“என்ன பெட்டி சுந்தர் இது..??”
“தெரியல சித்தப்பா… ஏதோ பைல் மாதிரி உள்ள இருக்கு நம்பர் லாக் போட்டிருக்கு
… வீட்ல போய் என்னன்னு பார்க்கலாம்..”
“ம்ம் சரி வா நான்தான் ஆள்விட்டு இங்க இருந்த தேவையில்லாத சாமான்களை எல்லாம் இந்த வீட்ல போடச்சொன்னேன்.. தேவையில்லாத பைலாதான் இருக்கும்.. இத கொண்டு போய் என்ன பண்ண போற..??”
“இருக்கட்டும் சித்தப்பா நானும் ஒரு தரம் செக் பண்ணிக்கிறேன்..” அதை தன் டிக்கியில் வைத்தவன் காரை கிளப்பியிருந்தான்.. வரும்போதே ராமையா இரண்டு மூன்று தரம் போன் செய்துவிட்டார்.. நேற்றே வரவேண்டியவன் வேலைகள் இங்கு நிறைய இருக்க பணமும் கொஞ்சம் பற்றாக்குறையாக இருந்தது.. தன் காரின் வேகத்தை அதிகப்படுத்தி அடுத்த நான்கு மணி நேரத்தில் வீட்டிற்கு வந்திருந்தான்.. அப்பத்தா தன் சின்ன மகனோடு அவர்கள் வீட்டில் ஒருவாரம் தங்கி வருவதாக சொல்லிவிட்டார்..
காரை விட்டு இறங்க.. வாசலில் ராமையா வேலையாட்களுக்கு கூலி கொடுக்க பணம் கேட்கவும் வீட்டிற்குள் கூட செல்லாமல் அவரை தன் வண்டியில் ஏற்றிக் கொண்டு ஏடிஏம் ஐ நோக்கி வண்டியை விட்டான்..
தன் தங்கையை அழைத்து “சுந்தரி நீயும் தர்ஷினியும் கார்ல இருக்க எல்லாப் பொருளையும் உள்ள கொண்டு போயிருங்க..” தர்ஷினி வீட்டிற்கு நிறைய ஷாப்பிங் செய்திருந்தாள்..
“தர்ஷினி நீ முதல்ல சாப்பிட்டிரு.. நான் அப்படியே மில்லுக்கு போயிருவேன்..” அவசரமாக கிளம்ப,
“மாமா நீங்க சாப்பிடல..?”
பளிச்சென சிரித்தவன்… “நான் வெளியில பார்த்துக்கிறேன்டா.. முருகண்ணன் பையனுக்கு உடம்பு சரியில்லையாம்.. நான் பணம் கொடுத்தாத்தான் அவங்க ஹாஸ்பிட்டலுக்கு போக முடியும் வரவா.. தேவையில்லாம வெளியில வராத.. சுந்தரி பார்த்துகோ..” அதற்கு மேல் நேரத்தை கடத்த முடியாமல் கிளம்ப, வெளியில் வந்த சௌந்தரத்தை பார்க்கவும் அவள் மகனை தூக்க கையை நீட்டினாள்..
எல்லாப் பொருளையும் தூக்கி வந்தவர்கள் சுந்தரி சூட்கேஸை பற்றி கேட்க “அது அங்க வீட்ல இருந்திச்சு சுந்தரி.. தேவையில்லாத பைல் என்னவோ இருக்கு போல.. மாமா பார்க்கனும்னு சொன்னாங்க.. எங்க ரூம்ல வைச்சிரு.. வா நான் உனக்கு மேக்கப் செட்டும் சுடிதாரும் வாங்கிருக்கேன் பாரு…”
[the_ad id=”6605″]
“மேக்கப் செட்டா…!!!” சூட்கேஸை தூக்கிக் கொண்டு வேகமாக ஓடியவள் போன வேகத்தில் கட்டிலுக்கு கீழாக தள்ளிவிட்டு தர்ஷினியை நோக்கி ஓடிவந்தாள்..
