“ஒகே , இங்க தங்கலாம். டைகர் வீட்டில் தங்கிக்கோ, காலையில் கிளம்பிடு.” என்று சாதரணமாக கூறி விட்டான்.
“சார் இதுக்கு நீங்க என்னை வெளியே போன்னு சொல்லிருக்கலாம்” என்று கேட்டாள்.
“சரி வெளியே போ” என்று கூறினான்.
“சார் ப்ளீஸ்” என்று அவள் கெஞ்சவும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவன் இவ்வளவு நேரம் யாருடனும் பேசியதில்லை. ஆனால் அவளை தனியே அனுப்பவும் மனதில்லை. அதே நேரம் அவளை முழுதாய் நம்பவும் முடியவில்லை.