நெஞ்சே என் நெஞ்சே செல்லாயோ அவனோடு
சென்றால் வரமாட்டாய் அது தானே பெரும்பாடு
தன்நன் நானான… தன்நன் நானான…
தன்நன் நானான…
காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்
காதலை யாருக்கும் சொல்வதில்லை
புத்தகம் மூடிய மயிலிறகாக
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை..
மனம் முழுதும் படபடப்பும்…. எதோ ஒரு சொல்ல முடியாத உணர்வுக்குள் சிக்கி தவித்தாள் இனியா… அவர்களின் முதல் முத்தம் அவளை நிலைகுலைய செய்தது என்று தான் கூற வேண்டும்…. ஆனால் மனதின் ஒரு ஓரத்தில் அன்பின் ஸ்பரிசமும்,அவனின் அருகாமையையும் விரும்ப தான் செய்தது அவளின் மனம்…
இந்த மன போராட்டத்தில் அறை புகுந்தவள்… காயுவை தேட… அவள் இல்லாமல் போக… அமைதியாய் கண்ணாடி முன் சென்று அமர்ந்து… அவளையே அலசும் வேளையில் இருந்தாள் அவள்
திடீரென கதவு திறக்க பட்டு… யாரோ உள்ளே வருவது புரிய… காயூவாக இருக்கும் என்று எண்ணியவன்
“எங்க காயூ போனா இவ்ளோ நேரமா… நாளைக்கு நலங்கு வேற வெக்கணும்னு சொன்னார்களே…. கதவை பூட்டி விட்டு சீக்கிரம் வந்து படு… இல்லனா காலைல முகம் டல்லா இருக்கும்” என்று அவள் பேசி கொண்டு இருக்கும் போதே…. அறையின் கதவு தாழ் போட படுவது காதில் விழ….
பேசியவாறே திடும்பியவள்…. அவ்விடமே சிலையென உறைந்து நின்றாள்…கதவை அடைத்து விட்டு, அதன் மேல் சாய்ந்து கொண்டு அவளையே கள்ள பார்வை பார்க்கும் அன்பு தான் அவள் கண்ணில் பட்டான்…
அவனை கண்டவளுக்கு…இதய துடிப்பு அதிகமாக… படபடப்பு உடல் எங்கும் பரவ… சொல்ல முடியாதா பயம் ஒன்று அவாளுள் குடியேறியது…
“நீ… நீங்க இங்க என்ன பண்ணுறீங்க?” வார்த்தை வாயை விட்டு வெளி வர சிரம பட்டது…
“ஏன் நான் வர கூடாதா…இது என் தங்கச்சியோட அறை தானே… நான் வருவதில் என்ன” திமிர் கலந்த குரலிலேயே கேட்டான்….
“உங்க தங்கச்சி இருக்க அப்போ வந்து இருக்கனும்… இப்போ அவ இல்லைல…நீங்க கிளம்புங்க… அவ வந்த உடனே உங்களை வந்து பார்க்க சொல்லுறேன்” என்றாள் இல்லாத தைரியத்தை வரவழைத்து கொண்டு….
அதில் முகம் இருகியவன்… எழுந்து அவளை நோக்கி நடக்க… அதை கண்டவள்… அவளும் இரண்டடி பின்னால் செல்ல, அங்கு இருந்த கண்ணாடியில் முட்டு நின்றவளை கண்டு சிரித்த அன்பு…
“என்னை பார்த்த என் எப்போதும் இரண்டடி பின்னால போற… என்னை பார்த்தா அவ்ளோ பயமாவா இருக்கு” கேட்டு கொண்டே அவளை நெருங்கியவனை கண்ட இனியா
[the_ad id=”6605″]
“வேண்டாம்… கிட்ட வராதீங்க… அங்கேயே நில்லுங்க… இல்லாட்டி நான் கத்தி எல்லாரையும் வர வெச்சிடுவேன்” அவள் பேசும் எதுவும் காதில் விழாதவனாய் அவளை மேலும் நெருங்கியனை தன் பலம் கொண்ட வரை பின்னால் தள்ளி விட்டவள்..
