அத்தியாயம் 16
காதல் நினைவுகளை
என்னுள் உருவாக்கிய நீயே
என்னை எரிக்கும்
காதல் தீயானாய்!!!
இரவு முழுவதும் தூங்காததால் தூங்கலாம் என்று படுத்தான் செல்வா. அப்போது தான் அவனுக்கு சௌமியா நினைவே வந்தது.
“லெட்டரை வேற குடுத்து வச்சிருக்கேன். அதுலயும் லவ்வுன்னு வேற எழுதிருக்கேன். நாளைக்கு கிளாஸ்ல எல்லார் முன்னாடியும் அந்த பேப்பரை காமிச்சு அசிங்க படுத்திருவாளோ? நான் எழுதுனதை நேருக்கு நேரா நின்னு வாய்ட்டு பேசிருக்கணுமோ? தடையத்தை எதிரி கையிலே கொடுத்த மாதிரி கொடுத்துட்டு வந்துருக்கேனே? ஐயோ நாளைக்கு என்ன நடக்குமோன்னு பயமா இருக்கே”, என்று எண்ணிக் கொண்டே படுத்திருந்தான்.
அப்போது தான் உள்ளே வந்த தினேஷ் செல்வா கண்ணில் பட்டான். அவன் ஏதோ நினைப்போடு உள்ளே வரவும் “அவன் கீதாவை நினைச்சு கனவு காணுவான். அவனுக்கென்ன? அவன் காதல் நிறைவேறிருச்சு. என்னைக்கு அவ என் காதலை புரிஞ்சிக்கிட்டு…. நான் ஏன் சௌமியை நினைக்கிறேன். அதுல சொல்லிருந்த மாதிரி, உண்மையிலே நான் அவளை லவ் தான் பண்ணுறேனா? அவ ரொம்ப திமிர் பிடிச்சவ. அவளை போய் எனக்கு ஏன் பிடிச்சது? வேணியை வேற ரொம்ப கஷ்ட படுத்துறா. இனி அவ முகத்தையே பாக்க மாட்டேன்னு சொல்லிருந்தேன். ஆனா என்னால முடியுமா? அவ கொஞ்சம் நேரம் லேட்டா வந்தாலே என் கண்ணும் மனசும் ஏங்கி போகுது. ஐயோ நான் எதுக்கு அவளையே நினைக்கிறேன். இது சரி வராது. தினேஷ் கிட்ட பேசுவோம்”, என்று எண்ணி அவனை பார்த்தான்.
எதுவோ கனவில் இருப்பவன் போல தனக்குள் சிரித்துக் கொண்டிருந்தான் தினேஷ். அவன் கனவை கலைக்க விருப்பம் இல்லாமல் குளிக்க சென்றான் செல்வா.
சிறிது நேரத்தில் அனைவரையும் சாப்பிட அழைத்தாள் வேணி. எல்லாரும் ரவுண்டு கட்டி அமரவே கடைசியாக தயக்கத்துடன் அன்னத்துடன் வந்தாள் கீதா.
தேன்மொழி அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். அனைவரும் தரையில் அமர்ந்திருப்பதைப் பார்த்து வியந்த கீதா அங்கு அமர்ந்திருந்த வேணி அருகில் சென்று அமர்ந்தாள். அவள் அங்கே வந்ததில் இருந்து அவளுடைய வியப்பு, சிறு புன்னகை என்று அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான் தினேஷ்.
“எல்லாரும் உன்னையே பாக்க போறாங்க. கொஞ்சம் கம்முன்னு உக்காருண்ணா”,என்றான் செல்வா.
தினேஷ் அப்படி என்றால் கதிரோ ஏதோ கனவில் மிதப்பவன் போல யோசனையில் இருந்தான். தினேஷ் கீதாவை பார்ப்பது போல தன்னை கதிர் பார்க்கிறானா என்று பார்த்த தேன்மொழி ஏமாந்து தான் போனாள். அவன் தேன்மொழியைக் எண்ணி தான் கனவு கண்டு கொண்டிருந்தான். அது அவளுக்கு தெரியாததால் அவனை முறைத்துக் கொண்டே அவன் அருகில் சாப்பிட அமர்ந்தாள்.
