கலாட்டா 08
அடுத்தநாள் காலை, பைக்கை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு அலுவலகத்தை நோக்கி நடந்துக்கொண்டிருந்தனர் கோகுலும் ஆதியும். ஆதி தன்போக்கில் ஏதோ பாடலை முனுமுனுத்தபடி வர, கோகுல் சிறிதாய் செருமிக்கொண்டு, “என்னென்னவோ நடக்குது? என்னன்னு தான் புரிய மாட்டேங்குது?” என்றான் கடைக்கண்ணால் ஆதியை நோட்டமிட்டபடி.
“நீயும் நானும் நடக்குறோம், அது இல்லாம இன்னும் ரெண்டு பேர் நமக்கு முன்னாடி நடக்குறாங்க!” என்ற ஆதியிடம், தீவிரமான பாவத்துடன், “இந்த மாறி செத்துப்போன காமெடி எல்லாம் கொஞ்சம் தவிர்த்திடலாம் மச்சி! என்ன?” என்றான் கோகுல்.
ஆதி மெலிதாய் சிரித்துக்கொண்டு மீண்டும் ஏதோ பாடலை முனுமுனுக்க, “மேடம் கூட கார்ல வந்து இறங்குற அளவுக்கு, சார் பேமஸ் ஆகிருக்கீங்க? என்ன நடக்குதுன்னே புரியலையே?” என்றான் கோகுல்.
‘விடமாட்டான் போலயே’ என மனதில் நினைத்துகொண்டு, அவனுக்கு பதில் சொல்லாத ஆதி, “இந்த லிப்ட் கிட்ட யாரு முதல்ல போறாங்கன்னு பார்ப்போமா?” என்றான்.
அவன் பேச்சை மாற்றுவது தெரிந்ததும், அதிலிருந்தே தனக்கு வேண்டியதை அறிய முற்ப்பட்டான் கோகுல்.
“அப்போ நான் முதல்ல போய்ட்டா, நான் கேக்குற கேள்விக்கு பதில் சொல்றியா?” என கொக்கி போட, “நீ முதல்ல போனா தானே? பாப்போம்” என அசட்டையாய் சொல்லி அந்த முப்பதடி தொலைவுக்கு ஓட்ட பந்தயத்தை துவங்கி வைத்தான்.
இருவரும் சிறு பிள்ளையென லிப்டை நோக்கி ஓட, சிறு இடைவெளியில் ஆதியை முந்தியிருந்தான் கோகுல். லிப்டின் கதவுகள் அப்போது தான் மூடிக்கொண்டிருந்தன. வேகமாய் சென்ற கோகுல், கதவை திறக்கவென பொத்தானை அழுத்தப்போக, பின்னாலே வந்த ஆதி, நின்றவனை தன் தோளால் இடித்து, ஒரே தள்ளாய் தள்ளிவிட, சில அடிகள் தள்ளிப்போய் விழுந்தான் கோகுல்.
லிப்ட் பொத்தானை அழுத்திய ஆதி, “நாந்தான் பர்ஸ்ட்” என்றான் வெற்றி சிரிப்புடன்.
கீழே விழுந்த கோகுல், எழுந்து அமர்ந்துக்கொண்டு, “எரும வயசாகியும் திருந்தவே இல்லடா நீ! இன்னமும் போங்கு பண்ணித்தான் ஜெய்க்குற!” என குறைப்பட்டுக்கொண்டே, எழுந்து நிற்க, அவனைக்கண்டு சிரித்துக்கொண்டே திரும்பிய ஆதி, அங்கே லிப்டின் திறந்த கதவுகள் வழியே உள்ளே நின்றிருந்த நபரை கண்டதும், அசைவற்று, மூச்சற்று ஸ்தம்பித்துப்போய் நின்றான்.
ஆதி அப்படியே சிலை போல நிற்க, அவன் அருகே மெல்ல வந்த கோகுல், “என்னடா அப்டியே நிக்குற?” என உலுக்கிய பின்பே, சிறுது அசைந்தான் ஆதி.
அப்போது தான் மின்தூக்கி உள்ளே நின்றிருந்த தன்யாவை கண்டதும், அவசரமாய் ஒரு ‘குட் மார்னிங்’கை கோகுல் உதிர்த்து, ‘வா’ என ஆதியையும் அழைத்துக்கொண்டு உள்ளே சென்றான்.
உள்ளே செல்ல கையை பிடித்து இழுத்த கோகுலை அப்படியே தன்னோடு இழுத்து கட்டிப்பிடித்தான் ஆதி. பார்வை தன்யாவை விட்டு இம்மியும் அசையவில்லை.
திடீரென ஆதி கட்டிப்பிடித்ததும், “என்ன மச்சான்?” என்றான் கோகுல் ஆச்சர்யமாய்.
அவனோ தன்யாவை வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி, “திங்கட்கிழமை காலைல படிக்கட்டு ஏறி ஆபிஸ் போறதா வேண்டிருக்கேன்டா” என மெதுவாய் சொல்ல, “என்னடா புதுசு புதுசா வேண்டிகுற?” என கேட்ட கோகுல், “சரி போ! நான் லிப்ட்ல வரேன்” என்றான்.
ஆதியோ, “நீ படிக்கட்டு ஏறி வரதான் தான்டா நான் வேண்டிருக்கேன்” என சொல்ல, “நான் என்னத்துக்கு டா ஏறனும்” என எகிற, உள்ளே நின்றிருந்த தன்யா, “வரீங்களா? இல்ல டோர் கிலோஸ் பண்ணவா?” என்றாள்.
“இதோ வரோம் மேம்” என குரல் கொடுத்த கோகுல், “வாடா போலாம்” என இழுக்க, “ஒகே! நீ வேண்டுதலை முடிச்சுட்டு வா! நான் போறேன்” என்ற ஆதி, வேகமாய் உள்ளே சென்று லிப்டின் கதவை மூடிக்கொண்டான்.
