அத்தியாயம் 4.1:
“அல்லியூரில்” நாச்சியார் அடிக்கடி மணியைப் பார்த்துக்கொண்டே இருந்தார்.
அதைப் பார்த்த சாரதா, “என்ன அக்கா வாசலையே பார்த்துக்கிட்டு இருக்கீங்க?” இந்தப் புள்ளைங்களை இன்னும் காணோம் சாரதா. அது தான் பயமா இருக்கு.
“அக்கா புள்ளைங்க ஊருக்குள்ள பத்து நிமிஷத்தில் வந்துவிடுவாங்கலாம்” இப்ப தான் சின்னகுட்டி விஷ்ணு கிட்டகேட்டா என்றார், பாட்டி எத்தன தடவை உங்களுக்குச் சொல்லரது என்ன அப்படிக் கூப்பிடாதீங்கனு எனக்கூறி சண்டைக்கு வந்தவளிடம் சாரதா, “அடிப்போடி”, நான் அப்படிதான் கூப்பிடுவேன் என்றார் சாரதா.
அவளவிடு சாரதா, “பிள்ளைங்க பசியேடு வருவாங்க. முதலில் அவங்கள வீட்டுக்கு கூப்பிட்டுச் சாப்பிடவச்சி அனுப்பலாம்”. நாம நாளைக்குப் போய் அவங்கள வீட்டுல பாத்துக்களாம்.
“நீங்க சொல்வது சரிதான் அக்கா” புள்ளைங்க வீட்டுக்குபோய் சமச்சி சாப்பிட காட்டியும் டைம் ஆகிடும்.
மீனு, “சாந்திகிட்ட போய் ஏழு பேர்க்குச் சேர்த்திச் சமைக்கச் சொல்லு”, அப்படியே சகுந்தலா, காயத்ரி கிட்ட சொல்லிடு மீதிய அங்க பாத்துப்பாங்க.
நீ போய் அவங்களுக்கு உதவியா இரு. தனியா கஷ்டப்படுவாங்க எனக்கூறி அனுப்பி வைத்தார் சாரதா.
“சரி பாட்டி”.. நான் சித்திக்கிட்ட சொல்லறேன் எனக்கூறி சூழ்நிலையை உணர்ந்து அமைதியாக அவர்களுக்குச் சமையலில் உதவி செய்யச் சென்றுவிட்டால்.
சமையல் அறையில் இருந்த சகுந்தலாவோ, சாந்தியிடம் அதையே கூறி சமையல் செய்யச் சொன்னார்.
அதைப் பார்த்த மீனு, “சித்தி! பாட்டியும் இத தான் என்னிடம் சொல்லி உங்ககிட்ட சொல்ல சொன்னாங்க”. நீங்களும் அதையே தான் சொல்லரீங்க. “எப்படி இப்படி இருக்கீங்க? (Ambien) ” என்ன ஒரு Wavelength சித்தி…
“அடிபோடி அரட்டை”.. இது தான் இந்த வீட்டின் வழக்கம். “அதுவும் இல்லாமல் அத்தை இதைதான் சொல்லுவாங்கனு எனக்கு மட்டும் இல்லை.. இதுஎல்லாரும் தெரியும்”..
“நம்ம வீட்டுக்கு யார்வந்தாலும் வயிறு நிறையச் சாப்பிட வச்சிதான் அனுப்பனுங்கிறது நம்ம முன்னோர்கள் வாக்கு மீனு”… அதைத் தவறாம இத்தனை வருடங்களாகச் செய்துகிட்டு வருகிறார்கள்.
“இது பரம்பரை பரம்பரையாக வந்த வழக்கம்” குட்டிமா.
அதுமட்டுமல்ல மீனு “எங்களுக்குப் பிறகு உங்க அண்ணனுங்க மூனு பேரும் இதைத் தவறாம செய்யனும்”. இல்லைனா கொடுத்து வாக்கு மீறுன குற்றத்திற்கு ஆழாக வேண்டிவரும்.
