சக்திக்கு தூக்கிவாரி போட்டது “அ… அது… அப்படி இல்லங்க…. எ… எனக்கு இன்னும் உங்களை புரியலை… என்ன சொல்றது தெரியலை… “ என்றாள்.. சற்று தடுமாற்றமாக.
லிங்கா “ஹேய்… விடு… நான் ஹீரோதான்…. அதுவும் இந்த சக்திக்கு நான்தான் ஹீரோ… சரி அத விடு…. அங்க விடிகாலையில்… போனோம் பாரு… அப்படி ஒரு அமைதி… அத்தோட… ஏதோ… ஒரு அமானுஷ்யம்… அது தெய்வ சக்தியா இருக்கலாம்ன்னு இப்போ தோனுது…. அப்போ, அது ஒரு த்ரில் மாதிரி இருந்தது….
புல்லா… மேகக்கூட்டம் அப்படியே மெத்துன்னு… அங்க அந்த காலையில்… அங்கிருந்தவங்க… சங்கு ஊதினாங்க…. ஹாவ்…. அந்த சத்தம்… அப்படி ஒரு த்ரில்…. ஒரு நிமிஷம் நாங்க எல்லோரும் நின்னுட்டோம்… மனித காலடிகள் அதிகம் படாத மலை… அவ்வளோ சுத்தமான காற்று…. வேற பீலீங்… சக்தி.
அத்தோட…. நாங்க எல்லாம் செம டயர்டு…. அந்த மேக கூட்டத்தை பார்த்ததும்… பஞ்சு மெத்தை மாதிரி தெரிஞ்சது… ஹ.. ஹா….. அப்படியே படுத்து தூங்கிடலாம்ன்னு. பசங்க எல்லாம்… ‘நேர பரலோகம்தான் டா…’ என ஒரே சத்தம்…
ஹா…. ஹா…. அங்க… எங்களோட சத்தம்தான் கேட்டது அந்த இடத்தில்… மத்த எல்லோரும் அமைதியா த்யானம் செய்தாங்க…. நாங்க ஜாலியா பேசி.. அரட்டை அடிச்சு…. ஒருத்தரோட ஒருத்தர் விளையாடி… செமையா இருந்தது…” என சொல்ல… சொல்ல.. அவனின் முகம் கனிந்து இருந்தது…
சக்தியும் “மேக மூட்டம் அப்படிதானே இருக்கும்… நாங்க சில சமயம்… தொட்டபெட்டா போகும் போது அந்த ரோடே அப்படிதான் இருக்கும்… டிசம்பர் மாசத்தில்… அப்படியே ஜில்லுன்னு…” என அவளின் உடல் சிலிர்க்க.. அது அவனையும் ஒட்டிக் கொண்டது… அவளுள் ஓடிய சிலிர்ப்பு இவனை தாக்க… லிங்கா அவளையே பார்த்திருந்தான்.
பின் லிங்கா “என்ன பண்ணுவீங்க ஹாஸ்ட்டலில்… ஒரே போர்… இல்ல…” என்றான்.
[the_ad id=”6605″]
சக்தி “டைம் அவ்வளவா இருக்காது… படிப்பு முடிச்சி ஏதாவது மியூசிக், கராத்தே, ஹார்ஸ் ரைடிங் எல்லாம் கத்துக்கணும்… அதுக்கே டைம் சரியா இருக்கும்.. அப்புறம் ப்ரீ டைம் கொடுப்பாங்க.. அதுதான் எங்களோட கோல்டன் டைம்… தமிழ் தெரிஞ்சவங்க.. எல்லாம் சேர்ந்து ஒரே பாட்டுதான் அப்போ…. சூப்பரா… எல்லாம் சத்தமா… பாடுவோம்… வார்டன் ஏதும் கேட்கமாட்டாங்க….” என்றாள் சந்தோஷ சாயலில்.
லிங்கா “ஹேய்… பாடுவியா… “என்றான்… அவளிடமிருந்து விலகி… கீழே, தன் கையை ஊன்றி, அவளை பார்த்து படுத்தபடி.
சக்திக்கு சிறுபெண்ணாக குதுகலம் வந்தது… தன் கணவன் பேச்சில்… “ம்… வயலின் கூட ப்ளே பண்ணுவேன்…” என்றாள்.
லிங்கா “அஹ்… சூப்பர்…. எப்படி” என்றான்.
“இப்போதானே சொன்னேன்… ஸ்கூல்ல கத்துக்கிட்டது… அப்புறம் இப்போ, அங்க மாஸ்டர் வரசொல்லி படிக்கிறேன்…” என்றாள்…
லிங்கா “எங்க, வாசி…” என்றான்.
“ச்சு…. அர்த்த ராத்திரியிலா…. எல்லோரும் என்ன நினைப்பாங்க… அத்தோட… இங்க இல்லை… எல்லாம் ஊட்டில இருக்கு…” என்றாள்.
லிங்கா இப்போ நிமிர்ந்து படுத்துக் கொண்டான் “அப்போ பாடு…” என்றான்.
