அவளுக்கு தேவையான போதை கிடைக்காத கோபத்தில், பொருட்களை எடுத்து உடைத்தவளை, யாராலும் அடக்க முடியவில்லை..
பிரமிளாவின் தலையில், பூ ஜாடியை தூக்கி போட்டு உடைத்தாள்..
நெற்றியில் ரத்தம் வழிய, வலியில் கதறியவரை கண்ட ராஜா,அவள் கன்னத்தில், ஓங்கி ஒரு அறை விட்டான்..அதில் மயங்கியவள் தான்..
மருத்துவருக்கு அழைத்து, உடனே வர சொன்னார் சேகர்..
குடும்ப மருத்துவர்.எனவே, உடனேயே கிளம்பி வந்து விட்டார்..
இப்பொழுது, அவளை சோதித்துக் கொண்டிருந்தார்..
அனைவரும், அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்..
சோதித்து முடித்தவர். அவள் உறங்குவதற்கு ஊசி போட்டு விட்டு.சேகரிடம்,
“கொஞ்சம் தனியா பேசணும் வாங்க..”
“எதா இருந்தாலும், இங்கேயே சொல்லுங்க..என் பொண்ணை பத்தி, எனக்குத் தெரியணும்..”
பிரமிளாவை பார்த்தார் மருத்துவர்..
நெற்றியில் பேண்டேஜ் ஒட்டி, முகம் களைப்பை காட்டியது..இருந்தும், குரலில் உறுதி..
“உங்க பொண்ணு, ட்ரக் அடிக்ட் ஆகி இருக்கா..”
“என் பொண்ணா?? இருக்காது..இல்ல..நீங்க வேணுமுன்னு சொல்லுறீங்க”
“உளராத பிரமிளா..அவர் ஏன் பொய் சொல்லணும்..”
அவரை கடிந்தவர்..
“சொல்லுங்க டாக்டர்..நாங்க இப்போ என்ன செய்யனும்..??அவ இஞ்ஜெக்க்ஷன் கேட்டு ஆர்ப்பாட்டம் பண்ணப்போவே யூகிச்சேன்..
அவளை பழைய மாதிரி ஆக்க, என்ன பண்ணனும்..??
சொல்லுங்க..”
“உங்க பொண்ணுக்கு, கொஞ்ச நாளா தான் இந்த பழக்கம் இருக்கனும்..அதுனால, சீக்கிரம் குணம் ஆக்கிடலாம்..
ஆனா, சில நாள்னாலும்,அதிக அளவுல கொடுத்து இருக்காங்கன்னு சந்தேகமா இருக்கு..
எதுக்கும், அவங்கள ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணுறது நல்லது..
அங்க செக் பண்ணிடலாம்..அப்புறம்,
தொடர்ந்து கவுன்சிலிங், ட்ரீட்மெண்ட்ன்னு கொடுத்தா, ஒரு மூணு நாலு மாசத்துல, கம்பிளீட் அஹ் குணப்படுத்தலாம்..
பேசன்ட் ஒத்துழைப்பும் தேவை இதுக்கு..”
“என் பொண்ணை எங்கயும் அனுப்ப முடியாது..அவ ஒன்னும் நோயாளி இல்ல..எங்கும் வர மாட்டா..”
“பிரமிளா,சும்மா இரு..”
“சரி டாக்டர்.அவளை சீக்கிரம், அங்க கொண்டு வந்து சேர்க்குறேன்..”
“எவ்ளோ சீக்கிரம் சேர்க்குறிங்களோ, அவ்ளோ நல்லது..நான் கிளம்புறேன்..”
அவர் சென்றதும், ஒரு சண்டைக்கு தயார் ஆனார் பிரமிளா..
“அவளை, எங்கயும் கூட்டிட்டு போய் விட ஒத்துக்க மாட்டேன்..இவ்ளோ நாள், அவளை நான் பிரிஞ்சு இருந்தது போதும்..இனி என் பொண்ணு, என் கூட தான் இருப்பா..
அவளை நான் பார்த்துக்குறேன்..
எங்கும் விட மாட்டேன்..”
