மதியின் கையை பிடித்து அருகில் அமர்த்திக் கொண்டார் சேகர்..அவர் தோளில் சாய்ந்தாள் பெண்..
“அப்பாவை மன்னிச்சுடு மா..”
“எதுக்கு ப்பா பெரிய வார்த்தை எல்லாம் பேசிக்கிட்டு..எனக்கு உங்க மேல கோவம் எல்லாம் இல்ல ப்பா.. கொஞ்சம் வருத்தம் தான்..”
அவள் தலையை வருடியவர் கண்ணில், அவள் தாலி சங்கிலி பட்டது..
அதை கையில் எடுத்துப் பார்த்தார்..
“அம்மாவோடது ப்பா..”
தெரியும் என்பது போல தலையசைத்தார்..
“என் பாருவோடது எனக்கு தெரியாதா..?? இது மூலம் உனக்கு, உன் அம்மா ஆசிர்வாதம் பண்ணிட்டா..
அவ பெத்த பொண்ணை, ஊர் அறிய என் பொண்ணுன்னு சொன்னா,என்னையும் மன்னிச்சுடுவா என் பாரு..
அவளுக்கு யாரையும் தண்டிக்க தெரியாது..”
கண்கள் கலங்க பேசினார்..
தந்தை மகளின் பேச்சை, அனைவரும் நெகிழ்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்..
அன்று இரவு கிளம்பினார் சேகர்..
“வளைகாப்புக்கு நாள் பார்த்து சொல்லு மரகதம், வரேன்..”
“சரி ண்ணா.. பார்த்து போய்ட்டு வா..”
“வரேன் ராஜா..”
“சரி மாமா..மது விஷயமா என்ன உதவினாலும், எந்த நேரம் வேணாலும் கேளுங்க..நான் உதவுறேன்..”
அவன் கைகளை பிடித்துக் கொண்டு கண் கலங்கியவர்,
“உன் கிட்ட தான் வருவேன் பா..எனக்கு வேற யார் மேலேயும், இப்போ நம்பிக்கை இல்லை.. அந்த மந்திரி மூலம், அவளை மீட்க ஏற்பாடு செஞ்சுட்டு,உனக்கு தகவல் சொல்லுறேன்..
என் பொண்ணை நீ தான், பத்திரமா கூட்டிட்டு வரணும்..”
“கண்டிப்பா மாமா..தைரியமா போங்க..நான் இருக்கேன் எப்போவும்..”
அவன் தோள்களில் தட்டி கொடுத்தவர், கிளம்பினார்..
மறுநாள்…
ராஜா வெளியே சென்ற சிறிது நேரத்தில், அவன் வீட்டு வாசலுக்கு முன் ஒரு டெம்போ வந்தது..
அதில் இருந்து நான்கைந்து ஆட்கள், அதில் ஏற்றி வந்த கட்டிலை இறக்கினார்கள்..
மரகதம் வெளியே வந்து,
“என்ன லே..யாரு நீங்க??இதெல்லாம் இங்க ஏன் இறக்குறிக??”
“மரசமான் கடையில் இருந்து வரோம் மா..இந்த வீட்டு ஐயா தான், இதை வாங்குனாக.. இங்க இறக்க சொன்னாங்க..”
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது,பைக்கில் ராஜா வந்தான்..
“கொண்டு போய் மாடில, என் அறையில போடுங்க..நான் அடையாளம் காட்டுறேன்..”
“சரிங்க ஐயா..”
மரகதம் அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு, உள்ளே சென்றார்..
[the_ad id=”6605″]
முதலில், அவன் தன் அறைக்குள் நுழைந்தான்..
அவன் பின்னோடு, அவர்களும் வந்து, பழைய கட்டிலை தூக்கி, அடுத்த அறையில் போட்டு விட்டு, அவர்கள் கொண்டு வந்த கட்டிலை பொருத்திக் கொடுத்து விட்டு சென்றார்கள்..
