தாழம்பூ வாசம் நீ…..
27
அப்போதுதான் உறங்கியது போல் இருக்க… “ப்ரியா… ப்யார்…. எழுந்துக்கோ டா…. “ என அவளை உலுக்கிக் கொண்டிருந்தான் லிங்கா.
சக்தி “ம்… போங்க..” என அவள் சினுங்க… எப்போதும் போல அவளை இறுக்க கட்டிக் கொண்டு முத்தம் வைத்தவன்… “போகலையா, வேண்டாமா…. நீ படிக்க போறேன்னு சொன்ன…. இப்போ கிளம்பினா… உன்னை காலேஜில் விடறேன்… போலாம் டா… மாமா மூடு மாறிடும்… “ என அமர்ந்து கொண்டு அவளை எழுப்பிக் கொண்டிருந்தான் கணவன்.
சக்திக்கு முதலில் புரியவில்லை… மீண்டும்.. கணவனே “சக்தி என்கிட்டே படிக்கிறேன்னு சொன்ன… இப்போ காலேஜ் போகமாட்டேன்னு சொல்ற” என்றான் சற்று சத்தமாக.
சக்தி சற்று புரிந்தும் புரியாமலும் எழ. கணவன் “வா, கிளம்பு… உன்னை… காலேஜில் கொண்டு போய் விடறேன்… வாடா….” என்றான். கொஞ்சம் கொஞ்சம் இப்போதுதான் எல்லாம் புரிய, எழுந்து கொண்டாள். நன்றாக விழிப்பு வந்தது அவளுக்கு.
தன்னுடைய டவல் எடுத்தபடி… சக்தி புலம்பினாள்.. “எல்லாம்… எல்லாம் உங்க இஷ்டம் தான், இப்படி திடீர்ன்னு கிளம்பு அப்படின்னா… நைட் புல்லா தூங்கல… போங்க.. என்னை ரொம்ப படுத்துறீங்க… யோசிக்க விடல, படிக்க விடல, இப்ப தூங்கவும் விடல… “ என ஒரு ஆற்றாமையில் கண்கள் கலங்கியது, அப்படியே பாத்ரூமிற்குள் செல்ல, அவசரமாக வந்து அவளின் இடையை பிடித்துக் கொண்டான்.. கணவன்.
லிங்காக்கு சிரிப்பாக வந்தது, ஆனாலும் அவளின் கலங்கிய முகம் மனதை அசைக்க… ஒன்றும் பேசாமல் அவளின் நீண்ட அந்த கலங்கும் விழியில் முத்தமிட்டான்.. “சீக்கிரம் வா..” என்றான். என்ன சொல்லுவது என் புரியவில்லை.. அவள் சொல்வது சரிதான், ஆனால் அதற்கான பதில் அவனிடம் இல்லை.. எனவே.. அமைதியாக அனுப்பி வைத்தான்.
சக்திக்கு, இன்னும் இன்னும் கோவம் அதிகமாகியது.. அந்த முத்தம் இன்னும் வேண்டும் போல இருந்தது, அந்த குமரிக்கு. சட்டென… குழந்தையிடம் லாலிபாப்பை பிடுங்கியது போல… சொல்ல தெரியாத குழந்தையாக ஒரே அழுகை ‘போடா.. ‘ என தோன்றியது வேகமாக உள்ளே சென்றாள்.
லிங்கா கீழே சென்றான்… அம்மாவை காணோம்.
மணி ஐந்து கூட ஆகவில்லை.. பால் எங்கிருக்கிறது என பார்த்து எடுத்து வைத்தான். ‘நான் படிக்கும் போது கூட, இப்படி எல்லாம் செய்ததில்லை லிங்கா… நீ, செம… டா.. ‘ என அவனுக்கு அவனே சொல்லிக் கொண்டு.. பெரிய பாத்திரம் எடுத்து, பாலை அதில் விட்டு, பெரிய அடுப்பில் வைக்க.. அது.. ஓரமெல்லாம்.. கருகி வாசனை வந்தது.. அதெல்லாம் தெரியவில்லை அவனுக்கு… நல்ல வேலை ப்ரு காபி பவுடர் கண்முன் இருந்தது.. சர்க்கரை எடுத்து.. இரண்டு டம்ப்ளரில்.. காபி கலந்து கொண்டு மேலே வந்துவிட்டான். அங்கே அந்த சமையலறை… அப்படியே இருந்தது.
