“தேன் துளி 26
தாய், தந்தை ,தங்கை என வெகு நாட்களுக்குப் பிறகு ஒன்றாக அமர்ந்து பேசிச் சிரித்த மகிழ்ச்சி மனதை உற்சாகப்படுத்த , அது முகத்திலும் பிரதிபலிக்க தங்கையுடன் பேசிக் கொண்டே மாடியேறியவன் தன்னறைக்குச் செல்ல , இருளில் பிரெஞ்ச் விண்டோ எனச் சொல்லப்படும் அந்த ஆளுயர ஜன்னலின் முன் இருந்த இருக்கை போன்ற திண்டில் அமர்ந்து தலையை ஜன்னல் கம்பியில் தலை சாய்த்து அமர்ந்திருந்தவளைப் பார்த்தவனுக்கு மனம் என்னவோ போல் ஆகிவிட்டது.
வேகமாக அவளை நெருங்கியவன் அவளை இரு கைகளில் அள்ளி, அவளிருந்த இடத்தில் அமர்ந்து தன் மடியில் அவளை அமர்த்திக் கொள்ள , கணவனின் அணைப்பை உணர்ந்தவள் குழந்தைப் போலவே அவன் கழுத்தைச் சுற்றி கைப்போட்டு நெஞ்சில் சாய்த்துக் கொண்டாள்.
அவள் மீதான காதலை அவன் வெளிப்படுத்தும் போதெல்லாம் அவள் உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விடும் போது ,
“நான் சாதாரண மனுஷன் … எல்லா ஹஸ்பன்ட்யும் தன் வொய்ஃப் கிட்ட இப்படித்தான் நடந்துக்குவாங்கனு நினைக்கிறேன் … நீ இப்படி அழும்போது எனக்கு சங்கடமா இருக்குடா …. உனக்கு அழுகை வர்ற மாதிரி இருந்தா உடனே எனக்கு முத்தம் தர ஆரம்பிச்சிரு … அழுகை காணாமப் போய்டும் ஓகே …..” என்று விளையாட்டாக சொல்ல , அவளோ …
“நீ எப்படி விக்கி சாதாரண கணவனா ஆவ…. நீ ப்ரீசியஸ் எனக்கு ….. யாருக்கும் கிடைக்காத பொக்கிஷம் … ” என எண்ணிக் கொள்வாள். இன்றும் அழுதால் எதுவும் சொல்வானோ என்று அழாமல் அமர்ந்திருந்தவளைத்தான் அவன் அனணத்தான்.
“ரிதூ… ஏன்டா இப்படி உட்கார்ந்திருக்க… நான் தான் வந்துட்டேன்ல … “அவள், ‘ஒன்றுமில்லை’ என்பதாக தலையை அசைக்க , அது அவன் கழுத்தில் குறுகுறுப்பை உண்டாக்க ,
“நீ இப்படி பண்ணினா எப்படி…. அதுவும் கண்டிப்பா ஏதோ ஃபீலிங்ஸ்ல இப்ப கண்ணீர் வேற வந்துருக்கலாம் …. வரலனா நீ முத்தம் கொடு … கண்ணீர் வந்துச்சா நான் துடைக்கிறேன்…. ரெடி ஸ்டார்ட் … ” எனவும் முகத்தை நிமிர்த்தி புன்னகைத்தவள் அவன் உதட்டில் தன் பூங்கரத்தை வைத்து விட்டு மடியை விட்டு இறங்க முற்பட ,
உதட்டில் இருந்த கரத்திற்கு முத்தமிட்டவன் , ” இரு அப்புறம் போகலாம் … “அவள் சைகை மூலமாக குளியலறையை காட்ட ,
“அங்க போகணுமா …சரி வா…” என அவளையும் சேர்த்து தூக்கிக் கொள்ள , கைகளிலிருந்து நழுவியவள் , அங்கிருந்த டீ கோப்பையை எடுத்துக் கொண்டு , குளிச்சிட்டு சாப்பிடுங்க … ” என்பதாக சைகையில் சொல்ல ,
“ஏன் சைகை … அழகா பேசுற… உங்கண்ணா நீ அழகா பாடுவனு வேற சொல்றாப்ல … எனக்கு உன் பழைய வாய்ஸ் கிளிப்ஸ் அனுப்புனா அனுப்ப மாட்டிக்கிற … விதுகிட்ட என்ன சொல்லி வச்சியோ … அண்ணா நான் அம்மா ஃபோன் வச்சிருந்தேன் அதுனால எங்கிட்ட எதுவுமில்ல …. அவங்க வீட்டுக்காரர் கிட்ட வாங்கி அனுப்புறேன்னவ இப்ப வரை அனுப்பல…..” ,
தோழியை நினைத்துப் புன்னகைத்துக் கொண்டவளிடம் ,
“வேற யாருகிட்டயும் கேட்க கொஞ்சம் தயக்கமா இருந்தது … சோ இப்ப நீ பாடுற … எனக்கு எதும் கிஃப்ட் தர நினைச்சா நீ பாடுறது தான் … ” என்றவன் , அவள் கையிலிருந்த டீ கோப்பையை வாங்கி ,
“ஆறிடுச்சு … இருந்தாலும் பரவால்ல…” என வாயருகே கொண்டு செல்ல , தலையை வேண்டாம் என்பதாக அசைத்துக் கொண்டே படக்கென்று பிடுங்க, அது அப்படியே அவள் மேல் கொட்டி விட்டது.
