பேராசிரியர் ஜெயராஜிடம் பேசியதிலிருந்து இளம்பருதியின் மனம் ஒரு நிலையில் இல்லாது தவித்தது. ‘அவர் எதுக்கு என்னோட தீசிஸ் எங்க இருக்குன்னு கேட்கணும்??’ என அவன் ஏதேதோ சிந்தித்துக்கொண்டு தன் நண்பனை காண வந்தான். ரகு அவனைக் கண்டதுமே……. அவன் ஏதோ சிந்தனையில் இருக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டான். “என்னாச்சுடா சார பார்க்க தானே போன ஏன் ஒரு மாதிரி இருக்க?” என்றான் நண்பனாக “ஒன்னும் இல்லடா” என்றான் இளம்பரிதி
“ஒன்னும் இல்லையா? அதான் உன் மூஞ்சில எழுதி ஒட்டி இருக்கே சார் எதுவும் சொன்னாரா”
“இல்லடா என்னோட ப்ராஜெக்ட்
பத்தி கேட்டார்…….. சொன்னேன் ஆன அவர் முகமே ஒரு மாதிரி தப்பா இருந்த மாதிரி ஒரு ஃபீல்……. இன்னைக்கு எனக்கு…… இல்ல நான் தான் இமேஜின் பண்ணிக்குரேனா?……. தெரியல சரியா”
“கண்டிப்பா நீ தான் இமேஜின் பண்ணி இருப்ப” என்றான் நண்பன் “இந்த காலேஜ்லயே அவரை மாதிரி ஒரு நல்ல சார் கிடையாது அவர் ஒருத்தர் தான் எப்பவுமே பாசமா பேசுவார் மத்த எல்லாரும் சிடுசிடு கடுகடு தான்”
“அதுவும் சரிதாண்டா……..” என்ற
அவன் மனதை திசைதிருப்பும் பொருட்டு ரகு “ஆமா அந்த பொண்ணு ஏன் உன்ன அத்தான்னு கூப்பிடுது”
“யாருடா நளினியா???”
நான் சொல்லாமலே உனக்கு யாருனு தெரியுது அப்படின்னா……… உங்கள் ரெண்டு பேர் குள்ள ஏதோ இருக்கு. “
“அதெல்லாம் ஒன்னும் இல்ல டா” சற்று எரிச்சலாகவே கூறினான் அவன்.
“ஒண்ணுமே இல்லாம தான் அந்த பொண்ணு காலேஜுக்கு வந்த மொத நாளே உன்ன அத்தான்னு கூப்பிடு தா?” என்றான் இடக்காக
“அத்தான் கூப்பிட்டா…… அவ்ளோதான டா அது ஏதோ பெரிய தப்பு மாதிரி பேசிட்டு இருக்க”
“டேய் எங்க ஊர்ல எல்லாம் முறைப்பையனதான் அத்தான்னு கூப்பிடுவாங்க”
“ஆனா எங்க வீட்ல எங்க அப்பாவோட தங்கச்சி பொண்ணு மட்டும் தாண்டா என்ன அத்தான்னு கூப்பிடுவா” என்றான் சிரிப்பை அடக்கிக் கொண்டு.
ரகு அதிர்ச்சியடைந்தான் “என்னடா சொல்ற நளினி உன் அத்தை பொண்ணா?”
[the_ad id=”6605″]
“அத்த பொண்ணு எல்லாம் இல்லடா அப்பாவோட தங்கச்சி பொண்ணு”
‘இவன் நம்மல கிறுக்காக்காம விட மாட்டான் போலயே……’ என்று நினைத்தபடி
“டேய் அப்பாவோட தங்கச்சி அத்தைதான டா”
“இங்க பாருடா எனக்கு இந்த மாதிரி வெட்டியா பேச எல்லாம் டைம் இல்ல ஆனா உன் மரமண்டைல நல்லா ஏத்திகோ எனக்கு அத்தைலாம் கிடையாது நளினி என்னோட அப்பாவோட தங்கச்சி பொண்ணுதான்” புரிஞ்சுதா என்றான்
“புரிஞ்சமாரி இருக்கு டா……” என்றான் தெளிவாக குழம்பிய ரகு.
“சரி அத விடு நம்ம டிபார்ட்மெண்ட்ல எத்தனை பேர் நேம் கொடுத்திருக்காங்க இன்னைக்கு காம்பெடிஷன்க்கு”
“நிலைமை மிகவும் கவலைக்கிடம் தான் மச்சான் அஞ்சு பேரு தான் கொடுத்துருக்காங்க….. உன் அத்தை பொண்ணுக்கு வேற ஏதோ டவுட்டாம் உன் கிட்ட தான் கேட்கணுமாம்.”
