நான் போகும்போது உன்கிட்ட அங்க என்ன செய்ய போறேன்னு சொன்னேன்தானே அப்புறம் நீ ஏன் என்கிட்ட எதுவும் சொல்லாம இப்படி செய்ற.. முதல்ல எந்த விசயமாயிருந்தாலும் அது நல்லதோ கெட்டதோ என்கிட்ட சொல்லிப்பழகு.. நானும் அதுமாதிரிதான் உன்கிட்ட எல்லாமே சொல்லுவேன்.. நாம எப்ப வேணா கணவன் மனைவியா வாழலாம்.. ஆனா என்னை பொருத்தவரை ரெண்டுபேர்க்குள்ளேயும் எந்த ஒளிவுமறைவும் இருக்கக்கூடாதுன்னு நினைக்கிறேன்..” அவன் பேச பேச தர்ஷினியின் முகம் வாடிப்போயிருந்தது..
சுந்தரும் எதுவும் சொல்லவில்லை.. இவ இன்னும் வளராம இருக்காளே.. ஆரம்பத்திலேயே இந்த மாதிரி விசயங்களை தடுத்திரனும்..சற்று நேரம் அமைதியாய் இருந்தவனுக்கு மனம் கேட்கவில்லை.. “என்னடி மாமா மேல கோபமா..?”
ம்ம் மண்டையை ஆட்டிக் கொண்டிருக்க,
“சரி விடு இனி மேல மாமா உன்னை எதுவும் சொல்ல மாட்டேன் நீயும் என்னை கேட்காம எதுவும் செய்யக்கூடாது..சரியா..?”
அவனை நிமிர்ந்து பார்த்தவள் “ஏன் மேன் முன்ன நீ ரொம்ப கஷ்டப்பட்டியா..?” கண்கள் தளும்பி நின்றது..
தான் எப்போதோ பட்ட கஷ்டத்தை நினைத்து தன் மனைவி அழுவதை பார்த்தவன் அவளை நெருங்கி அமர்ந்து “ஏய் லட்டுமா எதுக்குடா அழற.. அதெல்லாம் அப்போடா.. இப்போ மாமா ஹாப்பியா இருக்கேன்.. அதுவும் நம்ம மேரேஜ் முடிஞ்சு ரொம்ப ரொம்ப ஹாப்பி..இப்ப அது இல்லடா விசயம் நான் சொல்ல வர்றது புரியுதா..?”
“ஓஓஓ… நல்லா புரியுது..”
அவள் மண்டையாட்டும் விதத்தை பார்த்தவனுக்கு சிரிப்பு வந்தாலும் “இந்த பேபிமாக்கு என்ன புரிஞ்சுச்சாம்..?”
“இனிமேல் நான் போட்டிருக்கிற நகையை கழட்டி கொடுக்ககூடாது அதோட நான் தனியா கொடுக்காம கொடுக்கும்போது நீயும் இருக்கனும் அதானே மேன்..” அவள் கண்ணடிக்க,
“ஹாஹாஹா ..போடி பச்சை மொளகா உன்னல்லாம்…வீட்டுக்கு வா இருக்கு உனக்கு.. உன்கிட்ட போய் பத்து நிமிசம் தம்புடிச்சு பேசினேன் பாரு என்னச் சொல்லனும்.. வா நேரமாச்சு கிளம்பலாம்..” சுந்தர் வண்டியை கிளப்ப அவனை நெருங்கி அமர்ந்து அவன் இடுப்பில் கைப்போட்டிருந்தவளோ தன் முகத்தை அவன் முதுகில் பதித்திருந்தாள்..
“நீ பேசினாதான் மேன் நல்லாயிருக்கு.. சைலண்டா இருந்தா நல்லாவேயில்ல.. அதோட என்னை நீ பேர் சொல்லிக்கூப்பிடாத.. எங்க டாடி மாதிரியே கூப்பிடு ப்ளிஸ்..ப்ளிஸ்..”