இரண்டு பேர் தூங்கும் அளவு பெரிய கட்டில், நான்கு பக்கமும் தடுப்பு போட்டு..
உறங்குபவர்கள் விழுந்து விடாமல் இருக்குமாறு..
இந்த நேரத்தில் அவனை கண்டதும், புத்தகம் படித்துக் கொண்டிருந்த மதி, ஆச்சர்யமாய் எழுந்தாள்..
அவன் பின்னோடு ஆட்கள் வந்து, கட்டிலை பொருத்திச் சென்றதும்,அந்த ஆச்சார்யப் பார்வை, காதல் பார்வையாக மாறியது..
அவளை திரும்பி பார்த்தவன்,குளியல் அறைக்குள் நுழைந்து கொண்டான்..அவன் வெளியே வரும் போது,அந்த கட்டிலை தொட்டு பார்த்துக் கொண்டு நின்றாள் மதி..
அவனை கண்டதும்,
“லவ் யூ வரு..”
என்றாள், கண்ணில் காதலோடு..
“உனக்காக ஒண்ணும் வாங்கல..என் பிள்ளைக்காக வாங்கினேன்..”
முகத்தை விறைப்பாக வைத்துக் கொண்டு கூறினான்..
“ஓஹோ…இப்போ உங்க பிள்ளை மட்டும், தனியா படுக்க முடியாதே..என்ன செய்ய..??”
“அது வரை, நீயும் படுத்துக்கலாம்..”
“பெரிய மனசு வரு உங்களுக்கு..
இதை தான், குப்புற விழுந்தாலும், மீசையில மண் ஒட்டலைன்னு சொல்லுவாங்க போல..”
அவளை முறைத்தான்..
“இப்போ தான், கியூட் அஹ் இருக்கீங்க..”
புன்னகைத்தவள்.. அவனை நெருங்கி, கன்னத்தில் முத்தமிட்டாள்..
அவள் விலகியதும், வேகமாய் கன்னத்தை துடைத்துக் கொண்டான்..
“ஹான்.. ரொம்ப தான்..”
மறுபடியும் அவனை நெருங்கி,வேக வேகமாய் அவன் இரு கன்னங்களிலும் முத்த மழை பொழிந்தாள்..
“இப்போ நல்ல தொடச்சுக்கோங்க..சோப்பு போட்டு வேணாலும் கழுவிக்கோங்க..”
“உன்னை…”
பல்லை கடித்தான்..
“என்னை??”
புருவம் உயர்த்தி கேட்டாள்..
அவள் வயிற்றின் அருகே மண்டியிடவன்,
“செல்லம்.. நீங்க வெளியே வந்ததும்,அப்பாவும் நீங்களும் ஒரு செட்..அம்மா கூட சேராதிங்க.. அம்மா மோசம்..”
அவன் முடியை பிடித்து ஆட்டியவள்..
“ஹ்ம்ம்..போடுவிங்களே கூட்டணி..நான் இல்லாம..கலைச்சு விட்டுருவேன்..”
உதடு சுளித்து கூறினாள்..
“ஆ.. முடியை விடுடி..ராட்சசி..”
அவளை கடிந்து கொண்டு, முறைத்து விட்டு கீழே சென்றான்..
“போங்க..போங்க..எவ்ளோ நாள் முறைச்சுட்டு சுத்துறீங்கன்னு பார்க்குறேன்..”
அவனுக்கு கேட்கும் படி, சத்தமாய் கூறினாள்..
தன் வயிற்றை வருடிய படி,
“பட்டு,அப்பாவையும் நம்ம பக்கம் இழுத்துடுவோம்..”
தன் பிள்ளையுடன்,
புன்னகையுடன் பேச ஆரம்பித்தாள்..
மறுநாள் ஜோசியர் வந்து, நாள் குறித்துக் கொடுத்து விட்டு சென்றார்..
அன்று மீனாவும் ஊருக்கு கிளம்பினாள்..