“அதனால தான் சின்னதுல இருந்து உங்க அண்ணனுங்களுக்குச் சொல்லி வளர்த்துவந்தாங்க உங்க பாட்டிங்களும் மற்றும் ஜெயா அக்காவும் என்றார் காயத்திரி”.
அதே நேரத்தில் சாரதா நாச்சியாரிடம், அக்கா நம்ம பேரனுங்களை நாம இருக்கும் போதே, நம்ம முன்னோர்கள் செய்து வந்த கைகரியங்களை இவனுங்க கையால் செய்ய வைக்க வேண்டும். அப்போதுதான் அவனுங்க பிற்காலத்தில் எந்தத் தவறும் இல்லாமல் செய்வாங்க.
“ஆமாம் சாரதா” உங்க மாமா சொன்னதுக்கு இன்னும் என் நினைவில் இருக்கு.
(அந்தக் காலத்தில் இருந்தே சூரியதேவன் வீட்டில் உள்ள ஒரு பழக்கம், “இந்த வீட்டிற்கு யார்வந்தாலும் அவர்களின் வயிறு வாடவிடாமல் பார்த்துப்பார்த்து செய்வார்கள்”).
தன் அறையில் படுத்திருந்த சந்திரதேவன் நினைவில் சூரியதேவன் கூறியது தான் ஓடிக்கொண்டு இருந்தது.
“உன்னால் ஒருவருக்கு உதவி செய்ய முடிந்தால் செய். இல்லையேல் அமைதியா இருந்துவிடு”.
அதேபோல், “எக்காரணம் கொண்டும் அடுத்தவரின் சொத்து ஆசைபடாதே. உன் உழைப்பு மட்டும்தான் உனக்கு உதவும். அடுத்தவரின் உழைப்பை சுரண்டாதே. பிறந்த ஊருக்குப் பெருமை சேர்க்காவிட்டாலும் பரவாயில்லை. அந்த ஊரின் புனிதத்தன்மையைக் கெடுத்துவிடாதே என்பது தான் அவர் கூறியவை”.
தந்தையின் உபதேசத்திற்கு ஏற்றார்போல் இதுவரை சந்திரதேவன், “தான் பிறந்த ஊரின் புனிதத்தன்மையைக் கெடுபது போல் எந்த விதமான வேலையையும் செய்யவில்லை. மற்றவர்களையும் செய்யவிட்டதில்லை”.
அவரைப் பின்பற்றி அவரின் தமையன் மற்றும் புதல்வர்களும் எந்தவிதமான கொடுதல்களையும் செய்யவில்லை.
இவர்கள் தொழில் தொடங்கும் முன் சந்திரதேவன் கூறியவை, “நீங்கள் ஊரின் இயற்கை எழில்களை அழிக்காமல் பாதுகாக்க வேண்டும். எந்தவிதமான ரசாயன மற்றும் பூமியை கெடுக்கும் விஷயங்களைச் செய்யாதே என்பது தான்”.
இதே கூற்றைதான் சிறிய வயதிலேயே நாச்சியாரும் தன் பேரன்கள், பேத்திகள் இடம் கூறினார்.
தர்மனின் பேச்சுக்குரல் கேட்டு சுயநினைவுக்கு வந்தனர் நாச்சியார் மற்றும் சாரதா.
“அம்மா காயத்திரி…. சாப்பாடு எல்லாம் ஆச்சா?” ஆச்சுனா மீனு நீ போய் வெற்றி வரசொல்லுமா.
“ஆச்சி அத்த”, ஒரு பத்து நிஷத்தில் ஆகிடும் அத்தை எனக்கூறி சமைத்தவைகளை டேபிளில் எடுத்து வைத்துகொண்டு இருந்தார்.
வெற்றி ஊரில் இருந்து வந்ததில் இருந்து தன் அன்னையிடம் சரியாகப் பேசாததால் அவரின் அறைக்குச் சென்றான்.
