“கடைசியா யோசிச்சு சொல்லு, இரண்டு நாள் டைம் கூட எடுத்துக்கோ” அவளின் நிராகரிப்பை தாங்காதவனாய் மீண்டும் கேட்டான் விக்ரா.
“அதுக்கு அவசியமே இல்லை” இரண்டு நொடி கூட யோசியாதவளாய் முகத்திலடித்தாற்ப்போல் கூறி முறைக்க, அவன் விழிகளோடு மோதிக்கொண்டது இவள் விழிகள் படு வேகமாய்.
“அப்போ நான் வேண்டாமா?” விழிகளோடு அவன் உதடுகளும் கேட்டது.
“சொல்லு நான் வேணாமா?” மீண்டுமாய் கேட்டவனுக்கு இவள் பதிலே சொல்லாமலேயே இவன் மேலிருந்த பார்வையை விலக்கி, தரையை பார்த்தபடி இருக்க,
“ஏதாவது பேசு, ஆனால் ஒன்னே ஒன்னு, நம்பளோட எதிர்காலத்தையும் மனசுல வச்சுகிட்டு அப்புறமா பதில் சொல்லு” சிறிதும் அழுத்தம் குறையாது இவன் கேட்க
ஈகோ தான் தலைதூக்கியது அவளுள், நீ சொல்றதையெல்லாம் கேட்டு கேட்டுத்தான் இந்த நிலையில் இருக்கிறேன். இனியும் இவன் பேச்சை கேட்பதா? ம்ஹூம், ஏமாந்ததெல்லாமே போதும்! என நினைத்து அமைதியாய் நிற்க அவளின் அமைதியான அந்த தோரணை, அவள் நிலையை உரைத்தது.
இருந்தும் இருவருக்குமான உறவை உடைத்தெரிய விரும்பாதவனாய் “உனக்கும் விஜய்க்கும் இடையில் நடந்ததை முழுசா தெரிஞ்சுக்காமல் நான் தப்பு பண்ணினேன் தான். ஆனால் அதை காரணமா வச்சு உனக்கும் எனக்கும் இடையில் நடந்ததை முழுசா தெரிஞ்சுகிட்டே, நீ தப்பு பண்ற.. இன்னைக்கு சரிபண்ணலைன்னா.. இனி என்னைக்குமே சரிபண்ண முடியாது, யோசி, யோசிச்சு சொல்லு” இதுவரை இல்லாத விக்ராவின் ஆழ்ந்த, குரல் ஒலித்தது அவள் காதினுள்.
வேண்டாம் என மறுத்தும் ‘யோசி யோசி’ என மூளைசலவை செய்பவனின் மேல் ஆத்திரமே மிஞ்ச, பொறுமையிழந்தாள் லாவன்யா.
“நீங்க யாரு.. உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம். நீங்க வந்து சரி பண்ற அளவுக்கு நமக்குள்ள ஒன்னுமே நடக்கலை. இதில் நீங்க என்னத்தை சரி பண்ணனும் பண்ணனும்னு ரீப்பீட் மோட்ல சொல்லிட்டே இருக்கீங்க” “இன்னும் நீங்க இங்கே இருக்குறது வேஸ்ட்.. நாச்சியத்தையோட மகனா இருக்குறதால தான் வீட்டுக்குள்ள உக்கார வச்சு பேசிட்டு இருக்கேன்.. இல்லைன்னா நீங்க பார்த்த வேலைக்கு போலீஸ் ஸ்டேஷன்ல உக்கார வச்சுருப்பேன், இரண்டு நாளில்லை, இரண்டு வருஷம், டைம் கொடுத்தாலும் இந்த லாவன்யாவுக்கு விக்ரான்னு ஒருத்தன் வேண்டவே வேண்டாம். புரிஞ்சதா, இல்லை இன்னும் புரியவைக்கனுமா” என கேட்டவள், அவனின் அடிவாங்கிய முகம் கண்டு, வாசலின் பக்கமாய் இவள் பார்வை நகர்ந்து ‘புரிஞ்சிடுச்சுல்ல, அப்போ நீங்க கிளம்பலாம்’ என பார்வையாலேயே சொல்ல
முகம் கறுத்து போய், இறுக்கமாய் வலியோடு மூடிக்கொண்டது இவன் விழிகள். இதற்கு மேல் இவளால் தன்னை இத்தனை தூரம் அவமானபடுத்தமுடியாது என மனதினோரம் ஓடி மறைய, வலியோடு திறந்த விழிகள் ஓரிரு நொடிகள் அழுத்தமாய் அவள் விழியோடு உறவாடியபடியே, பின்புறமாகவே எட்டெடுத்து வைத்து, பட்டென திரும்பி வேகமாய் அங்கிருந்து வேகமாய் சென்றுவிட்டான் அதிவிரைவாய்.