“லிங்கா….” என்றாள் சினுங்கலாக… அது அந்த சினுங்கல் லிங்காவிடம் ஏதோ சொல்ல…
லிங்கா “ப்ளீஸ்… ப்ரியா… ஒரு பாட்டு மட்டும்” என்றான் கிறங்கிய குரலில்..
“ம்கூம்…. நோ… இப்போ எல்லாம் முடியாது… நைட்ல வேண்டாம்…” என சொல்ல… கேட்டால் அது லிங்கா அல்லவே… எழுந்து அமர்ந்தான் “இரு நான் பாடறேன்… என் கூட நீ பாடற…” என்றான்… ஆசையாக.
“நோ… நோ…” என சொல்ல அவளின் கைகளை பிடித்துக் கொண்டவன்… அவளின் நீட்டியிருந்த கால்களில் படுத்துக் கொண்டான். சக்தி பேச்சு மூச்சு இல்லாமல் தன்னவனையே பார்க்க…
லிங்கா “நான் முதல் முதலில் கேட்கிறேன் செய்ய மாட்டியா” என்றான் ஏக்கமாக. அவளின் எந்த அணு… இந்த கோரிக்கையை மறுக்கும்… சக்தி “ஹம்…” என தன்போல் வாய்மொழியில் சம்மதம் சொல்லியது அவளின் மனம்.
சக்தியின் அந்தரத்தில் தொங்கிய, கைகளை.. தன் கைகளுடன் பிணைத்துக் கொண்டவன்… அவளின் கண் பார்த்து பாட தொடங்கினான்…
“ம்…. என் இனிய பொன் நிலாவே….
பொன் நிலவில் என் கனாவே…
நினைவிலே ஒரு சுகம்..
தர தரா.. தரா..
தொடருதே தினம் தினம்…
தராதர… தராரே….”
என ஆரம்பிக்க… அவள் இன்னும் உடன் இணையவில்லை…
லிங்காவின் உரிமை அதிகமாகியது… “ம்…. ப்ரியா…. “ என்றான்.
இப்போது மந்திரமா.. மகுடியா… என தெரியாமல் கண்டுண்டாள் பெண்..
இருவருமாக “பன்னீரை தூவும் மழை…
ஜில்லென்ற காற்றின் அலை…
சேர்ந்தாடும் இன்நேரமே…
என் நெஞ்சில் என்னென்னமோ..
வண்ணங்கள் ஆடும் நிலை…
என் ஆசை உன்னோரமே…
வெண்ணீல வானில்… அதில் என்ன என்ன மேகம்…
ஊர்கோலம்போகும்… அதன் உள்ளாடும் தாகம்…
புரியாதோ என் எண்ணமே…. அன்பே….” என ஒரே மூச்சில் இருவரும் முடிக்க…
லிங்கா “சூப்பர்… ப்ரியா…” என்றான்.
[the_ad id=”6605″]
சக்தி “என்ன ப்ரியாவா…. என் ஸ்கூல் ப்ரிண்ட்ஸ் எல்லோரும் இப்படிதான் கூப்பிடுவாங்க…” என்றாள் சகஜ குரலில்.
லிங்கா “ம்..கூம்…” என்றவன் அமைதியாக இருந்தான்.. இப்போது சற்று நேரம் அமைதி இருவருக்குள்ளும்.
மீண்டும் லிங்கா, அவளின் கைகளை பிரிக்காமல்… “ஏன் என்னைபத்தி எதுவுமே கேட்கல… “ என்றான்.
சக்தி “நீ….நீங்களே சொல்லுவீங்கன்னு நினைச்சேன்…” என்றாள்.
லிங்கா, பிடிவாதமாக மாறினான்.. முகம் இறுகியது.. “ ம்.. நான் ஜாலியான ஆள்தான்… ஆனா, எல்லா நேரமும் அப்படி இருக்க கூடாதுன்னு இப்போதான் புரியுது… சக்தி.. ம்… ரொம்ப நாள் போயி இப்போதான் இப்படி… ஈஸியா இருக்கேன்… இப்போ எல்லாம் அம்மு கிட்ட கூட சரியா விளையாட முடியலை… ஏதோ… உறுத்தும் அப்போ அப்போ… இன்றுதான்… சக்தி.. இப்படி பழைய லிங்கா… தேங்க்ஸ் சக்தி..” என்றான் எங்கோ வெறித்தபடி.
சக்திக்கு அவன் மொழி புரிகிறது… அவனின் சட்டென்ற உரிமை… தொடுதல் எல்லாம்.. ஈர்த்தாலும்.. கொஞ்சம் பயத்தையும் கொடுத்தது… இப்போது இந்த வார்த்தைகள் ஏதும் புரியவில்லை என்றாலும்… தன்னிடம் அவன் காட்டும் உரிமையை ஏற்றுக் கொண்டது… புது மனையாளின் மனம்.
