“இன்னும் ரெண்டு மூனு மாசம் மட்டும் பொறுத்துக்கோ.. அதுக்குள்ள தனிரூம் கட்டிக் கொடுத்துருறேன்..”
“விடு மேன் வரும்போதுதான் கிரான்மா எல்லாம் சொன்னாங்க.. நீ எல்லா காசையும் உங்க சிஸ்டர்ஸ் மேரேஜ்க்கு செலவு செஞ்சிட்டியாமே… பரவால்ல விடு என்கிட்ட இருக்கு நான் தரவா..?”
தன் தோளில் இருந்த துண்டை அவளிடம் கொடுத்தவன், “இல்ல லட்டுமா என் மனைவிக்கு நான்தான் செய்யனும்.. எனக்கு கொஞ்சமே கொஞ்சம் டயம் மட்டும் தா..”
“ஓகே ஓகே ரொம்ப பீல் பண்ணாத.. இந்த கார்டன் ரொம்ப அழகா இருக்கு.. என்னன்ன பூ வைச்சிருக்கிங்க.. ??”
“வா நானே காட்றேன் ஆனா இப்போ இல்ல, நீயும் இந்த மாதிரி இருட்டு நேரத்தில தோட்டத்துபக்கம் போகாத.. அப்படி அவசரம்னா இந்த லைட்ட போட்டுக்கோ.. மல்லிகை பூ செடி இருக்கிறதால அந்த ஸ்மெலுக்கு நிறைய பாம்புகள் அடிக்கடி வரும்..”
“ஐயோ அம்மா பாம்பா..!! வேகமாக அவனிடம் வந்தவள் அவன் தோளை பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டு.. காலை கீழேயே ஊண்டவில்லை..”
“ஏய் இறங்குடி.. யாராச்சும் பார்த்தா தப்பா நினைச்சுக்குவாங்க.. இங்க வராது..”
“அடப்போய்யா..!!” அவள் முதுகுபுறம் சென்றவள் அவன் முதுகில் உப்புமூட்டை போல ஏறிக் கொண்டாள்.. “என்னை அங்க போய் நிறுத்து..” சற்று தள்ளிக் காட்ட இவன்தான் தன் முதுகு உணர்ந்த அவளது மென்மையில் அதிர்ந்து போய் நின்றிருந்தானே..!!
நம்மள ஒருவழியாக்காம விடமாட்டா போல.. அழகு ராட்சசி.. அவளை அப்படியே சுமந்து வந்தவன் சற்று தள்ளி இறக்கிவிட அப்பத்தாவும் அங்கு வந்து சேர்ந்தார்..
“சுந்தரு நான் வீட்டுக்கு கிளம்புறேன்ப்பு.. இவளோட உடுப்பு ,மத்த சாமான்களை எடுத்துக்கிட்டு காலையில வாறேன்..”
“நோ…நோ கிரான்மா.. ப்ளிஸ் நீங்க இங்கேயே இருங்க.. நானும் நாளைக்கு அங்க வர்றேன்.. அப்போ எல்லாம் எடுத்துக்கலாம்.. ப்ளிஸ் ப்ளிஸ்..” சட்டென கண்ணில் நீர் வழிய துவங்கியது..
[the_ad id=”6605″]
“ஏய் இப்ப எதுக்கு அழற.. அவள் கண்ணீரை துடைத்துவிட்டவன் அப்பத்தா இங்கயே இருங்க.. இங்கன கொஞ்சம் வசதி பத்தாதுதான் சீக்கிரமே அதை சரிபண்ணிருறேன்..”
“அடபோப்பு எப்ப பாரு வசதி, பணம்னு.. இங்கனயே இருக்கேன்.. ஆத்தா வா அம்மாச்சி தலைசீவி விடறேன்…” அவர் தன் பேத்தியோடு பேச ஆரம்பிக்க சுந்தர் வீட்டிற்குள் நுழைந்தான்..
