தாழம்பூ வாசம் நீ…..
21
சக்தியும், லிங்காவும் இரவு சக்தியின் வீட்டிற்கு வந்தனர். இங்குதான் இரவு சம்பிரதாயம் நடைபெற இருப்பதால்.. குறிப்பிட்ட உறவுகள் மட்டும் வந்தது இவர்களுடன், சக்தியின் வீட்டுக்கு.
காவ்யா பிள்ளைகள் லதா என எல்லோரையும், டிரைவர் உடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தான் இளா. இளா… தாமுவுடன் மண்டபத்தில் நின்று கொண்டான் மீதி வேலைகளை முடிக்க.
மூர்த்தியும் காமாட்சியும்… சக்தி வீட்டிற்கு வந்தனர். பெரியோர்களை முன் கொண்டு.. ஆசீர்வாதம் வாங்கி முடிந்து, அர்த்த ராத்த்திரியில் ஒரு வழியாக பெண் மாப்பிள்ளையை தனியறைக்கு அனுப்பினர்.
லிங்கா சற்று ஓய்ந்து போய்விட்டான்… ‘தூங்குறத்து எதுக்கு இவ்வளோ.. பாடுபடுத்தறாங்க…’ என்றே எண்ணம் அவனுக்கு. பாவம் அவனுக்குதான் சக்தியின் நிலை தெரியுமே, அவளை வற்புறுத்தும் எண்ணம் அவனுக்கு இல்லை போல… எனவே, ஒரு தொய்வு அவனுக்கு.
ஆனால், அந்த அறைக்குள் வந்ததும் லிங்கா… முழுவதும் மாறினான்.. ஆர்பாட்டமில்லா அலங்காரம்… உதிரி மல்லிகையும்.. ரோஜா இதழுமாக நிறைந்த ஒரு பௌவுல்… கூடவே சிறிய சிறிய கிண்ணங்களில்… ட்ரை ஃபுருட்ஸ்…. மிதமான acயில் லேவண்டர் மணம் வீச…. ரூம் முழுவதும்.. விண்டோ ஸ்க்ரீன் தொடங்கி.. பில்லோ கவர் வரை… பிங்க் நிறத்தில் இருக்க… அழகாக அலங்கரிக்கப் பட்டிருந்தது அந்த அறை.
அதனை ரசனையாக பார்த்து.. அந்த வாசத்தை நுகர்ந்து அப்படியே அமர்ந்து கொண்டான் லிங்கா கட்டிலில். மெல்ல மெல்ல சக்தி மட்டுமே நிறைந்தாள் நினைவில்.. ‘பேசு லிங்கா.. இன்னிக்கே பேசிடு..’ என மனதில் ஒரு சத்தம் கேட்டாலும்.. அதை லிங்கா உள்வாங்க, மறுத்துக் கொண்டிருந்தான்.
லிங்கா, வந்து அரை மணி நேரம் சென்றுதான் சக்தி அறையினுள் வந்தாள். மெல்லிய சந்தன நிற ஃபேன்சி பட்டு கட்டி.. தோளில் இருபுறமும் மல்லிகை வழிய… முகமெல்லாம் ஒரு தடுமாற்றத்துடன் வந்தாள்.
லிங்காவுக்கு பார்வையை வேறு பக்கம் மாற்ற முடியவில்லை… அவளின் தயங்கிய நடை.. குழப்ப முகமும் கூட இப்போ அவ்வளவு அழகாக தெரிந்தது அவனுக்கு.
[the_ad id=”6605″]
ஆனாலும், திடமாக சுதாரித்தான்… ‘என்ன பண்ணிடுவேன்..’ என அவளின் நடையை பார்த்து எப்போதும் போல எதார்த்தமாக தோன்ற… சற்று… சிரிப்பு வந்தது, கூடவே சுவாரசியமும் வந்தது… அவளை வேடிக்கைப் பார்க்கும் பாவனையில் அமர்ந்திருந்தான்… முற்றிலும் மாறிய மனநிலை… லிங்கா பார்க்க…
சக்தி அருகில் வந்து… “அம்மா… உங்ககிட்ட ஆசீர்வாதம் வாங்க சொன்னாங்க “ என்றாள்.
லிங்கா ஏதும் சொல்லவில்லை… அவனுக்கு இதை எப்படி எடுப்பது என தெரியவில்லை… விளையாட்டு மனநிலையும் சேர்ந்து கொள்ள… ‘என்ன செய்கிறாள் பார்க்கலாம்’ என எழுந்து நின்றான்.
