அத்தியாயம் 7:
விஷ்ணுவும், வெற்றியும் காலையில் அலுவலகம் சென்று அங்கு இருந்த வேலைகளை முடித்துவிட்டு ஊருக்கு கிளம்பும் போது மணி 2 ஆகிவிட்டது.
பிறகு ஒரு நவீன உணவகத்தில் உணவை முடித்துக்கொண்டு கிளம்பும் பொழுது மணி 3ஐ தொட்டுவிட்டது.
விஷ்ணு, “வெற்றி என்னடா இங்கேயே இவ்வளவு நேரம் ஆயிடுச்சு. ஊருக்கு போய்சேரதுக்குள்ள மணி 9ஆகிடும் போல் இருக்கே”.
“ஆமான்டா விஷ்ணு”… நேரம் அதிகமானாலும் ஆகுமே தவிர, குறையாதுடா. இவனுங்களுக்கு நேரம்காலமே இல்லையாடா? இப்ப வந்து சாவடிக்கரானுங்க…
“அதுமட்டுமல்ல டா காலையில இருந்து மனசுக்கு ஒரு மாதிரியா இருக்கு. என்னமோ தப்பு நடக்கப்போற மாதிரி தோனுதுடா”. அதனால தான் சீக்கிரமா வீட்டுக்கு போலாம்னு கிளம்பினா, இவனுங்க Fileஐ தூக்கிட்டு வந்து கடுப்படிக்கிறானுங்க.
அதற்கு விஷ்ணு, “அது எல்லாம் ஒன்னும் இல்லடா. பயப்படாம வா… வீட்டுக்கு போய் எல்லாரையும் பார்த்தா சரியா போய்டும் வெற்றி”.
நானும் அதை தான் நினைக்கறேன் விஷ்ணு.
வெற்றியின் மனதை திசைதிருப்ப விஷ்ணு, அது எல்லாம் இருக்கட்டும் வெற்றி, “நீ எப்ப கல்யாணம் பண்ணிக்கப்போற? காதல் கல்யாணமா? இல்ல நம்ம வீட்டுல பார்க்கிற பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணிக்கப்போறையாடா?” என்றான் அவனிடம்…
வெற்றி, “என்னைவிட சின்னவன் நீயே காதலித்து திருமணம் செய்ய இருக்கும்போது, உனக்கு மூத்தவன் நான்… அப்ப என் கல்யாணம் எப்படிநடக்கும் யோசிடா”.
அடப்பாவி வெற்றி… “இந்த பூனையும் பால்குடிக்குமானுஇருந்தையயே டா. நான் பால் மட்டுமல்ல பீரே அடிப்பேன்னு சொல்லாம சொல்லிட்டையேடா”. ஆனாலும் சரியான “ஊமகுசும்பன்டா நீ” என்றான்…
“அடப்போடா நீ வேற”… நான் இன்னும் அவகிட்ட சொல்ல. “அதுமட்டுமல்ல நான் அவளை மறைந்திருந்து பார்ப்பது கூட அவளுக்கு தெரியாது. அவ பக்கத்துல இருப்பவங்களுக்கு கூட தெரியாது. அவ்வளவு ஏன் விஷ்ணு? என் கூட இருந்த உனக்கு கூட நானா சொன்னதுக்கும் அப்பறம் தான் தெரியவந்தது என்று அவனை பார்த்து கூறினான் விஷ்ணுவால் முறைக்க மட்டும் தான் முடிந்தது”.
வெற்றி, “விஷ்ணு முறைப்பதை பார்த்து அட்டகாசமாக சிரித்தான்”.
விஷ்ணு, “நீ என்ன வேணா பண்ணு… எனக்கு என் லட்டுகுட்டி வேணும்… எங்க கல்யாணத்துக்கு நீதான் பொறுப்பு வெற்றி”.
அது எல்லாம் நான் பாா்த்துக்கறேன்… “நீ முதலில் மல்லிகாகிட்ட உன் காதலை சொல்லுடா”, மீதிய நான் பாா்த்துக்கறேன் என்றான் அவனிடம்…
விஷ்ணு, அதற்கான சரியான சந்தர்ப்பம் தான் அமையமாட்டிக்குது வெற்றி. “வர மாரியம்மன் திருவிழாவில் சொல்லாம்னு நினைக்கிறேன்”. அப்பத்தான் அவ தனியா இருப்பா, இல்லைனா யாராவது அவ கூட இருந்துகிட்டே இருப்பாங்கடா. “அதுலயும் அந்த குட்டிபையன் வேற டார்லிங் டார்லிங்குனு கூப்பிட்டு என்ன கடுப்படிக்கிறான்டா வெற்றி”.
