ஆண்கள் அனைவரும் தேட கீதா எங்கேயும் இல்லை. இரவு முழுவதும் எங்கு தேடியும் அவளைப் பற்றிய தகவல் எதுவுமே இல்லை. தேன்மொழியை எப்படி கட்டி வைத்திருந்தானோ அது போலவே கீதாவையும் கட்டி வைத்திருந்தான் ராஜேந்திரன். இரவு முழுவதும் அழுது கொண்டே இருந்தாள் கீதா.
காலை ஐந்து மணிக்கு அவள் கட்டுகளை அவிழ்த்து விட்ட ராஜேந்திரன் “இப்ப போ”, என்றான்.
விடிய போகும் வேளையில் அவள் வெளியே சென்றால் ஊர்க் காரர்கள் என்ன நினைப்பார்கள் என்று அவள் அறிந்ததே. அவள் வெளியே வரவும் காட்டுக்கு போயிட்டு வந்த அந்த ஊர் தலையாரி கண்ணில் பட்டாள்.
அவள் அதிர்ந்து போய் அவரை பாக்க “ஏம்மா நீ இங்க தான் இருக்கியா?”,என்று சத்தம் கொடுத்து ஆங்காங்கே இருந்தவர்கள் அங்கே கூடி அவளையும் ராஜேந்திரனையும் பஞ்சாயத்து வரை இழுத்து வந்து விட்டார்கள்.
ஆள் நடமாட்டம் இருப்பதை அறிந்த பின்னர் தான் அவளை வெளியவே விட்டான். கொஞ்சம் கொஞ்சமாக விஷயம் கசிந்து ஊர் முழுக்க தெரிந்தது.
தினேஷும் செல்வாவும் அவள் எங்கே என்று தெரியாமல் அப்போது தான் வீட்டுக்குள் நுழைந்தார்கள். வேணி, அன்னம், மதி அவர்களிடம் விசாரித்துக் கொண்டிருக்க அவர்கள் வீட்டில் பால் கரப்பவன் “ஐயா, அந்த பொண்ணு அவளோட அத்தை மகன் கூட தான் நைட் முழுக்க இருந்துருக்கா. ஊருக்கு கிழக்க அந்த சோலையப்பன் வீடு இருக்கே. அங்க தான் இருந்துருக்காங்க. இதுக்கு தான் பொம்பளை பிள்ளைக்கு காலா காலத்துல கல்யாணம் பண்ணி வைக்கணும்னு சொல்றது. அவளை காலேஜ்க்கு படிக்க அனுப்புனதுனால அம்மா அப்பா விளையாட்டு விளையாடி பாக்க ஆசை வந்துருச்சோ? என்னவோ? இது நம்ம ஊருக்கு மானக்கேடுன்னு ஊர்க்காரங்க பஞ்சாயத்தைக் கூட்டிருக்காங்க”, என்று சொல்லி விட்டு சென்றான்.
“அந்த பிள்ளையை பாக்க பாவ பட்ட பிள்ளை மாதிரி இருந்தா. ஆனா இப்படி செய்வான்னு யாரும் நினைக்கலையே”, என்று வேணி சொன்னதும் அடுத்த நொடி “அம்மா, வேணி”, என்று அனைவரும் கத்தி இருந்தார்கள்.
“உண்மை தெரியாமல் எதுவும் முடிவு பண்ணாதீங்க மா”, என்று கோபத்தில் உரைத்தான் தினேஷ்.
“அவசரப் பட்டு வார்த்தையை விடாத வேணி. வாங்க அங்க என்ன நடக்குன்னு பாப்போம்”, என்று அனைவரையும் அழைத்தார் மதி.
அவர்களுடன் கிளம்பிய அன்னத்தை “பாட்டி, உனக்கு ஏற்கனவே உடம்பு சரி இல்லை. நீ இங்கயே இரு. பனிக்குள்ள வர வேண்டாம்”, என்று தடுத்து விட்டான் செல்வா.
