வரம் வாங்கி வந்தவள் நான்
அத்தியாயம் – 20
சுந்தரின் அசைவில் தர்ஷினிக்கும் விழிப்பு வந்திருக்க “என்னாச்சு மாமா..??”
“உங்க அப்பாவோட பார்ட்னரும் அவர் வொய்ப்பும் போன கார் நேத்து நைட் ஆக்சிடென்ட் ஆயிருச்சாம்.”
“ஐயோ யாருக்கும் ஒன்னும் பிரச்சனை இல்லையே..?”
“ப்பச் ரெண்டு பேரும் ஸ்பார்ட் அவுட்டாம்.. உங்க சின்ன மாமாதான் போன் பண்ணினாரு..”
அவளுக்கு அதிர்ச்சி தாங்கவில்லை.. ஓஓஓவென அழ.. அவளை அணைத்து சமாதானப்படுத்தியவன் “ரெண்டு பேரோட பாடியும் இன்னைக்கு நைட் இங்க கொண்டு வர்றாங்களாம்.. நம்மள இங்கயே இருக்க சொல்றாங்க.. அப்பத்தாவும் சித்தப்பாவும் வர்றாங்களாம்..”
“ரெண்டுபேரும் ரொம்ப நல்லவங்க மாமா..என் மேலயும் தர்ஷூ மேலயும் ரொம்ப லவ் வைச்சிருந்தாங்க..” அவள் இன்னும் தேம்பிக் கொண்டிருக்க, சுந்தருக்கும் ஒரே யோசனை நேத்து நம்மகிட்ட என்னவோ முக்கியமான விசயம் பேசனும்னு சொன்னாங்க.. அதுக்குள்ள இப்படின்னா இது கொலையா இல்ல ஆக்சிடென்ட்டா..
அவள் கண்ணைத்துடைத்து விட்டவன் “ஏன் தர்ஷூ அவங்களுக்கு பசங்க யாரும் இல்லையா..?”
“ஒரு பையன் இருக்கார்.. அவர் இங்கதான் அவங்க தாத்தா பாட்டியோட வளர்றதா ஆன்ட்டி சொல்வாங்க.. அவரை ஒன் டைம் மட்டும் நான் பார்த்திருக்கேன்.. மத்தபடி அவங்க பேம்லி மேட்டரெல்லாம் டாடி மம்மிக்கு மட்டும்தான் தெரியும்..”
அன்று முழுவதும் இருவரும் வெளியில் செல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருக்க தர்ஷினியை தேற்றுவதே அவனுக்கு பெரிதாய் இருந்தது.. அழுதழுது முகம் வீங்கி போயிருக்க அவளை தன் கைக்குள்ளேயே வைத்திருந்தவன் கெஞ்சிதான் கொஞ்சம் சாப்பாடு ஊட்டி விட்டான்.. மாலையே அப்பத்தாவும் அவள் சின்ன மாமாவும் வர நால்வரும் அவர்கள் வீட்டிற்கு கிளம்பிவிட்டனர்..
[the_ad id=”6605″]
அங்கிருந்து ஒரு அரைமணி நேரம்தான் நால்வரும் ஒரே காரில் கிளம்பினார்கள்.. அவர்கள் சென்று அரைமணி நேரம் கழித்தே அவர்கள் பாடி வந்தது.. இவர்களுக்கு யாரையும் தெரியவில்லை.. நிறைய கூட்டம் அண்ணன் தம்பிகள் பங்காளிகள் என கூட்டம் அதிகமாக இருக்க தர்ஷினியும் அவர்கள் குடும்பமும் சற்று ஒதுங்கியே நின்றனர்..
மகனாக ஒரு இளைஞன் எல்லாவற்றையும் முன்னின்று செய்து கொண்டிருக்க வயது 27 இருக்கும் நல்ல சிவந்த நிறம்..களையான முகம் ஒரு சினிமா நடிகனை போல எல்லா அம்சத்தோடும் இருந்தான்.. மற்றவர்கள் சொல்ல சொல்ல அதை செய்து கொண்டிருந்தான்.. எந்த பேச்சும் இல்லை..முகம் இறுகிப்போயிருந்தது.. அவர்களின் இறுதி காரியம் முடிந்து இவர்களை சுடுகாட்டிற்கு தூக்கிச் செல்ல சுந்தரும் தர்ஷினி மாமாவும் கூடவே சென்றிருந்தனர்..
சுந்தர் இந்த பார்ட்னரை பார்த்தால் தர்ஷினி குடும்பத்தில் நடந்த கொலைக்கு ஏதாவது க்ளு கிடைக்கும் என நினைத்திருக்க இப்போது அதற்கும் வாய்ப்பில்லாமல் போனது.. அப்படி என்ன முக்கியமான விசயமாயிருக்கும்..
