தேன் மழை 36
விக்ரமையும் வருவையும் முதன் முதலில் இணைத்து வைத்த விக்ரம் வீட்டுக் கட்டிலில் விக்ரம் அமர்ந்திருக்க , தன் தோள் வளைவில் நெஞ்சோடு சாய்த்து அணைத்து மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தான்.
இரவிலேயே அவளை அங்கு அழைத்து வந்து விட்டான். சங்கரியும் வயிற்றுச் சுமையோடு மாடியறைக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் …
“பாட்டி … இன்னைக்கு நைட் மட்டும் தானே … நாளைக்கு காலையிலயே சென்னைக்கு கிளம்பிருவோம்… நான் இருக்கேன்….” என்றவன் மனைவியை மெல்ல அறைக்கு அழைத்து வந்து விட்டான்.
“விக்கி … ”
“ம் … ” என்று மட்டுமே சொன்னவன் , இரு கைகளையும் அவள் வயிற்றின் மீது வைத்து குழந்தைகளின் அசைவை உணர்ந்துக் கொண்டிருந்தான்.
“விக்கி … ” , “ம்” கடுப்பான வரு , அவன் கைகள் இரண்டையும் கிள்ளி விடவும் …
“ஆ…. ரிது….”
” என்ன … ரிதுவா…” எனப் பொய்க் கோபம் காட்ட ,
“பம்கின்… பூசணி… பச்சை பூசணி …. மஞ்சபூசணி ….போதுமா… இப்ப என் பிள்ளைங்கக் கூட விளையாட விடு.. டியர்….” என்றவன் மறுபடியும் வயிற்றின் மேல் கை வைக்க , பிடித்துக் கொண்டவள் ,
“சொல்லு…..” “என்ன… சொல்ல ”
“டேய்…விக்ஸ்டப்பா … இப்ப சொல்லப் போறியா இல்லையா… நானும் வந்ததுலருந்து கேட்டுட்டே இருக்கேன் … என்னைய எப்படிக் கண்டு பிடிச்ச … கண்டுபிடிச்சனு … நீ மழுப்பிட்டே இருக்கியா … நீ சொல்ற வரை கைய வயித்துல வைக்க விடமாட்டேன்…..”
“சரி அப்ப இங்க வச்சுக்கிறேன் …” என அவன் கரங்களை ஏடாக் கூடமாக வைக்க , பிடித்தக் கரத்தில் தன்னையறியாமல் கடித்து விட்டவள்,
அவனது “ஆ” என்ற சத்தத்தில் , “அச்சோ…. சாரி.. சாரி…” எனத் தடவி விட , முன்பொருமுறைக் கடித்த நியாபகம் வர ,
“விக்கி … ப்ளீஸ்… ப்ளீஸ்.. எப்படிக் கண்டு பிடிச்ச …..”
“நீயே சொல்லேன் டியர் … ஆறு மாசமா கனவுல மட்டும் ரசிச்சத … நிஜத்துல ரசிக்கவிடேன்டா .. ”
என்றவன் சரிந்துப் படுத்து , கன்னத்தையும் வயிற்றில் வைத்துக் கொண்டான்.
“ம்…. திலீபண்ணாக்கிட்ட கேட்டியா … ”
“இல்லயே … ” , “”அப்போ நீ என் கபோர்ட்ல சேலை எடுக்கும் போது … நான் அடுக்கி வச்சிருந்த விக்ஸ்டப்பாவா பார்த்திருப்ப …
” ஆமா…. நிறைய டப்பா வச்சிருந்த … பெரிய பக்கெட் கூட விக்ஸ்டப்பா போல பெயின்ட் பண்ணியிருந்த … அது என் ஞாபகமாதான …..”
“போ..விக்கி… அப்ப நீ இந்த சேலையோட வச்சிருந்த அண்ணா கல்யாணத்துக்கு கட்டியிருந்த புடவையப் பார்த்துருப்ப…”
” என்ன அந்த சேலையா… அது அன்னைக்கு நீ குப்பைல போடல….”
“ம்…. உதைப்பேன் உன்ன …” என்றவள் , வயிற்றில் இருந்த குழந்தைகளிடம், “பசங்களா…. இப்ப ரெண்டு பேரும் உங்கப்பாவ நல்லா உதைக் குடுங்க … நீங்க வந்ததும் நான் குடுக்கிறேன் …..”
