இரண்டு நாளாய் தீவிர யோசனையில் இருந்தாள் மது.
“என்ன கண்ணு,ஒரு மாதிரியா இருக்க??”
“ஒண்ணும் இல்ல அத்தை.. அகலை இன்னும் காணுமுன்னு யோசிச்சுட்டு இருந்தேன்..”
அவள் கேட்டுக் கொண்டிருக்கும் போது உள்ளே நுழைந்தாள் அகல்..
“வாடி, உன்னை தான் உன்ற அண்ணி தேடுறா.. என்னன்னு கேளு..??”
“என்ன அண்ணி??”
“வர்ற வெள்ளிக்கிழமை, மலைக்கோவிலுக்கு போவோம் வரியா அகல்..??”
“வெள்ளியா??இன்னிக்கு நாளைக்குன்னா போலாம் அண்ணி..வெள்ளி வர முடியாது..
நாளைக்கு போவோமா அண்ணி..??”
“ஹ்ம்ம்..இல்ல அகல்..வெள்ளிக்கிழமை என் பிறந்த நாள்.அதான், அங்க போலாம்னு பார்த்தேன்..”
“அப்படியா அண்ணி??அண்ணனை கூட்டிட்டு போயேன்.. என்ன ம்மா.. அண்ணா கிட்ட சொல்லிடு..”
“ராசா கிட்ட சொல்லுறேன் கண்ணு..கூட்டிட்டு போவான்..”
அவள் இதழில் வெற்றிப் புன்னகை..
“அம்மா,அப்புறம் விஷயம் தெரியுமா??அந்த பழனி, இங்க அய்யனார் கோவில் பின்னாடி இருக்குற, அவன் தோப்பு வீட்டுல தான் மயங்கி கிடந்தானம்..அவன் தோப்புல வேலை பார்க்குற மாரி தான், ஏதோ எடுக்க தோப்பு வீட்டுக்கு போனவன்..இவனை பார்த்துட்டு, ஆஸ்பத்திரில சேர்த்தானம்..
உடம்பெல்லாம் சிவப்பு சிவப்பா தடிப்பாம்.. ஏதோ, விஷ பூச்சி கடிச்சுருக்கும்னு, டாக்டர் எல்லாம் சொன்னாங்களாம்..
அவனே விஷம்..அவனை கடிச்ச பூச்சிக்கு என்ன ஆச்சோ??”
அகலின் பேச்சில், பக் என சிரித்தாள் மது..
“என்ன அண்ணி சிரிக்குற??”
“இல்ல, பூச்சிக்கு காட்டுற கருணை கூட அவனுக்கு இல்லையா??”
“அவனுக்கெல்லாம் இரக்க படவே கூடாது அண்ணி..இவன் பண்ணுற அலப்பறைக்கு, எவ கையிலையாச்சு அடி பட்டு, இப்படி ஆஸ்பத்திரில சேருவான்னு நெனச்சேன்..ஆனா, பூச்சி கடிப்பட்டு சேர்ந்துருக்கான்..”
“இன்னும் ஆஸ்பத்திரில தான் இருக்கானா??”
“ஆமா ம்மா.. நிறைய டெஸ்ட் எல்லாம் எடுத்துருக்காங்களாம்..அதெல்லாம் வந்த புறவு தான், என்ன பூச்சி கடிச்சிதுன்னு தெரிஞ்சு, மருந்து கொடுபாங்களாம்..”
“பூச்சிக்கா அகல்??”
“அண்ணி..நீ கூட நல்லா பேசுற போ..
ஆனா, பூச்சிக்கு தான் கொடுக்கணும் அண்ணி..”
அவர்கள் இருவரும் பேசி சிரித்தார்கள்..
மதுவின் புன்னகை முகத்தை பார்த்து, கலக்கம் அகன்றவராய் உள்ளே சென்றார் மரகதம்..
‘இந்த புள்ளைக்கு என்ன கஷ்டமோ?? அப்போ, அப்போ, உம்முன்னு ஆகுது..
அம்மா தாயி, நீ தான் அது பிரச்னையை தீர்க்கனும்..’
மலைக்கோவில் அம்மனிடம் வேண்டுதல் வைத்தார் மரகதம்..