“என்னடி,இன்னும் பத்து நாள்ல வளைகாப்பு .இருந்துட்டு போடி..”
“உனக்கு, ஹாஸ்பிடல் ரூல்ஸ் தெரியாதா மித்து.. இப்போ தான் வேலைக்கு சேர்த்துருக்கேன்..உடனே லாங் லீவ் எடுக்க முடியாது டி..
உன் பிரசவத்துக்கு, கண்டிப்பா வந்துடுவேன்..”
முகத்தை தூக்கி வைத்து கொண்டாள்..
“இன்னும் ஒரு மாசத்துல, இங்க ஆஸ்பத்திரி திறந்துருவோம் கண்ணு..இங்கயே, வேலைக்கு வந்துடேன்..”
“வரேன் பெரியம்மா.உடனே வேலையை விட முடியாது..எப்படியும், இவ பிரசவ நேரம்..லாங் லீவ் போட்டுட்டோ.. இல்ல, வேலையை விட்டுட்டோ வந்துடுறேன்..”
அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்டு வெளியே வந்தாள்..
“இந்தாம்மா டிக்கெட்.. ஆம்னி பஸ்ல டிக்கெட் புக் பண்ணி இருக்கேன்..டவுன் வரை இவன், உன்னை கார்ல கொண்டு வந்து விடுவான்..”
பாண்டியை காட்டினான்..
பற்கள் அத்தனையும் தெரிய, புன்னகையுடன் நின்றான் அவன்..
“இவரை நம்பியா.??. என்ன ண்ணா..??”
போலியாய் அதிர்ந்தாள்..
“ஏன் மா..??”
“பிரெண்ட்டோட அம்மா முறைச்சதும், பிரெண்ட்டையே டீல்ல விட்டுட்டார்..இவரை நம்பி போக சொல்லுறீங்க..”
பாண்டியின் முகம் சுருங்கியது..
“நம்பி வாங்கங்க.. கடைசி வரை காப்பாத்துவேன்..”
“என்ன??”
“ஒழுங்கா கொண்டு போய் விடுவேன்னு சொன்னேன்..”
“அதான், முதல் நாளே பார்த்தேனே..”
“நல்லவன் தான் மா..என்ன??என் அம்மாவை பார்த்தா மட்டும், தந்தி அடிக்க ஆரம்பிச்சுடுவான்..”
புன்னகைத்து கூறியவன்..
“உன் பிரெண்ட் பண்ண வேலையால, வேலையில சரியாய் கவனம் இல்லாம, நெறைய பெண்டிங் ஒர்க்..இல்லைன்னா, நானே வந்து விடுவேன்..”
“பரவால்ல ண்ணா.. சும்மா சொன்னேன்..இவர் கூடவே போறேன்..”
“போய்ட்டு கால் பண்ணுமா..”
“மாப்பு நீயுமா??”
“டேய், பெங்களுர் போய்ட்டு கால் பண்ண சொன்னேன் டா.. இவன் வேற..”
“சரி ண்ணா கிளம்புறேன்..”
“சரி மா..”
பின் இருக்கையில் அமர்ந்து கொண்டாள்..
பாண்டியின் முகம் சுருங்கியது..
‘முன்னாடி வந்து உட்கார்ந்தா ஆகாதா.??.’
முன் கண்ணாடியில் அவளை பார்த்துக் கொண்டே ஓட்டியவன்..
“ஏங்க..??”
“இன்னும் நீங்க, ஏங்கி முடிக்கலையா??”
“எங்க??நீங்க தான் விட மாட்டேங்குறிங்களே..”
“சரி இப்போ முடிங்க..சொல்லுங்க..என்ன சொல்லனும்.??.”
“நான் ஒன்னு கேட்டா, பதில் சொல்லுவிங்களா??”
“அது, நீங்க கேட்குற விஷயத்தை பொறுத்து..”
“உங்களோட வருங்கால கணவர், எப்படி இருக்கனும்..??”
“அது, பெரிய லிஸ்ட்டே இருக்கே..”