[the_ad id=”6605″]
சுந்தருக்கு மனம் சுட்டது பாவம் சின்னபிள்ளை குணம்தான இவளுக்கு.. நமக்குத்தான் இவளப்பத்தி தெரியுமே.. ரொம்ப திட்டிடமோ.. நம்ம தங்கச்சிக்குத்தான நகையை கழட்டி கொடுத்தா.. வேற ஒருத்தியா இருந்தா இவ்வளவு பணத்துக்கும் நகைக்கும் நம்ம வீட்டுக்கெல்லாம் வந்து இப்படி புருசனோட தங்கச்சிக்கெல்லாம் மனம் வந்து செய்வாளா.. செல்லக்குட்டிடி நீ மனதிற்குள் அவளை கொஞ்சியவன் அவள் மனதை மாற்றும் பொருட்டு..
“ஏய் பேபி உன்னை பார்த்த நாளில இருந்து என் மனசில ஓடுற ஒரு கேள்வி கேட்கவா..?”
“ம்ம் கேளு மேன்..”
“கேட்பேன் நீ திட்ட கூடாது .. அடிக்க கூடாது..”
“நோ.. அடிக்க மாட்டேன்.. கேளு..”
“இல்ல அது வந்து அது வந்து..”
“என்ன மேன் லேடி மாதிரி ரொம்பத்தான் பில்டப் பண்ற கேளு…?”
“இல்ல நீ ஒரு டாட்டூ போட்டிருக்கியே அத போட்டது யாரு ஆம்பளையா இல்ல பொம்பளையா..!!”
அவன் முதுகில் இரண்டு அடி போட்டவள்” அடப்பாவி பிராடு பிராடு இதெல்லாம் எப்ப நீ பார்த்த..?”அவன் இடுப்பில் கிச்சு கிச்சு மூட்ட,
“ஹாஹாஹாஹா… ஏய் விடுடி மாமனுக்கு கூசுது.. நான் உன்னை முதல்முதலா பிளைட்டுல பார்த்தேன் பாரு.. அப்ப உன்னோட பேஸ்கூட எனக்கு பதியல அந்த டாட்டூதான்டி முதல்ல பட்டுச்சு.. அதுவும் எங்க போட்டிருக்க பாரு.. அப்பவே கேட்க வாய் வந்திச்சு நீ தெரியாத பொண்ணா அதான் கேட்கலை..” மனைவி எதுவும் பேசாமல் வரவும் வண்டியை நிறுத்தியவன் பின்னால் திரும்பி பார்க்க அவளோ வெட்கத்தில் முகம் சிவந்து போயிருந்தாள்..
ஐயோ வெட்கப்படுறாடா… “என் பொண்டாட்டிக்கு வெட்கமெல்லாம் படத்தெரியுமா.. இல்லடி உங்க அந்த கிரான்மா ரொம்ப ஸ்டிரிக்ட்ன்னு சொன்னியா அதான் கேட்டேன்..”
“ப்பச் இல்ல மேன் இதுநான் லாஸ்டா பிரண்ஸோட டூர் போனப்பதான் போட்டேன்.. ஒரு லேடிதான் போட்டாங்க.. இதத்தான் அவங்க பார்க்கவே இல்லையே.. வெளியில தெரிஞ்சா அவங்க திட்டுவாங்கன்னு அங்க போட்டேன்.. ஆனா நீ ரொம்ப பேட் பாயா இருந்திருக்க பர்ஸ்ட் டைம் பார்த்தப்பவே அத லுக் விட்டுருக்க..??”
“நான் மட்டுமா பார்த்தேன் ஆஸ்திரேலியாவே பார்த்திருக்கும்..அந்த டிரஸ் எல்லாம் இப்ப எங்கடி..?”