அகல் சென்றதும் மாடிக்கு வந்த மதுவின் முகத்தில், புன்னகை தவழ்ந்தது..
அகல், நேற்று அவள் அன்னையிடம் பேசி கொண்டிருந்ததை கேட்டாள்..
வெள்ளி அன்று, அவள் கோவிலுக்கு வர முடியாது என்று தெரிந்து கொண்டாள்..
அதனாலேயே, அந்த நாளில் கோவிலுக்கு போக வேண்டும் என்று கூறினாள்..
அப்பொழுது தான் அவளை, ராஜாவுடன் அனுப்பி வைப்பார்கள், தனியே..
‘வரு,என் கிட்ட வசமா மாட்டிக்கிட்டீங்க.இனி, தப்பாவே முடியாது..’
புன்னகைத்து கொண்டாள்..
வெள்ளி அன்று, சிவப்பு வண்ண பட்டுப்புடவை உடுத்தி, மிதமான ஒப்பனையோடு கீழே வந்தாள் மது..
கூடத்தில் அமர்ந்திருந்த ராஜா,அவளை நிமிர்ந்து பார்த்துவிட்டு, கண் இமைக்க மறந்து நின்றான் ஒரு நிமிடம்..
பின் சூழ்நிலை உணர்ந்து,பார்வையை திருப்பிக் கொண்டான்..
முதல் முதலில், அவளை புடவையில் பார்க்கிறான்..
புன்னகைத்த மது, அவன் எதிரில் வந்து நின்று,
“போலாமா??”
“எங்க??”
“கோவிலுக்கு..”
“என்ன திடீருன்னு..??”
அவன் கேட்டுக் கொண்டிருக்கும் போது வந்த மரகதம்,
“ஆமா ராசா, சொல்ல மறந்துட்டேன்..மது கண்ணுக்கு இன்னிக்கு பிறந்த நாளாம்.. கோவிலுக்கு போணுமுன்னு சொன்னுச்சு..கூட்டிட்டு போ..”
“ஓ…”
‘என் கிட்ட சொல்லவே இல்லியே இவ..’
“பிறந்த நாள் வாழ்த்துக்கள்..”
“தேங்க்ஸ்..”
புன்னகைத்தாள்..
மரகதத்தின் காலில் விழுந்து வணங்கினாள்..
“நல்லா இரு கண்ணு..”
தன் முந்தானையில் முடிந்து வைத்திருந்த பணத்தை எடுத்து, அவளிடம் கொடுத்தார்..
“எதுக்கு அத்தை இதெல்லாம்??”
“வச்சுக்கோ கண்ணு..நல்ல நாளுல ஏதாவது கொடுக்கணும்..”
அவளிடம் கூறியவர்,
“கூட்டிட்டு போய்ட்டு வா ராசா..”
தலை அசைத்தவன்,அவளை காரில் கூட்டிக் கொண்டு சென்றான்..
“முருகன் கோவில் போவோமா??”
“ஏன்??”
“மலைக்கோவில்ல ஐயர் இருக்க மாட்டார்..முன்னவே சொல்லி வைக்கணும்..அர்ச்சனை எதுவும் செய்ய முடியாது..”
“பரவால்ல அங்கயே போவோம்..”
“அதென்ன?? அங்க தான் போகணும் உனக்கு..”
“ஏன்னா, அதானே நம்ம குலதெய்வம்..”
புன்னகையோடு கூறினாள்..
“அது சரி..”
அவன் இதழிலும் புன்னகை..
காரை
அடிவாரத்தில் நிறுத்தி விட்டு, இருவரும் மலை ஏறினார்கள்..
“வரு,அத்தை அவங்க கிஃப்ட் கொடுத்தாங்க..உங்க பரிசு எங்க??”
“திடீருன்னு பரிசு கேட்டா, என்ன செய்யுறது..??நீ முன்னாடியே சொல்லி இருக்கணும்.. அப்போ தான் வாங்கி வைக்க முடியும்..”
“ஆமா ஆமா,என் பிறந்த நாள், பிறந்த நாள்ன்னு, உங்களுக்கு அறிவிப்பு தரேன்..
லவர் அஹ் லட்சணமா, நீங்க தெரிஞ்சு வச்சுருக்கணும்..
