மறுநாள் வித்யாவை அழைத்துக் கொண்டு அரவிந்த் மருத்துவமனை கிளம்பும் நேரம் , விக்ரம் மனைவியுடன் ஹாலுக்கு வந்தவன் , ” சித்தப்பா ஒரு வாரம் கோயம்புத்தூர் பிராஞ்ச்ல இருந்து ஒர்க் பண்ணலாம் இருக்கேன் …நைட் கிளம்பலாம்னு பிளான் … “வருவுக்கும் இது புதுச் செய்தியே.. மகிழ்ச்சியுடன் கணவனைப் பார்க்க , அரவிந்த் விக்ரமுக்கு கைக் கொடுத்து ,
“மாப்ள … அப்பாவும் நானும் யோசிச்சிட்டு இருந்தோம் … இப்போ ரொம்ப ஹாப்பி … ஆனா இங்க ஒரு எமர்ஜென்ஸி கேஸ் .. நாளைக்கு இருந்தே ஆகணும் … ”
“மச்சான் நீங்க இங்கப் பாருங்க … நாங்க கிளம்புறோம்…” அரவிந்த் நகர்ந்ததும் , அருகில் வந்த வித்யா …
“ண்ணா… அவ அண்ணியா அங்க வரவேற்க நானில்ல அதற்கு சாரி … ஃபிரன்டா தேங்க்ஸ் … அவ மனக்குறைய தீர்த்ததுக்கு ….” என்றுவிட்டுச் சென்றாள்.
சங்கரி பாட்டி, “எய்யா நாங்க சொல்லும் போதெல்லாம் வரல … இப்ப உன் பொண்டாட்டி வந்ததும் ஓடி வந்துட்ட …. எங்க மேலலாம் இவ்வளவுதான் பாசம் … “பரணிக்கு கோபம் வந்து ஏதோப் பேசப் போக , விக்ரமே
” என்னப் பாட்டி இப்படி கேட்டுட்டீங்க , இப்பக்கூட நீங்க என் மேல பாசம் அதிகமா , ரிதுமேல அதிகமானு கேட்டா …உங்க மேல தான்னு உண்மையச் சொல்லுவேன்….” என்றதும் , அனைவரும் வரு முகம் பார்க்க , அவளோ புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.
பரணி , “என்ன ஆதி பொதுவில இப்படிப் பேசினா , மருமக மனசு கஷ்டப்படாதா … ”
“ஏன் சித்தி உண்மையச் சொல்ல வருத்தப்படணும் … நான் வேற அவ வேற இல்லயே … நானே என்னைய ரொம்ப பிடிக்கும்னு சொல்ல முடியுமா….” என வருவைப் பார்த்து கண் சிமிட்ட , அத்தனை பேர் முகமும் மலர , இன்பா அருகில் வந்து ,
“மகனே எப்படிப் பா இப்படிப் பேசக் கத்துக்கிட்ட … இது தெரியாம உங்க சித்திக்கிட்ட நான் அடி வாங்காத நாளில்ல… ”
” என்ன எம் பிள்ளைய அடிக்கிறாளா … ” என சங்கரி வர ,
“ஆமா உங்க புள்ளைய நான் தான் அடிக்கிறேன் … இப்ப அதுக்கென்ன … ” என பரணி வர , இன்பா பேச ,தாத்தாப் பேச…
இப்படியாக அவர்கள் பேச்சுத் தொடர… விக்ரமிற்கு மனம் இதமாக , மனைவி அருகில் வந்தவன் , அவர்களைப் பார்த்துக் கொண்டே ,
“ரிது இப்படி சந்தோஷமா குடும்பத்தோட சிரிச்சுப் பேசியே ரொம்ப நாளாகுது… இதெல்லாம் உன்னால தான் … ” என்றவன் உதடு குவித்து முத்தம் பறக்க விட்டுச் சென்றான்.