“ஒன்னு, ரெண்டு சொல்லுங்க..”
“பிரெண்ட்க்கு கஷ்டம்ன்னு வரும் போது, காலை வாரி விடாதவரா இருக்கணும்..”
[the_ad id=”6605″]
“பஃர்ஸ்ட் பால்லேயே கிளீன் போல்ட்ங்க..”
வந்த புன்னகையை அடக்கிக் கொண்டாள்..
“ஏங்க, அந்த ஒரு விஷயத்தை மட்டும் வச்சு முடிவு பண்ணாதீங்க..”
“வேற எப்படி முடிவு செய்ய..??”
“முதல்ல நம்பிக்கை வைங்க..”
“உங்க மேலேயா??”
“ஏங்க, வச்சா என்ன தப்பு..??”
“சப்போஸ், நம்புறேன்னு வச்சுப்போம்..நாளைக்கு ஒரு பிரச்சனைன்னு வந்தா, கூட துணை இருப்பிங்களா??மித்து மாமியார் மாதிரி தான், உங்க அம்மாவும் இருப்பாங்க..அவங்க முன்ன, நீங்க எப்படி தைரியமா பேசுவீங்க??எனக்கு நம்பிக்கை வர வேண்டாமா??”
“அதெல்லாம் பேசுவேங்க.. இப்போவே கூட்டிட்டு போய் சொல்லவா??”
“என்ன சொல்லுவீங்க..??”
“நீங்க தான் என்…”
ஒரு வேகத்தில் சொல்லியவன், சற்று தயங்கினான்..
“நான் தான் உங்க??”
“நீங்க தான், சம்மதம் சொல்லலியே..”
“இங்க பாருங்க பாண்டி.. எனக்கு உங்க மேல நம்பிக்கை வரணும்..நீங்க என்னை கடைசி வரை பார்த்துப்பிங்கன்னு..
அந்த மாதிரி நீங்க நடக்கனும்.. அந்த நம்பிக்கை வரட்டும்..அப்புறம், உங்க அம்மா முன்ன போகலாம்..”
“இன்னும் நீங்க நம்பலையா??”
“அப்படி எதுவும் நடக்கலையே, இது வரை..”
“எப்படி நடக்கனும்..??அதாவது சொல்லுங்க..”
“அதெல்லாம் உங்களுக்கு தான் தெரியணும்..ஆனா, ஒன்னு மட்டும் சொல்லுறேன்..நீங்க கடலை மட்டும் போட நினைச்சா, அதுக்கு நான் ஆள் இல்லை.. வேற ஆள் பாருங்க..”
அதன் பிறகு அங்கு மௌனம் நிலவியது..
வழியில் உள்ள ஸ்வீட் ஸ்டாலில் வண்டியை நிறுத்தினான்..
கேள்வியாய் பார்த்தாள்..
“ராஜா தான் வாங்கித் தர சொன்னான்..”
மொட்டையாக கூறினான்..
‘ஓ..சார்க்கு கோவமா??இருக்கட்டும் இருக்கட்டும்..’
புன்னகையுடன் இறங்கினாள்..
அங்கு, இனிப்பு காரம் வாங்கிக் கொண்டு வந்து, பின் இருக்கையில் வைத்தான்.
பிறகு, முன் இருக்கைக்கு வந்து வண்டியை எடுத்தான்..
பேருந்து நிலையம் வந்ததும், அவள் சுமைகளை இறக்கிக் கொடுத்து உதவினான்..
அவள் காருக்குள் குனிந்து, எதையோ தேடினாள்..
அவள் தேடியது கிடைக்கவில்லை..
“என்ன தேடுறீங்க??”
“இல்ல..என் போன்..வீட்டுலேயே விட்டுட்டேனா..??இல்லையே, எடுத்துட்டு வந்தேனே..”
“இதுவா பாருங்க..”