இவன் சென்றதும் தான் தாமதம், உடல் நிற்கவே முடியாது என்பதை போல சரிந்து சோபாவின் முடுக்கில் அடங்க, கண்கள் தாமகவே மூடிகொள்ள, விழியோரம் வழிந்தோடியது கண்ணீர், ஏன் எதற்கு என தெரியாமல்.
தன் வீடுவந்து சேர்ந்தவனோ அறைக்குள் முடங்கி, ஆங்காரமாய் கத்தி தீர்த்தான்.
கையில் கிடைத்த பொருளையெல்லாம் தரையில் அடித்து உடைத்தான்.
கோபம் கோபம் கோபம் மட்டுமே இறுதியாய் உறைந்து நின்றது. அவளுக்கு நகமும் சதையுமாய் இருந்த தன்னை நண்பனாய் ஏற்றவள், கணவனாய் ஏற்க மறுக்கிறாள். ஏன்? ஏன்? எனும் கேள்விகள் விஸ்வரூபம் எடுக்க கோபமும் விஸ்வரூபம் எடுத்தது.
அவள் வேண்டாம் என சொல்லுமளவிற்கு அப்படி எதில் குறைந்து போனேன் நான் என மனதினுள் கேட்டவனுக்கு, எதிரில் இருந்த கண்ணாடியில் தனது முழு உருவமும் தெரிய பொங்கி வழிந்த முன்னுச்சி முடியில் இருந்து சிறிதும் அழுக்கு படியா பாதம் வரை பயணித்த பார்வை, இளக்கறமாய் மாறி
“அழகா இருந்து என்ன பிரயோஜனம்? இவ்வளவு சம்பாத்யம் இருந்து என்ன பிரயோஜனம்? பிடிக்கலைல, உன்னை அவளுக்கு பிடிக்கலைல!” ஓங்கி குத்த நொறுங்கியது கண்ணாடி மட்டுமல்ல அவனது கையும் தான்.
ஆத்திரத்தில் எடுத்த முடிவில் காயம் கண்டது அவன் மனம் மட்டுமல்ல, அவன் கையும் தான்.
விரல்களில் ஆங்காங்கே கண்ணாடி துண்டுகள் இறங்கி, இரத்தத்தை வெளியேற்றி வைக்க, அதை குரூரமாய் பார்த்தபடி படர்ந்தது ஒரு விரக்தி புன்னகை அவன் இதழ்களில்.
கைகளின் வலியில் மனதின் வலி குறைந்ததோ! உடல் அப்படியே கட்டிலில் சாய விட்டத்தை வெறித்தது அவன் விழிகள்,
“லாவாகிட்ட எந்த இடத்தில் தோற்று போனோம்?” அவளை அவன் மறக்க நினைக்க, அவன் மனமோ விடாமல் அவளையே நினைத்து கொண்டிருந்தது.
பெரிய பெரிய கம்பெனிகளுக்கெல்லாம் நிதி ஆலோசகராய் இருந்து, திவாலாகும் நிலையில் இருந்து கூட அந்த கம்பெனிகளை மீட்டு கொண்டுவந்திருக்கிறான்.
அத்தனை கூர்புத்தியுடையவனுக்கு அந்த புத்தி லாவாவின் விசயத்தில் வேலைசெய்யவில்லை என தான் கூற வேண்டும். மனமும் புத்தியும் பலமாய் சண்டையிட்டு கொண்டது.
‘பொறுமை விக்ரா.. இது அவளா உனக்கு கொடுத்த அவமானம் இல்லை, அசிங்கம் இல்லை, நீயா தேடிக்கிட்டது.
