ஹால் சோபாவிலேயே மடிந்து அமர்ந்து அழுதுக்கொண்டிருந்தாள் மாதங்கவதனா.
நேரே சென்றவன், “எங்க அம்மா இப்படிதான்! பலாப்பழம் மாதிரி! எதையும் ஸாஃப்ட்டா சொல்லவே வராது… எல்லார்க்கிட்டயுமே இப்படிதான் அதட்டி உருட்டி பேசுவாங்க! நீ அவங்க பேசுன விதத்தை எதுவும் பெருசா எடுத்துக்காத!” என்றவன்,
“பேசுன விதத்தை தான் சொன்னேன்… பேசுனதை இல்லை!” என்றுவிட, நிமிர்ந்து பார்த்தவள்,
“ஏன் இப்படி பொண்ணே கிடைக்காத மாதிரி என்னையே சுத்தி வரீங்க?” என்றாள்.
“பிகாஸ் ஐ லவ் யூ!” முதல்முறையாய் சொன்னான்.
அவனை அப்படியே பார்த்துக்கொண்டிருந்தவள், “நீங்க ரொம்ப லேட்டா வந்துட்டீங்க” என்றாள் விரக்தியாய்.
“கொன்னே புடுவேன்! ஆளுக்கு முதல்ல வந்ததே நான் தான்! அடிச்சு விரட்டிட்டு லேட்டா வந்துட்டேன்னா சொல்ற?” அதட்டலாய் அவன் கேட்ட தோரணையில் சிரிப்பு வரும் போல ஆனது அவளுக்கு.
“இல்ல அஜய்… நான் ரொம்ப யோசிச்சுட்டேன்! நமக்குள்ள சரி வராது!”
“நீ யோசிக்கிறது தான் பிரச்சனையே! ஒன்னு கூட உருப்படியா யோசிக்க மாட்ட!” கடுப்பாய் அவன் சொல்ல,
“இல்ல அஜய்! நான் தெளிவா தான் இருக்கேன்! இது வொர்க் அவுட் ஆகாது! விட்டுடலாம்!” என்றாள்.
“ஏன்?” ஒற்றை கேள்வியில் நிறுத்தினான்.
எச்சில் முழுங்கி, உதடு கடித்து, சொல்வோமா வேண்டாமா என்ற தயக்கத்துடன்,
“அவன் இன்னொருத்தியை கல்யாணம் பண்ண தான் அவசரமா டிவோர்ஸ் வாங்குனான்! இப்போ நானும் அதை தானே பண்ணப்போறேன்?
பாக்குறவங்களுக்கு நான் முன்னாடியே உங்க கூட பழகி, அதனால விவாகரத்து வாங்கினதா தானே தெரியும்? அப்போ அவனுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் இருக்கும்?” என்று கேட்க,
“ஓ!!!” என்று அவள் சொன்னதை உள்வாங்கியவன், சாவகாசமாய் அங்கிருந்த சோபாவில் அமர்ந்துக்கொண்டான்.
“சோ, இதான் மேடம் என்னை வேண்டாம்ன்னு சொல்றதுக்கான காரணம்! இல்லையா?” என்று கேட்க, தயங்கி தான் என்றாலும் ‘ஆம்!’ என அசைந்தது அவள் சிரம்.
“ம்ம்ம்!” என யோசனையாய் நிறுத்தியவன், “அப்போ ஒரு ரெண்டு வருஷம் கழிச்சு கல்யாணம் செஞ்சுக்கலாமா?” என்றான்.
“ஆங்?” என விழித்தவள், யோசனைக்கு போக, “புருஷனை வெட்டிவிட்டுட்டு எவனோ ஒருத்தனோட பழகுனா, இப்போ அவனையே கட்டிக்குறா’ன்னு சொல்ல மாட்டாங்களா?” என்றான்.
முகம் கலங்கி போனது அவளுக்கு.
“சரி, ஒரு அஞ்சு வருஷம் போய் கல்யாணம் பண்ணலாமா?” என்றான் அடுத்து.
