அத்தியாயம்-23
ராஜாவின் தந்தை அருள்மொழியின் அக்கா சாவித்திரியின் மகன் தான் மிதுன்..சாவித்ரிக்கு இரண்டு பெண் பிள்ளைகளும், ஒரு ஆண் பிள்ளையும்..
இரண்டு பெண்களுக்கும் கல்யாணம் செய்து கொடுத்து விட்டார்..
ஒரு பெண் வெளிநாட்டிலும், இன்னொரு பெண் கல்கத்தாவிலும் வசிக்கிறார்கள்..
மிதுன் கடைக்குட்டி..சாவித்திரி குடும்பத்தோடு சென்னையில் இருக்கிறார்..
மிதுன் மருத்துவனாக சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணி புரிகிறான்..
சாவித்திரியின் கணவன் வழி சொந்தத்தில் ஒரு கல்யாணம்..அதற்கு, அவரும் அவர் கணவரும் வர முடியாத சூழல், எனவே மிதுனை அனுப்பி வைத்தார்..
திருமணம் முடித்து விட்டு மரகதம் வீட்டுக்கு வந்தான் மிதுன்..
“வா லே மிதுன்..எப்படி இருக்க??”
“நல்லா இருக்கேன் அத்தை.. நீங்க எல்லாம் எப்படி இருக்கீங்க..??”
“நல்லா இருக்கோம் லே..உட்காரு..என்ன சாப்பிடுற??”
“இப்போ தான் கல்யாண வீட்டுல சாப்பிட்டு வந்தேன் அத்தை..”
இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது,மில்லில் இருந்து ராஜா வந்தான்..
“வா மிதுன்..எப்படி இருக்க??”
“நல்லா இருக்கேன் மாமா..நீங்க ஏன், இப்படி இளைச்சு போய் இருக்கீங்க..??”
“நல்லா கேளு லே..அப்பவாச்சும் ஒழுங்கா பதில் சொல்லுறானான்னு பார்ப்போம்..”
“அம்மா..”
கண்டிக்கும் குரலில் அழைத்தான் ராஜா..
“க்கும்.. நீங்க பேசிட்டு இருங்க..இதோ வரேன்..”
“என்ன மாமா??கல்யாண கவலையா??உங்களுக்கு தான் பொண்ணு கொண்டு வந்துருக்கேன்..பார்க்குறிங்களா??”
“ச்சு போடா..”
[the_ad id=”6605″]
“என்ன மாமா, சலிப்பா சொல்லுறீங்க..பொண்ணு, என் சித்தப்பா பொண்ணு தான்..பிஇ படிச்சுட்டு, ஐடி கம்பெனில குப்பை கொட்டுறா..”
“அவளை அங்கேயே கொட்ட சொல்லு..இங்க வந்து கொட்ட வேண்டாம்..”
“என்ன மாமா, இப்படி சொல்லிட்டீங்க..உங்களை நம்பி தான் வந்தேன்..இங்கேயாச்சும் அந்த வானரத்தை கட்டி வைக்கலாமுன்னு.. ஜஸ்ட் மிஸ்..”
“போடா..”
“சரி விடுங்க..உங்களுக்கு கொடுத்து வச்சது அவ்ளோ தான்..”
பேசிக் கொண்டே திரும்பியவன்..சுவற்றில் மாட்டி இருந்த மதியின் புகைப்படத்தை பார்த்து விட்டு,
“மித்ரா போட்டோ இங்க இருக்கு..உங்க சொந்தமா இந்த பொண்ணு..??”
“மித்ராவா, யார் அது..??”
“என்ன மாமா,அந்த போட்டோல அகல்யா கூட இருக்க பொண்ணு..”
சட்டென, போட்டோவில் பார்வையை பதித்து விட்டு மிதுனின் புறம் திரும்பிய ராஜா,
பரபரப்புடன்,
“அவளை தெரியுமா??”
“ஹ்ம்ம்..தெரியுமே..எங்க ஹாஸ்பிடல்ல தான் வேலை பார்த்தா..”
“என்ன வேலை பார்த்தா??”
“என்ன மாமா, யாருன்னு தெரியாமையா, போட்டோ மாட்டி இருக்கீங்க??”