“ரெண்டு அண்ணனுக்கும் ஜோடி இருக்கு. நம்ம ஜோடியும் இங்க வந்தா செமையா இருக்கும்ல? ஆனா அவ்வளவு பணக்காரி இப்படி எங்க கூட எல்லாம் தரையில உக்காந்து சாப்பிடுவாளா?”, என்று சௌமியைப் பற்றியே எண்ணமிட்டான் செல்வா.
ஆள் ஆளுக்கு ஒவ்வொரு எண்ணத்தில் இருக்க “நாளைக்கு காலேஜ்க்கு போறியா மா? இல்லை ரெண்டு நாள் கழிச்சு போறியா?”,என்று கேட்டு அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் கொண்டு வந்தார் மதி.
“நாளைக்கே போறேன் மாமா”, என்று அமைதியாக பதில் சொன்னாள் கீதா.
“ஏங்க, நீங்களே அவளை காலேஜ்க்கு கூட்டிட்டு போங்க. சாயங்காலமும் நீங்களே கூட்டிட்டு வந்துருங்க”, என்றாள் வேணி.
தன் அன்னையை கொலைவெறியோடு முறைத்தான் தினேஷ். அவன் பார்வையைக் கண்டு அவனைப் பார்த்து நக்கலாக சிரித்தாள் தேன்மொழி.
“பிளீஸ் தேனு, ஏதாவது செய்யேன்”, என்று சொல்லி கண்களால் கெஞ்சினான் தினேஷ்.
[the_ad id=”6605″]
அவள் கண்டு கொள்ளாமல் திரும்பிக் கொண்டாள். “அவ பொம்பளை ரவுடின்னு தான் தெரியும்ல? இதுக்கு தான் அவ கிட்ட வச்சிக்க கூடாது”,என்று அவன் காதில் சொன்னான் செல்வா.
காலம் கடந்து யோசித்து பயன் என்ன? மீண்டும் தேன்மொழியை பார்த்து கண்களால் கெஞ்சினான். “ஐயோ பாவம்”, என்று நினைத்தவள் “மாமா, நீங்க எதுக்கு வீணா அலைய போறீங்க? தினேஷ் சும்மா தானே இருக்கான். அவன் அந்த வேலையை செய்யட்டும். என்ன அத்தை நான் சொல்றது சரி தானே?”, என்று வேணியையும் பேச்சில் இழுத்தாள் தேன்மொழி.
“ஆமாங்க, அவனே கொண்டு போய் விடட்டும்”, என்று வேணியும் சொல்ல “அப்ப சரி. டேய் தினேஷ் காலேஜ் எப்ப போகணும் என்னன்னு கேட்டு போய் விட்டுட்டு கூட்டிட்டு வா டா”, என்றார் மதி.
“சரிப்பா”, என்று பவ்வியமாக சொன்ன தினேஷ் தேன்மொழியை நன்றியோடு பார்த்தான்.
“ஐயையோ, இவர் கூடவா தினமும் வண்டில போகணும்?”, என்று திகைப்புடன் அமர்ந்திருந்தாள் கீதா.
பின் அனைவரும் சாப்பிட்டு முடிக்கும் போது “அம்மா மதியம் மட்டன் பிரியாணி செய்றியா? அப்புறம் மீன் பொரிக்கணும் சரியா?”, என்று கேட்டான் செல்வா.
“டேய், குஞ்சு உனக்கு சாப்பாடு நினைப்பு மட்டும் தான் இருக்குமா?”, என்று கேட்டாள் வேணி.
