வரம் நீயே 24 வைசாலி க்ளினிக்கில் அமர்ந்து இருந்தாள். பெரிதாக ஆட்கள் வராததால், தன் வேலையை பார்த்துக் கொண்டு இருக்க, நர்ஸ் வந்து நின்றாள். “மேடம்.. உங்கள பார்க்க யாரோ வந்து இருக்காங்க” “யாரு?” என்று வேலையை விடாமல் கேட்டவள், “நான்” என்ற குரலில் வேகமாக நிமிர்ந்தாள். நர்ஸ்க்கு பின்னால் மாதவன் நின்றிருந்தான். ‘இவன் எங்க இங்க?’ என்று அதிர்ந்தாலும், “உங்க வாங்க மாதவன். நீங்க போங்க” என்று நர்ஸை அனுப்பி வைத்தாள். மாதவன் உள்ளே வந்ததும், […]
Readmoreவரம் நீயே 23 மீனாட்சி வீட்டுக்குள் நுழைய, அகிலாண்டேஸ்வரி மட்டுமே அமர்ந்து இருந்தார். அதுவும் வருத்தமாக கோபமாக.. அதை கவனித்தாலும், கவனிக்காதது போல் உள்ளே சென்று உடை மாற்றிக் கொண்டு, தன் வேலைகளை ஆரம்பித்து விட்டாள். என்று சபையில் வைத்து தன்னை அப்படிப்பேசினாரோ, அன்றிலிருந்து அவரிடம் பேசுவதே இல்லை. அன்று அப்படி ஒரு அதிர்ச்சி கிடைத்த பிறகு, மீனாட்சிக்கு உயிரை விடும் எண்ணம் தான் பல முறை வந்து போனது. வீட்டிலும் அகிலா அதே போல் பேசி […]
Readmoreவரம் நீயே 21 அன்றைய பொழுது அந்த வீட்டில் எல்லோருக்குமே சோர்வாக தான் விடிந்தது. நேற்றைய பரபரப்பு இல்லாமல் தாமதமாக எழுந்து வந்தார் அமுதவல்லி. ஹாலில் அமர்ந்து தொலைகாட்சியில் கண்ணை பதித்து இருந்த வைசாலி, திரும்பிப் பார்த்தாள். “குட் மார்னிங் அத்த” “மார்னிங்டா.. சீக்கிரமே எழுந்துட்டியா?” என்று கேட்க, தலையை மட்டும் ஆட்டினாள். தூக்கம் எங்கே வந்தது? தூங்கவே இல்லை அவள். “உங்களுக்கு இன்னும் டயர்டா? தூங்க வேண்டியது தான?” “தூங்கலாம். ஆனா பசிக்குதே” “டீ போட்டு […]
Readmoreவரம் நீயே 20 காய்கறியை கழுவி எடுத்து, கத்தியையும் காய்கறி இருந்த தட்டில் போட்டு கையில் தூக்கிக் கொண்டாள் மீனாட்சி. வெளியே வந்து கூடத்தில் அமர்ந்தவள், காய்கறிகளை நறுக்க ஆரம்பித்தாள். அவளுக்கு நேர் எதிராக இறுக்கமாக அமர்ந்து இருந்த தந்தையையும் அவள் கண்டுகொள்ளவில்லை. புலம்பிக் கொண்டிருந்த தாயையும் அவள் கண்டுகொள்ளவில்லை. அவள் போக்கில் வேலை செய்து கொண்டிருந்தாள். “என்ன தான் நினைச்சுட்டு இருக்காங்க? இவ்வளவு நாள் ஆசை காட்டிட்டு இன்னைக்கு வேற இடத்துல நிச்சயம் பண்ணுவாங்களா? இத […]
Readmoreவரம் நீயே 19 விசேஷம் அப்போதிருந்தே களைகட்ட ஆரம்பித்து விட்டது. அக்கம் பக்கமிருந்தவர்கள் வந்து போக, நாளை நடக்க இருக்கும் விருந்துக்கான ஏற்பாடுகளும் நடந்தது. அரசன் அந்த பக்கம் சென்று விட, பார்த்தசாரதி பொறுப்பை எடுத்துக் கொண்டான். மகாலட்சுமியின் குடும்பமும் வந்திருக்க, அவரது கணவரும் மருமகனும் உதவிக்கு வந்தனர். ஆளுக்கொரு வேலையை செய்து கொண்டிருக்க, ஒரு வயதானவர் வந்தார். எல்லோரிடமும் பேசி விட்டு அங்கிருந்த வைசாலியை பார்த்தார். “இந்த பொண்ணு யாரு?” என்று அருகே நின்றிருந்த அமுதவல்லியிடம் […]