“அதெல்லாம் அப்புறம் சொல்லுறேன்..இப்போ சொல்லு..இவ, என்ன வேலை பார்த்தா??”
“லேப் டெக்னிசியன்னா இருந்தா, எமெர்ஜென்சி நேரத்துல, நர்சிங் ஆசிஸ்ட் கூட பண்ணுவா..
கிளெவர் கேர்ள்..
ஒரு டைம், ஆபரேஷன் நேரத்துல அநஸ்தீசியா டாக்டர் வர முடியாத சூழல். எங்கோ மாட்டிக்கிட்டார்..
நான் வேலைக்கு சேர்ந்த புதுசு வேற.
டாக்டர்ஸ்ஸே யோசிச்சுட்டு இருந்தாங்க..எமெர்ஜென்சி வேற, சரியான நேரத்துல, சரியான அளவு கொடுத்தா.. அதுனால தான், அந்த பேசன்ட் அஹ் காப்பாத்த முடிஞ்சுது..
முதல்ல, எங்க டீன் எல்லோரையும் பயங்கர திட்டு..இந்த விஷயம் வெளிய தெரிஞ்சா, எல்லோரையும் உள்ள தூக்கி போட்டுடுவாங்க,.அப்படி, இப்படின்னு.. அப்புறம், சரியான நேரத்துல குடுத்து தான் அவர் பிழைச்சார்னு தெரிஞ்சதும், அமைதி ஆகிட்டார்..
இத்தனைக்கும், வேலைக்கு புதுசு அப்போ இவ..”
“ஓ..இப்போவும், அங்க தான் இருக்காளா??”
“இல்ல மாமா, கொஞ்ச நாள் தான் வேலை பார்த்தா., அப்புறம், வேற ஹாஸ்பிடல்ல வேலை கிடைச்சு போய்ட்டா..”
“எங்க போனான்னு தெரியுமா??”
“தெரியாது மாமா..”
“அவ குடும்பம், அம்மா, அப்பா, பத்தி ஏதாவது தெரியுமா??”
“அந்த அளவுக்கு பேசுனது இல்ல மாமா..டாக்டர்க்கு படிக்க ஆசைப்பட்டு, ஏதோ காரணத்தால எம்எல்டி படிச்சுட்டு வந்ததா, அங்க சிலர் பேசிக்குவாங்க..அவ்ளோ தான் தெரியும்..”
“ஓ..”
சட்டென ஒன்று தோன்ற, மாடிக்கு சென்றவன், மீனாவின் புகைப்படத்தை எடுத்துக் கொண்டு வந்து, இவனிடம் காட்டினான்..
“இந்த பொண்ணை தெரியுமா??”
“ஹ்ம்ம்..நர்ஸ் மீனா..இவளும் மித்ராவும் கிளோஸ் பிரெண்ட்ஸ் ஆச்சே..ஒண்ணா தான் இருப்பாங்க..”
“இந்த பொண்ணும், உங்க ஹாஸ்பிடல் தானா இப்போவும்??”
“இவளும், இப்போ தான் வேலையை விட்டுட்டு போனா.. எங்க போனான்னு தெரியல..
என்ன மாமா,எதுவும் பிரச்சனையா??”
“ஒண்ணும் இல்ல மிதுன்..அம்மா கேட்டா, நான், நீ கொண்டு வந்த பொண்ணு போட்டோ பார்த்துட்டேன்..பிடிக்கலைன்னு சொன்னேன்னு சொல்லிடு..”
“சரி மாமா..நீங்க ஏதோ பிரோப்ளம்ல இருக்கீங்கன்னு தெரியுது..எதுவும் ஹெல்ப் வேணுமுன்னா கேளுங்க மாமா, செய்யுறேன்..”
“அதெல்லாம் ஒண்ணும் இல்ல மிதுன்..தேங்க்ஸ், உன் உதவிக்கு..”
“என்ன மாமா, அந்நியம் மாதிரி இதெல்லாம் சொல்லிக்கிட்டு..சீக்கிரம் சரி ஆகி, எங்க பழைய மாமாவா வாங்க..கம்பீரமா..அது போதும்..”
