சுசீலா சாப்பிட்ட தட்டை வாங்கிக் கொண்டு அறையை விட்டு வெளியே அஸ்வதி வரும் போது அங்கே வந்த லிசா “என்ன அந்த பொண்ணு சாப்பிட்டாச்சா?”, என்று கேட்டாள்.
“ஆமா”, என்றாள் அஸ்வதி.
அறைக்குள் சென்று “சுசீலா தானே உன்னோட பேர்? நாம இப்ப கிளம்பலாமா?”, என்று கேட்டாள் லிசா. அஸ்வதியும் உள்ளே சென்றாள்.
லிசா அப்படிக் கேட்டதும் திகைத்து போய் இருவரும் நின்றார்கள். தப்பிக்க சிறிது அவகாசம் கிடைக்கும் என்று இருவரும் எண்ணியிருக்க அவளோ உடனே கிளம்ப சொல்லவும் சுசீலா மிரண்டு விழித்தாள்.
“எங்க கூட்டிட்டு போறீங்க அக்கா? இந்த பொண்ணு இனி இங்க நம்ம கூட தான் இருக்கும்னு நினைச்சேனே?”, என்று கேட்டாள் அஸ்வதி.
“சே சே, இந்த பொண்ணு அவளோட ஊருக்கு போறா. நானும் அப்படியே ஊருக்கு கிளம்புறேன். மாமா தான் கார் ஏற்பாடு பண்ணிக் கொடுத்துருக்காங்க. வா சுசீலா கிளம்பலாம்”, என்று பழைய பொய்யையே சொன்னாள் லிசா.
சுசீலா அடுத்து என்ன செய்ய என்று தெரியாமல் கண் கலங்கியவாறே அவள் பின்னால் சென்றாள். இருவரும் ஏறியதும் கார் கிளம்பிச் சென்றது.
அடுத்த நொடி சுசீலா கொடுத்த மாயா நம்பருக்கு அழைத்தாள் அஸ்வதி.
“பையா, என்னோட பேர் அஸ்வதி. சுசிலாவோட மாமா பொண்ணு. எப்படியாவது அவளைக் காப்பாத்துங்க. சுசியை ரெட்டி கிட்ட விலை பேசிட்டான்னு நினைக்கிறேன். அவளை கூட்டிட்டு அந்த லிசா கிளம்பி போயிருக்கா. எங்களுக்கு உங்களை விட்டா வேற யாரும் இல்லை. தயவு செஞ்சு அவளைக் காப்பாத்துங்க. என்னோட அம்மா அப்பா பண்ணின பாவத்துக்கு நான் அவளைக் காப்பாத்தியாகனும். எனக்கு உதவ உங்களை விட்டா வேற யாருமே இல்லை. தயவு செஞ்சு காப்பாத்துங்க”, என்று சொல்லும் போதே ஏங்கி ஏங்கி அழுதாள்.
“கவலைப் படாதே மா. சுசீலா என் வட்டத்துக்குள் தான் இருக்குறா. அந்த ரெட்டியை பிடிக்கிறதுக்கு தான் நான் வெயிட் பண்ணுறேன். சுசிலாவை நான் காப்பாத்துறேன்”, என்று யுவன் சொன்ன பிறகு தான் நிம்மதியாக மூச்சு விட்டாள் அஸ்வதி.
டிரைவர் அருகில் ஆஜானுபாகுவான ஒருவன் அமர்ந்திருக்க லிசாவும் சுசிலாவும் பின்னால் அமர்ந்திருந்தார்கள். லிசா பற்றிய உண்மை எதுவும் தெரியாத மாதிரி காட்டிக் கொண்டு அமர்ந்திருந்தாள் சுசீலா.
நெஞ்சம் எல்லாம் பதக் பதக் என்று இருந்தது. “கண்டிப்பா அஸ்வதி மாதிரி வாழ வேண்டியது வந்தா நான் உயிரோட இருக்க மாட்டேன். கடவுளே எனக்கு எதுக்கு இந்த கதி? ஒரு தடவை என்னைக் காப்பாத்த யுவனை அனுப்புன. அவன் கைக்குள்ள இருந்து வந்துட்டேனே? கடவுளே அவன் கிட்ட என்னை சேத்துடு. அவன் கிட்ட இருந்தா மட்டும் தான் எனக்கு பாதுகாப்பு”, என்று வேண்டிக் கொண்டு இருந்தாள் சுசீலா.