“என்னடா நடக்குது இங்க?” என தனியே புலம்பிய கோகுல், தன்னோடு ஆதியை கோர்த்துவிட்ட விதியை எண்ணி நொந்துக்கொண்டு, ஐந்து தளங்களையும் படிகட்டுகள் மூலம் கடக்க ஆரம்பித்தான்.
இரு நிமிடங்கள் காத்திருந்து மீண்டும் லிப்ட் வந்ததும் நோகாமல் மேலே செல்லலாம் தான்! ஆனா, அந்த அளவுக்கு அறிவு இருந்தா அவன் ஏன் ஆதிக்கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்க போறான்!? ஹாஹா!
லிப்டுக்குள் அசாத்திய அமைதி! நான்கு புறமும் கண்ணாடி பதிக்கப்பட்ட மின்தூக்கி என்பதால், என்ன முயன்றும் ஆதியின் இடைவிடாத பார்வையை தன்யாவால் தவிர்க்க முடியவில்லை.
காலையில் தன்யா எழுந்து வந்ததும், ‘எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு’ என அவள் சொன்னதை பற்றி விசாரிக்க வேண்டும் என தீவிரமான சிந்தனையுடன் பெற்றோர் நடு கூடத்தில் தவம் இருக்க, மாடியில் இருந்து தங்க மயிலென இறங்கி வந்த மகளை கண்டு அனைத்தும் மறந்துதான் போனது பெற்றவருக்கு!
எத்தனை வருடங்கள் ஆகிப்போனது, தன்யா தன்னை சிரத்தை எடுத்து அலங்கரித்துக்கொள்வதை பார்த்து?! கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு வீடு வந்து அடைந்தவள், அதன்ப்பின்னே எதிலும் நாட்டம் இன்றி போனாளே!
இன்றோ, வெண்ணிற பேன்சி புடவையில், தங்க நிற லோ கட் ப்ளவுசில், தோளில் ஒற்றை முந்தானையை தவழவிட்டு, எப்போதும், தூக்கி முடிந்திருக்கும் சிகையை, ஒருப்பக்கமாய் தளரப்பின்னி, உடைக்கேற்ற கண்ணை உறுத்தாத ஆபரங்களுடன் அவள் இறங்கி வருகையில், அதிலும் அவள் மார்பில் விஸ்த்தாரமாய் அமர்ந்திருந்த மயில் அந்த புடவைக்கு மேலும் ரம்மியம் சேர்க்க, அவளை விட்டு கண்ணெடுக்க முடியவில்லை பெற்றவர்களால்!
மகளின் அழகு கண்ணை நிறைக்கும் போதே, மனதையும் உறுத்தியது!
‘இத்தனை அழகிருந்தும் என்ன பயன்? மகளுக்கு தோதாய் ஒரு மணவாளனை அவள் அருகே நிறுத்தி அழகு பார்க்க குடுப்பினை இல்லையே!’ என மனம் வருந்த, மாடியை விட்டு இறங்கியவளோ, ஒருவரிடமும் சொல்லிக்கொள்ளாமல் விறுவிறுவென காரை கிளப்பிக்கொண்டு சென்றுவிட்டாள்.
ராஜகோபால் அதீத யோசனைக்கு ஆளானார்!
ஏதோ ஒரு நினைப்பில் தன்யா தன்னை அலங்கரித்துக்கொண்டு வந்துவிட்டாள். ஆனால், இப்போது ஆதியின் வெறிக்கும் பார்வையில், கண்ணாடியில் தெரியும் தன் உருவத்தை கண்டு சற்று அசௌகர்யமாகவே உணர்ந்தாள்.
ஒற்றை முந்தானை உடலை நிறைக்க, அதில் மறைந்தும் மறையாமலும் திரை மறைத்த நிலவென தெரிந்த அவள் முன்னழகும், முன்பக்கம் கிடந்த ஜடையால், தடையின்றி லோ கட் ப்ளவுஸ் மூலம் தன் வனப்பை அள்ளிக்காட்டிய அவள் பளிங்கு முதுகும், அதன் கீழே இரு விரல் இடைவெளியில் வெளிப்பட்ட அவள் இடையும்… இன்னும் இன்னும் என ஆதியின் கண்கள் அவன் அனுமதியின்றி சுதந்திரமாய் உலா வர, இங்கே அவஸ்தையில் நெளிந்துக்கொண்டிருந்தாள் தன்யா.
ஐந்தாம் தளத்தை அடைய லிப்ட் எடுத்துக்கொண்ட இருபது வினாடிகள், இருபது யுகங்கள் போல அவளுக்கு நீள, நான்காம் தளத்தை தாண்டும்போது, சட்டென ஒரு சிறு குலுக்களுடன் நின்றுப்போனது அந்த லிப்ட்.
தன்யா பதற்றமாய் பொத்தானை அழுத்திப்பார்க்க, ஆதி சத்தமாய் வாய்விட்டே சிரித்தான். அந்த லிப்டுக்குள் அவன் சிரிப்பொலி இடியென ஓசை எழுப்ப, “எதுக்கு சிரிக்குற?” என்றாள் தன்யா கடுப்புடன்.
“நீயும் நானும் லிப்ட்க்குள்ள இருக்குபோது, திடீர்ன்னு இந்த லிப்ட் பாதில நின்னுட்டா எப்படி இருக்கும்ன்னு இப்போதான் நினைச்சேன்! அதே மாறி நடந்துடுச்சு!” என் மீண்டும் சிரிக்க, அவளது கடுமையான முறைப்பில் கொஞ்சம் அடங்கியவன், “யூஷ்வலா இந்த ஸீன்ல இப்படிதானே வரும்? அதான் சொன்னேன்” என்றான் சிறு நகைப்பாய்.