“ம்ம் அது ஆன்ட்டி வாங்கி கொடுத்த டிரஸ்..கிரான்மா அதெல்லாம் இங்க போடக்கூடாதுன்னு வாங்கிட்டாங்க.. ஏர்போர்ட்ல ஒரு பேபிய தூக்கி வைச்சிருந்தேனா அது என் மேல தண்ணிய ஊத்தி விட்டுருச்சு அதான் அந்த கோர்ட்ட கழட்டினேன்.. அப்பத்தான் நீ பார்த்திருக்கனும் நீ சரியான பொறுக்கி ராஸ்கல்.. என்ன பார்வை பார்த்திருக்க உன்னை..!!” அவன் முதுகில் இரண்டு போட..
“ஹாஹாஹா விடுவிடு மாமன்தான பார்த்தேன்.. டோன்ட் வொர்ரி பீ ஹாப்பிஈஈஈஈ…” அவள் கைகளை முன்னால் இழுத்து அதில் தன் முத்தத்தை பதித்து தன் நெஞ்சில் வைத்தபடி வண்டியை வேகப்படுத்தியிருந்தான்..
அடுத்தடுத்த நாட்கள் வேகமாக கரைய வீடுதச்சு செய்யும் வேலையும் நல்ல முறையில் நடக்க கடகடவென வீட்டு வேலையை ஆரம்பித்திருந்தார்கள்.. நல்ல நாள் பார்த்து சங்கரனை வைத்து அரிசி மில்லையும் திறந்திருக்க சுந்தருக்குத்தான் நேரம் றெக்கை கட்டிப்பறந்தது.. வயல்வேலை, ரைஸ்மில், அதோடு வீட்டிற்கு வேண்டிய மெட்டீரியலை பார்த்து பார்த்து தேர்வு செய்வதென அவன் அதிலேயே முழுமூச்சாய் இறங்கிவிட்டான்..
ஆஸ்திரேலியாவிலிருந்து அந்த டிடெக்டிவ் கம்பெனி போன் செய்து அந்த பார்டனர் மேல் தவறு இருப்பதாக தெரியவில்லை என சொல்ல அந்த கொலையாளிகள யார் என கண்டுபிடிக்கபடாமலே இருந்தது.. எந்த வேலை எப்படி இருந்தாலும் சுந்தர் தர்ஷினியை தனியாக விடாமல் யாராவது துணைக்கு இருக்கும்படி பார்த்துக் கொண்டான்.. அப்பத்தாவும் முடிந்த அளவு பேத்தியுடனே இருந்துகொண்டார்..
அன்று இரவு அனைவரும் சாப்பிட்டு கொண்டிருக்க “சுந்தரு நாளைக்கு உரம் போட்டிரலாமாப்பு..”
“ம்ம் எல்லாம் ரெடி பண்ணிட்டேன் காலையில வெள்ளன ஆள் வந்திருவாக நீங்க கொஞ்சம் பார்த்துக்கோங்க.. விடியற்காலை சிமெண்டும், செங்கல்லும் வருதாம் அதை பார்த்து பணத்தை கொடுத்துட்டு வயலுக்கு வரேன்ப்பு..”
தெய்வானையோ “ஏய்யா சாப்பிடும் போதும் வேலைதானா..? நான் சொல்ற கேளு.. உங்க பெரியப்பா மவன் கந்தப்பன் இருக்கானுல அவன் யாரையோ கலியாணம் பண்ணி கூட்டி வந்திருக்கானாமே..?”
“ம்ம் தெரியும்தா நானும் கேள்விப்பட்டேன்.. அண்ணனுக்கும் வயசு 33 இருக்கும்ல..?”
“ஆமாய்யா மூத்தவனுக்கே வயசு 35 இல்ல 36 இருக்கும்.. அவனுக்குத்தான் செவ்வாதோசம்னு பொண்ணே அமையல.. இவன் பொறுத்து பொறுத்து பார்த்தான் கல்யாணம் முடிக்கல அதான் இவனா ஒரு பொண்ண கட்டிக்கிட்டான் போல..”
ராமையாவோ “தெய்வானை இது தேவையில்லாத விசயம்.. உனக்கு வேற வேலையிருந்தா பாரு.. யாருவீட்ல என்ன நடக்குதுன்னு பேசாம.. மருமக சாப்பிட்டிருச்சா..??”
