அதன் பிறகு, இங்கு மாதத்திற்கு ஒரு முறை வந்து, ஒரு வாரம் தங்கி செல்வார்..
‘என்னையும் உங்களுடன் அழைத்து செல்லுங்கள்.ஏன், இங்கேயே இருக்க வேண்டும்??உங்கள் அம்மா அப்பாவிடம் நம் திருமண விஷயம் சொன்னிங்களா??அவர்களுக்கு தெரியுமா??’
போன்ற கேள்விகள் கேட்கும் அளவுக்கு, பாரிஜாதத்துக்கு விவரம் போதவில்லை..
அதனால், அவர் கூறிய படி கேட்டு நடந்தாள்..
அவளுக்கு நான்கு மாதம் நடக்கும் போது, பிரமிளாவும் கருவுற்றார்..
அவரை பிடிக்காவிட்டாலும், அவர் கருவுற்ற செய்தி சேகருக்கு மகிழ்ச்சியை அளித்தது..
எல்லாம் நன்றாக தான் சென்று கொண்டிருந்தது..
அவர் ஊர் திருவிழா வரும் வரை..
அவர்கள் சொந்த கிராமத்தில் திருவிழா என்று, சேகரின் அன்னையும் தந்தையும் அழைத்திருந்தார்கள்..
அப்பொழுது பிரமிளாவுக்கு ஏழாம் மாதம்..
அவருக்கு அங்கு செல்ல விருப்பம் இல்லை..ஆனாலும், மாமியார் வேண்டுதல் வைத்திருப்பதாகவும், அவசியம் வர வேண்டும் என்று வற்புறுத்தவும்,தந்தையும் சென்று வருமாறு கூறவும்..வேறு வழி இன்றி அங்கு சென்றார்..
வீட்டை கண்டது முதல், முகம் சுளித்து குறை கூற ஆரம்பித்தார்..
காற்று வரவில்லை..வீட்டிற்குள் குளியல் அறை இல்லை.. போன்று குறை பட்டியல் நீண்டு கொண்டே சென்றது..
அனைத்தையும் சகித்து கொண்டனர் சேகரின் பெற்றோர்கள்..
திருவிழா அன்று, கோவிலுக்கு செல்ல கிளம்பி கொண்டிருக்கும் போது, ஒரு பதினைந்து வயது பையன், சேகரை பார்க்க வேண்டும் என்று வந்து நின்றான்..சற்று பதற்றத்துடன்…
அவர் பின்னால், கொல்லை புறத்தில் இருப்பதாய் அவர் அன்னை கூறியதும், அங்கு சென்றவன்,
கிணற்றின் அருகே நின்றிருந்த சேகரிடம்,
“மாமா,பாரு அக்காக்கு பிரசவ வலி வந்துடுச்சு..டவுண் ஆஸ்பத்திரில சேர்த்துருக்கு..அத்தை, உங்க கிட்ட தகவல் சொல்ல சொன்னுச்சு..”
பாரிஜாதத்தின் பக்கத்துக்கு வீட்டு பையன் அவன்,இவர் திருவிழாவிற்கு வந்திருக்கும் செய்தி அறிந்து, அவளின் அத்தை, தகவல் சொல்லி அனுப்பி இருந்தார்..
வீட்டின் சூழ்நிலை அறியாமல், அவனும் கூறிவிட்டான்..
அங்கு உள்ள குளியல் அறையில் இருந்து, இதை கேட்டு விட்ட பிரமிளா, வேகமாய் வெளியே வந்தார்..
அந்த பையனிடம்,
“யாருக்கு பிரசவ வலி??”
“பாரு அக்காக்கு..”
“அவ யாரு??”
“மாமாவோட சம்சாரம்..”
ஏன் கேட்கிறார் என்று புரியாமல், பதில் அளித்து விட்டு சென்றான், அந்த சிறுவன்..
அதன் பின் பிரமிளாவின் ருத்ர தாண்டவம், இன்று நினைத்தாலும் சேகருக்கு நடுங்கும்..
அதன் விளைவுகளை,இன்று வரை அனுபவிக்கிறார்..
இவரை அடக்க அவர் உபயோகிக்கும் ப்ரம்மாஸ்திரம், அனைத்தும் இந்த ஒரு விஷயம் தான்..
பிரமிளாவை சமாதானம் செய்யவும் முடியாமல், பாரிஜாதத்துடன் அந்த நேரத்தில் இருக்கவும் முடியாமல், திகைத்து தடுமாறிய பொழுதுகள்..
