சரண் – 16
உன்னை பார்த்ததும் அன்னாளிலே
காதல் நெஞ்சில் வரவே இல்லை
எதிர்காற்றிலே குடை போலவே
சாய்ந்தேன் இன்று எழவே இல்லை
இரவில் உறக்கம் இல்லை
பகலில் வெளிச்சம் இல்லை
காதலில் கரைவதும் ஒரு சுகம்
எதற்கு பார்த்தேன் என்று இன்று புரிந்தேனடா
என்னை ஏற்றுக்கொள் முழுவதும்
என் நெஞ்சில் ஒரு பூ பூத்ததன்
பேர் என்னவென கேட்டேன்
என் கண்ணில் ஒரு தீ வந்ததன்
பேர் என்னவென கேட்டேன்
என்ன அது இமைகள் கேட்டது
என்ன அது இதயம் கேட்டது
காதலென உயிரும் சொன்னதன்பே
காதலென உயிரும் சொன்னதன்பே
“மாமா என் ஃபரண்ட்ஸ் நாலு பேர் வராங்க, அங்க எத்தனை நாள் அவங்க தங்குற மாதிரி இருக்கும், பேரன்ட்ஸ்கிட்ட நீங்க பேசிட்டீங்களா, எங்க டீன் வேற பேசியிருக்கிறார். மெடிசின் கொஞ்சம் பேக் செய்ய சொல்லிருக்கேன். வேக்ஸின் கொஞ்சம் எடுத்துருக்கேன். என் சைட் எல்லாம் பெர்ஃபக்ட். நீங்க என்ன செஞ்சுருக்கீங்க.. சொல்லுங்க..” என முகம் முழுக்க சந்தோசம் தாண்டவமாட, குதுகலமாக பேசியவளைப் பார்த்தவனுக்கு சிரிப்பு தான் வந்தது.
“மேடம் நாம அங்க ஹனிமூன் கொண்டாட போகல, உங்க எக்ஸைட்மென்ட் பார்த்தா எனக்கு டவுட்டா இருக்கே..” எனக் கிண்டலடிக்க,
“ஹோ… புருஷ் ஓவரா கிண்டல் பண்ணாதீங்க, எங்க புகழ் மாமா வந்துட்டார் தெரியுமில்ல, உங்களைப்பத்தி கம்ப்ளைன்ட் செய்வேன், பார்த்து பத்திரம்..” என உதடு சுழிக்க,
“பார்த்துடி.. ரொம்ப சுழிக்காத, வாய் ஒரு பக்கம் அப்படியே சுழிக்கிக்கப் போகுது, என்ன கம்ப்ளைன்ட் செய்வீங்க, என் வீட்டுக்கார் என்னை இங்க பிடிக்கிறார், இப்படி கட்டிப்பிடிக்கிறார். நிமிசத்துக்கு நிமிசம் லிப்லாக் பன்றார் அப்படின்னா.. போய் சொல்லேன்… உன் புகழ் மாமாவே ஒரு காலை உடைச்சிட்டு ஹாஸ்பிடல்ல இருக்கான். அவன் வந்து என்ன செஞ்சிடுவான் என்னை.. என்ன ப்ராப்ளம் போகுது, அதை எப்படி சால்வ் பன்றதுன்னு யோசிடி.. அதை விட்டுட்டு இங்க வந்து புகழ் மாமா புகழ் பரப்பிட்டு, என்ட்ட வம்பளந்துட்டு இருக்க..” என மேலும் சீண்ட,
“என்ன.. என்னனு கேட்குறேன். நான் என்ன யோசிக்கல, அத்தைக்கிட்டப் பேசி அவங்க மனசு வருத்தப்படாம சம்மதம் வாங்கி கொடுத்துருக்கேன். அதெல்லாம் உங்களுக்குத் தெரியலையா..? ஒன்னும் செய்யலைன்னு சொல்றீங்க கடுப்பாகுது, போங்க.. போங்க.. இடத்தைக் காலி பண்ணுங்க..” என ஏகத்திற்கும் சிடுசிடுத்த மனைவியைப் பார்த்து இதழ் துடித்தது வெற்றிக்கு.