இம்முறை அவள் அவனையே பார்க்க, “பாரு, பொண்ணு தோளோயரம் வளந்துட்டா, இப்போ போய் இரண்டாவது கல்யாணம் பண்றா! அப்படின்னு சொல்ல மாட்டாங்க?” என்றான்.
அவள் தலை தன்னால் குனிந்தது.
“சரி உனக்கும் வேண்டாம்… எனக்கும் வேண்டாம்! ஒரு பத்து வருஷம் போட்டும்! அப்பறம் கல்யாணம் செஞ்சுக்கலாமா?”
“சரி விடு, உன் வழிக்கே வரேன்… நம்ம கல்யாணமே பண்ணிக்க வேண்டாம்! உன் வழில நான் வரவே மாட்டேன்! நீ இஷ்டப்பட்டபடி இந்த ஊர் மெச்ச தனியாவே இருக்கன்னு வச்சுப்போம்!” என்றவன்,
“நீ வேலைக்கு போயிட்டு வர லேட் ஆகுது…
தெருமுனையில உன் கூட படிச்சவனோ இல்ல
தெரிஞ்சவனோ உன்னை பார்த்ததும் நிறுத்தி பேசுறான்…
வீட்டுக்கு ப்ரன்ட் ஒருத்தன் உன்னை பாக்க வரான்…
சரி இது எதுவுமே வேண்டாம்… பாப்பூவோட ஸ்கூல் பிரன்ட் அவ அப்பா கூட வரப்போ நீ மரியாதைக்கு நின்னு அவர்க்கிட்ட பேசுற…!
இதையெல்லாம் பாக்குறவங்க அது தங்கமான பொண்ணு… புருஷன் கெட்டவன்னு விட்டுட்டு வந்து தனியா கெத்தா வாழுது… அப்படி சொல்லுவாங்கன்னு நினைக்குறியா?” என்றவன்,
“இல்லவே இல்லை! இந்த ஊரு கண்ணுல விளக்கெண்ணையை விட்டுட்டு பக்கத்து வீட்டுல என்ன குத்தம் நடக்கும்ன்னு தேடும்… அது கண்ணுக்கு நல்லதாவே இருந்தாலும், கெட்டதாதான் தெரியும்…
உன்னை பத்தி ‘கான்டேக்ட் சர்டிபிகேட்’ குடுக்கப்போற இந்த முகம் தெரியாத நாலு பேருக்காக நீ உன் ஆசையை, விருப்பத்தை, காதலை இழந்துட்டு நிக்குறேங்குற? ஹவ் ரிடிகுலஸ்?” என்றான்.
“நீ யாருக்காக வாழ்ற மாது? எவனோ நம்ம முதுகுக்கு பின்னாடி பேசப்போறதுக்கு பயந்து உன் வாழ்க்கையை நீயே கெடுத்துப்பியா?” என்றவன்,
“உப்ப்ப்…!” என கண்மூடி சாய்ந்தான்.
கண்களை திறவாமலே, “நான் டீனேஜ் பையன் இல்ல மாது… லவ் பண்ணு… லவ் பண்ணு உன் பின்னாடியே சுத்த! வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டிய வயசுல இருந்தே நான் கொஞ்சம் லேட்டு!
அது என்னவோ கல்யாணம் பண்ணனும்ன்னு தோணவே இல்ல!” கண்களை திறந்தவன்,
“ஆனா, உன்னை பார்த்து தோனுச்சு… உன்னைப்பார்த்து மட்டும் தான் தோணுச்சு! நீ மட்டும் தான் இந்த ஜென்மத்துக்கு என் பொண்டாட்டி! நான் தெளிவா இருக்கேன் இதுல!” என்றான்.
அவள் மறுத்து பேசவர, கை நீட்டி தடுத்தவன், “நீ எதுவும் சொல்ல வேண்டாம்! உலக அழகியே வந்தாலும், எனக்கு நீ மட்டும் தான் வேணும்!” என்றுவிட்டான்.
அவளுக்கு இது அந்நேரத்திலும் பெருமிதமாய் இருக்கத்தான் செய்தது.
