வரம் வாங்கி வந்தவள் நான்
அத்தியாயம் – 10
சுந்தர் டாக்டரிடம் தர்ஷினியின் ரிப்போர்ட்டை காட்ட அதை முழுவதும் படித்து பார்த்தவர்.. “அவங்க பேம்லி இறந்தப்பவே இவங்கள வேற சூழ்நிலையில மாத்தியிருந்தா இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது.. இந்த மாதிரி மனசு வெறுமையா உள்ளவங்கள தனிமையில விடுறதுதான் பெரிய தவறு.. ம்ம்ம் ஓகே சுந்தர் இப்ப இவங்க பிகேவியர் எப்படி இருக்கு.. ரொம்ப வயலன்டா நடந்துக்கிறாங்களா..??”
“இல்ல டாக்டர்.. அந்த மாதிரி எதுவும் இல்ல.. ஆனா தற்கொலை பண்ணிக்கனும்னு எண்ணம் அதிகமாயிருக்கு.. எனக்கு தெரிஞ்சே ரெண்டு மூனுதடவை தற்கொலை பண்ணிக்க டிரை பண்ணினா..” முதல்முறை கருப்பர் கோவிலில் தர்ஷினியை தண்ணீரில் இருந்து காப்பாற்றும்போதே அவனுக்கு சந்தேகம்தான்.. தான் காப்பாற்றும்போது அவள் தண்ணீரில் வேண்டும் என்றே மூழ்கியிருப்பது போல இருந்தது.. தர்ஷினிக்கு நீச்சல் நன்றாக தெரியுமோ என்ற சந்தேகம்..
“இவங்கள தனியா விடாதிங்க.. பக்கத்தில எப்பவும் யாராவது இருக்கிற மாதிரி பார்த்துக்கோங்க.. அப்புறம் முக்கியமான விசயம் அவங்கள அவங்களா இருக்க விடுங்க.. கேர் எடுக்கிறேன்னு ஓவரா அவங்கள வாட்ச் பண்றது. இல்லனா பின்னாடியே திரியிறது.. அப்படி எதுவும் வேண்டாம்.. கோபமோ , அழுகையோ, சிரிப்போ அத அவங்கள வெளிப்படுத்தவிடுங்க..
இது ஒன்னும் பெரிய பிரச்சனையெல்லாம் இல்லை.. அவங்களுக்கு பிடிச்சது எதுவோ அதுல அவங்க தன்னை மூழ்கடிச்சிக்கிட்டாளே போதும்.. நார்மலுக்கு வந்திருவாங்க..”
“டாக்டர்..??” தயங்கியவன்..
“சொல்லுங்க..”
“அதுவந்து எங்களுக்கு இப்பதான் மேரேஜ் ஆகியிருக்கு.. நாங்க..??” அவன் தயங்கி இழுக்க
சிரித்தவர் “நீங்க நார்மலான கணவன் மனைவியா இருக்கலாம்.. நீங்க உங்க மனைவி மேல வைக்கிற அன்பு ,காதல் கூட அவங்கள நார்மலாக்க நிறைய சான்ஸ் இருக்கு.. முக்கியமா அவங்களுக்கு குழந்தைன்னு வந்துட்டா இன்னும் பெட்டர்.. அவங்களுக்குன்னு ஒரு பொறுப்பு வர்றது நல்லதுதான்..” மற்ற அனைத்தும் நார்மலாக இருப்பதாக சொல்லவும் சுந்தருக்கு சற்று நிம்மதி..
அவன் மனசாட்சியோ, “டேய் சோனமுத்தாஆஆஆ நினைச்சேன்டா.. என்னடா சோழியன் குடுமி சும்மா ஆடாதேன்னு… ம்ம் பொண்டாட்டியோ குஜாலா இருக்கத்தான் ரிப்போர்ட்ட வேகமா வாங்கிட்டு வந்தியா…?”