அனைவரும் வீட்டிற்கு திரும்ப பாதிபேர் கிளம்பியிருந்தனர் ..தர்ஷினியும் சுந்தரும் கிளம்ப இப்போதுதான் அவர் மகன் தர்ஷினியிடம் சென்று பேசத்துவங்கினான்..
தர்ஷினி அவனை ஒரு முறை முன்பு பார்த்திருக்கிறாள்.. “ஸாரி ஆன்ட்டி அங்கிளுக்கு இப்படி நடக்கும்னு நான் நினைக்கவே இல்லை.. நேத்துக்கூட போன் பண்ணினாங்க..”
“என்ன பேசினாங்க.. ராம்னே கூப்பிடு தர்ஷினி..”
“ஒன்னும் சொல்லல ராம்.. இன்னைக்கு இங்க வர்றதா சொன்னாங்க.. எங்கள பார்த்து பேசனும்தான் வேற எதுவும் இல்ல..”
“ம்ம் ஸாரி தர்ஷினி அங்கிள் ஆன்ட்டி டெத்தப்போ நான் அங்க வரமுடியாம முக்கியமான வொர்க் இருந்திச்சு அதான் வரமுடியல.. இன்னைக்கு இங்க இரேன் நாளைக்கு போகலாம்.. டாடி மம்மி இருந்திருந்தா உன்னை இங்க பார்த்து ரொம்ப ஹாப்பியாகியிருந்திருப்பாங்க..”
“ஆமா ராம்.. நானும் அவங்கள பார்க்க ரொம்ப ஆவலாதான் இருந்தேன் பட்…” இவளுக்கு கண்கள் கலங்கியது..
“உள்ள வாயேன் ரூம் காட்றேன் ரெஸ்ட் எடு.”
“நோ நோ எங்க ஹஸ்பண்டுக்கு அங்க கொஞ்சம் வொர்க் இருக்கு.. இப்போ கிளம்பிருவோம் அவங்க வொர்க் பார்த்து டைம் கிடைச்சா இன்னொரு நாளைக்கு வர்றோம்..” இன்னும் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு கிளம்ப.. காரில் வரும்போது அமைதி மட்டுமே ஆளாளுக்கு ஒரு சிந்தனையில் வர,
“ஏன் சித்தப்பா இவங்க பேம்லி பத்தி உங்களுக்கு ஏதாச்சும் தெரியுமா..?”
[the_ad id=”6605″]
“நான் இதெல்லாம் ரொம்ப தெரிஞ்சிக்கிட்டது இல்ல.. சுந்தர்.. கலை இங்கன வரும்போது அவகிட்ட எங்க குடும்ப விசயம் பேசவே எங்களுக்கு நேரம் சரியா இருக்கும்..”
அனைவரும் வீட்டிற்கு வர அங்கேயே குளித்தவர்கள் அப்பத்தா அசதியாக இருப்பதாக சொல்லி படுக்க தர்ஷினியும் அப்பத்தவோடுதான்.. சுந்தரும் தர்ஷினி மாமாவும் தோட்டத்தில் நின்றிருந்தனர்..
தர்ஷினி கணவனிடம் வந்தவள்” மாமா கிரான்மா ரொம்ப டயர்டா இருக்காங்க.. நாம இங்கயே ஸ்டே பண்ணிட்டு காலையில கிளம்பலாமா ..?”
“சரிடா..” ஹோட்டலுக்கு சென்று டிபன் வாங்கி வந்தவன் அவர்களை சாப்பிடச் சொல்ல, அப்பத்தாவிற்கு ஒரே கவலை முதலில் மகள் குடும்பம் இறந்தது, இப்போது இவர்கள்.. தர்ஷினியையும் ஏதும் செய்துவிடுவார்களோ என்ற பயம் வர பேத்தி முன் எதுவும் சொல்ல முடியாமல் மனதிற்குள்ளேயே மருகினார்..
அனைவரும் படுக்கச் செல்ல தர்ஷினி அறையில் தூங்காமல் விழித்திருந்தாள்.. முகமே ஒரு தெளிவில்லை.. தான் படுத்து அவளை தன் மார்பில் போட்டுக் கொண்டவன் “என்னடா பேபி ரொம்ப யோசிக்கிற விடு.. எல்லாம் சரியாகிடும்..”..
“எனக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு.. பாவம் ஆன்ட்டி அங்கிள்.. எங்க பேம்லிக்குத்தான் அப்படி ஆச்சுனா இவங்களுக்கும்…!!” கண்ணீர் நிற்கவே இல்லை..