சுந்தருக்கு அங்கு வேலை வரிசை கட்டி நிற்க பணத்தை அப்பாவிடம் கொடுத்து ஆட்டோவில் வீட்டுக்கு அனுப்பி வைத்தவன், நேராக மில்லுக்கு வண்டியை விட்டான்.. கட்டிட கட்ட தேவையான பொருட்கள குறைவாக இருக்க அதை கொண்டுவர ஏற்பாடு செய்து வயலுக்கு கிளம்ப என இரண்டு மூன்று நாட்கள் காலையில் சென்றால் இரவுதான்.. சுந்தருக்கு தர்ஷினியை கொஞ்சக்கூட முடியவில்லையே என்ற ஏக்கம் வேறு..
தர்ஷினியோ சௌந்தரத்தின் மகனோடு பொழுதை போக்கி மீதி நேரத்தில் சுந்தரியின் நடை, உடை பாவனைகளை மாற்றிக் கொண்டிருந்தாள்.. அவளுடைய ஹேர் ஸ்டெயிலை மாற்றி சில பல பியூட்டி டிப்ஸ் சொல்ல அவ்வளவுதான் சுந்தரியை கையில் பிடிக்க முடியவில்லை.. அதோடு தர்ஷினி வாங்கி வந்த உடையை எதாவது விசேசம் வந்தால் போடலாம் என தெய்வானை தடுத்திருக்க காலண்டரில் ஏதாவது விசேச நாள் வருகிறதா என பார்ப்பதே அவளுக்கு முக்கிய வேலையாய் இருந்தது.. இங்கு குடும்பத்தினரோடு மனதளவில் இன்னும் நெருங்கியிருந்தாள்.. அங்கு சுந்தருக்கு உதவி செய்த நினைவில் சில சில வீட்டு வேலைகளையும் கற்றுக் கொண்டிருந்தாள்..
கணவனுக்கு வேலை அதிகம் என்று தெரியும் அதனால் அவனை எந்த வகையிலும் டிஸ்டர்ப் செய்யவில்லை.. சூட்கேஸ் கண்முன்னால் இருந்திருந்தாலாவது சுந்தர் அதைப்பற்றி நினைத்திருப்பானோ என்னவோ இப்போது அது சுத்தமாக நினைவில்லை..
சௌந்தரத்தின் மகனுக்கு ஏகப்பட்ட டிரஸ், கழுத்து செயின் பிரஸ்லெட், மோதிரம், வெள்ளி கொலுசு.. தாயத்து ,முத்து வைத்த அரைஞான் கொடி விலை உயர்ந்த பொம்மைகள் என வாங்கி வந்திருக்க ஒவ்வொரு பொம்மையும் 500. 1000 இருக்கும் ஒரு மாத குழந்தை அதை வைத்தா விளையாட முடியும்.. சௌந்தரம் எடுத்து சொல்ல அசடு வழிந்தவளை பார்த்து தெய்வானைக்கும் சௌந்தரத்திற்கும் அப்படி ஒரு சிரிப்பு.. நிறைய புடவைகள் எடுத்து வந்தவள் தெய்வானைக்கும் சௌந்தரத்திற்கும் கொடுத்திருக்க தன் மருமகளின் குணத்தில் தெய்வானைக்கு மனம் நெகிழ்ந்தது..
அன்று சற்று வேகமாக வேலையை முடித்தவன் தர்ஷினி தூங்குவதற்குள் அவளைப் பார்க்க எட்டுமணிக்கே கிளம்பியிருந்தான்.. அவன் மனசாட்சியோ ‘டேய் சோனமுத்தாஆஆஆ… ரொம்ப வேகமா போற மாதிரி இருக்கு என்ன உன் லட்டுவ சைட் அடிக்கவா..??’
‘ஆமா உனக்கென்ன.. அதப்பத்தி உனக்கெப்படி தெரியும்..’
