அங்கு வந்த தேன்மொழியைக் கண்ட கதிர், அவளை பார்க்காதது போல திரும்பி, ராஜதுரையை பார்த்தான்.
“என்ன சகு, ரெண்டு பேரையும் வெளிய நிக்க வச்சு பேசிட்டு இருக்க?”, என்று கேட்டார் தர்மதுரை.
“தேன்மொழியை கேக்க தான் வந்திருக்கானோ?”., என்று குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார் ராஜதுரை.
“அத்தை, பாட்டியை ஆஸ்பத்திரில சேத்துருக்கோம்?”,என்று கதிர் சொன்னதும் அனைவரும் அதிர்ந்து போனார்கள்.
“அம்மாக்கு என்ன ஆச்சு? என்ன ஆச்சு கதிரு?”, என்று அழுது கொண்டே கேட்டாள் சகுந்தலா.
“உங்களை பாக்கணும்னு சொல்லிக்கிட்டே வீட்ல மயங்கிட்டாங்க அத்தை. உடனே அட்மிட் பண்ணுனோம். மன அழுத்தம் தான் காரணம் சொன்னாங்க. இன்னும் கண்ணு முழிக்கலை. உங்களைப் பாத்தா சரி ஆகிருவாங்களோன்னு தோணுது. நீங்க வறிங்களா?”
“என்னைய தான் எங்க அம்மா ஒதுக்கி வச்சுருச்சே. நான் எல்லாம் மகளே இல்லையாம்”, என்று சொன்ன சகுந்தலா கதறி அழுதாள்.
அதைப் பார்த்து ராஜதுரை திகைத்து போனார். பிறந்த வீட்டுக்கு போக கூடாது என்று சொன்னதும் இதுவரை சகுந்தலா அவர் பேச்சை மீறியதும் இல்லை. எப்போதும் புன்னகையுடன் தான் வலம் வருவாள்.
ஆனால் இன்று இப்படி அழுவது அவள் மனதில் இருக்கும் ரணத்தைக் காட்டியது. “இவ மனசுல இவ்வளவு வலி இருக்கா?”, என்று அவரும் தவித்துப் போனார். தன்னுடைய மனைவிக்கு தான் நியாயம் செய்ய வில்லை என்று புரிந்தது.
[the_ad id=”6605″]
“அத்தை அழாதீங்க. பாட்டி கோபத்துல சொன்னதை பெருசா எடுத்துக்காதீங்க. நாளைக்கு தேன்மொழியை நீங்க வெறுக்குற மாதிரி பேசினாலும் உங்க மனசுல அவ மேல உள்ள பாசம் போகுமா? அம்மா பிள்ளை பாசம் எப்பவும் இல்லாம போகாது. உங்களையே நினைச்சிட்டு இருந்துருப்பாங்க போல. ஒரே அழுகை. உங்களைப் பத்தி தான் பேசுனாங்க. நான் செத்தாலும் என் மகளை என்னோட பொணத்தை பாக்க விட மாட்டியான்னு எங்க அப்பாவை கேள்வி கேட்டாங்க. அப்பாவே ஆடிப் போய்ட்டார். பேசிட்டே இருந்த பாட்டி அவ நினைவாவே இருக்குன்னு சொல்லி திடீர்னு மயங்கிட்டாங்க”
[the_ad id=”6605″]“ஐயோ, அம்மா அப்படியா சொல்லுச்சு? என் மேல இருக்குற பாசம் வத்தி போயிருச்சு போலன்னு நினைச்சேனே, அம்மா… அம்மா”, என்று அழுதாள் சகுந்தலா.
“இப்பவே என் குடும்பம் என்னை வெறுக்க தான் டா செய்யுது உன்னால. இனி வேற புதுசா வெறுக்கணுமா?”, என்று எண்ணிக் கொண்டே கதிரை முறைத்தாள் தேன்மொழி. அவளுக்கும் அன்னத்தை நினைத்து கவலையாக இருந்தது. எதுவும் ஆக கூடாது என்று வேண்டிக் கொண்டாள்.