“பாவம்டா விஷ்ணு நீ”… எல்லாருக்கும் அப்பா, அம்மானு இப்படித்தான் பிரச்சனை வரும். ஆனா உனக்கு அந்த குட்டிபையனால பிரச்சனை வருது, எனக்கூறி அடக்கமாட்டாமல் சிரித்தான் வெற்றி.
இப்படியே இவர்கள் பேசிக்கொண்டே அல்லியூருக்குள்ளே வந்துவிட்டனர்.
“இரண்டு பக்கமும் இருந்த அடர்த்தியான மரங்களால் அந்த சாலை சிறிது ஒளிக்கூட இல்லாமல் இருட்டாக இருந்தது”. அதனால் காரை வெகு நிதானமாக ஓட்டினான் வெற்றி.
அந்த இருட்டின் எதிரில் சற்று தொலைவில் ஓடி வந்த உருவத்தை பார்ககமுடியவில்லை. அந்த உருவம் காருக்கு மிக அருகில் வந்ததால், உடனடியாக Break அடித்து வண்டியை நிறுத்திவிட்டான். அதில் வண்டியை ஒரு குளுங்குகுளுங்கி நின்றது. சீட்பெல்ட் போட்டு இருந்ததால் விஷ்ணு, வெற்றி இருவருக்கும் அடிப்படவில்லை.
சுதாரித்து காரில் இருந்து இறங்கியவர்கள் கீழே விழுந்த உருவத்தை பார்த்தனர். பார்த்தவர்களுக்கு அத்தனை அதிர்ச்சி.
வெற்றி, “நீ அம்மு தான? நீ எதுக்கு இந்த நேரத்தில், இந்த இடத்திற்கு தனியாவந்த? கூட யாரும் வரலையா? ஏம்மா இப்படி எதிரில் வர வண்டியக்கூட பார்க்காம ஓடி வந்த? எதாவது பிரச்சனையா?” என்று அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டார்கள் அம்முவிடம்…
அவர்களை அடையாளம் கண்டுகொண்டவள், “நானும், உமா அக்காவும் காங்கேயத்துல இருந்து கடைசிபஸ்க்கு வந்தமா, அப்ப யாரோ எங்களை பார்த்து விட்டு பின்தொடர்ந்து வந்தாங்க. அவங்ககிட்ட இருந்து தப்பித்து ஓடுன அப்ப அக்கா என்ன வேறவழியில் போக சொல்லி, பின் தொடர்ந்து வந்தவர்களை அவங்கபக்கம் திசைதிருப்பி அக்கா வேறுபக்கம் போய்ட்டாங்க” என விசும்பலுடன் கூறினாள். .. கேட்ட செய்தியில் வெற்றிக்கு உலகமே சுற்றியது.
சுதாரித்து விஷ்ணு, “வெற்றி கண்டிப்பா அவங்க ஊர்பக்கம்தான் போய் இருக்கனும் சீக்கிரமா வாடா, அப்பதான் அந்த பெண்ணை காப்பாத்தமுடியும்” என்றான் அவனின் கூற்றில் சுயத்திற்கு வந்தவன் அம்மு மற்றும் விஷ்ணுவை காரில் ஏற்றிக்கெண்டு அதிவேகமாக சென்றான்.
“அம்மு, உயிரை கையில் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தால், அவளின் பயம் எல்லாம் உமாவிற்கு எதாவது ஆகிவிடுமோ என்றுதான்”… வெற்றியின் நிலையோ அதைவிட மோசமாக இருந்தது.
‘எங்கே தன்னவளுக்கு நடக்ககூடாதது எதாவது நடந்துவிடுமோ என மனம் ஒரு நிலையில் இல்லாமல், பல சிந்தனைகள் அவன் மனத்தில் ஓடிக்கொண்டு இருந்தது’.
சிறிது தூரத்தில் பாதை இரண்டாக பிரிந்தது அதை பார்த்த விஷ்ணு காரை நிறுத்திவிட்டு, “வெற்றி நீ அந்தபக்கம் போய் பார், நான் அந்தபக்கம் போய் பார்கிறேன் எனக்கூறி அம்முவிடம் சென்றான்”.
விஷ்ணுவை அழைத்த வெற்றி, காரில் இருந்த துப்பாக்கியை பாதுகாப்புக்காக கொடுத்து அனுப்பினான்.
ஆளுக்கொரு திசையில் சென்று உமாவையும் தேடினார்கள். சற்று தொலைவில் விஷ்ணு மற்றும் வெற்றி இருவரும் இணைந்தனர். அதில் இன்னும் பயந்தாள் அம்மு.