“ஷிட்!!” என பொத்தானை ஓங்கி குத்தியவள் கையை கட்டிக்கொண்டு நின்றுவிட, ஆதி உல்லாசமாய் அவளை சைட் அடித்துக்கொண்டிருந்தான். ஓரிடம் விடாமல் அவள் மேனியில் அலைப்பாய்ந்தது அவன் கண்கள்.
பிடிக்காதவன் கண்ப்பட்டால் உடல் கூசித்தானே போகும் அசூயையில்!? ஆனால், தன்யாவுக்கு வெட்கம் பிடுங்கித்தின்றது. புடவை கட்டியிருக்கக்கூடாதோ? அதிலும் இந்த மாதிரி கட்டிருக்கக்கூடாதோ? என காலம் தாழ்ந்து சிந்தித்துக்கொண்டிருந்தாள்.
‘பெண்கள் மேலே மையல் உண்டு… நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்…’
ஆதி முனுமுனுப்பாய் பாட, வெடுக்கென திரும்பி முறைத்தாள் தன்யா.
ஏனோ அவள் பார்வை அவன் குஷியைத்தான் அதிகப்படுத்தியது.
‘நீ முத்தப்பார்வை பார்க்கும்போது, என் முதுகுத்தண்டில் மின்னல் வெட்டும்…’ அவன் தொடர, அவனை தவிர்க்க, லிப்ட் ஆப்பரேட்டரை தொடர்புக்கொள்ள மொபைலை எடுத்தாள் தன்யா.
அவளை வெறிக்க வெறிக்க அவன் பார்த்துக்கொண்டிருக்க, ‘எப்படி பார்க்குறான் பாரு? கண்ணாலேயே கன்சீவ் ஆக்கிடுவான் போல! பொறுக்கி’ என முனகிக்கொண்டே அவள் எண்ணை அழுத்த, மறுப்பக்கம், ‘நாட் ரீச்சபிள்’ என வந்தது.
‘காட்ட்ட்….’ என அலுத்துக்கொண்டாள் தன்யா.
ஆதி மேலும் குஷியாய், ‘நீதானே மழை மேகம் எனக்கு… என் ஹார்மோன் நதியில் வெள்ளப்பெருக்கு’ என்றவன், நன்றாய் வாரியிருந்த சிகையை ஒரு கையால் கலைத்துவிட்டு, சட்டையின் முதல் பொத்தானுக்கு விடைகொடுத்தான். திறந்திருந்த இடைவெளியில் அவன் மார்பின் ரோமம் அவள் கண்ணில் பட, மூச்சு முட்டியது அவளுக்கு. நீட்டாக டக்கின் செய்திருந்த சட்டையை ஒருப்பக்கம் மட்டும் வெளியே எடுத்துவிட்டு, பாக்கெட்டில் வைத்திருந்த சுவிங்கத்தை எடுத்து வாயில் போட்டு மென்றபடி மெலிதாய் சாய்ந்து நின்ற அவன் தோற்றம், அவளுக்குள் பலவித மாற்றங்களை உண்டுப்பண்ண, வியர்வை அருவியாய் கொட்டத்தொடங்கியது.
அவள் அவஸ்தையை ரசிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தவன் ஓரோர் அடியாய் அவளை நெருங்கி தன் கைசிறையில் அவளை நிறுத்தி, , மிகமெல்லிய குரலில்,
‘வா சோகம், இனி நமக்கெதுக்கு!? யார் கேக்க, நமக்கு நாமே வாழ்வதற்கு?’ அவள் கண்களை ஆழமாய் பார்த்தபடி, பாடிக்கொண்டே ஒரு புருவம் உயர்த்த மொத்தமும் தொலைந்து தான் போனாள்.
அடுத்து என்ன நடந்திருக்குமோ? லிப்ட் சட்டென உயிர் பெற்று மேலேறியது. ஐந்தாம் தளத்தை அடைந்து அதன் கதவுகள் திறக்கப்பட, ஒன்றுமே நடவாதது போல ஆதி வெளியே சென்றான். தன்யாவுக்கு தான் தன்னை சமனப்படுத்த சிரமமாகி போனது.
வியர்த்த முகத்தை கைகளால் அழுந்த துடைத்துக்கொண்டு அவள் வெளியேறுகையில், லிப்ட் வாயிலின் ஓரமாய் நின்றிருந்தார் லிப்ட் ஆப்பரேட்டர். அவரை கண்டதும் சுறுசுறுவென கோவம் வந்தது அவளுக்கு.
கோபத்தை மறைக்காது, “லிப்ட் எப்படி பாதில நின்னுச்சு?” என கேட்க, “தெரியல மேடம்! சின்ன மிஸ்டேக் தான்! இனிமே நடக்காது” என்றார் பயத்துடன்.
“கரென்ட் போனாக்கூட ஆட்டோமெட்டிக்கா பக்கத்துல இருக்க ஏதோ ஒரு ப்ளோர்க்கு போய் நிக்குற மாறி தானே டிசைன் பண்ணது? இப்படி பாதில ஏன் நிக்குதுன்னு கூட சொல்ல தெரியாம இருக்க தான் உங்களை வேலைக்கு வச்சு சம்பளம் குடுக்குறேனா?” என சத்தம் போட, ஆப்பரேட்டர் முழித்துக்கொண்டு நின்றார்.
கோகுல் புன்னகையுடன் நடந்து வரும் ஆதியிடம் சென்றான்.
“படில உருண்டு வந்தவனே கேபினுக்கு வந்து அஞ்சு நிமிஷம் ஆச்சு! லிப்ட்ல வர உனக்கு பத்து நிமிஷமாடா?” என்றவன் அவன் தோற்றத்தை கண்டு, “என்கூட வரப்போ நல்லாத்தானே டா வந்த? இப்ப என்ன தலை ட்ரெஸ் எல்லாம் கலைஞ்சு கடக்கு?” என கேட்க, சிரித்த ஆதி, விறுவிறுவென தன் அறையை நோக்கி நடந்து செல்லும் தன்யாவை பார்க்க, கோகுலுக்கு நடப்பது ஒன்றும் விளங்கவில்லை.