இதுல, நான் சொல்லலைன்னு குறை வேற..”
“சரி விடு..இதெல்லாம் பழக்கம் இல்ல எனக்கு. இனி தானே கத்துக்கணும்..
ஆனா, உன் எப்ஃபில வேற தேதி பார்த்த ஞாபகம்..
இரு..”
தன் அலைபேசியை எடுத்தான்..
வேகமாய் அதை பறித்தவள்,
“அதெல்லாம் பார்க்க வேண்டாம்..”
“ஏன்??”
“அதான், நான் இன்னைக்குன்னு சொல்லுறேன்..அப்புறம் என்ன பார்க்குறிங்க??அதோட, அதுல நான் வேற தேதி கொடுத்துருப்பேன்..”
“என்ன??ஏன்??”
“சும்மா ஏன்?? ஏன்னுட்டு..??எல்லாம் ஒரு சேப்ட்டிக்கு தான்..பொண்ணுங்க எப்ஃபில பார்க்கறதே தப்பு..”
“ஓஹோ..அப்படியா மேடம்..??”
“அப்படி தான்..”
பேசிய படி கோவிலை அடைந்தார்கள்..
அம்மனை வழிபட்டு விட்டு, அவள் முகம் பார்த்தான் ராஜா..
அவள் தீவிரமாய் வேண்டிக் கொண்டிருந்தாள்..
அமைதியாய் நின்றான்..
கண் விழித்தவள் கண்கள், கலங்கி இருந்தது..திரும்பி இவன் முகம் பார்த்தாள்..
அவள் கலக்கத்தை பார்த்து விட்டு,
“என்ன மதி??”
“எனக்கு பரிசு எதுவும் வாங்கலைன்னு சொன்னிங்க தானே..அப்போ, நான் கேட்குற பரிசு தாங்க..”
“என் கிட்ட, இப்போ எதுவும் இல்லை மா..பணம் தவிர..”
“நீங்களே தெரிஞ்சு வாங்கி இருக்கணும்.. வாங்கலை..அதுனால, நான் கேட்குறதை நீங்க தந்தே ஆகனும்..”
“என் கிட்ட இருந்தா தரேன்..கேளு..”
“பேச்சு மாறக் கூடாது..”
“மாற மாட்டேன்..கேளு..இப்போ இருந்தா, உடனே தரேன்..”
அவள் கைகளை அவன் முன்னே நீட்டி, மூடி இருந்த விரல்களை திறந்தாள்..
அதில், பொன் மாங்கல்யம் இருந்தது..
அதிர்ந்து அவள் முகம் பார்த்தான்..
அவனுக்கு ஒரு நிமிடம், பேச்சே வரவில்லை..
“இதான், என் பிறந்த நாள் பரிசு..இதை என் கழுத்துல போடுங்க..”
நிறுத்தி, நிதானமாய், தெளிவாய் உச்சரித்தாள்..
“மதி விளையாடுறியா??”
“யாராவது தாலியில விளையாடுவாங்களா??”
“அப்புறம் இதுக்கு பேர் என்ன??இப்போ என்ன அவசரம்??இன்னும் ரெண்டு மூணு மாசத்துல, மாமா வந்துடுவார்..அப்புறம், முறை படி பேசி, நாம கல்யாணம் பண்ணிக்கலாம். இப்போ எதுக்கு இப்படி பண்ணுற??”
“எப்போ இருந்தாலும் பண்ணிக்க தானே போறோம்..இப்போ பண்ணி கிட்டா என்ன??
என் பிறந்த நாள் பரிசு இது..உங்க கிட்ட இருந்தா, மறுக்காம தாரதா சொல்லி இருக்கீங்க..பேச்சு மறாதிங்க..”
“என்னால முடியாது மதி..இது என்ன?? திருட்டு கல்யாணம்..நாம ஏன் அப்படி பண்ணனும்..??நமக்கு உறவு இருக்கு..உரிமை இருக்கு..எனக்கு உன்னை கல்யாணம் பண்ணிக்குற முறை இருக்கு..அப்புறம் ஏன் இப்படி, திடீருன்னு யாருக்கும் சொல்லாம, ரகசியமா பண்ணிக்கணும்..என்னால முடியாது..”