புத்தகத்தோடு அமர்ந்திருந்த தங்கையை பார்க்கவும் “என்ன சுந்தரி நாளைக்கு என்னமும் பரிட்சை இருக்கா இப்பவே புத்தகத்தை கடைவிரிச்சிட்ட…”
அவள் அண்ணனை பார்க்கவும் வேண்டுமென்றே புத்தகத்திற்குள் தலையை புதைத்து கொள்ள தங்கையை விசித்திரமாக பார்த்தவன் தாயிடம் சென்றான்.. “ஆத்தா கடையில என்னமும் வாங்கியாரவா..??”
“இல்லப்பு.. ஊருக்கு போகும்போதே ரெண்டு கோழிய புடிச்சு அடைச்சுப் போட்டுட்டுத்தான் போனேன்.. அதை அடிச்சு கொழம்பு வைச்சிருறேன்.. நாட்டுகோழி முட்டை இருக்கு அத அவிச்சு வைக்கவாய்யா..?”
“செய்ங்கத்தா..”
சௌந்தரமோ “ஏண்ணே அத்தாச்சி இதெல்லாம் சாப்பிடுவாகளா..?”
“சாப்பிடுவான்னு நினைக்கிறேன்..தர்ஷினின்னு சும்மா பேர் சொல்லியே கூப்பிடுத்தா.. உன்னைவிட வயசு கம்மிதான்..??”
“போண்ணே மத்தியானம் அப்பு சுந்தரிக்கு விட்ட டோஸ் உனக்கு தெரியாது… சும்மா காச்சி எடுத்துட்டாக.. வயசு கொறைவா இருந்தாலும் அண்ணே பொண்ணாட்டித்தான அத்தாச்சின்னுதான் கூப்பிடனும், மரியாதையா நடக்கனும்னு அம்புட்டு சொல்லியிருக்காக.. எப்பவும் அப்படியெல்லாம் சொல்லாதவுக சொன்னா ஏதாச்சும் இருக்கும்ணே நான் அத்தாச்சின்னே கூப்பிடுறேன்..”
“சரித்தா பொறவு உன்னிஷ்டம்.. அப்பு திட்டினதாலதான் சின்னவ நான் கேட்டதுக்கு கூட பதில் சொல்லாம இருந்தாளா… ரொம்ப திட்டிப்புட்டாகளோ..?”
“நீ வேற.. ஒரு அறை… ஆத்தி அப்புக்கு இம்புட்டு கோபம் வரும்னு இன்னைக்குத்தானே தெரியும்.. உங்க மச்சான் கூட சொன்னாக… மாமாவுக்கு என்னமோ ஆயிருச்சுடின்னு..? எப்பவுமே வாங்க மாப்பிள்ளைன்னு சொல்றததவிர வேற எதுவுமே ரொம்ப பேச மாட்டாக இன்னைக்கு இம்புட்டு பேசுறாகளேன்னு..!!”
“எங்க மச்சான் ரெண்டு பேரையும் காணோம்..??”
“சும்மா இப்படியே காலார நடந்து போயிட்டு வாரேன்னு கிளம்பினாங்க..”
“ஆத்தா வள்ளி போன் பண்ணிச்சா.. மச்சான் அப்புறமும் ஏதாவது திட்டினாராமா…??”
“தெரியலையா நான்தான் மனசு கேட்காம போனடிச்சேன்.. புள்ள அமத்தி வைச்சிருக்கு போல.. போனு போக மாட்டேங்கிது..அப்புறமா அவ அடிப்பான்னு நினைக்கிறேன்..”
மூத்த மச்சானை தவிர மற்ற இரு மாப்பிள்ளைகளுக்கும் தர்ஷினி இங்கு வந்ததில் சந்தோசம்தான்.. ஏற்கனவே வள்ளியின் கணவர் சற்று முரிசல்குணம்தான்…பட்டு பட்டென்று பேசிவிடுவார்.. எங்கே அவர் தங்கையையும் கட்டினால் தங்கள் மனைவிகளுக்கு பிறந்தவீட்டு உறவு முறிந்துவிடுமோ என்ற கவலை மனதிற்குள் இருந்தது.. இப்போது அது இல்லையென்றாகவும் அவர்களுக்கு சற்று நிம்மதிதான்..