அவன் கைகளில் இருந்த அலைபேசியை பார்த்தவள், ஒரு நொடி மகிழ்ந்து, மறுநொடி,சந்தேகமாய் அவனை பார்த்தாள்..
“சீட்ல போட்டுட்டு இறங்கிட்டீங்க.. ஸ்வீட் கடை முன்ன இறங்கும் போது..தொலைஞ்சுட கூடாதுன்னு எடுத்து வச்சேன்..”
வேக வேகமாய் கூறினான்..
அவனிடம் அதை வாங்கிக் கொண்டாள்..அவனை கூர்ந்தபடி..
“என்ன சந்தேகமா பார்குறிங்க??நான் ஒண்ணும் திருடலை.. திருடினா திருப்பி தருவேனா..??”
ஒன்றும் கூறாமல், பஸ்சில் ஏறினாள்..
“போய்ட்டு போன் பண்ணுங்க..யாருக்கு பண்ணலைனாலும், எனக்கு பண்ணுங்க..”
‘ஒரு மார்க்கமா தான் இருக்கான்.இவன் முழியே சரி இல்லியே…’
அவனை ஒரு விதமாய் பார்த்து விட்டு, திரும்பினாள்..
பேருந்து கிளம்பியது..எவ்வளவு கட்டுப்படுத்தியும், அவன் புறம் பார்வை சென்று விட்டது..
புன்னகையுடன் கை அசைத்து, விடை கொடுத்தான்..
இரண்டு நாட்கள் கடந்தது..
மதி கூடத்தில் அமர்ந்திருந்தாள்..
ராஜா மாடியில் இருந்து இறங்கி வந்தான்..
அங்கு வந்த மரகதம்,மதியிடம்,
“உன்ற புருஷனை, இன்னிக்கு சீக்கிரம் வர சொல்லு. டவுனுக்கு போய், உனக்கு பட்டுப் புடவை எடுக்கணும், வளைகாப்புக்கு..”
மகனிடம் நேரடியாய் பேசுவதில்லை அவர்..தகவல்கள் எல்லாம், இடையில் ஒரு ஆளை வைத்து தான் பரிமாறப்படும்..
‘இவ கிட்ட பேசுவாங்களாம்.. என் கிட்ட பேச மாட்டாங்களாமாம்..’
மதியை முறைத்து விட்டு,அவர் சொன்னது காதில் விழாத மாதிரி, சென்றான்..
‘அத்தை சொன்னதுக்கு, என்னை ஏன் முறைக்குறார்?? இவரு..’
“வரு..அத்தை சீக்கிரம் வர சொன்னாங்க..”
அவசரமாய் கூறினாள்..
“என்ன கூப்பிட்ட அவனை..??”
திடீரென மரகதம் அப்படி கேட்கவும்,திரு திருவென விழித்து விட்டு,
“வரு..”
“அதென்ன, மட்டு மருவாதை இல்லாம, புருஷனை பேர் சொல்லி கூப்பிடுறது..மாமான்னு கூப்பிடு..
எல்லாம், இவன் கொடுக்குற இடம்..”
மகனை முறைத்தார்..
“என்ன லே பேசாம நிக்குற??உன்ற பொண்டாட்டி கிட்ட சொல்லு..ஒழுங்கா கூப்பிட சொல்லி..”
அன்னை தன்னிடம் பேசியதில், ஆச்சர்யமாய் பார்த்தான்..
“என்ன லே அப்படி பார்க்குற??ஒரு அடி அடிச்சா, பேசாம சுத்துவியா..
உன்ற மேல தப்பை வச்சுக்கிட்டு..”
“நான் என்ன பண்ணேன்??நீங்க தான், என் கிட்ட பேசல..”
“நீயும், இவளுக்கு உடந்தை தானே லே..வந்த அன்னைக்கே, என்ற கிட்ட எல்லாம் சொல்லி, என்ற காலுல விழுந்து மன்னிப்பு கேட்டா இவ…
அவளுக்கு இருக்குற கூறு கூட, உனக்கு இல்லை..
