தாழம்பூ வாசம் நீ…..
25
லிங்காக்கு அதிகாலையே விழிப்பு வந்துவிட்டது… லேசான மென்னகையுடன் விழித்தான் லிங்கா. அவனின் தோளில் மனையாளின் ஆனந்த சயனம். அவளை அப்படியே பார்த்தவன் தன் மற்றொரு கையால், அவளின் புருவ வளைவை வருடினான்… சுடுவது போல் இருந்தது அவனுக்கு.
நெற்றி, கழுத்து என கைகள் வைத்து பார்த்தான். சூடு தெரிந்தது. மணி ஐந்தரை… எழுந்து தன்னை ரெப்ரெஷ் செய்து கொண்டு கீழே சென்றான்.. அவனின் அன்னை அப்போதுதான் குளித்து வந்து பாலை அடுப்பில் வைத்திருந்தார்.
லிங்கா ஒரு ஷார்ட்சுடன் வந்தான்… “காமாட்சி… ரெண்டு காபி” என்றான் அந்த மேடையில் ஏறி அமர்ந்தபடி, குரல்தான் சத்தமாக வந்தது.. முகம் மென்மையாக இருந்தது.
அன்னை பார்த்துவிட்டு.. இன்னொரு அடுப்பில்… ஏதோ பாசி பருப்பை வறுக்க தொடங்கினார்.
மகன் வம்பு செய்ய தொடங்கினான் “பதிலே சொல்லமாட்டியா நீ… சீக்கிரம் கொடு… ரெண்டு காபி” என்றான் மீண்டும் அதிகார குரலில்.
“என்ன டா, அதிகாரம் தூள் பறக்குது…. “ என்றார்.
“என்ன “ என்றான் அவனும்… அந்த பருப்பை வறுத்தபடி..
அன்னை டம்பளர் எடுத்து… சர்க்கரை போட்டு.. என ஏதோ செய்து கொண்டிருந்தார்… “ம்மா… அவளுக்கும் தா….” என்றான்.
“கீழ வரட்டும் டா… என்னமோதான்…” என்றார்.
“இல்ல அவளுக்கு சுடுது.. முடியலை போல… தூங்கறா” என்றான்.
“ஏண்டா என்ன ஆச்சு… இன்னிக்கு அங்க ஊட்டிக்கு போறேன்னாளே… கிளம்பிட்டா நினைச்சேன்… அதான் உக்கர(ரை) பண்ணலாம்ன்னு… இருந்தேன்” என்றார் படபடப்பாக.
லிங்கா “என் பொண்டாட்டி ஊருக்கு போறது உனக்கு அவ்ளோ கொண்டாட்டமா… ஸ்வீட் பண்ற” என்றான் எப்போதும் போல விளையாட்டு குரலில்.
காமாட்சி “டேய்… நல்ல முடியறடா சிண்டு…. ஏதோ புள்ள முதல் முதலா போகுதே… ஸ்வீட் செய்து கொடுப்போம்ன்னு… செய்தா… போடா… போ… காலையில் நான்தான் கிடைச்சேனா… இந்தா காபி, கிளம்பு… மாத்திரை… அங்க.. டிவி டிராவ்ல இருக்கு… போ.. போ இடத்தை காலி பண்ணு..” என்றார்.
அவன் “சமத்து… ஆனா, ஸ்வீட் மறந்திடாம செய்திடு… எனக்கு சாப்பிடனும் போல இருக்கு…” என்றான்.
“இரு இத அவகிட்ட சொல்றேன்…” என்றார் அவரும் இவனுக்கு அம்மாவாக.
“ம்.. ம்.. சொல்லு… சொல்லு… அப்புறம் என் பொண்டாட்டிய கூட்டிட்டு தனி குடுத்தனம் போய்டுவேன் பார்த்துக்க..” என்றான்.
“ப்பா… கிளம்பு டா தம்பி, கிளம்பு… எப்போ போறேன்னு சொல்லு… அந்த, அங்க மெயின்ல இருக்கிற வீட்டை ரெடி பண்ணி தரேன்” என்றார்.
“ம்… ஒரு ரெண்டு புள்ள பிறக்கட்டும் போயிடுறேன்” என்றான்.. மாத்திரையை எடுத்தபடி.. இதெல்லாம் ஹாலில் அமர்ந்தபடி மூர்த்தி, கேட்டுக் கொண்டிருந்தார்.. நியூஸ் பார்த்தபடி.