[the_ad id=”6605″]
பஞ்சாயத்துக்கு இவர்கள் போகும் போது அங்கே ஊரே கூடியிருந்தது. தேன்மொழி குடும்பமும் அங்கே தான் இருந்தது. கீதா அங்கிருந்த திண்டில் காலை குறுக்கி முகத்தை புதைத்து அழுது கொண்டிருந்தாள்.
ஒரு ஓரமாக நின்ற ராஜேந்திரன் நினைத்தது நடந்து விட்டது என்ற நினைப்பில் சந்தோஷமாக இருந்தான். அவனுக்கு எப்படியும் தேன்மொழி குடும்பத்தை பழி வாங்க வேண்டும்.
தேன்மொழியைக் கதிர் காப்பாற்றி விட்டான். அதனால் அதே பிளானில் ராஜதுரையின் தம்பி மகளான கீதாவை கடத்தி விட்டான். ஆனால் அது தன்னுடைய சொந்த அத்தை மகள் என்பதை அவன் மறந்தது தான் பரிதாபம். அவனுடைய அம்மா அப்பாவும் அங்கே நின்றிருந்தார்கள்.
அனைவருமே இருவரையும் வெறுப்புடன் பார்த்தார்கள். ஊர் ஆட்கள் ஆள் ஆளுக்கு பேசிக் கொண்டிருந்தார்கள்.
தினேஷ்க்கு அவள் அழுவதைப் பார்த்து மனதைக் கீறும் வலி.
அவளை அனைத்து சமாதானம் சொல்ல அவன் செல்கள் பரபரத்தது. அதை செய்ய முடியாமல் தடுமாறி நின்றான்.
“இந்த பிள்ளைக்கு ஆம்பளை ஆசை வந்துருச்சோ என்னவோ? ஏன்ப்பா துரைராசு காலா காலத்துல கல்யாணம் பண்ணி வச்சிருந்தா இப்படி எல்லாம் ஆகிருக்குமா?”, என்று ஒருவர் கேட்க “அடி பாவி மகளே, இவனை தான் பிடிச்சிருக்குன்னு சொல்லிருந்தா கட்டி வச்சிருப்பேனே”, என்று அவளை அடிக்க சென்றாள் ரேகா. அவளை தடுத்தார்கள் செல்வியும் சகுந்தலாவும்.
தன்னை பத்து மாதம் சுமந்து பெற்ற அன்னை நம்பாதது கீதாவுக்கு பெரும் வலியைக் கொடுத்தது. மேலும் கதறி கதறி அழுது கொண்டிருந்தாள். தான் என்ன சொன்னாலும் யாரும் அவளை நம்ப மாட்டார்கள் என்று அவள் அறிந்ததே. ஆனாலும் அம்மா அப்பா நம்புவார்கள் என்ற சிறு எதிர்பார்ப்பு இருந்தது. “அப்பாவாது நம்புவாரா?”, என்று எண்ணினாள்.
“உன் அண்ணன் மகனைப் பாத்தியா நம்மளை நடுத்தெருவுல கொண்டு வந்து நிறுத்திட்டான். என் மகள் இப்படி செய்வான்னு நான் எதிர்பார்க்கலையே”, என்று அழுதார் துரைராசு. அப்பாவும் நம்ப வில்லை என்றதும் அவள் மனம் வெறுத்து போனது.
“இவனையும் என் மகன் மாதிரி தானே பாத்துக்கிட்டேன். ரெண்டு கழுதைகளும் இப்படி அசிங்கம் பண்ணும்னு நான் நினைக்கலையே”, என்று கதறி அழுதாள் ரேகா.
“ஆள் ஆளுக்கு தப்பா பேசாதீங்க. அந்த பொண்ணு அழுதுட்டே இருக்கு. அவளையும் கொஞ்சம் பேச விடுங்க. அவ பக்க நியாயத்தையும் சொல்ல விடுங்க. எனக்கு என்னமோ அந்த பொண்ணு அப்படி பண்ணிருக்கும்னு தோணலை”, என்று தினேஷ் சொன்னதும் அவனை நிமிர்ந்து பார்த்தாள் கீதா.