அவனைப் பார்த்த ஜெயம்மாள், “வாப்பா வெற்றி. இந்த அம்மாகிட்ட பேச உனக்கு ஒரு நாள் முழுசா தேவைபட்டது இல்ல? “என்றவரிடம்,
அப்படியெல்லாம் இல்லமா.. உங்களுக்கே தெரியும் இல்ல இங்க நடந்த பிரச்சினை பற்றி.. அந்தப் பையன கண்டுபிடிக்க என் Friend (police officer) உதவிகேட்டு, குட்டிபையன கண்டுபிடிக்க இவ்வளவு நேரம் ஆயிடுச்சுமா என்றவனிடம்.
எது எப்படியே கண்ணா… அந்த பையன் கிடச்சிட்டான்.. அது போதும்கா நமக்கு.
“அந்தப் பையன் எவ்வளவு கஷ்டப்பட்டானே தெரியல? எல்லாரும் சின்னப் பசங்க வேற. பெத்தவங்க இல்லாம தனி ஆளா நின்னு அந்தப் பெண்ணு தம்பி, தங்கச்சிய பார்த்துக்கிது”.
அந்த பெண்ணு பேரு கூட என்னவோ சொன்னாலே சகு. நல்ல பேரு கூட வெற்றி. ஆங் நியாபகம் வந்துடுச்சி “உமா” டா.
“அந்தப் பெண்ணு பேரு என்னவா இருந்தா நமக்கு என்னமா?”( இந்த அளச்சியம் உமாவையும் பாரக்கும் வரை மட்டுமே) அந்தப் பையன் பத்திரமா இருக்கான் அது போதும். “சரிமா நீங்க தூங்குங்க காலையில் பார்க்கலாம்” எனக்கூறி அவருக்கு மருந்துகொடுத்து படுக்கவைத்து அவர் தூங்கியதும் சென்றுவிட்டான்.
****************************************************************×*******************
“உமா கார் ஊர் எல்லைக்கு வந்த உடன், இவர்கள் வந்த காரை பின்தொடர்ந்தவன் அங்கேயே நின்றுவிட்டான்.
அடுத்தது என்ன செய்வது என்று தெரியாமல். அவனை அனுப்பி்வனுக்குப் பேன் செய்து, “அண்ணா அங்க வந்த காரு அல்லியூருக்குள்ள போச்சியிருச்சி”. நான் வெளியே நின்னுட்டேன் அண்ணா.
“இதுக்கு மேல அவங்களைத் தொடர்ந்து போனா சந்தேகம் வர வாய்ப்பு இருக்கு. அதுனால நீ திரும்பி வந்துவிடு அவளை நான் பாா்த்துக்கிறேன்” எனக்கூறி வைத்துவிட்டான்.
இவனும் காரைதிருப்பிக்கொண்டு அவன் ஊரைநோக்கி சென்றுவிட்டான்.
உமா, தூங்கி கொண்டு இருந்த அனைவரையும் எழுப்பி விட்டு அருணிடம் தண்ணீர் வாங்கிக் கொடுத்த பின்தான் குட்டியை எழுப்பினால்,
“குட்டி எழுந்துவிடு வீடு வந்துடுச்சி பார் வா வீட்டுக்குப் போகலாம்” என்றதும், சிறிது தெளிந்தன் உமாவை விட்டு இறங்கி சீட்டில் அமர்ந்து கொண்டான்.
பின் விஷ்ணு, “உமா எல்லாரையும் பாட்டி வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு அப்புறமா உங்கவீட்டுல விடசொன்னாங்க”.
அதையே ஆமோதித்தான் அருண்.
இல்ல அருண்.. “நாங்க எங்க வீட்டு போய் சாப்பிட்டுகிறோம். எதுக்கு உங்களுக்கு வீன் சிரமம்”.
“இல்ல உமா”… பாட்டி எல்லாருக்கும் சேர்த்து சமையல் செய்துவைத்து எல்லாருக்காகவும் காத்துகிட்டு இருக்காங்க. வாங்க சாப்பிட்டவுடன் வீட்டுல எல்லாரையும் நாங்க விட்டுவிடறோம்.
உமா சொல்லறது சரிதான தம்பி.