‘ம்ம் அதான் இன்னைக்கு பூராவும் அப்பப்போ உன் போன்ல பொண்டாட்டிய கொஞ்சிட்டு இருந்தியே.. அவள பார்த்து ஊத்துன ஜொல்லுலதான் மில்லே இன்னைக்கு நனைச்சு போயிருந்துச்சே..’
‘அப்படி வெளிப்படையாவா கொஞ்சினோம்.. ச்சு மரியாதையா ஓடிப்போயிரு அவ என் சொத்து என் உரிமை..’
க்கும்.. அது நொடித்துக் கொள்ள இவன் வீட்டிற்குள் நுழைந்திருந்தான்..
[the_ad id=”6605″]
ராமையா வெளிவாரத்தில் கட்டிலில் அமர்ந்து தன் பேரனை கொஞ்சிக் கொண்டிருந்தார்.. தந்தையை பார்க்கவும் அவரிடம் சென்றவன் தன் மருமகனை தூக்கி கொஞ்சத் துவங்கினான்..
“சுந்தரு வாழையெல்லாம் நல்லா தார்விட்டு பக்குவமாயிருக்கே.. அத வெட்ட ஆள வரச் சொல்லலாமே..”
“ம்ம்.. எப்பவும் வர்றவங்களவிட இன்னொரு இடத்தில தாருக்கு அதிக பணம் தர்றதா கேள்விப்பட்டேன் நாளைக்கு விசாரிச்சிட்டு சாயங்காலமா ஆளுகளை வரச் சொல்றேன்ப்பு.. சாப்பிட்டிங்களா..?”
“ம்ம் ஆச்சுப்பு.. அப்புறம் நம்ம வள்ளி நாத்தனார் கல்யாண பத்திரிக்கை ஊருக்கே கொடுத்திருக்காக.. நமக்கு மட்டும் தரலை..நாளைக்கு கல்யாணம்..”
“இன்னுமா மச்சான் கோபம் குறையல..”
“ம்ம் என்ன பண்ண.. சரி விடு பார்க்கலாம் இன்னும் எவ்வளவுதூரம் இந்த பிரச்சனை போகுதுன்னு.. உன் ஆத்தாதான் புலம்பி தீர்க்கிறா.. பேரன பார்க்கல, மகளை பார்க்க முடியலைன்னு நான் வேணா ஒரு எட்டு நேரா போய் மன்னிப்பு கேட்கலாம்னு பார்க்கிறேன்யா..”
“அச்சோ.. தப்பு என் மேல நீங்க யார்கிட்டயும் மன்னிப்பு கேட்க வேணாம்.. நானும் அப்பப்போ அவருக்கு போன் டிரை பண்ணிட்டுதான் இருக்கேன்.. அவர்தான் எடுக்க மாட்டேங்கிறார்.. ஆனா வள்ளி பேசுறத தடுக்கல.. இப்ப போய் அவர் கோபத்தை இன்னும் கிளற வேணாம்.. அவரு கல்யாணத்தை நல்ல படியா முடிக்கட்டும்.. அப்புறம் நான் போய் நேரா பேசுறேன்.. கண்டிப்பா அவருக்கு புரிய வைக்கிறேன்ப்பு..”
“சரிய்யா விடு பார்ப்போம் களைச்சு போயிருக்க.. நீ போய் சாப்பிடு..??”
அவன் வீட்டிற்குள் வர தாய் மட்டும் சீரியலில் மூழ்கியிருக்க மற்ற யாரையும் காணவில்லை.. மருமகனை தாயிடம் கொடுத்தவன் புதுக்கட்டிடத்தில் பேச்சுக்குரல் கேட்கவும் குளித்து வேறு உடைமாற்றி அங்கு சென்றான்..
சுந்தரி “அண்ணே வா.. வா என்ன சீக்கிரமா வந்திட்ட..?”