“அத்த பொண்ணு இல்ல அப்பாவோட தங்கச்சியோட பொண்ணு” திருத்தினான் அவன்
. ” ஐயோ இந்த விளையாட்டுக்கு நான் வரல அந்த நளினி பொண்ணுக்கு டவுட்டாம்”….
“டவுட் கேட்டா கிளியர் பண்ணி அனுப்ப வேண்டியது தானடா”
“கேட்டா தானடா கிளியர் பண்ண முடியும் அவ உன்கிட்ட தான் கேட்பேன்னு சொல்றா”
“காலையிலிருந்து ஆயிரத்தெட்டு டென்ஷன் மனசு வேற சரி இல்ல டா இப்போ உன்ன நம்பி ஒரு பொறுப்பை ஒப்படைச்சிட்டுப் போனா நீ கதை சொல்லிட்டு இருக்க”
“என்ன மனசு பிரச்சனையா? படபடவென அடிக்குமே”
“ஆமாடா….”
“இதுக்கு பேரு தான்டா லவ்
அங்க பாரு உன் ஆள் வர்றா
நீ படமெல்லாம் பார்த்ததில்லையா லவ் பண்றவங்க கிட்ட வந்தா மனசெல்லாம் படபடன்னு அடிச்சுக்தும் அதான் உனக்கு இப்படிலாம் நடக்குது”
“அது இருக்கட்டும்….. . இப்ப இங்க ஒருத்தன் அடிவாங்கி சாகப் போறான் டா”
“யார்டா…..”
“ம்ம்ம் நீ தான் ஒழுங்கா ஓடி போயிரு”
” புரியுது லவ்வர்ஸ் நடுவுல நான் எதுக்கு நந்தி மாதிரி…….”
“நான் கிளம்புறேன் …..”
“அடிங்ங்க…..” என்று கூற அதற்குப் பின் அங்கு நிற்க நம் ரகு என்ன பைத்தியமா? ஓடிய போய் விட்டான்.
அவன் போனதும் அடுத்த பிரச்சனை பரிதியை நோக்கி வந்தது
அது நம் நளினி தான்….. ‘ஐயோ என ஆனது பரிதிக்கு……. கொஞ்ச நேரம் ரிலாக்ஸா யோசிக்க விடுறாங்களா?’ என அவன் நொந்து கொண்டிருக்கையில்…….
“அத்தான் நான் காம்பெடிஷன் ல பாட்டு பாடவா டான்ஸ் ஆடவா? என்று தன் மிகப் பெரிய சந்தேகத்தை எடுத்து வைத்தாள். ‘அவனவன் எவ்ளோ கடுப்புல இருக்கான் இவளுக்கு என்ன மாதிரி டவுட்டு வருது பாரு……’
“நீ பாடுனா கேட்கிறவன் செத்துருவான் ஆடுனா பாக்குறவன் செத்துருவான் அதனால ஒன்னும் பண்ணாம இரு அதுதான் எல்லாருக்கும் நல்லது” என கூறி சிரிக்க
“அத்தான் என்னை டீஸ் பண்றீங்களா? மார்க் மை வோட்ஸ்…..இன்னைக்கு நான் பாடபோறேன்…. ஆடவும் போறேன்….அன்ட் தென் என்னோட ஃபேன்ஸ் லிஸ்ட் கூட போகுது அதைப்பார்த்து நீங்க பொறாமைப்பட போறீங்க …….” என்று அவனுக்கு பளிப்புகாட்டி சென்றவளை கண்டு அவனுக்கு சிரிப்பு தான் வந்தது.
அவனுடைய காரணம் தெரியாத மனஅழுத்தமும் ஓரளவு மட்டுப்பட்டிருந்தது.
எதையோ முடிவு செய்தவனாய் ஆராய்ச்சிக் கூடத்தை நோக்கி சென்றான்.
[the_ad id=”6605″]
கல்லூரியே குதூகலமாய் ஆட்டம் பாட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருந்த வேளையில்….. கல்லூரி முதல்வர் அறையில் ஜெயராஜ் இளம்பரிதியின் ஆராய்ச்சி குறித்து……. அதாவது அவனுடைய ஆராய்ச்சியால் விளையும் பாதகங்களை குறித்து கல்லூரி முதல்வரிடம் உறைத்துக் கொண்டிருந்தார்….. உண்மையில் அவர் உறைத்தவற்றில் பல பொய்யாய் சித்தரிக்கப்பட்டவை……
இந்த உலகில் ஆபத்தான ஆராய்ச்சிகள் எப்பொழுதும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன அணு உலைகளே அதற்கு மிகச் சிறந்த சான்றாகும் அளப்பரியபாதிப்புகளை அணு உலைகள் ஏற்படுத்திய பின்பும்…….. இன்றளவும் அவை இயங்கிக் கொண்டுதானே இருக்கின்றன……
ஆயினும் கல்லூரி அளவில் எதாவது ஆபத்தான ஆராய்ச்சிகள் நிகழ்த்தப்பட இருந்தால் அதற்கு கல்லூரி நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும்.