அவனை பார்த்து புன்னகைத்தான்,
அப்பொழுது, அவன் அலைபேசி இசைத்தது..
மகளிர் கல்லூரி முதல்வர் தான் அழைத்தார்,வேகமாய் அழைப்பை எடுத்தான்..
[the_ad id=”6605″]
“சொல்லுங்க சார்..”
“நீங்க கேட்ட தகவல் எல்லாம் வாட்ஸ் ஆப்ல அனுப்பி இருக்கேன் ராஜா..பாருங்க. வேற எதுவும் தேவைனா சொல்லுங்க, எடுத்து அனுப்புறேன்..இந்த பொண்ணு ரெண்டு வருஷம் முன்ன தான்,படிச்சு முடிச்சு இருக்கு..அவங்க டிப்பார்ட்மெண்ட் டாப்பர்ன்னு, அந்த பிரிவு ஹச்ஓடி சொல்லுறார்..”
“தேங்க்ஸ் சார்..நான் பார்க்குறேன்..”
“ஓகே ராஜா..”
வேகமாய், தன் வாட்ஸப்பில் பார்த்தான்..
மித்ரமதுமதி,பி.எஸ்சி(எம்.எல்.டி)
என்று இருந்தது..அவள் புகைப்படம், படித்த வருடம் எல்லாம் இருந்தது..
பெற்றவர்கள் பெயர் இருக்கும் இடத்தில் கோடு இழுக்கப் பட்டு, கார்டியன் இடத்தில், நடராஜன் பெயர் இருந்தது..முகவரியிலும், அவர் முகவரி தான் இருந்தது..
‘மாமா பிரெண்ட் நடராஜன்..அப்போ, மதி மாமாவுக்கு என்ன சொந்தம்??நடராஜன் பொண்ணு இவளுக்கு நெருங்கிய தோழி..இவர் கார்டியன்..அப்போ நடராஜனை பிடித்தால், இவள் இருக்கும் இடம் தெரிந்து விடும்..’
அனைத்து புள்ளியும் ஒரு இடத்தில் சேர்ந்தது..
மிதுன், மரகதத்திடம் ஏதோ பேசி சமாளித்து விட்டு, கிளம்பி விட்டான்..
பெங்களுரில்..
ஒற்றை படுக்கை அறையுடன் கூடிய அபார்ட்மெண்ட் வீட்டில்..
அப்பொழுது தான் தூங்கி எழுந்து வெளியே வந்தாள் மதி..
மாலை மயங்கி, இரவு வரும் வேளை..
வேலை முடிந்து வீட்டுக்குள் நுழைந்தாள் மீனா..
“என்ன மித்து, இப்போ தான் எழுந்தியா??”
“ஆமா மீனு..”
கூடத்தில் அமர்ந்தாள் மதி..
அறைக்குள் சென்று தன்னை சுத்தப்படுத்தி கொண்டு வந்தவள், சமையல் அறைக்குள் சென்றாள்..
“ஏய் மித்து, ஜூஸ் குடிக்கலையா நீ??”
அவளிடம் பதில் வரவில்லை..
வெளியே வந்து அவளை பார்த்தாள்..
மதி ஏதோ சிந்தனையில் இருந்தாள்.. மோன நிலையில், அவள் இதழில் புன்னகை..
அவள் அருகில் வந்து, தோள் தொட்டு அசைத்தாள்..
தூக்கத்தில் இருந்து விழிபவள் போல விழித்தவள்,
“என்ன மீனு??”
“தூக்கம் கலையலியா??”
“இல்ல டி.. வேற யோசிச்சுட்டு இருந்தேன்..”
“என்ன யோசனை??”
“வரு பத்தி தான்..”
“அவரை பத்தி என்ன யோசனை?? உன்னை பத்தி ஏதாவது அக்கறை இருக்கா அவருக்கு.??.நம்மள கல்யாணம் பண்ண பொண்ணு,இன்னொருத்தனை எப்படி கல்யாணம் பண்ணுவா, அப்படின்னு யோசிக்க மாட்டாரா??
இவ்ளோ நாள் பழகுனதுல, உன்னை பத்தி என்ன புரிஞ்சு வைச்சுருக்கார்..??