அவள் கண் விழித்து, அவளுக்கும் இந்த விஷயம் தெரிந்தால்.. அவரால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை..
அவர் பாருவின், ஒரு பார்வையை தாங்க முடியாது அவரால்..
அவள் கண்கள்,
“என்னை ஏமாத்திட்டீங்களா மாமா??” என்று கேட்டால், அந்த நொடியே மரித்து போவார் சேகர்..
அவர் பயந்தது போல, எதுவும் நடக்க வில்லை..
அவர் பாரு, அவருக்கு அந்த கஷ்டத்தை கொடுக்கவில்லை..
அவரை கடைசி வரை நம்பிய அந்த ஜீவன், பிரசவம் முடிந்து,அரை மயக்கத்திலேயே இருந்து, ஜன்னி கண்டு, கண் திறக்காமலேயே இறைவனிடம் சென்று விட்டது..
வாழ்நாள் முழுதும், அவரை குற்ற உணர்வில் தள்ளி விட்டு..
குற்ற உணர்வு இருந்தாலும், மனதோரம் ஒரு நிம்மதி உணர்வும் இருந்தது அவருக்கு. அவர் பாருவுக்கு கடைசி வரை, நிம்மதியை கொடுத்திருக்கிறார்..உண்மையை மறைத்தேனும்..அவரோடு வாழ்ந்த பொழுதுகள் அனைத்தும், பாரு சந்தோசமாய் தான் வாழ்ந்தாள்..அவள் மனதை உடைக்கவில்லை.. அந்த நிம்மதி மட்டுமே எஞ்சியது அவருக்கு..
அதன் பிறகு பொன்னுசாமிக்கு விஷயம் தெரிந்து, புறப்பட்டு வந்தார்..
பாரிஜாதம் உயிருடன் இல்லை என்று அறிந்து, இனி தன் மகள் வாழ்வில் தடை இல்லை என்று ஆசுவாசம் அடைந்தார்..
மகளை சமாதானம் செய்தார்..
சேகரின் குழந்தையையும், அந்த அத்தையையும் பராமரித்து கொள்ளும் அனுமதி தந்தார்..
“இங்க பாருங்க சேகர்..இவ்ளோக்கு அப்புறமும் என் பொண்ணை உங்க கூட வாழ வைக்க நினைக்க காரணம், சொசைட்டி முன்ன எங்க குடும்பத்துக்குன்னு ஒரு கவுரவம் இருக்கு..என் பொண்ணு வாழாவெட்டின்னு யாரும் பேசிட கூடாது..உங்க மேல தப்பு இருந்தாலும், என் பொண்ணை தான் பேசுவாங்க..
உங்க குழந்தையை நீங்க பார்த்துக்கலாம்..அந்த குழந்தைக்கான செலவுகள் எல்லாம் தாராளமா கொடுக்கலாம்..ஆனா ஊர் முன்ன, என் பொண்ணு மட்டும் தான் உங்க மனைவி, அவ மூலம் வர குழந்தை தான் உங்க வாரிசு..
அந்த குழந்தையை அடிக்கடி பார்க்குறது, உறவு வளர்க்குற வேலை எல்லாம் வேண்டாம்..இதுக்கெல்லாம் சம்மதமுன்னா, பழைய படி என் மாப்பிள்ளையா இருக்கலாம்..”
பொன்னுசாமி கறாராக பேசினார்..
மொத்தமாய் அந்த குழந்தையை ஒதுக்க சொன்னால், சேகரும் விலகி சென்று விடுவார் என்று அறிந்து, சிறந்த வியாபாரியாக பிரமிளாவின் குழந்தையை வைத்து, ரத்த பாசத்தை தூண்டி விட்டு பேசினார்..தான் ஒரு, கை தேர்ந்த வியாபாரி என்று நிரூபித்தார்..
இதுவும் உன் குழந்தை என்று,அவருக்கு உணர்த்தினார்..பிரமிளா மட்டும் என்றால், சேகர் அவரை உதறி விட்டு, தன் குழந்தையோடு சென்றிருப்பார்..
அவர் குழந்தைக்காக, பொன்னுசாமியின் நிபந்தனைக்கு கட்டுப்பட்டு, அவர் குழந்தையையும் அந்த அத்தையையும், தன் நண்பன் நடராஜன் வீட்டுக்கு அருகில் குடி வைத்தார்..
