“உன்னை விடுறதா? கனவுல கூட அப்படி நடக்காது ரெட்டி. இவ்வளவு நாள் உன்னை விட்டு வச்சதே தப்பு, என்னோட கோட்டைக்குள்ள உன் ஆளை நுழைய வச்சு சுசீலா உயிருக்கு எப்ப நீ குறி வச்சியோ அப்பவே உன்னைக் கொல்லணும்னு முடிவு பண்ணிட்டேன். உன்னை உயிரோட விடுறதுக்கா இவ்வளவு கஷ்டப் பட்டு தூக்கினேன்?”
“என்னை நீ சாதாரணமா நினைச்சிட்டு இருக்க. நீ நினைக்கிற மாதிரி நான் சாதாரண ஆள் கிடையாது. எனக்கு ஏதாவது ஆச்சுன்னா பல நாடுகளில் இருந்து என்னைத் தேடுவாங்க. என்னை ஏதாவது செஞ்சா உன்னை உயிரோட விட மாட்டாங்க”
“ஹா ஹா அப்படியா? ஆமா ஆமா கண்டிப்பா உன்னைத் தேட தான் செய்வாங்க. ஆனா நீ தான் உயிரோட இருக்க மாட்டியே ரெட்டி. உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? ஏற்கனவே போலீஸ் உன்னோட எல்லா இடத்தையும் சீல் வச்சு உன்னோட ஆட்களை அரஸ்ட் பண்ணிட்டாங்க. நீ போலிஸ்க்கு பயந்து தலை மறைவாகிட்டன்னு நியூஸ் ஓடுது. பல நாடுகள் கிட்ட நீ வச்சிருக்குற போதைப் பொருள் தொடர்புனால உன்னை பல பேர் தேடுவாங்க தான். ஆனா நீ யார் கைலயும் சிக்க மாட்ட. கடைசி வரை ரெட்டி என்ற கிர்மினல் தலை மறைவு, போலீஸ் வலைவீச்சுன்னு தான் எல்லாரும் நம்புவாங்க. ஆனா நான் இப்ப உன்னை கொன்னு புதைக்க போறேன். உன்னோட பாடி கூட அவங்களுக்கு கிடைக்காது”, என்று சொன்ன யுவனின் குரலில் புலியின் சீற்றம் இருந்தது.
“ஏன் இப்படி பண்ணுற? நான் உன்னை என்ன செஞ்சேன்? என்னை எதுக்கு இப்படி ஆக்கி வச்சிருக்க?”
“எத்தனை பொண்ணுங்களோட வாழ்க்கையை குழி தோண்டி புதைச்சிருக்க? எத்தனை பேரை கொண்ணுருக்க? போதை பொருளால எத்தனை பேரோட வாழ்க்கையை சீரழிச்சிருக்க? அப்ப நான் உன்னையும் அப்படி தானே செய்யணும்?”
“இங்க பாரு யுவன், எனக்கு ஆள் பலம் இருக்கு. உனக்கு மூளைல பலம் இருக்கு. நாம ரெண்டு பேரும் சேந்தா உலகத்தையே கைக்குள்ள வைக்கலாம். நான் உனக்கு என்ன வேணும்னாலும் தரேன் டா. என்னை விட்டுரு
“ஓஹோ என்னையே கரெக்ட் பண்ண பாக்குறியா நீ? என்னை பணிய வைக்க உன்னால முடியாது ரெட்டி”
யுவனின் முகத்தில் இருந்த குரூரத்தில் சுசிலாவுக்கே பயமாக தான் இருந்தது.
“ஏன் ஏன் ஏன் இப்படி பண்ணுற? நான் தப்பானவன்னா என்னை போலீஷ்ல ஒப்படைச்சிரு”
“ஹா ஹா உயிர் பயம் உன்னை இப்படி பேச வைக்குதா? உன்னை போலீஷ்ல ஒப்படைக்கணுமா? எதுக்கு நீ நாலு நாள்ல வெளிய வரதுக்கா? நான் இன்னைக்கு உன்னை ரசிச்சு ரசிச்சு வேட்டையாடப் போறேன் ரெட்டி. உன்னோட உயிர் துடிக்கிறதை சந்தோஷமா வேடிக்கை பாக்க போறேன்”
“என்னை விட்டுரு யுவன். நீ என்னைக் கடத்துனதைக் கூட நான் மன்னிச்சிறேன். நீ என் கூட வந்துரு. என்னோட நிழலா நீ இருந்தா உனக்கு நிறைய நன்மை கிடைக்கும் யுவன். நீ என் கூட வா”
“நீ என்னை மன்னிக்க போறியா? சரி தான் மன்னிச்சிக்கோ”, என்று நக்கல் அடித்தான் யுவன்.