அதிக சூடு இல்லைதான் ஆனாலும் இளம் சூடாக இருக்கவும் பதறிப் போன விக்ரம் ,
“ரிது….சூடு இல்லயே …” எனப் பதற்றத்துடன் அவள் புடவை முந்தானைக் கொண்டு நெஞ்சில் துடைத்துக் கொண்டே , குளியலறை அழைத்துச் சென்று ஷவரைத் திறந்து அவள் உடலில் கைவைத்து துடைத்து விட ,
வருவுக்கு முன்பொருமுறை அவன் நடந்துக் கொண்டது நினைவில் வர , அவனைப் பார்த்துக் கொண்டே இருக்க , இப்போது கண்ணீர் தண்ணீரோடு சென்றது. அவனும் போட்டிருந்த உடையிலயே நனைய ,
அவன் கைப்பிடித்து , ” ஒன்னும் ஆகல….”
அவள் முகம் பார்த்தவன், ” ஏன் தடுத்த … நான்குடிச்சிருப்பேனே… பயந்துட்டேன்….” என ‘ஊஃப்’ என்றவன் ,இடுப்பில் கை வைத்து நின்றவனிடம்,
“அதுல என் கண்ணீர் பட்டுருச்சு… நீங்க குளிச்சிட்டு வாங்க ….” என்று விட்டு வெளியே செல்ல முயல,
“ஓ… காட்… அதுக்கா இப்படிப் பண்ணின… உப்பு டீ குடிச்சிருப்பேன்ல உன்னை….” என்றவன் , ஈரத்தோடு அணைத்துக் கொண்டவனது கரங்களின் பேதம் உணர்ந்தவள் ,
“முதல்ல சாப்பிடுங்க … ரொம்ப நேரமாகிருச்சு… ” என்றவள் , வெளியே ஓடி விட்டாள்.
வெளியே வந்து அவன் வராமலிருக்க வெளிப்பக்கம் தாழிட்டவள் , தானும் உடை மாற்றி , ஈரத் தலைக்கு ஹேர் டிரையர் போட்டு உலர்த்தலாம் என்று நினைத்தவள் , அவனுக்கு சாப்பிட எடுத்து வர வேண்டும் என்பதால் , குளியலறைக் கதவை திறந்து விட்டுச் சென்று விட்டாள்.
அறைக்குள் தட்டுடன் வந்தவள் , அதை மேசை மேல் வைத்து விட்டு திரும்ப , ஒரு ரோஜாப் பூங்கொத்தை அவள் முன் ஆங்கிலேயர் பாணியில் ஒரு காலை முழங்காலிட்டு ஒரு காலை நீட்டி அமர்ந்திருந்தவன் ,
“ஹாப்பி வாலன்டைன்ஸ் டே ரிது….” எனவும் ,புன்னகையோடு வாங்கிக் கொண்டவளிடம்,
“பிடிச்சிருக்கா… என்னோட கிஃப்ட் ” எழுந்தவாறே கேட்க ,
“ரொம்ப ….” என்றவள் பூங்கொத்துக்கு முத்தமிட்டு , அணைத்துக் கொள்ள ,
“நான் இதை சொல்லல அதை கேட்டேன்….” என தன் பெட்டிகள் இருந்த இடத்தைக் காட்டிக் கேட்டவன் …. ,
“அது எல்லாம் உனக்காகத் தான் ….”
அங்கிருந்த நான்கைந்து பெரிய பெரிய சூட்கேஸ்களைப் பார்த்த வரு ,
“நீங்க என்ன தந்தாலும் பிடிக்கும் , அதுவும் பிடிக்கும் … தேங்க்ஸ் விக்கி ” என்றவள் அவன் நெஞ்சில் முத்தமிட ,அவள் அருகில் மிகவும் நெருங்கி இடுப்போடு கட்டிக் கொண்டவன் ,
“எனக்கு இந்த முத்தம் பத்தலயே… இதை விட பெரிய கிஃப்ட் தந்துருக்கணுமோ… ”
“எனக்கு உங்கள விட பெரிய கிஃப்ட் என்ன இருக்கப் போகுது….” என்றவள் அவன் நெஞ்சில் சாய்ந்துக் கொள்ள ,
“அது தெரியப்போய் தானே… பல வருஷங்களுக்குப் பிறகு பெட்டி படுக்கைய எல்லாம் கட்டிட்டு வந்துருக்கேன் …” என புன்னகை முகமாக சொல்ல,
“இவன் என்ன சொல்கிறான் … ” எனக் குழம்பியவள் , சடுதியில் அர்த்தம் உணர்ந்து ,தான் உணர்ந்தது சரிதானா என்பது போல் கண்களும் முகமும் மலர அவன் முகம் பார்க்க ,
“உயிர இங்க வச்சிட்டு , உடம்ப மட்டும் அங்க வச்சிருந்தா எப்படி ….ம்” என முறுவலுடன் புருவம் உயர்த்த….