“உனக்கு இன்னைக்கு ராத்திரி பத்து மணி வரைக்கும் டைம் குடுக்குறேன்… யாருன்னே தெரியாத அந்த நாலு பேரோட பேச்சுக்கு நீ குடுக்குற முக்கியத்துவத்துவத்தையும், முன்னுரிமையயும் விட என்மேல உனக்கிருக்க காதலும், நம்பிக்கையும் அதிகம்ன்னா, என்னைத்தேடி மொட்டை மாடிக்கு வா… உனக்காக காத்திருப்பேன்!
இல்லன்னா, பத்து ஒன்னுக்கு, நான் மாடில இருந்து குதிச்சுடுவேன்!” என்றதும், அவள் பதறிக்கொண்டு வர,
“ஸ்டாப் ஸ்டாப்! இது ‘ப்ளாக் மெயில்’ எல்லாம் இல்லை! விருப்பம் இல்லாத பொண்ணை கட்டாயப்படுத்துனதுக்காக எனக்கு நானே கொடுத்துக்குற தண்டனை… அவ்ளோதான்! பயப்படாத… உயிர் போவாது! கை கால் வேணா போகும்!” என்று அசால்ட்டாய் சொன்னவன், எழுந்துக்கொண்டான்.
“நான் உன்கிட்ட இவ்ளோ லென்த்’தா லெக்சர் எடுக்குறது இதுவே கடைசியா இருக்கட்டும் மாது! பிகாஸ் ஐ யம் டெர்ரிப்லி டன் வித் யுவர் ஸ்டுப்பிடிட்டி…” அலுத்தவனாய் சொன்னவன் வாசலுக்கு நடந்தான்.
பின்னாலே வந்தாள் அவள்.
வாசலை தாண்டியதும் அவள் முகத்தை திரும்பி பார்த்தவனுக்கு அதில் இருந்து எதையும் கண்டுக்கொள்ளமுடியவில்லை.
“எனக்கு கிடைக்க வேண்டிய சொர்க்கம் என் கையை விட்டு போய்டுச்சுன்னு நினைச்சுக்குறேன்!” என்றான்.
அவன் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தாள் மாதங்கவதனா.
எட்டி அவள் கரத்தை பற்றியவன், “வந்துடு டி… ஒரே ஒருமுறை என்கிட்ட வந்துடு! திரும்பி போகணும்ன்னு நினைக்கவே மாட்ட!” என்றவன்,
“வாழ்க்கை வாழத்தான்’ மாது! வாழ்ந்து தான் பார்ப்போமே!” என்று கேட்க,
இப்போது அவன் நெஞ்சில் சாய்ந்துக்கொள்ளும் வேகம் அவளுக்குள்.
பட்டென கரத்தை விட்டவன், “எமோஷனலா டிசைட் பண்ணாத! ஐ நீட் அ பர்மனன்ட் டிசீஷன்! இப்போ ஓகே சொல்லிட்டு பின்னாடி நீ ரெக்ரெட் பண்ணிடக்கூடாது! என்னால அதை தாங்க முடியாது!” என்றவன், வேகமாய் குருவின் வீட்டுக்குள் நுழைந்துவிட்டான்.
பேசிவிட்டு வந்தவனின் மனம் ஒருபோக்கில் இல்லை.
என்ன முடிவு சொல்லப்போகிறாளோ? என்று பதைக்க ஆரம்பித்துவிட்டது.
அவன் மனநிலைக்கு மாறாய் உள்ளே அப்படி ஒரு சிரிப்பு சத்தம்…
வந்தவர்கள் எல்லாம் போயிருக்க, விருந்தாளியாய் அந்த ‘பக்கத்து வீட்டு ஆன்ட்டி’ மட்டுமே!
குழந்தைகள் எல்லாம் உருண்டு புரண்டு சிரித்துக்கொண்டிருக்க, “என்ன ஆச்சு?” என்றான் அஜய்.