[the_ad id=”6605″]
“புரியாம பேசாத பிரமிளா..இப்போ, எவ்ளோ வயலேண்ட் அஹ் பிஹேவ் பண்ணா??பார்த்த தானே..
அவ முழுசா, நம்ம பொண்ணா மாறணுமுன்னு ஆசை இருக்கா?? இல்லியா??”
“நீங்க என்ன சொன்னாலும்,நான் ஒத்துக்க மாட்டேன்..”
“நீ என்ன ஒத்துக்குறது..அவளை நாளைக்கு, ஹாஸ்பிடல்ல சேர்க்க தான் போறேன்..”
“எப்படி என்னை மீறி, என் பொண்ணை சேர்க்குறிங்கன்னு பார்க்குறேன்..”
“என்ன, என் பொண்ணு,என் பொண்ணுன்னு சொல்லுற..??அவ, என் பொண்ணு..என் பாருவோட பொண்ணு..
எங்க காதலுக்கு கிடைச்ச பரிசுகள்ல, இவளும் ஒன்னு..
இவ்ளோ நாள் அவளை உன் கிட்ட விட்டு தான், குட்டி சுவர் ஆயிட்டா.. இனி அவளை பத்தி எல்லா முடிவும், நான் தான் எடுப்பேன்..”
உணர்ச்சி வேகத்தில் பேசியவர்,பேசியது உணர்ந்து, வாய் மூடி நின்றார்..
குண்டூசி போட்டால் கூட சத்தம் கேட்கும் அளவுக்கு, அங்கு அமைதி..
ராஜாவுக்கே அதிர்ச்சி தரும் விஷயம் என்றால், பிரமிளாவின் நிலை, சொல்லவும் வேண்டுமா??
ஒரு முழு நிமிட அமைதிக்கு பின், வீடே அதிரும் வண்ணம் கத்தினார் பிரமிளா..
“இல்ல..இல்ல..பொய் சொல்லுறீங்க..என்னை ஏமாத்த பார்க்குறிங்க..இவ என் பொண்ணு..”
படுக்கையில் மகளை நெருங்கி, அணைத்துக் கொண்டு கண்ணீர் வடித்தார்..
ராஜாவுக்கே பாவமாய் இருந்தது..
உண்மை வெளி வந்து விட்டது..முழுதும் சொல்லி விடுவோம் என்று நினைத்த சேகர்,பெருமூச்சு விட்டு கொண்டு, தன் வாலெட்டில் இருந்த சின்ன புகைப்படத்தை விரித்து, பிரமிளாவின் முன் காட்டினார்..
அதில், இளமையான சேகருடன்,தோள்கள் உரச, நாணிக் கொண்டு நின்றாள் யுவதி ஒருத்தி..
மதுவுக்கு, எண்பதுகளில் வந்த கதாநாயகி போல வேடமிட்டால்,ஒளிபிரதி எடுத்தது போல இருக்கும் தோற்றத்துடன் இருந்தாள் அந்த பெண்..
கலர் புகைப்படம் தான், மதுவை போல சந்தன நிறம் மட்டும் இல்லை.. மற்றபடி, மதுவே தான்..
“இவ தான், என் பாரு..”
அந்த புகைப்படத்தை விட்டு கண்ணை எடுக்காமல், வெறித்துக் கொண்டு இருந்தார் பிரமிளா..
அந்த படத்தை பார்த்த ராஜாவுக்கும் ஆச்சர்யம்..
‘மது,மதி இருவரை போலவே இருக்கும் இவர் தான், பாரிஜாத அத்தையா??’
மீனாவின் வீட்டுக்கு சென்ற பாண்டி, காலிங் பெல்லை அழுத்தினான்..எந்த எதிரொலியும் இல்லை..
வேகமாய் சென்று கதவில் கை வைத்தான்..கதவு திறந்து கொண்டது..
உள்ளே நுழைய நினைக்கையில், கதவின் அருகே ஒரு பெண்மணி, மயங்கி விழுந்து கிடந்தார்..
‘மீனாவோட அம்மா, இவங்க தான் போல..’
உள்ளே சென்றவன்,சமையல் அறையில் இருந்து நீர் கொண்டு வந்து தெளித்தான்..அவரிடம் அசைவில்லை..
