அத்தியாயம் 4.2:
“சென்னையில் மத்திய பகுதியில் உள்ள ஒரு வீட்டு என்பதைவிடக் குட்டி பங்களாவில் நாற்பது வயது தொட்டிருக்கும் பெண்மணி( பெண் என்பதைவிடப் பிசாசு. சாதாரணப் பிசாசு அல்ல பணபிசாசு எனக்கூறலாம்) குடித்துவிட்டு ஒரு Photo முன் நின்று திட்டிக்கொண்டு இருந்தால்”.
அவளின் முகத்தில் அத்தனை கொலைவெறி இருந்தது. கண்களில் குரூரம் நிரம்பி வழிந்தது.
அவளின் கூட இருந்த ஆண் அவளின் தம்பி. அதுவும் குடிகாரன், பொருக்கி.
“இவன் இந்தப் பூமியில் உயிருடன் இருப்பதே சுத்த வேஸ்ட். பூமிக்கு தேவையில்லாத பாரம்”.
“டேய் தம்பி, இளை கண்டுபிடிச்சு முதலில் அந்தப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கனும். அதுக்குப் பிறகு அவளை அணுவணுவா கொள்ளனும். மூனு வருஷமா நம்ம கண்ணுல தண்ணிகாட்டிக்கிட்டு இருக்கா. இவள சும்மா விடக்கூடாது” என்றவளிடம்,
“அதுக்கு முன்ன நான் அவள அணுவணுவா அனுபவிக்கனும் அப்புறமா அவளைக் கொள்ளும் அக்கா. அப்பவே சும்மா கும்முனு இருப்பா. இப்ப எப்படி இருக்காலோ தெரியல அக்கா” எனக் கொஞ்சம் கூட அறிவு இல்லாமல் வர்ணித்துக்கொண்டு இருந்தான் அந்தப் பிசாசுவின் தம்பி( காட்டேரி, மொத்தத்தில் இதுங்க மனித இனம் இல்லை).
“சரிக்கா” நீ யாருக்காக இந்தச் சொத்து அவகிட்ட இருந்து பரிக்கனும்னு நினைக்கிற? “ நீ பெத்த பையன் உன் சங்காத்தமே வேண்டாம்னு அவன் பொண்டாட்டுக்கூட வெளிநாடு போய் செட்டில் ஆகிட்டான்”.
“அவனுக்கு எதுக்குடா இந்தச் சொத்து?” இந்த அம்மா வேண்டாம் அவனுக்கு.. பெண்டாட்டி போதும். தங்கச்சி போதும்னு, அவளுக்காக என்கிட்ட சண்டை போட்டுகிட்டு வெளிநாடு போனவன்தான. இனி அவன பத்தி பேசாதடா.
“அக்கா நம்ப அவளுக்குப் பண்ணுனது எல்லாம் அவனுக்குத் தெரிந்தது நம்மள கொள்ளும் விடமாட்டான். அவனே நம்மள Policeல பிடிச்சிக்கொடுத்திடுவான்”.
“அப்படிமட்டும் அவனுக்கு ஒரு நினைப்பு வந்தாலே பெத்த பிள்ளையினுக்கூடப் பாக்கமாட்டேன். அவன் அப்பன் போன இடத்துக்கே அவனையும் அனுப்பிவடுவேன்” அவனை.
“ஏன்கா” அவ பேருள வெறும் பத்துக்கோடி தான் இருக்கு? உன் பேருள அதைவிடப் பல மடங்கு சொத்து இருக்கு. தேவை இல்லாம எதுக்கு அவள தேடரக்கா? பேசாம விட வேண்டியது தான?எனக்கூறியவனிடம்,
“போடா முட்டாள்”… பத்து வருஷத்துக்கு முன்னால் அது. இப்ப அதோட மதிப்பு மூனுமடங்கு அதிகமாகி இருக்கும்.
“நம்பகிட்ட இருக்கச் சொத்து மதிப்பு மூனுமடங்கு குறைந்து போச்சிடா”. “அதுவும் இருந்தா சாகர வரை இந்த மாதிரி சந்தோசமா இருக்கலாம். அதுனால தான்டா தேடறேன் அவள “ எனக்கூறி தனது அறைக்குக் கையில் மதுவுடன் சென்றுவிட்டால்.