விக்ரமும் அமிர்தாவும் விமானத்தில் சென்று இறங்க விஸ்வனாதன் மகளையும் மருமகனையும் வந்து அழைத்துச் சென்றார். மகளின் மலர்ந்த முகம் அவருக்கு பல கதைகளைச் சொல்ல , உரையாடியபடியே வீட்டிற்கு அழைத்து வந்த விக்ரமிற்கும் அமிர்தாவிற்கும் இன்ப அதிர்ச்சியாக , வருவின் தந்தைக் குடும்பம் முழுவதும் வாசலில் வந்து நின்றனர்.
சங்கீதா ஆர்த்தி எடுக்க , திலீபன் நண்பனை கட்டியணைத்து வரவேற்றுக் கொண்டான். உள்ளே கனிப் பாட்டி ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்க , அவரிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டனர். விக்ரம் திலீபனிடம் ,
“டேய் காலைல பேசும் போது திருநெல்வேலில இருக்கேன்ன … இங்க எப்படா வந்த ….”
“நீ என் நண்பனா இருக்கலாம் , இப்ப என் மாப்ள டா நீ , அரவிந்தும் இங்க இல்ல , புருஷனோட முதல் முறையா தாய் வீடு வர்ற என் தங்கச்சிக்காக வந்தோம் டா… வரும் போதே என் பிங்கி … அண்ணனுக்கு விருந்து தர அவனுக்குப் பிடிச்சதெல்லாம் வாங்கிட்டு வந்துட்டா … மாமியார் வீட்டு விருந்து சாப்பிட்டு வெய்ட் ஏத்திட்டுத்தான் கிளம்புற …
ராணி வரு அருகில் வந்து , “அம்மு மா மருமகன உன் அறைக்கு அழைச்சிட்டுப் போ.. குளிச்சிட்டு வந்து சாப்பிடுங்க … ”
“சரி” என்பதாக தலையாட்டியவள் விக்ரமை அழைத்துக் கொண்டு மாடியேறினாள், அரவிந்த் சென்னை வந்த போது இப்படித்தான் அனைவரும் கவனித்துக் கெண்டார்கள். அதே கவனிப்பு தன் கணவனுக்கும் கிடைக்கவும் , மகிழ்ச்சியோடு அவனுக்கு வழிகாட்டும் விதமாக முன்னே மாடியேறியவள் , மேலே வந்து படிகள் முடியும் இடத்தில் அவளும் வித்யாவும் நான்கு வருடங்களுக்கு முன்பு எடுத்த புகைப்படத்தைக் கண்டதும் , அதை மறைத்து நின்றுக் கொண்டாள்.
இப்போது விக்ரம் முன்னால் செல்லவும் அவனை அறைக்கு அழைத்துச் சென்று அவனுக்கு தேவையானதை எடுத்து வைத்து விட்டு வந்தவள், வெளியேறப் போக , அவளை அணைத்துக் கொண்டவன் ,
“இன்னைக்கு எழுந்த நேரத்துலருந்து உன்னைய கையிலயே பிடிக்க முடியல …. அப்பா வீட்டுக்கு வாரோன்னதும் அதுக்கும் மேல … காலைக் காட்டு ….” என்றவன் அவளை தூக்கிக் கொள்ள ,
” என்ன” என்பதாக காலைப் பார்த்த வருவிடம் ,
“கால் தரையிலயே படலயே … காற்றுல பறந்துட்டுத் தான இருக்கிற …..”
“ம்… இறக்கி விட்டு குளிச்சிட்டு வாங்க … நான் புஜ்ஜூக்குட்டியத் தூக்கணும்… ” எனச் சினுங்க ,
“முதல்ல என்னையக் கொஞ்சிட்டுப் போ…. லவ்வர்ஸ் டே அதுவுமா ஒரு கிஸ் கூடத் தரல ….” திமிறி இறங்கியவள் ,
“சொல்லுவீங்க .. சொல்லுவீங்க …நைட் எத்தனைக் கொடுத்தேன்….”
