அத்தியாயம் 11:
பண்ணையார் வீட்டினர் அனைவரும் இரவு உணவை முடித்து விட்டு தோட்டத்தில் இருந்த உமா, மல்லி, மற்றவர்களையும் உணவு உண்ண அழைத்து வருமாறு சுப்பன் அனுப்பி வைத்தார் நாச்சியார்.
அதுவரை அனைவருமே அவர்களை மறந்துவிட்டனர்.
தோட்டத்தில் இருந்த கல் இருக்கையின் நடுவே அமர்ந்து இருந்த உமாவின் அருகில் மல்லி அமர்ந்து இருக்க அம்மு மற்றும் கண்ணன் இருவரும் குட்டிக்கு இணையாக விளையாடிக்கொண்டு இருந்தவர்களை வெகுவாக ரசித்துக்கொண்டு இருந்தனர்.
அப்பொழுது அங்கு வந்த சுப்பன் உமாவிடம், “ஏம்மா பெண்ணுங்களா”… அம்மா சாப்பிட சொன்னாங்கமா வாங்கம்மா… நீங்க போங்க அண்ணா… நாங்க பின்னாடியேவறோம் எனக்கூறியவளிடம்…
“சரிமா”… கொஞ்சம் சீக்கிறமா வாங்க. ரொம்ப நேரம் இருக்காதீங்க ம்மா , இனிமே பனி வேற அதிகமா வரும் ம்மா எனக்கூறி சென்றவரிடம்… சரிங்க அண்ணா என்ற உமா, தம்பிகள் மற்றும் தங்கையை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டாள்.
தயங்கியதயங்கி வந்தவர்களை ஜெயந்தி, “வாங்க பிள்ளைங்களா… வந்து சாப்பிடுங்க… ரொம்ப நேரமா வெளியே இருந்தீங்களா?” என்ற ஜெயந்தியிடம் உமா, “அந்தமாதிரி எல்லாம் இல்லைங்க… தோட்டத்தை பார்த்து இருந்தால நேரம் போனதே தெரியவில்லைங்கம்மா” என்றவளிடம்… சரிசரி சாப்பிடுங்க அப்புறம் பேசலாம்… நல்லா சாப்பிடுங்க… கூச்சப்படாம சாப்பிடுங்க எனக்கூறி அவர்களை வயிறு நிறைய உண்ணவைத்து தான் ஓய்ந்தாள் ஜெயந்தி.
உண்டுமுடித்து வந்தவர்களுக்கு தங்கள் வீட்டிலேயே அறையை ஒதுக்க சொன்ன ஜெயந்தியிடம் உமா, “இல்லங்கம்மா அதுசரிவராது… இங்க வேலை செய்யறவங்க தங்கி இருக்க அந்த வீட்டிலேயே நாங்களும் தங்கிக்கிறோம்” என்றவளிடம்…
சகுந்தலா, “என்ன உமா இப்படி பண்ற? இங்க தான் இத்தனை ரூம் இருக்கே இங்கேயே இருங்க” எனக்கூறியவரிடம்…
“அங்க இருந்தா தான் அவங்க எல்லாம் எங்ககிட்ட சகஜமா பேசிபழகுவாங்க… அப்பதான் எங்களால் ஒன்னா வேலை செய்ய முடியும் இல்லைனா ஒரு இடைவெளிவரும்… அதுமட்டுமல்ல அவங்க எங்ககிட்ட சரியா பேசக்கூட தயங்குவாங்க” எனக்கூறியவளின் கூற்றில் இருந்த உண்மைபுரிய அமைதியா அவர்களை கெஷ்டெளஸ்க்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்தனர்.
அப்பொழுது வர்ஷாவை தூங்கவைத்துவிட்டு வந்த மதன் உமாவை பார்த்த உடன் யோசனையில் ஆழ்ந்தான்.
உமாவே மதனைபார்த்த உடன் அதிர்ச்சியில் உறைந்துவிட்டாள். அதை சாமர்த்தியமாக யாருக்கும் தெரியாமல் மறைத்தும்விட்டாள்.