Readmoreவரம் நீயே 18 அரசனும் பார்த்தசாரதியும் ஒன்றாக உள்ளே வர, வைசாலி தனியாக நின்றிருந்தாள். பார்த்தசாரதியை பார்த்ததும் அடையாளம் தெரிந்திருந்தது. அஞ்சனாவின் திருமண ஆல்பத்தில் எல்லோரையும் பார்த்து இருந்தாள். பார்த்தசாரதி தான் வைசாலியை நன்றாக பார்த்தான். அவனுக்கு வைசாலியின் பெயர் தெரிந்திருந்ததே தவிர, முகத்தை பார்த்ததில்லை. “இவங்க யாரு மாமா?” என்று மணிகர்ணிகா அரசனிடம் வைசாலி பக்கம் கை நீட்டி கேட்க, “இவங்க..” என்று இழுத்து விட்டு, “உனக்கு அத்தை” என்றான். வைசாலி அவனை முறைத்து விட்டு, […]
Readmoreவரம் நீயே 17 அரசேந்திரன் கையில் இருந்த கட்டை பிரித்து விட்டு, மருத்துவர் சோதித்து பார்த்தார். “நல்லா இருக்கு. கொஞ்ச நாள் வெயிட் எதுவும் தூக்காதீங்க. மத்தபடி நார்மலா இருக்கலாம்” என்று கூறி முடிக்க, “அடிக்கலாமா டாக்டர்?” என்று கேட்டு வைத்தாள் அஞ்சனா. அவளது கேள்வியில் டாக்டர் அதிர, அரசன் அவளை கிள்ளி வைத்தான். அதை எல்லாம் அஞ்சனா கண்டு கொள்ளவில்லை. “அடிக்கலாமாவா?” என்று அந்த மருத்துவர் உறுதி படுத்திக் கொள்ள கேட்க, “ஆமா டாக்டர்.” என்று […]
Readmoreவரம் நீயே 16 இரவென்றும் பாராமல், வைசாலி அரசனிடம் கேள்வி கேட்டு கலங்கடிக்க, அவன் பதில் சொல்ல முடியாமல் தடுமாறினான். ‘உண்மையை சொல்லி விட்டால் தான் என்ன?’ என்ற யோசனை வர, இரண்டு நொடி அரசன் அமைதியாக இருந்தான். “பதில் கண்டிப்பா வேணுமா முட்டக்கண்ணி?” என்றவன் குரலில் இருந்த புன்னகை, வைசாலியை அமைதியடையச்செய்தது. “என்ன திடீர்னு சைலண்ட் ஆகிட்ட?” “காரணத்த சொல்லிட்டு வேற பேசுங்க” “நீ தான் வம்பா கேட்குற. என் தப்பு இல்ல.” என்று பழியை […]
Readmoreவரம் நீயே 15 வைசாலி அமைதியாக நின்றிருந்தாள். அரசன் சித்ராவை தொடர்பு கொண்டு, தன்னிடம் பேசுவான் என்று எதிர்பார்க்கவே இல்லை. அரசன் பேசும் வரை அவளும் மௌனமாக நிற்க, “கால் அட்டன் பண்ணு லாலி” என்றான். அதற்கு வைசாலி பதில் பேசும் முன்பே அழைப்பு துண்டிக்கப்பட, கைபேசியை வெறித்துப் பார்த்தாள். “அதிகாரம்” என்று முறைத்தவள், அதை அங்கேயே வைத்து விட்டு அறை பகக்ம் திரும்பினாள். அரசனின் அழைப்பை பார்த்து விட்டு, “எல்லாம் திமிர்..” என்று பல்லைக் கடித்தபடி […]
Readmoreவரம் நீயே 14 “கொடுத்த மருந்தெல்லாம் ஒழுங்கா சாப்பிடுறீங்களா?” என்று அந்த சிறுமியிடம் வைசாலி கேட்க, அவள் வேகமாக தலையாட்டினாள். “குட் கேர்ள்” என்று கன்னத்தில் தட்டியவள், “இத கண்டினியூ பண்ணுங்க. சீக்கிரம் சரியாகிடும். அதே மருந்த எழுதி தர்ரேன் வாங்கிக்கோங்க” என்று எழுதிக் கொடுத்தாள். அவர்கள் நன்றி சொல்லி கிளம்ப, அடுத்த குடும்பம் வந்தது. அந்த சிறுவனை அமர வைத்து என்னவென்று விசாரிக்க ஆரம்பித்தாள். அவர்களுக்கு மருந்து எழுதும் போது, கைபேசி மௌனமாக அதிர ஆரம்பித்தது. […]
Readmore