அவனுடைய பட்ட பெயரில் திகைத்து போய் அவனை பார்த்தாள் கீதா. கீதாவின் அதிர்ந்த பார்வையைக் கண்ட செல்வா “இந்த அம்மா என் மானத்தை வாங்குதே”, என்று எண்ணிக் கொண்டு அவளை பாவமாக பார்த்தான்.
“அது அவன் பட்ட பேர் மா”, என்று சொல்லி சிரித்தாள் அன்னம்.
“ஏய், கிழவி உன்கிட்ட அவ கேட்டாளா?”, என்று கேட்டான் செல்வா.
“செல்வா என்ன இது? எல்லாரையும் மரியாதை இல்லாம பேசுறது? வயசுக்கு மரியாதை கொடுக்கணும்னு எத்தனை தடவை சொல்றது? இனி அம்மாவை அப்படி கூப்பிட்ட உனக்கு இருக்கு. அப்புறம் தேனு, கீதா ரெண்டு பேரும் உனக்கு அண்ணி. அவங்களை மரியாதையா சொல்லணும்”, என்றார் மதி.
“அப்பா, அவன் சின்ன வயசுல இருந்து கூப்பிடுற மாதிரியே கூப்பிடட்டும். அவங்களே அண்ணின்னு கூப்பிடுறதை விரும்ப மாட்டாங்க”, என்றான் கதிர்.
“இல்லை கதிர், வேற யாராவது கேட்டா என்ன நினைப்பாங்க?”
“அடுத்தவங்க முன்னாடி எல்லாம் அப்படி கூப்பிட மாட்டான்ப்பா”
“சரி கதிர், அந்த மில்லை வாங்குறதைப் பத்தி கேட்டேன். அவர் பணம் ரெடியா இருக்குன்னா நாளைக்கே கூட பத்திரம் முடிக்கலாம்னு சொன்னார். ஆனா… பணம் தான் கொஞ்சம் கம்மியா இருக்கு”
“எவ்வளவு வேணும் பா?”
“முப்பதாயிரம் குறைய இருக்கு. அம்மா நகை வேணும்னா வைக்கவா?”
“நகை எல்லாம் வைக்க வேண்டாம். என்னோட அக்கவுண்ட்ல இருந்து எடுத்து தரேன். பத்திர முடிக்கவும் செலவு இருக்கே”
“அப்ப சரிப்பா”
[the_ad id=”6605″]
“பாட்டி நீ ஒரு நல்ல நாளா பாத்து வை. அன்னைக்கே முடிச்சிரலாம்”, என்றான் கதிர்.
“சரி கதிர்”,என்று அன்னம் சொன்னதும் “ஏங்க கீதாவுக்கு டிரஸ் எல்லாம் நம்ம வாங்கி கொடுத்துறலாம். ஆனா அவளோட புக், நோட்டுன்னு எல்லாமே அவ வீட்ல இருக்கே. அதை எல்லாம் எப்படி எடுக்க?”, என்று கேட்டாள் வேணி.
கீதாவும் அதே குழப்பத்தில் தான் இருந்தாள். எப்படி கேக்க என்று தெரியாமல் அவள் இருக்கும் போது வேணி பேச்சை எடுத்ததும் மதியைப் பார்த்தாள்.
“நீ என்ன மா கீதா சொல்ற?”
“எல்லாம் வேணும் மாமா. ஆனா எனக்கு அங்க போக பிடிக்கலை”,என்று தடுமாற்றத்துடன் சொன்னாள். அவள் கண்களில் இருந்த வலி அனைவருக்குமே புரிந்தது.
“என்ன செய்யலாம் வேணி? நாம போய் வாங்கிட்டு வருவோமா?”
“வேண்டாம் பா. நீங்க போக வேண்டாம். நானும் தேன்மொழியும் போறோம்”, என்றான் கதிர்.
“ஆமா மாமா, நாங்க போய் எடுத்துட்டு வரோம்”, என்றாள் தேன்மொழி.