மூக்கின் அருகே கை வைத்து பார்த்தான்..அவனால் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை..
தான் வந்த ஆட்டோவை, அனுப்பாமல் நிறுத்தி வைத்திருந்தான்..அந்த ஓட்டுநர் உதவியோடு, அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றான்..
அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்றார்கள்..வெளியில் பதட்டத்துடன் நின்றிருந்தான்..
அவன் அலைபேசி இசைத்தது..
மீனா தான் அழைத்திருந்தாள்..
‘என்ன சொல்வது??’
யோசனையோடு எடுத்தான்..
“பாண்டி என்ன ஆச்சு??அம்மாவை பார்த்தீங்களா??அவங்க, நல்லா இருக்காங்க தானே??”
“பதறாத மீனா..அவங்களுக்கு ஒன்னும் இல்ல..”
“அப்புறம் ஏன், போன் எடுக்கல??”
“அவங்களுக்கு, கொஞ்சம் மயக்கம்..”
“என்ன??”
“ஒன்னும் பயப்படுற மாதிரி இல்ல..இங்க, உங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்குற ஹாஸ்பிடல்க்கு கூட்டிட்டு வந்துருக்கேன்..”
“ஹாஸ்பிடல் அஹ்??”
“நர்ஸ் அஹ் இருந்துட்டு, ஹாஸ்பிட்டல்னா பயப்படலாமா??கவலைப்படாம இரு..”
அந்த பக்கம் விசும்பல் ஒலி கேட்டது..
“அழாத மீனா..ஒன்னும் இல்லைன்னு சொல்லுறேன்ல..”
இங்கு ஒரு செவிலியர், பில் கட்ட சொல்லி, வந்து நின்றார்..
“நீ வை.. கொஞ்ச நேரத்துல கூப்பிடுறேன்..”
பில்லை வாங்கிக் கொண்டு சென்றான்..வெளியூர் செல்வதனால், கொஞ்சம் அதிக பணம்,கார்டு எல்லாம் கொண்டு வந்திருந்தான்..அது இப்பொழுது உதவியது..
கட்டி முடித்து, மஞ்சுளாவின் சிகிச்சை நடக்கும் அறைக்கு முன்னே வந்து நின்றான்..
அரை மணி நேர காத்திருப்புக்கு பிறகு, மருத்துவர் வெளியே வந்தார்..
“என் ரூம்க்கு வாங்க..”
அவர் பின்னே அவன் செல்ல திரும்பிய போது, மீனா அவசரமாய், அவர்கள் முன்னே வந்து நின்றாள்..
ஆச்சர்யமாய் பார்த்தவன்,அவளையும் அழைத்துக் கொண்டு, மருத்துவர் அறைக்கு சென்றான்..
“என்ன ஆச்சு டாக்டர்..??”
புருவம் உயர்த்தி அவளை பார்த்தார்..
“இவ, அவங்க பொண்ணு..”
“ஓ..ஹை பிரெஸ்ஸர் தான்.. பிரெஸ்ஸர் மாத்திரை ஏற்கனவே போடுறாங்களா??”
“ஆமாம் டாக்டர், போடுவாங்க..”
“அப்போ, மாத்திரை ஒழுங்கா போடல போல..அதான், மயங்கி விழுந்துட்டாங்க..
இன்னும் கொஞ்ச நேரம் பார்க்கலைனா, ஸ்டோரோக் கூட வர சான்ஸ் இருக்கு..சரியான நேரத்துல சேர்த்து, முதல் உதவி செஞ்சு, டீரீட்மெண்ட் ஆரம்பிச்சதால,நௌ ஷி இஸ் ஓகே..
இன்னிக்கு ஒரு நாள் அப்சர்வேசன்ல இருக்கட்டும்..ஈவினிங், டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிட்டு போங்க.இனி மாத்திரை எல்லாம், சரியா போட சொல்லுங்க…”
தலை அசைத்து விட்டு வெளியே வந்தார்கள்..
அவள் அமைதியாய் வருவதை பார்த்து விட்டு,
“நீ எப்படி, சரியாய் இங்க??”