தன்யாவை புடவையில் பார்த்த பலரும் ஏகத்திற்கும் ஜொள்ளு விடத்தொடங்கினர். அவள் எதையும் கண்டுக்கொள்ளாமல் அறைக்குள் நுழைந்து கதவடைத்துக்கொண்டாள்.
ரிசப்ஷனுக்கு அழைத்தவள், “இன்னும் ஒன் ஆர்க்கு என்னை யாரும் டிஸ்டர்ப் பண்ணக்கூடாது ஷீலா” என உத்தரவிட்டு, இருக்கையில் அமர்ந்தவள், ஒரு நிலையிலேயே இல்லை.
அவன் குரல் அவள் காதில் ஒலித்துக்கொண்டே இருப்பதை போன்றதொரு பிரம்மை. அதிலும் அவனது தோற்றம்!!! நிழல் போல பல உருவங்கள் கண்முன்னே வர, தலையை பிடித்துக்கொண்டு மேசை மீதே சாய்ந்து விட்டாள்.
கேபினுக்குள் அமர்ந்திருந்த ஆதிக்கு வேலை ஒன்றும் ஓடவில்லை. கண் முழுக்க தன்யாவே நிறைந்திருக்க அவளை உடனே காண வேண்டும் போல தோன்றியது. ஏதோ ஒரு சாக்கு வைத்துக்கொண்டு அவளை சென்று பார்க்கலாம் என்றால், அறை வாயிலிலேயே, ‘மேடம், ஒன் ஆர்க்கு யாரையும் பார்க்க அல்லோ பண்ண கூடாதுன்னு சொல்லிட்டாங்க சார்’ என்ற பதில் வர, சுவரில் அடித்த பந்தென திரும்பி வந்துவிட்டான்.
எதிலும் நாட்டம் இல்லாமல் அரைகுறையாய் வேலையை கவனித்துக்கொண்டு நேரத்தை நெட்டித்தள்ளிக்கொண்டிருந்தான் ஆதி. மதியம் உணவு இடைவெளி நேரமே வந்துவிட, கோகுல் வந்து அழைக்கும் வரை அவனுக்கு பசி என்ற உணர்வே தெரியவில்லை.
மாதத்தில் ஒரு முறையாவது ரெஸ்டிங் ஏரியாவில் எல்லோரும் சேர்ந்து அமர்ந்து உண்பது அங்கே வழக்கம் என்பதால், அன்று எல்லோரும் ஆஜராகியிருக்க, ஆதியும் கோகுலும் வந்ததும் உணவுவேளை அமர்க்களமானது.
பேசி சிரித்து கலாட்டா செய்துக்கொண்டே உண்டதில் ஆதிக்கு நேரம் போனதும் தெரியவில்லை, மனதில் தன்யாவின் நினைவும் வரவில்லை.
“எப்படி ஆதி சார், நீங்க என்ன பேசுனாலும் எங்களுக்கு சிரிப்பு வந்துடுது?” என்றாள் பெண்ணொருத்தி.
“உங்ககிட்ட ஏதோ ஒரு வசிய சக்தி இருக்கு, அதான் நாங்க எல்லாருமே உங்க பேச்சுக்கு அடிமையாகி இருக்கோம்” என்றாள் மற்றொருத்தி.
ஆண்களில் ஒருவனோ, “அந்த வித்தையை எங்களுக்கு கொஞ்சம் சொல்லிக்குடுத்த பல விதத்துல நாங்க பலனடைவோம், பார்த்து பண்ணுங்களேன்” என சொல்ல, அவ்விடமே சிரிப்பும் பேச்சுமாய் இருந்தது.
கோகுல், “அவன் பேசுறதுக்கே இப்டி சொன்னா எப்டி? அவன் பாடி நீங்க கேட்டது இல்லை! அதான்! சார், பாட ஆரம்பிச்சாருன்னா….” என இழுக்க, “ஏய்ய்ய்ய்ய்” என்றான் ஆதி மிரட்டலாய்.
கோகுல் சொன்னதை கேட்டதும், “நீங்க பாடக்கூட செய்வீங்களா சார்? எங்க எங்களுக்கு ஒரு பாட்டு பாடி காட்டுங்களேன்” என ஷீலா ஆர்வமாய் கேட்க, அதையே மற்றவர் வழிமொழிய,
கோகுலும் தன் பங்குக்கு, “பாடுறது மட்டும் இல்லை! நல்லா மியூசிக் கூட போடுவான்! இவன் கைல கிட்டார் எடுத்தான்னு வைங்க, வாரணம் ஆயிரம் சூர்யாவையே மிஞ்சிடுவான்” என சிரிக்க,
ஆதி, “டேய், அடங்குடா, ரொம்பத்தான் ஓட்டுற இன்னைக்கு!” என்றான் கோகுல் தோளில் ‘டொம்’ என ஒரு அடி வைத்து.
அதைக்கேட்ட பெண்ணொருத்தி, “ஏன் சார், அப்போ அமெரிக்காக்கு மேக்னாவை தேடி சூர்யா போனமாறி, நீங்களும் கிட்டார் எடுத்துக்கிட்டு யாரையாவது தேடி போயிருக்கீங்களா?” என கேட்க, ஆதிக்கு பதில் சொல்ல வார்த்தைகள் வரவில்லை.
சின்ன சிரிப்போடு ஆதி அவர்களை பார்க்க, “சார், இவ்வளோ ஜாலியா இருக்குறதை பார்த்தாலே தெரியலையா அவர் லைப்ல இன்னும் மேக்னா வரலைன்னு?” என்ற ஆண் ஒருவர், “சரிதானே சார்?” என கேட்க, அதற்க்கும் சிரிப்பையே உதிர்த்தான் ஆதித்யா.