இன்ன வரை, முறுக்கி கிட்டு திரியுற.. உன்னை அடிக்க, எனக்கு உரிமை இல்லியா??”
“யாரு, உரிமை இல்லைன்னு சொன்னா??”
“அப்போ, நீ என்ன லே பண்ணி இருக்கணும்..என் கிட்ட வந்து, நடந்ததை சொல்லி, மன்னிப்பு கேட்டு இருக்கணுமுல்ல..
இன்னிக்கு வரை வந்தியா??..நான் பேசலைனா, ஹப்பா நிம்மதின்னுட்டு.. கட்டு அவுத்த மாடு மாதிரி சுத்துற..”
‘இதுலயும், இவ முந்தி கிட்டு நல்ல பேர் வாங்கிக் கிட்டா.. இவளை மாட்டி விட கூடாதுன்னு, நான் தப்பை ஏத்துகிட்டு அமைதியா இருந்தா, இவ வாக்குமூலம் கொடுத்து, நல்லவளா ஆயிட்டா..’
அவளை முறைத்தான்..
“அவளை ஏன் லே முறைக்குற??பதில் சொல்லு..”
வேகமாய் மதியின் அருகே சென்றவன்,அவள் கையை பிடித்து இழுத்துக் கொண்டு, இவர் அருகில் வந்து நின்று, இவர் காலில் விழுந்தான் அவளோடு..
“எங்களை மன்னிச்சுடுங்க..ஆசிர்வாதம் பண்ணுங்க..”
“எழுந்திருங்க.. எழுந்திருங்க லே..நல்லா இருங்க..”
அவர்களை எழுப்பியவர்,
“ஏன் லே, பிள்ளைத்தாச்சி பிள்ளையை இப்படி, தர தரன்னு இழுத்துட்டு வர..கூறு கெட்டவனே..இனியாச்சும், புத்தியோட பிழைங்க, ரெண்டு பேரும்..”
அவன் முகம் இன்னும், கடுகடுவென இருக்கவும்..
“இன்னும் என்ன லே..வேலையை முடிச்சுட்டு சீக்கிரம் வா.. புடவை வாங்கிட்டு வந்துடுவோம்.. பிள்ளையை இந்த நிலையில, அலைய வைக்க வேணாம்..அகலை வர சொல்லுறேன்..
கடைக்கு
போய், அவளுக்கும் வாங்கிட்டு, இந்த பிள்ளைக்கும் வாங்கிட்டு வருவோம்..”
சரியென்று தலை அசைத்து விட்டு சென்றான்..
நாட்கள் விரைந்து சென்று, வளைகாப்பு நாளும் விடிந்தது..
அகல், மதி கூடவே இருந்து, அவளுக்கு புடவை கட்டுவதில் இருந்து, அனைத்திற்கும் உதவினாள்..
குழந்தையை, அவள் மாமியாரிடம் விட்டு விட்டு..
அவள் மாமியார், முற்றிலும் குணம் அடைந்திருந்தார்..
மயில் கழுத்து நிற பட்டுப்புடவை, மதிக்கு வெகு அழகாய் இருந்தது..
வளைகாப்பு நேரத்துக்கு இறங்கி வந்தால் போதும் என்று, மரகதம் கூறியிருந்தார்..எனவே, இவள் அறையிலேயே இருந்தாள் மதி..
அன்று காலையில் வந்த சேகர்,
மதியின் அறைக்கு வந்தார்..
“அப்பா..”
மகிழ்ச்சியுடன், எழுந்து வரவேற்றாள்..
“எப்படி இருக்க டா..??”
“நல்லா இருக்கேன் ப்பா.. அத்தையும் அவரும், என்னை நல்லா பார்த்துக்குறாங்க..கூடவே, அகல் இருக்கா.. அப்புறம் என்ன??”
“சந்தோசம் டா..”
கண்கள் கலங்க, அவள் தலையில் கை வைத்து ஆசிர்வதித்தார்..