“ம்ம் என் பொண்டாட்டியோட நான் எப்படியோ இருக்கேன்.. நீ இப்ப உள்ள போ ..?”
தன் குடும்பத்தினர் இருக்கும் அறைக்கு வந்தவன் அனைவரோடும் கிளம்ப மச்சானை கார் பிடித்துவர அனுப்பினான்.. அவன் வண்டியையும் நாயகி கணவரே ஓட்டி வந்திருந்தார்.. அனைவரும் தயாராகி வெளியில் வர சுந்தருக்கு போன்… வெற்றிதான் போன் செய்திருந்தான்..
“டேய் சுந்தர் என்னடா மேரேஜ் முடிச்சிருச்சா..? ஊருக்கு கிளம்பிட்டியா..?”
இவனுக்கு எப்படி தெரியும்..நமக்கு கல்யாணம் முடிஞ்சது.. (Zolpidem)
“என்னடா சொல்ற..??”
“என்ன என்னடா சொல்ற..? யாரோ உங்க சொந்தகாரங்களுக்கு மேரேஜ்ன்னு சொன்ன.. அது முடிஞ்சிருக்குமேன்னுதான் கேட்டேன்..”
“ம்ம் அவங்களுக்கு முடிஞ்சிருச்சான்னு தெரியல.. ஆனா எனக்கு மேரேஜ் முடிஞ்சிருச்சு..”
“டேய் படுபாவி என்னடா சொல்ற..? பொண்ணுதான் பார்க்க போறேன்னு சொன்ன மேரேஜே முடிஞ்சிருச்சா..!!!” அவன் அதிர்ச்சியில் உறைய..
“ம்ம்ம் நாம பார்த்த வேலை அப்படி.. ??”இரவு நடந்ததை மேலோட்டமாக சொல்ல,
“ஏன்டா ஒரு நாள் நைட்டுக்குள்ள இதெல்லாம் நடந்திச்சா.. முதல்ல சொல்லு இப்ப நீங்க எந்த ஹாஸ்பிட்டல் வாசல்ல நிற்கிறிங்க..??”
அவன் பெயரை சொல்லவும்… “டேய் அங்கயிருந்து எங்களோட ஒரு ஹோட்டல் அங்கன பக்கத்திலதான் இருக்கு.. நீங்களெல்லாம் அங்க வந்திருங்க.. நான் பக்கத்திலதான் இருக்கேன் ஐந்து நிமிசத்தில வந்திருவேன்..”
“இல்லடா… நாங்க கிளம்புறோம்.. எப்படா மதுரையவிட்டு கிளம்புவோம்ன்னு இருக்கு..?”
“டேய் டேய் இதுக்கெல்லாம் காரணம் நான்தான் ப்ளிஸ்டா எனக்கு ரொம்ப கில்டியா இருக்கு.. உன்னை நேரா பார்த்து ஒரு பைவ் மினிட்ஸ் மட்டும் பேசனும்… கொஞ்சம் பொறு.. இதோ வந்திட்டேன்..” அடுத்த ஐந்து நிமிடத்தில் அவர்கள் இருக்கும் இடம் வந்திருந்தான்..
அவர்கள் குடும்பத்தினரிடம் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டவன் பக்கத்தில் இருக்கும் தங்கள் ஹோட்டலுக்கு சாப்பிட அழைக்க அவர்கள் மறுத்தாலும்… வம்பு செய்து அழைத்துச் சென்றான்.. அவனே அவர்கள் ஹோட்டலில் ஸ்பெசல் எது என்று பார்த்து பார்த்து பரிமாறினான்.. சுந்தர் குடும்பத்திற்கே ஆச்சர்யம்.. இவ்வளவு பெரிய ஹோட்டல வைச்சுக்கிட்டு அவரே இப்படி விழுந்து விழுந்து உபசரிக்கிறாரே என்று..வெற்றியின் நல்ல மனதை புரிந்து கொண்டவர்களுக்கு மகனை போலவே மகனின் சினேகிதனும் இருப்பதில் மகிழ்ச்சியே..