கோகுல் குறுக்கிடாமல் அவன் முகமாற்றத்தையே உன்னிப்பாய் கவனித்துக்கொண்டிருக்க, “என்ன சார், எது கேட்டாலும் சிரிச்சே மழுப்புறீங்களே! யாரும் இல்லன்னா சொல்லுங்க, நம்ம ஆபிஸ்லையே நிறைய பொண்ணுங்க உங்களுக்கு ரூட் விட்டுட்டு தான் இருக்காங்க” என்றான் ஒருவன்.
பெண்கள் கூட்டம் அவனோடு சண்டைக்கு போக, ஆதி மௌனமாய் சிரிப்புடன் வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்தான்.
கோகுல் மெல்லிய குரலில், “என்னடா சிரிச்சுக்கிட்டே இருக்கே? உன் நடவடிக்கை ஒன்னும் சரியில்லையே?” என கேட்க, அதற்க்கும் சிரித்தே மழுப்பினான் ஆதி.
அங்கே ஆளாளுக்கு பேச கூச்சல் சற்றே அதிகமாக, அறை கதவை வெடுக்கென திறந்துக்கொண்டு உள்ளே வந்தாள் தன்யா.
“வாட்ஸ் ஹேப்பனிங் ஹியர்? இதென்ன ஆபிஸா இல்ல சந்தைக்கடையா?” என சத்தம் போட, நொடியில் அடங்கிய கூச்சலை தொடர்ந்து எழுந்து நின்றனர் எல்லோரும். ஆதி அமர்ந்திருந்த வாக்கில் திரும்பி அவளை ஏறிட்டான்.
“இன்னும் பிப்டீன் மினிட்ஸ்ல மீட்டிங் இருக்கு! எல்லாரும் கான்பரென்ஸ் ஹால்ல அசெம்பிள் ஆகிருக்கணும்? காட் இட்?” என்ற உத்தரவோடு அங்கிருந்து வந்த வேகத்தில் வெளியேறினாள் தன்யா.
அவள் போனதும், “ஹப்பா, புயல் அடிச்சு ஓஞ்ச மாதிரி இருக்கு” என்றாள் ஒருத்தி.
“வர வர மேடம் ரொம்ப சிடுசிடுன்னு இருக்காங்க. இல்ல?”
“ஆமா, என்ன ஆச்சுன்னு தெரியல” பெண்கள் பேச, ஆடவன் ஒருவனோ, “என்ன சொல்லு, மேடம் செம்ம பிகரு” என்றான் ஒரு மாதிரியான குரலில்.
உடனே அவனை தொடர்ந்தே, “ஆமான்டா… இன்னைக்கு இந்த சாரீல செம்ம ஹாட்டா இருக்காங்க” என சிலாகிக்க, “எதுக்கும் நம்ம பிட்டை போட்டு பார்க்கலாம்! யாருக்கு லக் அடிக்கும்ன்னு சொல்ல முடியாதுல” என்று சிரிக்க, ஆதி சட்டென எழுந்தவன், “எல்லாரும் மீட்டிங்க்கு ரெடி ஆகுங்க! பேசுனது போதும்” என இறுகிய குரலில் சொல்லிவிட்டு வேகமாய் அங்கிருந்து சென்றான்.
கோகுலுக்கு ஏதோ புரிந்தும் புரியாமலும் இருக்க, வேகமாய் செல்பவனின் பின்னே அவன் ஓட, ஆதியோ அவன் கேபினுக்கு செல்லாது, தன்யாவின் கேபின் நோக்கி சென்றான்.
கோகுல் அழைப்பதற்குள் தன்யாவின் அறையை அனுமதியின்றி திறந்துக்கொண்டு ஆதி உள்ளே சென்றிருக்க, திடீரென்ற அவன் வருகையில், திடுக்கிட்ட தன்யா குடித்துக்கொண்டிருந்த பாட்டில் நீர் அவள் மேனியில் தாராளமாய் சிதறியது.
அவன் வந்த வேகத்தை கண்டு பதட்டமடைந்தவள் அதை வெளியே காட்டாது, “கதவை தட்டிட்டு வர தெரியாதா?” என்றாள் முறைப்பாய்.
அவள் முன்னே நெருங்கிய புருவங்களோடு கூர் பார்வை பார்த்தபடி நின்ற ஆதி,
“என்னடி ட்ரெஸ் இது?” என்றான் கடினக்குரலில்.
அவன் பேச்சில் இவளுக்கு கோவம் ஏற, “ஹெலோ, இது என் ஆபிஸ், என் இஷ்டத்துக்கு நான் என்ன வேணாலும் செய்வேன்! நான் என்ன ட்ரெஸ் போட்டா உனக்கென்ன?” என்றாள்.
“எனக்கென்னவா?” என கேட்ட ஆதி, அங்கிருந்த கதிரையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடி, “என்னகென்ன-ன்னு உனக்கே நல்லா தெரியுமே?” என்றான் சிடுசிடுப்பாய்.
“ஆதி இங்கிருந்து வெளில போ” என்றாள்.
“….”
“உன்கிட்ட தான் சொல்றேன்… வெளில போ ஆதி!!”
அவளை கூர்ப்பார்வை பார்த்தவன், “நான் ஆதியா உனக்கு?” என்றான்.
அவன் கேள்வியில் நெஞ்சுக்கூடு ஏகத்திற்கு துடிக்க, முகத்தின் பதட்டத்தை அவனுக்கு காட்டாதிருக்க அவனுக்கு முதுகுக்காட்டி திரும்பிக்கொண்டாள்.