ஆனால், சக்தி… அவன் பாதம் பணியாமல்… கையில் அந்த வெள்ளி ஜக்குடன் அப்படியே நின்றாள். அழகான ஆண்டிக் வேலைபாடுக் கொண்ட… வெள்ளி ஜக். அவளை பாவமாக பார்ப்பது போல் இருந்தது.
சக்திக்கு என்ன செய்வது என தெரியவில்லை… ‘வேண்டாமென’ சொல்லுவான் என எதிர் பார்த்தாள் இவள்… அது நடக்காமல் போக… சின்ன கோவம் வர, ‘ஐயோ, அரேஞ்சி மேரேஜ் இவ்வளோ கொடுமையானதா… எதுவுமே பேசமாட்டானா… இப்போ கால்ல விழனுமா…’ என உள்ளே ஓடிக் கொண்டிருக்க… ஏதும் சொல்லாமல்… அங்கிருந்த டேபிள் மேல் அந்த ஜக்கை வைத்து விட்டு… அந்த அறையில் வலது பக்கமிருந்த பால்கனி கதவை திறந்து கொண்டு வெளியே சென்றாள்.
லிங்காக்கு லேசான சிரிப்பு வந்தது அவ்வளவுதான். அவன் அந்த மரியாதையை எதிர்பார்ப்பவன் அல்ல. எனவே, அவளின் இந்த செயலில் ஒரு மோகன புன்னகை அவனிடம்.. ‘பெரியவர்கள் சொன்னால்.. இவள் செய்யனும்னு அவசியமில்லை… ஆனா, அத அப்படியே வந்து என்கிட்டே சொல்லிட்டா… ம்… சின்ன பெண்தான்…’ என எண்ணிய படியே தனது பட்டு வேட்டி உடையை, மாற்றிக் கொண்டு… ஷார்ட்சுடன் ஒரு டி ஷர்ட் அணிந்து… அவளிருக்கும் இடம் சென்றான்.
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை.. இருட்டு… அந்த பால்கனியிலிருந்து பார்க்கும் போது. அங்கொன்றும் இங்கொன்றுமான மின்மினி விளக்கு போல சின்ன சின்ன வெளிச்சம் அவ்வளவுதான். மற்றபடி… வரிவடிவமாக எதோ மலை… திரண்ட சாம்பல் நிற மேகம்… அவ்வப்போது வெளி வந்த, வெள்ளி நிலா… என ரம்யமாக இருந்தது அந்த இடம்…
அது வெள்ளியங்கிரி மலை பகுதி…. அதன் பக்கத்தில் இவர்களின் இந்த பண்ணை வீடு.. ம்… அங்குதான் இருந்தனர் இருவரும். அந்த வீட்டை சுற்றிலும் தோட்டம்.. பெரிதாக இருக்கும், நடுவில் வீடு… நல்ல நான்கு கிரவுண்டில் கட்டி இருந்தனர்… எனவே, இயற்கை.. அங்கு, நல்ல பரிச்சயம். அதன் தன்மைதான் இப்போது லிங்கா பார்ப்பது…
சக்தி, வந்தவனை பார்த்ததும்.. உள்ளே செல்ல போனாள்… லிங்கா அவளின் கையை பிடித்துக் கொண்டான் “இரு…. சக்தி… பேசனும்.. ” என்றான் மென்மையாக.
சக்தி அமைதியாக இருக்க, லிங்காவே தொடர்ந்து “நீ ஏன்.. டென்ஷனா இருக்க….” என்றான்.
சக்தி நிமிர்ந்து அவனை பார்த்தாள் “அ… சாரி… இப்போ… நான் உங்ககிட்ட… ஆசீர்வாதம் வாங்கல… அது எனக்கு அன்னீசியா இருந்தது…. அ… அதான்…. சாரி….” என்றாள் மெல்லிய குரலில்.
“ஹேய்… விடு…. எனக்கு அது பிரச்சனையே இல்லை…” என்றான்.
மெல்ல அந்த விசாலமான இடத்தில் சுவர் போல் இருந்த கண்ணாடி தடுப்பில் சாய்ந்து அமர்ந்துக் கொண்டாள்… சிரித்தபடியே.
லிங்கா “பால் எங்க… ஃபர்ஸ்ட் நைட்ல பால்… சாப்பிடலைன்னா…. சாமி குத்தம், போய் எடுத்து வா… வேஸ்ட் பண்ணாத…” என சொல்லியபடியே அமர்ந்தான் அவள் அருகில்.
கணவன் பக்கத்தில் அமரவும் சட்டென எழுந்தாள்… சக்தி. நேரே உள்ளே சென்று… பால் ஜக்கை எடுத்து வந்தாள்… கூடவே அங்கிருந்த… கப்களையும் எடுத்து வந்தாள்.