வெற்றி, விஷ்ணு மற்றும் அம்முவை அழைத்துக்கொண்டு காட்டுக்குள் சென்றவன், அருணுக்கு அழைத்து விஷயத்தை கூறினான்…
தன் நிலையை நினைத்து தன்னையே நொந்துகொண்டான். இந்த இக்கட்டான நிலையில் கூட தன்னால் தன்னவளுக்கு ஆறுதலாக இருக்கமுடியாததை நினைத்து. ஏற்கனவே ஊர் எல்லைக்கு வந்துவிட்டதால் கொஞ்சம் நிம்மதியாகவும் உணர்ந்தான்.
அருண் வெற்றியிடம், “அண்ணா நீங்க எங்க இருக்கீங்க… நான் ஊர் எல்லைக்கு வந்துவிட்டேன், அதனால நீங்க முன்ன போங்க உங்க பின்னாடியே நானும் வந்துவிடுகிறேன்”.
கண்டிப்பா அவங்களுக்கு எதுவும் ஆகாது, பயப்படாமல் போங்க எனக்கூறி, தன்னை அறியாமலே தன் அண்ணனை ஆசுவாசம் செய்தான் அந்த இளையவன்.
பின் வெற்றி காட்டை நோக்கி சென்றான், சிறிது தூரம் சென்றதும் சத்தம் கேட்டது… அதை கேட்ட வெற்றி. “விஷ்ணுவிடம், உனக்கு ஏதாவது சத்தம் கேட்டுச்சாடா என்றான்… ஆமாம் வெற்றி… எனக்கு கேட்டுச்சிடா, அம்முவை திரும்பி பார்க்க அவள் மேலும்கீழும் தலை அசைத்து சத்தத்தை உறுதிசெய்தால்”.
விரைந்து அந்த திசையை நோக்கி சென்றனர். அங்கு கண்ட காட்சியில் அனைவரும் சிலையாய் சமைந்து நின்றனர்.
இவர்களை பின் தொடர்ந்து வந்த அருண், அவன் கண்ட காட்சியில் கண்கள் தெரித்துவிடும் அளவிற்கு நின்றிருந்தான்.
காரணம் உமா, “இரண்டு கைகளில், ஒன்றில் இரத்தமும், மற்ற கையில் கத்தியுடனும் மற்றும் புடவையில் எல்லாம் இரத்தக்கறையுடனும், கண்களில் தீப்பொறி பறக்க, அத்தனை ரெளத்திரத்துடன் இருந்தாள். பார்பதற்கு அந்த காளிதேவி மாதிரி இருந்தது”.
அம்மு, “அக்கா… அக்கா இங்க பாருங்க… எனக்கு பயமா இருக்கு அக்கா. அங்க கண்ணன், குட்டி நமக்காக காத்துகிட்டு இருப்பாங்க, வாங்க போகலாம். இந்த பரமனும், அந்த ஆளும் எழுந்துவிடங்காட்டியும் போய்விடலாம் வாங்கக்கா”.
அவளின் கூற்றில் சுயத்திற்கு வந்த உமா, “இவன விட்டுவச்சது தப்பா போச்சிடி அம்மு”… அப்பவே இவன கொண்ணுபோட்டு இருக்கனும். “எவ்வளவு தைரியம் இருந்தா உன்னை தொட நினைத்து இருப்பான்? இவன விட்டா நாம நிம்மதியா இருக்க முடியாது அம்மு, நான் அவனை கொள்ளாமவிடமாட்டேன் என்றால் அவளிடம்…
அம்மு, “நீ அவனுங்களை கொண்ணுட்டு ஜெயிலுக்கு போ, நாங்க மூனு பேரும் யாரும் இல்லாத அனாதையா நிக்கறோம். போக்கா… போய் அவன கொள்ளு. அவன மாதிரி இருக்க இன்னும் சிலருக்கும் இதுதான் வேணும். நீயும் அதையே செய்” எனக்கூறி முகத்தை கைகளால் மறைத்துக்கொண்டு அழுதாள் அம்மு.
அவள் அழுவது தாங்காத உமா, “சரி நான் எதுவும் பண்ணமாட்டேன்… ஆனா அவனுங்க செத்தா அதுக்கு நான் பொறுப்பு இல்ல சொல்லீட்டேன்” என்றாவளின் கூற்றில்…
விஷ்ணு, “இதுக்கு மேல நீங்க அவன எதுவும் செய்ய வேண்டாம். ஏனா? நீங்கள் போட்ட போட்டுள அவனுங்க எழுந்திரிக்க எப்படியும் ஆறு மாதங்களுக்கு மேல் ஆகும்” எனக்கூறினான், ஆனால் அவன் மனத்தில் ‘உமா மீதான மதிப்பு அதிகமானது தவிர குறையவில்லை’.
