“ஐடியா சொல்றேன்னு சொல்லி அரை மணி நேரமாச்சு… இன்னமும் குறுக்க நெடுக்க நடந்துக்கிட்டு மட்டும் தான் இருக்க!” பால்கனிக்கும் ஹாலுக்கும் நடையோ நடை என நடந்துக்கொண்டிருந்த ஆதியிடம் பெரும்சோகத்துடன் சொன்னான் கோகுல்.
“அடேய் மம்பட்டி மண்டையா! எந்த ஒரு விஷயத்தையும் ப்ளான் பண்ணி பண்ணனும்ன்னு கேள்விப்பட்டதில்லையா நீ? தெளிவா போகணும்டா!” என்ற ஆதியிடம்,
“இங்கபாரு! நீ சொன்ன பிளாஷ்பேக்கை தெரிஞ்சுக்கிறதுக்கு முன்னாடி வரைக்கும் நம்ம கம்பெனி ‘பாஸ்’ன்னு ராஜகோபால் சார் மேலயும், உன்னோட அப்பாவாச்சேன்னு ஜெயதேவ் அங்கிள் மேலயும் ஒரு மரியாதை இருந்துச்சு! ஆனா, இப்போ என்னை பொறுத்தவரை ரெண்டுமே, ‘விவரமான பைத்தியங்க’ அவ்வளோதான்… அவங்களை சேர்த்து வைக்க எல்லாம் சீரியஸா யோசிக்காத, அவங்களுக்கு அவ்வளோ ஸீன் இல்லை!” என்றான் கோகுல்.
ஆதி, “நியாயப்படி என் அப்பாவையும் மாமனாரையும் நீ திட்டுனதுக்கு நான் உன்மேல கோவப்பட்டுருக்கணும்! ஆனாலும் நீ சொன்னது ‘உண்மை’ங்குறதால ‘போனா போது’ன்னு உன்னை மன்னிச்சுட்டேன்” என்றான் பெரிய மனதாய்.
தான் உட்கார்ந்திருந்த இடத்தில் இருந்து எழுந்துக்கொண்ட கோகுல், “சரி, நீ ஐடியாவை நல்லா ப்ளாஆஆஆஆன் பண்ணி வை! நான் தூங்கி எழுந்திரிச்சு நாளைக்கு வந்து கேட்டுக்குறேன்” என அறை நோக்கி செல்ல, பாய்ந்து வந்து அவனை தடுத்த ஆதி, “ஹேய், ஹேய்… கோச்சுக்காத மச்சி! ஒரு அஞ்சு நிமிஷம் இரு! ஒரு செம்ம ப்ளான் சொல்றேன்” என தாஜா செய்து கோகுலை அங்கேயே பிடித்து வைத்தான்.
அடுத்த ஐந்து நிமிடங்கள் தாண்டியும் சில நிமிடங்கள் ஓடி விட, கோகுல் விதியே என அமர்ந்திருக்க, “ஹான்… யெஸ்! சிக்கிடுச்சே!” என கத்திய ஆதி, “மச்சி! சொல்றேன் கேளுடா” என கோகுலிடம் அப்பாக்களை சேர்த்து வைக்கும் திட்டத்தை விவரிக்க ஆரம்பித்தான்.
“எங்கப்பாவும் தன்யா அப்பாவும் காலைல வாக்கிங் போற நேரத்துல தான் இந்த ப்ளான நம்ம எக்ஸ்கியூட் பண்ணப்போறோம்!” என ஆரம்பித்தான் ஆதி.
“ஏன் மத்த நேரத்துல இந்த ப்ளான் காலாவதி ஆகிடுமா?” என கோகுல் குறுக்கே வர, அவனை முறைத்த ஆதி, “செம்ம ப்ளான் சொல்றப்போ குறுக்க குறுக்க பேசாதடா” என்றுவிட்டு திட்டத்தை மேற்கொண்டு வரைந்தான்.
“அவங்க ரெண்டு பேரும் வாக்கிங் வர நேரத்துல, நம்ம ஒரு பாட்டியை கரெக்ட் பண்ணி….”
கோகுல், “அடச்சீ! பாட்டி’ய வா?”