அப்போ எல்லாத்துக்கும் காரணம் நானா?
ஆமா நீ தான்.. அவளை உக்கார வச்சு பேசி இருந்தா இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது தானே
பேசி புரியவைக்க தான் பிளான் பண்ணேன்.. ஆனால் ஆனால்..
ஆனால் என்ன ஆனால்? பின்ன எதுக்கு தாலி கட்டின..
ஏதோ புத்தியில்லாமல் பண்ணிட்டேன்.
ஓ.. புத்தியில்லாமலேயே தங்கத்துல தாலி ரெடி பண்ற அளவுக்கு தயாரா இருந்தியோ?
அது அவளை மிரட்டடுறதுக்காக.. ரெடி பண்ணின தாலி மிரட்டறதுக்கு மஞ்சள் கட்டின கயிறே போதுமே தங்கத்துல தாலி எதுக்கு?
‘எதோ, புத்தியில்லாமல் பண்ணிட்டேன், விடு, விட்டு தொலை’ உனக்கு அவளே தேவலை.. இந்த கேள்வி கேட்குற!
ம், அப்படிவா வழிக்கு, புத்தியில்லாமல் பண்ணிட்டேன் தானே சொன்ன! இப்போவும் அந்த புத்தியில்லைன்னே நினைச்சுக்கோ! அவளுக்கு உன்னோட அக்கரை புரியலை, அன்பு புரியலை, பிறகும் ஏன் அவளை பிடிச்சு வைக்கிற! போறேன் போறேன்னு நிக்கிறவளை பிடிச்சு வச்சு என்னாக போகுது? விட்டுடு.
அதுக்கு பிறகு அவளோட ப்யூட்சர்னு ஒன்னு இருக்கே..
அதை அவளே பார்த்துப்பா.. ஒரு வேளை அவளால் பார்க்க முடியாத பட்சத்துல உன்கிட்ட தான் வருவா.. ஏன்னா.. அவளோட அம்மாவை விட உன்னை தான் அதிகம் தோடுவா! நாடுவா? வேற எங்க போக போறா? வருவா அதுவரை காத்திருக்க தான் வேணும்.
காத்திருந்து எனக்கு பழக்கமில்லை. வரவழைப்பேன்’ சீறிக்கொண்டு வெளிவந்தான் பழைய விக்ரபாண்டி.
ஓஹோ.. ஒருவேளை வாய்ப்பே வரலைன்னா?
நானே உருவாக்குவேன்.. ஆமாம் உருவாக்குவேன்!
‘ம்ஹூம், நீ அவகிட்ட செருப்படி வாங்காமல் திருந்த மாட்ட, அவளை விடு, நீ பண்ணின வேலை, சமரசுக்கு தெரிஞ்சா என்னாவன்னு நினைச்சு பார்த்தியா? மவனே சூஸ் புழிஞ்சிடுவாறு!’
‘சூஸா.. சுடுகாட்டுல உயிரோட எரிச்சுடுவார்டா வெண்ண’
‘ம்.. தெரிதுல்ல… அப்போ மூடிட்டு அமைதி இரு’
‘அமைதியா இருந்தா லாவா எப்படி எனக்கு கிடைப்பா’
‘ஏலேய், திரும்பவும் முதல்ல இருந்தா..?’ அதிர்ச்சியுடன் சோர்வடைந்தது அவன் மனம், ‘அவகிட்ட செருப்படியும், உங்கப்பன்கிட்ட இருந்து சுடுகாடும் கன்பார்ம்டா! அப்புறம், உன்கிட்ட பேசி பேசி நான் ரொம்ப டயர்ட் ஆகிட்டேன். உனக்கு பத்து நாள் லீவு, எனக்கு இருபது நாள் லீவு.. லீவு முடிஞ்ச பிறகும் நீ உயிரோட இருந்தா மீட்பண்ணலாம், வரேண்டா விக்ரவாண்டி’
‘இவனுக்கு மனசாட்சியா இருக்குறதுக்கு மானமுள்ளவனுக்கு மயிரா இருந்துட்டு போயிடலாம். லாவா லாவான்னு மனசாட்சிய சாவடிக்காண்டா.. வெக்கங்கெட்ட பய.. த்தூ’ விக்ராவிடமிருந்து பிய்த்துபிடுங்கிகொண்டு ஓடிவிட்டது அவன் மனசாட்சி. ———– ஆரவாரத்துடன் ஜே ஜே வென குழுமிருந்தது அந்த பண்ணை வீட்டின் மொட்டை மாடி.