“அது நேத்து நைட் ….. இது இன்னைக்கு நைட் …. நீ இப்பத் தரல … நாளை மறுநாள் ஊட்டிப் போலம்ங்கிற பிளான … நாளைக்கே மாத்திருவேன்… அப்புறம் நீதான் எல்லாருக்கும் பதில் சொல்லனும்… இங்க எல்லாரும் ஒரே நாள்ல இப்படி வந்து வீட்டு மாப்பிள்ளைய கவனிக்கிறாங்கனா.… ஒன்னு அம்மாவா இருக்கனும் , இல்ல சித்தி ,பாட்டி, விதுவா இருக்கனும்… அவங்களுக்காக தான் நாளை மறுநாள் … இல்ல மாமா கிட்ட சொல்லிட்டு காலையிலயே உன்னை ஊட்டிக்கு தள்ளிட்டு போயிரலாம்னு நினைச்சேன் தெரியுமா…..” எனச் சிரிக்க , வருவோ
” என்ன ஊட்டியா….” என அதிர்ச்சியானவளிடம் ,
“ஏன் இவ்வளவு ஷாக் … அப்ராட் போக இப்ப முடியாது… சோ நம்ம ஹனிமூன் இங்க தான் …. மாமனார் வீட்டுக்கு வந்ததுப் போலவும் ஆச்சு … “அவளை கட்டிப்பிடித்து கழுத்தில் இதழ் பதித்தவன் , நம்ம ஹனிமூன் கொண்டாடுனது போலவும் ஆகுது … எப்படி….ஒரே கல்லுல … ” என்றவன் அதற்கு மேல் அவள் காதில் கிசுகிசுக்க ….” அவனைத் தள்ளி தோளில் அடித்தவள் , வெட்கத்தோடு
“விக்… கீ…. பேட் பாய் டா நீ… டாப் பிஸ்னஸ்மேன் பேசுற மாதிரியா பேசுற… பொண்டாட்டிய தள்ளிட்டு போவேன்கிற … இப்ப இப்படி…ச்சீ… ” என அவன் உதட்டில் செல்லமாக தட்டி ,
“டபுள் மீனிங்கா பேசுற…. சீக்கிரம் குளிங்க… எல்லாரும் வெய்ட் பண்றாங்க …. “என அறையை விட்டு வெளியேறப் போக ,
“ஹேய்…. அது பழமொழி மேடம் … யார் வேணாலும் சொல்லலாம் ….. இன்னும் நிறைய ஸ்டாக் இருக்கு …. ” என கண்ணடித்து சிரித்துக் கொண்டே குளியலறைச் சென்றான்.
வெளியே வந்தவள் … “ஊட்டிக்குப் போறோமா விக்கி….அப்பாக்கிட்ட முதல்ல பேசணுமே” எனப் படியிறங்க முற்பட்டவள்,
அந்தப் புகைப்படத்தை எடுத்து மறைவிடத்தில் வைத்து விட்டுத்தான் வேறு வேலைப் பார்த்தாள்.
அவனாக தன்னைக் கண்டுபிடித்து கேட்கும் வரை , அவளாகச் சென்று தான் தான் அந்தப் பெண் என்றுச் சொல்ல விரும்பவில்லை.
கீழே தந்தையைத் தேடிச் சென்றால் , அவர் ஏதோ அவசர கேஸ் என்று மருத்துவமனைச் சென்று விட்டார். வந்ததும் பேசிக் கொள்ளலாம் என இருந்து விட்டாள்.
குளித்து முடித்து வந்தவன் ,அவளறையை கண்கள் விரியப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒவ்வொரு பொருளும் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டிருந்தது. அவள் படிப்பு அதுதான் … ஒரு கட்டிட வல்லுனராக பார்க்கும் போது அவனால் வியக்காமல் இருக்க முடியவில்லை . நிறைய கைவினைப் பொருட்கள், பெரும்பாலும் அவள் செய்ததாக தான் இருக்க வேண்டும்.