ஆதி, “ஐயோ, டேய் முழுசா கேளு… ஒரு பாட்டியை கரெக்ட் பண்ணி அவங்க இருக்க இடத்துக்கு மசால் வடையை எடுத்துக்கிட்டு வியாபாரம் பண்ண போக சொல்லணும்! அந்த பாட்டி ‘மசால் வடை’ ‘மசால் வடை’ ன்னு ரெண்டு பேருக்கும் கேட்குறமாறி கூவி கூவி விக்க, அதை கேட்டு ரெண்டு டேடீஸும் ‘அந்த நாள் நியாபகம் நெஞ்சிலே வந்ததே’ன்னு பழசை நினைக்க, அவங்களுக்குள்ள இருக்க ‘காதல் தேசம்’ வினீத்தும், அப்பாஸும் முழிச்சுக்கிட்டு ‘முஸ்தப்பா முஸ்தப்பா’ன்னு பாட்டு பாடுவாங்க!!!” என்று சொல்ல,
கோகுலோ, “பார்த்துடா! வினீத்தும் அப்பாஸும் முழிச்சுக்குறதுக்கு பதிலா, ‘அண்ணாமலை’ ரஜினியும் சரத்பாபுவும் முழிச்சுக்க போறாங்க” என்றான் முகத்தை சுளித்து.
“ம்ச்! அபசகுனமா பேசாதடா!!!” என்று அதட்டிய ஆதி, “ப்ளான் எப்டி?” என ஆர்வமாய் கேட்க, “ம்ம்ம்! ஊசிப்போன மசால் வடையை கெட்டுப்போன பாலுல முக்கி திங்குற மாறி கேவலமா இருக்கு” என கோகுல் சொன்னதும், அவன் சொன்ன உதாரணத்தில், ‘அய்ய… ச்சை’ என முகம் கோணினான் ஆதி.
சிறிது நேரம் யோசித்த ஆதி, அடுத்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியிருந்தான்.
“இந்த ப்ளான் எப்டின்னு கேளு”
“சொல்லித்தொல!”
ஆதி, “எங்கப்பாவும் தன்யா அப்பாவும் காலைல வாக்கிங் போற நேரத்துல நம்ம ஒரு நாயை கரெட் பண்ணி….”
“ஓ! இந்த முறை நாயா? ஹும்ம்… இதுக்கு அந்த பாட்டியே தேவலாம்” என கோகுல் தலையில் அடித்துக்கொள்ள, அதை கண்டுக்கொள்ளாமல் மேற்கொண்டு தொடர்ந்தான் ஆதி.
“ஒரு நாயை கரெக்ட் பண்ணி, அதை எங்க அப்பாவை கடிக்க அனுப்பனும்! எங்கப்பாவை நாய் கடிக்க வரதை பார்த்து ராஜகோபால் சாருக்கு கோவம் எல்லாம் மறந்து, நண்பனை காப்பாத்தணும்ன்னு உள்ளுக்குள்ள இருந்து ஒரு எண்ணம் வந்து, ஓடிப்போய் அவரை சேவ் பண்ணுவாரு! ரெண்டு பேரும் சேர்ந்துடுவாங்க” என ஆதி முடிக்க,
“அப்ப அந்த நாய் இதை நின்னு வேடிக்கை பார்த்துட்டு இருக்குமா?” என்றான் கோகுல்.
“அதை தான் ராஜகோபால் சார் விரட்டிடுவாரே!”
கோகுல், “அந்த நாய் என்ன அவர் ஆபிஸ்ல வேலை பாக்குதா? முதலாளியை கண்டதும் ‘வணக்கம்’ வச்சுட்டு வாலாட்டிக்கிட்டு ஓடிடுறதுக்கு? ரெண்டு பேரையும் சேர்த்து கொதறி வச்சுடும்டா” என்றவன்,
“அதும் இல்லாம, ராஜகோபால் சார் கட்டாயம் உங்கப்பாவை காப்பாத்துவாருன்னு எந்த நம்பிக்கைல சொல்ற நீ?” என்றான்.
ஆதி ‘புஸ்ஸ்ஸ்’சென ஆஃப் ஆனான். ‘என்ன செய்வது’ என அடுத்து யோசிக்க அத்தனை திட்டங்களிலும் ஏதோ ஒரு ஓட்டை இருந்து அவனை கடுப்பாக்கியது.