அவளின் பேச்சைக்கேட்டவன், “எதுக்கும் இந்த அக்காகிட்ட ஜாக்கிரதையா இருக்கனும் சாமி. பெத்த பையனையே கொண்ணுடுவேணு சொல்றவளுக்குத் தம்பி நாம எம்மாத்திரம்” என நினைத்துக்கொண்டு அவன் அறைக்குச் சென்றுவிட்டான்.
************************************************************×***********************
இரண்டு மாதங்கள் ஓடிவிட்டது இந்த நிகழ்வுகள் நிகழ்ந்து.
“அம்மு மிகவும் பரபரப்பாக இருந்தால் காரணம் , அவள் (B.Come சேர்வதற்கு முன்பாகவே teacher training முடித்து இருந்தால். அப்பெழுது ஒருவரிடம் தான் இந்த Training இருந்தது) TRB Exam ஏற்கனவே எழுதியிருந்தால் அதில் அதிக மார்க் எடுக்கவில்லை. அதனால் M. Com படிக்க நல்ல தனியார் Collegeல் இடம் கிடைக்கவில்லை”.
முதலில் Examல் போதிய mark இல்லாததால் மிகவும் சோர்ந்து போய்விட்டால் அம்மு.
“கண்ணன் மற்றும் உமாவும், விடு இந்த Exam இல்லைனா அடுத்த Examல் பார்த்துக்கலாம் எனக்கூறி ஆறுதல்படுத்தி இருந்தனர்”.
அதில் சிறிது ஆசுவாசம் அடைந்து இருந்தால்.
இரண்டாவதாகத் தற்போது எழுதிய Exam result இன்று வர இருப்பதால் தான் அத்தனை பதட்டமாக இருக்கிறால்.
“அந்தப் பதட்டத்தை அதிகரிக்க Result Page open ஆக late ஆனது”. சுமார் கால் மணி நேரத்திற்குப் பிறகு Openஆனது. “அம்மு எடுத்த Markக்கு நல்ல collegeல் M. Phil படிப்பதற்காக Sheet கிடைக்கும் என்பதால் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தால்”.
“அடுத்தது கண்ணனின் Semester exam நடைபெற்றது. அதைத் தொடர்ந்து குட்டியின் முழுஆண்டுத்தேர்வும் நடைபெற்றது. அதனால் டியூசன் குழந்தைகளுக்குப் பாடம் எடுப்பதால் நேரம் போனதே தெரியவில்லை”.
அதன் இடையே “பூக்கள் மரிக்கும் வேலையும் மற்றும் பண்ணையார் வீட்டுத் தென்னந்தோப்பில் தேங்காய் பறிக்கும் வேலை நடந்ததால் இவளுக்கு அங்கு வேலை இருந்தது”.
Online job செய்து கொண்டு இருந்ததால் அந்த வேலையும் உமாவை இழுத்துக்கொண்டது.
மொத்தத்தில் இரண்டு மாதங்கள் கழித்துத் தான் அனைவரும் சற்று ஆசுவாசம் அடைந்தனர்.
இன்று அம்மு எழுதிய மற்றொரு தேர்வின் முடிவுகள் வெளியிடஉள்ளன அதனால் வந்த டென்ஷன் தான் இவை.
“இந்த இடைப்பட்ட இரண்டு மாதங்களில் வெற்றி உமாவை சைட் அடித்துக்கொண்டே அவன் அத்தனை தொழில்களையும் பார்த்துக்கொண்டான்”.
“அருணே அம்மு செல்லும் அனைத்து இடங்களிலும் தவறாமல் ஆஜர் ஆகி விடுவான்”. அது அவளுக்குத்தெரியாது. ஆனால் வெற்றியின் கண்ணில் சிக்கிவிட்டான்.
