மாயா மற்றும் சுமனின் நிலையும் அதுவே தான். “என்னை சுசீ பாத்துக்குவாங்க. நீங்க பையா கூட வேலைக்கு போங்க”, என்று சொல்லி சொல்லியே அவனை கஷ்டப் பட்டு தான் மாயா அனுப்பி விடுவாள். ஏனென்றால் யுவனின் பாசம் அந்த அளவுக்கு இருந்தது. அந்த அளவுக்கு அவளை தாங்கினான். பழைய கசப்பான நினைவுகள் இப்போது மாயா மனதில் எழுவதே இல்லை.
இருவரும் கிளம்பி சென்ற பிறகு மாயாவை சாப்பிட வைத்து அவளிடம் நல்ல விஷயத்தைச் சொன்னாள். அதைக் கேட்டு சந்தோஷப் பட்ட மாயா உடனே யுவனை போனில் அழைத்தாள்.
“சொல்லு மாயா”
“வாழ்த்துக்கள் பையா. நான் சீக்கிரம் அத்தையாகப் போறேன்”
“தேங்க்ஸ் மா. ரெண்டு பேரும் சாப்பிட்டீங்களா?”
“சாப்பிட்டோம். ஒரு முக்கியமான விஷயம் சொல்ல தான் கால் பண்ணுனேன்”
“சொல்லு மாயா”
‘”வீட்ல வேலை செய்ய ஒரு சர்வன்ட்டை வரச் சொல்லுங்க பையா. இனி மேல் சுசீயாலும் ரொம்ப வேலை செய்ய முடியாது. அவளுக்கும் ரெஸ்ட் வேணும்”, என்று சொல்லி அவன் சரி என்றதும் போனை வைத்தாள்.
அதே நேரம் சுசீலாவின் எண்ணுக்கு போன் வந்தது. அஸ்வதி தான் அழைத்திருந்தாள்.
“சொல்லு அஸ்வதி எப்படி இருக்க? அங்க எல்லாம் எப்படி போகுது?”, என்று விசாரித்தாள் சுசீலா.
“சுசீ, இங்க எல்லாமே நல்லா போகுது. நான் ஒரு முக்கியமான விஷயம் பேச தான் கூப்பிட்டேன்”
“என்ன ஆச்சு அஸ்வதி?”
“அது வந்து … வந்து… இந்த கேசவ் இருக்காங்களே?”
“ஆமா, கேசவ்க்கு என்ன? நேத்துக் கூட பேசினாங்களே?”
“அவங்க திடீர்னு என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேக்குறாங்க டி”
“வாட்? நீ என்ன சொல்ற அஸ்வதி?”
“ஆமா, உண்மையை தான் சொல்றேன். நேத்து நைட் தான் அப்படிச் சொன்னாங்க”
“சூப்பர் டி. நீ என்ன சொன்ன?”, என்று குதூகலமாக கேட்டாள் சுசீலா.
“சூப்பரா? என்ன… என்ன சூப்பர்? நான் ஒண்ணுமே சொல்லலை. முறைச்சிட்டு வந்துட்டேன்”
“லூசா டி நீ? ஓகே சொல்ல வேண்டியது தானே?”
“எல்லாம் தெரிஞ்ச நீயே இப்படி சொல்லலாமா சுசீ? நான் எங்க? அவர் எங்க? நான் ஒரு…”
“அதை எல்லாம் நினைக்க கூடாதுன்னு சொல்லிருக்கேன்ல அஸ்வதி?”
“மனசுக்கு கடிவாளம் போட்டாலும் உண்மை என்னைக்கும் மறையாது சுசீ? நான் போய் அவரை… நீ கொஞ்சம் அவர் கிட்ட பேசுறியா?”
“நானா? நான் என்ன பேசணும்?”
“நான் அவருக்கு வேண்டாம்னு சொல்லு. அவருக்கு நல்ல பொண்ணு கிடைப்பான்னு சொல்லு. நீ பையா கிட்ட சொல்லி அவருக்கு பொண்ணு பாக்க சொல்லு”
“ஏன் இதை நீயே அவர் கிட்ட சொல்ல வேண்டியது தானே?”
“நான் எப்படி அவர் கிட்ட சொல்ல முடியும்?”