அப்பத்தாவின் அருகில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த தர்ஷினியை பார்த்த வெற்றி சுந்தரின் கையை பிடித்து குலுக்கியவன்.. “வாழ்த்துக்கள் சுந்தர் திடிருன்னு நடந்தாலும் தேவதை மாதிரிதான் ஒரு பொண்ணு கிடச்சிருக்கு.. விடு இனி வாழ்க்கையே ஜெகஜோதியாய் இருக்க போகுது.. இருந்தாலும் நைட் நாம கொஞ்சம் ஓவர்தான் போல..?”
“ஓவரா.. அறிவுகெட்ட தனமான வேலைடா.. அதுவும் குடும்பமா எல்லாரும் வந்திருக்கும்போது இந்த மாதிரி பண்ணியிருக்கேன்.. எவ்வளவு அசிங்கப்பட்டுட்டேன்..”
“ஸாரிடா.. நாம ஏதோ செய்ய போய் என்னன்னமோ நடந்திருச்சு.. எல்லாத்துக்கும் நான்தான் காரணம்..”
“ஆமா நான் ரொம்ப சின்னப்பையன் பாரு நீ வாங்கி ஊத்திவிட்ட.. போடா லூசு.. அதவிடு நீயும் டல்லா இருக்க .. அங்க என்ன சேதி தங்கச்சி நல்லா வெளுத்துச்சா..??”
“அந்த அளவுக்கெல்லாம் அம்மு போகமாட்டா.. என்ன என்னை வீட்டுக்குள்ளேயே விடல.. பசங்கள கூட பார்க்க விடாம தரதரன்னு பாத்ரூமுக்கு இழுத்துட்டு போய் ஷவர்ல நிக்கவைச்சு ஏத்தின போதையெல்லாம் இறங்கினவுடனதான் உள்ளேயே விட்டா… ராட்சசி.. பேசவே இல்ல.. நம்மளால எதவேணா தாங்க முடியும் பொண்டாட்டி இப்படி பேசாம இருந்தா அத தாங்கமுடியாது.. இனி வாழ்க்கையில மதுப்பக்கம் போகவே கூடாதுடா..”
“அந்த முடிவுக்கு நான் காலையிலே வந்திட்டேன்… சரி நாங்க கிளம்புறோம்டா..”
“ம்ம் சரிடா உன் அக்கவுண்ட் நம்பர கொடுத்துட்டு போ.. நான் அமௌண்ட்ட டிரான்பர் பண்ணிருறேன்..”
“டேய் வேணாம்டா..”
“ப்பச் பேசாத.. இத கடனாவே வைச்சுக்கோ.. எப்ப பணம் கிடைக்குதோ அப்ப மெதுவா கொடு போதும்..” அனைவரும் சாப்பிட்டு முடிக்கவும் எல்லோரையும் தங்கள் வீட்டுக்கு வரும்படி அழைப்பு விடுத்தவன்..அவர்களுக்கு பழங்கள், ஸ்வீட்ஸ் என ஏகப்பட்டது வாங்கி கொடுத்து வழியனுப்பி வைத்தான்..
இரு கார் பிடித்து தங்கள் ஊருக்கு செல்ல சுந்தரின் பக்கத்தில் அமர்ந்திருந்த தர்ஷினி மீண்டும் தன் கூட்டிற்குள் சென்றிருந்தாள்.. அவள் அருகில் அப்பத்தாவும் நாயகியும் அமர்ந்திருந்தார்கள்.. சுந்தரிதான் முகத்தை உம்மென வைத்து ஹோட்டலுக்குள்ளேயே வரமாட்டேன் என் அடம்பிடித்தவள் அங்கு பறிமாறிய உணவுகளை பார்க்கவும் தன் வீம்மை ஒத்தி வைத்து… சோறுதான் முக்கியம் என்ற முடிவுக்கு வந்திருந்தாள்.. காரில் ஏறிய சற்று நேரத்திலேயே தர்ஷினி உறக்கத்திற்கு செல்ல அப்பத்தாவின் மடியில் தலைவைத்திருந்தாள்..