உமாவை பார்த்த மதன், “உங்க பேர் என்ன ம்மா? நாம இதுக்கு முன்னாடி பார்த்து இருக்கோம்?” என்றவனிடம்…
உமா, “என் பேர் உமா சார்.. இவ என் தங்கச்சி அம்மு, இவனுங்க என் தம்பிங்க கண்ணன், குட்டி சார், இவ என் தோழி மல்லிகா சார்… நான் இதுக்கு முன்னாடி இங்க வந்தது இல்லைங்க சார்… நான் இப்பத்தான் உங்களை பார்க்கிறேன்” எனக்கூறியவளிடம்… மதன், சார்னு எல்லாம் கூப்பிடவேண்டாம் ம்மா. அண்ணானு கூப்பிடுங்கள்.
சரிங்க அண்ணா… இனி அப்படியே கூப்பிடறோம் அண்ணா என்றவள். மேடம் நாங்க பைய அந்த ரூம்ள வச்சி இருக்கோம் எடுத்துக்கிறோம். ஏன் உமா… அவரு அண்ணனா நான் மேடம்? ஒழுங்கா மதனின் கூப்பிடு எனவம்பு செய்தாள் ஜெயந்தி.
அப்பொழுது வந்த சுப்பன், அம்மா அங்க இருந்த இரண்டு ரூம் சுத்தம் பண்ணியாச்சி என்றவரிடம்… சரிங்க அண்ணா நீங்க போய் தூங்குங்க நாங்க பாத்துக்கிறோம் எனக்கூறி அனுப்பி வைத்தான் மதன்.
மதன், “வாங்கம்மா நான் ரூம் காட்டுகிறேன் எனக்கூறி அழைத்து சென்றவன், அங்கு இருந்த இரண்டு அறைகளை காட்டி அதில் இவர்களை தங்கிக்க சொல்லியவன். உமாவிடம் மீதியை காலையில் பார்த்துக்கொள்ளலாம் எனக்கூறி சென்றுவிட்டான்”.
நீண்டநேரம் பயணத்தில் அனைவரும் சாப்பிட உடன் உறங்கிவிட்டதாள் அவர்களுக்கு இவர்கள் கெஷ்டெளஸ்க்கு சென்று தங்கிக்கொண்டது தெரியாமல் போனது.
அவர்களை விட்டுவிட்டு தன் அறைக்கு வந்து கட்டிலில் அமர்ந்த மதன் யோசனையாக இருந்ததை பார்த்த ஜெயந்தி, “என்னங்க நான் வந்ததுகூட தெரியாம யோசனையா இருக்கீங்க… என்ன விஷயம் மதன்”. இல்லடா இந்த பெண்ணை பார்த்தா எங்கே பர்த்தமாதிரி இருக்கு, ஆனா எங்கைனு தான் தெரியவில்லை ஜெயந்தி.
அதற்கு ஜெயந்தி, “ஒன்னும் அவசரம் இல்ல மதன் நல்லா நிதானமா யோசனை பண்ணுங்க ஒரு வாரம் இவங்க எல்லாம் இங்க தான் இருப்பாங்க இப்பப்படுங்க எனக்கூறி அவனை படுக்கவைத்து தானும் படுத்துவிட்டாள்”. படுத்த சிறிது நேரத்தில் இருவரும் உறங்கிவிட்டனர். அத்தனை கலைப்பாக இருந்தது.
அங்கு உமாவே பதட்டத்தில் இருந்தாள்… எங்கே மதன் தன்னை அடையாளம் கண்டு பிடித்துவிடுவானா என்ற அச்சம் அதிகமாகவே இருந்தது. ஆனால் அவளுக்குமே மதனை பார்த்ததாக நினைவில் இல்லை. ஆனால் அவன் குரல் மட்டும் நன்கு பரிச்சயமான குரலாக தோன்றியது அவளுக்கு அது ஏன் எனத்தான் அவளுக்கு விளங்கவில்லை.
குட்டியின் குரலில் நடப்புக்குவந்தவள், அம்மு நான் அவனுங்களுக்கு படுக்கையை போட்டுவிட்டுவறேன் நீங்க ரெண்டுபேரும் படுக்கையை தட்டிவிட்டு படுங்க.