அவர் பொறுப்பில் பார்த்துக் கொள்ள சொன்னார்..
கூட இருந்து தந்தையாய் செய்ய முடியாததை, தன் பணத்தை வாரி இறைத்து செய்தார்..
வருடம் ஓரிரு முறை, மதியை சென்று பார்த்து வந்தார்..
அந்த அத்தை இறந்ததும், அவளை விடுதியில் விட்டு படிக்க வைத்தார்..
அவள் பிறந்த நாள் அன்று, வருடா வருடம் அவளை சந்திக்க செல்வார்..
அதை வழக்கம் ஆக்கி கொண்டார்..
அப்படி ஒரு வருடம், அவளை சந்திக்க சென்ற போது, மது சரியாய் சாப்பிடாமல், நண்பர்களுடன் விளையாடி, பைக் ரேஸ் வைத்து, வெயிலினால் நீர் சத்து குறைந்து, மயங்கி விழுந்தாள்..
பிரமிளாவால், அவரை தொடர்பு கொள்ள இயலவில்லை..
அன்று சேகரிடம் நடத்திய யுத்தத்தில், இனி மதியை பார்க்க போக கூடாது, என்னும் வாக்கு வாங்கிய பின் தான், ஓய்ந்தார்..
அவளை சந்திக்கா விட்டாலும், அவள் கேட்கும் முன், அவளுக்கு என்ன தேவையோ, நடராஜன் மூலம் செய்து விடுவார்..
தன் அருகாமையால் செய்ய முடியாததை, தன் பணம் கொண்டு செய்தார்..
அவள் கேட்டிருந்தால், அவளை மருத்துவராய் கூட ஆக்கி இருப்பார்..
மாதாமாதம் அவள் பெயரில், இன்றும் பணம் போட்டு வருகிறார்..அதுவே, பல லட்சங்களை தாண்டும்..
மதி படித்து முடித்ததும், அவர் பணத்தில் இருந்து எதையும் எடுக்காமல், தன் மாத சம்பளம் கொண்டு, தன் செலவுகளை பார்த்து வந்தாள்..
‘அவருக்கு நான் வேண்டாத போது, அவர் பணம் எனக்கெதற்கு, என்னும் எண்ணமே அதற்கு காரணம்..’
பழைய நினைவில் அழுது கொண்டிருந்தவருக்கு, நீர் கொண்டு வந்து கொடுத்தாள் மதி..
“அப்பா, ப்ளீஸ் அழாதிங்க..உங்க ஹெல்த்க்கு நல்லதில்லை..”
மகளின் ஆறுதலில், அவள் கைகளை கண்ணில் வைத்து கொண்டு, கண்ணீரில் நனைத்தார்..
பாவ மன்னிப்பு போல..
“நீ என் பொண்ணு இல்ல மா, என் அம்மா.உனக்கு ஒரு நல்ல தகப்பனா, நான் எதுவுமே செய்யல..என் நண்பன் பொறுப்புல இருக்குற உனக்கு, என் அருகாமை தேவை படாதுன்னு நினைச்சுட்டேன்..என் தேவை, மதுவுக்கு மட்டும் தான் அதிகம் வேணும்னு நினைச்சுட்டேன்..ஏன்னா, அவ பிரமிளா வளர்ப்புல இருக்கறதால…”
தண்ணீர் குடித்து, தன்னை நிதானப் படுத்தியவர்..
“மரகதம், நாம நினைச்ச மாதிரி என் பாரு இறந்து போகலை..அவ பிழைச்சுட்டா.. அந்த கிராமத்துக்கு, என் கம்பெனி விஷயமா போன பிறகு தான், எனக்கு தெரிஞ்சுது..
அப்போ எனக்கு, பிரமிளா கூட கல்யாணம் ஆகிடுச்சு..வேற வழி தெரியல.
அதுக்கு பிறகு, அவளுக்கும் என் கல்யாணத்தை மறைச்சு, பிரமிளா கிட்டையும் மறைச்சு, இரட்டை வாழ்கை வாழ்ந்தேன்..
மித்ரா பிறக்கும் போது, இந்த உண்மை பிரமிளாக்கு தெரிஞ்சு போச்சு.
அதுக்கு பிறகு நிறைய கட்டுப்பாடு, இவளை என் பொண்ணுன்னு யாருக்கும் சொல்ல கூடாது.. வேற யாருக்கும் தெரியக்கூடாதுன்னு..