மற்றவர்களின் கண்ணை உறுத்ததாதிருக்க மிதமான வெளிச்சத்தில் கொண்டாட்டத்திற்கு தயாராய் இருந்தது அந்த சூழல்.
விஜய் தான் “ண்ணோவ்.. பசங்க பார்ட்டி கேக்கானுங்கணோவ் எப்படியாவது ஊருக்கு வெளில்ல இருக்குற பண்ணை வீட்டை அரேன்ஜ் பண்ணிடு.. ஒரு நாளைக்கு, ஒரே ஒரு நாளைக்கு. ஊருக்குள்ளன்னா பிரச்சனை ஆகிடும். ப்ளீஸ்ண்ணாவ்.. கொஞ்சம் உன் தம்பிக்காக பார்த்து பண்ணு” வீராவிடம் கெஞ்சி கேட்டு பண்ணை வீட்டை வாங்கி இருந்தான் பார்ட்டிக்காக.
கூடியிருந்த அத்தனை இளவட்டங்களும் ஆரவாரமாய் இருக்க, அதில் தன் சகோதரர்களை தேடிக்கொண்டிருந்தது விக்ராவின் விழிகள்.
‘வீட்டில் லாவாவின் நினைப்பில் உருகிகரைந்து கொண்டிருந்தவனுக்கு போன் அடித்து, பண்ணை வீட்டிற்கு வா என வீரா அழைக்க, மறுத்தவனை போனிலேயே சமாதானபடுத்தி. வரவழைத்து விட்டனர் சங்கரும் செல்வமும். நம்பளை வர சொல்லிட்டு இவனுக எங்க போய் தொலைஞ்சானுங்க’ என பாண்டிகளை தேடிக்கொண்டிருந்தான் விக்ரா.
அந்நேரம் படபடவென பாட்டில் பெட்டிகள் பிரிக்கபட, அதை பறிக்க மற்றவர்கள் வரும் முன், “ஏய்.. பொறுங்கவே.. என்ன அவசரம்” என வரிசை கட்டி வந்து நின்றனர் லகுட பாண்டிகள், அவர்களை பார்த்து அத்தனை பேரும் புருவம் சுருக்கிட லகுடபாண்டிகள் மூவரும் நான் நான்.. என போட்டி போட்டுக்கொண்டு பெட்டிகளை பிரித்து கைக்கொன்றாய் இரண்டிரண்டு பாட்டிகளோடு, முகம் முழுதும் மகிழ்ச்சி கரைபுரண்டோட, விக்ராவிற்கும் சேர்த்து எடுத்து கொண்டு அவனை நோக்கி பாய்ந்தோடி வந்தனர்.
“ம்க்கும், ஏண்டா பாண்டிகளா இதுக்கு தான் இத்தன அலம்பலா.. நான் கூட ஏதோ பண்ண போறீயளோன்னு நினச்சுபுட்டேன்டா” கூட்டத்தில் ஒருவன் கத்த
“ஏன், என்ன பண்ணனும்கிற” செல்லம் வழக்கம் போல சிலுவிழுக்க “அதான் வரிசை கட்டி நிக்கிறீகளே, அப்படியே ஒரு பேஷன் ஷோவ போடுறது” என ஏற்றிவிட, ஆர்ப்பரித்தது அந்த இடம் “பேஷன் ஷோ தானே நடத்திடுவோம்” எதற்கும் சளைக்காதவனாய் முதலில் துவங்கி வைத்தான் செல்லம்.