சக்தி அப்போதுதான் வந்தாள்.. கொஞ்சம் சமன்பட்டிருந்தது மனம், ஏதோ புரிந்தது.. ‘சரி, போலாம்.. அவரே கொண்டு விடறேன்னு சொல்றாரு… எத்தனை நாள் ஆச்சு, கிளம்பனும்.. படிக்கனும்’ என எண்ணம் வர… கொஞ்சம் அவசர அவசரமாக கிளம்பினாள்.
சின்ன கோவம் தான், அவன் மேல்.. ‘இவர் எப்போ சொல்றாரோ, கிளம்பனும்.. இவர் எப்போ வேணான்னு சொன்னாலும் இருந்துக்கனும்..’ என மனம் அதில் நின்றாலும்.. இப்போது.. இதுதான் முக்கியம் முதலில் கிளம்புவோம்’ என பொறுப்பாக மாறினாள் சக்தி.
[the_ad id=”6605″]
ஃப்ளூ ஜீன், ஷார்ட் டாப் அணிந்து.. முடியை அப்படியே கிளிப் செய்து கொண்டாள்.. சின்ன பொட்டு.. இத்தனை நாள் போட்டிருந்த வளையல், கொஞ்சம் பெரிய தோடு, பெரிய செயின் என எல்லாம் களைந்து.. சின்ன வாட்ச்… மெல்லிய சின்ன செயின்.. சின்ன தோடு என அணிந்து கொண்டாள்.
அப்போதே வந்தான் கணவன்.. அவளின் இந்த தோற்றம் மீண்டும் அவனை கொஞ்சம் கிறங்க வைத்து.. மெல்ல தன்னை சாமாளித்துக் கொண்டு.. “சக்தி .. இந்தா..” என்றான்.
சக்தி திரும்பி பார்க்க.. கையில் காபி.. இத்தனை நாட்கள்.. அந்த வீட்டில் ஆண்கள் யாரும் கிட்சென் பக்கம் தண்ணீர் குடிக்க கூட வந்ததில்லை என்பதை அறிந்தவளால்.. இதை நம்பமுடியவில்லை.. கண்களை விரித்தாள் அத்தனை பெரிதாக.
“அத்தை எழுந்தாச்சா…” என்றாள் சந்தேகமாக.
கணவன் முறைத்தான்.. “ஹேய்… நான் போட்டேன்…” என்றான். தன்னவளின் கண்களில், ஆச்சரியத்தை தாண்டிய ஒரு சின்ன நேசம் தெரிந்தது. அதை அழகாக கணவன்.. கண்களால் பற்றிக் கொண்டான் “ம்… எப்படி இருக்குன்னு சொல்லு” என்றான் அவளை காதலாக பார்த்து…
இப்போது மனையாள்.. கொஞ்சம் அதிகார நேசமாக.. கணவனை பார்த்தபடியே உதடு குவித்து ஊதி.. ஒரு மிடறு அந்த காபியை பருக… அந்த சூட்டில்.. அந்த சூடான காபி தொண்டையில் இறங்க… கொஞ்சம் கோவம் கூட கரைந்து போனது.. அவனின் ப்யார்க்கு. இப்போது கணவனை பார்த்தபடியே.. மெதுவாக முழு காபியையும் குடித்தாள்.
லிங்கா “என்ன… சூப்பரா..” என்றான்.
ஒன்றும் சொல்லாமல் துணி… புக்ஸ் என எல்லாம் எடுத்துக் கொண்டிருந்தாள். கொஞ்சம் ஊடல்.. அவன் மேல். எனவே, சட்டு பட்டு என்று சத்தம் வர… எல்லாம் பேக் செய்தாள் சக்தி.
கணவன் “இங்க பார்.. புக்ஸ்.. பாக்.. மட்டும் எடுத்துக்க.. சக்தி. மத்தத, நான் உங்க வீட்டு டிரைவர் அண்ணாகிட்ட கொடுத்து விடறேன்… மணியாச்சு…” என்றான், தான் குளிக்க சென்றபடி.