சுந்தரும் சற்று கலங்கி போய்தான் இருந்தான்.. ஏனோ இருக்க இருக்க தர்ஷினிக்கு ஆபத்து அதிகமாவது போல தோன்ற, இன்று இவர்கள் இருவரும் இறந்தது சற்று அதிர்ச்சிதான்.. இது ஒருவேளை ஆக்சிடென்ட் இல்லாம கொலைன்னா கொலைகாரன் இங்கயிருக்கிறானா..? இல்லை ஆஸ்திரேலியாவா..? ஒரே குழப்பம்.. டிடெக்டிவோ கொலைகாரர்களை கண்டுபிடிக்க முடியாமல் திணற, எந்த ஒரு தடையமும் இல்லை.. அவங்களுக்கு யார் மேல் கோபமா இருக்கும் தர்ஷினி குடும்பத்தின் மேலா இல்ல இவங்க மேலா..? அப்படி என்ன பகை..? ராமின் முகத்தை நினைவுக்கு கொண்டு வந்தவன் முகத்தை வைத்து ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை.. இத்தனை நாள் இருந்த சந்தோசம் சட்டென மறைய மனைவியை அணைத்தவாறே கண்ணயர்ந்தான்..
பாதி இரவுக்கு மேல் சுந்தருக்கு தூக்கம் கலைய படுக்கையில் தர்ஷினியை காணவில்லை.. சட்டென எழுந்து விளக்கை போட்டவன் பாத்ரூமில் காணாமல் பதறி வெளியில் வர ஹாலில் ஊஞ்சலில் படுத்திருந்தாள்.. நிலா வெளிச்சத்தில் முற்றத்து வெளிச்சம் அவள் மேலடிக்க விடிவிளக்கை போட்டவன் தன் மனைவியிடம் சென்றான்.. அழுதிருப்பாள் போல கண்ணீர் கோடுகள் காய்ந்து போயிருந்தது..
யாருமே இல்லாத அனாதை போல பரிதாப தோற்றத்துடன் கழுத்துக்குள் கைவைத்து தன்னுள் சுருக்கி சுருண்டு படுத்திருந்தவளை பார்த்த சுந்தருக்கு மனம் பதற மனைவியை பூப்போல தூக்கி நெஞ்சோடு அணைத்து அறையில் படுக்க வைத்து போர்வையை போர்த்தி விட்டான்.. தூக்கம் கலைந்ததால் ஒரு காப்பி குடிக்கலாம் போல தோன்ற கிச்சனுக்குள் நுழைந்தான்.. காப்பி கப்போடு ஹாலுக்கு வர அந்த விடிவிளக்கின் வெளிச்சத்தில் முகத்தில் புன்னகையோடு இருக்கும் அவர்கள் குடும்ப போட்டோவையே பார்த்தபடி சற்று நின்று அதன் அருகில் சென்றான்..
“ என் மனசு சொல்றது உண்மையா இல்ல அது என்னோட மனப்பிரமையான்னு தெரியல.. நீங்க எல்லாரும் இங்க இருக்க மாதிரிதான் இருக்கு.. அது ஆவியோ இல்ல எங்களுக்கு மேல இருக்க ஒரு சக்தியோ அதுக்கு நான் பேர் கொடுக்க விரும்பல.. நீங்க எல்லாரும் செத்ததையே உங்க பொண்ணால தாங்க முடியல.. இப்ப இவங்க.. அதோட தர்ஷினிக்கும் ஏதாச்சும் ஆயிருமோன்னு பயமா இருக்கு..
எனக்கும் ஒன்னும் புரியல.. நீங்க எல்லாரும் உண்மையில இங்க இருக்கிறதா இருந்தா, உங்க பொண்ணு மேல உண்மையான பாசம் இருந்தா உங்களுக்கு நடந்த கொடுமைகளுக்கு யார் காரணம்னு ஒரு சின்ன க்ளுவாச்சும் கொடுங்க.. நான் தர்ஷூவ நல்லா வைச்சுக்கனும் அவளோட ரொம்ப நாள் சந்தோசமா வாழனும் நினைக்கிறேன்.. எதாச்சும் பண்ணுங்க ..”கடவுளை வணங்குவது போல இரு கைகூப்பி வணங்கியவன் வேறு என்ன செய்வதென்று தெரியாமல் அறைக்கு வந்து தன் மனைவியை இறுக அணைத்துப் படுத்தான்..
………………….
வேறொரு வீட்டில் ஒரு உருவம் சாய்வு நாற்காலியில் அமர்ந்து ஆடியபடி போனில் இருந்த சுந்தரின் போட்டோவை வன்மத்துடன் முறைத்து தர்ஷினியின் படத்தை பெரிதாக்கி அதை மேலிருந்து கீழாக ஆசையோடு வருடியது.. அன்று வண்டியில் சுந்தர் தன் மனைவியை முன்னால் ஏற்றியபோது எடுத்தப் படம்..
