அத்தியாயம்….8….2
ஜான் விக்டர் மணிமேகலை படிக்கும் வகுப்பில் பாடம் நடத்த தொடங்கி, இரண்டு வாரம் கடந்து விட்ட நிலையில் தான், அந்த உடை நடை அனைத்திலும் மிக அக்கறை எடுத்து மணிமேகலையின் வகுப்பறைக்குள் நுழைந்தான்.
ஜான் விக்டரின் இந்த உடை அலங்காரத்திற்க்கு, அதிகப்படியான அக்கறை எடுத்ததிற்க்கு காரணம் நம் மணிமேகலையே…
மணிமேகலை முதல் நாள் வகுப்பு மட்டும் அல்லாது, அவன் எடுத்த அடுத்து அடுத்த வகுப்பிலும், ஜானை நிமிர்ந்து பார்த்தாள் இல்லை.
அதற்க்கு காரணம் அவள் வளர்ந்த நாட்டில் ஆசிரியருக்கும், மாணவியருக்கும் இருக்கும் அந்த உயர்ந்த இடமா… அது மணிமேகலைக்கே தெரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
ஜான் விக்டர் மணிமேகலையின் வகுப்புக்குள் நுழையும் போதே… அவன் பார்வை அவளை பார்த்த வாறே தான் உள் நுழைவான்.
ஜான் விக்டரின் இந்த பார்வை அவன் அடுத்த நாள் வகுப்பு எடுக்கும் போதே அந்த வகுப்பில் இருக்கும் அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் தெரியும் போது, நம் மணிமேலைக்கு தெரியாதா என்ன…?
தெரியும். அதுவும் அவன் பாடத்தில் ஏதாவது நடத்தியது… “புரிந்ததா…? நான் எடுத்ததில் ஏதாவது சந்தேகம் இருக்கா…? சந்தேகம் இருந்தால் கேளுங்க…” என்று அனைவரையும் பார்த்து கேட்கும் ஜான் விக்டர்…
கடைசியாக அவன் சொல்லும்… “சந்தேகம் இருந்தா கேளுங்க.” என்ற அந்த வார்த்தை சொல்லும் போது, தன்னால் அவன் பார்வை மணிமேகலையை தான் பார்க்கும்.
அவன் மணிமேகலையை வெளிப்படையாக தான் பார்த்தான். அவன் பார்வையில் திருட்டு தனம் இல்லை. அவன் செயல் இவள் தனக்கானவள் என்று அனைவருக்கும் புரியும் படி தான் இருந்தது.
அனைவருக்கும் புரிந்தும் விட்டது என்பதை, ஜான் விக்டரும் அறிவான். ஆனால் தன் பார்வைக்கு , அவளிடம் இருந்து ஆச்சரியமான பார்வை என்ன…ஒரு ஆர்வமான பார்வை கூட இல்லாது… தான் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க அவள் தன்னை பார்க்கும் அந்த சாதாரண பார்வையை பார்த்து… முதல் முறை அவன் கர்வம் அடிவாங்கியது போல் உணர்ந்தான்.
“எனக்கு என்ன குறை…?” அவனை சுற்றி இருந்தவர்கள்… நீ என்னடா…?என்பது போல் ஏற்றி வைத்திருந்ததால், அவள் தன்னை பார்க்காதது தன்னிடம் என்ன குறை…? என்று யோசித்தவன்.
பின்…அவள் என்னை பார்க்க மாட்டாளா…? என்று அவனுக்குள் இப்படி இரண்டு தரப்பில் அவனே யோசித்து யோசித்து இந்த இரண்டு வாரம் குழம்பி போனவனாய் தான்… இன்று ஏதாவது ஒரு முடிவு தெரிய வேண்டும் …என்று அவனுக்குள் ஒரு முடிவு எடுத்தவனாய்… இன்று கல்லூரிக்கு வகுப்பு எடுக்கவே வந்தான்.