அவளுக்காக இல்லைனாலும், என் பொண்ணு மதுக்காக பொறுத்துகிட்டேன்..
அதான், இது வரை உன் கிட்ட கூட சொல்லல..
இப்போ, மதுக்கு கல்யாணம் ஆகிடுச்சு..இனி பிரமிளாவை மீறி, இவளுக்கு கல்யாணம் பண்ணனுமுன்னு முடிவு செஞ்சு இருந்தேன்..
ஆனா கடவுள், இதுவரை அப்பனா நீ இவளுக்கு ஒண்ணும் செய்யல, இனியும் செய்ய வேண்டாமுன்னு முடிவு பண்ணிட்டார்..
அப்படி முடிவு செஞ்சாலும், இவளை ஒரு நல்ல இடத்துல ஒப்படைச்சுட்டார்..அவ உன் கிட்ட வந்தது, எனக்கு எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா??
இவளுக்கு என் பாரு மாதிரி, தங்கமான குணம்..அவளை பார்த்துக்காத அப்பனையே, குழந்தை மாதிரி கூட இருந்து பார்த்துக்கிட்டா..
அவ மனசு அறிஞ்சு நடக்கும் குடும்பம் கிடைக்கணுமுன்னு, ஆசை பட்டேன்..அதே மாதிரி, உன் மருமகள் ஆயிட்டா..
ராஜா மாதிரி ஒரு பிள்ளைக்கு பொண்ணு கொடுக்க, நான் கொடுத்து வச்சுருக்கணும்..”
கண்களை துடைத்துக் கொண்டார்..
“மதுவையே, இங்க கொடுக்க எனக்கு ஆசை தான். பிரமிளாவுக்காக, என் விருப்பத்தை சொல்லல..”
மதியின் புறம் திரும்பியவர்..
“உனக்கு, மதுவை தெரியுமா மித்ரா??”
“தெரியும் ப்பா..”
“எப்படி தெரியும்??”
“உங்க மந்திலி செக் அப்க்கு நீங்க வரும் போது, நான் வேலை பார்த்த ஹாஸ்பிடல்ல வச்சு, ஒரு தடவை அவ நம்மளை பார்த்துட்டா..
நீங்க போன பிறகு வந்து பேசுனா..
நான் யாரு??எனக்கும் உங்களுக்கும் என்ன சம்மந்தம்??இப்படி நிறைய கேள்வி கேட்டா..
என்னால மறைக்க முடியல..
எல்லாத்தையும் சொல்லிட்டேன்..
அப்புறம் ஒரு நாள், திடீருன்னு போன் பண்ணி, சென்னைக்கு வர சொல்லி, அத்தை வீட்டுக்கு போக சொன்னா..
எனக்கு வேற வழி தெரில ப்பா.. சாரி..”
விரக்தியாய் சிரித்தவர்,
“உன் மேல தப்பு இல்ல மா..உன் நல்ல குணத்தை, அவ தேவைக்கு உபயோகிச்சுக்கிட்டா..
அவ, பிரமிளா வளர்ப்புன்னு நிரூபிச்சு இருக்கா..”
அதன் பிறகு, அவர்கள் எப்படி மாறினார்கள், எல்லாம் கேட்டு தெரிந்து கொண்டார்..
“அப்போ, அவ விருப்பப்பட்ட மாதிரி..அவ பிரெண்ட்ஸ் கூட, வெளிநாட்டுக்கு போய்ட்டாளா??”
“ஆமா ப்பா.. அப்படி தான் சொன்னா..”
“அங்க தான், அந்த பரதேசி அமித்லால் கூட பழகி இருப்பா..”
மதுவின் கணவனை அவர் அப்படி குறிப்பிட்டதும், அனைவரும் திகைத்துப் போய் பார்த்தார்கள்..
“என்ன ஆச்சு ப்பா..??”
“அவன், ஒரு மோசமான ஆளு மா..நான் சொன்னதை அம்மாவும் பொண்ணும் கேட்கலை. இப்போ அழுது என்ன ப்ரியோஜனம்..??”
“என்ன ண்ணா சொல்லுற??கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லு.. (Xanax) ”
“அவனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி, அவன் முதல் மனைவி இறந்துட்டா..
என்ன காரணமுன்னு கேட்டதுக்கு, அவளுக்கு மனநிலை சரி இல்லை..
தற்கொலை பண்ணிக் கிட்டான்னு சொன்னான்..