[the_ad id=”6605″]
“ம்ம் அது என்ன ரெண்டு தோசை சாப்பிடுது.. அவ்வளவுதான்.. ஏப்பு கல்யாணம் பண்ணி 2 மாசமாகபோகுது அந்த புள்ள வீட்டுக்குள்ளேயே இருக்கு.. பாவம் எங்கயாச்சும் வெளியில கூட்டிட்டு போகலாம்ல.. முந்தியாச்சும் ஏழெட்டு மணிக்கு வந்திட்டு இருந்த இப்ப மணிய பார்த்தியா மணி 11.. அதுவும் இந்த ஆடு கோழின்னு எம்புட்டு நேரம்தான் பொழுத போக்கும்.. இல்லைனா அது வைச்சிருக்கிற பொட்டியில ஏதாச்சும் பார்க்கும்..
ஆனா நம்ம வீட்டுக்கு வேலைக்கு வாரவுககிட்ட நல்லா சினேகிதம் பிடிச்சிருச்சு.. வார புள்ளைக எல்லாம் மருமவக்கிட்ட ஒருவார்த்தை பேசாம சாந்துசட்டிய தூக்குறதில்லைனா பார்த்துக்கோயேன்..”
சுந்தரோ தன் மனதிற்குள் அவதான் எல்லாரையும் பேசி பேசியே மயக்கிருவாளே மாயக்காரி.. என்னையும்தான் மயக்கி வைச்சிருக்கா.. இவனும் தான் அவளுடன் நன்றாக பேசி பத்துநாட்களுக்கு மேலாகப் போகுது.. பத்துநிமிடங்கள் சேர்ந்தாற்போல இருவராலும் ஒன்றாக பேசமுடியவில்லை..
அவனும் சாப்பிட்டு முடித்து அறைக்குள் வர தர்ஷினி நல்ல தூக்கத்தில் அவளை பார்க்க பார்க்க ஆசை பெருகியது அவள் அருகில் சென்று படுத்தவனோ எப்போதும் போல அவளை தன்னருகில் இழுக்க.. அவளோ தூக்க கலக்கத்தில்,
“டேய் தர்ஷூ டாடிக்கு மாமாவ பிடிச்சிருக்காம் உனக்குடா..??”
ம்ம்.. கனவிலேயே சிரிக்க..
“யேய் பேபி லட்டுக்குட்டி..” அவள் கன்னத்தை மெதுவாக தட்ட அவன் கையை அழுத்திப்பிடித்தவளோ “லவ் யூ மாம்ஸ்..” தூக்கத்திலேயே அவன் கன்னத்தில் முத்தத்தை பதித்து விட்ட தூக்கத்தை தொடர..
“இப்படியே போனா மாமா ரொம்ப நாள் தாங்க மாட்டேன் போலயேடி..!!” அவளை இறுக்கி அணைத்தவனோ இருந்த அசதியில் அடுத்த இரு நிமிடங்களில் கண்ணயர்ந்திருந்தான்..
மறுநாள் மாலை ஒரு நான்குமணி இருக்கும் நான்கைந்து பேர் வேகமாக ஓட வாசலில் அமர்ந்திருந்த தெய்வானையும் அப்பத்தாவும் “என்னப்பு எல்லாரும் இந்த ஓட்டம் ஓடுறிக..?”
“அம்மத்தா நம்ம மதியழகனோட காளை ஊர் கோடியில இருக்க அந்த பாழடைஞ்ச கிணத்துக்குள்ள தவறி விழுந்திருச்சாம் அதான் தூக்க தீயணைப்பு வண்டி வந்திருக்கு.. பார்த்தா..??”
“என்னய்யா இழுக்குற தாக்கல சொல்லு..”
“உள்ள பார்த்தா ரெண்டு பொணம் கிடந்திருக்கு அம்மத்தா..”
“அடி ஆத்தே… என்னய்யா சொல்லுற..?”
“ஆமா அங்கன ஒரே போலிஸாம்… இருங்க மத்தத போகும்போது சொல்லிட்டு போறேன்..”