இவ்வாறு பற்பல காரணங்களை கூறி
அவனுடைய இந்த ஆராய்ச்சியை நிறுத்த வேண்டும் என்று கல்லூரி முதல்வருக்கு ஜெயராஜ் வலியுறுத்திக் கொண்டிருந்தார்.
அவரிடம் இருந்து அதற்கு ஒரு ஆமோதிப்பான தலையசைப்பு பதிலாக கிடைத்த பின்னர் தான் அவருக்கு நிம்மதியாக இருந்தது.
இது இளம்பருதியின் ஆராய்ச்சிக்கு முடிவாக அமையுமா???
அந்த நாள் ஆடல் பாடலுடன் கழிய நாளின் இறுதியில்….. நளினி அவள் கூறியது போலவே … இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்றிருந்தாள்.
வீட்டிலும் அந்த போட்டியை பற்றியும் அவள் அதில் வெற்றி பெற்றதை பற்றியுமே தன் அத்தை மாமாவிடம் வழவழத்துக்கொண்டிருந்தாள். அவளுடைய பேச்சை தான் ரசித்துக்கொண்டிருந்தான். பின்னே அவன் தான் அவளுடைய ரசிகனாகி பல மணி நேரம் கடந்துவிட்டதே!!
மறுநாள் காலை வகுப்பறையில இளம்பரிதி கவனமாக பாடத்தை கவனித்து குறிப்பெடுத்துக் கொண்டிருக்கையில் அவனுக்கும் முதல்வர் அறையில் இருந்து அழைப்பு வந்தது. அவன் அவருடைய அறையை அடைந்ததும்…….. படபடவென கோபமாக பொரியத் தொடங்கி விட்டார் ……….
“என்ன ஏதோ வைரஸ் கண்டுபிடிச்சு இருக்கியாம் நாட்டில ஏற்கனவே இருக்கிற நோய் பாத்தாதா நீயும் புதுசா வைரஸ் கண்டுபிடிச்சு….. என்ன பண்ண போற……”
” சார் ப்ளீஸ்…….. இட்ஸ் நாட் அ டிசீஸ் காசிங் வைரஸ் இட்ஸ் அ டிசீஸ் க்யூரிங் வைரஸ்”
” ஐ டோன்ட் வான்ட் எனி எக்ஸ்பிளநேஷன்…… முதலில் நீ சொல்லு யார் உனக்கு பர்மிஷன் கொடுத்தா…… இந்த ஆராய்ச்சிய பண்றதுக்கு?”
“சார்…… ” என்று அவன் ஆரம்பிக்கயிலே.
” உனக்கு கைட் யாரு…… பர்மிஷன் இல்லாம காலேஜ் லேப் யூஸ் பண்ணி இருக்க…….யூ கேன் பி டிஸ்மிஸ்ட் ஃபார் திஸ் ஆனா நீ ரொம்ப நல்லா படிக்கிற பையன் அதனால உன்னை சஸ்பெண்ட் பண்றதோட விடுறேன் இந்த ஆராய்ச்சி பண்றதை இத்தோட நிருத்திக்க அண்டு யூ ஆர் சஸ்பெண்டட் ஃபார் 10 டேஸ்……. நீ போகலாம் “
என்று கூறி அவன் பேசுவதற்கு கூட இடமளிக்காது சென்றுவிட்டார்.
இளம்பருதி கல்லூரி முதல்வர் அறையை விட்டு வெளியே வந்தவுடன் அவனை எதிர்கொண்டார் ஜெயராம்.
” என்னப்பா பிரின்ஸிபல் சார் உனக்கு பர்மிஷன் குடுத்துட்டாரா? நான் உனக்காக நேத்து அவர்கிட்ட ரொம்ப நேரம் பேசினேன். உன்னோட ப்ராஜெக்டோட ப்ரோஸ் (நன்மைகள்) பத்தி எவ்வளவோ எடுத்துச் சொன்னேன் பட் அவர் கொஞ்சம் பயந்த மாதிரி இருந்தது. என்ன இருந்தாலும் நீ சொல்ற மாதிரி வராது இல்லையா நீ சொன்னதும் அவரு கண்டிப்பா உனக்கு பர்மிஷன் கொடுத்திருப்பார்…….. என்ன நான் சொல்றது கரெக்ட் தானே?” தேனொழுக பேசினார் ஜெயராம்.
“இல்ல சார் பிரின்சிபால் சார் ரொம்ப பயப்படுறாங்க இந்த ப்ராஜெக்ட் டேஞ்சர்ன்னு நினைக்கிறாங்க….என்று அவன் கூற
“நான் வேண்ணும்னா…… மறுபடி உனக்காக பேசட்டுமாப்பா?”