போன வரைக்கும் சந்தோசமுன்னு, புது மாப்பிள்ளை ஆக ரெடி ஆயிட்டார் போல..”
கண்ணில் கோபத்தோடு,
“போதும் மீனு,அவரை பத்தி இனி ஏதாவது சொன்ன,அவ்ளோ தான்.. என்னை பத்தி என்ன வேணா சொல்லு..அவரை பத்தி பேசாத..”
“ஓ..அம்மணிக்கு கோபம் வேற வருதோ..??உன் வரு அவ்ளோ நல்லவரா இருந்தா, யாருக்கும் தெரியாம எதுக்கு தாலி காட்டுறார் உனக்கு.??.”
“ஏன்னா, அவர் அப்படி செய்யலைன்னா, மலையிலே இருந்து குதிச்சுடுவேன்னு மிரட்டுனேன்..அதான் கட்டுனார் போதுமா??”
“அடிப்பாவி..”
வாயில் கை வைத்து திகைத்தவள்..
“ஏண்டி, அப்படி பண்ண??”
“அவர் கிட்ட ஒரு தடவை கேட்டேன்,நான் நடிச்சேன்னு தெரிஞ்சா, வேற பொண்ணை கல்யாணம் பண்ணிக்குவிங்களான்னு.ஆமாம் பண்ணிக்குவேன், என் அம்மாவுக்காக. அப்படின்னு சொன்னார்..
நான் காதலியா இருந்தா தானே அப்படி செய்வார், மனைவி ஆனா, நிச்சயம் செய்ய மாட்டார்னு தெரியும். அதான், அவரை கட்டாயப்படுத்தி தாலி கட்ட வச்சேன்..”
“இவ்ளோ பொஸசிவ் அஹ் இருக்கவ,எதுக்குடி அவரை விட்டுட்டு வந்த??”
“…”
“சரி, கல்யாணம் உன் கட்டாயத்துல நடந்துச்சு..அட்லீஸ்ட், குடும்பம் நடத்துறதையாச்சும், எல்லோருக்கும் உங்க கல்யாணத்தை சொல்லிட்டு செஞ்சுருக்கலாம் இல்ல, உன் வரு..இதான் சான்ஸ்ன்னு, குடும்பம் நடத்தியாச்சு..”
“மீனு, என் கிட்ட அடி வாங்காத.,இந்த குழந்தை கூட எனக்காக தான்..”
ஒரு வேகத்தில் கூறியவள்..
பிறகு,
முகம் சிவக்க நிறுத்தினாள்.
சில நொடிகள் கழித்து,
“சப்போஸ், இனி நாங்க சேர முடியாத சூழல் வந்தா, எனக்கு அவர் குழந்தை வேணுமுன்னு தோணுச்சு..அதான்,அந்த நேரம் என் ஓவுலேசன் டைம்ன்னு தெரியும் எனக்கு..
கன்சிவ் ஆக வாய்ப்பு அதிகமுன்னு தெரிஞ்சு தான், எங்க தாம்பத்யத்தை ஆரம்பிச்சேன்..
கடவுள் என்னை ஏமாத்தலை, நான் நினைச்ச மாதிரியே, என் வரு குழந்தையை, எனக்கு பரிசா கொடுத்துட்டார்..”
தன் மேடிட்டிருந்த வயிற்றை வருடிய படி கூறினாள்..
மதுவின் அலைபேசி பேச்சும் ஒரு காரணம், அவள் முடிவிற்கு..அதை கூறவில்லை மீனாவிடம்..
“எங்க கல்யாணம், எங்க குழந்தை எல்லாமே, என் விருப்பத்தின் பேரில் தான் நடந்துச்சு..எல்லாத்துக்கும் நான் தான் காரணம்..அதுனால, இனி வரு பத்தி எதுவும் பேசாத.அப்படி பேசுனா, இனி உன் கூட பேச மாட்டேன்..”
கண்ணில் கோபத்தோடு கூறினாள்..
“சரி தாயே..இனி உன் வரு பத்தி எதுவும் பேசல..இப்படி நெற்றி கண்ணை திறக்காம, அமைதியா இரு..”
அவளிடம் உதடு சுளித்தவள்..