“டேய் நான் கொஞ்சம் கொஞ்சமா பிளான் போட்டா நீ குறுக்க வர்றியா.. வா வா.. கொஞ்சநாள் உயிரோட இரு.. உன் பொண்டாட்டி ரெண்டுதரம் என் கைக்கு வந்து மிஸ்ஸாகிட்டா.. தன் பின்தலையை தடவிப்பார்த்தவன் அன்னைக்கு ஹோட்டல்ல மயக்க மருந்து கொடுத்து தூக்கி வந்து கடைசி நேரத்தில கொஞ்சம் கேர்லஸ்ஸா இருந்திட்டேன்..அதனால நீ திடிருன்னு புருசனா வந்திட்ட.. இல்ல அப்பவே அவ என் கைக்கு வந்திருப்பா..
தன் கையில் இருந்த அந்த வைர மோதிரத்தையே பார்த்தவன்.. இதுதான் உன் மாமனார் வைச்சிருந்த வைரத்திலே ரொம்ப காஸ்ட்லியானதாம்.. அதான் மோதிரமா போட்டுக்கிட்டேன்.. இருந்தாலும் அவங்க எல்லாம் இவ்வளவு நல்லவங்களா இருக்க கூடாது..
ம்ம் அவளுக்காகவும் அவ சொத்துக்காகவும் நான் அவ குடும்பத்தையும் இப்போ இவங்களையும் தூக்கியிருக்கேன்.. நீ டிடெக்டிவ் வைச்சு என்னை கண்டுபிடிக்க போறியா..ஹாஹாஹா நான் போலிசுக்கே தண்ணி காட்டிட்டேன்.. உன்கிட்ட மாட்டுவேனா.. இந்த ஆக்சிடென்ட் விசயம் கொஞ்சம் அடங்கட்டும்.. அதுவரை உன் பொண்டாட்டியோட சந்தோசமா இருந்துக்கோ..” ராவணன் போல அடுத்தவரின் மனைவி மேல் ஆசை வைக்க.. அவன் முகத்தில் அப்படி ஒரு வெறியும் குரூரமும் தெரிந்தது..
[the_ad id=”6605″]
காலை எட்டு மணியிருக்கும் நால்வரும் கிளம்பி எல்லா கதவையும் பூட்டி சாவியை தர்ஷினியிடம் கொடுத்தவன் காரை கிளப்ப போக… தடதடவென ஒரே சத்தம்.. காரை நிறுத்தி சத்தம் வரும் திசையை பார்க்க அவர்கள் தோட்டத்தில் இருக்கும் சிறுவீட்டில் இருந்துதான் அந்த சத்தம் வந்தது..
“ ஏதாச்சும் எலியா இருக்குமோ சுந்தரு சாமான உருட்டுது போலவே..??”
“தெரியலையே அப்பத்தா இருங்க.. நான் போய் பார்க்கிறேன்..”
அவள் மாமாவோ “வேணாம் சுந்தரு அங்க தேவையில்லாத சாமான்களை போட்டு வைக்கச் சொன்னேன்.. அதான் சத்தமா இருக்கும்.. இன்னொரு தரம் வரும்போது பார்க்கலாம் வா..”
“சரி சித்தப்பா..” காரில் ஏறப்போக மீண்டும் ஒரே சத்தம்.. இம்முறை காரை விட்டு இறங்கியவன் தர்ஷினியிடம் சாவியை வாங்கி தோட்டத்தில் இருக்கும் அந்த சிறு ஓட்டு வீட்டை நோக்கிச் சென்றான். . கதவை திறக்க பரணியில் இருந்த பித்தனை சாமான்கள், தட்டுமுட்டு சாமான்கள் கீழே விழுந்து கிடக்க ஒரு பூனை அதன் மேல் ஒய்யாரமாய் அமர்ந்திருந்தது….
அதை பார்வையிட்டவன் இதை அடுக்க ஆரம்பிச்சா இன்னும் அரைமணி நேரமாகும்.. அதான் வேலைக்கு ஆளுங்க வர்றாங்களே அவங்கள பார்க்கச் சொல்லுவோம்.. திரும்பி நடக்க அவன் காலடியில் ஒரு சூட்கேஸ்.. அதை எடுத்து பார்க்க நம்பர் லாக் போட்ட சூட்கேஸ்.. இதுல என்னவாயிருக்கும் அதை ஆட்டி பார்த்தவன் அதில் ஏதோ பேப்பர்கள் போல சத்தம் கேட்க அதை கையில் எடுத்துக் கொண்டு கதவை பூட்டிவிட்டு வந்தான்..