இசையால்
ஒரு உலகம்
அதில் நீ நான்
மட்டும் இருப்போம்
கனவால் ஒரு இல்லம்
அதில் நாம் தான் என்றும் நிஜமாய்
அது ஒரு ஏகாந்த காலம்
உன் மாடி சாய்ந்த காலம்
இதழ்கள்
எனும் படி வழியில்
இதயத்துக்குள் இறங்கியது
காதல் காதல் காதல் காதல்
தொடர்ந்தான் அன்பு.
மீரா… பிறப்பால் தமிழ் தான் என்றாலும்… அவள் பிறந்து வளந்தது மொத்தமும் டெல்லி தான்….
அங்கு இருக்கும் நாகரீகத்திற்கு ஏற்றார் போல் தான் அவளின் வாழ்க்கை முறையும் இருந்தது….
மெல்லிய உடல் வாகு… நல்ல உயரம்…..தலை முடியில சிறிதும் எண்ணெய் வைக்காமல், இருந்தும் அதை நேர்த்தியாய் தன் இருக்கு தோள்களிலும் அழகாய் தொங்க விட்டு இருந்தாள்….. நீண்டு அழகாய் வளர்ந்து இருந்த நகங்கள், வண்ணம் பூச பட்டு நேர்த்தியாய் இருந்தன…..கையில் கடிகாரம்… ஜீன்ஸ் பான்ட்… காலில் ஹீல்ஸ் என்று மேல் நாட்டு பாணியிலேயே அவள் இருந்தாள்…
அவளின் குடும்ப சூழல் நடுத்தர குடும்பத்தினர் சுழலாகவே இருக்க….. ஆனால் அவளோ கையில் இருக்கும் காசை செலவு செய்தாவது அவளின் தோற்றத்தை அப்படியே வைத்து கொள்ள விரும்பினால்…
அவளை ஒரு முறை கோவிலில்… அதே மேல் நாட்டு உடையில் இருந்தாலும்…அன்று முழு தினமும் அங்கு இருப்பது… வரும் ஏழை குழந்தைக்குகளுக்கு உணவு வாங்கி பரிமாறுவது….. அவள் தரப்பில் ஆஸ்ரமத்தின் குழந்தைகளை வேறு அழைத்து கொண்டு வந்திருந்தாள்…
அவர்களுடன் அவள் நேரம் செலவளிக்கும் அழகை பார்த்த அன்பிற்கு அவள் மேல் காதல் வந்தது என்று தான் சொல்ல வேண்டும்…..
அவளை பற்றி மேலும் விசாரிக்க விரும்பிய அன்பு… அவளை பின்தொடர ஆரம்பிக்க… அவளோ தான் வேலை செய்யும் அதே அலுவலகத்தில் வேறு பிரிவில் வேலை செய்வதை தெரிந்து கொண்டவன்… இதற்கு மேலுமா அமைதியாய் இருப்பான்…
உடனே மீராவின் பிரிவில் மாற்றல் பெற்று… அவளுடனே வேலை பார்க்க ஆரம்பித்தான் அன்பு…
முதலில் அன்பை பார்த்தவளுக்கு அவன் மேல் ஒரு ஈர்ப்பு இருக்க தான் செய்தது….
நீண்ட உயரம்… கட்டான உடல்… கூர்மையான விழிகள்… அதுவும் அவனின் அதிகார தோரணையும்… திமிரான பார்வையும்… எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்க்காத ஆணவமும்… அவளை அதிகமாகவே ஈர்த்தது…
அதை அவள் வெளியே காட்டி கொள்ளாமல்… அவளின் மிடுக்குடனே நடந்து கொண்டாள்… ஆஃபிஸில் வேலை செய்யும் பெண்கள் பலரின் கண்கள் அன்பின் மேல் இருப்பது மீராவுக்கு புரிந்து… அவள் அதில் பரிதவித்து கொண்டு இருந்த நேரம்…
அன்பே அவளின் அவஸ்த்தையை போக்கி… அவளிடம் தன் காதலை வெளி படுத்தினான்…. அதை மீரா மறுக்காமல்… அன்பை ஏற்று கொண்டாள்…
[the_ad id=”6605″]
அடுத்த ஆறு மாதங்கள்… அன்பு ஒரு பெரிய வீட்டின் ஒரே வாரிசு என்பதை புரிந்து கொண்ட மீரா… தன் வாழ்க்கை முறைக்கு எந்த பாதிப்பும் வராது… காசு விஷயத்தில் தனக்கு பிறந்த காலத்திலும் பஞ்சம் இருக்காது என்பதை உணர்ந்தவள்… அன்பு தனக்கு அற்ற துணை என நினைத்து சந்தோசமாக சுற்றி திரிந்தாள்..
மீரா காசை செலவு செய்யும் விதமும்… அவளின் நவநாகரீக பழக்கங்களும் முதலில் அன்பிற்கு புதிதாக இருந்தாலும்… பின்னாளில் அது அவன் முகம் சுளிக்கும் வண்ணமே இருந்தது….