மல்லி, “நீ போய் அவங்கள பாரு நாங்க இங்க பாத்துக்கிறோம்… முன்னையே குட்டி தூக்கம்வருதுனு சொன்னான் உமா.. நீ போடி” என்றவளிடம்…
சரி புள்ள எனக்கூறி அங்கு சென்றாள்… சென்றவள் அப்படியே கட்டிலில் படுத்திருந்தவர்களை எழுப்பிவிட்டு, பெட்டை தட்டிவிட்டு, படுக்கையை சரிசெய்து, தம்பிகள் படுக்கவைத்துவிட்டு,லைட்டை அணைத்துவிட்டு, கதவை நன்றி சாத்திவிட்டு வந்து தன் அறையில் படுத்துக்கொண்டாள். படுத்த சிறிது நேரத்தில் அவளும் உறங்கியும்விட்டாள். அடித்துபோட்ட மாதிரி அனைவரும் நன்றாக உறங்கினர்.
காங்கேயத்தில் பண்ணையாரின் பழைய குடோனில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பரமனையும் அவனுடன் இருந்தவனையும் மார்க் ஒரு வாரம் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தான்.
பரமனையும் அவனின் ஆளையும் நையப்புடைத்து, ஊர்பேர் தெரியாத ஒரு சின்ன மருத்துவனையின் வாசலில் போட்டுவிட்டான். அதோடு விடாமல் அவர்கள் இருவரையும் கண்காணிக்க ஆட்களையும் அங்கே வைத்து இருந்தான்.
“பெண்ணிகளின் மேல் கைவைத்தான் என்றவுடனே பரமன் மேல் அளவுகடந்த கோபம் வந்தது மார்க்கு. அதிலும் தனியா யார் துணையும் இல்லாமல் வாழும் பெண்களிடம் தவறாக நடக்க முயன்றான் என்றவுடன் அவன் மேல் கொலைவெறியே வந்தது. அந்த வெறிக்குத்தான் இந்த ஒரு வாரமும் தீனி போட்டுக்கொண்டான்”.
இங்கு நடந்த, நடக்கும் அனைத்து விஷயங்களையும் ஒன்று விடாமல் வெற்றியிடம் கூறிவிட்டான் மார்க்.
*************************************************×*******************
அடுத்த நாள் காலையில் வழக்கம் போல் நான்கு மணிக்கே எழுந்துவிட்டாள் உமா. எழுந்ததும் முகம் கழுவிவிட்டு, பல்துளக்கிவிட்டு, காலைகடன்களை முடித்துவிட்டு வந்து பார்த்தால் அனைவரும் உறங்கிக்ககொண்டு இருந்தனர்.
வெளியே வந்த உமா பெரிய வீட்டை பார்க்க அதுவும் அமைதியாக இருந்தது. சற்று வெளியே வந்து தோட்டத்தை பார்த்தவள் கண்கள் கண்டகாட்சியில் மெய்மறந்து நின்றுவிட்டாள்.
“அந்த பனிப்பெய்யும் காலைவேலையில் சுற்றிலும் புகை போல் சூழ்ந்த பனிகளுக்கு நடுவே, சூரிய ஒளியும் இல்லாமல் நிலவொளியும் இல்லாமல் சிரிய அளவில் உள்ள லைட் வெளிச்சத்தில் அந்த தோட்டமானது அவ்வளவு ரம்மியமாக காட்சி தந்தது… அந்த காட்சியை பார்க்கும் போது மனதில் உள்ள அத்தனை பாரமும் நீங்கி ஒரு இதம் பரவுவதுபோல் இருந்தது. தானாகவே முகத்தில் புன்னகையும் குடிகொண்டது”.
சிறிது நேரத்தில் அரவம் கேட்டு திரும்பிபார்த்த போது மல்லி சிரித்த முகத்துடன் வந்துகொண்டு இருந்தாள்… வந்தவள், “என்ன புள்ள இந்த இங்கன இருக்க?… நீங்க எல்லாம் தூங்கிகிட்டு இருந்தீங்க அதன் தொந்தரவு பண்ணாம இங்க வந்துடேன் மல்லி… ஏன் மல்லி நைட் நல்ல தூக்கமா? ஆமாடீ உமா” நல்ல தூக்கம் குளிர் நல்ல இதமா இருந்ததா அது தான் அடிச்சிபோட்ட மாதிரி நல்ல தூக்கம்.
அதுசரி அங்கு எப்படி? நான் நல்லா தூங்கீட்டேன்டீ… ரொம்ப தூரம் வந்ததால் ஏற்பட்ட அசதியால் தூக்கம் நல்லா வந்தது மல்லி… ஆனா என்ன எப்பவும் எழுந்திரிக்கிற நேரத்தில முழிப்பு வந்துடுச்சிடீ…. இங்கு மட்டும் என்ன வாழுது புள்ள. நீ நாளுமணிக்கு எழுந்திரிப்ப, நான் நாளுமுப்பதுக்கு எழுந்திரிப்பேன் அதுதான் வித்தியாசம் உமா.