“விஷ்ணுவிடம், இவன மாதிரி ஆளுங்க எழுந்தரிக்காம இருக்கிறது தான் நல்லது அண்ணா. அது தான் எனக்கும் வேண்டும் என்ற உமாவை பார்த்து முறைத்தால் அம்மு. அதை அவள் கண்டுகொண்டதாக தெரியவில்லை”. உமாவின் மனதில் அத்தனை கோபம் மற்றும் கொலைவெறியும் ஒருங்கே இருந்தது.
காரணம் “தன்னிடமே தன் தங்கையை சீரளிப்பேன் எனக்கூறியது மட்டுமல்லாமல், தன்னை தொடவந்ததையும் அப்படியே விட்டது அவளால் தாங்க முடியவில்லை”.
வெற்றியோ வைத்தக்கண் வாங்காமல் உமாவையும் பார்த்துக்கொண்டு இருந்தான்.
‘இவ்வளவு இக்கட்டான சூழ்நிலையிலும் வைராக்கியமா இருந்து, அவளையும், அவள் தங்கையையும் காத்துக்கொண்டது மட்டுமல்லாமல், அவர்களை அடித்து துவம்சம் செய்து, வெற்றியின் மனதில் தன்னவள் மீது பெருமையும், கா்வமும் உண்டு பண்ணியது’.
அருணோ, அம்முவின் அனாதை வார்த்தையில் சகலமும் அற்று நின்றுவிட்டான்.
பின் சுதாரித்த வெற்றி உமாவிடம், “உமா என்னதான் நடந்தது. உங்களுக்கு எதுவும் இல்லை தான? இவனுங்களுக்கு என்ன ஆச்சி? எப்படி சமாளிச்சீங்க?” என்றான்…
அதுவந்து, “அம்முவை போக சொல்லிவிட்டு, அவனுங்களை என்பக்கமாக திசைதிருப்ப நான் ஓடும் போது, அவனுங்க கவனம் திசைமாறி என் பக்கமா வந்துட்டாங்க” என்று நடந்தவற்றை எடுத்துக்கூறினாள் உமா.
உமா ஓடும் போது ஏற்பட்ட சத்தத்தில் பரமனும் அவனுடன் வந்தவனும் இவளை துரத்திக்கொண்டு ஓடினார்கள். அந்த இடைவெளியில் மறைந்திருந்த அம்மு அவர்களின் எதிர் திசையில் ஓடினாள்.
அம்முவின் மனதில், ‘எப்படியாவது வேகமாக சென்று உதவிக்கு ஆட்களை அழைத்துகொண்டு வந்து அக்காவை காப்பாத்திவிடவேண்டும் என்ற நினைப்பில் கண்மண் தெரியாத அளவுக்கு வேகமாக ஓடினாள்’, அப்பொழுது தான் வெற்றி காரில் லேசாக இடித்து கீழே விழுந்துவிட்டாள்.
அங்கு உமாவையும் துரத்திய இருவரில் ஒருவனான பரமன், “டேய் அவ அங்க ஓடராப்பாரு… வாடா” எனக்கூறி உமாவையும் பின்தொடர்ந்து சென்றனர்.
“சிறிது தூரம் சென்ற உமா சற்று கவனமின்மையால் மரத்தின் வேர் காலில்தட்டி கீழே விழுந்துவிட்டாள், அதில் காலில் அடிபட்டு விட்டதால் உமாவினாள் சிறிது கூட அசைய முடியவில்லை. இருந்தும் எழுந்து அமர்ந்தாள், இனி தப்பிப்பது கடினம் என அறிந்து கையில் இருந்த கத்தியை புடவையில் மறைத்துவைத்துக்கொண்டாள்”.
அதற்குள் அங்கு வந்தவர்களில் ஒருவனான பரமன், உமாவின் முடியை கொத்தாபற்றி இழுத்து நிறுத்தினான். இரண்டு கன்னத்திலும் சரமாரியாக அறைந்தான்.
“எவ்வளவு தைரியம் இருந்தால், என்னைய ஜெயிலில் கழிதிங்க வைத்துவிட்டு, நீங்க எல்லாம் வெளியே சந்தோசமா இருப்பீங்க? விடமாட்டேன்டீ… ஏய் எங்கடி அந்த சிறுக்கி”… அவளாளதான் எல்லா பிரச்சினையும் என்ற பரமனிடம் …
நீ ஊருக்குள்ள இல்லாத பொருக்கிதனம் எல்லா பண்ணுவ, அதை தட்டிக்கேட்டா கொலைப்பண்ணுவையாடா? “உனக்கு அறிப்பெடுத்தா அதுக்குனு இடம் இருக்கே அங்க போகவேண்டியதுதான? “ஏண்டா?” அந்த சின்னகுழந்தைகிட்டபோய் தப்பாநடந்துக்க பார்த்த? மட்டுமல்லாமல், தட்டிகேட்டவங்களை கொலைபண்ணு வேணு மிரட்டுவ, அதனால்தான்டா போலீஸ்கிட்ட கம்லைண்டுபண்ணி உன்ன கழிதிங்க வச்சோம்”, பாவி என்ற உமாவிடம் …
“ஆமான்டி”… “நான் அப்படிதான் பண்ணுவேண்… அதை கேட்க அவ யாருடி?. நான் என்ன அவ கைய பிடிச்சா இழுத்தேன். இல்ல அவளை தான் கற்பழித்தேனா” என்றான் பரமனிடம்….