சிரித்துக்கொண்டே, “அதொண்ணுமில்ல மச்சி! நீ பத்து வருஷத்துக்கு முன்ன வாங்கி கட்டிக்கிட்டல்ல, அதை ரெண்டு ஆன்ட்டிக்கும் சொல்லிக்கிட்டு இருந்தோம்! புள்ளைங்க ஒன்ஸ் மோர் கேட்டு சிரிக்குது!” என்று விவேக் சொன்னதும்,
அஜய்க்கு வாயில் வண்ண வண்ணமாய் வந்து தொலைத்தது.
‘நான் என்ன நிலைமைல இருக்கேன்? இவனுங்க என்ன பண்ணிட்டு இருக்கானுங்க?’ என்று ஆத்திரமாய் கிளம்பியது.
அதே கடுப்புடன், “பத்து வருஷ கதை எதுக்குடா? அதான் நாலு மாசம் முன்ன வாங்குனேனே, அதை சொல்லலாம் ல?” என்று பல்லைக்கடிக்க,
இன்னும் சத்தமாய் சிரித்த விவேக், “பர்ஸ்ட் அத தான் டா சொன்னேன்!” என்று சொல்ல, அதி உக்கிரமாய் மாற ஆரம்பித்தான் அஜய்.
அருகே விவேக்கின் மனைவி இருந்ததால் தப்பித்தான் இவன். இல்லையெனில் அஜய்யின் கை நீண்டிருக்கும்.
பூங்கோதை, “அந்த புள்ளையை ஏன்டா முறைக்குற? பார்த்தவளை ஒழுங்கா கரெக்ட் பண்ண துப்பில்லாம பாக்குறப்போ எல்லாம் அடி வாங்கி கட்டிக்கிட்டு இப்போதான் முறைக்குறான்…” என்றார் அவர்.
“ப்ச்! ம்மா, கொஞ்சம் சும்மா இருங்க!” என்றவன், சலிப்பாய் அமர்ந்துவிட்டான்.
அந்த ‘ஆன்ட்டி’ தான், “என்னப்பா சொல்லுச்சு மாது?” என்று கேட்க,
“ரொம்ப யோசிக்குறா ஆன்ட்டி அவ!” என்றான் சலிப்பாய்.
“பின்ன, யோசிக்க தானே டா செய்வாங்க? ஆம்பளை மாதிரி எடுத்தோம், கவுத்தோம்ன்னா முடிவெடுக்க முடியும்?” என்று பூங்கோதை வர,
“என்னம்மா இருக்கு யோசிக்க, அந்த அளவு மோசமானவனா நான்?” என்றான் அஜய்.
“டேய், ஒரு பொண்ணுக்கு முதல் கல்யாண வாழ்க்கை தோல்வியடையுறது இப்போல்லாம் சாதாரணமா போய்டுச்சு! பெரும்பாலும் பொண்ணுங்க அதில இருந்து தைரியமா மீண்டு வந்துடுறாங்க! ஆனா, அதே இரண்டாவது வாழ்க்கையும் தோல்வில முடிஞ்சா?
என்ன ஏதுன்னு கூட யோசிக்காம எல்லா தப்பையும் பொண்ணுங்க மேல தானே போடுவீங்க?” என்றார் கேள்வியாய்.
“ரெண்டு புருஷனுமே விட்டு போயிட்டான்னா, இவ என்ன லட்சணத்துல இருந்துருப்பா?ன்னு கேப்பாங்க… இரண்டாவது தோல்வில இருந்து மீள்றது அவ்ளோ சுலபம் இல்லடா!” என்றவர்,
“இப்போ ஒரு நடிகைக்கும் நடிகனுக்கும் விவாகரத்து ஆகுதுன்னு வையேன்! நம்ம மக்கள் உடனே என்ன சொல்லிடுறாங்க? அந்த நடிகை அவன்கூட இருந்துருப்பா, இவன்கூட போயிருப்பா… இவ்ளோ நெருக்கமா நடிச்சா அவன் எப்படி இவக்கூட குடும்பம் நடத்துவா? இப்படி தானே சொல்றாங்க?