தன்னை ஒருவன் நம்புகிறான் என்றதுமே அவனை தெய்வத்தை பார்ப்பது போல பார்த்தாள். அவள் கண்களில் வந்து போகும் உணர்வு என்னது என்று தெரியாமல் அவனும் அவளை தான் பார்த்தான்.
[the_ad id=”6605″]
தினேஷின் பேச்சைக் கேட்டு சுதாரித்த ராஜேந்திரன் “நாங்க ரெண்டு பேரும் விரும்புறோம். அதனால தான் கீதா என்னை தேடி வந்தா. நாங்க தப்பு செஞ்சது உண்மை தான். எங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்கேன்”, என்று சொன்னதும் அவனை கேவலமாக பார்த்தான் தினேஷ்.
அப்போது தான் வீட்டுக்கு வந்து இறங்கிய கதிர் மற்றும் தேன்மொழி கண்ணில் சோகமே உருவாக அமர்ந்திருந்த அன்னம் பட்டாள். “பாட்டி இந்நேரம் நீ என்ன இங்க பண்ணுற? அஞ்சரை மணிக்கே எந்திச்சிட்டியா?”, என்று கேட்டான் கதிர்.
“கதிரு”, என்று ஆரம்பித்து அனைத்துக் கதையும் சொன்னவுடன் இருவரும் அதிர்ந்து போனார்கள். அடுத்த நிமிடம் “வா தேனு”, என்று சொல்லி அவளை அழைத்துக் கொண்டு பஞ்சாயத்து நடக்கும் இடம் நோக்கி சென்றான் கதிர்.
அங்கே அவர்கள் செல்லும் போது அனைவரும் கீதாவை அசிங்கமாக பேசிக் கொண்டிருந்தார்கள். கீதா இருந்த நிலையை பார்த்த தேன்மொழிக்கு அந்த இடத்தில் தான் இருப்பது போல பட்டது. அடுத்த நொடி கதிரை திரும்பி பார்த்தாள். அவன் புருவ முடிச்சிடன் நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தான்.
இந்த நிமிடத்தில் தன்னைக் காப்பாற்றிய கணவன் மேல் காதல் பொங்கினாலும் அதைக் காட்ட இப்போது சந்தர்ப்பம் இல்லை என்று
உணர்ந்த தேன்மொழி “எல்லாரும் கொஞ்ச நேரம் வாயை மூடுங்க”, என்று கத்தினாள்.
அவள் கத்தலில் மொத்த கூட்டமும் அமைதியானது. “ஏய் எல்லார் முன்னாடியும் இது என்ன டி மரியாதை இல்லாம?”,என்று அவளைக் கண்டித்தாள் சகுந்தலா.
“அம்மா நீ கொஞ்சம் சும்மா இரு. அந்த ரூம் குள்ள தப்பு தான் நடந்ததுன்னு யார் கண்ணால பாத்தது?”
“அந்த பொண்ணு கலைந்த தலையுமா, தூக்கம் இல்லாத கண்ணோடு அவன் வீட்ல இருந்து வெளிய வந்ததை நம்ம தலையாரி ஐயாவே பாத்துருக்கார்”, என்றான் ஒருவன்.
“அவள் வெளிய வந்ததை பாத்தா உடனே அவ தப்பு செஞ்சான்னு ஆகிருமா?”, என்று அவள் கேட்கும் போது “எல்லாம் முடிய போற நேரத்துல இவளும் அவனும் எதுக்கு வந்தாங்க?”, என்று எண்ணிய ராஜேந்திரன் “நாங்க தான் தப்பு செஞ்சோம்னு ஒத்துகிட்டோம்ல? இன்னும் என்ன பேசிட்டு இருக்கீங்க?”, என்று கேட்டான்.