“அவளுக்கு காலேஜ் போக டிரஸ் எல்லாம் வாங்கணும் தேனு. கதிரு ஒண்ணு செய். அப்பா கிட்ட பணம் வாங்கி தரேன். மதியம் சாப்பிட்ட அப்புறம் நாலு பேரும் போய் தேவையானது எல்லாம் வாங்கிட்டு வாங்க. தேனு நீயும் வாங்கிக்கோ”
“என்கிட்ட பணம் இருக்கு மா. நான் பாத்துக்குறேன்”, என்று கதிர் சொன்னதும் “எனக்கு கல்யாணத்துக்கு தான் எல்லாமே வாங்கியாச்சே அத்தை. செல்வாவுக்கு காலேஜ் போக தான் டிரஸ் வாங்கணும்”, என்றாள் தேன்மொழி.
“பாத்தியா மா, அம்மாவுக்கு அப்புறம் அண்ணி தான் எல்லாம்னு தேனு புருவ்ப் பண்ணிட்டா. நீ கூட என்னை கடைக்கு போக சொல்லலை. போ உன் கூட சண்டை”, என்றான் செல்வா.
“குஞ்சு, உனக்கு ஏற்கனவே ரொம்ப டிரெஸ் இருக்கு தானே?”, என்று வேணி சொன்னதும் “அம்மா அவனும் வரட்டும் மா”, என்றான் கதிர்.
“சரி, நான் போய் கறி வாங்கிட்டு வரேன்”,என்று சொல்லி விட்டு சென்று விட்டார் மதி.
அன்னமும் வேணியும் அவர்கள் அறைக்கு போக சிறியவர்கள் ஐவரும் பேசிக் கொண்டே டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
கீதாவும் தேன்மொழியும் பேசிக் கொண்டிருக்க, அவர்களை பார்த்துக் கொண்டிருந்தார்கள் கதிரும் தினேஷும். கதிரை தேன்மொழி கவனிக்காமல் இருந்தாலும் தினேஷை அவ்வப்போது கவனித்தாள் கீதா.
அவள் பார்க்கும் போது திரும்பிக் கொள்வதும், அவள் கவனம் வேறு பக்கம் இருக்கும் போது அவளையே பார்ப்பதுமாக இருந்தான். அவன் பார்வையில் சிறு குறுகுறுப்பை உணர்ந்தாள் கீதா.
மதி மீனும் கறியும் வாங்கி வந்த பின்னர் வேணி சமையலில் இறங்க அவளுக்கு கீதாவும் தேன்மொழியும் உதவினார்கள்.
மதியம் ஒரு பிடி பிடித்தார்கள் அனைவரும். “வெயில் கொஞ்சம் குறைஞ்ச பிறகு போகலாம்”, என்று சொல்லி தன் அறைக்கு சென்றான் கதிர்.
எல்லாரும் அவர்கள் அறைக்கு போக “டேய் குஞ்சு,இங்க வாயேன்”,என்று அழைத்தாள் வேணி.
“நீ திருந்தவே மாட்ட மா. என்னன்னு சொல்லு”, என்ற படியே வந்தான் செல்வா.
“இந்தா இதுல முவ்வாயிரம் பணம் இருக்கு. உனக்கு தேவையானதை நவீனை கூட்டிட்டு போய் வாங்கிக்கோ டா. அவங்க புதுசா கல்யாணம் ஆனவங்க. அவங்க தனியா போகட்டுமே”, என்றாள்.
“ஐ, நீலவேணிக்கு கொடுக்க பணம் கிடைச்சிருச்சு”, என்று மனதுக்குள் குதுகளித்தவன் “அம்மா நீ சூப்பர் மா. எனக்கு இந்த ஐடியா தோணவே இல்லை பாரேன். அவங்களே போகட்டும். சரி நான் இப்பவே நவீன் வீட்டுக்கு கிளம்புறேன். ஆனா இன்னைக்கு வாங்க போகல”, என்று சொன்னவன் உடனே கிளம்பியும் விட்டான்.