சில நொடிகள் அவள் அப்படியே நிற்க, “நான் ஆதியா உனக்கு?” என்ற அவனது அதே கேள்வி, அவள் காதோரம்… அவன் உதடுகள் அவள் செவிமடலை தீண்டும்படி…. அவன் உடல் அவளோடு உரசும்படி… திடுக்கிட்டு அவள் நகரப்போக, அவனது வலக்கரம் அவளது நடுவயிற்றில் அழுந்தியது.
அழுத்தியதோடு அவன் அவளை தன்னோடு சேர்த்து அணைக்க, அவள் மூச்சுவிடும் வேகம் கண்டு அவன் அதரங்கள் விரிந்தன.
“சொல்லு, நான் உனக்கு ஆதியா?” மீண்டும் அவனது அதே கேள்வி. செவியோரம் உரசிக்கொண்டிருந்த அவன் உதடுகள் இப்போது அதை கவ்விக்கொள்ள பார்க்க, அவனது உஷ்ண மூச்சு அவளை கண்மூட செய்தது. அவள் வயிற்றில் அழுந்திருந்த ஒரு கரம், இருகரமாய் மாற, தன்னோடு சேர்த்து கெட்டியாய் அணைத்துக்கொண்டான் அவளை.
செவிகளில் இருந்த அவன் உதடுகள் மெல்ல இறங்கி அவள் பின்னங்கழுத்தை அடைந்து, பற்கள் பதிய அவன் கடித்தபோது, ‘ஸ்ஸ்ஸ்’ என்ற அவளது முனகல் இன்னும் அவனுக்கு போதை ஏற்றியது.
அவள் எலும்புகள் நொறுங்க அவளை இறுக்கமாய் அணைத்தவன், “இப்படி எதுவும் பண்ணிட கூடாதுன்னு தான் தள்ளியே நின்னேன்! விட்டியா நீ? எதுக்கு இப்படி புடவை கட்டின?” என்றான் கோவம் கலந்த தாபக்குரலில்.
அவள் பதில் சொல்லும் நிலையிலேயே இல்லை. அவன் கைகளும் உதடுகளும் அவளை வெகு நாட்களுக்கு பிறகு வேறோர் உலகத்திற்கு இட்டு சென்றுக்கொண்டிருந்தன.
அவன் உதடுகள் அவளை முத்தமிடும் வேலையை செவ்வனே செய்துக்கொண்டே, “என்னை உசுப்பேத்தி விடனும்ன்னு தானே இப்படி புடவை கட்டிட்டு வந்த?” என்றதும், தன்யாவுக்கு அவளை மீறி சின்னதாய் மென்னகை வந்து ஒட்டிக்கொண்டது முகத்தில்.
அவளை தன்புறம் திருப்பியவன், கண்மூடி நின்றிருந்தவளை ஆசையுடன் சில நொடிகள் பார்த்தபடி, முகத்தில் விரல்களால் கோலம் போடத்தொடங்கினான்.
“உன்னை எவ்வளோ மிஸ் பண்ணேன் தெரியுமா?” கண்கள் தாண்டி இறங்கிய போது, அவள் நயங்களில் இதழ் பதித்திருந்தான் ஆதி.
கன்னத்தை தொடும்போது அதை கடிக்காமல் விட அவனுக்கு மனம் வரவில்லை. இதழ்களை அடையும்போதோ, நொடியும் தாமதிக்காது, அதை தன் இதழ்களால் சிறை செய்தான் ஆதி!
“உள்ளே வேகமா போனான்? இன்னும் ஆளை காணோம்? ஒருவேளை ஏதும் சண்டை நடக்குதோ?” என கான்பரென்ஸ் ஹாலில் அமர்ந்து சிந்தித்துக்கொண்டிருந்தான் கோகுல்.
பதினைந்து நிமிடங்களில் மீட்டிங் என தன்யா சொன்னதால், அனைவரும் அங்கே குழுமியிருக்க, தன்யாவை இன்னமும் காணாததால், “மேடம் வர வர டைமிங் பாலோ பண்றதே இல்லப்பா! நம்மளை வர சொல்லிட்டு இன்னும் அவங்களை காணோம்… பாரேன்” என்றார் ஒருவர்.
“ஆதி சார் கூட எங்கன்னு தெரியல! அவர் இருந்தாலாவது கலகலன்னு இருக்கும்” என்ற ஒருத்தி, “கோகுல் சார், ஆதி சாரை எங்க காணோம்?” என்றாள் கேள்வியாய்.
ஏற்கனவே அவன் எங்கே இன்னும் வரவில்லை? என யோசித்துக்கொண்டிருந்தவன், கேள்வி வந்ததும், “இதோ இருங்க நான் போய் பார்த்துட்டு வரேன்” என சொல்லி எழுந்து சென்றான்.
தன்யாவின் அறை வாசல் வரை சென்ற கோகுலுக்கு உள்ளே செல்ல தயக்கமாய் இருந்தது. ‘ஒருவேளை ஆதி உள்ள இல்லன்னா என்ன செய்யுறது?’ என யோசித்தபடி நிற்க, ‘அவன் இல்லன்னா என்ன? மீட்டிங் ஹால்ல எல்லாரும் உங்களுக்காக காத்திருக்கோம் மேடம்’ன்னு அவங்கக்கிட்ட சொல்ற சாக்குல உள்ள போவோம்!’ என அறிவாய் திட்டம் போட்டு, மெலிதாய் கதவை தட்டினான் கோகுல்.
பதிலே வரவில்லை என்றதும், கொஞ்சமாய் திறந்துக்கொண்டு தலையை மட்டும் உள்ளே நீட்டி, “மே… ஐ….” என தொடங்கியவனின் பேச்சு அப்படியே அந்தரத்தில் நின்றது அவன் கண்ட காட்சியில்.