எனக்கு நம்பிக்கை இல்ல..அம்மாவும் பொண்ணும் நம்புனாங்க..
வெளி நாட்டுல இருந்து திரும்பும் போதே, மும்பைக்கு போய், அங்க கல்யாணம் பண்ணி, ரிஜிஸ்டர் பண்ணிட்டு தான் வந்தாங்க..
இது, பிரமிளா ஐடியாவா தான் இருக்கும்..
இங்க வந்து, எனக்கு ஒரே நெருக்கடி. உடனே கல்யாணத்தை முடிக்க சொல்லி..
ஏற்கனவே முடிஞ்ச கல்யாணத்தை, என்ன செய்ய முடியுமுன்னு, நானும் ஊர் அறிய கல்யாணம் செஞ்சு வச்சேன்..
எல்லாமே எனக்கு தப்பா தான் பட்டுச்சு..
அவனுக்கு, அப்பா அம்மா இல்ல..
ஒரு அத்தை தான் உறவுன்னு வந்தா.
கல்யாணம் முடிஞ்சு மும்பை போனவங்க, நேரா ஸ்விஸ் போய்ட்டாங்க தேன் நிலவுக்குன்னு, என் மனைவிக்கு ஒரே பெருமை..
அங்க ஒரு மாசம் இருந்த வரை, அடிக்கடி பிரமிளாவுக்கு பேசுவா,
என் கிட்ட கூட, சில நேரம் பேசுனா..
நல்லா தான் பேசுனா..
அதுக்கு பிறகு, ஊருக்கு திரும்பிட்டோம்ன்னு, ஒரு தடவை கால் பண்ணா..
அதில் இருந்து, ரெண்டு மாசமா எந்த தகவலும் இல்லை..
நாங்க போன் பண்ணா, சுவிட்ச் ஆப் வருது..
அவனுக்கு போட்டா, உங்க பொண்ணு தூங்குறா, குளிக்குறா, வெளிய போய்ட்டா, அப்படி இப்படின்னு சொல்லுறான்..
அழுத்தி கேட்டு மிரட்டுனா,உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோன்னு சொல்லுறான்..
அவளை என்ன பண்ணான்னு தெரியல..
என் பொண்ணு, உயிரோட இருக்காளா?? இல்லையான்னு கூட தெரியல??..”
மறுபடியும், அவர் கண்ணில் நீர் வெள்ளம்..
அவர் பேச்சில் அதிர்ந்து போய், அனைவரும் அவரை பார்த்தார்கள்..
“என்ன ப்பா.. ரெண்டு மாசமா சும்மாவா இருந்திங்க??”
“இல்ல மா..ஒரு வாரத்திலேயே, அங்க போனோம்..கேட்க்கு உள்ள கூட விடல கூர்கா..
எனக்கு தெரிஞ்ச மந்திரி, இன்னும், ஊர்ல உள்ள பெரிய மனுசங்க மூலம் கூட மூவ் பண்ணி பார்த்துட்டேன்..
எல்லோருக்கும் ஒரு பதில் வச்சுருக்கான்..
யாராலயும், அவனை நெருங்க முடியல..
அவன் செல்வாக்கு அப்படி..என் செல்வாக்கு எல்லாம், கால் தூசி அவனுக்கு..
எல்லாத்தையும் தட்டி விட்டுட்டான்..
இப்போ என்ன பண்ணன்னு தெரியாம,
முழிச்சுட்டு நிக்குறேன்..
எங்க லாயர் அஹ் போய் பார்த்தா, ஆட்கொணர்வு மனு போடலாம்னு சொன்னார்..
அதுக்கு மூவ் பண்ணும் விஷயம் எப்படியோ தெரிஞ்சு..எனக்கு கால் பண்ணி, உங்க பொண்ணு உயிரோட வேணுமா?? இல்லையான்னு மிரட்டுறான்..
ஒண்ணும் புரியல..
பிரமிளா உட்கார்ந்து, அழுதுட்டு இருக்கா..
அதான், நானே இங்க வந்து, ராஜாவை பார்த்து யோசனை கேட்கலாமுன்னு, நினைச்சிட்டு இருந்தேன்..
நேத்து கூட, நம்ம பக்கத்து ஊர்க்கு வந்து இருக்குற, மந்திரியை பார்க்க தான் வந்தேன்..
அதான், நீ கூப்பிட்டதும், இங்க உடனே வர முடிஞ்சுது..”