“புரிஞ்சுக்கோங்க வரு..எனக்கு பயமா இருக்கு..நம்ம கல்யாணத்துல பிரச்சனை வரும்..நாம பிரிஞ்சு போய்டுவோம்.இப்படி எல்லாம் தோணுது..
எ.. என் அம்மா பத்தி உங்களுக்கு தெரியாது..அவங்க ரொம்ப ஸ்டேட்டஸ் பார்ப்பாங்க..
நம்ம கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டாங்க..
நம்ம விஷயம் தெரிஞ்சா, உடனே எனக்கு வேற வரன் பார்க்க ஆரம்பிச்சுடுவாங்க..
அதுக்கு முன்ன, நான் உங்க மனைவி ஆகனும்..
அவங்களை விட, உங்களுக்கு என் மேல உரிமை ஜாஸ்தி ஆகனும்..அதுக்கு, இது ஒன்னு தான் வழி..”
“இல்ல மதி..அவங்க சம்மதிக்காட்டி, சம்மதிக்க வைப்போம்..
மாமா மூலம்..”
“அவங்க, யார் சொன்னாலும் கேட்க மாட்டாங்க..”
“முதல்ல முயற்சி பண்ணுவோம்..முடியலைனா, நானே உங்க வீட்டுக்கு வந்து, உன்னை கூட்டிட்டு வந்து, இங்க கல்யாணம் பண்ணுறேன்..”
“எப்படியோ, இங்க தானே உங்க குடும்ப வழக்க படி கல்யாணம் நடக்கும்.. அதுக்கு, இப்போவே பண்ணிக்கிட்டு, அம்மா கிட்ட சொன்னா என்ன??”
“மதி, நான் என்ன சொல்லுறேன்னு புரிஞ்சு தான் பேசுறியா??”
“எனக்கு புரியுது..உங்களுக்கு தான் புரியல, என் நிலைமை..இப்போ விட்டா என்னால..உ..உங்களை கல்யாணம் பண்ணிக்க முடியும்ன்னு தோணலை..”
“ச்சு.. என்ன மா..உனக்கு என்ன பிரச்சனை??அதையும் சொல்ல மாட்டேன்னு சொல்லுற..இப்போ, உடனே கல்யாணம் பண்ணிக்கணுமுன்னு வந்து நிக்குற..
கல்யாணம் என்ன விளையாட்டா..??
விடிஞ்சா கல்யாணம், பிடி டா பாக்கு வெத்தலையைன்னு சொல்லுற மாதிரி..
உடனே செய்யுற விஷயமா??நாள் கிழமை பார்க்கனும்..
பெரியவங்க இல்லாம..இப்படி யாரும் இல்லாம..நீயும் நானும் மட்டும் செய்ய, இது சின்ன விஷயம் இல்ல மதி..”
“எனக்கு புரியுது வரு..நீங்க சொன்ன மாதிரி, எல்லோரையும் அழைச்சு, சொல்லி ,முறை படி எல்லாம் பண்ணுவோம்..
இப்போ, என் திருப்திக்காக இதை என் கழுத்துல போடுங்க..அப்புறம், நீங்க சொன்ன மாதிரி செய்யலாம்..
அதுக்கு, எவ்ளோ நாள் வேணா நான் காத்திருக்கேன்..
ப்ளீஸ் வரு..”
ஒரு பெரு மூச்சு விட்டு, கண்களை இறுக்க மூடி திறந்தவன்..
“முடியாது மதி..வா போலாம் வீட்டுக்கு..”
அவள் கண்கள் கலங்கி, கண்ணீர் வழிந்தது..
ஒரு நிமிடம் எதுவும் பேசவில்லை அவள்..
பிறகு, தன் கண்ணிரை துடைத்தவள்..
“இதான், உங்க முடிவா வரு..??”
“ஆமாம்..”
“சரி..நீங்க, உங்க முடிவை மாத்திக்க வேண்டாம்..கிளம்புங்க..”
“கிளம்பவா??”
புருவம் சுருக்கி கேட்டவன்..
“நீ??”
“நான் வரல..வீட்டுல இருந்து கிளம்பும் போதே..அந்த வீட்டுக்கு திரும்ப வந்தா, உங்க மனைவியா தான் வருவேன்னு, உறுதி எடுத்துட்டு தான் கிளம்பி வந்தேன்..இப்போ திரும்ப, அங்க வர மாட்டேன்..”