மெல்ல அவன் கைகளிடமிருந்து தன் கைகளை விடுவித்துக் கொண்டு… அவன் தலை கோதினாள் இயல்பாய்… கணவனாக அருகில் வர நினைக்கிறான் என புரிந்தது அவளுக்கு… அதை எதிர்பார்த்தும் இருந்தாள்.. அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்…
அந்த பார்வையும் அவளின் விரல் வழி வந்த.. வாஞ்சையும்… லிங்காவை திடப்படுத்தியது… திடமானக் குரலில் “நா…. நான் ஒரு பெண்ணை… விரும்பினேன்…” என்றான். அவள் முகம் பார்க்கவில்லை அழகாகத் தவிர்த்தான்.. ஆனால், சக்தி அவன் முகத்தை மட்டுமே பார்த்திருந்தாள்.
அவனே தொடர்ந்தான் “சாரி… அது எப்பவோ நடந்தது…. என்மேல்தான் தப்பு… அதுக்காக… அதே நினைப்பில் இருக்கேன்னு நினைக்காத…” என்றான் தன்னை அவளுக்கு நிருபிக்கும் கணவன் குரலில்…
[the_ad id=”6605″]
அவளிடமிருந்து எழுந்தான்… அவளின் முகம் பார்த்து.. தன்னிரு கைகளில் அதனை தாங்கிக் கொண்டான்… “இப்போ பாயின்ட் ஒன்.. பெர்சென்ட் கூட அந்த நினைப்பு எனக்கு இல்ல… அது.. அது.. அந்த இடத்தில் விட்டுட்டேன்…” என்றவன் காற்றில் ஆடிய அவளின் முடிகளை காதோரம் ஒதுக்கியவன்… “எதுவும் கேட்டிடாத… இதுக்கு மேல… யாரு, என்னன்னு அது அவ்வளோதான்.
இப்போ.. இது நிஜம்… எனக்கு இது பிடிக்குது… நான் இதுக்குள்ள வந்துட்டேன்… உ…உனக்கு எப்படின்னு தெரியலை… ஆனா… பிடிக்க வைப்பேன்… “ என்றவன் தன்னுடைய கட்டுப்பாட்டையும் மீறி… அவளின் இதழில் சிறு முத்தம் வைத்திருந்தான். மீண்டும் அவளின் மடியிலேயே படுத்துக் கொண்டான்.. பிரசவ வேதனை… இப்போதுதான் தீர்ந்தது அவனின் வலிகள்.
சக்தி சற்று தன்னை நிலைப்படுத்திக் கொள்ள முயன்றுக் கொண்டிருந்தாள்.. ஏதோ ஒன்றை எதிர்பார்த்திருந்தாள்.. அதனால் பெரிய தாக்கம் இல்லை என்றாலும்.. தன் கணவன் வாய்மொழியாய் கேட்கும் போது.. கொஞ்சம் வலிக்கவே செய்தது.
லிங்கா நகர்ந்தும் செல்லவில்லை… நீ நகர்ந்து போ என அவளும் சொல்லவில்லை.. அப்படியே இருந்தனர் இருவரும்.
சக்தி அமர்ந்தே இருந்தாள்.. ஏதும் பேசவில்லை.. லிங்கா “வா சக்தி உள்ளே போலாம்… காற்று ரொம்ப அடிக்குது..” என தானும் எழுந்து கொண்டு.. அவளுக்கும் கை கொடுத்து நிற்க… மெல்ல நிமிர்ந்து பார்த்தாள்…
லிங்கா “ஏன்… இன்னும் நம்பிக்கை வரலையா…” என்றான்.
இப்போது சக்தி அவன் கை பற்றி எழுந்து கொண்டாள்… கண்கள் அவனையே பார்த்திருந்தது… என்ன சொல்லுவாள் அந்த சின்ன பெண்… ஏதேதோ செய்திகள், எல்லாம் தெரிந்தவள்.. தன் தோழிக்கு, அவர்களின் சொந்தங்களுக்கு.. என எல்லோரின் கதைகளும் தெரிந்த… இன்னும் படிப்பு கூட முடிக்காத சிறு பெண்… கணவன் ஏதேதோ சொல்லுகிறான்… நம்பிக்கை என்கிறான்… பிடிக்க வைப்பேன்.. என்கிறான்… என்ன சொல்லுவாள்… அவளின் அத்தனை குழப்பத்தையும்… புரியாத பாவத்தை முகத்தில் காட்டி… அவள், நிற்க…
லிங்காக்கு அதை பார்த்ததும் உருகி போயிற்று “சாரி… சாரி… இந்த அழகான பெண்ணை இப்படி குழப்பிட்டேனோ… விடு…” என்றவன் அவளை அப்படியே கைகளில் அள்ளிக் கொண்டான்.. அவளும் பாந்தமாக அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள் “உன்னை ரொம்ப படுத்தறேனோ… லிங்கா கொஞ்சம் நல்லவன்.. அதுவும் சக்திக்கு ரொம்ப நல்லவன்… “ என சொல்ல.. சக்திக்கு லேசாக இப்போதுதான் சிரிப்பு வந்தது. அந்த இரவு லிங்காக்கு தெளிவாகவும்.. சக்திக்கு குழப்பமாகவும் சென்றது.