நேரம் எடுத்தது.
மணிமேகலையின் கேள்வியில் அப்போது தான் எதிர் அறையில் இருந்து மிகவும் மெல்லியதாகவும், மிக மிக சின்னதாகவும் அபாயமான வளைவு கொண்ட உடையை உடுத்திக் கொண்டு கல்லூரிக்கு கிளம்பி இருந்தவளை காண்பித்து…
“இது போல் போட்டுக்கிறியா…?” என்று மணிமேகலையிடம் அப்பெண்ணை காண்பித்து சோனாலி கேட்டாள்.
உடனே மணிமேகலை… “அய்யே…” என்று முகத்தை அஷ்ட கோணலாக்கி சொன்ன மணிமேகலையை பார்த்து…
“அவங்க அவங்க பழக்கமான உடையை போட்டா தான் சவுகரியமா இருக்கும். இந்த குளிருக்கு ஜர்க்கின்…அது போல் கையில் எடுத்துக்கலாம். “ என்று சொன்ன சோனாலி தான் உடுத்தி இருந்ததை காண்பித்து…
“எனக்கு இந்த உடையில் இருந்தால் தான், சவுகரியமா உணர்வேன்.” என்று சொன்னவள்.
[the_ad id=”6605″]
அங்கு பரப்பி இருந்த உடையை காண்பித்து… உன்னிடம் இது போல் தானே நிறைய இருக்கு. நீ போடுவே என்று தானே காசு கொடுத்து வாங்குன. அதான் அதில் இருந்து எனக்கு பிடிச்ச கலரை எடுத்து கொடுத்தேன். உனக்கு என் டேஸ்ட் பிடிக்கலேன்னா உனக்கு பிடிச்ச கலரை எடுத்து போட்டுக்க… ஆனா எந்த இடத்திலும் நீ நீயா தான் இருக்கனும்.” என்ற அவள் வார்த்தைகள் அனைத்தும் ஏற்க கூடியதாக இருந்ததாலும், அவள் எடுத்து கொடுத்த நிறம் மணிமேகலைக்கும் பிடித்தமானதாக அமைந்ததாலும்…
சிரித்த முகத்துடன்… “இதுவே போட்டுக்குறேன் குட்டிப்பெண்ணே…” சோனாலி உயரத்தில் கொஞ்சம் குள்ளமாகவும், ஒல்லியாகவும் இருப்பாள்.
அதுவும் இது போல் ஜீன்…வயிற்றை ஒட்டிய வாறு போட்ட பனியனில், இன்னும் சின்ன பெண் போல் மணிமேகலை கண்ணுக்கு தெரிய…எப்போதும் பட்ட பெயர் வைப்பது போல் சோனாலிக்கு அந்த நிமிடம் அவள் நாமத்தை சோனாலியில் இருந்து, குட்டி பெண்ணுக்கு மாற்றி அமைத்து… அவள் அழைத்த குட்டி பெண் என்ற அழைப்பில் சோனாலி கோபம் கொண்டு இடுப்பில் கை வைத்து மணிமேகலையை முறைத்து பார்த்தாள்.
அப்போதும் மணிமேகலை….“இன்னையில் இருந்து உன் பெயர் குட்டி பெண்ணாக என் நாவில் இருந்து உதிக்கும்.” என்ற அரட்டையோடு தங்கள் முதல் நாள் கல்லூரி வாழ்க்கைக்கு அடித்து எடுத்து வைத்தனர்…
ஜான் வகுப்பு எடுக்கும் அறைக்குள்….