எவ்வளவு தைரியம் இருந்தா என் தங்கச்சிய தொடுவேணு சொல்லுவ என்ற உமாவிடம், “சரி அவள தொடல… அவளுக்கு பதிலா உண்ணைய தொட்டுக்கவா, அவளவிட நீ அழகாதான்டீ இருக்க எனக்கூறி அவளின் புடவையில் கைவைத்தவனை, தன் மொத்த பலத்தையும் ஒன்றாகூட்டி தன்னிடமிருந்த கத்தியால் சரமாரியாக தாக்கினாள் உமா”.
உமாவை தாக்கவந்த மற்றொருவனையும் கத்தியால் தாக்கினாள், அதில் ஏற்பட்ட வழி மற்றும் அதிகமான இரத்தம் வெளிவந்ததால் அவர்கள் இருவரும் மயக்கம் அடைந்தனர். அவர்களிடம் இருந்து தன்னை காத்துக்கொள்ள சிரமப்பட்டு எழுந்துநின்றவளால் ஒரு அடிக்கூட எடுத்துவைக்க முடியாமல், பக்கத்தில் இருந்த மரத்தை பற்றிக்கொண்டு, கண்கள் இரண்டும் ரெளத்திரத்தில் சிவந்து நின்றுவிட்டாள், அப்பொழுது தான் அம்மு இவர்களேடுவந்தாள்.
நடந்தது அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினாள். அதிலே தெரிந்தது அவளின் கோபவத்தின் அளவு.
உமா பார்த்ததும் அருணின் மனதில்,
” பாரடா பரம்பொருளே!
நீ படைத்த உலகம் இன்றில்லை…
இது காட்டுமிராண்டிகளின் கூடாரம்…
இதற்கு ஏற்படுத்து சேதாரம்…
ஏனெனில், நீயே அன்பு மற்றும்
கருணையின் ஆதாரம்”….
யாரோ எழுதிய கவிதை தோன்றியது.
வெற்றியே, “தன்னவள் தன்னை காத்துக்கொள்ள எவ்வளவு தூரம் போராடியுள்ளால் என நினைத்து அந்த இருவரின் மீதும் அளவுக்கு அதிகமாக ஆத்திரத்தில் இருந்தான்”.
உமாவின் கோபத்திலேயே அவன் மனதில், ‘இந்த அக்கா, தம்பிகளின் வாழ்க்கையில் ஏதோ பெரிய பிரச்சனை இருப்பதாக உறுதியாக நம்பினான் வெற்றி”. அதில் இருந்து இவர்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருந்தது. அதை சரி செய்ய முதல் முயற்சியையும் செயல்படுத்த திட்டமிட்டுக்கொண்டான் அந்த காதல்கொண்ட ஆண்மகன்..
விஷ்ணு, “வெற்றி நீ இவங்க ரெண்டு பேரையும் கூட்டிக்கிட்டு போடா. நானும், அருணும் இவனுங்களை பார்த்துக்கிறோம்” என்றவனிடம் வெற்றி, “நீ அவனுங்கள ரொம்ப நல்லா கவனிசிக்கோ என அழுத்திக்கூறியவனின் வார்த்தையில் இருந்த அழுத்தத்தை உணர்ந்த அருண், தன் தலையை ஆட்டி சம்மதம் சொன்னான்”.
இந்த அழுத்தத்தில் தலை தானாக சம்மதத்தை சொன்னது. இதோ உமாவையும் காக்க முதலில் முயற்சியை எடுத்தும்விட்டான் வெற்றி.
ஒரு எட்டுக்கூட எடுத்து வைக்க முடியாமல் தடுமாறிய உமாவின் நிலையை உணர்ந்த வெற்றி, அளேக்கா அவளை தன் கரங்களால் தூக்கிக்கொண்டான்”.
அதை பார்த்த அம்மு, அருண் மற்றும் விஷ்ணு அதிர்ச்சியாக பார்த்து கொண்டு இருந்தனர்.