“எதுக்கு? எதுக்கு என்னை இப்படி பண்ணுற? இந்த பொண்ணு மேல கையை வச்சதுக்கு தான் எனக்கு இவ்வளவு தண்டனையா? அப்படின்னா நான் இந்த பொண்ணு காலுல வேணும்னாலும் விழுறேன். என்னை விட்டுரு”
“நீ வாழணும்னா நீ காலையும் பிடிப்ப, கழுத்தையும் பிடிப்பன்னு தெரியும் ரெட்டி”
“பின்ன உனக்கு என்கிட்ட இருந்து என்ன தான் வேணும்? எதுக்கு என்னோட உயிரை எடுக்க துடிக்கிற? என் சொத்து வேணுமா? என்னோட பேர் புகழ் வேணுமா? நான் எல்லாத்தையும் உனக்கு தரேன். என்னை உயிரோட விடு. போலீஸ் கேஸ் எல்லாம் என்னோட ஆட்கள் பாத்துக்குவாங்க. வேற நாட்டிலயும் எனக்காக ஆட்கள் இருக்காங்க. எனக்கு அடுத்து உன்னை என்னோட அடுத்த வாரிசாக்குறேன். உன்னை என் பையனா சட்ட பூர்வமா தத்து எடுத்துக்குறேன்”, என்று ரெட்டி சொன்னதும் “ஹா ஹா ஹா சரியான காமெடி”, என்று சத்தம் போட்டு சிரித்தான் யுவன்.
அவன் சிரிப்பு சத்ததில் சுசீலா உடல் கூட நடுங்கியது. இருட்டு அறையில் அவனின் சிரிப்பு ரெட்டிக்கும் உயிர் பயத்தைக் கொடுத்தது.
“ஹா ஹா, என்னால சிரிப்பை அடக்க முடியலையே? உனக்கு சிரிப்பு வருதா சுசீ?”, என்று யுவன் கேட்க அவனை வெறித்து போய் பார்த்தாள் சுசீலா. இந்த நிலையில் இவனால் எப்படி இப்படி சிரிக்க முடிகிறது என்று அவளுக்கு தோன்றியது.
ரெட்டியைப் பற்றி தெரியுமாததால் அவன் சாக வேண்டியவன் தான் என்று சுசிலாவும் எண்ணினாள் தான். ஆனால் அதை அவள் கண் முன்னால் ஏன் யுவன் நடத்த நினைக்கிறான் என்று குழப்பம் வந்தது.
“இருந்தாலும் ரெட்டி, நீ இவ்வளவு காமெடி பண்ணக் கூடாது. உலகத்துல இந்த மாதிரி கொடுமை எங்கயும் வராது. பெத்த
மகனையே தத்தெடுக்குறேன்னு சொன்ன முதல் அப்பன் நீயா தான் டா இருக்கும்”, என்று யுவன் சொன்னதும் சுசீலா, ரெட்டி இருவருக்கும் பயங்கரமாக அதிர்ச்சி தான்.
“என்ன? என்ன சொல்ற நீ? என் மகனா? என் மகனா நீ?”, என்று அதிர்ச்சியாக கேட்டான் ரெட்டி.
“ஆமா ஆமா, உன்னோட மகனே தான். என்ன சந்தேகமா இருக்கா? சத்தியமா நான் உன் மகன் தான் ரெட்டி. என்ன யோசிக்கிற? ஒரு வேளை எந்த பொண்டாட்டிக்கு பிறந்த மகன்னு யோசிக்கிறியா நீ?”