அப்போது தன்னுடைய கையில் இருந்த போனை எடுத்த யுவன் சுமனை அழைத்தான்.
“சொல்லுங்க பையா”, என்றான் யுவன்.
“சுசீ போற காரை பாலோ பண்ணுறீங்களா இல்லையா?”
“பின்னாடியே தான் பையா போறோம். அட்டாக் பண்ணிறவா?”
“வேண்டாம், பொறுமையா இரு. அந்த லிசா எங்க போறான்னு பாத்து தான் அந்த ரெட்டி ஓநாய் எங்க இருக்குனு தெரிஞ்சிக்க முடியும்? கொஞ்சம் பின்னாடியே போ. அவங்க எங்க போறாங்கன்னு உனக்கு புரிஞ்சிருச்சுன்னா அதுக்கு மேல தாமதிக்காம அட்டாக் பன்னிரு”
“லிசாவை கொன்னுறவா பையா?”
“வேண்டாம். அவ மூழமா கொஞ்சம் தகவல் தேவை இருக்கு. அவளை கடத்திரு. மத்த யாரும் எதிர்த்தா சுட்டு தள்ளிரு”
“சரி பையா”
“கவனமா இருக்க தானே? துப்பாக்கி எல்லாம் லோடடா? கூட கார்ட்ஸ் இருக்காங்க தானே?”
“ஏழு பேர் வந்துருக்கோம் பையா. அந்த லிசா, யாரோட சப்போர்ட்டும் இல்லாம தான் போறா. கூட ஒருத்தன் தான் இருக்கான். நாங்க சமாளிச்சிறுவோம்”
“அப்படின்னா பரவால்ல. சீக்கிரம் எல்லாம் முடிச்சிட்டு வந்து சேரு”, என்று சொல்லி போனை வைத்தான் யுவன்.
“சுமன், என்ன ஆச்சு? அட்டாக் பண்ணிறவா?”, என்று கேட்டான் காரை ஓட்டிக் கொண்டிருந்த கேசவ்.
“இல்லை கொஞ்ச தூரம் போயிட்டு அவங்க எங்க போறாங்கன்னு பாத்துட்டு பண்ண சொன்னாங்க”
“அது ரிஸ்க் சுமன், ரெட்டியோட ஆட்கள் வந்துட்டா நமக்கு டெஞ்சர். அந்த லிசா சாதாரண ஆள் கிடையாது”, என்று கேசவ் சொல்லி வாயை மூடுவதற்குள் எங்கிருந்தோ வந்த ஒரு கார் லிசாவின் காரை தொடர்ந்து சென்றது.
“கேசவ் அங்கே பாரேன். ஒரு கார் அந்த லிசா காருக்கு பாடி கார்ட் மாதிரி போகுது. அந்த லிசா வர வச்சிருப்பா. இல்லைன்னா அந்த ரெட்டி வர வச்சிருப்பான். அந்த காருக்குள்ள ஏழு பேர்க்கு மேல இருக்காங்க”, என்றான் சுமன்.
“நான் சொன்னேன்ல? அவளை சாதாரணமா எடை போடாதேன்னு. இப்ப நம்மளை விட அவங்க ஸ்ட்ராங்க். இப்ப என்ன செய்யுறது?”
“இனி லேட் பண்ண வேண்டாம். இனியும் ஆள் சேந்துட்டா, அந்த பொண்ணு ரெட்டி கை வசம் போயிருவா. அதுக்கப்புறம் பயங்கர ரிஸ்க். பையா கிட்ட அனுமதி வாங்க நேரம் இல்லை. நாம சொன்னா பையா சரின்னு தான் சொல்லுவாங்க. இப்பவே பன்னிரலாம். முதல்ல அந்த ரெண்டாவது காரை அட்டாக் பண்ணு. கார்ட்ஸ், இப்ப நம்ம பண்ண போறது கொஞ்சம் ரிஸ்க் தான். கொஞ்சம் கேர்புல்லா இருந்துகோங்க. டோரை யாரும் முழுசா கீழ இறக்க வேண்டாம். நான் முதல்ல கார் டிரைவரை சூட் பண்ண பாக்குறேன். அப்ப தான் நின்னு அடிக்க முடியும்”, என்று சுமன் சொன்னதும் அந்த காரை ஓவர் டேக் பண்ண பார்த்தான் கேசவ்.