மூன்று மணிக்கு கண் விழித்த கதிர் தன்னுடைய பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த தேன்மொழியைப் பார்த்தான். அவளையே ஒரு நொடி பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் உதடுகளை தொட அவள் அருகே கையைக் கொண்டு சென்றான்.
அவள் விழித்து விட்டால் அவ்வளவு தான் என்று எண்ணமிட்டவன் அவள் கையை தட்டி “தேனு தேனு”,என்று எழுப்பினான்.
எழுந்து அமர்ந்தவள் “என்ன அத்தான்?”, என்று கேட்டாள். “இல்லை மணி மூணுக்கு மேல ஆகுது. இப்ப எந்திரிச்சு குளிச்சு கிளம்பினா தான் போயிட்டு வர சரியா இருக்கும். கீதா வீட்டுக்கு போய் திங்க்ஸ் வேற எடுக்கணும்”, என்றான்.
“ஹிம், சரி நான் கீழே போய் எல்லாரையும் கிளம்ப சொல்றேன்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்.
ஒரு பெருமூச்சொடு குளிக்க சென்றான். அவன் குளித்து முடித்து வெளியே வரும் போது தேன்மொழி உடை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.
சத்தம் கேட்டு திரும்பி பார்த்தவள் அவன் வெற்று மார்பைக் கண்டு சட்டென்று திரும்பிக் கொண்டாள். அடுத்த நொடி குளிக்கவும் சென்று விட்டாள்.
[the_ad id=”6605″]
கதிர் அவள் வெளியே வருவதற்கு முன்பு கிளம்பி கீழே சென்று விட்டான். அவனுக்கு முன்பு கிளம்பி தயாராக இருந்தான் தினேஷ்.
“அதுக்குள்ள கிளம்பிட்டியா டா? என்ன ஒரு அதிசயம்? நீயா டா தினேஷ்? என்னால நம்பவே முடியலை”, என்றான் கதிர்.
“ஹி ஹி சும்மா தான் அண்ணா”
“நம்பிட்டேன் தம்பி நம்பிட்டேன், செல்வா எங்க டா?”
“அவன் ஊர் சுத்த போயிட்டான். நவீன் போன் பண்ணிருப்பான் போல? அவன் நம்ம கூட வரலை.அம்மா சொன்னாங்க”
“இவனுக்கு வேற வேலையே இல்லை. சரி அவனுக்கும் நாம வாங்கிட்டு வரலாம்”
“அண்ணா…”
“என்ன டா?”
“இல்லை, கார்ல போகும் போது நான் பின்னாடி உக்காரவா?”
“ஹா ஹா, என்ன திடீர்னு?”
“நீ தேனு பக்கத்துல உக்காரணும்ல? அதுக்கு தான்”
“பக்கத்து இலைக்கு பாயாசமா டா? சரி சரி உன் பொண்டாட்டி பக்கத்துலே உக்காரு. உன்கிட்ட கேக்கணும்னு நினைச்சேன் டா, உனக்கு கீதாவை பிடிச்சிருக்கா? திடீர்னு அப்பா உன் கல்யாணம் பத்தி பேசிட்டாங்க. அங்க நான் மறுத்து பேசிருந்தா அப்பா கவுரவம் அடி வாங்கிருக்கும். அதான் அமைதியா இருந்தேன். நீ வேற எதுவும் நினைச்சிருந்தியா?”, என்று கேட்டான்.
“அட போண்ணா, நானே அவளை லவ் பண்ணிட்டு எப்ப காதலை சொல்லி எப்ப கல்யாணம் பண்ணுறதுன்னு தவிச்சிட்டு இருந்தேன். அப்பா பாத்தியா ஒரே நாள்ல எல்லாத்தையும் முடிச்சிட்டார். பழம் நழுவி என் வாயிலே விழுந்துடுச்சு”, என்று சொல்லி சிரித்தான் தினேஷ்.