[the_ad id=”6605″]
“கொஞ்சம வேலை சீக்கிரமா முடிஞ்சுருச்சு அதான்..” வாய் தங்கையிடம் பேசிக் கொண்டிருந்தாலும் பார்வை மனைவியிடம் தான்.. மஞ்சள் நிற நைட்டியில் ஒரு சூரியகாந்தி பூவை போல சிரித்தபடி பேசிக் கொண்டிருந்தவளை கண்களாலேயே கொள்ளையடித்துக் கொண்டிருந்தான்..
சௌந்தரம் இருவரையும் பார்த்தவள் தங்கையின் கையை பிடித்தபடி “அண்ணே உன் மருமவன் இனி அழுதுருவான் நாங்க உள்ள போறோம்..நீங்க வாங்க..”
“நீங்கள்லாம் சாப்பிடல..?”
“சாப்பிட்டோம்ண்ணே.. நீ போய் சாப்பிடு..”
இருவரும் மறையும் வரை காத்திருந்தவன் மறுநிமிடம் தன் மனைவியை இறுக அணைத்து அவள் முகமெங்கும் முத்தமிட்டு அவள் இதழில் தன் இதழை புதைத்து இந்த நான்கைந்து நாள் பிரிவை தன் முத்தத்தில் காட்டிக் கொண்டிருந்தான்.. கைகள் வேறு வேலையை பார்த்துக் கொண்டிருக்க சற்று நேரம் கணவனை அனுமதித்தவள் அது இப்போது நிற்கும் போல தோன்றவில்லை.. தன் முகத்தை அவனை விட்டு பிரித்து திரும்பி அவன் மடியில் அமர்ந்தாள்..
அவளை முறைத்தவன் அவள் பின்கழுத்தில் தன் முகத்தை புதைக்க அவன் மீசையின் குறுகுறுப்பை அவளால் தாங்கமுடியவில்லை,.. “என்ன இந்த பக்கம் காத்து வீசுது… நாலஞ்சு நாளா யாரோ ஒரு அம்பி மாதிரி இருந்திங்க.. இப்ப என்னமோ ரெமோ மாதிரி காதல் மன்னனா மாறிட்டிங்க…”சற்று திரும்பி அவன் கன்னத்தை நறுக்கென கடிக்க அதில் இத்தனை நாள் அவனை விட்டு பிரிந்திருந்த தாபமே தெரிந்தது..
“ம்ம்ம்.. எங்க நான் வரலையேன்னு ஒரு போனாவது பண்ணினியா.. நான் எப்போ வர்றேன் போறேன்னு எதுவுமே தெரியாம இருக்க.. நான்தான் அங்க வேலையும் பார்க்க முடியாம உன் கூடவே இருக்கவும் முடியாம உன்னையவே நினைச்சிட்டு.. ப்பா இன்னைக்கு சுத்தமா முடியல அதான் வேகமா வந்திட்டேன்.. சாப்பிட்டியா..”
“ம்ம்..”
“சரி வா நம்ம ரூமுக்கு போவோம்..”
“அதுக்குள்ளயேவா அவங்க யாரும் இன்னும் படுக்கலையே..”
“ம்கூம் நாம சாப்பிட்டு போறதுக்குள்ள அவங்க எல்லாரும் படுத்திருப்பாங்க நீ வா” அவளை கைகளில் ஏந்தியவன் சாப்பிட செல்ல இருவரும் சாப்பிட்டு வர வீடே தூக்கத்தில் இருந்தது..
தர்ஷினிக்கு ஆச்சர்யம் “எப்படி மாம்ஸ் இது..?”
“அது அப்படிதான் வா..வா..”
அறையை தாளிட்டவன் அவளை அந்த கதவின் மேல் சாய்த்தே தன் வேலையை காட்ட ஆரம்பித்திருந்தான்..
வெட்கத்தில் சினுங்கியவள் “அச்சோ என்ன அவசரம் ..!!”