ராமையா வெளி தாழ்வாரத்தில் கயிற்று கட்டிலில் படுத்திருக்க அவர் அருகில் அமர்ந்த சுந்தரோ தந்தையையே பார்த்திருந்தான்.. பக்கத்தில் யாரோ அமரவும் அவர் சட்டென எழுந்தமர்ந்தார்..
அவர் கையை பிடித்தவனோ “அப்பு இன்னைக்கு நீங்க மட்டும் இல்லையினா நிலமை ரொம்ப மோசமா போயிருக்கும்.. அந்த நேரம் எனக்கு ஒன்னுமே புரியல.. அடுத்து என்ன பேசனும்னு கூட மறந்து போச்சுப்பு..”
[the_ad id=”6605″]
“அட நான் யாருக்கு செஞ்சேன்.. எம்புள்ளைக்குத்தான..இதப்போய் பெரிய விசயம்ன்னு சொல்ற.. கல்யாணம் பண்ணினது பெருசில்லப்பு.. அப்பு ஆத்தா இல்லாத புள்ளைய நீதான் கண்ணுக்குள்ள வைச்சு காபந்து பண்ணனும்.. அது மனசு வெசனப்படாம பார்த்துக்கோ.. அதோட இப்புடி திடிருன்னு கல்யாணம் நடந்ததால நாம அப்படியே விட்டுறப்பிடாது.. நாளைக்கு எவனும் நாக்குமேல பல்ல போட்டு பேசிப்புடுவானுக அதுக்கு இடம் கொடுக்காம நாம ஊருக்கு சொல்லி ஒரு விருந்த வைச்சிருவோமாய்யா..”
“ஒரு பத்துநாளு போகட்டுமேப்பு.. அடுத்து மாசம் பிறக்குறத்துக்குள்ள வீட்ட தச்சு செஞ்சுரலாம்னு பார்க்கிறேன்.. இன்னும் மாசம் பிறக்க பத்துநாளுதான் இருக்கு சௌந்தரம் இப்ப ஊருக்கு போன அப்புறம் அதுக்கு வேற வரணும்.. பாவம்ப்பு புள்ளதாச்சி பொண்ண ரொம்ப அலையவைக்க வேணாம்.. நாம அவ வளைகாப்பு முடிச்சு இங்க கூட்டிட்டு வந்தவுடன இதை வைச்சிக்கலாம்..”
எப்போதும் தன் குடும்பத்தினரின் நலனை முன்னிறுத்தி ஒரு முடிவை எடுக்கும் தன் மகனை பார்க்கும் போது தந்தைக்கு பெருமைதான்.. அப்படியே கட்டிட வேலையை யாரிடம் ஒப்படைக்கலாம் , என்ன மாதிரி கட்டலாம் என ஆரம்பிக்க மற்ற இரு மச்சான்களும் வந்து சேரவும் அவர்களையும் கலந்து ஆலோசிக்க ஆரம்பித்தான்..
அப்படியே நேரம் ஒன்பதாகவும் அங்கேயே அனைவரும் வட்டமாக தரையில் அமர்ந்து இரவு உணவை உண்ண ஆரம்பித்தனர்… நாயகியும் தெய்வானையும பரிமாற சுந்தரி ஒரு தண்ணீர்கூட எடுத்து வைக்கவில்லை.. தர்ஷினிக்கு ஒரே வியப்பு.. எப்படி இப்படி டைனிங்டேபிள் கூட இல்லாம இவ்வளவு ஹாப்பியா தரையில உட்கார்ந்து சாப்பிடுறாங்கன்னு..