பாட்டிலை கீழே வைத்துவிட்டு கட்டியிருந்த கைலியை கழற்றி நெஞ்சிற்கு மேல் தூக்கி கட்டிகொண்டு, கீழே வைத்த பாட்டில்களை கைக்கு ஒன்றாக எடுத்து கொண்டு செல்லம் நகர, அவன் எண்ணம் புரிந்து கைலியை அவிழ்த்து மாலை போல் கழுத்தில் மாட்டியபடி சங்கரும், கைலியை அவிழ்த்து கிராஸாக வலது கைக்கும் இடது இடைக்குமாய் தவழவிட்டபடி வீராவும் கைக்கு இரண்டிரண்டு பாட்டில்களோடு செல்லத்தின் பின்னே வரிசை கட்டி நிற்க,
“விதவிதமாய் வித்யாசமாய்” பியர்பாட்டிகளோடு செல்லம் முதலில் கட்சிதமாய் பெண்நடையிட்டுவந்து நடுவில் நிற்க “அழகழகாய் அற்புதமாய்..” ரம் பாட்டில்களோடு நடந்து வந்த சங்கர் அவனுக்கு இடப்புறமும் “நிஜநிஜமாய் நிச்சயமாய்” ஸ்காட்ச் பாட்டிகளோடு நடந்து வந்த வீரா அவனுக்கு வலதுபுறமும் நிற்க “பீர் பாட்டில்” “ரம்பாட்டில்” “ஸ்காட்ச் பாட்டில்” என மூவரும் தங்கள் கையில் இருந்த பாட்டில்களுக்கு விளம்பர மாடலாய் மாறி, இடுப்பை வளைத்து நெளித்து “சரக்கு பாட்டில்களின் தனித்துவமான புதிய கலெக்ஷன்கள், ஆண்களின் அனைத்து பரிமாணங்களுக்கும்” “பீர் பாட்டில்” “ரம்பாட்டில்” “ஸ்காட்ச் பாட்டில்” ரகசியமாய் பெண் குரலில் சொல்லி முடிக்க,
அங்கிருந்த மற்றவர்கள் கைகட்டி விசிலடித்து அவர்களுக்குண்டான அலங்கார வார்த்தைகளால் சிரிப்பிலும் கலகலப்பிலும் அவ்விடத்தை ரணகளமாக்கினர்.
நடுராத்திரிக்கும் மேலாகிபோய் இருந்தது. எப்போதும் போல் மூக்குமுட்ட குடித்திருந்தாலும் நிதானம் தவறாமல் நடக்க துவங்குனர் வீட்டிற்கு.
“இன்னைக்கு பார்ட்டி நல்லாவே இல்லைலே”
“ஏம்லே.. அதான் பேஷன்ஷோவே நடத்திட்டம்ல.. பெறவென்ன”
“இந்த விக்ராபய நம்மகூட ஆட்டம்போடவே இல்லைல”
“அட ஆமாம்.. இவனை கவனிக்கவே இல்லைலே”.. “ஏலே விக்ரா ஏம்லே நீ இம்பூட்டு அமைதி கிடக்க, ஏதும் சம்பவம் பண்ணிட்டியா என்ன, கையில்ல வேற அடிபட்டிருக்கு” அப்போது தான் வீராவின் கவனம் விக்ராவின் மேல் விழ
“அதெல்லாம் ஒன்னுமில்ல” இவன் சரிகட்ட நினைக்க
“இவன் சரியில்லடா.. ஏதோ பண்ணிருக்கான், காலையில் மண்டபத்தில் பார்த்தது பிறவு எங்க போனான்னே தெரில்ல.. இப்போ நைட்டுக்கு தான் வந்திருக்கான், வீரா வுடாத இவன கேளு” செல்லம் தூண்டிவிட
“ஆமா வீரா வுடாத கேளு.. பாட்டிலை கையில் எடுத்தா அலம்பல் பண்ணாம விடமாட்டான்.