வெகு நேர யோசனைக்கு பின் முடிவாக, “மச்சி! இந்த ப்ளான் கட்டாயம் வொர்க் அவுட் ஆகும்டா” என்றான் ஆதி.
கோகுலும், ‘சொல்லும், சொல்லித்தொலையும்’ என்ற ரேஞ்சில் இருக்க, ஆதி ஆரம்பித்தான்.
“எங்கப்பாவும், தன்யா அப்பாவும் காலைல வாக்கிங் போற நேரத்துல….” என்று ஆரம்பிக்க, “இந்த வாக்கிங் போற நேரத்தை விடவே மாட்டியாடா நீ?” என அலுத்தே போனான் கோகுல்.
அதை காதிலேயே வாங்காது, “ரெண்டு பேரும் வாக்கிங் போற நேரத்துல, சில பேரு எங்கப்பாக்கிட்ட இருந்து அவர் மொபைலை திருட போறாங்க! அப்போ எங்கப்பாக்கும் அவங்களுக்கும் சண்டை வர, அந்த சண்டைல எங்கப்பாவை அவனுங்க அடிக்க, அதை பார்த்த ராஜகோபால் சார், நண்பனை காப்பாத்த வராரு! அவர் வந்ததும் அந்த ஆளுங்க ஓடிடுறாங்க! ரெண்டு பிரண்ட்சும் சேர்ந்துடுவாங்க!”
[the_ad id=”6605″]
ஆதியை மேலும் கீழும் வெற்றுப்பார்வை பார்த்தான் கோகுல்.
ஆதி, “என்னடா இந்த ப்ளான் ஓகே தானே?”
“இப்ப நம்ம அடியாளுங்களை செட் பண்ணி, அவங்களுக்கு காசு குடுத்து உங்க அப்பாவை அடிக்க வைக்க போறோம்?” என கேட்டான் கோகுல்.
“ஆமாடா”
“ஹோ! அப்ப இந்த போலிஸ் யாராவது பார்த்து அவனுங்களை புடிச்சு விசாரிச்சா? என்ன பண்றதாம்? நம்ம மாட்டிக்க மாட்டோமா?” என கேட்க, “ஐயையோ, அதை மறந்துட்டேனே” என பதறினான் ஆதி.
கோகுல், “போடாங்க…. நீயும் உன் பிளானும்!” திட்டிவிட்டு எழுந்து செல்ல, “ஐயோ மச்சி! இதுக்குமேல என்னால யோசிக்க முடியாதுடா! பேசாம இதையே வொர்கவுட் பண்ணிடுவோம்! டிரஸ்ட் மீ இட் வில் வொர்க்” என கத்திக்கொண்டிருந்தான் ஆதி.
கோகுல், “அடியாளுங்களை நம்பி எல்லாம் இறங்க முடியாது ஆதி! புரிஞ்சுக்கோ! இதென்ன படமா இல்ல சீரியலா?” என கேட்க,
“அதுதான் இந்த ப்ளான்ல ஓட்டைன்னா அதை அடைக்க என்ன வழின்னு பார்ப்போம்” என்ற ஆதி, சொடக்கு போட்டுக்கொண்டே துரிதமாய் யோசித்து, “அடியாளுங்களை வச்சா தானே பிரச்சனை, அடியாளுக்கு பதிலா நம்மளே களத்துல இறங்கிட்டா?” என்று புருவம் உயர்த்தினான்.
ஆதியின் கேள்வியில் ‘ங்கே’ என முழித்தான் கோகுல்.
“நம்ம எப்படிடா?” கோகுல் திகைத்ததை பொருட்ப்படுத்தாது, “பெரிய கர்சீப்பா ரெண்டு எடுத்து வை, நாளைக்கு நம்ம போறோம்! என் அப்பனை வெளு வெளுன்னு வெளுக்குறோம்! மாமனார் அவரை காப்பாத்த வந்ததும் தெரிச்சு ஓடுறோம்!” என்றான் தீர்மானமாய்.
அவன் பேசுவதை ‘இவன் என்ன பைத்தியமா?’ என்ற அளவில் தான் பார்த்துக்கொண்டிருந்தான் கோகுல்.