மீண்டும் சுள்ளென கோவம் வந்தது… “அப்படியெல்லாம் முடியாது… நீங்க போங்க, நான் பார்த்துக்கிறேன்” என்றவள்… ஏற்கனவே எடுத்து வைத்திருந்த பாக்கை.. எடுத்து வைத்தாள்.
இப்படியே இருவரும் கிளம்பினர். லிங்கா, இளாக்கு மெசேஜ் செய்துவிட்டான் தாங்கள் கிளம்புவது பற்றி.
சக்திதான் புலம்பினாள்.. ’இப்படி, யாருகிட்டயும் சொல்லாமல்… ஏதோ திருடன் மாதிரி கூட்டி போறீங்க’ என புலம்பினாள்.. இப்போது ‘லிங்காக்கு காது கேட்காது’ என்றான். திருப்பிக் கொண்டாள் முகத்தை.
அவர்களின் பென்ஸ்… மெல்ல அதிகாலையில் அந்த ஆளில்லா சாலையில் பறந்தது… இன்றுதான் லிங்கா தன் மனையாளுடன் தனியாக வெளியே வருகிறான்.
சக்திக்கு முகம் சரியாகவில்லை இன்னும் “நான் தீபக் அம்முவ கூட பார்க்கலை” என்றாள் அதே ஊடலான குரலில்.
“சாரி, அடுத்த வாரம்.. ஃப்ரைடே வர, சரியா. எனக்கு, வேலை இருக்குடா.. அதான் இன்னிக்கே இப்போவே போறோம். நீதானே அங்க போய் சங்கடபடுவ, அதான் இப்போவே போறோம்… என்ன செய்த, காலேஜில் யார்கிட்டயாவது போன் செய்து சொன்னியா… “ என்றான்.
“ம்… எங்க hodகிட்ட சொல்லிட்டேன்… அப்பாவ பேச சொன்னேன்…” என்றாள்.
“இன்னுமா உனக்கு அப்பா பேசனும்… நீயே சமாளி..” என்றான்.
“அவங்களுக்கு நல்ல பழக்கம் அப்பா… அதான் சொன்னேன்…” என்றாள் கோபக் குரலில்.
“சரி.. சரி… கூல்…. “ என்றான் அவளை அமைதியாக்கும் பொருட்டு..
“நான் அமைதியாத்தான் இருந்தேன்… நீங்கதான் பேசுறீங்க..” என்றாள்.
“சரி.. அடுத்த வாரம் நானே வரேன், சரியா.. இப்போ உனக்கு சங்கடம்ன்னுதான் அவசரமா கிளம்புறோம்..” என்றான் என்னவோ இவன் எதுவுமே செய்யாதது போல..
“சக்தி “நான் போன வாரமே போறேன்னு சொன்னேன்…” என்றாள் கடுப்பாக.
“ம்…. நீ அங்க போய்.. தனியா, ஏதேதோ யோசிச்சு.. இங்க வரும்போது ஃப்ரஷ்ஷா! புது சக்தியா வருவ… என்னால தாங்க முடியுமா, அதான் டா… ப்ளீஸ்… கோவபடாத” என்றான் இறங்கிய குரலில். தன்னவனின் கெஞ்சல் அவ்வளவு அழகாக இருந்தது மனையாளுக்கு.. இன்னும் கொஞ்சம் இதற்காகவே சண்டை போட வேண்டும் என தோன்றியது சக்திக்கு.. அதில் முகம் கொஞ்சம் இளகியது அவளுக்கு.
லிங்கா “இனி மனசுல எதுவும் நினைக்க கூடாது சரியா.. ஒன்லி.. மாமாவ மட்டும் நினைச்சிட்டு படிச்சிட்டு, பெட்டிய கட்டிட்டு இங்க வர… புரியுதா…” என்றான்.
சக்தி “எப்படி படிக்கவே எனக்கு நேரமில்ல.. அடுத்து காவ்யா கல்யாணம்… அதுக்கு வேற லீவ்.. என்ன பண்ணபோறேனோ” என்றாள்.