இன்னைக்கு தான் இவன் இம்பூட்டு அமைதியா இருக்கான்” சங்கரும் சேர
“பெம்பளபுள்ள ஏதையாச்சும் கைபுடிச்சு இழுத்திட்டியா?” என கேட்டதற்கு விக்ரா இல்லையென தலையசைக்க
“அப்போ கட்டிபுடிச்சிட்டியா” திகைத்து கேட்டதற்கு, முறைப்பை பதிலாய் கொடுக்க
தூரத்தில் கேட்ட புல்லட்டின் சத்தம் கேட்டு “லேய்.. சமரசுடா.. எந்திரிங்கடா, ரூமுக்குள்ளறா போய்டலாம். மாட்டினோம் சொத்தோம்லே” என செல்லம் பதறி எழ, ஏனையவர்களும் பதறி எழ, அப்போது தான் விக்ராவின் கையில் இருந்த பாட்டிலை பார்த்தபடி
“ஏலே, விக்ரா இத ஏம்லே வீடு வரைக்கும் எடுத்தாந்த..” விக்ரா கையில் கால்வாசி மதுபானத்தோடு இருந்த பாட்டிலை பார்த்து வீரா பதறி கேட்க
“வயித்துல இடமில்லையாக்கும். புட்டியும் கையுமா சமரசு பார்க்கனும், வீட்டுலயே நமக்கெல்லாம் இடமிருக்காதுடா” சங்கர் பீதியோடு பார்க்க
“ஆளுக்கொரு வாய் குடிச்சிக்கலாம்டா, நிறையலாம் இல்லை” விக்ரா சமாளிக்க
“ஆளுக்கொரு வாய் குடிக்க அதென்ன அருகம்புல் சூஸாடா, ஏற்கனவே குடிச்சது தெரியகூடாதுன்னு கொய்யாக்கா இலையெல்லாம் மேய்ஞ்சிட்டு வந்தோம். இப்போ இதை குடிச்சிட்டு மறுபடியும் மேய முடியாது, போ” சங்கர் சிலுப்பும் போதே வீட்டு வாசலில்
“இந்நேரம் கூடத்துல என்ன பண்ணிட்டு இருக்கீகலே” கணீரென்ற சமரசுவின் குரலில் அலேக்காய் அபவுட்டர்ன் போட்டு பாட்டிலோடு திரும்பி நின்றான் விக்ரா.
அவன் முகம் பார்த்து ஸ்கூபி நின்றிருக்க “ஈ..” என இளித்தவன், ஸ்கூபியின் வாயை பிடித்து பாட்டிலை சரிக்க, அந்த கால்வாசி மதுபானமும் கடகடவென உள்ளே இறங்கியது.
அடுத்து பாட்டிலை மறைக்கனுமே என திரும்பியவனின் பார்வையில் அழுக்கு துணி கூடை பட, போட்டுவிட்டான் அதனுள்.
“அப்பாடா தடத்தை எல்லாம் அழிச்சாச்சு.. தப்பிச்சோம்டா” என விக்ரா நினைக்கையில், சமரசு அவனை முறைத்தபடி தாண்டி செல்ல
“என்னடா, தாடி எதுவும் பேசாமல் போது” விக்ரா வீராவின் காதில் கிசுகிசுக்க
“வாண்டை வாண்டையா திட்டிட்டு போறாரூவே..”
“அப்படியா, எனக்கொன்னும் கேட்கலையே..”
“உனக்கொரு நூதன நோய் இருக்குவே, யாரும் எவரும் கிழி கிழின்னு கிழிச்சா மீயூட்டல விழுந்துரும்வே உன் காது” எனவும், விக்ரா முறைக்க
“நீ முறைச்சாலும் அது தாவே உண்மை, போ.. போ.. தூங்குற வழிய பாரு. உன் திருவாயை தொறந்து போன சமரசவுவ திரும்ப கூப்ட்ராதவே. நானே ஏதோ சொல்லி சமாதானபடுத்தி அனுபிருக்கேன்” வீரா தன் பாட்டுக்கு புலம்ப, விக்ராவோ பதில் சொல்லாமல் வெறித்த வண்ணம் இருக்க, அவன் பார்வையை தொடர்ந்த வீராவின் புருவமோ சுருங்கியது.
ஸ்கூபியின் பார்வை கொடூரமாய் மினியின் மேல் இருக்க, மினியை மறைத்தபடி மினியின் ஆள் ஷினி சீறும் சிங்கமாய் நின்றிருந்தது.