” இப்பவே இதால ஒன்னு இங்க குடு …” என உதட்டை பிதுக்க … தட்டிவிட்டவள் ,
“நீ செலக்ட் பண்ண சேலை… நீ பார்க்கணும்னு ஆசையாக் கட்டிட்டு வந்தா …குப்பைல போடலயானு கேட்கிறே… ” எனவும் அவனுக்கு ஆச்சரியமாகிப் போயிற்று , ” நானா ஃநான் எப்போ …” எனக் கேட்டவனுக்கு அன்றைய தினத்தை ஞாபகப்படுத்தியவள் , “பின்ன எப்படித்தான் டா… என்னைக் கண்டு பிடிச்ச … ” என அவள் இந்த வீட்டின் ஸ்கேல்..மாடல்… காப்பாற்றிய போது தந்த சட்டை என ஒவ்வொன்றாக சொல்ல சொல்ல …. விக்ரமிற்கு அவளுக்கு தன் மீதான காதலை நினைத்து பிரமிப்பாக இருந்தது.
எழுந்து அமர்ந்தவன் , “ரிது …. நீ சொல்ற சிச்சுவேஷன் … டைம் எல்லாம் பார்க்கும் போது … நீ என்னை தான் விரும்பியிருக்கனு இப்பத் தெரியுது … ஆனா நான் … ”
“அதுதான் தெரியுமே என் ட்யூப் லைட் அத்தான் … யாரையோ நான் விரும்புறதா நினைச்சார்னு ஊர்லயே சொல்லிட்டீங்களே.. ”
அந்த நேர அவனதுப் பார்வையை சொன்னவன் ….” வரு எனக்கு ஒன்னு மட்டும் இன்னும் புரியல … அப்படி நான் என்ன செய்தேன்னு என் மேல இவ்வளவு லவ் … அதுவும் பார்த்த ரெண்டு மூணு நாளிலேயே … நான் உன்னை சைட் அடிச்சேன் தான் … நல்லா தள தள தக்காளி னு ….” என அவன் சொன்ன விதத்தில் ஒரு அடியையும் நெஞ்சில் வாங்கிக் கொண்டவன் ,
“நாங்க குற்றாலம் ட்ரிப் போனப்ப , பிரதாப் உன்னைய விரும்புறேன்னு சொன்னப் பிறகு …சும்மா க் கூட பார்க்கிறது தப்புனு நான் அதிகமா யாரையும் பார்க்கக் கூட இல்லை. இப்ப நீ தான் அந்தப் பொண்ணுனு தெரிஞ்சப் பிறகும் … அன்னைக்கு காப்பாத்திக் கூட்டிட்டு வந்ததால என்னைய இத்தனை நாளா நினைச்சிருப்ப … அது நமக்கு கல்யாணம்னதும் காதலா மாறியிருக்கும்னு நினைச்சேன்…. இப்ப நீ சொல்றது எல்லாம் எனக்கு ஆச்சரியமா இருக்குடா…. பிரதாப் போட உன் கல்யாணப் பேச்சு நடந்தப்போ ஏதோ குடும்பச் சண்டை அதுனால இல்லைனு நினைச்சிட்டு இருக்கேன் ……” என்றவன் , இப்போது குழந்தைகளை விட்டு மனைவியின் முகத்தை கைகளில் தாங்கியவன் … அவள் விழிகளோடு விழிகள் கலந்துக் கொண்டே….
“ரொம்ப கர்வமா இருக்கு… இந்தக் காதல என் நெஞ்சுல சுமக்கிறது … எப்போ … எப்படி … ”
அவன் விழிகள் கேட்டக் கேள்விக்கு… விழி நீரால் பதில் தந்தவள் … அன்றைய மொட்டை மாடி இரவை ஞாபகப்படுத்தி ….
“விக்கி … ஒரு பொண்ண சாதாரணமா பார்க்கும் போதே தப்பா பார்க்கிற கண்களுக்கு மத்தியில … சுய உணர்வு இல்லாத நிலையிலும் கண்ணியமா நடந்த உன் மேல காதல் வராம இருந்தா தான் அதிசயம்…..” என்றவள் அவன் கன்னத்தில் முத்தமிட்டு ,
“உனக்குத் தெரியுமா …. நான் பெரியவளாகிட்டேன்னு நானே போய் … எங்கப்பாகிட்ட சொன்னேன்.… அப்போ எங்கம்மாவ ரொம்பத் தேடுனேன் …அதுக்கப்புறம் அம்மா இல்லனா இப்படித்தான் வாழப் பழகிக்கணும்னு என்னோட வாழ்க்கை முறைய அமைச்சுக்கிட்டப் போதும்னு இருந்த வக்கிட்ட … நீ எப்பலாம் என்னைத் தேடுறியோ அப்ப நான் வருவேன்னு சொன்னது போல , அன்னைக்கு நைட் அம்மாவ நினைச்சு அழுதுட்டே தூங்கிட்டேன்… முழிச்சு வந்ததும் , சுயநினைவு இல்லாதப்பவோவும் நீ சொன்ன அம்மா போல நினைச்சுக்கோ….. மறக்கவே முடியாது விக்கி … இதே வார்த்தைய நீ சுயநினைவோடவும் சொன்னப்ப …. ஐ லவ் யூ மை டியர்..விக்ஸ்டப்பா…” என அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டவள் .