“யுவன் நீங்க என்ன சொல்றீங்க? இந்த ஆள் உங்க அப்பாவா?”, என்று அதிர்ச்சியாக கேட்டாள் சுசீலா.
“இந்த ஆள் அப்படிங்குற வார்த்தை ரொம்ப மரியாதையான வார்த்தை சுசீ. இவன் எல்லாம் ஆளே இல்லை. மிருகம். மனுசங்களோட சதையை வச்சு வியாபாரம் பண்ணுற மிருகம். எத்தனை பொண்ணுங்களோட வாழ்க்கையை அழிச்சிருக்கான் தெரியுமா?”, என்று கேட்டவனின் கோபக் குரல் சுசீலாவை மௌனியாக்கியது.
“முப்பது வயசுக்கு முன்னாடி தேவிகா அப்படிங்குற பொண்ணை ஏமாத்தி கல்யாணம் பண்ணி அவ வயித்துல பிள்ளையை கொடுத்து ஏமாத்துனியே நினைவு இருக்கா ரெட்டி?”, என்று கேட்டதும் பழைய நினைவுகளை தூசி தட்டிய ரெட்டிக்கு அனைத்தும் புரிந்து போனது.
“உனக்கு ஒண்ணு தெரியுமா சுசீ? நான் எங்க அம்மா வயித்துல இருக்கும் போதே கட்டின பொண்டாட்டியை இவனோட முதலாளி ஆசைப் பட்டான்னு சொல்லி எங்க அம்மாவுக்கு மயக்க மருந்து கொடுத்து அவன் கூட… அம்மாவை….”
“வேண்டாம் யுவன். நீங்க எதுவும் பேச வேண்டாம். உங்களுக்கு இவனைக் கொல்லணும்னு நினைச்சா கொன்னுருங்க. நீங்க கலங்காதீங்க”
“எப்படி கலங்காம இருக்க முடியும் சுசீ? இவன் பண்ணினது கொஞ்சம் நஞ்சம்னு நினைச்சியா? இவன் எங்க அம்மாவை பண்ணாத டார்ச்சல் இல்லை. கிட்ட தட்ட அஸ்வதிக்கு வந்த நிலைமை தான் எங்க அம்மாவுக்கும். மயக்க மருந்து கொடுத்து அப்படி பண்ணினான்னா இவன் எப்படி பட்ட பிறப்பா இருக்கணும்? அடுத்த நாள் எங்க அம்மாவுக்கு உண்மை புரிஞ்சு இவன் கிட்ட சண்டை போட்டதுக்கு அடிச்சு கொடுமைப் படுத்திருக்கான். நியாயம் கேக்க வந்த என்னோட பாட்டி தாத்தாவை அடிச்சுக் கொன்னுருக்கான்”
“என்ன சொல்றீங்க யுவன்?”
“ஆமா, இவன் நல்லவன் மாதிரி வேஷம் போட்டு தான் எங்க அம்மாவை கல்யாணம் பண்ணிருக்கான். அதுக்கப்புறம் தான் இவனைப் பத்தின உண்மை அம்மாவுக்கு தெரிஞ்சிருக்கு. அங்க இருந்து தப்பிக்க நேரம் பாத்தப்ப தான் தாத்தா பாட்டி அம்மாவைப் பாக்க வந்துருக்காங்க. மகளோட நிலைமையைக் கண்டு இவனை கேள்வி கேக்க அந்த வயசானவங்களை அடிச்சே கொன்னுருக்கான்”
“ஐயையோ அப்புறம் உங்க அம்மாவுக்கு என்ன ஆச்சு? அவங்களையும் இந்த மிருகம் கொன்னுருச்சா?”
“அப்படிக் கொன்னுருந்தா கூட எங்க அம்மா வலியே இல்லாம நிம்மதியா செத்துருப்பாங்களே”
“யுவன்..”
“உண்மையை தான் சொல்றேன் சுசீ. அம்மாவை இவன் கொண்ணிருக்கலாம். ஆனா இவன் என்ன பண்ணினான் தெரியுமா? அஸ்வதி நிலைமை என்னோட அம்மாவுக்கும். வயித்து பிள்ளையோட எங்கயாவது வாழ்ந்துக்குறேன்னு சொன்ன எங்க அம்மாவை விடாம விபச்சார விடுதில வித்துட்டு போயிருக்கான்”, என்று கண்களில் நீருடன் யுவன் சொல்ல “யுவன்”, என்ற கதறலோடு அவனை நெருங்கினாள் சுசீலா.