ஆனால் கதிரோ அங்கிருந்த அனைவரைப் பார்த்தும் பேசினான். கண்ணன் செந்திலைக் கூட பார்த்து புன்னகைத்து விட்டான். அவள் பக்கம் மட்டும் பார்வையை திருப்பவே இல்லை.
தேன்மொழியை அவன் பார்க்கிறானா என்று இரண்டு ஜோடிக் கண்கள் நோட்டம் விட்டது. அந்த ஜோடிக் கண்கள் தினேஷ் மற்றும் செந்திலுடையது தான். அவனோ அவள் பக்கம் பார்க்கவே இல்லை.
“என்ன தேவை இல்லாத பேச்சு? எல்லாரும் கிளம்புங்க. முதலில் ஆஸ்பத்திரிக்கு போவோம். கதிர் நீ ஒரு அஞ்சு நிமிஷம் உள்ள வந்து உக்காருப்பா. தினேஷ் நீயும் தான். எல்லாரும் கிளம்பி போவோம். உன் காருல அம்மாவையும் உன் ரெண்டு அத்தையையும் ஏத்திக்கோ”, என்று முடிவு சொல்லி விட்டு கிளம்ப சென்றார் தர்மதுரை.
உள்ளே சென்று அமர்ந்ததும் “பாத்தியாண்ணே இப்ப கூட தேன்மொழியை நம்ம காருல வர சொல்லலை”, என்றான் தினேஷ்.
“அது நான் எதிர் பார்த்தது தான் டா”, என்றான் கதிர்.
“ஆனா எனக்கு ஒரு சந்தேகம். நீ என்ன அவளை ஒரு லவ் லுக்கு கூட விடலை”
“டேய் லவ் லூக் விடுற நேரமா டா இது? எனக்கு பாட்டியை நினைச்சு கவலையா இருக்கு”
கண்ணன் “நான் வீட்டைப் பூட்டிட்டு பைக்ல வரேன்”, என்று சொன்னதும் அனைவரும் இரண்டு காரிலும் கிளம்பி சென்றார்கள். தேன்மொழி செந்தில் அருகே அமர்ந்து கொண்டாள்.
ஆக்ஸிஜன் மாஸ்க் பொருத்தப்பட்டு, கிழிந்த நார் போல கிடந்த அன்னத்தைக் கண்டு கதறி விட்டாள் சகுந்தலா. இன்னும் அன்னம் உறங்கிக் கொண்டு தான் இருந்தாள்.
“அழாத சகு, அத்தைக்கு ஒண்ணும் ஆகாது. உன்னைப் பாத்தாலே அவங்களுக்கு எல்லாம் சரியாகிரும்”, என்று அவளுக்கு ஆறுதல் சொன்னாள் வேணி.
[the_ad id=”6605″]ஆண்கள் தான் இத்தனை வருஷம் கழித்து எப்படி பேச என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தார்கள். இரண்டு வீட்டு ஆண்களுக்கும் உறவுப் பாலமாக தினேஷ் மற்றும் கதிர் இருந்தார்கள்.
செல்வா, செந்திலுடன் பேசிக் கொண்டிருந்தான். செல்வி, சண்முகம்மாள், வேணி மூவரும் சகுந்தலா அருகில் அமர்ந்திருந்தார்கள்.
தேன்மொழி அமைதியாக இருந்தாள். அவள் கால்கள் சரியாகி விட்டது தான். இருந்தாலும் சிறு வலி இருப்பதால் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.
அவள் பார்வை நொடிக்கொரு தரம் கதிரை தொட்டு மீண்டது. அவன் அன்று சொன்னது அனைத்தும் நினைவில் வந்தது.
“கல்யாணம் அது இதுன்னு பேசுனான். இப்ப என்னடான்னா என் பக்கம் ஒரு பார்வையைக் கூட திருப்ப மாட்டிக்கான். என்கிட்ட நடிச்சானா, இல்லை இப்ப நடிக்கிறானா? வில்லன்னு பேசுனான், இப்ப என்னடான்னா ஹீரோ மாதிரி நிக்குறான். எப்பவும் போல அன்னைக்கும் விளையாட்டுக்கு மிரட்டிருப்பானோ? நான் தான் உண்மைன்னு நினைச்சு எங்க வீட்ல கல்யாணம் பண்ணுனா இவனைத் தான் பண்ணுவேன்னு வீர வசனம் எல்லாம் பேசிட்டேனோ? இப்ப எங்க வீட்ல போய் இவன் கிட்ட கல்யாணம் பேசுனா நான் உங்க பொண்ணை காட்டிக்க மாட்டேன்னு சொல்லுவானோ? அப்படி என்னை அவமான படுத்த தான் காத்துருக்கானோ?”, என்று எண்ணி குழம்பி தவித்தாள்.