அதற்கு உமா, அது எல்லாம் இருக்கட்டும் இப்ப நாம என்னா பண்றது புள்ள? இந்த நேரத்தில் சும்மா இருந்தா நாளே ஓடாது புள்ள.
மல்லி, “அடிபோடி… நம்ம தலையெழுத்து தான் இப்படி எழுந்து அவுதிஅவுதியா வீட்டு வேலையை பார்த்துவிட்டு, தின்னும்திங்காம வேலைக்கு போகனும்னு இருக்கு… அவங்களுக்கு என்ன தலைவிதி? இவ்வளவு சீக்கிரம் எழுந்து வேலைபார்க்கனும்னு புள்ள”…
அதற்கு உமா, “அது என்னவோ உண்மை தான்… சரி வா புள்ள நாம குளிச்சிட்டு வந்து பார்க்கலாம்… அதுங்காட்டியும் மணி ஐந்து ஆகிவிடும். வாவா போலாம் எனக்கூறி அழைத்து சென்றாள் மல்லியை”.
இருவரும் குளித்துவிட்டு வந்து நேற்று போட்டு இருந்த உடைகளை துவைத்து காயவைத்துவிட்டு, தலைவாரி புறப்பட்டு அமரும்போது மணி ஐந்து ஐ தொட்டுவிட்டது.
அப்படியே சிறிது நேரம் வெளியே அமர்ந்தனர். அப்பொழுது மல்லி, “கமல் சாரும், அம்பிகா மேடமும் நடிச்ச படத்துல ஒரு பாட்டு வரும் உமா… அந்த பாட்டு இந்த காலை நேரத்துக்கு ரொம்பவே பொருத்தமா இருக்கும் புள்ள… ஆனா என்னா பட்டுனு தான் தெரியல. உனக்கு தெரியுமா உமா? என்ற மல்லியிடம்…
உமா, அதுவாடி… காலைத்தென்றல் பாட்டு. ரொம்ப ரொம்ப அருமையா இருக்கும் மல்லி”.
அதற்கு மல்லி, நீ அந்த பாட்ட பாடு புள்ள… சரி மல்லி பாடுகிறேன்.. ஆனா நீயும் எங்கூட பாடனும் மல்லி. ஓகே புள்ள.. பாடிடலாம்… என்றதும் பாட ஆரம்பித்துவிட்டாள் உமா… அவளுடன் இனைந்து மல்லியும் பாட ஆரம்பித்தாள்.
ஆஹா ஆஆஆ ஆஆஆ
காலை தென்றல்
பாடி வரும் ராகம் ஒரு
ராகம் ராகம் ஒரு ராகம்
பறக்கவே தோன்றும்
சிறகுகள் வேண்டும்
சிறகுகள் வேண்டும்
காலை தென்றல்
பாடி வரும் ராகம் ஒரு
ராகம் ராகம் ஒரு ராகம்
என உமா பாட மல்லியும் அவளுடன் இணைந்து பாட ஆரம்பித்தாள்.. பின் இருவரும் இணைந்து பாடினர்.
குயில்கள் மரக்கிளையில்
சுரங்கள் சேர்க்கும் மலர்கள்
பனித்துளியில் முகங்கள்
பார்க்கும்
தினந்தோறும் புது
கோலம் எழுதும் வானம்
இரவிலே நட்சத்திரம்
இருந்ததே எங்கே
பனிதுளிகளாய் புல்வெளியில்
விழுந்ததோ இங்கே
இந்த இன்பம்
இதம் பதம் இது ஒன்றே
ஜீவிதம்
காலை தென்றல்
பாடி வரும் ராகம் ஒரு
ராகம் ராகம் ஒரு ராகம்
உறங்கும் மானுடனே
உடனே வா வா போர்வை
சிறையை விட்டு வெளியே
வா வா
அதிகாலை உன்னை
பார்த்து வணக்கம் சொல்லும்
காலையின் புதுமையை
அறியவே இல்லை
இயற்கையின் பாஷைகள்
புரியவே இல்லை
இந்த இன்பம்
கொள்ளை கொள்ளை
நெஞ்சில் ஒரே பூ மழை
காலை தென்றல்
பாடி வரும் ராகம் ஒரு
ராகம் ராகம் ஒரு ராகம்
பறக்கவே தோன்றும்
சிறகுகள் வேண்டும்
சிறகுகள் வேண்டும்
காலை தென்றல்
பாடி வரும் ராகம் ஒரு
ராகம் ராகம் ஒரு ராகம்
பாடி முடித்தவர்கள் இருவர் முகத்திலும் அத்தனை மகிழ்ச்சி மற்றும் நிம்மதியாகவும் மனம் உணர்ந்தது.