மகன் மாத்திரை எடுக்கவும்.. “என்ன டா என்னாச்சு “ என்றார்.
[the_ad id=”6605″]
“அவளுக்குத்தான் லேசா உடம்பு சுடுதுப்ப்பா.. அதான், ஒரு பேராசிட்டமல் கொடுக்கலாம்ன்னு வந்தேன்” என்றான் பொறுப்பாக.
தலையசைத்து டிவி பார்க்க தொடங்கினார் மூர்த்தி.
மேலே சென்றான்.. இன்னும் சக்தி உறக்கத்தில் இருந்தாள்.. மீண்டும் தொட்டு பார்த்தான்.. சூடு தெரிந்தது “சரியான பயந்தாங்குளி… என் மானமே போகுது இவளால…” என சொல்லி சிரித்துக் கொண்டான்.
“சக்தி.. சக்தி…” என்றான். ஏனோ அவ்வளவு மென்மை அத்தனை குழைவு… அவனின் குரலில்..
மெல்ல… “ம்.. “ என சொல்லி திரும்பி படுத்துக் கொண்டாள்… சக்தி.
புதிதாக இருந்தது லிங்காக்கு… இந்த அழைப்பும்.. இவளின் தூக்கமும்… “ப்ரியா…” என்றான்.
இப்போது.. நிமிர்ந்து பார்த்தாள்… லேசாக அவளின் கண் சிவந்திருந்தது.. அவளுக்கே தெரிந்தது, உடலெல்லாம் வலிப்பது போல் இருக்க.. கணவனின் பார்வையும் குறுகுறுக்க… “ஐயோ மணியாச்சா…” என அவசரமாக எழுந்தாள்.
பிடித்துக் கொண்டான் கணவன் “எதுக்கு மணியாச்சு” என்றான்.
”நான் இன்னிக்கு ஊருக்கு போகனும்..” என்றாள்… கோவமாக.
“எது… அந்த இங்கிலிபிசு.. படிக்கவா…” என்றான்.
என்ன சொல்லுவது என தெரியாமல்… அவனிடமிருந்து கையை விளக்கிக் கொண்டு நடந்தாள்.. பாத்ரூம் நோக்கி. லிங்கா சிரித்தான்.
வந்து காபி குடித்து… அந்த மாத்திரையையும் போட்டுக் கொண்டு அமர்ந்திருதாள்..
லிங்கா “தூங்கு சக்தி…” என்றான் அவளின் தலை கோதி.
தயக்கமாக அமர்ந்திருந்தாள்… லிங்கா பொறுமையாக, தன்னிடம் சாய்த்துக் கொண்டு “இங்க பார் அடுத்த வாரம் போகலாம்… இன்னிக்கு வேண்டாம்… எனக்கு பார்ட்டி இருக்கு… திங்க கிழமை முக்கியமான வேலையிருக்கு.. கம்பெனியிலும் வேலை நிறைய இருக்கு… அடுத்த வாரம் நானும் வரேன்.. ஒரு டூ டேஸ்… உன் கூடத்தான்… ஒகே வா… ” என்றான்.
“ஐயோ வேண்டாம்…. இ.. இப்போ இதெல்லாம் வேண்டாங்க… “ என்றாள் தயக்கமாக.
லிங்கா “என்ன…” என்றான் கொஞ்சம் சுருதி ஏறி.
“அதான்…. எனக்கு படிப்பு முடியட்டும்… ப்ளீஸ்.” என்றாள்.. முகம் அவனின் பதிலை எதிர்பார்த்து இருந்தது.. மறுத்து விடுவானோ என சற்று பயமும் அதில் தெரிந்தது போல.
அவள் என்ன சொல்லுகிறாள் என புரிந்தவன்.. அவளின் முகம் பார்த்து தழைந்தான் “ம்… சரி.. ஆனா, கொஞ்சம் சேஃபா… ஓகேவா…” என்றான். சக்திக்கு என்ன சொல்லுவது என தெரியவில்லை.. தயங்கிய படியே அமர்ந்திருந்தாள்.
லிங்கா அவளை சரித்துக் கொண்டு கட்டிலில் சரிந்தான்.. “சுடுதுடா… டயர்டா இருக்க… ஏன்… இதெல்லாம் யோசிக்கிற, அதுகெல்லாம் நான் இருக்கேன்… உனக்கு என்ன வேணும்ன்னு மட்டும் சொல்லு… நடக்கும்… சும்மா சும்மா முகத்தை தூக்காத….” என்றான்.