“நான் அங்க போன புதுசுல, எவ்ளோ கோவம் வரும் தெரியுமா அவருக்கு..?? ஆனா, அப்புறம் என்னை லவ் பண்ண ஆரம்பிச்சதும்,எனக்கு ஒண்ணுனா, பதறி போய்டுவார் என் வரு..”
கண்கள் மின்ன கூறினாள்..
“க்கும்..”
நொடித்துக் கொண்டாள்..
“என்னடி??”
“ஆமா,நீ கர்ப்பமா இருக்குறதை அவர் கிட்ட சொல்லணுமுன்னு தோணலையா??உனக்கு..”
“எனக்கு கான்போர்ம் ஆனா அன்னைக்கு, சொல்லணுமுன்னு தோணுச்சு..சொல்ல கூட போய்ட்டேன்..அப்போ தான் வரு, வெளியூர் போறேன், வந்ததும் ஊர் அறிய கல்யாணம்ன்னு சொன்னார்..அதுக்கப்புறம் தான், நான் அங்க எப்படி போனேன், எல்லாம் ஞாபகம் வந்துச்சு..அப்புறம், அவர் கிட்ட வேற பேசி சமாளிச்சுட்டேன்..”
“அது சரி, யார் முதல்ல லவ் பண்ணீங்க??யார் சொன்னிங்க??”
“நான் தான்..”
“நீயா??”
“ஏன் இவ்ளோ ஆச்சர்யம்..??”
“என்ன, பார்த்ததும் லவ் அஹ்??”
“ஆமா,ஆனா இப்போ பார்த்ததும் இல்ல..மூணு வருஷம் முன்ன பார்த்ததும்..”
“என்னடி சொல்லுற??முன்னவே அவரை தெரியுமா உனக்கு??”
“ஹ்ம்ம்..ஆமா, நான் செகண்ட் இயர் படிக்கும் போது,என் காலேஜ் டே அன்னைக்கு பேச வந்தார்.. பாட்டனி ஸ்டுடெண்ட்ஸ்காக..
செம்மையா பேசுனார் போல,கை தட்டுற சத்தம் கேட்டுட்டே இருந்துச்சு, ஆடிட்டோரியம் தாண்டி..
எனக்கு, மேடையிலே பேசுறவங்க பேச்சை கேட்கவே அலர்ஜி..அதுனால நான், அந்த பக்கமே போகலை..
என் பிரெண்ட் ப்ரீத்தி இருக்காள்ல..
வாடி ஆடிட்டோரியம்க்கு, நம்ம டிப்பார்ட்மெண்ட்டே அங்க தான் இருக்குன்னு சொன்னா..
அவ்ளோ படிப்பாளிங்களா இவளுங்கன்னு, ஒரே ஆச்சர்யம் எனக்கு..
அப்புறம் தான் தெரிஞ்சுது, எல்லோரும் என் வருவை சைட் அடிக்க போய் இருக்காளுங்கன்னு..”
அன்றைய நினைவில், இன்றும் புன்னகை தோன்றியது மதிக்கு..
[the_ad id=”6605″]
“ஹ்ம்ம்..அப்புறம் அம்மணியும் போய் ஜோதியில ஐக்கியம் ஆகிட்டீங்களா??”
“நான் வரலைன்னு தான் சொன்னேன்..ப்ரீத்தி பத்தி தெரியும்ல உனக்கு..??நீ, காதுல பஞ்சு வேணாலும் அடைச்சுக்கோ..பட், வான்னு சொல்லி கூட்டிட்டு போனா..
அங்க போய் என் வருவை பார்த்ததும்,இந்த சினிமால எல்லாம் காட்டுவாங்களே, கடல் அலை நின்னு, பறவைகள் பறக்காம ஸ்டக் ஆகி, மரம் ஆடாம, அப்படி ஒரு எபெக்ட்..”
“ஹ்ம்ம்..அப்புறம்??”
கேலியாய் கேட்டாள்..
அவளை செல்லமாய் முறைத்து விட்டு,
“அப்புறம் என்ன??அவர் பேசுனது எங்க காதுல விழுந்துச்சு, அவர் மட்டும் தான் தெரிஞ்சார்.பேக் கிரௌண்ட்ல,
” உன்னை எதிர் பார்த்து தான், என் இதயம் வாழ்ந்ததோ!!