ஆனா அதே நேரம் அந்த நடிகனும் எல்லா படத்துலயும் நெருக்கமான சீன்ல எல்லாம் நடிப்பான்… இன்னும் என்ன என்னவோ கூட செய்வான்! ஆனா, அதெல்லாம் யாருமே பெரிய விஷயமா நினைக்கிறது இல்லை!
இதுலையே புரியலையா ஒரு உறவு முறிவு’ல முழுக்க பாதிக்கப்படுறது பொண்ணு தான்னு?” என்றார் பூங்கோதை!
“ஒருவேளை நீ கேட்டதும் அந்த பொண்ணு சம்மதம்ன்னு சொல்லிருந்தா நான் அவளுக்காக இவ்ளோ பேசிருக்க மாட்டேன்!
அவ தயங்குறா பாரு.. அது சொல்லுது அவ குணத்தை!
இந்த விஷயத்துல நூறு இல்ல, ஆயிரம் முறை யோசிக்கணும்… தப்பே இல்ல” என்று அடித்து பேசினார் பூங்கோதை.
யாராவது தும்பினால் கூட இடி போல சப்தம் கேட்குமளவு அந்த பொருட்களற்ற புதுவீட்டில் அப்படி ஒரு நிசப்தம்!
பூங்கோதையின் பேச்சில் ஈர்க்கப்பட்டோ, கவரப்பட்டோ, சமைந்தோ… ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் இருக்க,
“ஹும்! எனக்கு கூட என்ன அதிக வயசா ஆகிடுச்சு? ஜஸ்ட் பிப்டி எய்ட்! இப்போ நினைச்சா கூட நானும் ஜம்முன்னு ரெண்டாங்கல்யாணம் பண்ணலாம்!” என்று பூங்கோதை சொல்ல,
“ஆங்…?” என வாயை பிளந்தனர் எல்லோரும்.
அஜய்யோ, “ம்மா!?” என ஒருமாதிரி முகம் சுளித்து முறைக்க,
“என்னடா? என்றார் அவர் அமைதியாய்.
யாரும் ஒன்றும் சொல்லவில்லை.
பூங்கோதை, “இப்போ நான் சொன்னதை வார்த்தை மாறாம ஒரு ஆம்பளை சொல்லிருந்தா அதை நகைச்சுவை’ன்னு நினைச்சு சிரிச்சுருப்பீங்க தானே? ஒருபடி மேல போய் பொண்ணு எப்படி வேணுன்னு பகடி பேசிருக்க மாட்டீங்க?
இதையே ஒரு பொம்பளை சொல்லிட்டா, அசிங்கமா பாக்குறது! இயல்பான ஒரு கிண்டலா கூட கடந்து போக முடியல உங்களால!?” என்றவர்,
“கம்முன்னு இறங்கி நின்னுப்போம்! அதான் நமக்கு வசதி!” என்று சொல்லிக்கொண்டே பொறுமையாய் அவன் திரும்பிய கணம்,
“ஐயோ…ஓஓஓஓ!” என்று அந்தகாரத்தை கிழித்துக்கொண்டு கேட்ட சத்தத்தில் உடல் தூக்கி வாரிப்போட, கால்கள் நடுங்கிட, பிடிமானம் கிடைக்காததில் ஸ்லிப் ஆகி அப்படியே கீழே விழுந்தான் அஜய்.
“ஐயோ!” என கத்திய குரல்காரியோ,
“அஜய்….ஈஈஈ!” என கதறிக்கொண்டே ஓடி வந்து கீழே எட்டிப்பார்க்க, இருட்டில் சரியாய் தெரியவில்லை.
நெஞ்சிலும் மாரிலும் மாற்றி மாற்றி அடித்துக்கொண்டாள்.
“ஐயோ என்னால தான்… என்னால தான்! அஜய், என்னை மன்னிச்சுடு அஜய்… நான் உன்னை விட்டு போகவே மாட்டேன்! அத சொல்ல தான் வந்தேன்! இப்படி அவசரப்பட்டுட்டியே!!!”