அதை வெளிக்காட்டாமல், “ஹேய்.. என்னடி மரியாதை எல்லாம் குறையுது. நீ பேசலன்னாலும் உங்க அத்தை சம்மதிச்சிருப்பாங்க தெரியுமா.. ? ஏதோ நீதான் தலை கீழா நின்னு சம்மதம் வாங்கின மாதிரி பில்டப் கொடுத்துட்டு இருக்க, போடி.. போய் உங்கத்தக்கிட்ட சொன்னதெல்லாம் எடுத்து வச்சுட்டாங்களான்னு செக் பண்ணு, நான் ஆச்சிக்கிட்ட பேசிட்டு வரேன்..” என்றவன், உம்மென்று நகரப் போனவளின் இடையை இறுக்கிக் கொள்ள,
“போடி.. போடின்னு சொல்லிட்டு கட்டிட்டு இருக்கீங்க, விட்டாதான போக முடியும்..” என சினுங்கியபடியே, அவன் மார்பில் புதைந்து கொள்ள,
“போகலாம்.. போகலாம்…” என்றவன் மனைவியின் உச்சியில் இதழ் பதித்துவிட்டு தன் தலையைப் பதித்துக் கொண்டான் அமைதியாக.
கணவனின் அமைதியில், தலை புதைந்திருந்த மார்பை முட்டி “என்னாச்சு… ஒரு முடிவெடுத்து செய்றோம்ன்னு, அங்க நாம ப்ராமிஸ் பண்ணிட்டு வந்த பிறகு, அதிகமா யோசிக்கக் கூடாது. அதோட இது புகழ் மாமா வாழ்க்கை. அதுல நாம காம்ப்ரமைஸ் பண்ணக்கூடாது. அவருக்கு, அவர் விரும்பின வாழ்க்கையை அமைச்சிக் கொடுக்கனும். அதை நாம தான் செய்யனும். ப்ளீஸ் மாமா…” என்றவளை மேலும் மேலும் இறுக்கியவன்,
“வனி என்ன பேச்சு இது.. அவன் என்னோட தம்பி, நீ சொல்லி நான் செய்யனும்ன்னு இல்ல. நானே தன் இந்த முடிவை எடுத்தேன். நான் உனக்காக யோசிக்கிறேன். உனக்கு அங்க கஷ்டமா இருக்குமேன்னு யோசிக்குறேன். அங்க வந்து இப்படியெல்லாம் நம்மளால ஒன்னா இருக்க முடியாது. நீ கொஞ்சம் வருத்தப்பட்டாலும் என்னால தாங்க முடியாது குட்டி. தேவையில்லாம உன்னை இதில் இழுத்துட்டேனோன்னு தோனுதுடா..” என்று மனைவியிடம் புலம்பி மருகினான்.
கணவன் தன்னைக் கேட்காமல் முடிவெடுத்து விட்டதாக எண்ணி வருந்துகிறான் என உணர்ந்து கொண்டவள். “நீங்க வேற, நான் வேறையா மாமா.. உங்க முடிவுல எனக்கு கொஞ்சம் கூட வருத்தமே இல்ல. நான் தனியா போகல, நீங்க வர்ரீங்க, என் கூடவே இருக்கப் போறீங்க. நீங்க கூட இருந்தா போதும் மாமா. என் வாழ்க்கை முழுசுக்கும். நான் சந்தோசமா இருப்பேன்.’ என்றாள் இன்னும் அவனை இறுக்கியபடி.