திடுமென அவனுக்கு ஒரு சந்தேகம் எழ, “ஏன்டா? எல்லாம் ஓகே! ஆனா, உங்க அப்பாவும் ராஜகோபால் சாரும் ஒரே இடத்துக்கு தான் வாக்கிங் வருவாங்கன்னு எப்படி சொல்ற நீ? சென்னைல ஒரே பார்க் தான் இருக்கா என்ன?” என்றான் கோகுல்.
“நல்ல வேளை நியாபகப்படுத்துன!” என்ற ஆதி, உடனே தன்யாவுக்கு அழைத்தான்.
அவனை நினைத்துக்கொண்டே மெத்தையில் சாய்ந்திருந்தவள், அழைப்பது ‘அவன்’ என தெரிந்ததும் சிறு படபடப்பானாள். அவளது ‘எண்’ அவனிடம் இருந்தும் பெரும்பாலும் ஆதி அவளை அழைத்ததே இல்லை. இப்போது அவனிடமிருந்து அழைப்பு வரவும், ‘என்னவாய் இருக்கும்?’ ‘என்ன சொல்வான்?’ ‘எதை பேச அழைத்திருப்பான்?’ ‘மீண்டும் காதல் கதை ஆரம்பிப்பானோ?’ என பல கேள்விகள் உதயமாக, விரல்கள் சிறிதாய் நடுங்க, அழைப்பை ஏற்றவள் காதுக்கு கொடுத்தாள்.
[the_ad id=”6605″]
“தனு! உங்கப்பா எந்த பார்க்ல தினம் வாக்கிங் போவாரு?”
முன்னுரை, முடிவுரை, பொருளுரை என எதுவுமின்றி அவளை பொறுத்தவரை சம்பந்தமே இல்லாத கேள்வி ஒன்றை அவன் கேட்க, அதை அவள் சத்தியமாய் எதிர்ப்பார்த்திருக்கவில்லை.
அதிர்ச்சி நீங்காது, “வாட்….???” என கத்தினாள் தன்யா.
“வாத்து கோழி எல்லாம் அப்பறம் மேய்க்கலாம்! இப்போ நான் கேட்டதுக்கு பதில் சொல்லு! அவர் எந்த பார்க் போவாரு டெய்லி?” என ஆதி கேட்க, கடுப்பு கன்னாபின்னாவென எழுந்தாலும், பல்லைக்கடித்துக்கொண்டு ராஜகோபால் வழமையாய் செல்லும் பார்க்கின் பெயரை அவள் சொல்ல, “ஓகே பை” என மறுநொடி அழைப்பை துண்டித்திருந்தான் ஆதி.
தன்யா ‘ஹலோ… ஹலோ…’ என கத்த, அதை கேட்க அவன் இருந்தால் தானே?
‘இடியட்… இடியட்… எப்பவும் என்னை அலைய விடுறதே இவன் வேலை! ஸ்டுபிட் ராஸ்கல்’ என தனியே வசைமாரி பொழிய தொடங்கினாள் தன்யா.
ஆதி அடுத்து அவன் தந்தைக்கு அழைக்க அவன் செய்வதை வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்தான் கோகுல்.
ஜெயதேவ் அழைப்பை எடுத்ததும், “நான் உன் அப்பன்டா! மாத்தி எதுவும் கூப்பிட்டுட்டியா? இல்ல, அரை போதைல ரோட்ல கடக்குறியா?” என்றார் பாசமாய்.
தந்தையின் பேச்சை கேட்டு பல்லைக்கடித்த ஆதி, ‘புள்ள போன் பண்ணுனா எப்டி இருக்க?ன்னு கேட்குறதை விட்டுட்டு பேசுற பேச்சை பாரு’ என உள்ளுக்குள் திட்டிக்கொண்டே, “டேடீ….ஹவ் ஆர் யூ?” என்றான் குரலில் தேன் தடவி.
ஆதியின் பாச விளிப்பிலேயே துணுக்குற்றார் ஜெயதேவ்.
“ஹவ் ஆர் யூ இருக்கட்டும்! நீ சென்னைல தானே இருக்க?” என்றார் அவர்.
