ஆதியால் அவன் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. அவனுக்கு இப்பொழுதே ரசிகாவை பார்க்க வேண்டும் என்று தோன்றியது. மற்றவர்களுக்கும் அப்படியே. அவர்கள் வேலையை தவிர்த்து விட்டு, அவளை பார்க்க சென்று விட்டனர்.
அகரன் தயாராகி ஆதியை பார்க்க வந்தான்.
அகரா, நாம மீட்டிங்கை மாலை வைத்துக் கொள்ளலாமா? என ஆதி கேட்க, சார் இது புது பிராடெக்ட்டுக்கான மீட்டிங். நம்ம குழுவினர் பிராடெக்டுக்கான விவரத்தையும் சாம்பிளையும் தயாரா வச்சிருக்காங்க. இப்பவே வச்சா தான் இன்வெஸ்ட் அதிகமா பண்ணுவாங்க பாஸ் என்றான்.
ஆதி யோசனையுடன், வந்துட்டாங்களா? கேட்டான். வந்துக்கிட்டு இருக்காங்க. இன்னும் அரை மணி நேரத்தில் இருப்பாங்க.
“அவங்கள வர வேண்டாம்ன்னு சொல்லீடு. மாலை பார்த்துக்கலாம்” என்றான் ஆதி.
சார், இப்ப தான் சொன்னேன். என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க? உங்களுக்கு ருச்சுவை பிடிச்சிருக்குல்ல என்று அகரன் கேட்க, எனக்கா? எனக்கு எதுக்கு அவளை பிடிக்க போகுது? ஆதியும் அவனிடம் கேட்டான்.
அப்படியே இருந்துக்கோங்க. அதான் உங்களுக்கு நல்லது. உங்களுக்கு பிடிச்சிருந்தாலும் அவ உங்களை ஏத்துக்க மாட்டா. அவளை பற்றி எனக்கு நன்றாக தெரியும். அவளது தாழ்வு மனப்பான்மை நம்முடன் அவளை சேர விடாது. நீங்க எனக்கு போல் அவளுக்கும் பாஸ். அவள் என்னை பற்றி நினைப்பதை சீக்கிரமே அறிந்து கொள்வேன்.
அவள் எந்த அளவிற்கு வெகுளியோ அதே அளவு அவளை அவளே ரொம்ப கீழ வச்சிருக்கா. உங்களை போல் வசதியான ஹை கிளாஸ் ஆளை பார்க்க கூட மாட்டாள். அவளை கட்டிக் கொண்டவனும் கண்டிப்பாக பணக்காரனாக தான் இருப்பான். அவனால் அவள் வாழ்க்கை கெட்டது போதாதா? உங்களுக்கு ஏற்ற வசதியான பொண்ணா தேர்ந்தெடுத்துக்கோங்க. நீ ஒத்துக் கொள்ளவில்லை என்றாலும் அவளை உங்களுக்கு பிடிச்சிருக்குன்னு எனக்கு தெளிவா தெரிஞ்சு போச்சு. ஆனால் அவள் பக்கம் வராதீங்க சார். இதுவரை அவள் பட்ட கஷ்டமே போதும்.
ஆதி மனதினுள் இப்பொழுது தான் நான் அவளை காதலிக்கிறோனோ? என்ற சந்தேகம் எழுந்தது.
எனக்கு அவளை பிடிச்சிருக்குன்னு எப்படி உறுதியா சொல்ற? உங்கள் கோபம், பார்வை, நடத்தை, இப்ப கூட அவளை பார்க்க நினைத்து தானே இந்த மீட்டிங்கை தள்ளி வைக்க சொல்றீங்க? இதுக்கு பேர் காதல் இல்லாமல் என்னவாம்? அவள விட்டுருங்க என்றான்.
நான் அதுக்காக இல்லை. என்னை விட யாரும் கஷ்டப்படுறவங்க இல்லைன்னு நினைச்சேன். ஆனால் அவளோட கஷ்டத்துக்கு முன்னாடி என்னோட கஷ்டமெல்லாம் ஒன்றுமேயில்லைன்னு தோணுச்சு. ரசிகாவை நினைத்து மனம் அமைதியாகலை. மற்றபடி நீ சொன்னது போலெல்லாம் இல்லை என்றான் ஆதி.