லிங்கா “அதுக்கு, ஒரு வாரம் லீவ் போதும் டா.. கேளு, கொடுக்கலைன்னா… அப்பாகிட்ட பேசிக்கன்னு சொல்லிடு… எல்லாம் என் மாமனார் பார்த்துப்பார்…” என்றான் ஒரே மூச்சில்.
சக்திக்கு அவனின் புன்னகையும் மலர்ந்த முகமும் இவளையும் ஒட்டியது “அப்படியா, அதென்ன உங்க மாமனார் காலேஜா.. “ என்றாள்.
“ம்.. எல்லாம் நமதே… நாளை நமதே.. நாளை மறுநாளும் நமதே.. பிரிச்சு பிரிச்சு பேசாதே..” என்றான் சிரித்தபடி.
சக்தி ஒன்றும் சொல்லாமல் லேசாக சிரித்துக் கொண்டாள். லிங்கா அவளை பேசி பேசி.. கொஞ்சம் அமைதியாக்கி இருந்தான்.
மலையேற தொடங்கினர்.. கோத்தகிரி வழியான பாதையில் ஏறினான்.. மெல்ல விடிந்து இருந்தது.. ஆனால், அங்கு பாதை முழுவதும் பனி மூடி இருந்தது.. அந்த தேயிலை தோட்டத்தின் அழகு எப்போதும் போல சக்தியை ஈர்த்து…
கண்களுக்கு ஆட்களே தென்படவில்லை.. இன்னும் அந்த பனிமூட்டம் விலகவில்லை… சக்தி கணவனை திரும்பி பார்த்தாள்.. வேண்டுதலாக. தானாக வண்டி நின்றது.
தங்கள் காரின் முகப்பு விளக்கை ஆப் செய்யாமல் இறங்கினான் லிங்கா.
சக்தி “இங்க.. இந்த தோட்டத்துக்கு எல்லாம் சிறுத்தை வரும்.. நிறைய யானை வரும்…” என்றாள் பயந்தபடி… சிறுபிள்ளையாக.
லிங்கா கேட்டுக் கொண்டே அவளின் அருகில் வந்து நின்றான்… அப்படியே கீழே பார்க்க… எங்கும் மரம்.. செடி.. என பசுமை வண்ணம், அதை மூடிய வெள்ளை போர்வையாய்.. பனி. நீல வானமே கண்ணுக்கு தெரியாத அளவு கொஞ்சம் இருட்டான பனி… காற்றின் சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது.. அந்த சூழல் கொஞ்சம் திகிலாக இருந்தது சக்திக்கு.. எனவே கணவனின் அருகில் நின்று கொண்டாள்.
லிங்கா.. “வா… அந்த டீ செடிக்கு நடுவில் நின்று போட்டோ எடுத்துக்கலாம்…” என்றான்.
சக்தி “ம்கூம்… பயமா இருக்கு.. யாருமே இல்ல.. போலாங்க” என்றாள்.
“வா.. சக்தி, இதுக்குதானே இறங்கின.. வா” என சாலையில் இருந்து மேடாக இருந்த அந்த தேயிலை காட்டிற்குள் அழைத்து சென்றான்…
இவர்கள் நடந்ததால்.. அந்த உரசலில் செடி மட்டும் அசையும் சத்தம் கேட்டது.. அதுவே சக்திக்கு பயத்தை தந்தது… கொஞ்சம் அடர்த்தியாக செடிகள் இருக்கும் இடம் சென்றனர். சக்தி, அவனின் கையை விடவேயில்லை.. அப்படியே அங்கேயே நின்று பனி படர்ந்த அந்த தேயிலை செடிகளையும்.. தங்களுடைய கேமராவில்… சேமித்துக் கொண்டான்.
[the_ad id=”6605″]
அடுத்தும் நிறைய.. அந்த பனி துளியோடு சேர்த்து.. தன் மனையாளையும் ஆங்கிள் பார்த்து.. கணவன் பொறுமையாக புகைப்படம் எடுக்க.. சக்தி, “போலாங்க “ என அருகில் வந்து அவனின் கையை பற்றிக் கொண்டாள். இப்போது அவளின் இடையை தன் வலிய கரத்தால்.. அருகே இழுத்தவன்.. சின்ன குரலில் “ப்ரியா… இப்படியே.. இன்னும் இந்த லிப் மட்டும் என் கன்னத்தில் படரா மாதிரி ஒரே ஓர் ஸ்னாப்.. ப்ளீஸ்… டா” என்றான் கிறக்கமாக.