தன் மடியில் தாங்கி கொள்ள ஆசைதான்.. எங்க அவதான் இவன கண்டுக்கவே இல்லையே.. சாப்பிடும்போதும் சரி பின்னர் காரில் ஏறியபோதும் முகம் சோகமாகத்தான் இருந்தது…. இவனுக்கும் தூக்கம் கண்ணை சுழற்ற தலையை பின் சாய்ந்து அமர்ந்தவன் மெல்ல மெல் தூக்கத்திற்கு சென்றிருந்தான்.. எப்படியும் ஊருக்கு போக ரெண்டுமணி நேரமாவது ஆகும்..
சற்று நேரத்திலேயே தன் மார்பில் சூடான மூச்சுகாற்று பட மெல்ல கண்விழித்தவன் தன் மார்பில் தலைவைத்து தூங்கும் மனைவியை பார்த்து காரின் குலுக்களுக்கு ஏற்ப குலுங்கியவளை நழுவ விடாமல் கையை அணைவாக பிடித்து தன் விட்ட தூக்கத்தை தொடர்ந்தான்.. நான்கு மணிக்கு கிளம்பியவர்கள் வீட்டிற்கு வர மணி ஆறிருக்கும்.. காரை வீட்டு வாசலில் நிறுத்தியதுதான் தாமதம் அக்கம் பக்கம் இருந்தவர்கள் அனைவரும் அங்கு கூடிவிட்டனர்..
அவர்களுள் ஒருவர்..”எங்களுக்கு தெரியும்பு சுந்தரு இந்த பொண்ணத்தான் விரும்புச்சுன்னு.. ஏதோ அப்பு ஆத்தா சொன்னிகன்னு அந்த பொண்ண பார்க்க வந்திருக்கும்.. ஆனா கடவுளுக்கு தெரியாதா யாருக்கு யார முடிக்கனும்னு..”
ஒரு வயதான கிழவியோ “ஏய்யா ராமையா என்னமோ சுந்தருக்கு கலியாணம் ஆனா கருப்பருக்கு ரெட்டை கிடா வெட்டி ஊருக்கே சோறு போடுறேன்னு சொன்ன.. கடைசியில கறிசோறு போடாம எங்கள ஏமாத்திப்புட்டியேப்பு.. அதோட நல்ல தாழம்பூ கரைவைச்ச சீலைவேற எடுத்து தர்றேன்னு சொல்லியிருந்த..??”
“அதுக்கென்ன.. சேலையும் எடுத்து தாறேன்.. ரெட்டை கிடாயும் வெட்டிருகோம்.. உங்களுக்கு இல்லாததா அம்மத்தா..”
அங்கு தர்ஷினியோ சுந்தரின் கையை சுரண்டிக் கொண்டிருந்தாள்.. “ஏய் என்ன மேன் நீ என்னை விரும்புனியா..??” அவன் காதிற்குள் மெதுவாக கிசுகிசுக்க அனைவரும் அவர்களையேதான் பார்த்துக் கொண்டிருந்தார்கள்..
“உன் பொண்டாட்டி என்ன சொல்லுது சுந்தரு..?”
அவள் கையை பிடித்தவன்” அது ஒன்னுமில்ல அப்பத்தா நீங்களெல்லாம் ரொம்ப அழகா இருக்கிங்களாம்..?”
“இப்ப என்னப்பு அப்பத்தா அழகு.. அப்ப என்னைய பார்த்திருக்கனும்.. உங்க தாத்தாவே என்னை காதலிச்சுத்தான் கலியாணம் பண்ணினாருன்னா பார்த்துக்கோ..”