புன்னகையுடன் அவனை பார்த்த அகரன், சார் நீங்க இப்ப தயாராகுறீங்களா? இல்லை பேக்டரியை மூடிட்டு வீட்டுக்கு போகலாமா? என கேட்ட அகரனை முறைத்த ஆதி, நான் தயாராகுறேன். நீ முதல்ல வர்றவங்கல்ல கவனி. நான் வாரேன் என்று அவனறைக்குள் இருந்த ஓய்வெடுக்கும் அறைக்கு சென்று படுத்தான் ஆதிரேயன்.
வீட்டிற்கு வந்த மெல்லினா ரசிகாவை பார்த்ததும் ஓடிச் சென்று அணைத்துக் கொண்டாள்.
“ஹேய், வாட் ஹேப்பண்டு? ஒய் ஆர் யூ கிரையிங்?” என கேட்டாள் ரசிகா. அவர்களை பார்த்துக் கொண்டிருந்த பிரபாகரனையும் தமிழரசனையும் பார்த்து, அப்பா நீங்க ஹாஸ்பிட்டல் போகலையா? எனக் கேட்டாள். அவளுக்கு நடந்ததை கேட்ட அவர் மனமோ கனத்து இருந்தது. அவர் பதிலளிக்காமல் நின்றாள்.
மெல்லினாவை விலக்கி, எல்லாருக்கும் என்னாச்சு? அப்பா நீங்க எல்லாருமே இருக்கீங்க ஆதி சார் வேற வரலை. மெல்லி அழுறா? அவருக்கு ஒன்றுமில்லைல்ல? என்று பயத்துடன் கேட்டுக் கொண்டே பிரபாகரனிடம் வந்து, சார் ஒரு வேலை பொண்ணுங்கல்ல விற்கும் கும்பலை கண்டு பிடிச்சுட்டாங்களா? சார் அங்க தான் போயிருக்காரா? அவள் கேட்க, யாரும் ஏதும் சொல்லாமல் இருக்க, அவளுக்குள் பதட்டம் ஒட்டிக் கொண்டது.
சொல்லுங்க என்னாச்சு? என்று டென்சனாக கேட்டாள்.
“ஒன்றுமில்லைம்மா” என்று பிரபாகரன் ரசிகா தலையில் கையை வைத்து விட்டு, பாப்பாக்கள்ள காணோமே? கேட்டார்.
அவங்க கார்ட்டூன் பாக்குறாங்க சார். அவனை பிடிச்சுட்டாங்கல்லா? அவள் கேட்க, இல்லம்மா என்று அவர் உள்ளே தன் மனைவியை பார்க்க சென்றார். மெல்லினாவும் அவருடன் சென்றார்.
அப்பா, ஏதும் பிரச்சனையா? ரசிகா கேட்க, உட்காரும்மா என்று அவளை அமரச் சொன்ன தமிழரசன், உன்னை பற்றி இப்பொழுது தான் தெரிந்ததும்மா என்றார்.
என்னை பற்றியா? என்னை பற்றி என்ன? என்று விழித்தாள்.
சாரிம்மா, உன் மீதுள்ள ஆர்வத்தில் அகரனை மிரட்டி உன்னை பற்றிய அனைத்தையும் தெரிந்து கொண்டோம் என்றார்.
சார் என்று எழுந்தாள் ரசிகா. ஆமாம்மா, உட்காரு. மனதில் இருக்கும் ரணம் ஆறும் வரை பேசணும் என்றார்.
ரணமா? என்று கேட்டுக் கொண்டே அமர்ந்தாள் ரசிகா.
ஆமாம்மா. ரணம் தான். எல்லாம் என் தவறு தான். என் மகளை ஒழுங்காக வளர்க்காமல் வேலை வேலை என சுற்றி திரிந்து விட்டேன். அம்மா இல்லாத பிள்ளை ஆனதால் அவள் தவறான பாதையை தேர்ந்தெடுத்து விட்டாள். அவளுக்கு ஆதி மாப்பிள்ளையை முடித்து வைத்து தவறிழைத்து விட்டேன்.
நீ இருந்த அதே நிலையில் வளர்ந்தவர் தான்ம்மா ஆதிரேயனும்.