அவர்களின் பார்வையை உணர்ந்தவன், “அது அவங்க காலில் அடிபட்டதால் நடக்கமுடியாது அதனால் தான் அவங்களை தூக்கிக்கொண்டேன்” எனக்கூறி சமாதானம் செய்தான் வெற்றி.
“உமாவோ வெற்றியின் முகத்தை நிமிர்ந்து பார்க்க முடியாமல் நெளிந்தால். அவள் மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு ஆக்ரமித்துக்கொண்டது…
அதில் அரவணைப்பு தெரிந்ததே தவிர, கொஞ்சம் கூட விகல்ப்பம் தெரியவில்லை” என்று நினைத்து அமைதி அடைந்தாள் உமா. அவளை காரில் அமர வைத்து, அம்முவையும் அழைத்துக்கொண்டு, உமாவின் வீடு நோக்கி சென்றார்கள்.
அவர்கள் சென்றவுடன் “விஷ்ணு, அருண் சேர்ந்து பரமன், அவனுடன் வந்தவனையும் அள்ளிபோட்டுக்கொண்டு புறப்பட்டு சென்று விட்டார்கள். அவர்களின் ஆஸ்தான இடத்திற்கு”.
உமாவின் வீட்டிற்கு வருவதற்கு முன் வெற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்றான்.
உமாவிற்கு ஏற்பட்ட காயத்தை பார்த்த மருத்துவர் வெற்றியை பிடிபிடி என பிடித்துவிட்டார்.
ஏங்க சார் அந்த பெண்ணுக்கு நீங்க புருசனா? இப்படித்தான் மாட்டை அடிக்கிறமாதிரி அடிப்பீங்களா? உங்களுக்கு எல்லாம் அறிவு இல்லையா? எதாவது ஆகியிருந்தா என்ன பண்ணுவீங்க? என்றார்…
உமாவிடம் புருசன் இப்படி அடிச்சா வாங்கிகிட்டு இருக்கையா? நீ திருப்பி அடிக்கிற மாதிரி இருந்தா அவன் உன்ன அடிப்பான என பேசியவரிடம், “ஐயோ மேடம்!”… அவர் எனக்கு கணவரும் இல்லை, நான் அவருக்கு மனைவியும் இல்லை…
என்னது அவர் உனக்கு கணவர் இல்லையா? என்றார் அவரிடம்…. அம்மு, ஆமாம் மேடம்… அவர் தான் எங்களை ஆபத்தில் இருந்து காப்பாத்தினார். இவர்தான் எங்களை கட்டாயப்படுத்தி இங்க கூட்டிக்கிட்டு வந்தார் என்றாள்…
இதை அப்பவே சொல்ல வேண்டியது தானேம்மா? “சாரி சார்”, கொஞ்சம் டென்சன் ஆயிட்டேன் என்றார்… வெற்றி, பரவாயில்லை மேடம்… நீங்க சொல்லறது புரியுது, இந்த பக்கம் அதிகமா இந்தமாதிரி சம்பவம் நடக்கிறது அதனால்தான் இப்படி பேசுனீங்கனு புரியுது எனக்கூறிய வெற்றியிடம். ..
“ஆமாம் சார்”… இவங்களுக்கு காலில் சுளுக்கு புடிச்சி இருக்கு, அப்புறம் கையில காயம் இருக்கு. வேற பிரச்சனை எல்லாம் இல்லை.
அம்முவை காட்டி , அவங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை இல்ல மேடம்.
“இல்லைங்க சார்”… அவங்களுக்கு சிராய்ப்பு மட்டும் கொஞ்சம் இருக்கு, பயப்படர மாதிரி எதுவும் இல்லை சார் என்றார்…
வெற்றியிடம், “சார் இவங்க காலுக்கு ஒரு மூன்று நாட்கள் மட்டும் ரெஸட்கொடுத்தா போதும்”…
வெற்றி மீண்டும் மருத்தவரிடம், “இரண்டு பேருக்கும் எந்த பிராபலமும் இல்லையில்ல மேடம் என கேட்டவனிடம்,
சின்ன சிரிப்புடனே மருத்துவர், “அது எல்லாம் ஒன்னும் இல்ல என உறுதியாக கூறி அனுப்பிவைத்தார்”.
ஊரை நோக்கி காரில் செல்லும் போது உமா, “சார் கொஞ்சம் உங்க போன கொடுக்கறீங்களா? மாணவர்களுக்கு போன் பண்ணும். ரொம்ப நேரம் ஆயிடுச்சு வேர பயந்துடுவாங்க”.