விழா ஆரம்பிக்கும் நேரத்திற்கு அழைத்து வரப் பட்டாள் மதி..
நாற்காலியில் அமர வைத்து,ஒரு வயதான சுமங்கலி பெண், முதன் முதலில் வளையல் போட்டு தொடங்கி வைத்தார்..
தொடர்ந்து அனைவரும், வளையல் போட்டார்கள்..
சேகர், தான் வாங்கி வந்திருந்த வைர வளையலை அவள் கையில் அணிவித்து, மஞ்சள் குங்குமம் வைத்து,
“தீர்க்க சுமங்கலியா இருக்கனும் மா..இதே போல, எப்போவும் சந்தோசமா..”
அவள் தலையில் கை வைத்து, நெகிழ்ச்சியுடன் வாழ்த்தினார்..
மதியின் கண்களும் கலங்கியது..
“தேங்க்ஸ் ப்பா..”
கடைசியாய் ராஜா, தன் மதிக்கு,சிவப்பு கல் வைத்த வளையல் அணிவித்தான்..
இருவர் கண்களும் ஒரு நொடி சந்தித்துக் கொண்டது, காதலுடன்..
சபை சூழ்நிலை உணர்ந்து, உடனே விலகினான்..
[the_ad id=”6605″]
அனைத்தும் நன்றாக, சிறப்பாக சென்று கொண்டிருக்கும் போது,இந்த மாதிரி விசேஷத்துக்கு, ஊர் வம்பு பேசவே வரும், சொந்தத்தில் ஒரு பெண்மணி,
“என்ன மரகதம்?? கல்யாண சாப்பாடு போடாம, நேரா, வளைகாப்பு சாப்பாடு போடுற..செலவை மிச்சம் பண்ணுறியா??என் அண்ணன், நல்லா தானே சம்பாரிச்சு வச்சுருக்கு..”
அங்கு, மெல்லிய சிரிப்பொலி கிளம்பியது..
“ஏன் மரகதம்?? இந்த பிள்ளை இங்க தானே இருந்துச்சு, கொஞ்ச நாள்..அதான், நேரே வளைகாப்பு வைக்க காரணமா??”
இன்னொரு விசமமான கேள்வி..
மதிக்கு, அழுகை முட்டிக் கொண்டு நின்றது..
“ஏன் மதனி??உங்களுக்கு எப்போவும் குசும்பு தான்.. என்ற பிள்ளை ஜாதகப்படி, கிரகம் சரி இல்ல. உடனே கல்யாணம் வைக்கனுமுன்னு ஜோசியர் சொல்லிட்டார்..அதான், எங்க குடும்ப வழக்கப்படி, உடனேயே எங்க குலதெய்வம் கோவிலுக்கு, இவுக ரெண்டு பேரையும் கூட்டிட்டு போய், என்ற தலைமையில, இவுக கல்யாணத்தை முடிச்சேன்..
இவ என்ன, ஊரா வீட்டு பிள்ளையா என்ன??என்ற அண்ணன் மவ..அதான், நான் சொன்னதும், சரிங்க அத்தைன்னு சம்மதிச்சுச்சு..என்ற பிள்ளையை பத்தி ஊருக்கே தெரியும்..எந்த பொண்ணையும், நிமிர்ந்து கூட பார்க்க மாட்டான்..என்ற சொல்லுக்கு கட்டுப்பட்டு, இது கழுத்துல தாலி கட்டுனான்..
பிள்ளைக்கு, படிப்பு கொஞ்சம் இருந்துச்சு..முடிச்சுட்டு, ஆற அமர, நாள் பார்த்து,விரிவா கல்யாணம் வச்சு, ஊர்க்கு சொல்லலாமுன்னு இருந்தோம்..அதுக்காக, சின்னஞ் சிறுசுகளை பிரிச்சு வைக்க முடியுமா..??
புருஷன் பொண்டாட்டியை பிரிச்சு வைக்குறது, பெரிய பாவம்முன்னு, எல்லாம் தெரிஞ்ச, உங்களுக்கு தெரியாதா மதனி..”