“யெஸ் டேடீ! நீங்க சென்னைல இருக்கீங்கன்னு மாதாஜி போலியே!(சொன்னாங்க) அதான் நான் உங்களை பார்க்கலாம்ன்னு காலியே!”(கால் பண்ணேன்)
ஆதி சொல்வதை கேட்டவர், தன் நம்பகமின்மையை அப்பட்டமாய் காட்டினார்.
“நீ என்னை பார்க்க ஆசைப்படுறியா? வாய்ப்பே இல்லையே?”
ஆதி, “உங்களை பார்க்க ஆசைப்படுறேன்னு நான் எப்போ தகப்பா சொன்னேன்? தினம் நீங்க வாக்கிங் போவீங்களே, சென்னை வந்தும் போறீங்களா, என்ன செய்யுறீங்கன்னு அக்கறையா பேசதான் மீட்டிங் பண்ணலாம்னு நினைச்சேன்” என்றான் ஆதி.
ஜெயதேவ், “என் மேல அக்கறையா? இதை சத்தியமா நான் நம்ப மாட்டேன்டா” என்றதும்,
“சரி நைனா! நீங்க என்னை நம்பவே வேணாம்! நான் சொல்றதை மட்டும் கேளுங்க” என்றான்.
அவன் எதிர்ப்பார்த்ததை போலவே, “நீ சொல்றதை நான் ஏன்டா கேட்கணும்?” என ஜெயதேவ் முறுக்கிக்கொள்ள, “உங்க நல்லதுக்கு தான் டேடீ சொல்றேன்! ஜீவா பார்க் பக்கம் மட்டும் வாக்கிங் போறேன், வழுக்கிட்டு போறேன்னு போய்டாதீங்க! அங்க நிறைய திருட்டு நடக்குதாம்! நான் சொன்னா கேளுங்க” என்றான் இறுதி வரியில் அழுத்தம் கொடுத்து.
“நீ சொன்னா நான் கேட்க முடியாதுடா” என்றார் ஜெயதேவ் கிளிப்பிள்ளை போல.
“நான் சொல்ற எதையும் கேட்க வேணாம் நைனா! ஆனா, மறந்துக்கூட நாளைக்கு ஜீவா பார்க் பக்கம் போய்டாதீங்க, சொல்லிட்டேன்” என அழுத்தி அழுத்தி சொல்ல, அவன் எதற்க்காக திடீரென அழைத்து இவ்வாறு சொல்கிறான் என்று கூட யோசிக்காத ஜெயதேவ், “டேய், நீ சொல்லி நான் என்னடா கேட்கிறது? நான் நாளைக்கு போவேன்டா! போயே தீருவேன்டா” என்றார்.
‘அப்படி வா வழிக்கு’ என வெளியே குதூகலித்த ஆதி, குரலில் அதை காட்டாது, “என்னா டேடீ, உங்க நல்லதுக்கு தானே நான் சொல்றேன், என் பேச்சை கேட்க மாட்டீங்களா?” என்றான்.
“கேட்க மாட்டேன்டா”
“அப்போ நாளைக்கு ஜீவா பார்க் போகப்போறீங்களா?”
“ஆமான்டா! கண்டிப்பா நான் போவேன்” என ஜெயதேவ் சொல்ல, “ரைட்டு! பை நைனா” என அழைப்பை வைத்துவிட்டு போனை உல்லாசமாய் சோபா மீது வீசினான் ஆதி.
பார்த்துக்கொண்டிருந்த கோகுல், “வாட் அ பேமிலிடா?” என வியக்க, “நாளைக்கு பாரு, என் அடியை! ஒரே கல்லுல ரெண்டு மாங்கா!” என சிரித்துக்கொண்டே உறங்க சென்றான் ஆதி.
மறுநாள் காலையிலேயே ஜீவா பார்க் வெளிப்புற காம்ப்பவுண்ட் சுவரின் அருகே மறைந்து நின்றுக்கொண்டிருந்தனர் ஆதியும் கோகுலும்.
தன் தந்தையையும் மாமனாரையும் எதிர்ப்பார்த்து நடுநிசியில் பேய்படத்தின் கிளைமேக்ஸ் காட்சி பார்ப்பவன் போல ஆதி ‘திக் திக்’கென நிற்க, மிக நீண்ட கொட்டாவி ஒன்றை வெளித்தள்ளிய கோகுல், “அந்த சுக்குக்காப்பி வாங்கிக்குடேன்” என ஆதியை சுரண்டினான்.