அன்பாய் கூறி இவளை மாற்றி… பின்னர் than தன் வீட்டினர் முன் நிறுத்த விரும்பினான் அன்பு… இவளை இப்டி தன் வீட்டினர் முன் நிறுத்தினால், நிச்சயம் தன் வீட்டு சூழ்நிலைக்கு இவள் தன்னை மாற்றிக்கொள்ள மாட்டாள் என்பதை அன்பு அந்த ஆறு மாதத்திலேயே புரிந்தும் கொண்டான்…
அடுத்து வந்த மூன்று மதங்கள் இருவருக்கும் பிரெச்சனைகள் மிகுந்ததாகவும்… சமரசம் இன்றியுமே கழிந்தது….
மீராவை சில விஷயத்தில் மாறும் படி அன்பு கூற.. முதலில் சரி என்பவள்… மாறுவதற்கான முயற்சியை சிறிதும் எடுப்பதில்லை….
அவளின் செலவு செய்யும் விதத்திற்கு அவளை பல முறை அன்பு கண்டிக்க…ஆனால் மீராவோ “இப்போதைக்கு நான் சம்பாதிக்குறேன்… நாளைக்கு நீ எனக்காக செலவு செய்ய போகுறாய்… நீயும் வசதியான குடும்பத்தை சேர்ந்தவன் தானே… பின் பணத்தை பற்றி எதற்கு யோசிக்க வேண்டும்” என்பதே அவளின் பதிலாய் இருந்தது….
சிறுக சிறுக சேர்த்து… தேவைக்கும் அளந்து செலவு செய்யும் தன் குடும்பத்தை எண்ணி பார்த்த அன்பிற்கோ… இவளின் பதில் பீதியையே கொடுத்தது….
இருவர் மனமும் ஒவ்வொரு பாதையில் பயணித்து கொண்டு இருக்க…. அன்று தன் காதல் விஷயத்தில் வீட்டில் கூறினான் அன்பு…
கேட்ட போது… அனைவரும் அதிர்ச்சியும், கோவமும் கொண்டு இருக்க… சகுந்தலாவோ தன் ஆதங்கத்தில் தாம் தூம் என்று குதித்து கொண்டு இருக்க…
முதலில் கோவப்பட்டாலும்… வேலுசாமி தன் மகனின் முடிவின் மேல் நம்பிக்கை கொண்டு… இனியாவது அவனின் முரட்டு தனத்திற்கு முட்டு கட்டை போட ஒருத்தி இருந்தாள்… அவன் திருந்தி விடுவான் என்ற நம்பிக்கையில் ஒப்புதல் தர…
செல்லம்மாள் தான்… கடைசி வரை தன் கோவத்தை விடாமல்… பிடிவாதமாகவே இருந்தார்….
கால போக்கில் அவரின் கோவமும் கரைந்து விடும் என்று எதிர் பார்த்த வேலுச்சாமி… அன்பையும் மருமகளையும் வீடு வரும் படி கூறினார்… மருமகள் என்றே பழகி போனவர்… பெயர் கேட்க தவறிவிட்டார்….
[the_ad id=”6605″]
ஊர் கிளம்புவதற்காக… மீராவையும் சம்மதிக்க வைத்து… ரயிலில் டிக்கெட் எடுத்தான் அன்பு…. மூன்று மாதத்திற்கு முன்பே….
அவன் தன் குடும்பத்தை நினைத்து பயந்து இருக்க… அவனுக்கு அதைவிட கவலை தர கூடிய செய்தி அவனை வந்து அடைந்தது…..
அன்று அவன் அலுவலகத்தில் அமர்ந்து வேலை செய்து கொண்டு இருக்க… அவனின் கவனத்தை குலைக்கும் வண்ணன்… அங்கு ஒரு பெண்ணின் குரல் அவனை அழைத்தது….
அவள்… பார்த்த மாத்திரத்திலேயே அவளை அடையாளம் கண்டு கொண்டான் அன்பு… அவள் பெயர் ஷீலா… அவனின் அலுவலகத்தில் தான் பணிபுரிகிறாள்… ஆனால் வேறு ஒரு பிரிவு…..
அவனை அழைத்தவள்…”உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்… கொஞ்சம் வெளிய வாரீகளா….” பணிவுடன் கேட்டவளை மறுக்க மனம் இல்லாமல்… சரி என்று கூறியவன், அவளுடன் செல்ல…
கேன்டீன் செல்லலாம் என்று அன்பு நினைத்திருக்க… அவளோ…ஆஃபீஸின் எதிரில் இருக்கும் காபி ஷாப் போகலாம்… விஷயம் முக்கியமானது… யாராவது நம்மை ஒன்றாக பார்த்தால்… நன்றாக இருக்காது என்று கூற….