[the_ad id=”6605″]
வகுப்பறையில் ஜான் விக்டர் நுழையும் போதே, எப்போதும் போல் அவன் பார்வை மணிமேகலை மீது படிந்து பின் அனைவரையும் பார்த்து… “குட் மார்னிங்…” என்று தன் வசீகரமான புன்னகையை சிந்திய வாறே ஜான் விக்டர் காலை வணகம் சொன்னான்.
மாணவர்கள் அனைவரும்… “குட் மார்னிங்…” என்று பதில் மரியாதை சொல்லிய வாறே…வகுப்பின் பின் இருக்கையில் அமர்ந்து இருந்த மணிமேகலையை பார்த்து அனைவரும் ஒரு நமுட்டு சிரிப்பு சிரிக்கவும் மறக்க வில்லை.
மணிமேகலையின் பக்கத்தில் அமர்ந்து இருந்த சோனாலி… “ஏய் சர் சும்மா நச்சுன்னு வந்து இருக்கார்டி பாறேன். பார்.” என்று சொல்லி அவள் காதில் கிசு கிசுத்தாள்.
அவளோ… “ஏய் சும்மா இரு. சர் காதுல விழுந்துட போகுது.” என்று சொல்லி சோனாலியை அதட்டினாள்.
“விழுந்தா விழட்டு. அவர் இந்த ட்ரஸ் பண்ணிட்டு வந்த்தே உனக்காக தான்னு நினைக்கிறேன். அநேகமா இன்னைக்கு அவர் உன் கிட்ட ப்ரபோஸ் பண்ணுவாருன்னு நினைக்கிறேன்.” என்று சொன்னவளின் பேச்சில் வயிற்றில் புலியை கரைக்க…
“ஏய் சும்மா இப்படி சொல்லாதே…எனக்கு பயமா இருக்கு.” என்று சொன்ன மணிமேகலை உண்மையில் பயந்து போய் தான் இருந்தாள்.
ஆமாங்க…உண்மையா ஜான் விக்டரின் பார்வையில், மணிமேகலை பயந்து தான் விட்டாள். ஊரில் அனைவரையும் பார்ப்பவள் தான் அவள். ஆனால் அவள் பார்ப்பது யாருக்கும் தெரியாது. ஏன் என்றால், தெருவில் இருக்கும் காவாலி பசங்க கூட, மணிமேகலை தெருவில் நடந்து போனால்…நிமிர்ந்து பார்க்க மாட்டார்கள்.
பெரிய வீட்டு பெண் என்ற மரியாதை அவளுக்கு வீட்டில் இல்லை என்றாலும், ஊரில் இருந்ததால் யாரும் அவளை சும்மா கூட பார்த்தது இல்லை.
இவள் பார்வையும் கீழ் பார்வையாக இருக்கு…அவளை யாரும் மேல் பார்வை என்ன…அந்த கீழ் பார்வை கூட பார்க்காது போக…அம்மணி பார்த்தது யாருக்கும் தெரியாது மிக மிக நல்ல பிள்ளையாகவே அந்த ஊரில் வலம் வந்தவள்… அதே பெயருடன் இதோ நாடு விட்டு நாடும் வந்து விட்டாள்.
இங்கு முதல் நாள்… முதல் வகுப்பிலேயே… மிக அழகான ஒருவன் தன்னை விரும்பி பார்த்த போதும், பதில் பார்வை பார்க்க முடியாமல் இல்லை. பார்க்க பயந்து போய் கூடிய மட்டும் அவனை பார்ப்பதை தவிர்த்துக் கொண்டு வந்து விட்டாள்.
இன்று சோனாலி … “அவன் உன்னை ப்ரபோஸ் செய்வான்.” என்ற பேச்சில் பயம் இன்னும் கூடி போய்…
‘அப்படி அவன் செய்தால் நான் என்ன செய்வது…?’மணிமேகலை உண்மையில் பயந்து விட்டாள்.