எரிச்சலாய் திரும்பி அவனை முறைத்த ஆதி, “காப்பி குடிக்குற நேரமாடா இது?” என திட்ட, “காப்பி காலைல தானேடா குடிப்பாங்க?” என்றான் கோகுல் அப்பாவியாய்.
அவர்களும் ஒருமணி நேரத்திற்கு மேலாக அங்கே காத்துக்கிடக்கின்றனர். இருவரில் ஒருவரை கூட இதுவரை காணவில்லை. ‘திட்டம் சொதப்பிவிடுமோ?’ என்ற ஐயம் வேறு ஆதியை வாட்டி எடுத்தது. ஒருவேளை சொதப்பிவிட்டால் அடுத்த புதிய திட்டத்திற்கு எங்கே செல்வான் அவன்?!
இருவரும் கால்க்கடுக்க நிற்க, ஒரு சொகுசு கார் பார்க்’கின் ஓரம் தன் ஓட்டத்தை நிறுத்தியது. உள்ளிருந்து சுற்றும் முற்றும் பார்த்தபடி இறங்கினார் ஜெயதேவ்!
[the_ad id=”6605″]
தன் தந்தையை கண்டுக்கொண்ட ஆதி, “அப்பா வந்துட்டாருடா” என கோகுலுக்கு அடையாளம் காட்ட, “அப்பறம் ஏன் நிக்குற? வா போய் அடிக்கலாம்” என பாய எத்தனித்தான்.
அவனை தாவிப்பிடித்து நிறுத்திய ஆதி, “இப்போ போய் அடிச்சா, காப்பாத்த ராஜகோபால் சார் வர வேணாமா? லூசு” என சொன்னதும், “ஆமால்ல” என அடங்கி நின்றான் கோகுல்.
ஜெயதேவ் பார்க்கின் உள்ளே ஒரு ஆராய்ச்சி பார்வையுடனே சென்றார். அவர் கழுத்தில் கையில் எந்த ஆபரணமும் காணப்படவில்லை. அலைபேசிக்கூட இருக்கிறதோ, இல்லையோ என்ற சந்தேகம் உதித்தது ஆதிக்கு.
ஆதி, ‘இந்த மனுஷன் நான்தான் திருட வருவேன்னு கெஸ் பண்ணிட்டாரோ?’ என அவன் நினைக்க, பார்க்கின் மறுவாசல் அருகே நின்றது ராஜகோபாலின் மகிழுந்து.
ஆதிக்கு இருவரையும் ஒருசேர கண்டதுமே உற்சாகம் கூடிப்போனது. திட்டத்தின் முதல் படியை வென்றதை போன்றதொரு உவகை.
அந்த மிகப்பெரிய பார்க்கின் ஒரு திசையில் ஜெயதேவும், மறுதிசையில் ராஜகோபாலும் தங்கள் நடைப்பயிற்சியை ஆரம்பித்திருந்தனர்.
கோகுல், “ரெண்டு பேரும் வந்துட்டாங்க… வா நம்ம ஆக்ஷன்ல இறங்குவோம்!” என்றான்.
ஆதியும், “என்னை விட என் அப்பாவை அடிக்க நீதான்டா ஆர்வமா இருக்க!” என்றுவிட்டு, பாக்கெட்டில் இருந்து கைக்குட்டையை எடுத்து கண்கள் மட்டும் தெரியும்படி முகத்தில் கட்டிக்கொண்டான். அவனைப்போலவே கோகுலும் முகத்தை மறைத்துக்கொள்ள, “லெட்ஸ் கோ இன்சைட்” என இருவரும் உள்ளே செல்ல எத்தனித்த நேரம், இருவரின் தோளிலும் வலுவாய் விழுந்தது இரு கரங்கள்.
ஜெர்க்கான இருவரும் திரும்பிப்பார்க்க, காக்கிச்சட்டையில் விறைப்பாய் நின்றிருந்தனர் காவல்த்துறை அதிகாரிகள்.