தன்யாவை சுவரோடு சுவராய் தன்னுடல் கொண்டு அழுத்தியபடி, அவள் அதரங்களை ஆதி மென்றுக்கொண்டிருக்க, எந்த வித எதிர்ப்புமின்றி அவனோடு இணங்கி கண்மூடி நின்றிருந்த தன்யாவை பார்த்ததும், ஸ்தம்பித்து போன கோகுல், எப்படி வெளியே வந்தான், தனது கேபினை அடைந்தான் என்று அவனுக்கு தெரியாது!!!
நீண்ட நேர முத்தத்திற்கு பிறகு அவள் இதழ்களை விடுவித்த ஆதி, மயங்கி நின்ற அவள் தோற்றத்தை ரசித்தபடி, “சீக்கிரமா கல்யாணம் செஞ்சுக்கலாம் தனு” என்றான் கிறக்கமாய்.
அதுவரை மயங்கி நின்றிருந்த பெண்ணவள், ‘திருமணம்’ என்ற சொல்லை கேட்டதுமே, நெருப்பு பட்டதை போல அவனை தன்னை விட்டு தள்ளிவிட்டு, “வெளில போ முதல்ல” என கத்தினாள்.
அவளது திடீர் மாற்றத்தில் குழம்பிய ஆதி, “என்ன தனு உனக்கு பிரச்சனை?” என்றான் சிறு கோவத்துடன்.
“மரியாதையா இங்கிருந்து போய்டு தேவா! என்னை பேச வைக்காத”
குரல் நடுங்க அவள் உச்சரித்த ‘தேவா’ அவனை சற்று அமைதிப்படுத்த, “ஒரு சின்ன விசயம், உட்காந்து பேசுனா தீர்ந்தும்… ஆனா அதை தீர விடாம நாலு வருஷமா உன்னை வருத்தி, என்னையும் வருத்திட்டு இருக்க நீ!” என்றான் ஆதி.
தன்யா அமைதியாய் நிற்க, “உன் பக்கம் தப்பு இருந்தா தயங்காம ‘சாரி’ சொல்ற உன்னோட குணம், அதை என்கிட்ட செய்ய மட்டும் ஏன் இவ்வளோ தயங்கணும்? உன் மன்னிப்பு கூட எனக்கு வேண்டாம்! குறைஞ்சபட்சம் என் பக்க நியாயத்தையாவது கேட்கலாம்ல?” என அவன் சொல்ல,
“கேட்ட வரைக்கும் போதும் தேவா! என்னை இப்படியே விட்டுடு! மறுபடி உன்னை பார்ப்பேன்னு நான் கனவுல கூட நினைக்கல! அன்னைக்கு உன்னை திடீர்ன்னு இங்க பார்த்ததும்….” என்றவள் அதற்குமேல் பேச முடியாது திணற, “நான் உனக்காக தான் வந்தேன் தனு” என்றான் ஆதி ஆழ்ந்த குரலில்.
“தெரியும் தேவா! அதனால தான் சொல்றேன்! நீ இங்க இருக்கிறது வேஸ்ட்! போய்டு!” என்றான் திண்ணமாய்.
அதில் ஆதியும் கோவம் அதிகரிக்க, “இங்க பாரு! இங்கிருந்து நான் போனா அது உன்னோட தான்! இனியும் பிரம்மச்சாரியா என்னால வாழ முடியாது” என கடுப்பாய் சொன்னவன்,
“நீ ‘ம்ம்ம்’ன்னு சொன்னா உங்க அப்பாக்கிட்ட பொண்ணு கேட்டு கட்டிக்கிட்டு போவேன்… நீ ‘மாட்டேன்னு’ சொன்னா அப்பவும் உன் அப்பாக்கிட்ட பொண்ணுக்கேட்டு கட்டிட்டு போவேன்!” என்றான் அதட்டலாய்.
“இன்னும் என்னால நீ யாரோ நான் யாரோங்குற மாறி நடிக்க முடியாது! நம்ம உறவு அப்படிப்பட்டதும் இல்லை! புரிஞ்சுது தானே?” என்றவன், “நல்லவிதமா யோசிச்சு பதில் சொல்லு” என்று விட்டு திரும்பி நடந்தான்.
வாசல் வரை சென்றவன் சட்டென திரும்பி, “வெளில வரப்போ இந்த முதுகு இடுப்பெல்லாம் இழுத்து மூடி இருக்கணும்! இப்டியே படம் காட்டிக்கிட்டு வெளிய வந்த….” என ஒரு விரல் நீட்டி எச்சரித்து விட்டு சென்றான்.
அவன் சென்றதும் ‘பொத்’தென இருக்கையில் விழுந்தாள் தன்யா. உடலின் மொத்த சக்தியும் வடிந்ததை போல இருந்தது.
தன் கேபினுக்கு சென்றுக்கொண்டிருந்த ஆதி, வழியில் கோகுல் பேயறைந்ததை போல அமர்ந்திருப்பதை கண்டு, “என்ன மச்சி! இங்க உட்காந்துருக்க?” என்றான் அவன் தோளில் தட்டி.
மந்திரித்து விட்டவன் போல ஆதியை வெறித்த கோகுல், “என்னடா பண்ணிட்டு வர நீ?” என்றான் திகைப்பாய் அவனிடம்.
“என்ன பண்ணேன்?” என ஆதி திரும்ப கேட்க, “நான் பாத்தேன்” என்றான் கோகுல்.
அதற்குமேல் ஆதிக்கு மழுப்ப மனமில்லாமலோ, இல்லை யாரிடமேனும் சொல்ல வேண்டுமென்று தோன்றியதோ, “பேசிட்டு இருந்தேன்” என்றான் மெல்லிய குரலில்.
“இதான் உங்க ஊருல பேசுற லட்சணமா? என்னடா நடக்குது உங்களுக்குள்ள?” என அதிர்வோடு வினவினான் கோகுல்.
சிரித்த ஆதி, “என் அஞ்சலை மச்சான் அவ!!” என்றான்.