என்னை அறியாமலே, உன்னை அது சேர்ந்ததோ..!!”
பாட்டெல்லாம் கேட்டுச்சு..”
புன்னகையோடு கூறிக் கொண்டு வந்தவள், சட்டென முகம் மாற,
“உன் கிட்ட கூட நான் இது வரை சொன்னதில்லை மீனு.நான், கல்யாணமே பண்ணிக்க கூடாதுன்னு ஒரு முடிவுல இருந்தேன்..”
அவள் கைகளில் அழுத்தம் கொடுத்த மீனா,
“ஏண்டி..??”
“என் கல்யாணத்தை, என் அப்பா முன்ன நின்னு நடத்தணுமுன்னு, சின்ன வயசுல இருந்து எனக்கு ஒரு ஆசை..என் பிளஸ் டு பிறந்த நாள் அன்னிக்கு தான் தெரிஞ்சுது, அது நடக்காதுன்னு.அப்போவே முடிவு பண்ணிட்டேன்..இனி மருத்துவ துறையில் சர்வீஸ் பண்ணிட்டு, என் மீதி லைப்பை வாழ்ந்துடனுமுன்னு..
அதில் ஏற்பட்ட முதல் சலனம், வருவை பார்த்த பிறகு தான்..அது லவ் அஹ்ன்னு அப்போ தெரியல..ஏதோ ஈர்ப்புன்னு நினைச்சேன்..
அவர் பேசி முடிச்சுட்டு கிளம்பும் போது, பின்னாடியே போய், அவரை போட்டோ எடுத்தேன்..
அப்போ யார் கூடவோ, வழில சிரிச்சு பேசிட்டு நின்னார்..
மரத்துக்கு பின்னாடி மறைஞ்சு நின்னு எடுத்தேன்..இப்போ நெனச்சா கூட, நானா அப்படி செஞ்சேன்னு, ஒரே ஆச்சர்யமா இருக்கும்..
அப்புறம் தினமும், அந்த போட்டோவை ஒரு தடவை பார்க்கலைனா, ஏதோ மிஸ் ஆனா பீல்..எனக்கு, மனசு கஷ்டம் ஏற்படும் போதெல்லாம், அவர் போட்டோ பார்த்தா, அந்த பிரோப்ளம் சரி ஆகிடுமுன்னு தோணும்..
நாள் ஆக ஆக தான், அது ஈர்ப்பு இல்ல காதல்னு புரிஞ்சுது..
ஆனா, அவரை தேடவோ, இல்ல லவ் சொல்லவோ, நான் முயற்சிக்கல..
ஏன்னா, என் பின்னணி தெரிஞ்சா, யாரும் யோசிப்பாங்க..எதுக்கு வீண் முயற்சின்னு விட்டுட்டேன்..
மனசுக்குள்ளேயே, அவர் கூட வாழ்ந்துட்டு இருக்கும் போது தான், என் மேல கருணை காட்டுறதுக்காக, கடவுள் என்னை, அவர் வீட்டுக்கே அனுப்பி வச்சுட்டார்..
அங்க போய், ஒரு பத்து பதினைஞ்சு நாள் இருந்துட்டு, கிளம்பிடனுமுன்னு நெனச்சு தான் போனேன்..அங்க, அவர் போட்டோ பார்த்து, ஸ்வீட் சர்ப்ரைஸ்..
அதுக்கப்புறம், என் நிலைமையை நினைச்சு தயங்கி நிற்க முடியல என்னால..அவரை மிஸ் பண்ண கூடாது இன்னொரு தடவைன்னு தோணுச்சு..அதான், அவசர அவசரமா கல்யாணம்,குழந்தை எல்லாம்..”
கண்கள் கலங்க கூறிவிட்டு நிறுத்தினாள்..
அவள் காதல் கதையை கேட்டு பேச்சற்று இருந்த மீனா,
“உன் காதல் தான், உன் அத்தை மகன் கிட்ட கூட்டிட்டு போச்சுன்னா, அதே காதல், உங்களை சேர்த்து வைக்கும்..”