“ஒரு முறை சொன்னா உங்களுக்கு புரியாதா… உங்களை பார்க்கவே பிடிக்கலை எனக்கு… இப்டி கிட்ட கிட்ட வராதீங்க.. தள்ளி போங்க” என்றாள் இம்முறை குரல் சற்று அதிகமாக…
அதில் அன்பின் முகத்தில் எதோ புரிந்து கொள்ள முடியாத மாற்றம் வர… எதோ பேச எத்தனித்த போது… அந்த அறையின் கதவு தட்ட படும் சத்தம் கேட்டு… அதிர்ந்தாள் இனியா
உடனே அன்பு சென்று கதவின் பின்னால் ஒளிந்து கொள்ள.. கதவை திறந்தவளுக்கு எதிரில் நின்றான் விக்கி…
“அக்கா… அன்பு அத்தானை பாத்தீங்களா? ” என்றவனுக்கு எதுவும் புரியாத வகையில் தலை ஆடியவள்…
நீங்க அவரை பார்த்தீங்கனா…. அவரை மேல வர சொல்லுங்க அக்கா… என்று விட்டு அவன் சென்று விட்டான்… அவன் சென்ற பின்தான் “ஹப்பா” என்று இருந்தது இனியாவிற்கு
அன்பை பார்த்தவள்… “இப்போவாச்சு போறீங்களா” என்றாள் கடுப்புடன்…
அவனும் அவ்விடம் விட்டு நகர்ந்தவன்… திரும்ப வந்து அவளின் கன்னத்தில் இதழ் பதித்த சென்றான்….
அந்த முத்தத்தின் தாக்கத்தில் மீளாமல் கதவை பிடித்து கொண்டு நின்று இருந்தவளை காயூ தான் உலுக்கி நினைவிற்கு கொண்டு வந்தாள்….
மேலே அன்பின் அறையில், குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு இருந்தான் விக்கி… அவனிடம் கண்ட படி அறையில் நுழைந்த இலக்கியனும் அன்பும்… எதுவும் புரியாமல் அவனை பார்க்க… அவனோ
“நாம மோசம் போய்ட்டோம்டா இலக்கியா” என்ற படியே அவனை நெருங்கினான்
ஒன்றும் புரியாமல் அவனையே பார்த்த இலக்கியன் “மொதல்ல என்ன நடந்ததுன்னு சொல்லுடா… அப்றம் யார் மோசம் போங்கன்னு பாக்கலாம்”என்ற படி அவன் அருகில் அமர
“நாளைக்கு காயுக்கு நலங்கு வெக்குறாங்க இல்ல… அதுல வெறும் பொண்ணுங்க மட்டும் தான் போகமுமாம்… பசங்க நாம போக கூடாதாம்” என்றான் வருத்தமாக..
“அட்ரா சக்கை…இப்டி வேற ஒரு ரூல்ஸ் போட்டுட்டாங்களா… எவ்ளோ ஆடுனீங்கடா… ஒரு சின்ன பையனா வெச்சிக்கிட்டு… இப்போ போச்சா… நீயே வெளி ஆள் மாதிரி வெளிய தான் இருக்கணுமா” என்றான் இலக்கியன் சிரித்த படியே
“டேய்… சிரிக்காதடா… என்ன பண்றதுனு சொல்லு சீக்கிரம்… அவுங்க இருக்க அவசரத்தை பார்த்தா இப்போவே நம்மள நாடு கடத்திடுவாங்க போல இருக்கு” என்றான் விக்கி வருத்தத்துடன்…
“இதுக்கு தான்பா சிங்களாவே இருக்கணும்னு சொல்லுறது” என்றான் தன்னை தானே மெச்சி கொண்டு
அதுவரை அமைதியாய் நடப்பதை வேடிக்கை மட்டுமே பார்த்து கொண்டு இருந்த அன்பு “அதுக்கு எல்லாம் ஒரு திறமை வேணும்டா… அதுக்கெல்லாம் நீ சரி பட்டு வர மாட்டே… அதனால தான் சிங்களாவே இருக்க” என்றான் சிரித்த படி