நாங்க வீட்டில் போய் சாப்பிட்டுகிறோம். நீங்க வீட்டில விட்டுடுங்க தம்பி என்றவரிடம் அருண், “சுந்தரம் அண்ணா நீங்க காலையிலேயே சாப்பிடாம வந்துட்டீங்க.. இப்பவும் நீங்க எல்லாரும் வரலையா நிச்சயம் பாட்டி நிம்மதியா தூங்க மாட்டாங்க. சாப்பிடவும் மாட்டாங்க”.
“நீங்க வரலைனா பாட்டி ரொம்ப வருத்தப்படுவாங்க உமா” என்றவனின் கூற்றில் அமைதியா வர சம்மதம் தெரிவித்தால்( அந்த வயதானவரின் மனம் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக).
பின் மற்றவரின் முகத்தைப் பார்த்து அவர்களின் சம்மதத்தைப் பெற்றுக்கொண்டு ஆஷ்வாசம் அடைந்தால். அவர்களை எல்லாரையும் பண்ணையார் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார்கள் (அருண் மற்றும் விஷ்ணு).
***********************×************************************************************
கார் சத்தம் கேட்டு வெளியே வந்த அனைவரும் வந்தவர்களை வரவேற்றனர்.
நாச்சியார் தான் முதலில் வந்தவர்களின் முகத்தில் தெரிந்த சேர்வில், “வாங்க உள்ள.. உட்காருங்க கண்ணுங்களா.. காயத்திரி குற்றங்களுக்குத் தண்ணீர் கொண்டாமா” எனக்கூறியவர்.
“அந்தக் கடவுள் புண்ணியத்தில் பையன் கிடைத்துவிட்டான். இனி எந்தப் பிரச்சினையும் இல்லை. வந்த கஷ்டமெல்லாம் இதோடு போய்டுச்சினு சந்தோசம் தான் படனும் மா”.
அதற்கு உமா, “ஆமாம் பாட்டி இனி இவங்களைப் பத்திரமா பார்த்துக்குவேன். எந்தப் பிரச்சினையும் நெருங்காம பார்த்துக்குவேண் பாட்டி” என உணர்ச்சி வேகத்தில் கூறியவளுக்கு, காயத்திரி கொண்டுவந்த தண்ணீர் கொடுத்து ஆசுவாசபடுத்தினார் நாச்சியார்.
மீனு, “கூச்சத்துடன் அமர்ந்திருந்த அம்மு, கண்ணன், குட்டி மற்றும் மல்லியிடம் பேச்சி கொடுத்தால்”.
Hai குட்டி பையா, “என் பேர் மீனா”. “உங்க பேர் என்ன? நீங்க என்ன படிக்கறீங்க? எந்த School படிக்கறீங்க?” எனக் கேள்விகளைக் கேட்டு அவனைச் சகஜமான நிலைக்குக் கொண்டு வந்த மீனுவிடம்.
Hai க்கா, “என் பேர் அமுதன் அலைஸ் குட்டி. நான் ஏழாவது படிக்கிறேன். Government School ல்” எனப் பெருமையாகக் கூறிய குட்டியை பார்த்த அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது.
காரணம், “School Name கூறும் போது அவன் முகத்தில் தோன்றியமறைந்த உணர்வு, அத்தனை பெருமையாகக் கூறினான்”.
“இவங்க என் சின்ன அக்கா” என்றவன். “ அக்கா பெயர்வந்து இளந்தென்றல் என்கிற அம்மு. M.Come final year படிக்கிறாங்க. Government College. Gold Medal வச்சி இருக்காங்க” எனக் கூறியவனின் பேச்சில், “அருண் தன்னவளை பற்றிக் கிடைத்த தகவல்களைப் பத்திரமாகச் சேகரித்துக் கொண்டான்”.
அருணை பார்த்த விஷ்ணு, “டேய்!”, நீ மட்டும் உன் ஆளபத்தி டீடையல் தெரிந்துகிட்ட .
எனக்கும் என் ஆளபத்தின டீடையல் வாங்கிதாடா என்றவனிடம், “கொஞ்சம் அமைதியா இருடா… நம்ம மச்சான் நமக்கு எந்தக் கஷ்டமும் தராம எல்லா டீடுயலும் தருவான். அவசரபடாம பெருமையா இரு” என்றவனை முறைத்துவிட்டு அமைதியாக நின்றான் விஷ்ணு(அவனால் வேறு என்ன செய்ய முடியும்).