அவனும் எதுவும் நினைக்காமல் அவளுடன் சென்றான்….
இருக்கை பார்த்து அமர்ந்தவர்கள்…. அவளை பேச சொன்னா அன்பு… அவள் கூற வருவதை கேட்க தயாரானான்…
“எப்படி சொல்லுறதுனு தெரியல…..ஆனால் நீங்க தப்பா நினச்சிக்க கூடாது… என்னை கோபிகவும் கூடாது….”
“சிறிது தயங்கியவள்…உங்களோட காதலி மீரா இருக்காங்க இல்ல… அவுங்கள நம்பாதீங்க… அவுங்க உங்களோட இருக்கறது காசுக்காக தான்… மத்தபடி அவளுக்கு உங்க மேல காதல் எல்லாம் இல்லை… இதற்கு முன் கூட அவள் இருவருடன் காதலிப்பதாக கூறி சுற்றி இருக்கிறாள்… அவர்களிடம் காசு காலியானதும் அவர்களை விட்டு சென்று விட்டால்… உங்களுக்கும் அவளின் நிலை வர கூடாது என்று தான் எச்சரிக்கிறேன்…” என்றவள் அன்பின் பதிலுக்கும் காத்திருக்காமல் அங்கிருந்து எழுந்து சென்று விட்டாள்…
அவளின் பேச்சை கேட்டு கொண்டு இருந்த அன்பிற்கு… முதலில் இவள் என்ன பிதற்றுகிறாள் என்று அவள் பேசுவதை கேட்க ஆரம்பித்தவன்… அவள் தொடர்ந்து பேச… அதை கேட்டவனுக்கு கோவத்தில் முகம் சிவந்து… அவளை கொன்று விடும் அளவிற்கு கோவம் கொண்டான்….
பின் அவ்விடம் விட்டு.. தன் அறை சென்றவன்… மனதில் மட்டும்.. ஷீலா கூறியதே தான் ஓடிக்கொண்டு இருந்தது….
மீரா அதிகமாகவே நவ நாகரீகத்தை விரும்புவாள் என்பது அன்பிற்கு தெரியும்… அன்பின் காதலை ஏற்று கொள்ளும் முன் கூட… ஆஃபீஸின் சில ஆண்களுடன் அவளை இவன் பார்த்து இருக்கிறன் தான்…
இப்டி ஒரு ஐடி கம்பெனியில் வேலை செய்யும் இடத்தில்… இவை அனைத்தும் சகஜம் தானே என்று அவன் அதை பெரிதாக எடுத்து கொள்ள வில்லை..
ஆனால் நடந்த அனைத்தும்… இன்று இந்த பெண் கூறிய அனைத்தும் ஒன்று சேர்ந்து அவனை குழப்ப ஆரம்பிக்க… தன் உறவில் சந்தேகம் என்ற சொல்லிற்கே இடம் இல்லை என்று நினைத்த அன்பு… அவளிடம் இதை அனைத்தையும் பற்றி பேசி… தெளிவு பெற விரும்பினான்…
மீராவை நாளை மாலை போல் சந்திக்க வேண்டும் என்று கூறி.. இடத்தையும் உறுதி செய்து… தெளிவுடனே புறப்பட்டான்….
ஆறு மணிக்கு சந்திக்க வரும் படி கூறியவன்… ஐந்து மணிக்கே அந்த இடத்தை அடைந்து இருந்தான்… என்ன பேசவேண்டும்… எப்படி பேச வேண்டும்… அவளை காய படுத்தாமல் பேச வேண்டும்… இந்த பேச்சு சண்டையில் முடிய கூடாது… என பல வகையில் யோசித்து வைத்து தயாராக இருந்தான்…..
[the_ad id=”6605″]
மணி ஆறை நெருங்க… அவன் மனதில் படபடப்பு தான் அதிகமாக இருந்தது….காத்திருந்து காத்திருந்து மணி ஆறரையை கடந்து இருக்க… அவளுக்கு அழைத்தவன்… அவள் எடுக்காமல் போக… வந்து கொண்டு இருப்பாள்.. அதனால் தான் எடுக்க வில்லை என்று அமைதி காத்தவன்…
மணி ஏழு ஆனா பின்… அவனின் காத்திருப்பு அவனுக்கே பயத்தை கொடுக்க ஆரம்பித்தது… அவள் ஏன் வரவில்லை… அவளுக்கு எதாவது நேர்ந்து இருக்குமோ என்ற பல கேள்விகள் அவனை வாட்ட துவங்கின….
அந்த கடையில் இரவும் பாத்து மணி வரை அமர்ந்து இருந்தவன்… தன்னால் முடிந்த வரை அவளை அடைய முயற்சித்தவன்… முடியாமல் போக… கடை அடைக்கும் நேரத்தில் வேறு வழி இன்றி சோர்வுடன் அவ்விடம் விட்டுச்சென்றான்…..
மாயம் தொடரும் ……