ஆதரவாக அவன் தோள் தொட அவள் தோள் மீது சாய்ந்தவன் “அம்மா”, என்று கதறி அழுதான்.
தேவிகா இறந்த அன்று அழாத அழுகையை இன்று அழுதான். இதற்கெல்லாம் காரணமான ரெட்டி மௌனமாக அமர்ந்திருந்தான். கண்டிப்பாக யுவன் அவனை உயிருடன் விட மாட்டான் என்று புரிந்து போனது ரெட்டிக்கு.
“யுவன், யுவன் என்னைப் பாருங்க. என்னைப் பாருங்கன்னு சொன்னேன்”, என்று சொன்னதும் அவளை நிமிர்ந்து பார்த்தான்.
“நீங்க இப்ப அழக் கூடாது. அடுத்து என்னன்னு தான் பாக்கணும். இந்த சாக்கடை முன்னாடி என்னோட யுவன் அழக் கூடாது. இவன் முன்னாடி நீங்க அழுதா உங்க அம்மா ஆத்மா சாந்தி அடையாது. நீங்க சொன்ன இடத்துல உக்காந்து நான் வேடிக்கை பாக்குறேன். நீங்க சொன்ன மாதிரி இவனை ரசிச்சு ரசிச்சு நீங்க கொலை செய்யுங்க”, என்று சொன்னவள் கால் மேல் கால் போட்டு அந்த சேரில் அமர்ந்தாள்.
யுவனின் அறையில் ஒரு முறை ஒரு போட்டோவைப் பார்த்திருக்கிறாள். அதில் சுசீலாவின் வயதில் இருக்கும் ஒரு பெண் கால் மேல் கால் போட்டு தோரணையாக அமர்ந்திருந்தாள். அது யார் என்று சுசிலாவுக்கு தெரியாது. ஆனால் இப்போது அந்த பெண் அவனுடைய அம்மாவாக தான் இருக்கும் என்று தோன்றியது. அது நினைவுக்கு வந்ததால் அதே போல அமர்ந்தாள்.
அவளை அப்படி ஒரு தோரணையில் பார்த்த யுவனுக்கே தன்னுடைய தாய் அமர்ந்திருப்பதாவே தோன்றியது.
“இன்னும் என்ன யோசனை யுவன்? சீக்கிரம் முடிங்க”, என்று கொலை வெறியுடன் சொன்னாள் சுசீலா.
அடுத்த நொடி ரெட்டியை நெருங்கிய யுவன் அவனுடைய வயிற்றில் ஒரு குத்து விட்டான். “ஆஆ அம்மா”, என்று அவன் அலற “உனக்கு மட்டும் தான் அம்மா இருக்குமா டா?”, என்று கத்தியவன் தன்னுடைய முதுகில் இருந்து ஒரு துப்பாக்கியை எடுத்து ரெட்டியை நோக்கி நீட்டினான்.
ரெட்டி பயத்தில் அலற அதை சந்தோஷமாக பார்த்த படி அத்தனை புல்லட்டையும் ரெட்டி உடலில் இறக்கினான் யுவன். துப்பாக்கி குண்டுகளால் சிதலமாகியிருந்த ரெட்டியின் உயிர் பிரிந்து
கண் முன் நடந்த ஒரு கொலையை ஆசை தீரப் பார்த்துக் கொண்டிருந்தாள் சுசீலா.
அடுத்த நொடி தளர்ந்து போய் நின்ற யுவனை நெருங்கி அவனை இறுக அணைத்துக் கொண்டாள் சுசீலா. “உனக்கு நான் இருக்கிறேன்”, என்று வார்த்தையால் சொல்லாமல் செயலால் உணர்த்தினாள். அதில் அவனும் எல்லையில்லா ஆறுதல் கொண்டான். அவனுடைய தாயின் ஆத்மா சாந்தி அடைந்தது போல உணர்ந்தான்.
காதல் தொடரும்…..