“இதென்ன ண்ணா அநியாயமா இருக்கு..??அவன் செவுல்ல ரெண்டு விட்டு, நம்ம பிள்ளையை இழுத்து கிட்டு வாரதை விட்டுட்டு, மந்திரி மந்திரியா பார்த்து கிட்டு இருக்க..
நம்ம ஊர் ஆளுகளை கூட்டிட்டு போய், வீடு புகுந்து பிள்ளையை கூட்டிட்டு வா ண்ணா..”
“அவன் வீட்டுக்குள்ள, அவ்ளோ சுலபமா நுழைய முடியாது மா..
அந்த மந்திரி கூட, அதான் சொன்னார்..அவன் நேர் வழில சம்பதிச்சதை விட, அண்டர் கிரவுண்ட் வேலையில சம்பாரிச்சது தான் அதிகமாம்..
அவன் கிட்ட போய் மாட்டி இருக்கிங்களேன்னு, வருத்தப் பட்டார்..
அவர் உதவுரத சொல்லி இருக்கார்..
நேரடிய உதவ முடியாது. அங்க உள்ள அவர் ஆட்களை வச்சு, அவனுக்கு தெரியாம, அவளை மீட்க வழி செய்யுறேன்னு சொல்லி இருக்கார்..”
அவர் முகம் முழுதும் கவலை ரேகைகள்..
இங்கு வந்து மதியை பார்த்து, மது என்று நினைத்து கொண்டு அவர் பேசியது அனைத்தும், ஞாபகம் வந்தது..அவர் சோர்வுக்கான காரணமும் புரிந்தது..
அனைவர் முகத்திலும், கவலை அப்பிக் கொண்டது..
“இவங்க கல்யாணத்தை, நீ தான் நடத்தி வச்சியா??”
மரகதத்திடம் கேட்டார்..
“இல்ல ப்பா.. நானே தான் செஞ்சுகிட்டேன்..அவருக்கு கூட, கடைசி நிமிஷம் தான் சொன்னேன்..
மது கிட்ட பண்ண சத்தியத்தை மீற கூடாதுன்னு..இப்போ தான் அத்தைக்கு தெரியும்..”
மென் குரலில் கூறினாள்..
சற்று நேரம் அமைதி காத்தார்..
“உனக்கான என் கடமை எதுவும் என்னால செய்ய முடியல..அவளும், அவ அம்மா மாதிரி தான்..அவளாலா, இப்போ எல்லோருக்கும் கஷ்டம்..”
“விடு ண்ணா.. இனி நடக்க வேண்டியதை பார்ப்போம்..இந்த நிலையில, திரும்ப கல்யாணம் பண்ணா நல்லா இருக்காது..
அதான், ஊரை அழைச்சு, வளைகாப்பு விரிவா செஞ்சு,இவ தான் என் மருமகன்னு, எல்லோருக்கும் அறிவிக்கலாம்ன்னு முடிவு செஞ்சு இருக்கேன்..
அதுக்கு தான், உன்னை கூப்பிட்டேன்..
நீ என்ன சொல்லுற ண்ணா..??”
“நான் சொல்ல என்ன இருக்கு மா..உன் முடிவு என்னைக்கும், சரியாய் இருக்கும்..அப்படியே செய்..அவளுக்கு எதுவுமே செய்யல..அப்பனா இதையாவது செய்யுறேன்..”
“அப்போ சரி ண்ணா.. ஜோசியர் கிட்ட கேட்டு, நல்ல நாள் பார்த்து சொல்லுறேன்..அன்னைக்கே விசேஷம் வச்சுடுவோம்..
அப்புறம் ராசா கட்டுற ஆஸ்பத்திரி, இன்னும் ஒரு மாசத்துல தயார் ஆகிடும்..
அதை திறந்ததும், அங்கேயே இவ பிரசவம் வச்சுக்கலாம்னு இருக்கேன்..”
“நீ என்ன முடிவு எடுத்தாலும், சரி மா..அவளுக்கு, பிரசவம் பார்க்க அழைச்சிட்டு போற நிலையில கூட, நான் இல்லை..”
“அதெல்லாம் விடு ண்ணா.. சபையிலே வந்து நின்னு, உன்ற பொண்ணு இவன்னு சொல்லு..அது போதும் எனக்கு..”
“நிச்சயம் சொல்லுறேன் மா..இனி, யாருக்காகவும் பயப்பட போறதில்லை நான்..”
ஒரு உறுதியுடன் கூறினார்..