“உங்கள… வாங்க நம்ம காருக்கு போலாம்… போதும் எடுத்தது” என பொங்க தொடங்கிவிட்டாள் சக்தி. அப்படி இருந்தும் விடாமல்… ஆசையாக தன் கன்னத்தை அவளின் உதட்டருகே கொண்டு சென்று.. நிமிடத்தில் ஒரு ஸ்நாப் எடுத்திருந்தான் கணவன். சக்தி லேசாக வெட்கப்பட்டு முறைத்தாள் கணவனை.
இறங்கி வந்து அந்த சாலையில் நின்று நிறைய புகைப்படம் எடுத்து கொண்டனர்.. எங்கோ தூரத்தில் ஏதோ மிருகத்தின் சத்தம் கேட்கவும், சக்தி “என்னங்க.. வாங்க… போலாம்” என்றாள்.
இருவரும் காரில் சென்று அமர்ந்தனர் சக்தி இப்போதுதான் நிம்மதியாக மூச்சு விட்டாள்.. மணி எட்டை நெருங்கி கொண்டிருந்தது.. கணவனின் போனை வாங்கி போட்டோஸ் பார்த்தாள்.. அழகாக இருந்தது.. எல்லாவற்றையும் தனக்கு அனுப்பிக் கொண்டாள்.
லிங்கா அதுவரை வண்டியை எடுக்கவில்லை.. அவளையே பார்த்திருந்தான். இன்னும் இருபது நிமிட தூரம் தான்… சக்தியின் இருப்பிடம் வந்துவிடும். லிங்காக்கு கொஞ்சம்.. ஏதோ போல் இருந்தது.. அப்படியே மனைவியை பார்த்தான்.. அவள் எப்போதும் போல் இருந்தாள்… அவளின் மனதை கலைக்கக் கூடாது என தன்னைக் கட்டுபடுத்திக் கொண்டான்.
சக்தி போனை லாக் செய்து கணவனை பார்த்து “ம்.. போலாங்க” என்றாள்.. அவளின் அருகில் நெருங்கி அவளை அழுத்தமாக அணைத்துக் கொண்டான்.. பின் நெற்றியில் முத்தமிட்டு… “தேங்க்ஸ்… எல்லாத்துக்கும் தேங்க்ஸ்” என்றான், கரகரப்பான குரலில்.
சக்தி ‘என்ன’ என்றாள் புருவம் உயர்த்தி. கணவன் “என்னை அப்படியே முழுசா.. ஏத்துக்கிட்டதுக்கு” என்றான்.
சக்திக்கு கொஞ்சம் வெட்கம் வந்தது.. “ம்… இனி அத.. நானே நினைச்சாலும் மாத்த முடியாது… நீ…நீங்க உங்களை அவ்வளோ பிடிக்குது… உங்க தப்பு.. தவறு… எல்லாம் தெரிஞ்சும் பிடிக்குது. என்ன, என்னை உங்க இஷ்ட்டத்துக்கு… வளைக்கும் போது கோவம் வருது… “ என்றாள் காதலாக ஆரம்பித்த குரல் இறுதியில் முறைப்பில் முடிந்தது.
லிங்கா அவளின் முகத்தை கையில் ஏந்தியபடியே.. “அது.. அந்த கோவம் இருக்கட்டும் டா… அது உனக்கு அழகு.. அத மாத்திக்காத… அதே மாதிரி, இந்த அன்பையும் மாத்தாத… “ என்றவன் மீண்டும் அவளின் உச்சியில் முத்தமிட்டு. தன்னை நிலைபடுத்திக் கொண்டான்.
வண்டி எடுத்து அவர்கள் இருக்கும் வீட்டை அடைந்தனர். அவளை இறக்கிவிட்டான்.. உள்ளே வரவில்லை என்றான்.. அங்கே வீட்டை பார்த்துக் கொள்ளும் தம்பதி வந்தனர் லிங்காவை வரவேற்க.. தட்ட முடியாமல் உள்ளே சென்றான்.