அண்ணா, அம்முவை முதல் முதலா காங்கேயத்துல தான் பார்த்தேன். பார்த்தவுடன் அவளை எனக்குப் பிடித்துவிட்டது. “அவள் Final Sem எழுதி கொண்டு இருப்பதால், என் காதலை பற்றி அவளிடம் கூறவில்லை அண்ணா”. இனி தான் அவளிடம் கூற வேண்டும் என ஒன்று விடாமல் சொல்லி விட்டான்.
“அருண், நீ நேராபோய் அவகிட்ட சொன்னா கண்டிப்பா ஒத்துக்கமாட்டா”.
அதனால “பாட்டி, அப்பா மற்றும் அம்மா, சித்தி அனைவரிடமும் கூறி உன் கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்வது என் பொறுப்பு” இனி நீ கவலைபடாமல் நிம்மதியான இரு எனக்கூறி காங்கேயம் சென்றுவிட்டான் வெற்றி.
அங்குச் சென்றவன் நேரடியாக “விஷ்ணுவிடம், அப்புறம் டா எப்படிப் போகும் உன் லவ்? எனக் கேட்டவன் கேள்வியில் குடித்துக்கொண்டு இருந்த தண்ணீர் புறையேரிவிட்டது”.
நீ வேற வெற்றி இன்னும் அவகிட்ட சொல்ல முடியல. அவ காலையில நேரமா வேலைக்குப் போயிட்டு. டியூஷன் வேர எடுக்கராடா.
எப்பபாரு அவளைச் சுத்தி ஆட்கள் இருந்து கொண்டேதான் இருக்காங்க. தனியா அவளைப் பார்க்க முடியாம நானே நொந்து போய் இருக்கிறேன்டா.
நீ வேற கடுப்ப கிளப்பாதடா.
“ஆமா மல்லி பத்திய டீடையல் எடுக்கவே உனக்கு ஒரு நாள் முழுசா தேவைபட்டது (மல்லி பற்றிய தகவலை முழுதாகக் குட்டி சொல்லவிலை. அடுத்த நாள் கந்தனிடம் சுற்றி வளைத்து பேசி கண்டுபிடித்து விட்டான். வேலைவிசயமாகப் பேசுவது போல் பேசி அவரிடம் வாங்கிவிட்டார்) அதனால இந்த விசயத்தைப் பற்றி நானே அனைவரிடமும் சொல்லி கல்யாணத்தைச் சீக்கிரமா ஏற்பாடு பண்றேன்” எனக்கூறி வேலை பார்க்க சென்றான்.
இந்த இடைப்பட்ட காலத்தில் மீனு உமா மற்றும் மற்றவர்களிடம் நன்றாக ஒட்டிக்கொண்டால்.
அவள் கேட்டமாதிரி உமா மீன் குழம்பு செய்து கொடுத்தால். அதைச் சாப்பிட்ட “மீனு, உமா அக்கா நீங்க குட்டி சொன்ன மாதிரி அருமையா சமைத்துவிட்டீர்கள். இனிமேல் நான் இங்க சாப்பாட்டுக்கு அடிமை போங்க”. எனக்கூறினால்.
***********************×************************************************************
சென்னையில் உள்ள அந்தப் பெண் லட்சுமி(விளக்கமாத்துக்குப் பேர் பட்டுக்குஞ்சம்) தன் தம்பி ராமனும்( இந்த இராவணனுக்குப் பேரு ராமனாம். என்ன கொடுமை இது) டிடக்டிவ் மூலமாக அந்தப் படத்தில் இருந்த உருவத்தைத் தேடுவதர்காக அனுகினர்.
லட்சுமி, “இங்க பாருங்க சார் எவ்வளவு பணம் வேணாலும் கேட்டு வாங்கிக்குங்க”…
எனக்கு Photoல இருக்க ஆள் சீக்கரமா கண்டுபிடிச்சு ஆகனும் புரியுதா.
புரியுது மேடம்.. “அந்த Photoல இருக்கிற பெண்ணு கூடியசீக்கரமா உங்க முன்னாள் இருப்பாங்க அதுக்கு நான் பொறுப்பு”.