அவள் கைகளை பிடித்துக் கொண்டு கூறினாள்..
“நாங்க சேருவோமா மீனு..??”
கண்ணில் நீர் வழிய கேட்டாள்..
“நிச்சயம் டா.. சேருவிங்க..”
அவள் தோளில் சாய்ந்து கொண்டாள் மதி..
ராஜாவின் வீட்டில்..
“ஏலே ராசா, உன்ற தங்க சங்கிலியை கழட்டி கொடு,அதே மாதிரி ஒரு சங்கிலி வேணுமுன்னு, ராணி அக்கா கேட்டாங்க..கடையில காட்டி, செய்ய ஆர்டர் கொடுக்கணுமாம்..”
“செயின் காணும்..”
“என்ன லே சொன்ன??”
“ஹ்ம்ம்..என் செயினை காணுமுன்னு சொன்னேன்..”
“என்ன லே விளையாடுறியா?? அஞ்சு பவுனு சங்கிலி, காணுமுன்னு சாதாரணமா சொல்லுற..எப்போ லே காணாம போச்சு..??”
“தெரில..”
“வர, வர உன்ற போக்கே சரி இல்ல லே..”
“என்ன அத்தை, என்ன பிரச்சனை??சத்தம் போட்டுட்டு இருக்க”
உள்ளே நுழைந்த படி கேட்டான் பாண்டி..
“உன்ற தோழன், அவன் கழுத்து சங்கிலியை காணுமுன்னு, சாதாரணமா சொல்லுறான்..வர, வர திமிர் கூடி போச்சு அவனுக்கு..”
“நீ கோவப்படாத அத்தை.. நான் விசாரிக்கிறேன் அவன் கிட்ட..நான் மிரட்டுற மிரட்டுல, எப்படி பயந்து, உண்மையை சொல்லுறான்னு பாரு..நீ உள்ள போய், எனக்கு சாப்பிட கொண்டு வா..போ..போ..”
இருவரையும்
முறைத்து விட்டு, உள்ளே சென்றார் மரகதம்..
“என்ன மாப்பி..ஏன் அத்தையை டென்சன் பண்ணுற.??.எங்க உன் செயின்..??”
“ச்சு..”
“என்ன மாப்பி உச்சு கொட்டுற.??.நிஜமா தொலைச்சிட்டியா??”
“ஆமா,என் நிம்மதியை தூக்கிட்டு போனவ,இதையும் சேர்த்து கொண்டு போய்ட்டா..போக பிளான் பண்ணி தான், எல்லாம் பண்ணி இருக்கா”
பல்லை கடித்துக் கொண்டு சொன்னான்..
அவர்கள் கல்யாணம், அதன் பின்னான நிகழ்வுகள் எல்லாம் மனதில் வைத்து சொன்னான்..
“மதி கிட்ட கொடுத்தியா??சரி விடு பார்த்துக்கலாம்..அத்தை கிட்ட நான் சமாளிக்கிறேன்..”
“பாண்டி, மாமா பிரெண்ட் நடராஜன் இருக்காருல்ல??”
“ஆமா,அந்த பிளேடு அஹ்??”
[the_ad id=”6605″]
“டேய்…”
“சரி கோச்சுக்காத மாப்பு, சொல்லு..”
“அவரை போய் பாரு.அவரு வார கடைசில, அவர் வீட்டு கிட்ட இருக்குற பார்க்குக்கு போவேன்னு, அன்னைக்கு சொன்னார்..எதேர்ச்சையா பார்க்குற மாதிரி பார்த்து, மதி பத்தி எதுவும் விஷயம் கண்டு பிடிக்க முடியுதான்னு பாரு..”
“அவருக்கும் மதிக்கும்…??”
“அவரு தான் மதிக்கு கார்டியன் அஹ் இருந்துருக்கார்.. அவரை பிடிச்சா, மதியை கண்டு பிடிச்சுடலாம்..”
“சரி மாப்பு..”
“நாளைக்கு கிளம்பு..”
மறுநாள் கிளம்பி சென்றான் பாண்டி.. ஆனால், அவர் வேலை விஷயமாய் வெளியூர் சென்றிருந்ததால்,அவரை பத்து நாட்கள் கழித்து தான் சந்திக்க முடிந்தது..