“சுமன், நாம இப்ப இந்த கார்ல உள்ளவங்க கூட போட்டி போட்டுட்டு இருந்தா சுசீலா போற காரை மிஸ் பண்ணிருவோம். அதற்காக கூட அவங்க இப்படி பிளான் பண்ணலாம். சண்டை போடுறதும் ரெட்டியோட இடத்தைக் கண்டு பிடிக்கிறதும் இப்ப முக்கியம் இல்லை. இப்போதைக்கு முக்கியமான வேலை அந்த பொண்ணை சேவ் பண்ணனும். பையா அதை தான் தெளிவா சொன்னாங்க. அந்த பொண்ணுக்கு ஏதாவது ஆச்சுன்னா பையா நம்மளை சும்மா விட மாட்டாங்க”
“எனக்கும் அப்படி தான் தோணுது. இப்ப என்ன பண்ண?”
“பேசாம காரோட டயரை சுடு. இந்த கார் நின்னா தான் நம்ம முதல்ல உள்ள காரை பாலோ பண்ண முடியும்”
“நல்ல ஐடியா தான்”, என்று சுமன் சொன்னதும் சிறிது நேரத்தில் அந்த காரின் டயருக்கு குறி வைத்தார்கள் அனைவரும்.
அவர்கள் வைத்த குறி சரியாக டயரில் பட வேண்டும். அது மிஸ் ஆனால் கூட அந்த சத்தத்தில் காருக்குள் உள்ளே இருப்பவர்கள் எச்சரிக்கை ஆகி விடுவார்கள். அதனால் சரியான தருணம் பார்த்துக் கொண்டிருந்தான் சுமன். அவர்கள் எச்சரிக்கை ஆகி விட்டார்கள் என்றால் சுசீலா செல்லும் காரை இவர்கள் தவற விட வாய்ப்பு உண்டு.
முன்னே செல்லும் காருக்கு குறி வைத்தே இவர்கள் காரும் சென்றது. ஒரு வளைவில் கார் திரும்பிய போது முன்னே செல்லும் காரின் வேகம் சற்று குறைய அந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி ஒரு டயரை சுட்டான் சுமன்.
அடுத்த நொடி அந்த கார் பறந்து எங்கோ சென்று விழுந்தது. இதைக் கண்ட சுசிலா போகும் கார் டிரைவர் அலர்ட் ஆகி “லிசா மேடம் நம்ம ஆட்கள் காரை யாரோ அட்டாக் பண்ணிட்டாங்க”, என்று எச்சரிக்கை செய்தான்.
அதைக் கேட்டதும் அனைவருக்கும் பயம் தொற்றிக் கொண்டது.
தங்களுக்கு பாடி கார்டாக வந்தவர்கள் தங்களுடன் இல்லை என்றதும் லிசா, டிரைவர், மற்றொருவன் மூவருக்கும் கிலி பிடித்தது. சுசிலாவோ ஆனந்தத்துடன் திரும்பி பார்த்தாள்.
யுவன் அவளைக் காப்பாற்ற ஆள் அனுப்பி வைத்து விட்டானா? இங்கே இருந்து அவள் தப்பித்து விடுவாளா என்று எண்ணி மனதுக்குள் குதூகலமானாள்.
“யுவன் என்னைக் கை விட மாட்டான்”, என்று எண்ணி அவள் மனதுக்குள் நம்பிக்கை வந்தது.
“சதானந்த் ஏதாவது பண்ணு டா, இந்த பொண்ணை ரெட்டி கிட்ட ஒப்படைக்கணும். நம்ம உயிருக்கும் ஆபத்து”, என்று புலம்பினாள் லிசா.