அப்பொழுது உமா, இதுக்கும் மேல நேரத்தை நெட்டி தல்ல முடியாது மல்லி… வாடீ ஒரு எட்டு போய் பார்த்துவிட்டு வருவோம் என்றவளிடம்….
மல்லி, “சரி வா புள்ள போய் பார்க்கலாம்… சீக்கிறமா போய் வேலைமுடிச்சா தான் கொஞ்சம் என் டார்லிங் கூட விளையாட முடியும் எனக்கூறி உமாவை அழைத்துக்கொண்டு சென்றாள்”.
அங்கு சென்றவர்களை வரவேற்றது சகுந்தலா மற்றும் காயத்திரியும் தான்.
சகுந்தலா, “என்னமா அதுக்குள்ள வந்துட்டீங்க?… நைட் நல்லா தூங்குனீங்களா ம்மா இல்லையா?”…
மல்லி, “அம்மா நாங்க நல்லா தூங்கிவிட்டோம்… நாங்க வளக்கமா நாளுமணிக்கே எழுந்துக்குவோம் ங்கம்மா”.
காயத்திரி, “நாளு மணிக்கே எழுந்து சாப்பிட்டு விட்டு மறுபடியும் தூங்கிடுவையா மல்லி?”… “அம்மா அப்படி எல்லாம் இல்லை, மல்லி உண்மை தான் சொல்லறாம்மா. நாங்க நேரமா எழுந்தா தான் வீட்டுவேலை முடித்துவிட்டு, பசங்கள பள்ளிக்கு கிளப்பி அனுப்பிவிட்டு, சாப்பிட்டு, இருக்க துணிய துவைத்து போட்டுவிட்டு வேலைக்கு வர டைம் சரியா இருக்கும் ங்கம்மா”.
மல்லி, “இப்ப ஒத்துக்கிறீங்களா? நான் சொன்னத உண்மைனு” என்ற மல்லியையும், உமாவையும் ஆச்சரியமாக பார்த்தனர் காயத்ரியும், சகுந்தலாவும். கூடவே பழைய நியாபகங்களும் வந்தது.
அதை கவனித்த உமா, “நீங்க அப்படி உட்காருங்க எனக்கூறி இருவரையும் அமரவைத்துவிட்டு டீ போட, மல்லி காபியை போட்டாள். அவர்களுக்கு காபியை கொடுத்துவிட்டு இவர்கள் டீயை எடுத்துக்கொண்டனர்”.
உமா, “சகுந்தலாம்மா… என்ன பலமா ஏதோ யோசனையில இருந்தீங்களே எதாவது பன்னனும்? என்றவளிடம், இல்லடீ உமா… உங்களை பார்க்கும் போது எங்களுக்கு பழசு எல்லாம் நியாபகம் வருதுடீ”…
“அப்படியா!”… அப்ப என்னதான் நியாபகம் வருதுனு சொல்லுங்க ம்ம… சும்மா நாங்களும் தெரிஞ்சிக்கிறோம் எனக்கூறி கதை கேட்க ஆர்வமாக அமர்ந்தாள் மல்லி.
சகுந்தலா, “எங்க அப்பா, அம்மா வீடு இங்கு மாதிரி வசதியானவங்க இல்ல டீ… அந்த நாள் கஷ்டப்பட்டாதான் அன்னைக்கு சோறு. அப்படி இருந்தாலும் எந்த குறையும் இல்லாம தான் எங்களை வளர்த்தாங்க எங்க அப்பா, அம்மா. வசதி இல்லாத நாள அவங்களால எங்களை படிக்கவைக்கமுடியல. திடீர்னு ஒரு நாள் வயல் வேலைக்கு போன அப்பாவ பாம்பு கடிச்சிடுச்சி. வைத்தியம் செஞ்சும் பயன் இல்லாம போய்டுச்சி. அப்பா போன துக்கத்துலையே அம்மாவும் போய் சேர்ந்துட்டாங்க”.