“அது எனக்குத்தான் லட்டு தெரியும்..” அவளுள்ளேயே மூழ்கியவன்.. சற்று பொறுத்து அலமாரியிலிருந்து ஒரு உடையை கொடுத்து போட சொல்ல. .. அது அங்கு போட்ட கருப்பு நிற கவுன்..
“இது எப்படி இங்க வந்திச்சு நான் அங்க வைச்சிட்டுதானே வந்தேன்..” அவள் ஆச்சர்யப்பட..
[the_ad id=”6605″]
“லட்டுமா என்னைக்கோ ஒருநாள்தான் அங்க போறோம்.. அதுவரைக்கும் இந்த நைட்டியா.. இந்த ரூம்ல நைட்டியெல்லாம் போடவே கூடாது.. இங்க பாரு..” அங்கிருந்த பாதி உடைகளை கொண்டு வந்திருக்க அனைத்தும் கையில்லாமல் முழங்காலுக்கு மேலே உள்ள ஆடைகள்..
தர்ஷினிக்கு சிரிப்பு தாங்கவில்லை..”ஹாஹாஹா நான் என்னவோ உன்னை பொறுப்ஸ்ன்னு நினைச்சிட்டேன்.. உனக்குள்ளயும் ஒரு காதல் ரௌடி இருக்கான் மாமா..”
“பேசிட்டே இருக்காத பேபி… மாத்து இல்ல நான் ஹெல்ப் பண்ணவா..??” அந்த உடையை வாங்கி அவள் அருகில் செல்ல இருவரும் அந்த அறைக்குள்ளேயே ஓடிப்பிடித்து விளையாட ஆரம்பித்தார்கள்.. சற்று நேரத்திலேயே அந்த உடையோடு சேர்த்து நைட்டியையும் கைப்பற்றியிருந்தான்..
மறுநாள் காலை பதினோரு மணி போல அந்த வாழைத்தார் மண்டி இருக்கும் இடத்திற்கு சென்றுக் கொண்டிருக்கும் போது பாதியிலேயே ஒரு காரை பார்த்து வண்டியை நிறுத்தியவன் சற்று யோசித்து சட்டென வீட்டிற்கு வந்து…
சத்தமாக” தர்ஷினி தர்ஷினி..!!”
கொல்லைப்புறம் நின்றவள் தர்ஷினியா இவங்களுக்கு என்னாச்சு வேகமாக ஓடி வந்தவளிடம்
“அன்னைக்கு கொண்டு வந்த சூட்கேஸ் எங்க..?”
சுந்தரியிடம் கேட்டு வந்தவள கட்டிலுக்கு கீழ் இருந்து எடுத்து கொடுக்க அதை ஏதேதோ நம்பர் போட்டு திறந்து பார்க்க முடியவில்லை.. கடைசியில் அதை உடைத்துத்தான் திறந்தான்.. சிலபல பத்திரங்கள் இருக்க ஒவ்வொன்றாக பார்வையிட்டவனின் பார்வை ஒரு பத்திரத்தில் நிற்க அவன் கண்ணை அவனாலேயே நம்ப முடியவில்லை..
“என்னாச்சு மாமா.. அதுல என்ன இருக்கு..?
“தர்ஷூ மாமாவுக்கு ஒரு டீ போட்டு எடுத்து வாடா.. முக்கியமா நான் ஒரு போன் பண்ணனும்…” அவளை அனுப்பி வைத்தவன் தர்ஷினி சின்ன மாமாவுக்கு போன் செய்து விபரத்தை சொல்ல அவருக்கும் ஆச்சர்யம், அதிர்ச்சி..
“நீ உடனே கிளம்பி இங்க வா சுந்தர் நான் வக்கீலுக்கு போன் பண்றேன்.. அந்த பத்திரத்தை எடுத்துட்டு வா..”
தர்ஷினி டீ…யோடு வர அறையில் சுந்தர் இல்லை .. அவன் வண்டியில் தர்ஷினி மாமா இருக்கும் ஊருக்கு வண்டியில் சென்று கொண்டிருந்தான்..
இனி…………???