“அப்புறம், என்ன பண்ணுறதா உத்தேசம் அம்மணிக்கு.??.”
“அதை பத்தி உங்களுக்கு என்ன கவலை??நீங்க போங்க..”
“மதி..என் பொறுமையை சோதிக்காத, கிளம்பு..”
“முடியாது..நான் வர மாட்டேன்..”
“வீட்டுல, உன் அத்தைக்கு என்ன பதில் சொல்ல..??”
“அதான், இப்போ உங்க கவலை..அத்தை கேள்வி கேட்கலைனா, எப்படியோ போன்னு விட்டுடுவீங்க, சரியா??”
“அறிவு கெட்ட தனமா பேசாத..
அவங்க கேட்பாங்கன்னு சொன்னேன்..அதுக்காக, எனக்கு அக்கறை இல்லைன்னு ஆயிடுமா??”
அனல் பறக்க கேள்வி கேட்டான்..
அதே அளவு கொதிப்போடு, அவளும் பதில் சொன்னாள்..
“அவங்க கேட்டா, மலை பாதைல சறுக்கி விழுந்து, போய் சேர்ந்துட்டேன்..அப்படின்னு சொல்லுங்க..”
அவள் சொன்ன மறு நொடி, அவன் கரம் அவள் கன்னத்தில் இறங்கியது..
“என்ன பேசுற??தொலைச்சுடுவேன்..”
“நீங்க என்ன தொலைக்குறது..நானே தொலைஞ்சு போறேன்..”
கன்னத்தை பிடித்த படி கூறியவள்..
கண்ணீரோடு, வேகமாய், கோவிலை விட்டு வெளியே வந்து, மலை முகடு நோக்கி சென்றாள்..
அவள் பின்னே விரைந்தவன்,
“ஏய்,நில்லுடி.. இப்போ நிக்குறியா, இல்ல காலை உடைக்கட்டுமா??”
அவன் பேச்சு எதுவும் காதில் விழாதது போல சென்றாள்..
“நிக்குறாளா பாரு..”
வேகமாய், அவள் கை பிடித்து நிறுத்தினான்..
“விடுங்க..நான் போய், கீழ குதிக்க தான் போறேன்..”
அவன் கைகளை விலக்க போராடிக் கொண்டே கூறினாள்..
அவன் பிடி இரும்பாய் இருந்தது..
அவளை இழுத்து வந்தான்..
“எப்போவும், என் கூடவே இருந்து காவல் இருப்பிங்களா??நீங்க இல்லாதப்போ நான் ஏதாவது பண்ணா, என்ன செய்விங்க??”
அவளை பிடித்திருந்த கையை இழுத்து, அதே வேகத்தில் கீழே தள்ளினான்..இதை எதிர்பார்க்காதவள், தரையில் விழுந்தாள்..
“போடி, போய் குதி..”
கோபத்தில் கத்தியவன்..
கண்கள் சிவக்க, கோப மூச்சுகள் விட்டான்..
பிறகு, தன் இரு கரம் கொண்டு தலையை கோதியவன்..
கண்களை இறுக்க மூடி திறந்தான்..
அவளை திரும்பி பார்த்தான்..
கைகளில் ஏற்பட்ட சிராய்ப்பை..கண்ணில் வழியும் நீரோடு பார்த்துக் கொண்டிருந்தாள்..
வேகமாய் அவள் கை பிடித்து எழுப்பியவன்..அதே வேகத்தோடு, தர தர வென இழுத்துக் கொண்டு கோவிலுக்கு வந்தான்..
“இப்போ என்ன, உன் கழுத்துல தாலி கட்டணும், அதானே??கொடு கட்டுறேன்..இன்னொரு தடவை இப்படி பேசு..அப்புறம் பேச, வாயில ஒரு பல்லு இருக்காது..”
ஆனந்த அதிர்வோடு, அவள் கையில் இருந்த தங்க தாலியை, அவனிடம் கொடுத்தாள்…அதை வாங்கிய வேகத்தில், அந்த தாலி சங்கிலியை அவள் கழுத்தில் போட்டு விட்டான்..