அவர் குடும்பத்தை பற்றி என்ன கேட்டாலும் சொன்னவர்,சேகர் குடும்பத்தை பற்றி, வாயே திறக்க வில்லை..
இனியும் துருவி கேட்டால், சந்தேகம் வந்துவிடும் என்று, பாண்டி கிளம்பி வந்தான்..
“சரியான ஆளு மாப்பு அவரு..ஓட்டை வாய்ன்னு நெனச்சா,உன் மாமா பத்தி பேசுனாலே உஷார் ஆகிடுறார்..
போன உடனேயே, அவர் ஆபிஸ்ல போய் கேட்டா, வேலை விஷயமா வெளியூர் போய் இருக்காருன்னு சொன்னாங்க..
சரின்னு, வார வரை காத்திருந்து, நீ சொன்ன மாதிரி சந்திச்சு பேசுனேன்..என்னை மறந்திருப்பாரோனு நெனச்சேன்..
அதெல்லாம் ஞாபகம் வச்சுருக்கார்..
மது எப்படி இருக்கான்னு கேட்டுட்டு, ஆரம்பிக்கலாமுன்னு பார்த்தா, ஹ்ம்ம்..ம்ஹம்..தவிர, வேற சொல்ல மாட்டேங்குறார்..
இவரு பொண்ணு நர்ஸ் படிச்சு, இங்க சென்னைல வேலை பார்த்துச்சாம், இப்போ, பெங்களுர்ல இருக்குற பிரபல மருத்துவமனையில வேலை பார்க்குதாம். இதெல்லாம் எனக்கு தேவையா?? அதெல்லாம் சொல்லுறார். மதி பத்தி வாயே திறக்கல..”
கண்ணில் ஒளியுடன்,
“அவரு பொண்ணு எங்க வேலை பார்க்குதாம்..??”
“பெங்களுர்ல மாப்பு..”
“ஹாஸ்பிடல் பேர் சொன்னாரா??”
“ஹ்ம்ம்..சொன்னாரே..இவர் பின்னாடி சுத்துன பத்து நாளுல, யாராவது ஒரு பொண்ணு பின்னாடி சுத்தி இருந்தா, சிங்கள்ல இருந்து மிங்கில் ஆகி இருப்பேன்..”
சந்தோசத்துடன் பாண்டியை அணைத்துக் கொண்டவன்,
“அந்த ஹாஸ்பிடல்ல தான், என் மதி இருப்பா பாண்டி..”
“என்ன மாப்பு சொல்லுற??”
“ஆமா,அவளும் அந்த பொண்ணும் ரொம்ப கிளோஸ்..நிச்சயம், அங்க தான் இருப்பா.. என் உள்ளுணர்வு சொல்லுது..அப்படி இல்லைனாலும், அந்த பொண்ணுக்கு தெரிஞ்சுருக்கும்..
இந்த வார கடைசில, நாம பெங்களுர் போறோம்..அதுக்குள்ள, இங்க உள்ள வேலை எல்லாம் முடிச்சு வை..”
பெங்களுரில்..
“மித்து, இந்த வீக் எண்ட் உனக்கு மந்தலி செக் அப் இருக்கு,ஞாபகம் இருக்குல்ல??ரிப்போர்ட்ஸ் எல்லாம் எடுத்து வச்சுக்கோ..மறந்துடாம எடுத்துட்டு வா.. நான் கேப் புக் பண்ணுறேன்.. அதுல வந்துடு..”
“சரி மீனு..”
அவள் வயிற்றின் அருகே குனிந்து,
“குட்டி பையா,அத்தை வேலைக்கு போய்ட்டு வரேன்..அம்மாவை தொந்தரவு பண்ணாம சமத்தா இரு..”
“அதெல்லாம், என் வருவோட பையன், எனக்கு தொந்தரவு தர மாட்டான்..”
“க்கும்.. இவங்க லவுசு தாங்கலை ஆண்டவா..சரிங்க மேடம் கிளம்புறேன்..”
புன்னகையோடு கிளம்பினாள் மீனா,சிரித்தபடி விடை கொடுத்தாள் மதி..