ஒவ்வொருவரின் முகத்தையும் உற்று பார்க்க யார் முகத்திலும் வருத்தம் இல்லை.. சந்தோசம் மட்டுமே தெரிந்தது.. அதிலும் ராமையா தனக்கு வைத்த கறியை இரவு நேரத்தில் இவ்வளவு வேணாம் என தன் பக்கத்தில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த சௌந்தரத்திற்கு அள்ளி வைக்க அவளோ மற்றவர்கள் கவனிக்காத போது அவள் கணவருக்கு அள்ளி வைத்தாள்..
அவனோ அவளை முறைப்பது போல பார்த்து அவளுக்கு தன் இலையில் இருந்த பாதி முட்டையை எடுத்து வைக்க முகம் வெட்கப்பட்டாலும் அதை ஆசையாகவே சாப்பிட்டாள்..
சுந்தரோ சாப்பிடுக்கொண்டே.. “ஏய் லட்டுமா.. என் தங்கச்சிய கண்ணு வைக்காத பாவம் புள்ளதாச்சி பொண்ணு வயித்தவலிக்க போகுது..வேணும்னா என்னோட முட்டையை தரவா..?”
“ச்சே ச்சே வேண்டாம்..”
“ஏய் நான் எச்சப்பண்ணல… தொடவே இல்லை..”
“நோ நோ நான் அதுக்கு சொல்லல நாங்க நைட் இவ்வளவு ஹெவியா சாப்பிடவே மாட்டோம்.. ரெண்டு சப்பாத்தி இல்லனா தோசைதான்.. நீங்க எப்படி நைட்டு ரைஸ் சாப்பிடுறிங்க..”
“அதப்பத்தி இன்னொருநாள் சொல்றேன்.. இன்னைக்கு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ நாளைக்கு உனக்கு என்ன தேவையோ அதுமாதிரி செஞ்சு தர்றேன்..”
“உங்களுக்கு சமைக்கத் தெரியுமா..?”
“அதுக்கு ஏன் இவ்வளவு ஆச்சர்யம்.. நான் நல்லா சமைப்பேன்.. உனக்கும் கத்து தரவா..?”
சட்டென அவள் கண்ணீர் நீர் கரகரவென இறங்கியது..
“ஏய் என்னாச்சு உரைக்கிதா..?”
அவன் குரலில் அனைவரும் அவளையே பார்க்க ஏதோ பேச வந்தவளை சுந்தர் தண்ணீரை அவள் வாயில் வைத்து அதை திசை திருப்பினான்.. அனைவரும் சாப்பிட்டு முடித்து ஆண்கள் அனைவரும் முன் தாழ்வாரத்திலேயே படுக்க பெண்களுக்கு பின் தாழ்வாரத்தில் பாய் விரிக்கப்பட்டிருந்தது.. அந்த அறையில் சுந்தரி இருக்க ஹாலில் யாரும் படுக்கவில்லை.. அப்பத்தா மாத்திரை போட்டு பின் தாழ்வாரத்தில் படுத்திருந்தார்..
[the_ad id=”6605″]
“ஆத்தா இன்னேரத்தில யாருக்கு வெந்நீர் அடுப்புல கொதிக்கிது..?”
“இந்தா சௌந்தரத்துக்குத்தாய்யா.. இன்னைக்கு பூராவும் அலைஞ்சிருக்கா இடுப்போடு சேர்த்து ஊத்திக்கட்டும்ன்னு காயப்போட்டான்..”
கொதிக்கும் நீரை தூக்கியவன் அதை கொண்டுவந்து பாத்ரூமில் ஊற்றி கிணற்றில் தண்ணீர் இறைத்து அதை கைபொறுக்கும் அளவிற்கு விளாவி வைத்தவன் தங்கை குளிக்கச் செல்ல சொன்னவன் துணைக்கு அமர்ந்திருந்த தாயோடு அவனும் அமர்ந்தான்..
“போய்யா போய் படு.. பாவம் அந்த பொண்ணு முழிச்சிட்டு இருக்கும்ல..”
“ஏத்தா நான் வள்ளி நாத்தனாரை கட்டிக்கலைன்னு வருத்தமா..?”