மரகதத்தின் பேச்சில், அந்த அண்ணி,
“ஆமா ஆமா, பிரிக்கக் கூடாது தான்..”
“ஆமா மதனி, உன்ற மகன், படிக்க போன இடத்துல, வெளிநாட்டு பிள்ளை எதையோ, கல்யாணம் பண்ணி கிட்டான்னு கேள்விப் பட்டேன்.. உண்மையா??”
அங்கு, இன்னொரு சிரிப்பலை எழுந்தது..
சற்று பதறிய அந்த மதனி,
“அதெல்லாம் புரளி மரகதம், நம்பாத..உன்னை யாரோ, அங்க கூப்பிடுறாங்க பாரு..விஷேச வீட்டுல உட்கார முடியுமா??போ..போய் வேலையை பாரு..”
அதன் பிறகு, வாயை திறப்பாரா அந்த பெண்மணி..
விசேஷம் முடிந்ததும், முதல் ஆளாய் கிளம்பி விட்டார்..
மதியின் முக வாட்டத்தை பார்த்து விட்டு,அகலிடம், அவளை அறைக்கு அழைத்து செல்ல சொன்ன மரகதம்..
உணவை எடுத்துக் கொண்டு, அவள் இருந்த அறைக்கு அவரும் சென்றார்..
“ஏன், இப்படி உட்கார்ந்து இருக்க??”
“என்னால தானே அத்தை, இன்னிக்கு, இவ்ளோ பேச்சும் கேட்க வேண்டி ஆயிடுச்சு??”
பேசும் போதே, அழுகை வெடித்தது..
“ச்சு.. அழாத..இந்த மாதிரி நேரத்துல அழ கூடாது..செய்யுறதுக்கு முன்ன, பின்விளைவுகளை யோசிக்கணும்..
யோசிக்காம செஞ்சிட்டா, அதுக்கு பின்னாடி வர, பின் விளைவுகளை ஏத்துகிட்டு, சமாளிக்க தெரியணும்..
உன்ற சூழ்நிலை செஞ்சுட்ட..
என்ற கிட்ட முன்னவே சொல்லி இருந்தா, சரி பண்ணி இருப்பேன்..
சரி, சத்தியம் பண்ணிட்ட..மீற முடியல..
நடந்ததை மறந்துட்டு, இனி நடக்குறதை பாரு..எல்லோருக்கும், நாம செய்யுற ஒவ்வொரு செயலுக்கும், பதில் சொல்லணுமுன்னு இல்ல..நம்ம மனசாட்சிக்கு பதில் சொல்ல முடிஞ்சா போதும்..
உரிமை பட்டவங்களுக்கு சொல்லியாச்சு, அப்புறம் என்ன??
ஊர் வம்பு பேசன்னு, நெறைய பேர் இப்படி தான் சுத்துவாங்க.. அவங்கள கண்டுக்காம கடந்து போய்டனும்..இல்ல, திருப்பி அவங்க குடும்பத்தை பத்தி கேட்டா, தானா பேசாம போயிடுவாங்க..
எதையும் குழப்பாம, சாப்பிடு..
எல்லோரும் போனதும் கூப்பிடுறேன், கீழே வா..
உனக்கும் ராசாக்கும் சுத்தி போடணும்..ஊர் கண்ணு எல்லாம், உங்க மேல தான்..நல்ல வேளை, ராசா இந்த மதனி பேச்சை கேட்கலை..இல்ல, இதுக்கு வேற முகத்தை தூக்கி வச்சு கிட்டு சுத்துவான், நாலு நாள்..”
அவர் பேச்சில், சற்று மனம் தெளிந்தாள் மதி…
கீழே சேகர் ராஜாவிடம்,தனிமையில், மதுவை காப்பாற்ற, அவனை மும்பை வருமாறு அழைத்துக் கொண்டிருந்தார் ..