அதற்கு வெற்றி, “பொறுமை உமா. ஏன் இந்த அவசரம்? நிதானமா பேசுங்க… பசங்க பயந்திடபோறாங்க. வீட்டில் போய் நடந்தத சொல்லிக்கலாம். அப்ப ஏதாவது சொல்லி சமாளிங்க” எனக்கூறி போனை கொடுத்துவிட்டு சாலையில் கவனம் செலுத்தினான்.
போனை வாங்கிகொண்டு திரும்பி அம்முவை பார்த்த உமா சிரித்துக்கொண்டே அவளை தன் மீது சாய்த்துக்கொண்டால்.
அம்மு மருந்தின் வீரியத்தால் தூங்கிவிழுந்து கொண்டு இருந்தாள்.
மல்லிக்கு போன் செய்த உமா முழுதாக போசுவதற்குள் பிடிபிடி என பிடுத்துவிட்டாள். ஏண்டா இவ்வளவு நேரம்? இந்த குட்டிய சமாளிக்க முடியலடீ. சீக்கிரமா வாடீ என்றாள்…
“அச்சோ மல்லி!”, அவர்கிட்ட போனைக்கொடு.
இருடிதறேன், என்று மல்லி குட்டியிடம் போனை கொடுத்தாள். “குட்டி அழுதுகொண்டே, அக்கா ஏன் நீ இன்னும் வீட்டுக்குவரலை. உன் போன் எங்க. என்னக்கு பயமா இருக்கு அக்கா. நீ சீக்கரமா வா…என்றன் உமா, அச்சோ குட்டி அழக்கூடாது. அக்கா இன்னும் ஐந்து நிமிடத்தில் வீட்டுக்கு வந்துவிடுவேண் குட்டி. அக்காஓட போனில் சார்ஜ் இல்லை ஆப் ஆகிடுச்சிடா”.
அவன் அழுகையை தாங்காத உமா, “குட்டி நீ என்ன செய்யறனா… கண்ண இரண்டையும் மூடிகிட்டு ஒன்று, இரண்டு ஐம்பது வரை எண்ணு அக்கா அதுக்குள்ள வீட்டுக்கு வந்துவிடுவேண் சரியா”.
இப்ப நீ கண்ணன் கிட்ட போனை கொடு. என்றால் வாங்கியவன், அக்கா என்ன ஆட்சி? எதாவது பிரச்சனையா? என்றவனிடம்…
“அது எல்லாம் ஒன்னும் இல்லடா வீட்டுக்கு தான் வந்துகிட்டு இருக்கேன், அங்க வந்து பேசிக்கலாம். நீ குட்டிய பத்திரமா பாத்துக்கோ” எனக்கூறி போனை அணைத்து வெற்றியிடம் கொடுத்துவிட்டாள்.
“கண்ணாடியின் வழியே வெற்றி உமாவின் கலங்கிய விழிகளை கண்டுகொண்டான். அதை கண்டவன் மனமும் வெகுவாக கலங்கிவிட்டது”.
உமா சொன்னபடி பத்துநிமிடத்தில் வண்டி அவள் வீட்டின் முன் நின்றது. வண்டியை கண்டதும் வாசலில் அமர்ந்து இருந்த மல்லி, கண்ணன் மற்றும் குட்டி ஓடிவந்தனர். வந்தவர்கள் வண்டியில் இருந்து இறங்கிய உமாவின் கட்டுகளை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து விட்டனர்…
“குட்டி ஓடிவந்து உமாவையும் கட்டிக்கொண்டான். அதில் பேலன்ஸ் செய்யமுடியாமல் தடுமாறிய உமாவையும் வெற்றி தாங்கிக்கொண்டான்”.
கண்ணனை பார்த்த உமா, அம்மு காரில் இருக்கா, அவளை படுக்கவைடா எனக்கூறியவர் குனிந்து குட்டியை பார்த்து, “அச்சோ குட்டி!” இங்க பாருங்க அக்கா சொன்னமாதிரி வந்துவிட்டேன் இல்ல வா வீட்டுக்கு போகலாம்… “அக்காவாள் நிக்கமுடியல குட்டி கால்வலிக்குது பார், வா அங்க உட்காரளாம்” எனக்கூறி வெற்றி மற்றும் குட்டியை அழைத்துக்கொண்டு சென்றவள் அமர்ந்துவிட்டால். அதன்பின் குட்டி ஒரு முறைக்கூட அவளைவிட்டு நகரவில்லை.
உட்காருங்க சார் எனக்கூறி வெற்றியை திண்ணையில் அமரவைத்தாள் உமா, பின் மல்லியை பார்க்க அவள் அதன் அர்த்தத்தை புரிந்துகொண்டு உள்ளே சென்று தண்ணீர்கொண்டுவந்து வெற்றிக்கு கொடுத்தாள்…
அதை குடித்தவன் மணி ஆவதை உணர்ந்து, “சரிங்க டைம் ஆகிடுச்சி நான் கிளம்புகிறேன் எனக்கூறி சென்றுவிட்டான். அங்கு இருந்து சென்றவன் நேரடியாக தன் ஆஸ்தான இடத்திற்கு சென்றுவிட்டான். தன் வேட்டையை தொடர்வதற்கு”.