அளவான பெரிய வீடு.. சுற்றிலும் தோட்டம்.. வெளியே கார்.. சைக்கிள் என எல்லாம் இருந்தது.
உள்ளே சென்றாள்.. இடவசதியுடன் வெளிச்சம் என அழகாக இருந்தது அந்த வரவேற்பறை.. விருந்தினர்.. அதாவது பெற்றோர்.. வந்தால் தங்குவதற்கு என இரண்டு அறையை பிள்ளைகள் ஒதுக்கி இருந்தனர்.
லிங்காவை, அங்கே அனுப்பினாள் சக்தி. அவன் ரெப்ரெஷ்ஷாகி வருவதற்குள்.. என்ன டிபன் என பார்த்தாள். இன்று சோயா பால்.. பிரட். மதியத்துக்கு.. சென்னா சப்பாத்தி.. அப்போதுதான் ரெடியாகிக் கொண்டிருந்தது.
அப்பாடா என தன்னவனுக்கு இரண்டு சேர்த்து செய்ய சொன்னாள்.. அப்படியே நடந்தது.
லிங்கா வரவும்… தோழிகள் எல்லோரும் வரவும் சரியாக இருந்தது. தன் தோழிகளுக்கு லிங்காவை அறிமுகம் செய்தாள். மெல்ல பேசியபடியே உண்டனர்.
மொத்தம் சக்தியுடன் சேர்த்து ஐந்து பெண்கள் தங்கி இருந்தனர். அதில் சக்தியும், சோபினா என இருவரும் தமிழ்.. மற்ற எல்லோரும்.. தெலுங்கு.
லிங்கா அவர்கள் எல்லோரையும் கல்லூரியில் விடுவதாக சொல்ல.. எல்லோரும் சிரித்தபடி மறுத்துவிட்டனர். ஆக, சக்தியும் லிங்காவும் மட்டும் கல்லூரி சென்றனர்.
அதற்குள்.. தாமுவுக்கு அழைத்திருந்தான் லிங்கா.. யாரை பார்ப்பது என கேட்க.. அவரும் போனில் பேசிவிட்டார்.
இப்போது லிங்கா கல்லூரியின் உள்ளே போக தேவையில்லை.. இருந்தாலும்.. ஒரு மரியாதைக்காக உள்ளே சென்றான் லிங்கா.. hodயை பார்த்துவிட்டு வந்தான்.
அமைதியாக இருவரும் ஏதும் பேசிக் கொள்ளாமல் தலையசைத்து விடை பெற்றனர். சக்தி தன் தோழிகளுடன் சென்று சேர்ந்து கொண்டாள்.
லிங்கா காரின் அருகில் வர.. மனமெல்லாம் அவளிடம்தான். சொல்ல முடியா ஏதோ ஒரு அழுத்தம்.. ‘லிங்கா…’ என தன்னை தானே அமைதிப்படுத்திக் கொண்டு வண்டி எடுத்தான், காரில் முழுதும் அவள் வாசமே.. ஆழ்ந்து ஒருமுறை.. தன்னுள் நிரப்பிக் கொண்டான் காதல் கணவன்.
“உலகத்தின் கடைசி நாள்…
இன்றுதானோ என்பது போல்..
பேசி பேசி தீர்த்தபின்னும்…
ஏதோ ஒன்னு குறையுதே….”
பின், வண்டி கோவை நோக்கி வேகமெடுத்து.
தாமு அழைத்தார்.. ம்கூம் எடுக்கவில்லை.. மலை இறங்கும் வரை. தன்னவள் நினைவே.. எனவே யாரிடமும் பேசும் எண்ணம் இல்லாமல்.. போனை சைலெண்டில் போட்டு வண்டி ஓட்டினான்.
வழியில் எங்கும் நிறுத்தாமல்.. பனிரெண்டு மணிக்கு வீடு வந்தான் லிங்கா. வீட்டிக்கு வந்ததும் எல்லோரும் ‘ஏன் டா.. இவ்வளோ அவசரம்..’ என்றனர்.. லிங்கா பேசி சமாளித்தான். பின்தான் அலுவலகம் சென்றான்.