” நேத்து நைட் பஸ்க்கு டிக்கெட் புக் பண்ணிட்டேன்..இங்க வர..அவசர கேஸ் ஒன்னு.அதான், பஸ்சை பிடிக்க முடியல..பிரெண்ட்க்கு தெரிஞ்ச ட்ராவல் மூலம், கேப் புக் பண்ணி வந்தேன்..
நைட் ஆனதால் ,அம்மா தூங்கி இருப்பாங்கன்னு இன்போர்ம் பண்ண முடியல..அதான், காலையில பஸ் டைம்க்கு வர்லைன்னா, பயப்படுவாங்கன்னு கால் பண்ணேன்..”
“ஓ..”
அவள் முகத்தை பார்த்தவன்,
“அதான், ஒன்னும் இல்லைல அம்மாக்கு.அப்புறம் ஏன், உம்முன்னு இருக்க..??”
அவனை நிமிர்ந்து பார்த்தவள்,வேகமாய், அவன் மார்பில் சாய்ந்து கண்ணீர் உகுத்தாள்..
திகைத்து போய் பார்த்தான்.. மீனாவா இது??அதுவும், பொது இடத்தில்…
அவளை ஆறுதலாய் அணைத்தவன்..
“என்னாச்சு மீனா..??அம்மாக்கு தான் ஒன்னும் இல்லியே..”
அவள் அழுகை ஓயவில்லை..அவளே அழுது ஓயட்டும் என்று, அமைதி காத்தான்..
“ஏன் போன் பண்ணல, ரெண்டு நாளா??”
அவளின் கேள்வியில், அவன் திகைப்பு அதிகம் ஆனது..
மதுவை பற்றிய டென்சனில், அங்கு என்ன ஆகுமோ என்னும் பயத்தில், இரண்டு நாளாய் மீனாவை அழைக்கவில்லை..
‘தொல்லை இல்லைன்னு, நிம்மதியா இருப்பான்னு பார்த்தா.. என் கால் அஹ் எதிர்பார்த்தாளா??’
ஆச்சர்யமாய், அவள் முகம் நிமிர்த்தி பார்த்தான்..
மென்னகை புரிந்தவள்,
“எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்..??”
“அம்மா தாயே..எனக்கு நெஞ்செல்லாம் வலிக்குதே.. இங்கயே என்னை அட்மிட் பண்ண முடிவு பண்ணிட்டியா??இவ்ளோ அதிர்ச்சி கொடுக்குற..
ஒண்ணு ஒண்ணா கொடுமா??என் இதயம் தாங்காது..”
மார்பை பிடித்துக் கொண்டு பேசினான்..
“ச்சு விளையாடாதிங்க..சீரியஸ் அஹ் தான் கேட்கிறேன்..”
“உன் அம்மாவை சரியான நேரத்துல அட்மிட் பண்ணதால, வந்த நன்றி உணர்ச்சியா இது??அதான், இப்படி ஒரு முடிவா??”
“நன்றிக்காக எல்லாம் கல்யாணம் பண்ணுற அளவு, பெரிய மனசில்ல எனக்கு..
[the_ad id=”6605″]
எனக்கு உங்களை பிடிக்கும்..
ஆனா, நீங்க மத்த பொண்ணுங்க கிட்ட போடுற கடலை பிடிக்காது..
அதான், என் கிட்ட எப்படி பழகுறிங்க..?? நான் உங்களுக்கு ஸ்பெஷல்லான்னு தெரிய..
அப்படி சொன்னேன்..
உங்க போனை எதிர்பார்த்தப்போவே, நீங்க எனக்கு எவ்ளோ முக்கியம்னு, எனக்கு தெரிஞ்சுடுச்சு..
நான் இங்க தான் வந்துட்டு இருக்கேன்..இன்னும் சில மணி நேரத்துல, என் அம்மாவை பார்த்துடுவேன்னு தெரிஞ்சும்..நீங்க எங்க இருக்கீங்கன்னு கூட தெரியாம,என் கவலையை உங்க கூட பகிர்ந்துக்கிட்டேன்..பகிர்ந்துக்க தோணுச்சு..
அதிலேயே, என் மனசு புரியலியா உங்களுக்கு..??