சக்தி “நீங்க மட்டும் ஜெர்மன் போய் படிச்சீங்க… நான் ஒரு மாஸ்டர் டிகிரியாவது முடிக்க வேண்டாமா… எங்க அப்பா கிட்ட கேட்டேன்… அதெல்லாம் மாப்பிள்ளை நல்லவர் வல்லவர்ன்னு சொன்னாங்க எங்க அப்பா.. நீங்க என்னமோ…” என்றாள் சினுங்களாக.. தொலைந்தான் லிங்கா அதில்.
தன் மாமனார் மேல் செல்ல கோவம் கூட வந்தது ‘அதெல்லாம் நீங்க சொல்ல கூடாது’ என செல்ல கோவம்தான். ஒரு பெருமூச்சு விட்டு “சரி டி.. சரி… பார்க்கலாம்… இந்த ஒரு வாரம் போயிட்டு வந்திடு… அப்புறம் பார்த்துக்கலாம்.. “ என்றான்.
மனையாள் “அதெல்லாம் முடியாது… நான் அங்கதான் இருப்பேன்… வீக்கென்ட் வேண்ணா ட்ரை பண்றேன்… ட்ராமா, அது இதுன்னு எனக்கு வேலையிருக்கு…” என்றாள்.
[the_ad id=”6605″]
லிங்கா “ஏது… இந்த பாஸ்ட் டென்ஸ்… ஷேக்ஸ்ப்பியர்… ஸிமித்… இவங்களதானே படிக்க போற… அதுக்கு எதுக்கு டி.. இவ்ளோ பில்டப் பண்ற.. இதெல்லாம் இப்போ எட்டாங் கிளாஸ் பிள்ளையே படிக்குது… நான் கூட வேற ஏதாவது வெயிட்டா படிப்பான்னு நினைச்சேன்…” என அவளை சீண்டினான்.
சக்தி ‘பே… பே..’ என விழி விரித்து பார்த்தாள்.. அவனின் பேச்சுக்கு. என்ன பதில் சொல்லுவது என தெரியவில்லை மனையாளுக்கு.
லிங்காக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை ‘கடவுளே இந்த அப்பாவிய எனக்கு கொடுத்ததுக்கு நன்றியோ நன்றி…’ என சொல்லிக் கொண்டு அவளை அனைத்து படுத்துக் கொண்டான்.
அப்படியே பேசியபடியே… இருந்தனர் எப்போது உறங்கினறோ… நல்ல உறக்கம் இருவருக்கும்.
மீண்டும் யாரோ போனில் அழைக்கும் சத்தத்தில்தான் சக்தி கண் விழித்தாள். கணவனை எழுப்பி.. போனை பார்க்க செய்தாள். அவசரமாக தான், குளிக்க சென்றாள்.
காவ்யாதான் அழைத்திருந்தாள். அம்மா பயப்படறாங்க.. அண்ணிக்கு பரவாயில்லையா.. என கேட்டாள். “ம்…வரோம்” என சொல்லி வைத்தான் லிங்கா.
இருவரும் குளித்து கிளம்பினர்… சக்தி சோர்ந்து தெரிந்தாள்… மற்றபடி ஏதும் மாற்றமில்லை அதை பார்த்த காவ்யா “அண்ணிக்கு, அண்ணன விட்டு போக மனசில்ல.. அதான் காய்ச்சல் “ என்றாள் கிண்டலாக.
லிங்காக்கு அவனின் சென்னை நண்பர்கள் அழைத்திருந்தனர்.. “மச்சி கிளம்பிட்டோம்” என. அதில் மும்முரமாக பேசிக் கொண்டிருந்தான் லிங்கா.
சக்திக்கு காவ்யாவின் கேலியில் முகம் சிவந்தது… மெல்ல அங்கிருந்து நழுவி.. கிட்சென் சென்றாள்.. அங்கே லதா.. “என்ன ம்மா… நைட் டுயூட்டியா..” என வேலையை பார்த்தபடி சத்தமே இல்லாமல் கேட்க… சக்தி இன்னும் இன்னும் சிவந்தாள்.
காமாட்சி “சாப்பிடுங்க ரெண்டு பேரும்… எங்க அவன்” என்றார். சக்தி பதில் சொன்னாள். மாமியார் “ம்.. ஹாட்பாக்ஸில் சாப்பாத்தி இருக்கு எடுத்து வை… இப்போதான் உள்ள வைச்சேன்..” என எடுத்து வைக்க செய்தார். சக்தி எல்லாம் செய்து… கணவனை அழைத்து வந்தாள், இருவரும் உண்டனர்.