கீழே விழுந்தவனை ஓடி சென்று தூக்க வேண்டும் என்பதை கூட மறந்து அப்படியே அழுது புலம்ப ஆரம்பித்தவள், அந்த கைப்பிடி சுவரோடு ஒட்டி அமர்ந்து அழுகையை தொடர்ந்தாள்.
“உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் அஜய்! ஐ லவ் யூ சோ மச்! இதை உன்கிட்ட சொல்லனும்ன்னு வந்தேன்! இப்படி பண்ணிட்டியேடா!”
“அஜய், நீ இல்லாம நான் எப்படி இருப்பேன் அஜய்? ஐயோ எனக்கு என்ன பண்றதுன்னே புரியலையே?! கடவுளே… எதுக்கு என்னை இப்படி சோதிக்குற? என் அஜய்யை நான் எப்படி காப்பாத்துவேன்?” வெட்ட வெளியை பார்த்து கையெடுத்து கும்பிட்டு அவள் வேண்ட,
“அய்யய்! அடியேய்… சீரியல் நடிகையா டி நீ?!” என்றான் அஜய்.
அவன் குரல் கேட்டதுமே மின்னல் வேகத்தில் எழுந்தவள் எங்கே? என பார்க்க, அந்த ஜன்னல் தாழ்வாரத்தில் இருந்து மாடிக்கு ஏறிக்கொண்டிருந்தான் அவன்.
சிரமப்பட்டு ஏறியவனுக்கு கைக்கொடுத்து உதவியவள், அவன் உள்ளே குதித்ததுமே சரமாரியாய் அடிக்க ஆரம்பித்தாள்.
‘ஏன்டா இப்படி செஞ்ச? எதுக்குடா குதிச்ச?’ கேட்டுக்கொண்டே அடிக்க,
“ஏதே? நான் குதிச்சேனா? அப்படியே போட்டேன்னு வையு! சும்மா நின்னு பார்த்துட்டு இறங்கிடலாம்’ன்னு திரும்புனவனை, ‘ஐயோ!’ன்னு பேய் பட எப்பெக்ட்ல கத்தி பீதியை கிளப்பி குதிக்க வச்சுட்டு பேச்சா பேசுற?” என்றவன்,
“அப்படியே நான் விழுந்தாலும் என்ன செய்யணும்? உடனே நூத்தி எட்டுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்லி விழுந்தவனை ஆசுபத்திரிக்கு அனுப்பனும்!
அதவிட்டுட்டு, ‘அடியேய் மாரியாத்தா உனக்கு கண்ணிலையாடி, மூக்கில்லையாடி’ன்னு சீரியல் நடிகை மாறி டைலாக் பேசிட்டு இருக்க! என்ன நினைச்ச நீ? வானத்துல இருந்து யாராவது குதிச்சு வரம் குடுத்து என்னை காப்பாத்திடுவாங்கன்னா!?” அவன் கேட்டுக்கொண்டே போக, தான் செய்த மோசமான அசட்டுத்தனம் புரிந்து அசடு வழிய நின்றுக்கொண்டிருந்தாள் மாது.
“அழகா இருக்க பொண்ணுக்கு அறிவு இருக்காதுன்னு சொல்லுவாங்க… ஆனா, அசிங்கமா இருக்க பொண்ணுக்கு கூட அறிவே இருக்காது போல!” அவன் இப்படி சொன்னதுமே மீண்டும் அடி மழையை ஆரம்பித்தாள் அவள்.
சிரித்துக்கொண்டே அத்தனையும் வாங்கியவன், சட்டென அவள் கரங்களை இறுக்கிக்கொண்டு அவனோடு அவளை இழுத்தான்.
சில நொடிகள இருவர் கண்களும் தங்கள் இணையை சுவாரஸ்யமாய் சந்திக்க,
“சோ?” என்றான் அவன்.
“என்ன?”
“என்னவோ சொல்லிட்டு இருந்தியே!”
“என்ன சொல்லிட்டு இருந்தேன்?”
அஜய், “அதான்… ஐ’ல ஆரம்பிச்சுதே!”
எது என்று புரிந்தாலும், “தெரியலையே!” என்றாள் அவள்.