இப்போ இன்னும் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்….” என்றவள் ,
“சரி இப்போ சொல்லுங்க … எப்படிக் கண்டுபிடிச்சிங்க… ”
“ம்… இந்த பம்கின் மாதிரி உடம்பால தான் …. நல்ல புஸ் புஸ் கன்னம் பார்த்து தான் …..” எனச் சிரிக்க …
“இல்ல…. ஐ நோ மை விக்கி … எத்தனை வருஷமா உன்னை ஃபாலோ பண்றேன்… சொல்லுங்க… ” என அவன் தாடைப்பிடித்து விழிகளைப் பார்க்க ,
மனைவியின் அன்பிலும் , அவனை அறிந்த அவளின் காதலிலும் புன்னகைத்தவன்,
“ரிது …. நான் கடைசியா சைட் அடிச்ச பொண்ணு நீ தான்னா நம்புவியா… உன்னை முதல்ல அழகா இருக்கிறான்னு எல்லாப் பொண்ணுங்களையும் பார்க்கிற மாதிரி தான் பார்த்தேன். ஆனா பிரதாப் விரும்புறான்னு தெரிஞ்சதும் … சும்மாக் கூட யாரையும் பார்க்கல….ஆனா ஏதோ ஒன்னு உன்னைய கவனிக்க வைக்கும் ….. ” என்றவன் சிறிது தயங்கி ,
நீயே என் மனைவியா வந்ததால இப்ப சொல்றேன்னாலும்… நிஜமாவே வேறப் பொண்ணா இருந்தா….அதுதான் யோசிச்சேன்.. இப்ப அவனுங்கள கொன்னுப் போடனும்ங்கிற வெறி வருது …. ஆனா அப்போ யாரோ ஒரு பொண்ணுங்கிற போய் தான நான் வெளியத் தெரியக்கூடாது .. அப்படி இப்படினு யோசிச்சுருக்கேன்… இதுவே கீதுவுக்கோ … விதுவுக்கோ நடந்திருந்தா நான் அப்படி இருந்திருப்பேனா…. ஒரு பக்கம் கோழையா இருந்துட்டேனோனு … இப்படி நிறைய … ஆனாலும் அவனுகள்ல இரண்டு பேர் இந்த உலகத்துல இப்ப இல்ல…. இன்னும் ரெண்டு பேர் இருந்தும் இல்ல….
அதோட யாரோ ஒரு பொண்ணு கண்கள் மனசுல அழியாம இருந்துருக்குனா….அதுவும் கொஞ்சம் கில்ட்டி ஃப்லிங்கா வேற இருக்கா….” என சீரியசாக பேசியவனிடம்… அந்த எண்ணம் போக்கும் பொருட்டு ….
“நீ இப்ப அதையெல்லாம் விடு …. எப்படி நான் தான் பம்கின்னு எப்படி தெ…ரி…ஞ்… சது ..” என ராகமாக கேட்க ….
அவனும் குறும்புடன் , “எனக்கு சந்தேகம் முதல்லயே வந்தா அப்பவே கண்டு பிடிச்சிருப்பேனே டியர் … இப்ப தான சந்தேகம் வந்துச்சு … அது தான் இப்பக் கண்டுபிடிச்சேன்…” என சிரிக்க ,
“விக்கி … என்னைய டென்ஷனாக்காத … விளையாடாம சொல்லு… எனக்குப் புரியல … ”
“முதல் தடவை உன் கன்னம் பிடித்து சந்தனம் பூசும் போது உன் வாய மூடினேன் இல்லையா … அப்ப உன் கண்கள் மட்டும் பளிச்சுனு என்னைக் கவர்ந்ததோ என்னவோ… அது மனசுல பதிஞ்சுருச்சு … அப்புறம் ஒரு நாள் நீ கார்ல பின்னால உட்கார்ந்து அழுதப்போ ரியர் வியூ மிரர்ல உன் கண்ணு மட்டும் தெரிஞ்சது … உடனே உன் பிரச்சினை என்னனுக் கேட்டுத் தீர்க்கணும்னு தோணுச்சு … கேட்டேன் … ஆனா என்னால தான் அழுதன்னு இப்ப சொல்ற … அப்பத்தெரியாதே….” எனப் புன்னகைத்தவன் ,
இப்போது அவளை இறுகப் பிடித்துக் கொண்டு … “நாம சந்திச்ச கடைசி இரவு …. எனக்கு எத்தனை வருஷமானாலும் மறக்காது டியர் , ….