“வாய்ட்டு தான் சொல்லணும். என்கிட்ட பேச முடியுதுல்ல? ஒழுங்கு மரியாதையா அவர் கிட்ட பேசு. அவர் ஏதாவது விளக்கம் கொடுத்தா அதை புரிஞ்சிக்க முயற்சி பண்ணு. உன்னை தேடி வர நல்ல வாழ்க்கையை முன்னாடி முங்கி எழுந்த சாக்கடையை நினைச்சு ஒதுக்கி வச்சிராத டி. கேசவ் நல்லா யோசிச்சு தான் முடிவு பண்ணிருப்பாங்க. எதுன்னாலும் தெளிவா முடிவெடு அஸ்வதி. உனக்கு நாங்க எல்லாரும் இருக்கோம். அப்புறம் உனக்கு ஒரு குட் நியூஸ்”, என்று சொல்லி தான் மாசமாகியிருப்பதை சொன்னாள்.
அதற்கு சந்தோஷமாக வாழ்த்து சொன்னாள் அஸ்வதி. “இங்க பாரு அஸ்வதி, இப்ப இருக்குறது தான் நமக்கான வாழ்க்கை. இந்த வாழ்க்கையை நம்ம கிட்ட ஒப்படைக்க தான் விதி நம்மளை இப்படி சுழற்றி அடிச்சிருக்கு. உனக்கு கேசவை முடிச்சு போட தான் கடவுள் உன்னை இங்க கொண்டு வந்து நிறுத்திருக்கார்னு நினைச்சு நல்ல முடிவா எடு டி. நாங்க ஒரு ரெண்டு மூணு மாசம் கழிச்சு அங்க வரோம். அப்புறம் பேசுறேன்”, என்று சொல்லி போனை வைத்தாள் சுசீலா.
வேறு வழியில்லாமல் கேசவிடமே மறுப்பைச் சொல்ல போனாள் அஸ்வதி. ஆனால் அவனோ தீர்மானமாக அவள் மனதை மாற்றும் விதமாக பேச ஆரம்பித்தான்.
“புரிஞ்சிகோங்க, நான் நல்ல பொண்ணு கிடையாது. என்னை நிறைய பேர்… சீ.. அதை விடுங்க… உங்களுக்கு வேற நல்ல பொண்ணு கிடைப்பாங்க. நான் உங்களுக்கு வேண்டாமே”, என்றாள் அஸ்வதி.
“நான் ஒரே ஒரு கேள்வி. கேக்குறேன் அதுக்கு பதில் சொல்லு அஸ்வதி. யாராவது உன்னை தொடும் போது நீ சந்தோஷமா பீல் பண்ணிருக்கியா?”, என்று கேட்டான் கேசவ்.
அவனை அதிர்ச்சியாக பார்த்தவள் “அப்படி எல்லாம் இல்லை. இன்னைக்கு இவ்வளவுன்னு டார்கெட் இருக்கும். அத்தனை பேர் வருவாங்க. அவங்க கொடுக்குற பணத்தில் கொஞ்சம் நாங்க எடுத்துட்டு மிச்சத்தை எல்லாம் கொடுக்கணும். இதுல எங்க பீலிங்க் வரும்? அது மட்டுமில்லாம கண்ட பொம்பளைகளை தேடி வர ஆம்பளைங்க பீலிங்கையா காட்டுவாங்க? அவங்க வெறியை தானே காட்டுவாங்க”, என்று முணுமுணுப்பாக பதில் சொன்னாள். அதை சொல்லும் போதே அவள் கண்களில் கண்ணீர் வடிந்தது.
“அப்ப உன்னோட எக்ஸ் ஹஸ்பண்ட் தொட்டப்ப?”
“இவன் ஏன் இப்படியே பேசுறான்?”, என்று எரிச்சல் வந்தாலும் “அவன் தொட்டப்ப அருவருப்பு தான் வந்தது. அவன் கல்யாணம் முடிஞ்சு கொஞ்ச நாள் என்கிட்ட இருந்து தள்ளியே தான் இருந்தான். அவனாவே முதல்ல நல்லா புரிஞ்சிக்கணும், அப்புறம் தான் எல்லாம்னு சொன்னான். அம்மா அப்பா கிட்ட இருந்து என்னை தள்ளி கூட்டிட்டு வந்த பிறகு தான் என் கிட்டவே வந்தான். அதுவும் கேமராவோட. அப்ப தான் அவனோட சுயரூபமே எனக்கு தெரிஞ்சது. இது வரை என்னோட உடம்பை தொட்டவாங்க யாரும் என்னோட மனசை தொடலை போதுமா”, என்று விரக்தியோடு சொன்னாள்.