“ம்ம்ம்… கொல்றடி…” என்றவன் கழுத்தோடு முகம் புதைத்து, அவள் வாசத்தை இழுக்க, அதில் அவளும் அவனுக்கு வாகாக, நேரங்கள் நொடிகளாக அந்த ஏகாந்ததை அனுபவிக்க, சிறிது நேரத்தில் சுயம் வந்தது வெற்றிதான். “வனி… டைமாச்சு எல்லாம் பேக் பண்ணியாச்சான்னு செக் செய்துட்டு வா.. ஹாஸ்பிடல் போயிட்டு புகழைப் பார்த்துட்டு வந்துடலாம். மார்னிங் நாம போகும் போது அங்க போயிட்டு போக முடியாது..” என
“ம்ம்.. சரி… மாமா எனக்கு ஒரு டவுட் புகழ் மாமாவே மயங்கிட்டாங்கன்னா அந்த பொண்ணு அவ்ளோ அழகா.. நானும் கேட்டுட்டே இருக்கேன் சொல்ல மாட்டேங்குறீங்க.. சொல்லுங்க மாமா.. அதுவும் பார்த்த ஒரு சைட்லயே அவர் லவ்வுல தொப்புன்னு விழுந்து, இன்னும் எந்திரிக்காம இருக்கார்..” என வந்த நாளில் இருந்து நூறுக்கும் மேற்பட்ட தடவைக் கேட்டும் வெற்றி, ஒவ்வொரு முறையும் சிரித்தானே தவிர சொல்லவே இல்லை.
இப்போதும், “அதுதான் நாளைக்கு போய் பார்க்க போறோம் தானே, அப்புறமும் ஏண்டி வழக்காமான இந்த கேள்வி… அங்க வந்து பாக்கத்தான போற, பாரு…” என்ற் முடித்து விட்டு, போனை எடுத்துக் கொண்டு வெளியேறினான்.
‘மூஞ்சைப்பாரு… கொரங்கு..” என கணவனின் முதுகுக்குப் பின்னால் திட்டியவள், வெற்றி போன் செய்த அன்றைய நாளை நினைவு கூர்ந்தாள்.
அன்று வெற்றி போன் செய்து அடுத்த நாள் தான் அவன் வரமுடியும் என்றும், காரைக்குடியில் இருக்கும் ஒரு மருத்துவமனையின் பெயரைச் சொல்லி, மறுநாள் காலை அவளை அங்கு வருமாறும் கூறிவைத்து விட்டான். அவன் வைத்த சில மணி நேரத்திலேயே பாலனும் வந்துவிட்டார்.
அவர் வந்து சொன்னபிறகே மற்றவர்களுக்கு அனைத்தும் விளங்கியது. கேட்டதில் இருந்து மங்கை ஒரு நிலையில் இல்லை. புகழுக்கு என்ன ஆனதோ.. எப்படி இருக்கானோ… வெற்றி தன்னிடம் மறைக்க வேண்டுமென்றால் புகழுக்கு பெரிய விபத்தோ என்று பலதையும் யோசிக்க ஆரம்பித்திருந்தாள்.
அப்போது தான் நாச்சியார் அவளை அழைத்து, “மங்கை நீ சோர்ந்து உக்காந்த்துட்டா உங்க அத்தைக்கு யார் தைரியம் சொல்வா.. யோசிச்சு பாரு, புகழுக்கு சின்ன காயம்ன்னாலும் அவளால தாங்க முடியாது. அப்படி இருக்கும் போது இந்த விபத்தை அவ எப்படி தாங்கிப்பா.. நீ தான் கூட இருந்து தைரியம் கொடுக்கனும். நாம பயப்படுற அளவுக்கு பெரிய காயமெல்லாம் இருக்காது. உனக்கும் வருத்தம் இருக்கும். ஆனா அதை வெளிக்காட்டினா, உங்கத்தையை சமாளிக்க முடியாது.”
“தாத்தாவுக்கு சொல்லிருக்கேன், அவர் மணியையும், வனிதாவையும் பார்த்துக் கூப்பிட்டு வந்துடுவார். அவங்க வந்ததும் அழுது எந்த ஆர்ப்பாட்டமும் பண்ணக்கூடாது சரியா.. நீ இந்த வீட்டுக்கு வந்த மருமக.. அதுக்கு தகுந்த மாதிரி பக்குவமா நடக்கனும்.. சரியா கண்ணம்மா..” என்றப் பெரியவரைக் கட்டிகொண்டு ஓவென்று அழுதாள்.
“நான் தான் இதுக்கெல்லாம் காரணம் பாட்டிம்மா.. என்னால தான் புகழ் மாமா போனாங்க. இப்போ என்னால தான் அவங்களுக்கு அடிப்பட்டுருக்கு… எல்லாமே என்னால தான்..” என்ற் அழுதவளை சமாதானம் செய்யவேப் பெரும்பாடாகிப் போனது.