அதையெல்லாம் தூசியாய் தட்டிவிட்டுகொண்டு நான்கு கால்களையும் நாற்திசைக்கு அகட்டி போட்டு நடந்து, ஷினியை ஒரே எத்தில் தூக்கி எறிய, ‘ம்மியாவ்..’ என கர்ண கொடூரமாய் கத்தி கொண்டு சுவற்றில் அடித்து சொத் என கீழே விழுந்து, விட்டால் போதுமென அலறி அடித்து கொண்டு ஓடிவிட,
‘அடப்பாவி உன்னைய நம்பி மூனு புள்ளைய பெத்துபோட்டதுக்கு விட்டுட்டா ஓடுற..” ஷினியை திட்டிய மினி, ஸ்கூபியை பார்த்தது “இந்த ஸ்கூபி இருக்குற சைஸ் என்ன, நான் இருக்குற சைஸ் என்ன!’ கண்கள் கலங்கி நின்ற மினியை வில்லனாய் நெருங்கியது ஸ்கூபி.
அடுத்து என்ன நடக்கப்போகிறது என உணர்ந்த வீரா “லேய் புட்ரா.. அந்த கிறுக்கு ஸ்கூபிய..” கத்த, விக்ராவோ ‘பே’ வென பார்த்து நிற்க, அவன் பிடரியிலேயே மடார் என ஒன்று வைத்து
“புடிடான்ன வெறிக்க பார்த்துட்டு நிக்கிற, நீ தான் இப்படி இருக்கன்னு பார்த்தா நீ வளர்க்குற நாயும் உன்னை மாதிரியே இருக்கு” வீரா கிழித்து தள்ள,
வீரா கொடுத்த அடியில் நிதானத்திற்கு வந்தவன் மினியின் மீது பாயவிருந்த ஸ்கூபியின் மீது ஓரே பாய்ச்சலாய் பாய்ந்து அழுக்கி பிடித்தான் விக்ரா.
அவ்வளவு தான் அடுத்த நொடி ‘யம்மாடி தப்பிச்சேன்டா இந்த நாரப்பயகிட்ட இருந்து, சிறுத்தையாய் சீறிபாயந்து ஓடி தன்னிருப்பிடம் நோக்கி ஓடி மறைந்தது மினி.
“நாய் வளர்க்குறான் நாயி..” விக்ராவிற்கு ஒரு எத்து “எத்த தண்டி நாய் நீ.. இஸ்காண்டி பூனை மேல் பாயுற” என ஸ்கூபிக்கும் ஒரு எத்து என பாரபட்சமின்றி வாரிக்கொடுத்தான் வீரா.
“ஏய் அவன் பண்ணதுக்கு அவனை மிதிடா.. என்னை எதுக்குடா மிதிக்குற” அத்தனை நேரமாய் அமைதியாய் இருந்த விக்ரா சீற
“நீ தான அவனை வளர்க்குற, எல்லாம் சோறு போட்டு வளர்த்தா நீ் மட்டும் சோமபானம் குடுத்துல வளர்க்குற” விக்ரா மீது எகிறியவன் ஸ்கூபியின் புறம் திரும்பி
“குடிச்ச கால் பாட்டிலுக்கே இந்த அக்க போரு, அதுவும் குடிச்சு பத்துநிமிஷம் கூட ஆகலை. இதுல புல்லா குடிச்சிருந்தியோ.. பூனை மட்டுமா.. பொம்பள புலியை கூட விட்டு வைக்கமாட்டல்ல, அத்தனை பேரையும் புள்ளதாச்சி ஆக்கிவிட்டுருப்ப, அப்படிதான” வீரா கடுப்புடன் கேட்க
‘ம்..’ என முனகிகொண்டு ஸ்கூபி தன் முகத்தை திருப்பி கொண்டது.
‘கிடைத்த சான்ஸ் மிஸ் ஆன கடுப்பில்’ ஸ்கூபி அப்படியே படுத்துவிட, அதன் மேல விக்ரா படுத்து இருந்தான். பம்புசெட் போல் குறட்டை வேறு வர
“அதுக்குள்ளயுமா தூங்கிட்டான், லேய்.. விக்ரா.. லேய்” வீரா எத்தனை எழுப்பியும் அவனிடம் அசைவில்லாது போக, சங்கரையும், செல்லத்தையும் துணைக்கு அழைக்க பார்க்க, அவர்களோ கிடைத்த இடத்தில் கண்டமேனிக்கு கிடந்து உறங்கியிருந்தனர்.
‘நான் மட்டும் தனியா என்ன பண்றது’ என வீராவும் ஒரு மூலையில் ஒதுங்கி உறங்கி போனான்.