“அப்புறம் என்ன? உன்னோட மனசு சுத்தமானதா தான இருக்கு? அதுல எனக்கு இடம் கொடுக்க மாட்டியா? உன்னை கட்டாயப் படுத்தலை. உனக்கு பிடிக்கலைன்னா விடு. கடைசி வரை நாம இப்படியே நண்பர்களா இருப்போம். ஆனா எப்பவுமே நான் உன்னை நினைச்சிட்டே தான் இருப்பேன். சரி அதை விடு. பையா கொஞ்சம் பணம் அனுப்பிருக்காங்க. எல்லாருக்கும் தேவையான பொருள் கொஞ்சம் வாங்கிட்டு வந்துரலாம். நீ யாருக்கு என்ன வேணும்னு கேட்டுட்டு கிளம்பு”, என்று சொல்லிச் சென்றான்.
காதலிக்கிறேன் காதலிக்கிறேன் என்று சொல்லி சொல்லி அவள் மனதை மாற்றாமல் வார்த்தையால் சொல்லாமலே அவனுடைய காதலை அவளுக்கு புரிய வைத்தான் கேசவ்.
சிறிது நாட்களில் அஸ்வதி மனதும் அவன் பக்கம் சாய்ந்தது. அவனுடைய காதலை அஸ்வதி ஏற்றுக் கொண்டது அனைவருக்கும் மகிழ்ச்சியே.
கேசவ் மற்றும் அஸ்வதி திருமணத்திற்கு அனைவரும் வந்து போனார்கள். நாட்கள் வண்ணமயமானதாக நகர்ந்தது.
யுவனுக்கும் சுசீலாவுக்கும் இருந்த காதல் பெருகிக் கொண்டே தான் சென்றது. காலையில் வேலைக்கு செல்பவன் மாலையில் அவளுடன் நேரம் செலவழிப்பான். அவனுடன் கை கோர்த்து வெளியே நடக்கும் தருணம் அவளுக்கு மிகவும் பிடிக்கும். சில நேரம் நான்கு பேரும் சேர்ந்து வெளியே செல்வார்கள். அதுவும் யுவனுடன் கைகோர்த்து நடக்க சுசீலாவுக்கு மிகவும் பிடிக்கும்.
திடீரென்று அவளுடைய தோள் மீது கை போட்டால் தான் அவளுக்கு பதட்டம் வந்து விடும். அவனுடன் நெருக்கமாக நடந்தால் அனைவரும் அவளையே பார்ப்பது போல பிரம்மை அவளுக்கு ஏற்படும். “கையை எடுங்க”, என்று சொல்லி அவனை திட்டினால் அவன் வேண்டும் என்றே அவளை இன்னும் நெருங்கி அடாவடி செய்வான்.
அவன் செயலால் அவள் முகத்தை தூக்கினால் “இது பாரின் டி. நீ இன்னும் மாமியாவே இரு”, என்று சொல்லி கிண்டல் அடிப்பான்.
தினமும் இரவில் இருவரும் ஒரே கம்பளிக்குள் ஐக்கியம் ஆகும் போது தங்களையே மறந்து வேறு ஒரு உலகுக்குள் புகுந்து கொள்வார்கள். குளிரும் இருவரின் நெருக்கமும் இருவரையும் எங்கோ அழைத்துச் செல்லும்.
மாயா மற்றும் சுசீலாவுக்காக அவன் வாங்கியிருந்த புது வீடு அவ்வளவு அழகாக இருந்தது. யுவனும் சுமனும் வேலைக்கு சென்றதும் அந்த வீட்டை அலங்கரிப்பது தான் மாயா மற்றும் சுசீலாவின் வேலை.
வீட்டைச் சுற்றி அழகான மரங்கள், சீராக வெட்டப் பட்டிருந்த புல்வெளிகள் பச்சைக் கம்பளம் விரித்ததைப் போல இருந்தது. அந்த குடியிருப்பில் இருந்த அனைத்து வீடுகளும் ஒரே போல தான் இருந்தது.