அதே மாதிரி, என் மேல காதல் இருக்கறதால தான், உடனே என் அம்மாவை பார்க்க வந்திங்க..
ஜஸ்ட் லைக் தட் பழகுற பொண்ணுக்காக, இவ்ளோ செய்ய மாட்டாங்க யாரும்..
அவ கஷ்டத்தை, தன் கஷ்டமா எடுத்துக்கிட்டு..
சோ, உங்க காதலும் புரிஞ்சுடுச்சு எனக்கு..
இப்போ நம்பிக்கை வந்துடுச்சு..
அதுனால, இது நன்றி உணர்ச்சி..அது,இதுன்னு உளராம..உங்க வீட்டுல சொல்லி, சீக்கிரம் பொண்ணு கேளுங்க..”
அவளின் தெளிவான பதிலில், வியந்து பார்த்தான் பாண்டி..
‘செம உஷாரு தான் இந்த பொண்ணு..’
செவிலியர் வந்து, அவள் அன்னை கண் விழித்து விட்டதாக சொல்லவும்,இருவரும் அறைக்குள் சென்றார்கள்..
“அம்மா…”
அவரின் கையை பிடித்துக் கொண்டு அழுதாள்..
சைகையில், அவளை அழ வேண்டாம் என்று சொன்னவர்..
பாண்டியை கேள்வியாய் பார்த்தார்..
“இவரு தான், உன்னை சரியான நேரத்துல இங்க சேர்த்தார்..”
நன்றியோடு கை கூப்பினார்..
“என்ன அத்தை.. ??இதெல்லாம் என் கடமை..இதுக்கு போய் கும்பிடுறீங்க”
அவன் பேச்சில், புரியாமல் பார்த்தார்..
“ஆமாம் ம்மா.. இவர் தான், உன் மாப்பிள்ளை ஆக போறவர்..
மித்து புருஷனோட பிரெண்ட் இவரு..”
பட்டென்று போட்டு உடைத்தாள் மீனா..
‘இவ பாட்டுக்கு இப்படி படக்குன்னு சொல்லிட்டா..திரும்பவும் இவுக மயங்கிட்டா, என்ன ஆகுறது.??.’
அவனையே கூர்ந்து பார்த்தார் அவர்..பிறகு அவளிடம் ஏதோ, சைகையில் பேசினார்..
‘என்ன சொல்லுறாங்க??’
“அம்மாக்கு சோர்வு.அதான், பேச முடியல..அவங்க கொஞ்சம் ஓய்வெடுக்கட்டும்..நாம வெளிய இருப்போம்..”
அவனை அழைத்துக் கொண்டு வெளியே வந்தாள்..
மதுவின் படுக்கையில், ஆளுக்கு ஒரு புறம் அமர்ந்திருந்தார்கள் சேகரும்,பிரமிளாவும்..
இருவருக்கும் இடையில் கனத்த மௌனம்..
ராஜா,இது கணவன் மனைவி விஷயம்,இடையில் நாம் எதற்கு என்று, சேகர் காட்டிய அறைக்கு சென்று விட்டான்..
இருவரும், பழைய நினைவில் மூழ்கி இருந்தார்கள்..
அன்று அந்த பையன், விஷயம் சொன்னதும், சேகரை கண்டபடி திட்டி, அழுது சண்டை போட்ட பிரமிளா,இறுதியில்…
“நீ எல்லாம் ஒரு மனுஷன்..உன் புத்தியை காட்டிட்ட இல்ல..லோ கிளாஸ் புத்தி..என் அப்பா கிட்ட அப்போவே சொன்னேன்.,நம்ம தகுதிக்கு தகுந்த இடம் பார்ப்போமுன்னு.. கேட்டாரா அவரு..
நீ தான் உசத்தினு, உன்னை புடிச்சு என் தலையில கட்டிட்டு,இப்ப நிம்மதியா சென்னைல உட்கார்ந்திருக்கார்..
அவர் பார்த்த மாப்பிள்ளையோட லட்சணம் எப்படின்னு தெரிஞ்சுகட்டும்..
இனிமே, உன் கூட என்னால வாழ முடியாது..
நான் போறேன்..
உன்னை விட்டு,இந்த உலகத்தை விட்டே..”