அவன் ஒவ்வொன்றாகப் பார்த்திருந்தால் அவை அத்தனையிலும் விக்ரம் ஏதோ ஒரு வடிவில் அவற்றில் இருந்ததை கவனித்திருப்பான் .
அவள் வைத்திருந்த , செய்திருந்தப் பொருள்கள் சில அவனுக்கு சிரிப்பையும் வரவழைத்தது. சிறிது நேரம் கழித்து அண்ணன் மகனை கையில் வைத்துக் கொண்டு வந்தவளிடம் ,
” இப்படி என் மருமகன கையில வச்சிருந்தா , உன்னை இப்படி பிடிக்க மாட்டேன் , முத்தம் தர மாட்டேன்னு நினைச்சிட்டியா … ” எனக் கட்டிப்பிடித்து முத்தம் தந்தவனிடம் , குழந்தையை தந்து விட்டு தானும் குளித்து முடித்து இருவரும் குழந்தையைக் கொஞ்சிக் கொண்டேக் கீழே வர , திலீபன் தன் மொபைலிலிருந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள ,
“டேய் என்ன…. மாமியார் வீட்டுக்கு வந்தா இப்படி என்னையவே நோட்டம் விட்டுட்டுருப்பியா … எங்க ஃபோட்டோக் காட்டு ….” என அவன்ஃபோனை வாங்கிப் பார்க்க ,
“அரவிந்த் சென்னைலருந்து பேஷன்ட்ட (நோயாளிய) கவனிக்கிறானோ இல்லையோ , என் பேஷன்ட்ட (பொறுமைய) குறைச்சிடுவான் போலருக்கு மச்சான்…
திலீபா.. மாப்பிள்ளைக்கு பிடிச்சத வாங்கினியா… குளிச்சிட்டாங்களா, சாப்பிட்டாங்களா … பாப்பா சந்தோஷமா இருக்காளா ……ப்பா பாசமலருடா.. இப்ப இந்த ஃபோட்டோவ அவனுக்குத் தான் அனுப்பப் போறேன்…”
” எப்படி டா அரவிந்த் நினைச்சா ஆச்சரியமா இருக்கு …. அன்னைக்கு தங்கச்சிக்காக துடிச்ச துடிப்பப் பார்த்தேனே ….. அந்த நேரம் அம்மாவோ , வித்யாவோ சொல்லலனாக் கூட நானாவே உன் தங்கச்சிய கல்யாணம் பண்ணிக்கட்டுமானு கேட்டிருப்பேன்.”
பின்புறம் அவர்களை அழைத்துப் போக வந்த வரு….” நீ யாரு ….விக்கி … விக்கிரமாதித்யன் … என்னோட விக்ஸ்டப்பாவாச்சே…. மயக்கிற டா…” என்று நினைத்துக் கொண்டவள் , அருகில் வந்து உணவருந்த அழைத்துச் சென்றாள்.
“அதுடா சித்தி இல்லனதும் … ” என ஆரம்பித்த திலீபனும் அதோடு பேச்சை நிறுத்தி விட்டான்.விஸ்வநாதன் வர நேரமான தோடு ,குடும்பத்தினரோடு அமர்ந்து பேசிக் கொண்டு இருந்ததால் …
வருவால் அவரிடம் தனியாக பேச முடியவில்லை உணவருந்தி முடித்து அனைவரும் உறங்கச் செல்லுமுன் தாங்கள் ஊட்டிக்கு செல்ல இருப்பதை விக்ரம் சொல்லவும் , பெரியவர்கள் அனைவரும் ஒரு நொடி வருவைப் பார்க்க , அவள் நாதனிடம் புன்னகையோடு , அவரருகில் வந்து அமர்ந்து கைக்கோர்த்துக் கொண்டவள் ,
“நாங்கப் போய்ட்டு வாரோம் பா…” என்றாள். மகளின் அந்த ஒரு பதில் அவருக்கு மன நிறைவைக் கொடுக்க மகளின் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.
தூவும்…..