“வாயை மூடு டா நாயே”, என்று சொன்ன கதிர் ராஜேந்திரனை அடி பின்னி எடுத்து விட்டான்.
அவனை விலக்கி விட்ட ஊர் பெரியவர் “ஏம்மா சும்மா நீயும் உன் புருசனும் வந்து பிரச்சனை பண்ணிட்டு இருக்காதீங்க. தப்பு பண்ணவன் தெளிவா சொல்றான். அந்த பொண்ணும் தப்பு செஞ்சதுனால தான் அழுதுட்டு இருக்கு. நாங்க பெரியவங்க பேசிக்கிறோம்”, என்றார்.
“என்ன பேசுவீங்க? இல்லை என்ன பேசுவீங்கன்னு கேக்குறேன். என் தங்கச்சி தப்பு பண்ணலை. தப்பு பண்ணவும் மாட்டா?
“இதுக்கு யார் மா சாட்சி? உள்ள நடந்தது என்னன்னு யாருக்கு தெரியும்?”
“அதை தான் நானும் சொல்றேன். உள்ள நடந்தது யாருக்கு தெரியும்? தப்பு பண்ணணும்னு நினைக்கிறவங்க, இப்படி கெட்ட பேர் வாங்கிட்டு நின்னுட்டு இருக்க மாட்டாங்க. என் தங்கச்சி அப்படி கிடையாது. அவ அப்பாவி. இவன் தான் அவளை நைட் கடத்தி காலைல இப்படி அவ மேல பழியை போட்டுருக்கான்”
“இது என்ன மா புதுக் கதை? அவ அவனோட சொந்த அத்தை பொண்ணு. அவன் எதுக்கு இப்படி செய்யணும்?”
“அத்தை பொண்ணுன்னு சொல்றது ரெண்டாவது. முதல்ல அவ எங்க வீட்டு பொண்ணாச்சே”
“என்ன மா சொல்ற?”
[the_ad id=”6605″]
“ஐயா இதுக்கு மேல நான் எதையும் மறைக்க விரும்பலை. நான் உண்மையை சொல்றேன்”, என்று தேன்மொழி ஆரம்பிக்கும் போது ராஜேந்திரன் அங்கிருந்து ஓடப் பார்த்தான். அவனை கதிரும் தினேஷும் பிடித்துக் கொண்டார்கள்.
“எங்க வீட்ல இருந்து ஒரு நாள் காணாம போனேன்னு எல்லாரும் தேடுனீங்க நினைவு இருக்கா?”
“ஆமா, நீ தான் உன் பாட்டியை பாக்க போயிருந்தியே?”, என்று ஊர் பெரியவர் சொன்னதும் “தேனு, என்ன டி சொல்ல வர?”, என்று கேட்டாள் சகுந்தலா.
தன்னுடைய மனைவி இனி பிரச்சனையை பார்த்துக் கொள்வாள் என்று நினைத்து புன்னகைத்த கதிர் கண்களில் பட்டான் தினேஷ்.
“என்ன இவன் இப்படி அந்த பிள்ளையை பாத்துட்டு இருக்கான்?”, என்று எண்ணி குழப்பமாக இருந்தது. தேன்மொழிக்கு இந்நிலை வந்தால் தான் எப்படி இருப்பமோ அப்படி இருந்தது அவன் முகம்.
அவன் எண்ணத்தை தடை செய்தது ஊர் பெரியவரின் குரல். “நீ என்ன தான் மா சொல்ல வர?”, என்று அவர் கேட்டதும் கதிரை நிமிர்ந்து பார்த்தாள் தேன்மொழி.
அவன் சொல் என்பதாய் கண்ணசைத்தான். இனி ராஜேந்திரன் வாலாட்டாமல் இருக்கவும், கீதாவை காப்பாற்றவும் தேன்மொழி உண்மையை கட்டாயம் சொல்லி தான் ஆக வேண்டும் என்று நினைத்தான் கதிர்.
காதல் தீயை நீர் அணைக்குமா?...