கண்களை இறுக மூடி திறந்தாள்..கண்ணீர் கன்னத்தில் வழிந்தது..
அம்மன் பாதத்தில் இருந்த குங்குமத்தை எடுத்து, அவள் நெற்றியிலும், தாலியிலும் வைத்து விட்டான்..
நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்..
கடு கடுவென தான் இருந்தது..
“போதுமா??”
அவன் கடுகடுப்பில்,
“கொஞ்சம் சிரிச்சா என்ன??”
“இன்னொரு அறை வாங்குறதுக்குள்ள கிளம்பு..”
அவனிடம் உதடு சுளித்தவள்,
“இப்போ யாருக்கும் சொல்ல வேண்டாம்..நீங்க சொன்ன மாதிரி..எல்லோருக்கு சொல்லி, திரும்ப கல்யாணம் பண்ணிக்குவோம்..”
அவளை முறைத்தவன்,வேகமாய் கோவிலுக்கு வெளியே சென்றான்..
திரும்பி அம்மன் முகம் பார்த்தவள்,
“என் வேண்டுதல் நிறைவேறிடுச்சு..நன்றி அம்மா”
வாய்க்குள் முணுமுணுத்தவள், கோவிலுக்கு வெளியே சென்றாள்..
வானை வெறித்து கொண்டு நின்றான் ராஜா..
“போலாம் மாமா..”
அவள் பேச்சில் அவளை முறைத்தவன்,கீழே இறங்கினான்..
புன்முறுவளோடு, இவளும் பின்னே சென்றாள்..
காரில் ஏறியதும், வேகமாய் அதை கிளப்பினான்..
“மெதுவா போங்க மாமா..எங்கேயாவது போய் முட்டிடாதீங்க..புதுசா கல்யாணம் ஆகி இருக்கு..உங்களை விட, உங்க உயிர் இப்போ எனக்கு முக்கியம்..”
“வாயை மூடிட்டு வாடி..”
“ஏன் மாமா கோவப்படுறீங்க..??இந்த ஜல்லிக்கட்டுல, காளையை அடக்குனா, வீரத்தை பாராட்டி பரிசு கொடுப்பாங்களாமே..அது மாதிரி,இந்த காளையை அடக்கி, கட்டாய கல்யாணம் பண்ணி இருக்கேன்,என் வீரத்தை பாராட்டி, எதாவது தாங்களேன்..”
“அதான், கோவில்ல வாங்குனியே கன்னத்துல பத்தலியா??”
“என்னமோ, முத்தம் கொடுத்த மாதிரி கேட்குறீங்க..க்கும்..”
நொடித்துக் கொண்டவள்,
அவன் கழுத்தில் இருந்த டாலர் சங்கிலியை, விரலால் எடுத்தாள்..
“இந்த செயின் தாங்களேன், இதுல ஆர்வின்னு, உங்க பேர் போட்ருக்கு.. நானே போட்டுக்குறேன்..”
அவள் கையை தட்டி விட்டவன்..
“ஒழுங்கா பேசாம வா.. இல்ல, வண்டில இருந்து தள்ளி விட்டுடுவேன்..”
“விடுவீங்க விடுவீங்க..நான் ராஜவர்மன் பொண்டாட்டி, ஞாபகம் இருக்கட்டும்..”
அவளை முறைத்தவன்,
“இங்க வந்த புதுசுல, அவ்ளோ பயந்த. இப்போ, வாய் அதிகம் ஆயிடுச்சு..எல்லாம், நான் கொடுத்த இடம்..”
“நீங்க தான், கொடுக்கவே மாட்டேங்குறீங்களே..”
போலியாய் ஒரு பெரு மூச்சு விட்டாள்..
‘இவளை..’
பல்லை கடித்தான்..
வீடு நெருங்கியதும், தன் தாலியை எடுத்து, சேலைக்குள் போட்டு மறைத்தாள்..
அவளை முறைத்தவன்..
‘இது தேவையா??’
என்னும் பார்வை பார்த்தான்..அவனை பார்த்து புன்னகைத்தவள்..
“உங்க செயினை வாங்காம விடமாட்டேன்..”
அவனை பார்த்து கண் அடித்தாள்..