சொல்லெனா சந்தோஷத்தில் அழுகை வரும் போல் இருக்க , அதை அடக்க முற்பட்டவளுக்கு கண்கள் சிவக்க … பேச்சும் வராமல் போக … அவன் சொன்னது போல் இறுக கட்டிப்பிடித்து முத்தமிட ஆரம்பிக்க , அவள் மேல் விழுந்த வேகத்தில் பின்னிருந்த கட்டிலில் விழுந்தனர்.
முத்தமிடுவதை நிறுத்திவிட்டு , அவன் முகம் பார்த்து , ஏதோ சொல்ல வாய்திறக்க , அவளால் பேசவே முடியவில்லை , சாதாரணமாக அனைவருக்குமே உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேச்சு வராது ,வருவுக்கோ சொல்லவே வேண்டாம் … முடியவில்லை என்றதும் மறுபடியும் கட்டிப்பிடித்தவள் , திரும்பவும் முகம் நிமிர்த்தி …
“பா . . . . பாட்… “என்ன முயன்றும் வார்த்தைகள் வெளிவர முடியாத அவளின் நிலை உணர்ந்த விக்ரமிற்குமே கண்கள் கலங்கி விட்டது.…
தன் மீது இத்தனை அன்பா … காதலா … அவளின் கஷ்டம் பார்த்தவன் அவள் இதழைக் கைக்கொண்டு மூடிவிட்டு , இறுக பிடிக்க , இப்போது அவனிலிருந்து பிரிந்தவள் , அருகில் கிடந்த மொபைலை கைகள் நடுங்க , அழுத்தியவள் ஒரு ஹிந்திப் பாடலை ஒலிக்க விட்டு , கணவனின் தலையை இதயத் துடிப்பு கேட்பது போல் வைத்து அழுத்திக் கொண்டாள்.
அவள் சொல்ல முடியாத வார்த்தைகளை அந்த இதயத் துடிப்பு உணர்த்தியது …. அவனும் ஹிந்தி அறிந்தவனாதால் அர்த்தம் புரிந்தவன் , நெஞ்சில் சாய்ந்துக் கொண்டான்.
“பாஹோன்….கே ….. தர்மியான்…..
ஜானே க்யா போலே மன்…” இப்பாடலின் இடையில் வரும் ஒரு வரியானது , உதடுகள் சொல்ல முடியாதவற்றை இதயத் துடிப்பு சொல்வதாக அர்த்தம் வரும்….. இங்கும் வருவால் வார்த்தையாக்க முடியாததை அவள் இதயம் சொன்னது.
ஆம் …. உதடுகள் சொல்ல முடியாத வார்த்தைகளை அவை உணர்த்த … தன் உணர்த்தலை தன்னவளுக்கு தன் உதடுகள் கொண்டும் கைகள் கொண்டும் உணர்த்தினான் விக்ரமாதித்யன் .
ஓர் அருமையான அழகான கூடலுக்குப் பின் தன் நெஞ்சில் இளைப்பாறியவளிடம்,
“ரிது … அம்மா.. சித்தி …பாட்டி… தங்கச்சிங்க என்னைய அன்பா , அதட்டி , அழுதுக் கூட என்னைய இங்க வா…. எங்கக் கூட இருனு சொல்வாங்க , அப்பா, தாத்தா, சித்தப்பாக்கூட நம்மக்கிட்ட இருக்கிற பேர், புகழ் , பணம் இதுவே இன்னும் நாலு தலைமுறைக்கூட உட்கார்ந்து சாப்பிடுற அளவு இருக்கு , நீ சென்னைலருந்து பிஸ்னஸ் பாருனு சொல்லாத நாள் கிடையாது… ஆனா இப்போ … இந்த ஒரு மாசம் கூட உன்னால மட்டுமில்ல என்னாலயும் இருக்க முடியாம ஓடி வந்துட்டேன்….
எனக்கு ரெண்டு மனசா தான் இருந்தது … ஆனா அன்னைக்கு நீ வாய் திறந்து , நான் வாரேன்னு சொன்னப் பிறகு என்னால எப்படி இருக்க முடியும் ….
வீட்ல எல்லாரும் வான்னு சொன்னப்போ வராம … இப்ப உனக்காக உடனே வந்தது ஒரு கில்ட்டி ஃபீல் தந்தது … அது தான் அம்மாகிட்ட பேசப் போனேன்….. இப்ப பேசிட்டு வந்தப்புறம் மைன்ட் ரொம்ப ரிலாக்ஸா இருக்குடா…. ” என்றவன் தாய் தந்தையரிடம் பேசிவிட்டு வந்ததைப் பகிர்ந்துக் கொள்ள , வருவுக்கு வேறு என்ன வேண்டும் … அவனை நெருங்கிப் படுத்து தன் மன நிறைவை வெளிப்படுத்த ,
இருவரும் நிம்மதியான உறக்கத்திற்குச் சென்றனர்.