‘ஐயோ போலீஸு!’ கோகுல் வாய்விட்டே சொல்லிவிட, “ஐயோ போலிஸ் இல்லடா, ஆர்2 போலீஸ்! நானும் ரொம்ப நேரமா பாக்குறேன், ரெண்டு பேரும் ஒளிஞ்சு நின்னு என்னடா பண்ணிட்டு இருக்கீங்க? முகத்துல துணியை வேற கட்டிருக்கீங்க?” போலிஸ் மிரட்டலாய் கேட்டது.
‘குற்றமுள்ள நெஞ்சு குவா குவா’வென கத்த, பயத்தில் இருவர் வாயும் டைப்படித்தது.
போலிஸ், “சொல்லப்போறீங்களா இல்லையா?” என மிரட்ட, அவனுள் இருந்த ‘பழைய பத்திரிக்கைக்காரன்’ தைரியம் கொடுத்து பேச வைத்தான்.
கோகுல், “ஆக்சுவலி சார், நாங்க இங்கதான் தினம் ‘ஹைட் அண்ட் சீக்’ விளையாடுவோம்! இன்னைக்கு நாங்க ரெண்டு பேருமே ஒளிஞ்சுக்கிட்டோம், எங்களை யாருமே கண்டுப்பிடிக்கல, நீங்க தான் கண்டுபிடிச்சு, பிடிச்சு, இப்படி கேள்வி….” என கோர்வையாய் சொல்லத்தெரியாமல் உளறி வைக்க,
“எனக்கென்னவோ உங்க ரெண்டு பேரையும் பார்த்தா சந்தேகமா இருக்கு” என்றார் போலிஸ்.
கோகுல், ‘சமாளிப்போம்’ என்றெண்ணி “வீ ஆர் வெரி டீசென்ட் பெலோஸ் சார்” என சொல்ல, அதற்குள் முந்திக்கொண்ட ஆதி, “ஐயோ சார், எனக்கு இவனை யாருன்னே தெரியாது! இவனுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்றான் வேகமாய்.
கோகுல் அதிர்ந்துப்போய் அவனைப்பார்க்க, அவன் பின்னே, ‘அய்யாதுரை அய்யாதுரை இது சுயநல பூமி அய்யாதுரை’ என பரத்வாஜ் இசையமைத்துக்கொண்டிருந்தார்.
போலிஸ், “சம்பந்தம் இல்லாதவன் கூட எதுக்குடா இவ்ளோ நேரம் நின்னுக்கிட்டு இருந்த?” என்றார் ஆதியை பார்த்து.
“நான் எங்க சார் நின்னேன்? இவன்தான் என்கூடவே நின்னான்! ஒருவேளை ‘பிக்பாக்கெட்’ அடிக்க வந்தானோ என்னவோ? இப்போலாம் டீசென்ட்டா இருக்கவன் தான் சார், திருடுறானுங்க! எதுக்கும் தனியா கூட்டிட்டு போய் விசாரிங்க” என ஆதி அடுத்த குண்டைப்போட,
முழுதாய் அதிர்ந்துப்போன கோகுல், திறந்த வாயை மூடக்கூட மறந்துப்போய் நிற்க, ‘அய்யாதுரை அய்யாதுரை நீ சூழ்நிலை கைதி அய்யாதுரை’ பாட்டு மேற்கொண்டு ஓடிக்கொண்டிருந்தது.
போலிஸ், “எனக்கு அப்பவே இவன்மேல சந்தேகம்! ஸ்டேஷன் பக்கம் வா! உன்னை விசாரிக்கணும்” என கோகுலை இழுக்க, தன்னையே ‘சேது விக்ரம்’ போல பார்த்துக்கொண்டிருக்கும் நண்பனை கண்டு, ‘ஐயோ பாவம்’ என ஆதிக்கு தோன்ற, அவனை நெருங்கி, மெல்லமாய், “இந்த சான்ஸ் விட்டா நமக்கு வேற ஆப்ஷன் இல்லடா! உனக்கு தான் போலிஸ், சிபிஐ எல்லாம் நல்ல பழக்கம்ல? எப்படியாவது தப்பிச்சுக்கோ! நான் நம்ம பிளான்ன எஸ்டாப்ளிஷ் பண்ணிடுறேன்” என பார்க்கிற்க்குள் ஓடினான்.