கணவனிடம் கொடுத்து விட்டு உள்ளே செல்ல, திரும்ப… லிங்கா கோவமாக “சும்மா சும்மா சொல்லனுமா… உட்கார்… உன்னை கடிச்சி தின்னுட மாட்டேன்…” என்றான் வேகமான குரலில்.
பாலை அங்கிருந்த இரண்டு அழகான பீங்கான் கப்களில் ஊற்றி தனக்கு ஒன்று எடுத்துக் கொண்டு, அவளிடம் ஒன்றை கொடுத்தான்.
சக்தி ஏதும் சொல்லாமல்.. அதை வாங்கிக் கொண்டு… அவனுக்கு எதிரே இருந்த சுவரில் சாய்ந்து அமர்ந்தாள்.. மெல்ல இருவரும் பருகும் வரையிலும்.. அந்த சிலு சிலு காற்றும்… அவ்வபோது வந்த நிலவின் ஒளியும் மட்டுமே… அவர்களுக்கு துணையிருந்தது.
[the_ad id=”6605″]
லிங்கா குடித்து முடித்து.. அவளை தன்புறம் வருமாறு… அழைத்தான்… “இங்க வா சக்தி…” என. சக்திக்கு பக் பக்கென்று இருந்தாலும் ஏதும் சொல்லவில்லை.. ‘சக்தி ஏதாவது சொல்லுவாங்க… வெயிட் பண்ணு’ என அவள் மனதை அமைதிப்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தாள். அவளுக்கு அந்த ஷண நேரத்தில்.. அவள் fbயில் பார்த்த எல்லா புகைப்படமும் நினைவில் வந்தது… எதை கேட்க வேண்டும்… எதை விட வேண்டும் என ஒரு பட்டியல் வைத்திருந்தாள்… அது எல்லாம் நினைவு வந்தது.
லிங்கா “சக்தி.. இங்க வா…” என்றான். அவனருக்கில் சென்றாள் அமர்ந்த படியே.
லிங்கா “சக்தி… “ என்றான் ஆழ்ந்து பெருமூச்சு விட்டபடி… அவளை லேசாக உரச.. அவள் இப்போது நகர்ந்தாள்.. அவளின் கைகளை பற்றிக் கொண்டான் முரடனாக… சக்தி தன் கைகளை விடுவிக்க நினைக்க.. இப்போது அவளின் விரல்களோடு தன் விரல்களை கோர்த்துக் கொண்டான், அவளின் விலகலை பொருட்ப்படுத்தாமல்… சக்திக்கு ஏனோ கோவம் வரவில்லை… சற்று ஆசுவாசம் வந்தது.. அதில், அவள் முகம் தளர்ந்து, இளகியது…
இப்போது லிங்கா “சக்தியை, பத்தி எனக்கு எதுவுமே தெரியாது… சொல்லலாமே…” என்றான் அந்த இருட்டை பார்த்தபடி.
சக்தியிடம் அமைதி. லிங்கா இப்போது “ஏன்… சொல்லமாட்டியா “ என்றான் கனிவாக.
அப்போது போல இப்போது தோன்றவில்லை.. இரவு உணவில் அவனின் நிலை தெரிந்ததில் இருந்த.. நெகிழ்ச்சி, இப்போதும் இருக்க.. “சக்திய, பத்தி என்ன தெரியனும்…” என்றாள் லேசான வெட்க குரலுடன் அமைதியாக.
லிங்கா அவளின் வலது உள்ளங்கையை, தன் இடது கையால் வருடிய படியே… “ம்… சக்தி ஏன் ஊட்டில போய் படிக்கிற…. “ என்றான் ஒரே கேள்வியாக.
சக்தி “ம்…. அது, நான் ஃபோர்த் படிக்கும் போது… சரஸ், அம்மா மாசமா இருந்தாங்க… ரொம்ப வருஷம் கழிச்சி. அப்போ அவங்க பெட்ரெஸ்ட்ல இருந்தாங்க… நான் கொஞ்சம் லோன்லியா பீல் பண்ணிட்டேன் போல… அப்போ என் ப்ரண்ட் அங்க ஊட்டி போய் படிக்கிறேன் சொன்னாளா… நானும் கூட போறேன்னு அழுது… ஆர்பாட்டம் செய்து போயிட்டேன்.