“என்ன இது அம்மாவும் புள்ளையும் இதையே சொல்லுறாங்களே… உண்மையிலேயே நாம அதுக்கு சரி பட்டு வர மாட்டோமோ.. இவங்களுக்காகவாச்சு நாம கூடிய சீக்கிரம் கமிட் ஆகுறோம்” என்றான் தனுக்குலேயே
“அவனை விடுங்க அத்தான்… நாளைக்கு நம்மளால போக முடியாது… என்ன பண்ணலாம்னு யோசிங்க… அப்றம் என்னால காயுவையு பாக்க முடியாது… உங்களால இனியா அக்காவையு பாக்க முடுயாது” என்றான் விக்கி
“என்னடா பண்ண முடியும்… அதான் வர கூடாதுனு சொல்லிட்டாங்க இல்ல…கல்யாணத்துல தான் இதோட பாக்க முடியும்… விடுடா பெரியவங்கள எதிர்த்து என்ன பண்ண முடியு” என்றான் சலிப்புடன்…
“அதை கேட்ட விக்கி… இலக்கியனிடம் திரும்பி… என்னடா சும்மா வேடிக்கை மட்டும் படர்த்துக்கிட்டு இருக்க… ஐடியா சொல்லுடா”என்றான் கெஞ்சும் விதமாக
“ஐடியாலாம் சொல்லாமல்… ஆனா இந்த ஒரு பக்கம் கை தன் ரொம்பவே வலிக்குது…” என்றான் கையை நீட்டிக்கொண்டு
அவன் கூறும் அர்த்தம் புரிந்த விக்கி.. “இதுவேறவா…. பண்ணி தொலைக்குறேன்… மாட்டுக்கு வாக்க பட்ட மாடு மேய்க்க காத்துகிட்டு தானே ஆகணும்” இலக்கியனின் கையை பிடித்து விட்டவன்… அடங்காமல் மறு கையையும் பிடித்து விடும் படி கூற… தலையில் அடித்து கொண்டான் விக்கி…
விக்கி கைகளை அழுத்தி விட.. அந்த சுகத்தில் மெய் மறந்து அமர்ந்து இருந்தவனை கண்ட அன்பு “இவனை” மண்டையில் ஒரு கொட்டு வைக்க..
“ஹையோ.. வலிக்குது” அலறிய படி… “இருடா.. ஐடியா வருது” என்று இருவரையும் ஊம்பிட்டு காதில் எதோ ஓத… அதை கேட்ட விக்கி படு குஷியாகி விட… அன்போ இலக்கியனையே வியந்து பார்த்து கொண்டு இருந்தான்…
“எங்க இருந்துடா உனக்கு இவ்ளோ அயோகிய தனம் வருது… என் கூட பொறந்தவன் தானே நீ.. எப்படிடா இப்டி யோசிக்குற” என்றான் வியந்து போய்
“ஹலோ ஹலோ… உங்களுக்கு வேண்டியது ஐடியா தானே… சொல்லியாச்சு… இப்போ ஒழுங்கா காலை அழுத்தி விடுங்க.. ஆனாலும் நல்லா அழுதுறே மேன் நீ” என்றான் நக்கலாய்
“அதில் கடுப்பான விக்கி… அழுத்தி விட்டது உன் ஐடியாகாக தான்… அதான் தந்துடல… இனி அதெல்லாம் பண்ண முடியாது” மிடுக்குடனே சென்றான் விக்கி
“கொழுப்ப பத்தியா இவனுக்கு… பாத்துக்குறேன்டா உன்னை… இருக்கட்டும்” என்றான் சலிப்புடன்
அடுத்த நாள் காலை நலங்கிற்கு தேவையான ஏற்பாடுகள் அனைத்தும் நடத்து கொண்டு இருக்க… நேரம் நெருங்க நெருங்க… ஆண்கள் அனைவரையும் வெளியே அனுப்பி விட்டனர் பெண்கள் அனைவரும்…
நலங்கு ஆர்மபிக்க… தாங்கள் அறைகளில் இருந்து அரைகுறையாக சேலையை கட்டி கொண்டு… நடக்க முடியாமல்.. தள்ளாடிய படி வந்தனர் விக்கியும் இலக்கியனும்…..