“ச்சு ச்சு அப்படியெல்லாம் இல்லப்பு.. என்ன சம்பந்தம் பண்ணினா ஒன்னுக்குள்ள ஒன்னு ஒத்துமையா இருப்பிங்கன்னு நினைச்சேன்.. அதோட பெரிய மாப்பிள்ளைதான் இந்த பேச்சை ஆரம்பிச்சாரு.. அதான் எங்களால மறுக்க முடியல.. இப்ப என்னப்பு உனக்கு நல்ல தேவதை கணக்காதான பொண்ணு அமைஞ்சிருக்கு..நல்லா பார்த்துக்க.. முதல்லகூட எனக்கு செத்த வருத்தம்தான்.. ஆனா உங்க அப்பாரு எடுத்து சொல்லவும்தான் புரிஞ்சுக்கிட்டேன்.. என்ன வள்ளியையும், பேரனையும்தான் கொஞ்சநாளைக்கு பார்க்க முடியாது.. விடு இப்படியேவா போக போகுது.. அவுகளும் நம்மள புரிஞ்சுக்குவாகய்யா… நீ இத நினைச்சு கவலைப்படாத… எல்லாம் நல்லதே நடக்கும்..”
அனைவரும் வாரத்தில் அந்த கீற்று கொட்டகைக்கு கீழ்படுத்திருக்க தான் மட்டும் தனி அறையில் படுப்பது சற்று சங்கடம்தான்.. என்ன செய்வது ரூமிற்குள் வந்தவன் தர்ஷினியை பார்க்க அவள் அங்கிருந்த கட்டிலில் அமர்ந்திருந்தாள்..பட்டு சேலையை மாற்றி கல்யாணத்திற்கு கொண்டுபோன உடைகளில் இருந்து சாதாரண சேலையை மாற்றியிருந்தாள்… அப்பத்தா தலையை வாறி பின்னல் போட்டிருக்க நெற்றியிலும் வகிட்டிலும் குங்குமம் பளிச்சென்றிருந்தது.. தான் கட்டிய மஞ்சள் கயிற்றை தவிர வேறு நகைகள் கழுத்தில் இல்லை..
பெருமூச்சுவிட்டவன் நேத்து நாம இருந்த நிலைமை என்ன.. ஒரே நாளுல நம்ம வாழ்க்கை இப்படி தலைகீழா மாறிருச்சே.. அதுவரை தன் கைவிரல்களில் பார்வையை பதித்திருந்தவள் கதவு சாத்தும் சத்தம் கேட்டு பார்வையை உயர்த்த சுந்தரை பார்க்கவும் கண்கள் கலங்கியிருந்தாலும் முகத்தில் லேசான புன்னகை..
“என்னமேன் புதுப்பொண்ணாட்டம் வெட்கப்பட்டு அங்க நிக்கிற..? வா நான் உன்னை ஒன்னும் பண்ணிர மாட்டேன்.. தைரியமா வா..?”
“என்னடி வாய் ஒன்னு சொல்லுது ஆனா கண்ணு கலங்கியிருக்கு.. ம்ம் என்ன..?” அவளோடு அந்த கட்டிலில் வந்து அமர,
தன் மடியில் வைத்திருந்த போட்டோ ஆல்பத்தை அவனிடம் விரித்து காட்ட அவர்கள் குடும்ப போட்டோ.. ஒட்டு மொத்த இன்பமும் தங்கள் குடும்பத்தில் மட்டும் இருப்பது போல அப்படி ஒரு புன்னகையோடு நின்றிருந்தார்கள்…
“இந்த போட்டோல்ல எனக்கு பக்கத்தில உன்னோட போட்டோவை செட் செய்ய முடியுமா..? டாடி மம்மி பார்ப்பாங்கள்ல.. ப்ளிஸ் ப்ளிஸ்..” அவன் தாடையை பிடித்து கெஞ்சினாள்..
இனி………..????.