அப்பா விடவேயில்ல… சரஸ் அம்மாவும் அழுதாங்க… ஆனா, எனக்கு அப்போ என்னமோ பீல், அதான் போயிட்டேன்… ஆனா, அந்த குழந்தை பிறக்கும் போது ஏதோ சிக்கல்… அது கிடைக்கலை அவங்களுக்கு. அப்புறம் கொஞ்சநாள்.. என் கூட ஊட்டில வந்து வீடு வாங்கி இருந்தோம்…
அப்புறம்.. ரெண்டு வருஷம் கழிச்சி… நான் திரும்பவும் ஹாஸ்ட்டல் போயிட்டேன்.. அப்பா அம்மா இங்க வந்திட்டாங்க…
நான் அங்க… எனக்கு நிறைய ப்ரண்ட்ஸ்… அப்படியே பழகிடுச்சி… அப்பா, இங்க இஞ்சினியரிங் படின்னு கூப்பிட்டாங்க… ச்சு… எனக்கு அங்க செட் ஆகிடுச்சி… அதான் வரல… ஹாஸ்ட்டல்… ப்ரண்ட்ஸ்… இப்போ, காலேஜ்… வீடு… எப்போவாது.. ஷாப்பிங்… சூப்பரா இருக்கும்.. வேற பெரிய ரீசன் ஏதுமில்ல….” என்றாள். உடனே நினைவு வந்தவளாக “நான் B.A இங்கிலீஷ்… எடுத்திருக்கேன்… “ என்றாள்.
“ம்…. அப்போவே தனியா போயிட்ட…. ச்சு… இங்கேயே படிச்சிருக்கலாம்… நான் பார்த்திருப்பேன்….“ என்றான் சின்ன கிண்டல் குரலில்.
சக்தி தன் கைகளை உருவ முயல… லிங்கா அவளின் கைகளை தனக்குள் இன்னும் இழுத்தான்.. அதில், அவனின் தோளை உரசியது சக்தியின் தோள்… சக்தி “என்ன” என்றாள்.
லிங்கா “ம்… என்ன…” என்றான் அவனும்.
சக்தி சிரித்தாள்… லிங்கா “தொட்டு தாலி கட்டிருக்கேன்..” என்றான்.. அந்த வார்த்தையில் சக்தி சிரித்தாள்..
லிங்கா “அ…அது.. மலையா… வெள்ளியங்கிரியா..” என்றான் எங்கோ இருளை பார்த்து.
சக்தி “ம்… சூப்பரா இருக்குல்ல… அப்படியே ஜில்லுன்னு இருக்கும்… எப்படி மேகம் போகுது இல்ல…“ என்றாள்.. இருளுக்கு இப்போது பழக்கப்பட்டிருந்தது விழிகள். அதில் அந்த காட்சி தெரிய.. அவள் ஆசையாக சொன்னாள்.
அவளின் ஆவல் பார்த்து “நீ, அதுல ஏறியிருக்கியா…” என்றான்.
[the_ad id=”6605″]
சக்தி “ம்கூம்….” என்றாள் ஏக்கமாக.
“நான் ஏறி இருக்கேன்” என்றான் லிங்கா சிறுபிள்ளையின் குதூகலத்துடன்.
“ம்… அப்படியா எப்போ…” என்றாள் ஆச்சிரியமாக.
“அது… டுவெல்த் முடிச்சி… லீவில்… அப்பா திட்டி தீர்த்தார்… போகாதடா… போகாத டான்னு.. நான் கேட்கலை.. வரும் போது கைய உடைச்சிக்கிட்டுதான் வந்தேன்…” என்றான் லேசாக சிரித்தபடி…
சக்தி “ஏன்… போக கூடாது…” என்றாள்.
“இல்ல சக்தி, நாங்க பசங்க எல்லாம் சேர்ந்து போனோம் ஒரு பன்னிரெண்டு பேர்… கைடு யாரும் வைக்காம போனோம்… அதுக்கு கோவம்… அவருக்கு… ஆனா, சூப்பரா இருந்தது…
சித்ரா பௌர்ணமி அப்போதானே எல்லோரும் போவாங்க, நாங்களும் கிளம்பினோம்… விடிய விடிய மலை ஏறினோம்… ஏறும் போது பெரிய மூங்கில் குச்சி எல்லோரும் வச்சி இருந்தாங்க… நாங்க அதெல்லாம் எடுக்கல… அப்படியே தில்லா போனோம்….
ஆனா, இறங்கும் போது… அது வேணும் போல… இடறி விட்டுடுச்சி… என்னை… உருண்டு விழுந்து அடி, கையில். அப்படியே வலியோட இறங்கி வந்தேன்… நேர ஹாஸ்பிட்டல்தான்… அப்பாதான் பேசவேயில்லை… ஹா…ம்….. லிங்கா பொதுவாவே வில்லன்தான் எல்லோருக்கும், இப்போ உனக்கு கூட அப்படிதானே..” என்றான் சட்டென… ஒரு புரியாத குரலில்.