“அடுத்து என்ன பண்றது தெரியாம நடுத்தெருவில் நிற்கும் போதுதான் ஜெயா அக்கா வந்தாங்க. அவங்களுக்கு என்னைய புடிச்சிபோய் மாமாவுக்கு கல்யாணி பண்ணிவச்சாங்க. அப்ப தான் தம்பிக்கு காயத்ரியை புடிச்சி போய் அவளை கட்டிக்கிட்டாங்க. இத்தனை வருஷத்துல ஒரு முறை அக்காவும் சரி, மத்தவங்களும் சரி எங்க மனசு கஷ்டப்படும்படி யாரும் நடந்துகிட்டது இல்ல. ராணி மாதிரி பார்த்துகிறாங்க”.
காயத்திரி, “ஜெயா அக்காவ பத்தி செல்லவே வேண்டாம்… அவங்கள மாதிரி யாராலையும் இருக்கமுடியாது. அக்கா பிறந்த இடமும் ரொம்ப செல்வாக்கான இடம். அவங்க தகுதிக்கு கொஞ்சம் கூட அகம்பாவம் இல்லாம, எல்லார்கிட்டையும் ரொம்ப அன்பா நடந்துக்குவாங்க. அவங்க மனசு சுத்தமான தங்கம் உமா”… என பழைய நினைவுகளில் மூழ்கியவரை நாச்சியார் வந்து கலைத்தார்.
நாச்சியார், “என்ன எல்லாரும் காலையிலே கதை பேச உட்கார்ந்துட்டீங்களா?… சரி ராத்திரி நல்லா தூங்கி எழுந்தீங்களா? எந்த தொந்தரவும் இல்லையில்ல?” என கேள்விகளை அடுக்கியவரைகண்டு உமா, “நாங்க நல்லா தூங்கினோம் பாட்டிம்மா… எந்த பிரச்சினையும் இல்லை… யாரும் தொந்தலவு பண்ணவில்லைங்க பாட்டி”.
மல்லி, “நீங்க நல்லா தூங்கி எழுந்தீங்களா? என்றவளிடம்… இல்லடி… இந்த குளிர் வேற தாங்கமுடியல… கால் வேற ஒரே வலி. அதுதான் சீக்கிரம் எழுந்துவிட்டேன் என்றவரிடம் பேச்சி கொடுத்துக்கொண்டே காபியை போட்டுக்கொடுத்தாள் உமா”.
அந்த குளிருக்கு காபி அத்தனை இதமாக இருந்தது.
உமா நாச்சியாரிடம், “பாட்டி காலைல சாப்பாட்டுக்கு என்ன பன்றது?… எத்தனை அயிட்டம் பன்றது? என்றவளிடம்… நாச்சியார், அதை சகுந்தலாகிட்டையும் காயத்ரிகிட்டையும் கேட்டுகோங்க டீ. என்னைய இந்த ஒரு வாரமும் டிஷ்டிரப் பண்ணாதிங்க டீ.. நான் என்பேத்திங்க கூட சந்தோசமா இருக்கனும் எனக்கூறி சென்றவரிடம்”.
மல்லி, “ஆமா உங்களைய ராக்கெட் விட சொன்னாங்க… உங்க பேத்திங்க கூட சந்தோசமா இருக்க நேரம் பார்த்தாது பாருங்க. ஒரு வார்த்தை சொல்ல இவ்வளவு அழப்பறையா? இது உங்களுக்கு ஓவரா தெரியல? என்றவளுக்கு பழிப்பு காட்டிவிட்டு சென்றார் நாச்சியார்”.
அதை பார்த்த மற்ற பெண்கள் வந்த சிரிப்பை அடக்கமுடியாமல் சிரித்துவிட்டனர்.
மல்லி, உமா இருவரும் வேலைக்கு சோ்ந்த ஒரு வாரம் இப்படித்தான். “மலருக்கும் நாச்சியாருக்கு அவ்வப்போது முட்டிக்கொள்ளும். ஆனாலும் இவரும் ஒருவரைஒருவர் பார்க்காமலும் சண்டைபோடாமலும் அந்நாள் போகாது அவர்களுக்கு”.