அப்பா, என்ன சொல்றீங்க? வசதி இருந்தும் என்னை போல் அவர் வளர்ந்தார்ன்னு சொல்றீங்க?
வசதியாம் வசதி. இங்க கூட பணம், உறவு பிரச்சனைகள் அதிகம் இருக்கும்மா. இப்ப உள்ளே இருக்காங்கல்லே சவிதா அவங்க ஆதி மாப்பிளையோட அம்மா இல்லை. அவர் அம்மா இறந்த பின் சித்தியாக உள்ளே நுழைந்தவர் தான் சவிதா.
மூத்த தாரம், இரண்டாம் தாரம் பிரச்சனை தான். அப்படி பார்க்குறவங்க இரண்டாம் தாரமாக திருமணம் செய்ய எதுக்கு ஒத்துக்கணும்? அந்த சவிதா பணத்துக்காக தான் பிரபாவை மணந்தார். அவனோ தன் பிள்ளை ஆதிக்கு அம்மா இல்லாமல் போய் விடக்கூடாதுன்னு கல்யாணம் பண்ணினார்.
சவிதா வீட்டிற்கு வந்ததிலிருந்து ஆதியை தள்ளியே வைத்திருந்தார். ஆனால் பேச மட்டும் செய்வார். ஆதியின் ஐந்தாம் வயதில் இவன் அம்மா நோயால் இறந்து போனாங்க. பின் தான் சவிதா உள்ளே நுழைந்தார். அவருக்கு மகன் பிறக்கவும் ஆதியை மொத்தமாக விலக்கினார். அவர் மகனுக்கும் ஆதிக்கும் மூன்று வயது வித்தியாசம். அவன் மனதிலும் நஞ்சை விதைத்து தான் வளர்த்தார். ஆனால் ஆதி அவருடன் மூன்று வருடம் அம்மா என்றே பேசி தான் வந்தான். அப்பொழுது ஏதும் சொல்லாதவர்கள் தனக்கென மகன் வரவும் எவளோ ஒருத்திக்கு புற்ந்துட்டு என்னை அம்மான்னு அழைக்காதேன்னு ரொம்ப கடுமையா பேசினாங்க.
அவன் பிரபாவிடம் ஒரு முறை சொல்லி அழ, அப்பா, மகன் இருவரும் சவிதா மீது வைத்திருந்த பாசத்தை ஆயுதமாக கையெடுத்தார் சவிதா.
என்னை கேள்வி கேட்டால் செத்து போருவேன்னு ஆதியையும் பிரபாவையும் மிரட்டுவா. அவள் முழுதாக கெட்டவள் இல்லை. என்ன தான் ஆதியை திட்டினாலும் சாப்பாடு அவள் தான் எடுத்து வைப்பாள். இப்படியாவது அம்மா அருகே இருக்கட்டும் என்று ஆதியும் என்ன பேசினாலும் அமைதியாக சென்று விடுவான்.
இரண்டாவது மகனுக்கு நான்கு வருடம் கழித்து மெல்லினா பிறந்தாள். அவளை அதிகமாக சவிதாவிடம் விடாமல் சீதாவை வைத்து பார்த்துக் கொண்டான் பிரபா.
மெல்லினா பொண்ணு என்பதால் வருங்காலத்தில் நம்மை கண்டு கொள்ளமாட்டாள் என்று சவிதாவும் பெரியதாக அன்பு கொள்ளவில்லை. அவளுக்கு எல்லாமே இரண்டாவது மகன் தான். சவிதா கொடுத்த செல்லத்தில் அவள் மகன் தவறான வழிக்கு சென்றான். இப்பொழுது வரை அவன் திருந்தவேயில்லை.
கல்லூரியில் பிரபாவின் இரண்டாவது மகனும், என் மகளும் காதலித்து இருக்காங்க. எங்க யாருக்குமே தெரியாது. என்ன அவள் காதலித்து இருந்தாலும் மூத்த தாரத்து பையன் ஆதிரேயனுக்கு தானே சொத்து மதிப்பு அதிகமாக கிடைக்கும் என்பதால் அந்த பையனை விட்டு ஆதிரேயன் பின் சுற்ற ஆரம்பித்தாள். இதில் சவிதாவின் இரண்டாவது மகன் கோபமானான். அண்ணன் தம்பிக்குள் பிரச்சனை அதிகமானது. கல்லூரியிலும் ஒரு பொண்ணுக்காக ஆதி அவனை அடித்து விட்டான். அதிலும் சவிதா ஆதி மீது கோபமானாள்.