தன் ஊரில் அவளுக்கு இருந்த தைரியம்..இங்கு ஏனோ காணாமல் போய் விட்டதோ, என்று நினைக்கும் அளவுக்கு அவள் மனது மிகவும் சோர்ந்து தான் இருந்தது.
கூட்டு குடும்பத்தில் அனைவரும் ஒற்றுமையாக இல்லை என்றாலும், தன் ஊர். தன் சொந்தம் என்று இருந்தவளுக்கு, இங்கு வந்த நாளில் இருந்து யாரும் இல்லாத தனி காட்டில் தான் இருப்பது போல் அவள் தனிமையை உணர்ந்தாள்.
அதுவும் ஜான் விக்டர் தன்னையே பார்ப்பது ஏனோ அவளுக்கு பயமாக இருநத்து. ஊரில் இருந்தாலாவது வசுவிடம் சொல்வாள். அவள் ஏதாவது இதற்க்கு யோசனை சொல்ல கூடும்.
இந்த நாட்டில் வந்த உடன் இந்த பிரச்சனை.இதை யாரிடம் சொல்வாள். யாரிடம் சொல்வது என்று நினைக்கும் போதா லாலி மணிமேகலையில் நியாபகத்தில் வந்தாள். அப்படி நினைத்த உடனே கைய் பேசியில் லாலியை அழைத்தும் விட்டாள்.
அழைப்பை ஏற்ற லாலி பேசிய முதல் பேச்சே… “இன்னைக்கு கூட வீரா கேட்டார் மணி பேசுச்சான்னு…?நீயேன் எனக்கு கால் பண்ண மாட்டேங்குற….” என்ற அவளின் கேள்வியில் பொட்டில் அடிப்பது போல்…
‘அய்யோ இந்த வெளிநாட்டு பறவை வட்டிக்காரன் ஆள் ஆச்சே…இவ கிட்ட சொன்ன உடனே அது வட்டிக்காரன் கிட்ட போயிடுமே…அப்புறம் அவன் வீட்டில் சொல்லி அனைவரும் கூடி என்னல்லே கும்மி அடிப்பாங்க…’ என்று மணிமேகலையின் மனதில் ஓடிக் கொண்டு இருக்கும் போதே…
லாலி… “இப்போ எதுக்கு நீ கால் பண்ண…?உனக்கு ஏதாவது பிரச்சனையா…?” என்று லாலி கேட்ட கேள்வியில், இவள் மீது இருக்கும் அக்கறை தெரிந்தாலும், கூடவே வீராவின் முகமும் தெரிய…
மணிமேகலையின் வாய் தன்னால்… “ஒன்னும் இல்ல. சும்மா தான் கால் பண்ணேன்.” என்று சொல்லியும் …நம்பாது…
“மணி நீ என் கிட்ட இருந்து ஏதாவது மறைக்கிறியா…?” என்று சந்தேகத்துடன் தான் லாலி கேட்டாள்.
“சேச்சே சும்மா தான் கால் பண்னேன். நீங்க சொல்வதை பார்த்தா இனி சும்மா கூட பண்ணக்கூடாது போல…”
லாலியை நம்ப வைத்து போனை அணைத்தவள் நெஞ்சில் கைய் வைத்து… ‘யப்பா…உண்மைய சொல்றது கூட கஷ்டம் இல்ல…அதை மறைக்க எவ்வளவு கஷ்டப்பட வேண்டி இருக்கு…’ என்று மணிமேகலை மனதில் நினைத்து முடிக்கும் வேளயில்…
வீரேந்திரனிடம் இருந்து மணிமேகலைக்கு கைய் பேசியில் அழைப்பு வந்து… லாலி நீ சொன்னதை நம்பவில்லை என்பதை சொல்லாமல் சொல்லியது …
‘கடவுளே…’என்று மனதில் ஒரு வேண்டுதலை வைத்த மணிமேகலை… வீராவின் அழைப்பை ஏற்று… “ம்.சொல்லுங்க.” என்று சொல்ல…
வீரேந்திரனும்… “அதே தான் சொல்.” என்ற பேச்சு மணிமேகலைக்கு புரிந்தாலும், புரியாதது போல்…
“நீங்க தானே போன் பண்ணிங்க…அப்போ நீங்க தான் சொல்லனும்.” என்று மிகவும் திறமையாக பேசுவது போல் மணிமேகலை வீரேந்திரனிடம் பேசினாள்.