அவர் சென்றதும் உமா சகுந்தலாவிடம் என்ன சமைப்பது என கேட்டாள்… அதற்கு அவர், இடியாப்பம் அதற்கு தேங்காய் பாலும், பொங்கல் அதற்கு சட்னி மற்றும் சாம்பார் அப்பறம் இட்லி, ஆளுக்கு இரண்டு பூரி வரமாதிரி கணக்கிட்டு மாவு பெசஞ்சிக்குங்க அதுக்கு குருமாவும் வச்சிக்கலாம்…
“சரிங்க அம்மா”… அப்ப நாங்க வேலையை ஆரம்பித்துவிடுகிறோம் எனக்கூறிய உமாவுடன் இனைந்து காலை உணவு செய்ய தயாராகிவிட்டனர் இரண்டு தோழிகளும் . அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தனர் சகுந்தலா மற்றும் காயத்திரி.
அனைவரும் ஒருவர் பின் ஒருவராக வந்துகொண்டு இருந்தனர்… இதற்கு இடையே அவர்களுக்கு தேவையான டீ, காபி மற்றும் பால் என போட்டுக்கொடுத்தனர்.
இதற்கிடையில் உமா தங்கள் அறைக்கு சென்று தூங்கிகொண்டு இருந்த அம்மு, கண்ணன் மற்றும் குட்டியை எழுப்பிவிட்டு வந்தாள். அவர்களும் குளித்துவிட்டு வந்து டீ குடித்துவிட்டு இவர்களுக்கான உதவிகளை செய்து கொடுத்தனர்.
அப்பொழுதுகூட தூங்கி எழுந்து வந்த வர்ஷா புதிதாக தங்கள் வீட்டிற்கு வந்தவர்களை பார்த்தாள்… அதிலும் அவளை போல் சிறிய பையனாக இருந்த குட்டியை மிகவும் பிடித்துவிட்டது. குட்டிக்கும் வர்ஷாவை பிடித்துவிட்டது. அவர்களுடன் சேர்ந்து விளையாடவே நேரம் சரியாக இருந்தது வர்ஷாவுக்கு… இவர்களுடன் மீனு, அம்மு மற்றும் கண்ணன் மூவரும் இணைந்த ஐய்வர்படை நன்றாக விளையாண்டு கொண்டிருந்தனர்.
உமா, மல்லி எல்லாம் முடிந்துவிட்டது… இன்னும் பூரி மட்டும் போடனும்… அதையும் அவங்க கேட்கும் போது போட்டுக்கலாம் மல்லி…
என்ற உமாவிடம் மல்லி, “என்னடி எல்லாம் காரமா இருக்கு, இனிப்புக்கு எதுவும் சொல்லவில்லையே சகுந்தலாம்மா… இப்ப என்ன பண்ண என்றவளிடம் அங்கு வந்த காயத்ரி, பாயாசம் செய்துவிடு மல்லி… மாப்பிள்ளைக்கு பாயாசம்னா ரொம்பரொம்ப பிடிக்கும்”…
உமா, “சரிங்க அம்மா… பருப்பு பாயாசம் தான ம்மா?” ஆமா உமா… திராட்சை மட்டும் போட வேண்டாம்…
என்ற காயத்திரியிடம் மல்லி, “ஏங்க ம்மா திராட்சை போடவேண்டாம்?… திராட்சை போட்டாதான பாயாசம் நல்லா இருக்கும்”…
“இல்ல மல்லி… கருப்புதிராட்சை சூடு.. கர்பமா இருக்க பெண்ணுங்க அதை தவிர்க்கிறது தான் நல்லது”… அதனால தான் சொல்லறேன்… நீங்க பாத்துக்குங்க நான் போய் அக்காவ கூட்டிகிட்டுவறேன் எனக்கூறி சென்றுவிட்டார்.
மல்லி உமாவிடம், “ஏம்புள்ள… சாதாரணமா சாப்பிட்டா நல்லதுனு செல்லறாங்க. ஆனால் கர்பமாக இருக்க பெண்ணுக்கு ஒவ்வாமைனு செல்லறாங்க”…
உமா, “ஆமாம் புள்ள.. இது மாதிரி நிறையா இருக்கு”.
உதாரணமா: கர்பிணி பெண்கள் எடுத்துக்கொள்ள கூடாதவை:
1. பப்பாளி, அன்னாச்சி, எள்ளு இதை எல்லாம் சாப்பிடக்கூடாது.