கோகுலோ, “ஹப்பாடா! நான் கூட மேடமை லவ் பண்றேன்னு சொல்லப்போறியோன்னு பயந்துட்டேன்” என்றவன், “யாருடா அது அஞ்சலை? நம்ம ஆபீசா?” என பல்லைக்காட்ட,
‘த்தூ’ என துப்பிய ஆதி, ‘கேபினுக்கு வா’ என சொல்லிவிட்டு சென்றான்.
அறைக்குள் அமர்ந்திருந்த தன்யாவுக்கு மனம் அலைப்பாய்ந்தது. கண்டதையும் நினைத்துக்கொண்டு அவள் அமர்ந்திருக்க, திடீரென அவள் மூளையில் அபாய சங்கு முழங்கியது.
வெடுக்கென நிமிர்ந்தவள் அறையின் மூலையில் இருந்ததை அதிர்வோடு பார்க்க, அவள் இதழ்கள், “சி..சி..டி…வி..” என முனகியது. அடுத்த நிமிடமில்லாமல் கிளம்பியிருந்தாள் வெளியே…
ஆனால், அந்த அவசரத்திலும், புடவையின் ஒற்றை தலைப்பை மடித்து தோளோடு பின்னிட்டு, ஜடையை அவிழ்த்து, முடிகொண்டு தன் முதுகை மறைத்துக்கொண்டே வெளியே ஓடினாள்.
கண்காணிப்பு கேமரா அறையை அவள் அடைய, அனைவரும் மீட்டிங்கில் இருந்ததால், ஆளின்றி இருந்த அவ்வறை அவளுக்கு நிம்மதியை கொடுத்தது. வேகமாய் தனது அறையில் கடந்த அரைமணிநேரம் நடந்த நிகழ்வுகளுக்காக பதிவுகளை அதிலிருந்து அழித்தாள் தன்யா.
அதன்ப்பின்னரே அவள் சுவாசம் சீரானது.
“சொல்லு ஆதி, யார் அங்க அஞ்சலை?” என கோகுல் கேட்டதும், ஆதி அவனை முறைக்க,
“சரி, உனக்கும் மேடம்க்கும் என்ன பழக்கம்?” என அவன் கேள்வியை மாற்றியதும், பேப்பர் வெயிட்டை உருட்டிக்கொண்டிருந்தான் ஆதி.
“சொல்லுடா!”
ஆழ மூச்செடுத்தவன், “அவ என் ‘தனு’ மச்சி! என்னோட் ‘தனு'” என்றான் எங்கோ பார்த்துக்கொண்டு. அவனே சொல்லட்டும் என மௌனித்தான் கோகுல்.
“ஆனா அவ இப்படி இல்லடா, என் தனு வேற மாறி!!! என்னையே சுத்தி சுத்தி வருவா! அவளுக்கு நான் தான் எல்லாமே!!! எல்லாமே நான் தான்!!!” என்றவன்,
“நானும் இப்படி இல்லடா! அவக்கிட்ட நானும் இப்படி இல்லை!!” என்று சொல்ல அமைதியாய் கேட்டுக்கொண்டிருந்தான் கோகுல்.
எதையோ நினைத்து பெருமூச்சு விட்டவன், “ஒரே நாள்ல எல்லாம் மாறி போச்சு! என் தனு என்னை விட்டுட்டு போய்ட்டா!” என்றவன், “இல்ல இல்ல… நான்தான் அவளை போக விட்டுட்டேன்” என்றான் உடனே.
கோகுல், ‘ஆஹா! இவன் பேசுறதை பார்த்தா பிளாஷ்பேக் பெருசா போகும் போலயே’ என மனதில் நினைக்க,
“உப்ப்ப்ப்” என காற்றை ஊதி தள்ளியவன், “லவ் பெய்லியர் ஆனா மாறி பேசுறது கூட எவ்வளோ கஷ்டமா இருக்கு தெரியுமா மச்சி!!” என்றிட, கோகுலுக்கு இவன் என்ன மனநிலையில் இருக்கிறான் என்றே விளங்கவில்லை.
“என்னடா உளறுற?”
“ஆமாடா, இதுல என்ன சொல்றதுக்கு இருக்கு? நாங்க ரெண்டு பேரும் லவ் பண்ணோம்… லவ் பண்ணா அடுத்து என்ன? ப்ரேக் அப் தானே? அதான் எங்களுக்கும் ஆச்சு!!!” என தோளை குலுக்கிக்கொண்டு அமர்ந்த ஆதியை எந்த ரகத்தில் சேர்ப்பது என்றே புரியவில்லை கோகுலுக்கு.
‘இப்போதானே பீல் பண்ணி பேசிட்டு இருந்தான்.. அதுக்குள்ள இப்படி பேசுறான்?’ என அவன் குழம்ப,
மறந்துபோ என் மனமே….’ என மெல்லிய குரலில் கண்ணை மூடிக்கொண்டு ஆதி பாட,
கோகுல், ‘அடடா இவன் சாங் எல்லாம் போவான் போலயே’ என பீதியுடன் அவன் முகத்தை பார்த்துக்கொண்டு இருக்க, “மச்சி இன்னைக்கு பீர் அடிக்கலாமா?” என ஆதி கேட்டதும், “ஹான்?” என திருதிருவென முழித்தான் கோகுல்.
அவன் முழிப்பதை கண்டு சத்தமாய் சிரித்த ஆதி, “இந்த ஆதி காமெடி பண்ணிதானே பார்த்துருக்க, லவ்வர் பாயா பார்த்தது இல்லையே!!! ப்ளாஷ்பேக்ல பார்ப்ப!!” என சிரித்த ஆதி, “ஓபென் பண்ணா…..” என ஆரம்பித்தான் தனது காதல் வரலாற்றை…!!!
-கலாட்டா தொடரும்…