சக்திக்கு சங்கடமாக இருந்தது லிங்காவுடன் உண்ண.. எப்போதும் அவள் மாமியார் லதா என அவர்களுடன்தான் உண்ணுவாள். இன்று லிங்காவுடன் எனவும் தலையை நிமிர்த்தாமல் உண்டாள்.
காமாட்சி அவன் போனை வைக்கவும் வந்தார் “ஸ்வீட் போட்டுக்கோடா… உக்கர(ரை)… நீ சாப்பிடனும் போல இருக்குன்னு சொன்னியே” என்றார் கொஞ்சம் கிண்டலாக.
லிங்கா “ஏன் ம்மா, அவளுக்கே உடம்பு சரியில்ல.. இப்போ போய் ஸ்வீட் பண்ணியிருக்க…” என்றான் நல்லவன்.
காமாட்சி ஒன்றும் பேசாமல் உள்ளே போய்விட்டார். காவ்யா, லதா, சக்தி என யாருக்கும் ஏதும் புரியவில்லை.. லதா “இல்ல லிங்கா… அத்த, சக்தி ஊ” என சொல்ல வர.
லிங்கா “நீங்க சும்மா இருங்க அண்ணி.. உங்களுக்கு தெரியாது..” என்றான் வேண்டுமென்றே.
பின் “காமாட்சி… பதில் சொல்லு.. இன்னிக்கு யாருக்காவது பிறந்தநாளா… இல்ல ஏதாவது பண்டிகையா… சக்திக்கு முடியலைன்னு தெரியுமில்ல எதுக்கு இப்போ ஸ்வீட்” என்றான்.
காமாட்சி “எனக்கு எப்படி தெரியும்” என்றார்.
“காலையில் நான்தான் வந்து காபி மாத்திரை.. எல்லாம் வாங்கிட்டு போனேனே.. நீதானே கொடுத்த…” என்றான். காமாட்சி அப்போவாது மகன் உண்மையை சொல்லுவான்னு பார்த்தார்.. இப்போதும் பாதியில் நிறுத்தி.. அவரிடமே திருப்பினான் மகன்.
மூர்த்தி வந்தார் சரியான நேரத்திற்கு.. எல்லோரும் லிங்காவை பார்க்க.. காமாட்சி உக்ரமாக நின்று ஏதோ பேசிக் கொண்டிருப்பதை பார்த்து, அங்கு வந்தார். “என்ன காமாட்சி…” என்றார் அதட்டலாக.
காமாட்சி “பாருங்க உங்க மகன் பண்ற வேலையை.. சக்தி கல்யாணம் ஆகி முதல் முதலா ஊருக்கு போறா.. ஏதாவது ஸ்வீட் செய்து கொடுத்தா.. பிள்ளைகள் எல்லாம் சாப்பிடும்ன்னு… நினைச்சி… செய்ய போனேன்.. காலையில்..
இவன் அப்போதான் இறங்கி வந்தான். அவளுக்கு காய்ச்சல்ன்னு வந்து சொன்னான்… அப்போவே நான் அடுப்ப நிறுத்திட்டேன்.. இவன் எனக்கு வேணும்ன்னு சொன்னான்.. அதான் செய்தேன். இப்போ வந்து எதுக்கு… நீ ஸ்வீட் செய்தேன்னு கேட்கிறாங்க… “ என்றார்.
மூர்த்தி சிரித்தார்… இவன் விளையாடுகிறான் என சிரித்து அந்த பக்கம் சென்றார் “என்னவோ பண்ணு டா” என்றபடி.
லதா வாயில் கை வைத்துக் கொண்டு அந்த பக்கம் போய் சிரிக்கத் தொடங்கினாள்.
காவ்யா “சகுனி டா அண்ணா நீ, சரியான சகுனி. நானே பயந்துட்டேன்… அண்ணி.. நல்லா கேளுங்க.. எனக்கே முடியல.. உனக்கு எதுக்கு ஸ்வீட்ன்னு கேளு சக்தி…” என்றாள். மரியாதையை விட்டு விட்டு.
சக்தி இப்போதுதான் நிமிர்ந்து முறைத்தாள் தன் கணவனை.