“அது தான் நானும் சொல்றேன். லாலி கிட்ட போன் பண்ணியே ஏன் எதுவும் சொல்லலே…” என்ற வீரேந்திரன் கேள்விக்கு, உடனே மணிமேகலை பதில் சொல்ல முடியாது வாய் அடைத்து போனது.
“மணி … மணி…” என்று வீரேந்திரன் இரண்டு முறை சத்தம் போட்டு அழைத்த பின், நினைவுக்கு வந்தவள்…ஏதோ சமாளித்தவளாய்…
[the_ad id=”6605″]
“இல்ல அவங்க சிம் கொடுக்கும் போதே ஏதாவது இருந்தா கால் பண்ண சொன்னாங்க. அது தான் கால் பண்ணேன்.” என்று சொல்லி மணிமேகலை திரும்பவும் வீராவிடம் மாட்டிக் கொள்வது போல் பேசி வைத்தாள்.
“அது தான் ஏதாவது இருந்தா கால் பண்ணு தான் சொன்னா…ஆனா நீ எதுவும் சொல்லலையே…” அவள் சொன்னதையே வீரேந்திரன் திரும்ப படித்தான்.
“கடவுளே…நான் லோன்லியா பீல் பண்ணேன். அதான் லாலிக்கு போன் போட்டேன். இனி ஜென்மத்துக்கும் போன் போட மாட்டேன்.” என்று மணிமேகலை நிலமையை சமாளிக்க வேண்டி சலிப்பது போல் பேசினாள்.
அப்படியும் வீரேந்திரன் நம்பாமல்… “வேற ஒன்னும் இல்லலே மணி. உனக்கு அங்க எந்த பிரச்சனையும் இல்லலே…” என்று திரும்ப திரும்ப கேட்டு, தன்னிடம் ஒன்னும் இல்ல என்ற பதிலை பல விதமாக கேட்டு விட்டு தான் அந்த அழைப்பையே அணைத்தான்.
இதோடு விடாது ஒரு மணி நேரத்திற்க்கு எல்லாம் லாலி தன் முன் வந்து நின்று… “லோன்லியா பீல் பண்ணது என் கிட்ட சொல்றதுக்கு என்ன….? “ என்று கேட்டவள்…
“வா வெளியே போகலாம்.” என்று சொன்னதும் மணிமேகலையும் மறுக்கவில்லை.
அவளுக்கும் அப்போது எங்கேயாவது வெளியில் சென்று வந்தால் நன்றாக இருக்கும் போல தான் தோன்றியது. கூடவே இங்கு அவளுக்கு ஒரு சில பொருட்கள் வாங்க வேண்டி உள்ளதால்…அதை சொல்லி …”இதை எல்லாம் வாங்கும் கடைக்கு கூட்டிட்டு போங்க.” என்று கேட்டாள்.
கூடவே சோனாலியும் வர…இந்தியன் அதிகம் செல்லும் மாலுக்கு அழைத்து வந்து தான் கேட்டது வாங்கி கொடுத்தவள் பின் அங்கு ஒரு சில கேளிக்கை இடத்திற்க்கும் அழைத்து போய் நேரத்திற்க்கு, தானே தங்கள் கல்லூரி விடுதிக்கும் விட்டு விட்டுதான் சென்றாள்.