கதிர் மனநிலை புரியாமல் மண்டைக்குள் வண்டு ஓடுவது போல குழம்பித் தவித்தாள் தேன்மொழி.
அப்படி அவளை வேண்டும் என்று தான் குழம்ப வைத்தான் கதிர். அவள் பார்வைக்கு ஒரு எதிர் பார்வையைக் கொடுக்க அவனுக்கு அரை நிமிடம் போதாது. ஆனால் செந்தில் அவர்களை கவனிப்பதை கதிர் கவனித்து விட்டான்.
“என்னை கல்யாணம் பண்ணணும்னு அவ சொல்லிருக்கா. அப்படி இருக்குறப்ப, எங்க ரெண்டு பேருக்கும் எதுவும் பழக்கம் இருக்கான்னு அவங்க வீட்ல வாட்ச் பண்ணுவாங்க. அதனால கவனமா இருக்கணும்”, என்று ஏற்கனவே முடிவெடுத்திருந்தான். அதனால் தான் அவள் பக்கம் கண்ணை திருப்ப வில்லை அவன்.
அவன் நினைத்தது போல தான் செந்தில் கவனித்துக் கொண்டிருந்தான். “இந்த கதிர் அவளை பாக்கலை. இந்த சின்னக்குட்டிக்கு தான் அவனைப் பிடிச்சிருக்கு போல?”, என்று மனதுக்குள் எண்ணினான் செந்தில்.
அவர்களை இரண்டு மணி நேரத்துக்கு மேல் தவிக்க விட்ட பின்னர் கண் விழித்தாள் அன்னம். கண் விழித்ததும் அவள் கண்களுக்கு தெரிந்தது, கண்ணில் நீருடன் நிற்கும் சகுந்தலா தான்.
அன்னத்தின் கண்களிலும் கண்ணீர் வந்தது. அதன் பின் அங்கு ஒரு பாசப் போராட்டமே நடந்தது.
மதியையும் அருகில் வர சொல்லி சொன்ன அன்னம் திக்கி திணறி தான் பேசினாள்.
“அம்மா, இப்ப எதுவும் பேச வேண்டாம். வீட்ல போய் பேசிக்கலாம்”, என்றார் மதி.
[the_ad id=”6605″]“இல்லப்பா, இப்ப…இப்ப பேச முடியலைன்னா, வேற எப்பவுமே பேச முடியாம… போயிரலாம். நான்…. என் மனசுல இருக்குறத சொல்லிறேன். நம்ம …. ரெண்டு குடும்பமும் ஒண்ணா இருக்குறது தான் உங்க அப்பாவோட… ஆசை. இது வரை எப்படியோ, நான் சாகும் போதாவது… என் புருஷன் ஆசையை நிறைவேத்தணும்னு நினைக்கிறேன்…..”
“இப்ப என்ன மா செய்யணும்?”, என்று கேட்டாள் சகுந்தலா.
[the_ad id=”6605″]
“உன் மகளை, என் பேரன் கதிருக்கு கட்டிக்கொடுப்பியா சகுந்தலா…. அவங்க கல்யாணம் மட்டும் தான் ரெண்டு குடும்பமும் ஒண்ணா செருறதுக்கு ஒரே வழி”
“பாட்டி, இப்ப என்னோட கல்யாணம் தான் முக்கியமா? நீ முதல்ல நல்லா ஆகி வீட்டுக்கு வா”, என்று உண்மையான அக்கறையோடு தான் சொன்னான் கதிர்.