இது வரை உண்மை தெரியாதது போல நடித்த சுசீலா இப்போது தான் தெரிந்தவள் போல் “என்ன சொன்ன? ரெட்டி கிட்டயா? அப்ப நீ அந்த ரெட்டியோட ஆளா? உன்னைப் போய் நல்லவன்னு நினைச்சு காப்பாத்துனேன் பாரு”, என்று எண்ணி அவள் கழுத்தை நெரித்தாள் சுசீலா.
லிசா சுசிலாவுடன் போராட அந்த சாதானந்தும் டிரைவரும் என்ன செய்ய என்று திகைக்க அந்த நேரத்தில் இவர்களின் காருக்கு முன்னே வந்து தங்கள் காரை நிறுத்தினான் கேசவ்.
தங்களை நோக்கி வந்த யுவனின் ஆட்களைக் கண்டு மூவரும் நடுங்கினார்கள்.
சுமன் தன்னுடைய ஆட்களை கூட்டி வந்து கார் கதவை திறக்க சொல்ல சதானந்தும் டிரைவரும் கார்க் கதவை திறந்து இறங்கினார்கள்.
அவர்கள் இருவரையும் சுமனின் ஆட்கள் சுட்டுக் கொள்ள அந்த துப்பாக்கிச் சத்தத்தில் சுசீலா ஒரு நிமிடம் தடுமாற, அந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்திய லிசா காரில் இருந்த துப்பாக்கியை எடுத்து சுசிலாவின் நெற்றியில் வைத்து விட்டாள்.
சுசீலா செயலற்று அமர்ந்திருக்க சுமனோ கார் கதவை திறக்க முயற்சி செய்து கொண்டிருந்தான்.
முதலில் சுசீலா இறங்கியதும் அவள் தலையில் துப்பாக்கியை வைத்த படியே லிசாவும் இறங்கினார்கள்.
சுசிலாவின் தலையில் துப்பாக்கியைக் கண்டதும் சுமனின் ஆட்கள் தேங்கி நின்றார்கள்.
“யாராவது கிட்ட வந்தா இந்த பொண்ணை சுட்டுருவேன். இவளைக் காப்பாத்த தானே வந்தீங்க? என்னை நெருங்குனீங்கன்னா இந்த
சுசீலா உயிரோட இருக்கா மாட்டா”, என்று கத்தினாள் லிசா.
சுசிலாவோ “இன்னைக்கு நாம செத்தோம். ஆனா அந்த ரெட்டி கைல சிக்குறதுக்கு இந்த சாவு எவ்வளவு பரவால்ல”, என்று எண்ணிக் கொண்டிருந்தாள்.
“அவளைக் காப்பாத்துறது எங்களுக்கு முக்கியமே கிடையாது. அவ யாரோ நாங்க யாரோ? ஆனா எங்க டார்கெட் நீ தான் டி”, என்று சொன்ன சுமன் கண் இமைக்கும் நேரத்துக்குள் துப்பாக்கி வைத்திருந்த லிசாவின் கையை சுட்டான்.
வலியில் அவள் தேங்க அந்த நொடி சுசிலாவை தன் பக்கம் இழுத்துக் கொண்டான் கேசவ்.
துப்பாக்கி காயத்துடன் லிசாவை அவள் வந்த காரிலே தள்ளி, கூடவே ஐந்து பாடி கார்ட்ஸையும் அதில் ஏறச் சொல்லி அவளை கடத்தினார்கள்.
அனைத்தையும் கண்டு அதிர்ந்து போய் பார்த்துக் கொண்டிருந்த சுசிலாவை இழுத்து தங்கள் காருக்குள் தள்ளினான் சுமன். மற்றவர்களும் ஏற கேசவ் காரை எடுத்தான்.
யுவனின் கோட்டை நோக்கி கார் சென்றது. “இவங்க என்னைக் காப்பாத்த வரலையா? இந்த லிசாவை பிடிக்க தான் வந்தாங்களா? அப்ப யுவன் எனக்காக இவங்களை அனுப்பலையா? அந்த அளவுக்கு என் மேல யுவனுக்கு வெறுப்பா? இனி அவனோட அன்பு எனக்கு கிடைக்கவே கிடைக்காதா?”, என்று யோசனையில் ஆழ்ந்தாள் சுசீலா.
காதல் தொடரும்……