சோனாலி கூட… “உனக்கும் இந்த ஊருக்கும் ஏக ராசி தான் போல…காலேஜில் ஜான் சர். வெளியில் லாலி..கலக்குற மணி…கலக்குற…” என்று தன்னை கிண்டல் செய்தவளை மணிமேகலையால் முறைக்க மட்டும் தான் முடிந்தது.
சோனாலியை பொறுத்த மட்டும், நான் ஜான் சாரை நிமிர்ந்து பார்க்காதது நான் செய்யும் பைத்திக்கார தனம். இந்த இடைப்பட்ட காலத்திற்க்குள் ஜான் சாரை பற்றி அக்கு வேறி ஆணிவேற் முதல் அனைத்தையும் அலசி ஆராய்ந்து விட்டாள்.
அவர்களின் நட்சத்திர அந்தஸ்த்து கொண்ட ஓட்டல்களின் எண்ணிக்கை…வீட்டுக்கு ஒரே மகன். பார்த்தா தெரியும் அழகு…காலேஜில் சொல்வது அவர் இது வரை எந்த பெண் கூடவும் டேட்டிங் போனது இல்லையாம்…
இது எவ்வளவு பெரிய அதிசயம் தெரியுமா…இங்கு எல்லாம் பதினாறு தொடக்கத்திலேயே…டேட்டிங் செய்ய ஆராம்பித்து விடுவாங்க. ஆனா ஜான் சார்…இது வரை ஒரு பெண்ணுடனும் கூட அவர் டேட்டிங் செய்யவில்லை என்றால்…
“நீ லக்கி மணி…அவர் ப்ரபோஸ் பண்ணா தயங்காம ஏத்துக்க…” என்று சொல்பவளிடம், மணிமேகலை என்ன தான் சொல்ல முடியும். அனைத்திற்க்கும் அமைதி காத்தாள்.
மணிமேகலைக்கும் கல்லூரியில் நிலை கொள்ளவில்லை. அவள் உள் மனது ஏதோ நடக்க போகிறது என்று சொல்ல…
அதற்க்கு ஏற்றார் போல்… கல்லூரி முடியும் சமயம் அனைவரும் முன்நிலையிலும் ஜான் விக்டர்..
“உன்னுடன் பேசனும். கார் பார்க்கிங்கில் வெயிட் பண்ணு.” என்று சொல்லி விட்டு சென்றான்.
‘என்ன இவன்…பேசனும் என்று தன்னிடம் அனுமதி கேட்காது பேச வேண்டும் என்று சொல்லிட்டு போறான். வான்னு சொல்றான் வர முடியுமான்னு கேட்கல…
[the_ad id=”6605″]
அவன் என்ன சொன்னாலும், என்ன கேட்டாலும் என் பதில் நோ… தான். நான் படிச்சி முடிச்ச பின் தான் மத்ததை பற்றி யோசிக்கனும். எனக்காக வீரா பணம் பைனான்ஸ் பண்ணி இருக்கார்.
படிச்சி முடிச்சிட்டு இங்கேயே வேலை பார்த்துட்டு அதை கொடுத்துடனும்…நம்பி கொடுத்தவனை ஏமாற்ற கூடாது. அப்புறம் இங்கேயே யாரையாவது பார்க்கலாம் . என்று நினைத்து தான் ஜான் விக்டருக்காக கார் பார்க்கிங்கில் மணிமேகலை காத்துக் கொண்டு இருந்தது.
ஆனால் அவள் நினைத்த பதிலை சொல்லாது…அதற்க்கு எதிர் பதமாய் ஜான் விக்டருக்கு சாதகமான பதிலை சொல்ல போகிறோம் என்று தெரியாது. நகத்தை கடித்து துப்பிய வாறே… ‘இன்னைக்கு இதை முடிச்சிடனும்..” என்று நினைத்தவளுக்கே தெரியாது. தொடரப்போவதை…