காமாட்சியும்… “போடு சக்தி.. அவனை ரெண்டு போடு… எப்படி படுத்தறான் பாரு… அம்மாக்கு அடங்காத பிள்ளை… பொண்டாட்டிக்காவது அடங்கட்டும் போடு சக்தி… அவன் முதுகில் போடு ரெண்டு…” என தான் வைத்திருந்த கரண்டியை கொடுக்க வந்தார்…
சக்தி சிரித்தாள்.. கொஞ்சம் சத்தமாக. முறைக்க முடியவில்லை அந்த நொடிக்கு மேல்.. லிங்கா அவளை பார்த்து கண்சிமிட்டினான்.
மீண்டும் தன் அன்னையிடம் “கண்டிக்க ஆளில்லாம தான், இப்படி ஆகிட்ட நீ… அம்மா.. பொண்டாட்டிய விட்டு பிள்ளைய அடிக்க சொல்றது எல்லாம் பாவம்” என்றான் சிரியாமல்.
“ப்பா.. கொஞ்ச நேரத்தில்.. எப்படி டா இப்படி பேசற…” என்றார் சலித்தபடி அன்னை.. அவனைபற்றி தெரியும் என்றாலும், வந்த பெண் சட்டென மனதில் ஏதாவது நினைத்து விட்டாள் என்ன செய்து என பயம் அவருக்கு.
லிங்கா “ஆமாம் எங்களுக்கும் டைம் பாஸ் ஆக வேண்டாமா… இந்த சீரியல்ல வரா மாதிரி சண்டையெல்லாம் போட மாட்டீங்களா… எப்போ பார்த்தாலும் கூடி கூடி பேசி சிரிச்சிக்கிட்டு.. போர் ஹவுஸ்… போரிங் பீப்பிள்…” என்றான் m.r.ராதா குரலில்.
ஸ்வீட் உண்டான்.. காவ்யாதான் பரிமாறினாள்.
கலாட்டாக்கள் முடித்து.. கை கழுவி வந்தான்.
தாமு போன் செய்தார்.. லிங்காக்கு. ‘சக்தி கிளம்பிட்டாளா… அங்கு தோட்டத்தில்தான் பார்ட்டி ஏற்பாடு.. எனவே அங்கே போகலாம்’ என்றார். சக்தியின் போனில்தான் அழைத்தார். அவள் எடுத்துவரவில்லை. எனவே மாப்பிளைக்கு அழைத்தார்.
“வாங்க அங்கிள்.. அத்தையை கூட்டி வாங்க… சக்திக்கு உடம்பு முடியலை.. அவ எங்கேயும் போகல.. நீங்க இங்க வாங்க சேர்ந்தே போலாம்…” என்றான்.
அப்படியே ஹாலில் அமர்ந்து இருந்தான்.. போன் பேசிக் கொண்டிருந்தான்.
இன்னும் பெண்களிடம் லிங்காவின் பேச்சு ஓடிக் கொண்டிருந்தது. மெல்ல எட்டி பார்த்தான் சக்தி அமர்ந்திருக்க.. லதா காவ்யாவும் அமர்ந்து ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்.
லிங்கா “அண்ணி, இளா.. பார்ட்டிக்கு வருவேன்னு ஒரே அடம்..” என்றான் சிரிக்காமல்.
லதா “லிங்கா… என் கொழுந்தனாரே.. என் வீட்டுக்காரர் என்கிட்ட முன்னமே சொல்லிட்டார்… என்னை விட்டுடுங்க” என்றாள் சிரித்தபடி.
[the_ad id=”6605″]
லிங்கா மீசையை நீவியபடியே காவ்யாவையும், சக்தியையும் பார்த்தான். எல்லோரும் உள்ளே சென்றனர். அவன் கண்ணில் படாமல்.
சரஸ்வதியும் தாமுவும் வந்தனர். முறையாக நலம் விசாரித்து காபி குடித்து தாமு மாப்பிள்ளையுடன் கிளம்பினார்.
சர்ஸ்வதி.. காவ்யா என எல்லோரும் பேசிக் கொண்டிருந்தனர். இன்று காலையில் நடந்தது பற்றி… சொல்லி சிரித்துக் கொண்டிருந்தனர்.
மெல்ல மெல்ல லிங்காவின் பேச்சு அவர்களிடம் ஓடியது.. “அவன் இப்படிதான் சக்தி.. பேர் சொல்லி கூப்பிடாத டா, அப்படின்னு சொன்னா கேட்கமாட்டான்.. இப்போ.. இப்போ.. தீபக்கும் அவனை பார்த்து பழகுறான்.. நீ ஏதும் மனசில் வைக்காத..” என்றார் மாமியார்.