அங்கிருந்த வேறு இளம்வயது பெண்ணோ“ஐய கிழவி புதுசா ஒரு பொண்ண பார்த்தவுடன ரொம்ப ரவுசு வுடாதா.. அப்ப ஏன் அவரு இமயமலைப்பக்கம் சாமியாரா போனாறாம்..நீ படுத்துன பாடு தெரியாதாக்கும்.. உன்னோட ரீலு அந்து பலவருசம் ஆச்சு கிழவி..”
“இந்த எடுபட்ட சிறுக்கிக்கு திமிர பாறேன்.. “அவர் ஆரம்பிக்க அதற்குள் நாயகியும் சௌந்தரமும் ஆரத்தி தட்டோடு வந்தார்கள்.. இருவருக்கும் ஆரத்தி எடுத்து வலதுகாலை வைத்து உள்ளே போக சொல்ல அப்பத்தா பேத்திக்கு அவ்வப்போது எடுத்துச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்..
அந்த சிறிய வீட்டை பார்த்து தர்ஷினிக்கு வியப்புதான் ஒரே ஒரு அறை மட்டும் இருக்க இதுல எப்படி இத்தனை பேரு இருந்திருப்பாங்க..சாமி விளக்கை ஏற்றச் சொல்லி வணங்க சொல்லியவர்கள் அந்த அறையில் தர்ஷினியை இருக்கச் சொல்ல உள்ளே இவளுக்கு வியர்வை ஆறாக ஓடியது.. அதோடு பாத்ரூம் வேறு அவசரம்.. தங்கைகள் இருவரும் தெய்வானையோடு அடுப்படியில் இருந்துகொள்ள சுந்தரியோ பின் தாழ்வாரத்தில் தன் புத்தக பையோடு அமர்ந்துவிட்டாள்.. எதுவும் படிக்காவிட்டாலும் வேலை செய்யாமல் இருக்க அவளுக்கு ஒரு சாக்கு..
“கிரான்மா எனக்கு பாத்ரூம் போகனும்.. ப்ளிஸ் எங்க இருக்கு..?”
“வாத்தா தங்கம்..”
கிணற்றடிக்கு கூட்டிச் செல்ல சுந்தரும் மற்றவர் கவனம் கவரா வண்ணம் கூடவே சென்றான்.. அங்கிருந்த விளக்கை போட்டுவிட்டவன் கிணற்றில் இருந்து தண்ணீரை இறைத்து அங்கிருந்த வாளியில் நிரப்ப தோட்டத்தை பார்ப்பது போல பார்க்காமல் பார்த்துக் கொண்டிருந்த அழகம்மைக்கு மனது நிறைந்தது.. மெதுவாக அவர் தோட்டத்து பக்கம் நடக்க ஆரம்பித்தார்..
இது போன்ற சிறு சிறு செயல்கள்தான் கணவன் மனைவிக்குள் நெருக்கத்தை உருவாக்கும் என்பது வாழ்ந்து பார்த்த அவருக்கு தெரியாதா என்ன..??
சற்று பொறுத்து அவள் வெளியில் வர..தண்ணீர் வாளியை பாத்ரூமிற்குள் வைத்தவன் “குளிச்சிட்டு வேற சேலை மாத்திக்கிறியா..?”
“ம்ம் டைம் ஏழாக போகுதே இனி நைட் டிரஸ்தான்..”
“கொஞ்சநாளைக்கு சேலை இல்லனா சுடிதார் மட்டும் போட்டுக்க.. உங்க வீட்ல மாதிரி அட்டாச்சுடு பாத்ரூம் இல்ல அடிக்கடி வெளியில வர்ற மாதிரி இருக்கும் அதான்..” அவன் தயங்க..
“ஓகே ஓகே… ஹே மேன் ஏன் வாய்ஸ் உள்ள போகுது.. நான் சுடிதாரே போட்டுக்குறேன்..”
தர்ஷினி தன் கைகால் முகத்தை கழுவிக் கொண்டிருக்க இவ்வளவு வசதியானவ.. முகத்தை சுழிக்காம ஏத்துக்கிட்டதே பெரிதாக தோன்றியது..