[the_ad id=”6605″]
வந்து கொண்டு இருக்கும் போது இலக்கியனின் சேலை நுனி ஆணி ஒன்றிய மாட்டி கொள்ள.. அதை அறியாத இலக்கியன்… அவன் போக்கிற்கு நடந்து செல்ல… அது மொத்தமும் அவிழ்த்து… முந்தானை மட்டும் இலக்கியன் கையில் இருக்க…
எதோ பிடித்து இழுப்பது போல் தோன்ற பின்னால் திரும்பி பார்த்தவன்… “என்னடா என்னோட புடவையை நீ கைல தூக்கிகிட்டு வர… நல்ல வேலை நான் சாதாரண டிரஸ் போட்டு புடவை காட்டுனேன்… இல்லனா இநேரத்துக்கு என் மனம் கப்பல் ஏரி இருக்கும்” விக்கியின் கையில் இருக்கும் புடவையை வாங்கி… மீண்டும் சுற்றிய படியே பேசனினான் இலக்கியன்…
“சீக்கிரம் வாடா… அன்பு அத்தான் வேற இல்லை.. கடைசி நேரத்துல வேலைனு போய்ட்டாரு… உன்ன வெச்சிகிட்டி என்னால போராட முடிலடா” என்றான் தலையில் அடித்து கொண்டு
“ரொம்ப சாலிசிக்காதடா… தங்கச்சிக்காக இவனை எல்லாம் பொறுத்துக்க வேண்டி இருக்கு” புலம்பிய படியே நடந்தான் இலக்கியன்
நலங்கு நடக்கும் இடத்திற்கு சென்றவர்கலை… வியப்புடன் பார்த்தனர் அங்கு இருக்கும் அனைவரும்…
சேலை கட்டி… முந்தானையால் முகத்தை மூடிய படி வந்தனர் இருவரும்…
“என்னமா இப்டி வந்து இருக்கீங்க… மோகத்தை மூடிக்கிட்டு… யார் நிங்கனு எங்களுக்கு எப்படி தெரியறது? ” என்றார் ஜானகி அவர்களை நெருங்கிய வாறு
“நாங்க பக்கத்து தெருவுல இருக்க சேட்டு வீட்டு காரங்க… இப்டி கல்யாண விசேஷத்துக்கு எல்லாம் நாங்க இப்டி தான் முகத்தை மூடிக்கிட்டு வருவோம்… இல்லடா அடச்சி இல்லடி ” என்றான் இலக்கியன் வராத பெண் குரலில்…
அவனை ஆமோதிக்கும் வகையில் “ஆமாடா.. சாச்சா ஆமாடி” என்றான் விக்கி
அதற்குள் அய்யர் நேரம் “ஆகுது பாருங்கோ… சீக்கிரம் நலங்கு வெக்க ஆரம்பிக்கலாம்” என கூற அனைவரின் கவனமும் அங்கு திரும்ப… தப்பித்தோம் பிழைத்தோம் என்று கூட்டத்தில் சென்று அமர்ந்து கொண்டனர் இருவரும்…
விக்கி கண் கொட்டாது காயுவையே ஆஆ… என்று பார்த்து கொண்டு இருக்க
இலக்கியனோ… அந்த கூட்டத்தில் தன்னுடைய திருமணத்திற்கு பெண் தேடி கொண்டு இருந்தான்…ஆனால் பாவம்… அங்கு வந்ததிலேயே இன்னியவும், மீனுவும் தான் திருமணம் ஆகாத பெண்கள்….
“நம்ப நேரம்… இப்டி கூட ஒன்னு கிடைக்க மாட்டேங்குதே… பேசாம மீனுவையே கல்யாணம் பணிக்கலாமா” என்றவனின் பார்வை சகுந்தலா மேல் பட… “ஹையோ வேண்டாம்டா சாமி… பேய்க்கு பயணத்து பிசாசு கிட்ட மாட்டிக்க வேண்டாம்” என்று அவன் திரும்பி கொள்ள
எதிர்ச்சியாக இலக்கியன் பார்வை விக்கியின் மேல் பட… அவன் கண் கொட்டாமல் காயுவை பார்த்து கொண்டு இருந்த அந்த பார்வையில் காதலை தவிர வேறு எந்த உணர்வும் தெரியவில்லை இலக்கியனுக்கு… என்னதான் விக்கி விளையாட்டு தனம் அதிகமா இருந்தாலும்…அவனின் இந்த காதல், இலக்கியணைக்கு பிடித்து… அவனை தாக்க தான் செய்தது…
சகுந்தலாவை நினைத்து பயம் வந்தாலும்… விக்கியின் காதல் ஒரு நம்பிக்கையையே அளித்தது இலக்கியனுக்கு..