அடுத்த நாள் விடியலிலேயே வனிதாவும், மணியும் வந்துவிட, அவரிடம் மிகவும் பக்குவமாக விசயத்தை சொன்னார் நாச்சியார். ஆனால் அவர்கள் எதிர்பார்த்து பயந்தது போல அழுது ஆர்ப்பாட்டம் எல்லாம் செய்யவில்லை வனிதா. அந்த நிமிடம் பூஜையறைக்குள் நுழைந்தவர் தான். புகழை காரைக்குடி மருத்துவமனையில் சேர்ந்து விட்டார்கள் என்று சொல்லும் வரை வெளியவே வரவில்லை.
மருத்துவமனை ஆர்ப்பாட்டங்கள் அனைத்தும் முடிய வனிதா கூட ஓரளவுக்கு சமாதானம் ஆகியிருந்தார். ஆனால் மங்கை தான் அவனை விட்டு இம்மியும் நகரவில்லை. யார் சொல்லியும் கேட்காமல், கையைப் பிடித்தபடியே அமர்ந்திருந்தாள். வெற்றியும் இதைப் பெரிதாக எடுக்கவில்லை, அவனுக்குத் தான் தெரியுமே மங்கைக்கு புகழைத் தனது தந்தையின் ஸ்தானத்தில் வைத்திருக்கிறாள் என்று. அவளை அழைக்க வந்த மற்றவர்களையும் கூட தடுத்துவிட்டான். இரண்டு நாளில் சர்ஜரி என்றுவிட, அதற்கான வேலைகளை பாலனைப் பார்க்கச் சொல்லிவிட்டு, கோவைக் கிளம்பியிருந்தான்.
அங்குள்ள வேலைகளையெல்லாம் முக்கியமானவர்களின் பொறுப்பில் விட்டு, ட்ரஸ்ட் செக்ரட்டரியிடம் பேசினான். பிறகு அமைச்சரை சந்திக்க முடிவு செய்ய, அவர் சென்னையில் இருப்பதாக கூர, உடனே செக்ரட்டரியோடு சென்னைக்கும் கிளம்பியிருந்தான்.
அவருக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுத்து, வாங்க வேண்டியதை வாங்கி என சூறாவளியாகச் சுற்றி ஒருவழியாக மீண்டும் அவன் காரைக்குடி வர, புகழுக்கு சர்ஜரியும் முடிந்திருந்தது.
தனியறைக்கு மாற்றியவனிடம் வந்த வெற்றி, சற்று நேரம் ஒன்றும் பேசவில்லை. ஆனாலும் கண்கள் கலங்க, கைகள் நடுங்க, அவன் தலையை வருடியபடியே இருந்தது. புகழுக்கும் அதே நிலைதான். வலியையும் மீறி மெல்ல புன்னகைக்க முயன்றான். முடியவில்லை. மயக்கம் முற்றிலும் தெளியவில்லை. ட்ரிப்ஸ் ஏறாத மற்றொரு கையைப் பிடித்தவன், “நான் உனக்காக என்ன செய்தாலும் அது உண்மைக்காகத்தான் இருக்கும்ன்னு உனக்கு நம்பிக்கை இருக்கா..? நீ என்னை நம்புறியா..” என்றான் கரகரப்பான குரலில்.
புகழால் பேசமுடியவில்லை. முகம் யோசனையானது, தீவிரமானது. என்ன செய்யப் போகிறாய் என்ற கேள்வி இருந்தது. ஆனலும் தலை ‘ஆம்’ என்பது போல் ஆடியது.
“உனக்காக உன் வாழ்க்கையை கொண்டு வரப்போறேன், நீ எனக்கு செஞ்ச, அதனால நான் உனக்கு செய்றேன்னு நினைக்கக் கூடாது, அப்படி முட்டாள்தன்மா யோசிக்கக் கூடாது. நான் உனக்குத் தான் செய்யமுடியும். நீ என் கூடப்பிறந்தவன், உனக்கு ஒரு கஷ்டம்ன்னா நான் தான் கூட இருப்பேன். நீ சரியானதும் அங்க வரலாம். அதுவரைக்கும் டாக்டர்ஸ் சொல்றதைக் கேட்டு தைரியமா இருக்கனும். அபி உனக்காக மட்டும் உன்னைத் தேடி வருவா.. ம்ம்ம்” என்றவனை மன மகிழ்வோடு பார்த்தான் இளவல்.