‘போடி..’
என்னும் பார்வை பார்த்தான்..
வீட்டிற்குள் இருவரும் சென்றார்கள்..
அகல் வந்திருந்தாள்..
அவன் முகம் கடு கடுவென இருந்தது..இவள் முகம், சற்று சோர்ந்து இருந்தது..
“பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணி..”
அவள் கையை பிடித்து சொன்னாள்..
சிராய்ப்பு காயத்தில் பட்டதில்,
“ஸ்..ஸ்..ஸ்…”
என்றாள் மது..
“என்ன ஆச்சு கண்ணு..??”
“ஒண்ணும் இல்ல அத்தை.. கால் ஸ்லிப் ஆகி விழுந்துட்டேன்..கொஞ்சம் சிராய்ப்பு கையில, அதான்..”
“என்ன டா, எப்போ பாரு பிள்ளையை விழுக்காட்டி கூட்டிட்டு வர..பிடிச்சு தள்ளி விட்டியா.. ??பிறந்த நாளும் அதுவுமா??”
ராஜாவின் கடுகடுப்பு அதிகம் ஆனது..
“வேணா, அடுத்த தடவை இடுப்புல தூக்கிட்டு போய்ட்டு,
கூட்டிட்டு வரேன் உங்க மருமகளை..”
அவன் பேச்சில், பக் என சிரித்தாள் மது..
“பேசுறான் பாரு, கூறு கெட்ட தனமா..அவளை, பார்த்து கூட்டிட்டு போய்ட்டு வாரதில்லையான்னு கேட்டா, எப்படி பதில் சொல்லுறான்..”
“அவ என்ன குழந்தையா?? பார்த்து கூட்டிட்டு போக..விட்டா, ஒரு தொட்டில் கட்டி தாலாட்டு பாடுவீங்க போல..”
“இவன் ஏன், பச்சை மிளகாயை கடிச்ச மாதிரி கத்துறான்..??”
“நான் கீழ விழுந்ததும், மாமா பதறிட்டார்.. அதான்.. இல்லியா மாமா..??”
அவன் கோப பார்வையை ரசித்தவள்..
“தேங்க்ஸ் அகல்..”
சொல்லிய படி, தன் கையில் இருந்த இரண்டு தங்க வளையலை கழட்டி, அவளுக்கு போட்டு விட்டாள்..
“என்ன அண்ணி..??”
அதிர்வோடு கேட்டாள்..
“நீ தானே சொன்ன அகல்,உங்க குலதெய்வம் சக்தி வாய்ந்த அம்மன். வேண்டுனா நடக்கும்னு. இன்னிக்கு என் வேண்டுதல் நிறைவேறிடுச்சு..
வேண்டுதல் நடந்தா, உனக்கு வளையல் போடுறேன்னு சொன்னேன்ல, அதான் போட்டேன்..”
ராஜாவை பார்த்து கொண்டே கூறினாள்..
“அப்படியா அண்ணி??என்ன வேண்டுதல்?? இப்போவச்சும் சொல்லு..”
“அ.. அது, என் தோழி கிட்ட இருந்து நான் எதிர் பார்த்த விஷயம், போன்ல வந்துச்சு..அதான்..”
ஏதோ சொல்லி சமாளித்தாள்..
கோபம் குறையாமல், ராஜா கிளம்பி வெளியே சென்றான்..
“இப்போ தான், உன் கிட்ட ஒழுங்கா பேசுறான்னு பார்த்தேன்..திரும்ப முறைக்குறான்..என்ன தான் பிரச்சனையோ, இவனுக்கு..”
கூறிக்கொண்டே, உள்ளே சென்றார் மரகதம்..
“என்ன ஆச்சு அண்ணி??அண்ணனுக்கும் உனக்கும் என்ன பிரச்சனை??”
“நான், என் பிறந்த நாளை முன்னவே சொல்லலன்னு, உன் அண்ணாக்கு கோவம்..எனக்கு பரிசு தர முடியலையாம்..”
“ஓ..சரி..சரி..”
ஒரு மார்க்கமாய் புன்னகைத்து கூறினாள் அகல்..
அவள் நினைப்பை ஆமோதிப்பது போல், இவள் முகத்திலும் புன்னகை..