“சின்ன பொண்ணுங்க எல்லாம் வாங்கமா… கைல மருதாணி வெச்சுக்கோங்க…. பெரியவங்க நலங்கு வெச்சிட்டு மருதாணி வெச்சுக்கோங்க” என்று கூட்டத்தில் ஒரு பெண் மணி கூப்பிட…
இனியாவும், மீனுவும் செல்ல… மருதாணி வைக்கும் வேலை மிக மும்முரமாய் ஆரம்பிதது…
மருதாணி வைக்கும் பெண் இனியாவை பார்த்து “கைல யார் பேரோட முதல் எழுத்தைமா போட… உன்னோட பேரோட முதல் எழுத்தே போட்டுடவா” என்று கேட்க…
அவளின் பதில் தெரிந்து கொள்ள… செல்லம்மாள், ஜானகி,இலக்கியன் மூவரும் ஆர்வமாக இருக்க… அவளோ அந்த பெண்ணின் காதில் எதையோ கூற… அதையே கையில் எழுதியும் கொடுத்தால் மருதாணி வைக்கும் பெண்
அதே கேள்வி மீனுவையும் கேட்க பட.. அவள் பதில் கூறுவதற்கும்…கூட்டத்தில் இருந்த பெண் பொறுத்தர்….
“அதான் அவ மாமன் இலக்கியன் இருக்கான் இல்ல… அன்புக்கு தான் வேற பொண்ணு இருக்கு… பேசாம இலக்கியன் பேரை எழுதி விடுங்க” என்றார் அவர்
அவ்வளவு தான்… அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த இலக்கியன் “ஹையோ” என்று ஒரே தூள்ளாக எழுந்து நிற்க… அதில் அவன் கட்டி இருந்த அரைகுறை சேலையும் அவிழ்ந்து விழ…
“இலக்கியன் மானபங்கம் ஆனது தான் மிச்சம்”
அவனை கண்ட அனைவரும் அதிர்ச்சியில் இருக்க.. விக்கியோ.. அவனிடம் நெருங்கி “ஏண்டா இப்டி பண்ண… இப்போ மாட்டிகிட்டோம் பாரு” அவனும் தானாக மாட்டி கொண்டான்..
அவர்களை கண்டு கோவம் கொண்ட ஜானகி… இருவரையும் அங்கு இருந்து விரட்டியே விட்டார் என்று தான் கூற வேண்டும்…
மதியம் போல் நடந்த வற்றை அன்பிடம் கூறிய இருவரையும் பார்த்து அன்பு சிரிக்க…
[the_ad id=”6605″]
“இதோ எல்லாம் இவனால தான்டா… தேவை இல்லாமல் ஒரு ஜென்டில் மேன்னை போய் அந்த ஆண்ட்டிக முன்னாடி அசிங்க பட வெச்சிட்டான்… துஷ்மன்” என்றவனை பார்த்து இருவரும் சிரிக்க.. இலக்கியனும் அவர்களுடன் இணைத்து கொண்டான்…
நாளை திருமணம் என்பதால்… அன்பிற்கு நிற்க கூட நேரம் இல்லாமல் ஓடி கொண்டு இருக்க… இனியவை கலையில் இருந்து பார்க்க கூட முடிய வில்லை அவனால்…
அவளை காணாத போதும்.. அவளின் நினைவும்… அவளின் முகமும் அவனை வாடிக்கொண்டு தான் இருந்தது..
அதே நிலை தான் இனியாவிற்கும்…. இலக்கியனும், விக்கியும் நலங்கில் வந்த போது கூட… அன்பு வராமல் போய் விட்டானே என்ற ஏமாற்றம் அதிகமாவே இருந்தது அவளுள்…
“நாளைக்கு கல்யாணம் ஆகிட்டா… நான் வைஷுவை கூட்டிகிட்டு போய்டுவேன்… இவன் என்னனா… நேத்து சும்மா இருந்தவளுக்கு ஆசையை காட்டிட்டு… இப்போ கண்ணுலயே பட மாட்டேங்குறானே” புலம்பிய படி சமையல் அறையில் வேலை செய்து கொண்டு இருக்க
“யார இனியா தேடி… இப்டி புலம்பிகிட்டு இருக்க” அவளின் மனதின் நாயகன் சாட்சாத் அவள் முன் தரிசனம் கொடுத்தான்
“அது… அது வந்து… யாரும் இல்லையே…நான் சும்மா தான் பேசிகிட்டு இருந்தேன்” என்றாள் அவளுள் ஏற்பட்ட சந்தோசத்தை மறைத்து…