அதுவரை அவர் பேசிய அனைத்தையும், தலை குனிந்தபடி, குற்ற உணர்வோடு கேட்டுக் கொண்டு இருந்த சேகர்.அவர் செல்கிறேன் என்றதும், கோபித்துக் கொண்டு, சென்னை செல்ல போகிறார் என்று நினைத்தார்..
கடைசியில் அவர் சொன்ன வாக்கியத்தை கேட்டு, அவர் சுதாரிப்பதற்குள்,பிரமிளா கிணற்றடியை நோக்கி, வேகமாய் சென்றார்..
அவரை தடுக்கும் முன்,அங்கு உள்ள பாசி வழுக்கி கீழே விழுந்தவரின் வயிற்றில், துவைப்பதற்கு போட்டிருக்கும் கல் பட்டு, பலத்த அடி ஏற்பட்டது..
அவர் கதறிய கதறலில், சேகரின் அன்னை ஓடி வந்தார்..
அவர் தந்தை, திருவிழாவுக்கு முன்னமே சென்றிருந்தார்..
“என்னாச்சு, என்னாச்சு பா,சேகரு..”
அவருக்கு, பதில் எதுவும் சொல்லும் நிலையில் இல்லை அவர்.
மனைவியை மருத்துவமனைக்கு கூட்டி சென்றார்..தங்கள் காரில்..
அதற்குள், வலியில் மயங்கி இருந்தார் பிரமிளா..
மருத்துவமனையில், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினார்கள்..
அவரிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு, சிகிச்சையை ஆரம்பித்தார்கள்..
சில மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு,வெளியே வந்த மருத்துவர், சேகரை, தன் அறைக்கு அழைத்து பேசினார்..
“மிஸ்டர் ராஜசேகர்..உங்க மனைவியை காப்பாத்திட்டோம்..
பட் உங்க குழந்தையை..”
உதடு பிதுக்கினார்..
“அதோட, உங்க மனைவிக்கு கர்ப்ப பையில பலத்த அடி. இனி, குழந்தை பிறக்க வாய்ப்பு கிடையாது..சாரி டு சே திஸ்..”
இடிந்து போய் வெளியே வந்தார் சேகர்..
[the_ad id=”6605″]
அவரின் முன்னே, அன்று பூத்த அரளி மொட்டு போல, சிவந்த நிறம் உடைய குழந்தையை நீட்டினார், பாருவின் அத்தை..
“ராசா, உனக்கு மகாலட்சுமி மாதிரி பொண்ணு பிறந்துருக்கு..”
புன்னகையுடன் கூறினார்..
பாருவையும், அதே மருத்துவமனையில் தான் சேர்த்திருந்தார்கள்..
பூ குவியல் போல இருந்த தன் குழந்தையை வாங்கி, அதை உச்சி முகர்ந்தவர்
கண்ணில், கண்ணீர் வெள்ளம்..
சட்டென்று அவர் மூளையில் ஒரு யோசனை, வேகமாய் மருத்துவர் அறைக்கு சென்றவர்..
“டாக்டர், இந்த குழந்தை தான் பிரமிளாவுக்கு பிறந்த குழந்தைன்னு, அவ கிட்ட நீங்க சொல்லணும்..”
“வாட்..??விளையாடுறீங்களா??”
“ப்ளீஸ் டாக்டர்..இனி குழந்தை பிறக்காதுன்னு தெரிஞ்சா, உடைஞ்சு போய்டுவா..அந்த அதிர்ச்சியை அவளால தாங்க முடியாது..
ஏற்கனவே தற்கொலை வரை போய்ட்டா..இனி, அப்படி ஒரு முடிவுக்கு வர மாட்டான்னு என்ன நிச்சயம்..??
நீங்க தான் உதவி செய்யனும்..”
“இது, யார் குழந்தை..??”
“என் குழந்தை தான் டாக்டர்..”
அவரை, ஒரு மாதிரியாக பார்த்தார் டாக்டர்..
அதன் பின், அவரை கெஞ்சி சரி செய்து,பிரமிளா விழிக்கும் போது, அவர் முன்னே, இது தான் அவர் குழந்தை என்று காட்டினார் டாக்டர்..