“இல்ல வேணாம் சார் நான் இந்த ப்ராஜெக்ட டிராப் பண்ணலாம்னு இருக்கேன். சார் சொன்ன அப்புறம் தான் எனக்கு இந்த ரிசர்ச்சோட கான்ஸ் (தீமைகள்) புரியுது.
என்று அவன் கூறுகையில் அவர் முகத்தில் ஒரு நிம்மதி படர்ந்தது.
” நான் கூட யோசிச்சேன் பா….. உன்னோட ரிசார்ச்சில் இருக்கிற டிராபாக்ஸ் பத்தி…… பட் அதையெல்லாம் உன் கிட்ட சொல்லி உன்னை டிஸ்கரேஜ் பண்ண வேண்டாம்னு தான் அமைதியா இருந்தேன்.”
என்று அவர் கூறுகையில் பரிதியின் இதழ்களில் ஒரு மெல்லிய புன்னகை படர்ந்தது. ஆனால் அது விரக்தி புன்னகையா??? நக்கல் புன்னகையா???
சில இடங்களில் சத்ரியனாய் இருப்பதை விட சானக்கியனாய் இருந்தால் தான் வெற்றி அடைய முடியும்.
அன்று மாலை ரகு சோகமே உருவாய் பரிதியின் வீட்டிற்குள் நுழைந்தான். அப்பொழுது இளம்பரிதி அவன் அன்னையுடன் அமர்ந்து தேனீர் அருந்திக் கொண்டிருந்தான்.
“டேய் என்ன தானடா சஸ்பெண்ட் பண்ணி இருக்காங்க நீ ஏண்டா இவ்வளவு சோகமா இருக்க ?” என்று அவன் வினவிக்கொண்டிருக்கும் போதே தாமரை ரகுவிற்கும் தேனீர் கொண்டு வந்தார்.
“சோகமா இருக்கேனா உன்மேல சம கோவத்துல இருக்கேன்” தாமரை கையில் இருந்த தேனீர் கோப்பையை வாங்கியவாரு கூறினான்.
நண்பர்கள் பேச இடைவெளி அளித்து தாமரை உள்ளே சென்று விட்டார்.
“என்னடா கோபம்” என்று அவன் கேட்க.
“எதுக்குடா என் லாக்கரயும் உன் லாக்கரையும் எக்ஸ்சேஞ்ச் பண்ண?? “உன் கிட்ட கேட்டுட்டு தான மச்சான் பண்ணேன்”
“கேட்ட ஆனா உண்மைய சொன்னியா?உன் லாக்கர் ஒழுங்கா லாக் ஆகதுன்னு சொன்னியா?”
“லாக் ஆகுமேடா என்னாச்சு அப்படியே
லாக் ஆகலனா கூட உனக்கு என்னடா பிரச்சனை உள்ள பிஸ்கட்டும் ஸ்னாக்ஸும் தான வச்சிருக்க?”
[the_ad id=”6605″]
“என்னடா நெனச்சிட்டு இருக்க உன் மனசுல …… இவ்ளோ நாள் லாக்கில்லாத உன்னுடைய லாக்கரில உன்னோட திங்ஸ் தானா வச்சிருந்த எதாவது ஆச்சா……. ஆனா இன்னைக்கு ஒரு நாள் உன் லாக்கரை யூஸ் பண்றேன்….. எவ்வளோ பெரிய ஆபத்து வந்துருக்கு பாரு….. என்னோட பிஸ்கட் ஸ்நேக்ஸ்கு……. எல்லாம் கீழ விழுந்து கிடந்தது……. எவனோ திருட பாத்துருக்கன்” இதைக் கேட்ட இளம்பருதி விழுந்து விழுந்து சிரித்தான்….
அவன் சிரித்துக் கொண்டிருக்கும்போதே நளினி வீட்டிற்குள் நுழைந்தாள்.
நுழையும் போதே “ஹாய் அத்தான் ஜாலிதான உங்களுக்கு டென் டேஸ் லீவு…..” என்றபடி வந்தாள்
“வந்துடுச்சு அடுத்த அரை மெண்டல்”
என்றவன் முனுமுனுக்க
அதைக் கேட்ட ரகு…… “இந்த வீட்ல எத்தன மென்டல் டா” இளம்பரிதி சிரிக்காமல்……
“இப்போதைக்கு ரெண்டு இருக்கு…. மச்சான்”……
“ரெண்டா இன்னொன்னு யாரு டா?”…..
“நீயே கண்டுபிடி… ” என்க
அடக்க முடியாமல் சிரித்தான் இளம்பரிதி
——————-
நீங்க கண்டுபிடிங்க பார்ப்போம் அந்த இன்னொரு மென்டல் யாரு?