இந்தாங்க “அட்வாணஸ் ஒரு லட்சம்”. அவள கண்டு பிடித்து விட்டால் இன்னும் அதிகமா தருகிறேன். என ஆசை காட்டி சென்று விட்டார் லட்சுமி.
வீட்டிற்கு வந்த உடன் ராமன், “அக்கா இந்தப் பொட்டச்சிய கண்டுபிடிக்க இவ்வளவு பணம் செலவு செய்யனுமா”.
“பின்ன என்னடா பண்ண சொல்லற என்ன?” அவ நம்ம கண்ணுல படக்கூடாதுனு போய் மறஞ்சி இருக்கா.
“அடியே உமா!”, நீ மட்டும் என் கையில சிக்குன. உன்ன என்ன பண்ணபோறேனு பாரு. இது வரை அனுபவித்த கஷ்டத்தை விடப் பல மடங்கு உனக்குத் தண்டனை ஏங்கிட்ட இருக்குடி.
“இவர்கள் தேடிக்கொண்டு இருப்பது உமாவை தான்”. இவர் கையில் சிக்கினால் அன்று தான் அவளுக்கு இந்த உலகத்தில் இறுதிநாளாக இருக்கும் (இது உமாவிற்கும் தெரியும்).
“எவ்வளவு கஷ்டப்பட்டாலும் பரவாலைனா என அவர்களிடம் இருந்து தப்பிச் சென்று அல்லியூரில் வாழ்கிறால் உமா”.
“இவள் பட்ட கஷ்டங்களைப் பற்றித் தற்போது அறிந்தவர் சிலர். அதிலும் அவளுடன் இருப்பவர்கள் ( மல்லி, கந்தன்) மற்றவர்கள் உயிருடன் இல்லை”.
மற்ற யாருக்கும் தெரியாது. “அவ்வளவு ஏன்? அவள் உயிரான தம்பிகள் மற்றும் தங்கைக்குக் கூடத் தெரியாது”.
அதிலும் அவள் அன்பு அண்ண நித்தியனுக்கு இவள் என்றால் உயிர். அந்தப் பாசத்தால் தான் பெற்ற தாயைவிட்டு பிரிந்து வாழ்கிறான்.
உமா இப்பொழுது அவன் அம்மா வீட்டில் இல்லை எனத் தெரிந்தும் தான் நிம்மதியா இருக்கிறான்.
பெற்ற தாய், தந்தையை விட உமாவின் மேல் அதீத அன்பு கொண்டவன். அவன் மனைவியும் (ஆனந்தி) அப்படியே.
“உமா வீட்டைவிட்டு செல்ல துணையாக இருந்தது நித்தியன் மற்றும் அவன் மனைவி ஆனந்தியும் தான்”.
நித்தியனுக்குத் தெரியாமல் உமாவுக்கு நடக்கும் கொடுமைகளை அவனுக்குத் தெரிவித்தது ஆனந்திதான். அந்த விஷயம் லட்சுமிக்கு தெரியாது.
அதுமட்டும் தெரிந்தால் ஆனந்தியையும் கொல்லக்கூடத் தயங்க மாட்டார்கள் அக்கா, தம்பி இருவரும்.
அதனாலே நித்தியன் மனைவியைப் போட்டுக்கொண்டு வெளிநாடு சென்றுவிட்டான்.
“நித்தியனுக்கு இதுவரை உமா எங்க இருக்கிறாள் எனத்தெரியாது. காரணம் எந்தச் சூழ்நிலையிலும் தன் மூலமாகத் தங்கை இருப்பிடம் தன் தாய்க்குத் தெரிந்தவிடக்கூடாது என்பதால்”, அதைப் பற்றிக் கூறவேண்டாம் எனக் கூறிவிட்டான். ஆதலால் உமாவும் சொல்லவில்லை.
ஆனால் நித்திநனுக்கு ஒரு விஷயம் தெரியவில்லை. தன் தங்கை அனுபவிக்க இன்னும் ஏராளமான கஷ்டங்கள் இருக்கிறது என.
“அது தெரிந்தால் என்ன செய்வான்? அந்த அன்பு அண்ணன்”.
காலம் தான் அதற்குப் பதில் செல்லும்….