2. எண்ணெய் பதார்த்தம் முடிந்தவரை சேர்த்துக்காமல் இருப்பது நல்லது.
3. செயற்கையாக குளிர்பானங்களை தவிர்க்க வேண்டியது நல்லது.
4. சர்க்கரை அதிக அளவு எடுத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது.
5. மைதாவினால் ஆன உணவினை தவிர்ப்பது நல்லது.
6. கருவாடு அதிகமா எடுத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது.
கர்பிணி பெண்கள் எடுத்துக்கொள்ளக்கூடிய உணவுகள்:
1. புடலம்பிஞ்சு, அவரைப்பிஞ்சு, வாழைப்பூ, வெண்டைக்காய், மாவடு, சேனை, கருணை, உருளைகிழங்கு போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
2. சிறுகீரை, அரைக்கீரை, மணத்தக்காளி, வெந்தயக்கீரை, பொன்னாங்கண்ணி, முளைக்கட்டிய பயிறு வகைகள் எடுத்துக்கொள்வது நல்லது.
3. பச்சைக்கொத்தமல்லி, துவரம் பருப்பு, பாதாம், பச்சைப்பயறு, முந்திரிபருப்பு போன்றவற்றை சாப்பிடலாம்.
4. நெல்லிக்காய், நார்த்தங்காய், இஞ்சி, சுக்கு, அரிசிகஞ்சி, பாற்கஞ்சி, நெற்கஞ்சி, பாயாசம் போன்று எடுத்துக்கொள்ளலாம்.
5. தோசை, இட்லி, தேன் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
இந்த மாதிரி நிறைய இருக்கு மல்லி.
இதை எல்லாம் கேட்ட ஜெயந்தி, முக்கியமா பெரும்பயிறுகள் உபயோகபடுத்தக்கூடாது மல்லி…
அதிலும் நகைகளில் ரூபியை பயன்படுத்தாமல் இருப்பதும் நல்லது என்றவளை மல்லி, “மதனி எப்ப வந்தீங்க?” எதாவது கொடுக்கட்டா… “பால் மட்டும் போது மல்லி… சாப்பாடு எல்லாம் ரெடியா மல்லி? ஆச்சி மதனி… பூரிமட்டும் போட்டா எல்லாம் ரெடி”.
உமா, மதனி நீங்க எல்லாரையும் வரசொல்லுங்க. அதுக்குள்ள எல்லாம் எடுத்துவச்சிடறோம் எனக்கூறி ஜெயந்தியை அனுப்பி வைத்தாள்.
அனைத்து பதார்த்தங்களையும் எடுத்து வைக்கவும், வீட்டினர் வரவும் சரியாக இருந்தது.
நாச்சியார் தோட்டத்தில் விளையாடிக்கொண்டு இருந்தவர்களை அழைத்துவந்தார்.
முதலில் குழந்தைகள் மற்றும் ஆண்களுக்கு உணவினை வைத்தனர்… அவர்கள் சாப்பிட்ட பிறகு வீட்டு பெண்ணகள் சாப்பிட அமர்ந்தனர். உமா மற்றும் மல்லியை சாப்பிட அழைத்தவரிடம் பிறகு சாப்பிடுவதால் கூறிய உமாவையும் மல்லியையும் கட்டாயப்படுத்தி அவர்களுடன் சாப்பிட வைத்தார்கள் சாரதாவும், ஜெயம்மாளும்.
பெண்ணிடம் எது அழகு?
எதை சொல்ல நான் இப்பெண்ணிடம்,
புத்தம் பொலிவுற மின்னும் அவளின் மேனி அழகையா?
உள்ளம் கொள்ளை கொள்ளும் அவளின் உடை அழகையா?
பூக்கள் போல் புன்முறுவலுடன் பூக்கும் அவளின் முக அழகையா?
காண்பதவரையும் காண வைக்கும் அவளின் நடை அழகையா?
இல்லை இல்லை என்றுமே சிறந்த நண்பனாக தோள் கொடுத்து, காதலியாக என்னில் மூழ்கடித்து, கணவனாக என்னை தேர்ந்தெடுத்து, இறுதியில் தாயாக என்னை சுமக்கும் அவளின் நல்ல குணமே எனக்கு என்றும் அழகு.