வீட்டை அலங்கரிப்பதிலும், தோட்டத்தை பராமரிப்பதிலும் சுசீலா மற்றும் மாயாவுக்கு நேரம் நகர்ந்தது.
ஒரு நாள் சமையல் அறையில் எதுவோ செய்து கொண்டிருக்கும் போது கதவு தட்டப் பட்டதும் வெளியே வந்து பார்த்தாள் சுசீலா. கையில் ஒரு பையுடன் நின்றிருந்தான் யுவன்.
“என்ன, நீங்க மட்டும் வறீங்க? சுமனைக் காணும்”
“தோட்டத்துல மாயா வாக்கிங் போயிட்டு இருக்கா. அங்க நின்னுட்டான்”, என்று சொல்லிக் கொண்டே அவள் பின்னாலயே சென்ற யுவன் வாங்கி வந்த பொருள்களை எடுத்து அடுக்கி கொண்டிருந்தவளின் இடுப்பை வளைத்து அவளுடைய பின்னங்க் கழுத்தில் முத்தமிட்டான்.
அதில் கூசி சிலிர்த்தவள் “ஐயோ என்ன பண்ணுறீங்க விடுங்க. யாராவது வந்துரப் போறாங்க. இன்னைக்கு சமையல் செய்ற லேடி லீவ். நான் தான் செய்யணும்”, என்று சிணுங்கினாள். அவளுடைய இடுப்பில் பதிந்த அவனுடைய கை மேடிட்டிருந்த அவள் வயிற்றில் ஊர்ந்தது.
அவன் நெருக்கம் அதிகமாக “இப்படி கொஞ்சிட்டு இருந்தா எப்படி சமையல் செய்யவாம்?”, என்று கேட்ட படி அவனை விலகி நிறுத்த முயன்றாள்.
“உன்னை யாரு சமைக்க சொன்னதாம்? வா ஹோட்டல்ல போய் சாப்பிடுவோம்”
“என்ன பழைய வாழ்க்கை நினைவுக்கு வருதா? எங்க அக்ரகாரத்துல யாரும் ஹோட்டல்ல போய் சாப்பிட மாட்டாங்க தெரியுமா?”
“சரி சரி பாடம் எடுக்காத. நீயே சமை. அதுக்கு முன்னாடி புருஷனை கவனி. சாப்பிடுறதுக்கு தான் இன்னும் நேரம் இருக்கே?”, என்று சொல்லி கொண்டே அவளை தூக்கிக் கொண்டு படுக்கை அறைக்குள் நுழைந்தான் யுவன்.
அவளை கட்டிலில் கிடத்தி அவள் மேல் பரவி படரும் போது அவள் கண்களில் இருந்த எதிர்பார்ப்பில் அவன் கண்கள் மின்னின.
“கள்ளி இவ்வளவு ஆசையை வச்சிக்கிட்டு”, என்று சொல்ல வந்தவனின் வாயை விரலால் மூடினாள் சுசீலா.
“சூப்பரா இருக்க மாமி”, என்று அவள் காதோரமாக முணுமுணுத்து மேலும் முன்னேறியவனுக்கு இசைந்து கொடுத்தவளாக அவன் கைகளுக்குள் கரைந்தாள் சுசீலா.
இது போன்ற வாழ்க்கை தனக்கு கிடைக்கும் என்று யுவன் கனவில் கூட நினைத்ததில்லை. அனைத்தையும் அவனுக்கு தந்தது சுசீலா. அவளுடைய அன்பு அவனுக்கு கிடைத்த பெரிய பொக்கிஷம்.
சிறிது நேரம் கழித்து அவளை விட்டவன் அவளுக்கு உதவியாக சமையல் செய்ய வந்து விட்டான். யாருக்கும் அஞ்சாத நெஞ்சம் கொண்ட யுவன் தன்னுடைய மனைவி, தங்கைக்காக வெங்காயம் நறுக்கிக் கொண்டிருந்தான்.
பல பேரை தன்னுடைய துப்பாக்கியால் கொன்று குவித்த யுவன் அன்று இரவு மனைவியின் கால்களை பிடித்து விட்டுக் கொண்டிருந்தான். ஒரு தலைவனின் காதலியாக இருக்க விரும்பியவள் அவனுக்கே தலைவியானாள்.
……..முற்றும்…..