அவரும், சிகிச்சையின் விளைவால், மயக்க மருந்து உதவியோடு இருந்ததால், வேறு கேள்வி எதுவும் கேட்கவில்லை..
தன்னால் தான் பிரமிளாவுக்கு இந்த நிலை..குழந்தையும் இழந்து,இனி குழந்தை பெற முடியாத நிலை, என்னும் குற்ற உணர்வு அவரை, இந்த முடிவுக்கு தூண்டியது..
அதன் பிறகு, பிரமிளா நன்றாக தெளிவதற்குள், அடுத்த அதிர்ச்சியாய், பாருவின் மரணம் நிகழ்ந்தது..
பொன்னுசாமிக்கு விஷயம் தெரிந்து, இங்கு வருவதற்குள், தான் பெற்ற பிள்ளைக்கும், தன் காதல் மனைவிக்கும், கடைசி கடமையை முடித்து, வழி அனுப்பி இருந்தார் சேகர்..
நிகழ்காலத்திற்கு வந்தவர், தன் மௌனத்தை கலைத்து,
“உனக்கு ஆண் குழந்தை பிறந்துச்சு..முழு வளர்ச்சி இல்லை..
அடி பட்டதால.. இங்குபேட்டர்ல வச்சு கூட காப்பாத்த முடியல..
என் பாரு கிட்ட சமாதானம் சொல்லிக்கலாம்னு நினைச்சு,அவ குழந்தையை உன் கிட்ட கொடுக்க சொன்னேன்..
அப்புறம் தான் தெரிஞ்சுது..எங்களுக்கு ரெட்டை குழந்தைன்னு..
மித்ராவை, நீ இது வரை பார்த்ததில்லை..
மித்ராவும், மது மாதிரி தான் இருப்பா..
ரெண்டு பேருமே, பாரு மாதிரி தான்..நிறம் மட்டும், என்னை மாதிரி..
அப்போ எனக்கு, வேற வழி தெரில..
மித்ராவை என் நண்பன் பொறுப்புல விட்டதால,
மது மேல தான், என் முழு கவனமும் இருந்துச்சு..
நடராஜ், என் பொண்ணை நல்லா வளர்ப்பான்னு தெரியும்..”
உன்னிடம் வளரும் குழந்தையை பற்றி, எனக்கு நம்பிக்கை இல்லை..
இந்த குழந்தைக்காக தான், இத்தனை வருட வாழ்வு உன்னோடு..
இல்லையேல், என்றோ சென்றிருப்பேன்.என் பாரு சென்றவுடன்,என்று அவர் சொல்லாத பல விஷயம் புரிந்தது பிரமிளாவுக்கு..
அவர் நினைத்தது போல தானே, மதுவும் வளர்ந்து நின்றாள்..பிரமிளாவின் வளர்ப்பு என்று, ஒவ்வொரு செயலிலும் அறிவித்தபடி..
“என் பொண்ணுக்கு, இதெல்லாம் தெரியுமா??”
மயக்கத்தில் இருக்கும் மதுவின் தலையை கோதிக் கொடுத்த படி கேட்டார், பிரமிளா..
குரல் நடுங்கியது..
“நான் சொல்லல..அவளா தெரிஞ்சுகிட்டா..”
அதிர்ந்து சேகரை பார்த்தவர்..
கத்திக் கதறி அழுதார்..
“இல்ல..மது என் பொண்ணு தான்.. என் பொண்ணை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன் நான்..”
கனத்த மனதுடன் வெளியே வந்தார் சேகர்..
மும்பையில்..
கூண்டுக்குள் அடைபட்ட புலி போல, அறைக்குள் நடந்து கொண்டிருந்தான் அமித்லால்..
“எப்படி??எப்படி போனா??இவ்ளோ காவலையும் மீறி.எந்த கேமராலையும் பதிவாகல..??
ஹவ்?? ஹவ்?? இட்ஸ் பாசிபிள்..”
உறுமிக் கொண்டிருந்தான்,அவன் அத்தையிடம்..
அனைத்து வேலைகாரர்களும், நடுங்கிக் கொண்டு நின்றார்கள்..