பிள்ளைகள் இருவரின் பாசத்தையும் பார்த்த வனிதாவிற்கு குற்ற உணர்ச்சி அதிகரித்தது. ஒன்றுமே இல்லாத ஒரு விஷயத்திற்காக, தன்னோட முட்டாள்தனத்திற்காக, ஒன்றாக இருக்க வேண்டிய பிள்ளைகளைப் பிரித்து, அதிலும் ஒருவனுக்கு தாய் பாசம் என்பதையே காட்டாமல் துரோகாம் செய்துவிட்டோமே, என மறுகினார். வாழ்க்கையில் அறியாமல் தெரியாமல் செய்த தவறுகளூக்கு கூட மன்னிப்பு உண்டு. ஆனால் தெரிந்தே செய்த தப்பிற்கு என்ன தண்டனை கிடைக்கும் யார் அறிவார்.
என்ன தண்டனைக் கிடைத்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டியது தான். செய்த தவறு அப்படித்தானே. பெருமூச்சு ஒன்றுக் கிளம்பியது. அதுவும் வெற்றியைப் பார்க்க, பார்க்க குற்ற உணர்ச்சி அதிகரித்து இதயமே வெடித்துவிடும் போல இருந்தது. அவரால் அங்கிருக்க முடியவில்லை. அப்படியே அறையை விட்டு வெளியேறினார்.
அவர் முகத்தில் வந்து போன உணர்வுகளைக் கவனித்துக் கொண்டுதான் இருந்தான் வெற்றி. அவர் வெளியேறியதும், அவனுக்குள்ளும் ஒரு பெருமூச்சுக் கிளம்பத்தான் செய்தது. அப்போது அந்தப்பக்கம் கிடந்த சேரில் அமர்ந்திருந்த மனைவியைப் பார்த்தவனுக்கு பாவமாக இருக்க, கனமான சூழலை இலகுவாக்க, அவளை சீண்டும் பொருட்டு, “ஏண்டா… உனக்கு இவளைப் பிடிக்கலன்னா, என் தலையிலக் கட்டுவியா… இந்த மூனு நாளா புருஷன்னு ஒருத்தன் இருந்தானே அவன் இருக்கானா, எங்க போனான்னு கூட தெரியாமா இருக்கா..? இவ என்னை பார்த்துப்பான்னு எனக்கு கட்டி வச்சுருக்க..” என
வெற்றி பேச ஆரம்பிக்கும் போதே முறைக்க ஆரம்பித்தவள், அவன் முடிக்கும் போது பத்ரகாளியாக மாறியிருந்தாள். பக்கத்தில் இருந்த பழங்களை எல்லாம் எடுத்து அவன் மேல் வீசியபடியே, “என்ன கொழுப்பா… வீட்டுக்கு வந்து வச்சுக்குறேன்.. வாங்கினது எல்லாம் மறந்துப் போச்சா.. நானே எவ்வளவு கஷ்டத்துல இருக்கேன். எரிச்சல் செஞ்சிட்டு இருக்கீங்க..” என்று கோபமாக ஆரம்பித்தவள், அழுகையில் முடிக்க,
அவள் அழ ஆரம்பித்ததுமே ஆண்கள் இருவரும் பதற ஆரம்பிக்க, புகழ் வெற்றியை முறைக்க, அதற்குள் வெற்றி அவளைத் தனக்குள் கொண்டு வந்திருந்தான்.