என் பொண்ணு ஆதியை காதலிப்பதாக சொல்ல, நானும் நம்பி என் மகளை ஆதிக்கு திருமணம் கேட்டு வந்தேன். சவிதா ஒத்துக் கொள்ளவேயில்லை. சவிதாவிடம் என் பொண்ணே பணத்தை வைத்து டீல் பேசினாள். பணம் என்றவுடன் சவிதா அமைதியானாள். ஆனால் ஆதியின் தம்பிக்கு கோபம் ஏறியது. அவ்விடத்தில் அவன் காட்டவில்லை. அப்பொழுது இவர்களின் காதல் எங்கள் யாருக்குமே தெரியாது.
திருமணமும் முடிந்தது. ஆதியுடன் இவளும் பேக்டரிக்கு வருவேம்ன்னு பிரச்சனை செய்தாள். அவனும் அழைத்து சென்றான். நினைத்த நேரத்தில் பேக்டரி, ரெசார்ட், ஹோட்டல் பணத்தை எடுத்து சென்று செலவழித்து விடுவாள். ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கும் நேரம் தான் என் மகள் பணத்தை எடுத்து சென்றது கேமிராவில் இருந்தது. அவன் கேட்ட போது அழுது சமாளித்தாள்.
ஆதி விருப்பமில்லாமல் திருமணம் செய்தாலும் அவளை நன்றாக பார்த்துக் கொண்டாள். ஆனால் அவள் எடுத்த பணத்தை..என்று தமிழரசன் குரல் ஒடுங்கியது. கண்ணீர் வழிந்தது.
அப்பா..ரசிகா அழைக்க, நீயே எனக்கு புள்ளையா பொறந்துருக்கலாம்ன்னு தோணுதும்மா. அவள் ஆதிக்கு துரோகம் செய்துட்டாள். அதுவும் ஆதியை பழி வாங்க நேரம் கிடைக்காதா? என்று இருந்த அவன் தம்பியுடன் அதிக நாட்கள் காலை நேரத்தில் உறவாடி இருந்திருக்காள்.
வேலைக்கு சென்ற ஆதி உடல்நலமில்லாத காரணத்தில் வீட்டிற்கு வந்தான். அவன் வந்ததை கவனிக்காத என் மகள் ஆதியின் தம்பி அறைக்கு செல்வதை பார்த்த ஆதி, மறைந்து நின்று அனைத்தையும் பார்த்து விட்டான். அவனால் இதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
தன் மனைவி பணத்துக்காகவும், உடல் சுகத்திற்காகவும் தன்னை ஏமாற்றி இருக்கான்னு ரொம்ப உடைஞ்சு போயிட்டான். ஆனால் ஏதும் தெரியாதது போல் அறைக்கு சென்று விட்டான். இரவு அவனறைக்கு வந்த என்னோட பொண்ணு அவள் கர்ப்பமாக இருப்பதை சொல்லவும் அவனால் ஏத்துக்க முடியலை.
அவனுடைய சிறு வயது கோபமும் சேர்ந்து வெளியே வந்தது. இது என்னோட குழந்தை இல்லைன்னு அவன் கத்த, வீடே அலறியது. எல்லாருக்கும் விசயம் தெரிந்தது. தன் இரண்டாவது மகன் மருமகளின் இந்நடத்தை தெரிந்த சவிதாவும் கோபத்தில் தன் மகனை அடித்து விட்டார். அவன் கோபமாக அவர்களின் காதலை கூற, நான் உடைந்து விட்டேன். பிரபாவை நேர்கொள்ள என்னால முடியல. அதன் பின் நான்கைந்து மாதமாக நான் இங்கே வரவேயில்லை.
நான் என்னோட பொண்ணை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய போது, ஆதி மாப்பிள்ளை தான் மனம் கேட்காமல் குழந்தைக்காக அவர் பார்த்துக் கொண்டார். ஆனால் இருவருக்கும் சண்டை அதிகரித்துக் கொண்டே சென்றது.