இளா பார்த்ததும் “ஏன்.. ரெஸ்ட் எடுத்துட்டு வரலாமில்ல… ஏன் அவசரம்” என கடிந்தான். லிங்கா ஒன்றும் சொல்லாமல் வேலைகளை பார்த்தான்.
அந்த வாரத்தின் ஒன்றிரண்டு நாளும் கடந்தது.
லிங்கா வீடு வந்தால்.. சக்திதான் அவனை கவனிப்பது.. காபி, உணவு.. என எல்லாம் மனையாள்தான் இந்த நாட்களில் செய்தாள். இப்போதும் எல்லாம் நடக்கிறதுதான்.. லிங்காதான் கொஞ்சம் அவள் முகம் பார்க்க ஏங்கி போனான். மற்றபடி வேறு… எந்த அதிரடியும் இல்லாமல் நாட்கள் சென்றது.
மூர்த்தி தம்பதி பத்திரிக்கை வைப்பதில் பிஸியாக இருந்தனர். இளாலதா தம்பதி… கல்யாண வேலைகளில் பிஸி. எனவே லிங்கா ஆபிசே கதியென பழகிக் கொண்டான்.
அந்த வாரத்தின் முதல் நாளிலேயே தாமு அழைத்தார்.. “மாப்பிள்ளை, கட்சி மேலிடம் அடுத்த இரண்டு மாசத்தில் தமிழ்நாடு வராங்க.. எல்லா ஏற்பாடும் நாமதான்.. இப்போ.. கட்சியில் அரசல்புரசலா… சாரங்கன் கொடி பறக்குது மாப்பிள்ளை…” என்றார் எடுத்த உடன் உற்சாக குரலில்.
லிங்காக்கு அவரின் உற்சாகம் தொற்றிக் கொண்டது.. “மாமா… எல்லாம் நமதே… தட்டி தூக்குறோம்… இந்ததரம்…” என்றான்.
அப்படியே பேச்சு சென்றது.. தாமு “அந்த பணம் இன்வெஸ்ட் பண்றத பத்தி கேட்டிருந்தேனே…” என்றார்.
சக்தியை காலேஜில் விட்ட அன்றே.. அது பற்றி கேட்டார்.. லிங்கா யோசித்து சொல்லுவதாக சொன்னான். அவருக்கு சக்தி பெயரில் நிலம் வாங்க வேண்டும் என எண்ணம். ஆனால் லிங்கா காத்திருக்க சொன்னான்.
இப்போது லிங்கா “மாமா.. நாம அரசியல்ல இருக்கோம்.. நாமலே நல்லது பண்ணலேன்னா எப்படி… சக்தியோட அம்மா பேரில் ஒரு டிரஸ்ட் ஒன்னு ஆரம்பிக்கிறோம்… “ என்றான்.
[the_ad id=”6605″]
தாமுக்கு என்ன சொல்லுவது என தெரியவில்லை.. “எப்படி ப்பா… வருமானம்” என்றார் தயங்கி.
“அது நமக்கு நிறைய இருக்கு மாமா. புண்ணியம்… இனி அத சேர்க்க போறோம்… கல்வி தானம்தான் ரொம்ப பெருசு… ஒரே ஒரு ஏழை பையனையோ.. பொண்ணையோ படிக்க வச்சா போதும்… அந்த பரம்பரையே.. முன்னேறிடும்… நமக்கும் கொஞ்சம் புண்ணியம்.. அப்புறம் சாரங்கன் மாமாக்கு.. கட்சில பேரு கிடைச்சிடும்… இறங்கி செய்யறோம்..
இந்த நேரத்தில் யோசிச்சு பாருங்க… இது சாரங்கன் மாமாக்கு கட்சில இன்னும் மதிப்ப கொடுக்கும்… யாராலையும் அவரை அசைக்க முடியாது…” என்றான் திடமான குரலில்.
தாமு வாயடைத்து போனார். மாப்பிள்ளை மேல் உள்ள பித்து இன்னும்… முத்திதான் போனது மாமனாருக்கு.