“ம்கும் அதுவரைக்கும் நான் இங்கன உட்கார்ந்திருக்கவாக்கும்..” ஆளுக்கு முன்னால் அப்பத்தா நடக்க ஆரம்பித்துவிட்டார்..
இவர்கள் போவதற்குள் போலிஸ் அந்த பிணங்களை பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றிருக்க,
அன்று இரவு “என்னடா பாலா போலிஸ் பாடிய கைப்பத்திட்டாங்களே நாம மாட்டிருவோமா..??”
“ப்பச் நீ எதுவும் காட்டிக் கொடுக்காம இரு.. நாமதான் பண்ணினோம்னு எந்த ஆதாரமும் கிடைக்காது.. அந்த கிணத்து மீனுகளே பாதி உடம்ப தின்னுருச்சுக.. வெறும் எலும்பு கூட வைச்சு என்ன பண்ண முடியும்.. யாருமே பார்க்க மாட்டாங்கன்னு நினைச்சோம்.. இப்படி கோவிலுக்கு நேத்துவிட்ட காளை அதுல விழும்னு கனவா கண்டோம்..விடு பார்த்துக்கலாம்.. ஆமா உன் தம்பி யாரோ ஒரு பொண்ண கல்யாணம் பண்ணியிருக்கானாம்..??”
[the_ad id=”6605″]
“அந்த கடுப்ப கிளப்பாத.. எவளோ ஒருத்திய கட்டிட்டு வந்தவன். இப்ப என்னன்னா சொத்த பிரிச்சு கேட்கிறான்.. அவனுக்கு இருக்கு ஒருநாளைக்கு..??”
“ஏண்டா தம்பி பொண்டாட்டி எப்படி..??”
“அது மொகரையக்கூட நான் இன்னும் நல்லா பார்க்கல.. எனக்கு முதல்ல தர்ஷினிதான்.. அவ அழகுதான் என் கண்ணுமுன்னாடியே நிக்குது.. அன்னைக்கு அந்த சுந்தர் பயலும் அவளும் ஜோடியா வண்டியில போனாக பாரு.. அவன் முகத்தில அப்படி ஒரு சிரிப்புடா.. அவன கண்டாலே எனக்கு ஆகாது.. அதுவும் இப்படி சிரிச்சிட்டு என்னால தாங்க முடியல அப்பவே அவன் மண்டைய உடைச்சிட்டு தர்ஷினிய தூக்கலாமான்னு ஒரு வெறி… பல்லை கடிச்சிக்கிட்டு இருந்தேன்..”
“ம்ம்ம் நானும்தான் சரியான நேரத்துக்காக காத்திருக்கேன்.. அந்த பய தர்ஷினிய ஒரு நிமிசம்கூட தனியா விடுறதில்லடா.. யாராவது ஆளுக கூடவே இருக்காக.. எங்கவீட்டு கிழவிக்கூட அங்கேயே செட்டிலாகிருச்சு.. பத்தாததுக்கு அவன் வீடு கட்டுறான்ல எப்ப பார்த்தாலும் ஆளுக நிறைய பேர் இருக்காக நானும் அந்த வீட்டு மேல ஒரு கண்ணு வைச்சிருக்கேன்.. கரெக்டான டைம் வரட்டும் நாமதான் பண்ணினோம்னு எந்த டவுட்டும் வராம தூக்கனும்.. அவள கட்டியிருந்தா சொத்தே அவ்வளவு வந்திருக்கும்டா.. எங்க அம்மா பேச்ச கேட்டது எவ்வளவு பெரிய தப்புன்னு நானே ஒவ்வொரு நிமிசமும் நொந்துட்டு இருக்கேன்..”
இரு பெரிய பருந்துகள் தன்னை தூக்க நேரம் பார்த்திருப்பது தெரியாமல் அந்த குட்டி புறா தன் கணவனிடம் கண்கள் மின்ன கலகலவெனும் சிரிப்போடு ஏதோ கதை பேசிக் கொண்டிருந்தது..
இனி………………??????