அவன் பொருமையைச் சோதிக்கும் பொருட்டு குட்டி. மல்லி பற்றிக் கூறாமல் கண்ணன் பற்றிக் கூறினான்.
இது என் அண்ணன். “ பெயர் அகிலன் அலைக் கண்ணன். BSC(Maths) second year படிக்கிறான். தினமும் என்னை ஸ்கூலில் விடுவான். நான் நா அவனுக்கு ரொம்பப் பிடிக்கும் என்றவளை இமைக்காமல் பார்த்தனர் அனைவரும்”.
இவங்க மல்லி அக்கா. கந்தன் அப்பா பெண்ணு. எனக்கு டார்லிங் (இதைக் கேட்ட விஷ்ணுவின் காதில் புகையாக வந்து). உமா அக்காக்கு Best Friend .
“இவங்க தான் என் பெரிய அக்கா உமா மகேஸ்வரி. எல்லாரும் உமானு கூப்பிடுவாங்க. எங்க அக்கா Msc(Maths) படிச்சி இருக்காங்க”.
“எங்க அக்காசமையல் சூப்பரா சமைப்பாங்க தெரியுமா?”.
“டியூஷனும் எடுக்கராங்க என் அக்கா”.
“நானுங்கூடத்தான் நல்லா சமைப்பேன் குட்டி. எங்க அம்மா கிட்ட வேணா கேளு சொல்லுவாங்க” எனக்கூறிய மீனுவிடம்.
உங்கள விட நல்லா சமைப்பாங்க. “அதுலயும், மண்பானையில மீன்குழம்பு வைப்பாங்க. அது செம டேஸ்டா இருக்கும் தெரியுமா?” எனச் சப்புக்கொட்டிக்கூறியவனின் கூற்றிலில் மீனு, அருண் மற்றும் விஷ்ணு இவர்களின் நாக்கில் எச்சில் ஊரியது.
“அமைதியா இரு குட்டி” எனக்கூறிய உமாவிடம்,
“மல்லிக்கா, நீங்க சொல்லுங்க உமா அக்கா சூப்பரா சமைப்பாங்க தான ?”
“ஆமாம் மீனு!” உமா மீன்குழம்பு சூப்பரா சமைப்பா . நான் அவ சமையலுக்கு அடிமை.
“ஊருலயும் பல பேரு அவ சமையலுக்கு அடிமைதான் தெரியுமா?”, ஆமாம், மீனு மல்லி அக்கா சொல்லரது உண்மைதான்.
“நீங்க ஒரு நாள் சாப்பிட்டு பாருங்க.. அப்ப தெரியும்.. உங்களுக்கு எங்க அக்கா சமையல் பத்தி” என்றால் அம்மு.
மீனு, உமா அக்கா ஒரு நாள் எனக்கு மீன்குழம்பு வச்சி தாங்க.. நானும் உங்க சமையலை டேஸ்ட் பண்ணி பார்க்கிறேன்.
“சரி மீனு செஞ்சி கொடுக்கறேன்” என்றால் உமா.
இவர்கள் பேசி கொண்டு இருந்த இடைவெளியில் வந்த வெற்றிவேந்தனை யாரும் கவனிக்கவில்லை. அவனும் அவர்கள் கவனத்தில் படாதவாரு தானழ அமர்ந்தான் ( அப்பெழுது தானே அவன் உமாவை பார்ப்பது மற்றவருக்குத் தெரியாது).
“அவனின் பார்வை உமாவின் மீது ஆர்வமாகப் படிவதை ஒருவரை தவிர யாரும் பார்க்கவில்லை( அந்த நபர் சந்திரன்) ”. அந்த ஒருவரை யாரும் கவனிக்கவில்லை. “ஏன்!”, அவனும் கூடக் கவனிக்கவில்லை.