அப்பவும் நீ பின்னாடி உட்கார்ந்துருக்கப்ப அழுதுட்டே வந்த …. அப்பவும் உன் கண்கள் மட்டும் தான் பார்த்தேன் … இப்படி உன் கண்கள் என் மனசுலப் பதியப் போய் தான் … நம்ம கல்யாணம் முடிஞ்சு கன்னியாகுமரி போகும் போது … ” என்றவன் அந்த கண்களில் இப்போதும் முத்தமிட்டவன் ,
“இன்னைக்கு மேடையேறும் போது தான் பிரதாப் மனைவி வேற ஒரு பொண்ணுனு தெரிஞ்சது … அப்ப அரவிந்த் தங்கச்சினு யோசிச்சுட்டே உன்னையப் பார்த்தா … இந்த கன்னங்கள் உப்பி … கண்கள் மட்டும் பளிச்சிடவும் தான் … இந்த கண்கள் என்னை ஏன் மயக்கிச்சு … அதுவும் நீ கேட்கிற ‘என் கண்கள் சொல்லலயா” … அப்புறம் அம்முனு உன்னையக் கூப்பிடுறது …. இப்படி எல்லாம் ஞாபகம் வந்து எல்லாத்தையும் கோர்த்து பார்க்க வச்சது … உனக்கு சந்தனம் வைக்கும் போது அது கன்ஃபர்மேயாகிடுச்சு…. அப்படித் தெரிஞ்சதுதான் … வரு அலைஸ்… அமிர்தா அலைஸ்… அம்மு அலைஸ்… வர்ஷினி அலைஸ்….வர்ஷூ அலைஸ் அமிர்தவர்ஷினினு ….” சொன்ன அடுத்த நொடி….விக்ரமின் முகம் முழுவதும் வரு முத்தமிட ஆரம்பித்து விட்டாள்.
” ஹேய் என்னடா கொஞ்சமாவது உனக்கு கோபம் வரும்னு நினைச்சேன் …” எப்படி அந்தப் பொண்ணு கண்ணு உன் மனசுல பதியலாம்…. நானா இல்லாம இருந்தா அப்படி இப்படினு… நீ இப்படி கிஃப்ட் அள்ளி வீசுறியே… ”
“விக்கி …நீயே என்னை அடையாளம் தெரிஞ்சுக்கணும் … ஆனா அது யாரும் உன்கிட்ட சொல்லியோ … இல்ல நான் உன் நினைவா வச்சிருந்த பொருட்களை வச்சோ இருக்கக் கூடாதுனு நினைச்சேன் … அப்படி அது எல்லாம் என்னை உனக்கு ஞாபகப்படுத்தினா அது இத்தனை வருஷமா நான் உன் மேல வச்சிருந்த காதலுக்கான மரியாதை இல்லயே … இப்போ நீ சொன்னத வச்சு அப்படியில்லனு தெரிஞ்சதும் என் காதலுக்கு கெளரவம் கிடைச்ச ஃபீல் ….” என நெஞ்சில் சாய்த்தவள் , கழுத்தில் முத்தமிட்டவன் ,
” ஆனாலும் காதலுக்காக இப்படி நாலு வருஷம் பேசாம இருந்திருக்கியேடா … அதை விட காதல் பேச விடாம பண்ணிருச்சே டா…” என வருத்தத்தில் சொல்லியவனிடம்,
“ஷ் … காதல் பத்தி தப்பா பேசாதே….நீ தானே சொன்ன… என்னைத் தவிர யாருகிட்டயும் பேசக்கூடாதுனு … அது தான் பேச ட்ரைப் பண்ணல… சரி சொல்லு இப்ப நல்லா பேசுறேனா… எப்படி இருக்கு என் பேச்சு ….”
“மழை … தே…. ன் மழை” என ஒரு திரைப்படத்தில் வரும் வசனம் போல் சொல்லிக் காட்டியவன் ….தேனிதழ்களைத் தீண்டி தேன் பருகினான்…
விடியலில் , வயிற்றில் இருந்த கணவனின் கையை இறுகப் பற்றிக் கொண்டவள், தன் உடலில் நிகழும் மாற்றங்களைச் சொல்ல , சங்கரியையும் ராணியையும் துணைக் கழைத்துக் கொண்டு அந்த அதிகாலை வேளையில் நெல்லையிலிருந்த புகழ் பெற்ற தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.