“அப்டியா” என்று கேட்டு கொண்டே அவளை அன்பு நெருங்க… அதை தடுக்க தன் உள்ளங்கை தெரியும் படி காட்டி “அங்கேயே நில்லுங்க.. கிட்ட வராதீங்க” என்றாள் இனியா
“ஹை… வராத வராதனு சொல்லிட்டு.. திருட்டு தனமா என்னோட பேரை மருதாணியாள எழுதி வெச்சி இருக்கியா” என்ற படி அவள் கையை ஆராய்ந்த படி அவளை அவன் நெருங்க…
அதில் சுதாரித்தவள்… கையை பிடுங்கி கொள்ள… இது உங்க பேர் ஒன்னும் இல்லை… என்றவளை திமிராய் பார்த்தவன்.. “பின்ன வேற யார் பேரு” என்றான் மீண்டும் நெருங்கிய படி
“இது இது… எங்க மாமா பேரு” என்றாள் படபடப்புடன்…
“யார் நானா “என்றான் அன்பு ஆர்வத்துடன்
“இது எங்க மாமாவோட இன்னொரு பேரு” என்றாள் மிடுக்குடன்…
அவள் கூறிய பதிலுக்கு அவளை முறைத்த படியே அவளை அராந்தவன் பார்வை… வேலை செய்யும் போது விலகி இருக்கும் இடுப்பு பகுதியில் பட… அதயே வெறித்து கொண்டு பார்த்து இருந்தவனை
“இங்க பாருங்க… நீங்க பண்ணுறது நல்லாவே இல்லை…இப்டி எல்லாம் நீங்க நடக்குதுக்க கூடாது” என்றவளில் இதழை அடுத்து வெறித்த படி நெருங்கியவனை
“நாளைக்கு நானும் வைஷுவும் மதுரை போறோம்… வண்டியும் கூட வர சொல்லியாச்சு” என்றாள் கண்ணை மூடி கொண்டு
அவளின் இந்த வார்த்தைகள் இடியை இறக்கியது அவனுல்…
கண்ணை மூடி இருந்தவள் எந்த ஒரு அசைவும் அன்பிடம் இருந்து இல்லையே என்று கண்ணை திறந்து பார்க்க…
அவன் இரண்டடி தள்ளி நின்றவன் கண்ணில்.. இரண்டு துளி கண்ணீர் தென்பட்டது…
அது இனியாவின் மனதில் காயத்தை ஏற்படுத்தினாலும்… அதை மறைத்து கொண்டு
“உண்மையாக தான் சொல்லுறேன்… நான் உங்களை எல்லாம் நாளை விட்டு போக தான் போகிறேன்” என்றாள் உறுதியாக
“உன்னால என்னை விட்டு போக முடியுமா இனியா.. இவ்ளோ தானா உன்னோட காதல்… இவ்ளோ தானா இந்த குடும்பத்தின் மேல் நீ வெச்சி இருக்க அன்பு பாசம் இல்லாம்” என்றான் உடைந்த குரலில்
அவனின் இந்த வார்த்தைகளே இனியாவை உள்ள இருந்து உடைத்து விட… அன்பை இப்போதே கட்டி கொண்டு அழ வேண்டும் போல் தான் இருந்தது இனியாவிற்கு
“இல்லை இனியா… இவர் உன்னுடையவர் இல்லை… வேறு ஒருத்திக்கு சொந்தமானவர்… அவரை நீ நினைப்பது கூட தவறு” என்று உறுதி எடுத்தவள்
“நீங்க கேட்டத்துக்கான பதில் நாளைக்கு தெரியும்… நானும் வைஷுவும் கிளம்பும் போது” என்றாள் இல்லாத தைரியத்தை வர வைத்து கொண்டு
பேசியவன் அன்பை கடந்து செல்ல… சமையல் அறையின் வாசலிற்கு சென்றவளை நிறுத்தியது அன்பின் குரல்
“அப்போ நான் சொல்லுறத நீயும் கேட்டுக்கோ… என்னை விட்டு நீ எங்கேயுமே போக முடியாது… நான் போகணும் விட மாட்டேன்” என்றான் முடிவாக
நாளைய பொழுது இந்த இருவரின் மன போராட்டத்தையும்… அனைவரின் உறவுகளையும் ஒரு கை பார்க்கவே காலம் அவர்களின் வாசலில் காது கொண்டு நின்று கொண்டு இருக்கிறது என்பதை அறியாமல் பேசி கொண்டு இருக்கின்றனர்…
மயக்கம் தொடரும்…..