“அப்பா, சித்தப்பா நான் சொல்றதை நல்லா கேளுங்க. கதிர் நம்ம தேனை விரும்பல. நம்ம தேனு தான் கதிரை கட்டிக்கணும்னு நினைக்கிறா. கல்யாணம் வேண்டாம்னு சாக போனவ அவ. அவ ஆசையை நிறைவேத்துறது நம்ம கடமை. இந்த சந்தர்ப்பத்தை நீங்க தான் பயன்படுத்திக்கணும்”, என்று தர்மதுரை மற்றும் ராஜதுரை காதில் சொன்னான் செந்தில்.
தர்மதுரையும் ராஜதுரையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். “இன்னும் என்னப்பா யோசனை? எத்தனை நாள் தான் கோபம், பகைன்னு வாழுறது. உங்க அப்பாவோட ஆசையும் அது தான் பா. சரின்னு சொல்லுப்பா. உங்க பதிலுக்காக தான் சகுந்தலா உங்க முகத்தை பாத்துட்டு இருக்குறா”, என்றாள் சண்முகம்மாள்.
சகுந்தலா என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் ராஜதுரையைத் தான் பார்த்தாள்.
“கதிருக்கு தேன்மொழியை கட்டி வைக்க எங்களுக்கு சம்மதம்”, என்றார் தர்மதுரை.
இப்போது அனைவரும் மதியழகனைப் பார்த்தார்கள். அவர் திரும்பி வேணியைப் பார்த்தார். வேணி அவர் பதிலுக்காக ஆவலாக காத்திருப்பது புரிந்தது.
“பழைய விசயங்கள்ல என் மேலயும் தப்பு இருக்கு. அதனால எல்லாரும் என்னை மன்னிச்சிருங்க. எங்க அம்மா மனசுல இப்படி ஆசை இருக்குன்னு தெரிஞ்சிருந்தா நான் முன்னாடியே மன்னிப்பு கேட்டுருப்பேன். எனக்கும் இந்த கல்யாணத்துல சம்மதம்”,என்றார் மதியழகன்.
“என்ன மச்சான், நீங்க போய் மன்னிப்பு கேட்டுகிட்டு?”,என்று ராஜதுரை சொன்னதும் “உங்க கிட்ட மன்னிப்பு கேக்குறதுல தப்பே இல்லை மாப்பிள்ளை”, என்றார் மதியழகன். பின் இருவரும் கட்டித் தழுவிக் கொண்டார்கள்.
அங்கே நடந்த ஒவ்வொரு விசயத்துக்கும் தேன்மொழி கதிரைத் தான் பார்த்தாள். அவனோ அவள் ஒருத்தி அங்கே இருக்கிறாள் என்ற எண்ணமே இல்லாமல் இருந்தான்.
இதில் அவன் கல்யாணம் வேண்டாம் என்று சொன்னதும் தேன்மொழிக்கு ரத்த அழுத்தம் அதிகரித்தது நிஜம். “இவன் கல்யாணம் வேண்டாம்னு சொல்லி நல்ல பேர் வாங்கிட்டான். ஆனா நான் இவனைத் தான் கட்டிக்குவேன்னு சொல்ல சொல்லி எங்க வீட்ல எல்லார் கிட்டயும் கெட்ட பேர் வாங்க வச்சிட்டானே”, என்று எண்ணி கொலை வெறி வந்தது.
[the_ad id=”6605″]
ஒன்று மட்டும் அவளுக்கு நன்றாக புரிந்தது. கதிர், தேன்மொழியின் குடும்பத்தையே பழி வாங்க அப்படி சொல்ல வில்லை. தேன்மொழியை அவனுடைய காலடியில் விழ வைக்க மட்டுமே இப்படி செய்கிறான் என்று வெட்ட வெளிச்சமாக புரிந்தது.
“கடைசில, நினைச்சதை சாதிச்சிட்டல்ல?
கல்யாணம் முடிஞ்சா உன் கால்ல விழுந்துருவேனா? கல்யாணத்துக்கு அப்புறம் இந்த தேன்மொழி யாருன்னு காட்டுறேன் டா உனக்கு?”, என்று மனதுக்குள் கருவிக் கொண்டாள்.
காதல் தீயை நீர் அணைக்குமா….