“ஏய் லூசு.. நான் விளையாடுறேன்னு கூட தெரியாதா.. அவ்ளோ பச்சப் புள்ளையா நீ.. இங்க பாரு உன் மாமா என்னை முறைக்கிறான்.. சிரிடி.. இல்லாட்டி என்னை அடிக்கப் போறான். சிரிச்சிடுடி செல்லம்..” என சமாதானமாய் கெஞ்ச,
“அதெல்லாம் முடியாது, சிரிக்க முடியாது, நீங்க எதுக்கு என்னை கிண்டல் செய்றீங்க, நானே எவ்ளோ கஷ்டத்துல இருக்கேன்..” என ஆரம்பிக்க,
“அடியேய்.. அடிப்பட்டவன் கூட இவ்ளோ ஃபீல் பண்ணலடி.. நீ ஏகத்தும் பன்ற, இப்போ என்ன வீட்டுக்கு வர்ரியா, இல்லியா.. எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. உங்கிட்ட பேசனும், ரெண்டு நாள்ல நாம ஒரு இடத்துக்கு கிள்மபனும்..” என
“நோ… நான் வர மாட்டேன்.. மாமாவுக்கு சரியானா தான் வருவேன். வீட்டுக்கே வரமாட்டேன். இதுல வெளியூருக்கு வேற கூப்பிடுறார் சார். வாய்ப்பே இல்ல ராசா.. வாய்ப்பே இல்ல..” என்றவளை அப்படியேத் தூக்கியவன், புகழிடம் திரும்பி, மார்னிங் வரேண்டா.. என்னன்னு அப்பா வந்து சொல்லுவார். நீ ரெஸ்ட் எடு.. பை..” என்றவன், அவள் திமிறத் திமிற விடாமல் தூக்கிக்கொண்டு நடந்தான்.
ஏற்கனவே திருவின் மூலம் இருவரது வாழ்க்கையைப் பற்றியும் அறிந்திருந்தவன், இன்று நேரிலும் பார்க்க மனது நிரைந்து போனது. மங்கையைப் பற்றி அவனுக்க்ப் பிரச்சினையில்லை. அவள் வெற்றியை விரும்பினாள். அது அவனுக்குத் தெரியும். ஆனால் வெற்றியும் விரும்பினான் என்பது புது செய்தியே. நல்ல வேலையாக அவர்கள் மகிழ்ச்சியாக போனது. அன்று மட்டும் அவன் அந்த முயற்சி எடுக்காமல் இருந்திருந்தால் மூவரின் வாழ்க்கையும் சூனியமாகி இருக்கும்.
அவன் யோசித்தபடியே இருக்க, வனிதா உள்ளே வந்தார். அவன் அருகில் வந்தவர், “என்ன கண்ணா… தூங்கல.. கண்டதையும் யோசிக்காம தூங்கு. டாக்டர் சொன்னார், நீ நல்லா ரெஸ்ட் எடுக்கனும்னு. நான் பக்கத்துலயே இருக்கேன், நீ தூங்கு..” என்றார் தலையை வருடியபடியே..
“உங்களுக்கு என் மேல் கோபம் இல்லையே… சாரிமா.. நான் அப்படி செய்யலன்னா, மகி சூசைட் அட்டெண்ட் பன்ற அளவுக்கு போயிட்டா.. உங்ககிட்ட சொன்னாலும் எப்படியும் சமாதனம் செய்து, இல்ல அவளை மாதிரியே நீங்களூம் ப்ளாக்மெயில் செய்து ஒத்துக்க வச்சுருவீங்கன்னு தான் போயிட்டேன். சாரிமா..” என அன்றைய நாளில் தன் சூழ்நிலையை விளக்க,
“எனக்குப் புரியுது கண்ணா.. அம்மாவுக்கு உன் மேல கோபமோ, வருத்தமோ இல்லை. உன் மேலன்னு இல்ல யார் மேலையும் இல்ல. என் மேல தான் எனக்கு, கோபம் வருத்தம் எல்லாம். எந்த அம்மாவும் செய்யாத தப்பை செஞ்சு, எவ்ளோ பெரிய பாவத்தை பண்ணிருக்கேன். இதுக்கு நான் யாருக்கிட்ட மன்னிப்பு கேட்க..” என் முகத்தை மூடி அழ, இவர் என்ன சொல்கிறார், எதை சொல்கிறார் என்று அதிர்வாக பார்த்திருந்தான் புகழ்.