அவனின் மனமோ அவளை ரசணையாக ரசித்துக்கொண்டு இருந்தது, அப்பெழுது இந்த வரிகளும் ஒளிநாடாவில் ஒளித்தது…
” ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹோ..
இசையில் தொடங்குதம்மா விரஹ நாடகமே
வசந்தம் கண்டதம்மா வாடும் வாலிபமே
வசந்த கோலங்களை வானின் தேவதைகள்
கண்டு ரசிக்க வந்து கூடிவிட்டார்
இங்கு நமக்கு ஹோ..
இசையில் தொடங்குதம்மா விரஹ நாடகமே
வசந்தம் கண்டதம்மா வாடும் வாலிபமே
ஆ..
தேய்ந்து வளரும் தேன் நிலாவே
மடியில் வா
தேய்ந்திடாத தீ குழம்பாக ஒளிர வா
வானத்தில்..
வானத்தில் மின்னிடும் வைரத்தின்
தாரகை தோரணங்கள் பூமிக்கு கொண்டு வா
ஆ…
இசையில் தொடங்குதம்மா விரஹ நாடகமே
வசந்தம் கண்டதம்மா வாடும் வாலிபமே
ஆ..
நாளில் பாதி இருளில் போகும் இயற்கையில்
வாழ்வில் பாதி நன்மை தீமை தேடலில்
உயிர்களே…
உயிர்களே உயிர்களே உலகிலே
இன்பத்தை தேடி தேடி
கிரஹத்துக்கு வந்ததே
ஆ..
இசையில் தொடங்குதம்மா விரஹ நாடகமே
வசந்தம் கண்டதம்மா வாடும் வாலிபமே”
பாடல் முடிந்ததும் தன்னுடைய பழைய குடோணுக்கு சென்றவன், “அங்கு கட்டிவைத்து இருந்தவர்களை போன வேகத்தில் விட்ட உதையிலும் அரையிலும் நாற்காலியுடன் சேர்ந்து சிலஅடிகள் சென்று விழுந்தனர்”.
அருணும், விஷ்ணுவும் இழுத்துபிடித்து வெற்றியை அருகில் இருந்த நாற்காலியில் அமரவைத்தனர்.
பின் அங்கு இருந்த அடிஆட்கள் இருவரையும் நாற்காலியுடன் சேத்து அமரவைத்தனர்.
அமைதியாக இருந்த வெற்றி, அவர்கள் இருவரின் அருகில் அமர்ந்தான் கேள்விகளை கேட்க ஆரம்பித்தான். அவன் விட்ட உதையில் நல்ல அடிஏற்பட்டது. பரணிக்கு பயம் அதிகமாக ஆரம்பித்தது. இருந்தும் ஒரு வார்த்தை கூட அவன் பேசவில்லை. வெற்றி தன் ஆட்களிடம், “இவனுங்க இரண்டு பேரையும் உங்க பாதுகாப்புளையே வெச்சிக்கோங்க. நான் சொல்லுரவரை இவனுங்க உயிருடன் இருக்கனும் புரியுதா மார்க்?” புரியுது சார்… நாங்க பாத்துக்கிறோம் எனக்கூறி அனுப்பிவைத்தனர் அவனின் ஆட்களின் தலைவனான மார்க்.
வெற்றி வெளியே சென்றுதும் பரமன் முகத்தில் ஒரு குரூர புன்னகை தோன்றிமறைந்தது. அது எதையோ சாதித்தது போல் இருந்தது.
ஆனால் இந்த பரமனுக்கு தெரியவில்லை மார்க்க பற்றி. “வெற்றியின் தொழில் வட்டாரத்தில் அவனையும், அவன்குடும்பத்தையும் நெருங்க பயப்பட ஒரு காரணம் மார்க்”. வெற்றியின் வலதுகையும் ஆவான். “எப்படிஎப்படியே போகவேண்டியவனை கண்டு தன்னுடன் அரவணைத்து கொண்டார் வெற்றியின் தாத்தா சூரியதேவன். வெற்றியின் குடும்பத்தின் மீது அதீத பாசம் கொண்டவன். காயத்ரி, சகுந்தலா என்றாள் தனிபாசம் இவனுக்கு. அதிலும் ஜெயம்மாள் என்றாள் உயிர்”. மார்க் பற்றி பிறகு பார்க்கலாம்.