சக்தி “ஐயோ, இல்லத்த… அப்படி எல்லாம் இல்ல.” என்றாள் பதறி.
சரஸ்வதி மெல்ல காவ்யாவுடன் நகர்ந்தார்.. அவளின் அறைக்கு. அவர்கள் முகத்தை பார்த்தவுடன் தெரிந்தது.. ஏதோ பேச போகிறார் என. எனவே தான் சென்று அமர்ந்தார் வேறு பேச்சு பேசிக் கொண்டு.
அன்று முழுவதும் லிங்காவின் பேச்சு வீட்டில் ஓடியது. அப்படியே இளாவின் பேச்சு… ‘ஏதோ லாஸ்.. பிஸ்னஸ் பிரச்சனை…’ என்றார்கள் சக்தி நிமிர்ந்து லதாவை பார்க்கவில்லை.. லதாக்கு சற்று சங்கடம்தான்.
அப்போதே இருவரையும் பார்த்த மாமியார் “இதெல்லாம் உனக்கு தெரியணும்ன்னு சொல்றேன்.. நம்ம வீட்டு நிலை தெரியனுமில்ல.. அதான், மத்தபடி மனசில் வைச்சிக்க கூடாது…” என்றார் கொஞ்சம் கறாராக. சக்தி தலையை ஆட்டினாள்.
லதா அம்முவை தூங்க வைக்க போகவும்… இளாவின் நிலைக்கு பின், லிங்கா செய்த செயல் பற்றி சொல்லினார் “இளா, நல்லா பொறுப்பா செய்துகிட்டிருந்த பிஸ்னஸ்தான், எங்கையோ.. தவறவிட்டுட்டான். இப்பவும் இளா இல்லாமல் லிங்கா எதுவும் செய்யமாட்டான்…
ம்… அப்போ என்னமோ நேரம் சரியில்ல, தனியாக பொறுப்பெடுத்துக் கொண்டான்.. அதுவரை விளையாட்டு பையன்னு நினைச்சிருந்தேன் சக்தி… அப்படி இல்லைன்னு… காட்டிட்டான். அப்புறம் உன்னை பிடிக்குதுன்னு… வந்து நின்னான் ஒருநாள் காலையில். அதுதான் அவன் எங்ககிட்ட கேட்டது… எப்படி நடத்தி தராம இருப்போம்… நீயும் அமைதியா பொறுப்பா இருக்க… அப்படியே காவ்யா போற இடமும் நல்லவிதமா அமையனும்… ப்பா.. “ என எல்லா சின்ன வேண்டுதலையும் சொன்னார் காமாட்சி.
மீண்டும் தானே தொடர்ந்தார் “இப்போதான், நீ வந்த அப்புறம்தான்… ரொம்ப நாள் கழிச்சி விளையாடுறான்… ஏதோ குறையுதேன்னு.. உங்க மாமனார் கூட சொல்லுவார்… “ என பேசியபடியே தன் மருமகளையும் புகழ்ந்து.. மகனையும் உசத்தி.. அன்னை நிம்மதியானர்.
சக்தி அப்படியே மெய்யுருகி கேட்டுக் கொண்டிருந்தாள்… ஏதோ வேணுகாணம் போல் அவனின் பராக்ரமங்களை கேட்க கேட்க… அவனின் குறைகள்.. எல்லாம் பின்னால் போயிற்று… அவனின் பேச்சுக்களுக்கு ஏதோ அர்த்தம் புரிந்தது… அவனின் சீண்டல் மொழிகள், காதல் மொழிகளாக.. மொழி மாற்றம் கொண்டது… கணவன் என்ற நிலையிலிருந்து காதல் கணவன் என்ற நிலைக்கு போனான் சக்தியின் மனதில் லிங்கா.
“அமுதங்களால் நிறைந்தேன்…. நான்
இதழ் அமுதங்களால் நிறைந்தேன்…
பார்வை போகிற தூரம் நீயின்றி யார் வேண்டும்…
பாவையின் ஊன்உயிர் என்றும் உன்னோடு ஒன்றாகும்…
ஆகாயம் பார்க்கிறதென்று…
மழை கொஞ்சி பேசாதா…
ஆடைக்கும் வேர்க்கிறதென்று…
பனி காற்றும் வீசாதா….
ஒருகரை நீயாக…
மறுகரை… நானாக…
கரைபுரண்டே ஆறாகிறோம்”