உமா வீட்டிற்குள் வரும் போதே பார்த்துவிட்டான் வெற்றி. “காலையில் இருந்து அழைந்துதிரிந்ததில் கசங்கி போன புடவை, சிறிது கலைந்த முடியுடன் இருந்தவளை பார்க்கபார்க்க வெற்றிக்கு தெகட்டவில்லை”. அவ்வளவு அழகாக இருந்தால் உமா.
பிறகு சகுந்தலா அனைவரையும் அழைத்துச் சாப்பிட வைத்தார்.
சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு கிளம்பும் பொழுது உமா, “குட்டிகா காங்கேயத்துல வாங்கிய பாதுசாவை மீனாவிடம் கொடுத்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டனர்”.
வேண்டாம் எனக்கூறி மறுத்தவளிடம், “மீனு நீங்க இப்ப வாங்களைநா மறுபடியும் நாங்க யாரும் இங்க வரமாட்டோம். உங்க கிட பேசவும் மாட்டோம் எனக்கூறியவளின் இருந்து இனிப்பை வாங்கிக்கொண்டால்( மீன் குழம்பு மிஸ் ஆகிடும் என்பதால் தான்)”.
பின் கந்தன் இவர்களை வீட்டில் விட்டுவிட்டு தான் மல்லியுடன் அவர் வீட்டிற்குச் சென்றார்.
காரில் வந்து விடுவதாகக் கூறியவர்களை மறுத்து விட்டு நடந்தே சென்றுவிட்டார்கள். அதற்கு மேல் அவர்களுக்குக் கஷ்டத்தைக் கொடுக்க மனம் இல்லாததால்.
வீட்டுக்கு வந்த உடன் உமா, குட்டி போய் குளித்துவிட்டு வந்து படு. இல்லைனா தூங்க முடியாது. நீங்களும் அவன் அந்தப் பிறகு போய் குளித்துவிட்டு வந்து படுங்க.
“அம்மு வீட்ட கூட்டு.. கண்ணா அவ கூடுன பிறகு பாய் விரிச்சி வை”, எனக்கூறி இருந்த பாத்திரங்களை எல்லாம் சுத்தம் செய்தால்.
பின் “வெள்ளையனுக்குத் தண்ணீர் வைத்துவிட்டு, அதைக் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்துவிட்டால். அது அவளைவிட்டுச் செல்லாமல் அவள் பின்னே வந்தது. அதைச் சமாதானம் செய்து கல்லைக்கொடியை சாப்பிட அனுப்பி வைத்துவிட்டு, நாய்க்கு இருந்த உணவினை வைத்துவிட்டு அதையும் அவிழ்த்து விட்டு உள்ளே சென்று விட்டால்”(வீட்டை காவல் காப்பது இந்த இரண்டு ஜீவன்கள் தான். அந்த நாய் மற்றும் வெள்ளையனே பார்க்கவே பயமாக இருக்கும்) .
இவர்கள் அனைவரும் குளித்துவிட்டு வந்த பிறகு இவள் சென்று குளித்துவிட்டு வந்து விரிச்சிவைத்த பாயில் படுத்துக்கொண்டால். கண்ணன் அனைவரின் படுக்கையையும் ஒன்றாகப் போட்டு வைத்தான்.
படுத்தவளின் கண்களில் இருந்து இஇதுவரை அடக்கிவைத்த கண்ணீர் கட்டுப்பாடு இல்லாமல் வந்துகொண்டே இருந்து. குட்டி காணாமல் போனதால் ஏற்பட்ட வேதனை. அந்தக் கண்ணீரையும் தங்கை, தம்பிகளுக்குக் காட்டாமல் மறைத்துக்கொண்டு மெளனக்கண்ணீர் வடித்தால் உமா.
“ஆனால் அவளுக்குத் தெரியவில்லை அம்மு மற்றும் கண்ணன் தூங்காமல் இருந்ததும். அவளின் கண்ணீரை பார்த்து வேதனை அடைந்ததும்”.
அவளுக்கு இந்த வேதனை போதாது என்று குட்டி தூக்கத்தில் புளம்பி அழுதது இன்னும் ரணமாக வலித்தது.