பிரபாவின் இரண்டாவது மகனும் வீட்டிலிருந்து கிளம்பவும் இல்லை. பழி முழுவதையும் ஆதி மாப்பிள்ள மேல போட்டான். ஆதி மாப்பிள்ள தான் அவனோட காதலியை திருமணம் செய்து கொண்டானாம். அவனுடைய பழி வெறி கூடியது. என் மகளை விட முடியாதுன்னு அந்த பையன் சொல்ல, என் மகளோ அவனை நிராகரித்து சண்டையானாலும் ஆதியுடன் பணத்திற்காக இருந்தாள்.
ஆதி மாப்பிள்ளையும் சும்மா இல்லையே? அழகான ஆண்மகன் தானே? அவள் பயன்படுத்த நினைத்தாள். ஆனால் அவர் பக்கம் அவளை விட வில்லை. பிள்ளைக்காக மட்டுமே அவளை தங்க அனுமதித்தார். ஆனால் இருவரும் ஒரே அறையில் இருக்கவில்லை.
சவிதா அப்பொழுது தான் தன் தவற்றை உணர்ந்தாள். தன் மகனிடம் பேசியும் அவன் அப்பொழுதும் என் பொண்ணை ஒத்துக் கொள்ள வைக்க அவள் பின்னே சுற்றினான். இவர்களின் இந்நடத்தையும் ஆதியின் மனதை கஷ்டமாக்கியது. அதனால் தான் வளைக்காப்பு முடியவும் ஒரு நல்ல ஆர்டருக்காக பாரின் சென்றான். அந்நேரம் என் மகள் பிள்ளையை பெத்து போட்டு உடல் வலு இல்லாமல் போய் சேர்ந்துட்டாள்.
ஆதி மாப்பிள்ளையால் தான் நடந்தது எனவும் மனைவி பிரசவத்தின் போது அருகே இல்லாத கணவன் எனவும் அவதூறான விசயத்தை அந்த பையன் பரப்பினான். குடும்ப மானத்தை வாங்கிட்டு என் பிள்ளை மேல பழிய போடுறன்னு சவிதா ஆதியை மகனா ஏற்றுக் கொண்டு பேச, அவன் கோபத்தை சொல்லவா வேண்டும்?
அவன் உன் மகன்னா நான் யாருன்னு இவன் கத்த, நீ என்னோட பையன்னா இப்படி செஞ்சிருக்க மாட்ட. எல்லா பிரச்சனைக்கும் நீ தான் காரணம் என்று சவிதா சத்தமிட, சீற்றத்துடன் அவரது இரண்டாவது மகன் அவர் கழுத்தை பிடித்து தூக்க, அனைவரும் சவிதாவை காப்பாற்றினோம். ஆனால் அவன் வெறிபிடித்தவனாக மாறி அருகே இருந்த மரநாற்காலியை தூக்கி அடிக்க வந்தான். ஆனால் ஆதியை காப்பாற்ற வந்த சவிதா தலையிலே பட கோமாவில் சென்று விட்டாள்.
இதற்கு மேல் வீட்டுக்கு வந்த உன்னை கொல்லாமல் விட மாட்டேன் என்று அவனை வெளியே அனுப்பினான் பிரபா. இப்பொழுது வரை அவன் இருக்கும் இடத்திற்கு பணத்தை மட்டும் அனுப்புவான்.
ஆதியின் எதிராளிக்கு இந்த பையன் செய்தி கிடைக்க, எல்லாத்தையும் மூட வைக்க வந்த சமயத்தில் ஆதியும் என்னோட பொண்ணும் சந்தோசமாக வாழ்ந்ததை போன்ற வீடியோவை வெளியே விட்டான் பிரபா. அதனால் ஆதி மாப்பிள்ளைக்கு பிரச்சனை குறைந்தது. ஆனால் யாரும் முழுதாக அவரை நம்பலை. பாவம்மா ஆதி மாப்பிள்ளை. அதிலிருந்து பொண்ணுங்க என்றாலே விலகி தான் இருப்பார்.
ஆனால் நானும் பிரபாவும் இதுவரை எந்த இன்பமும் அனுபவிக்காத அவருக்காக பொண்ணு தேடினாலும் சரின்னு சொல்லவே மாட்டேங்கிறார். எனக்கு திருமணமே வேண்டாம். பிள்ளைகளை அவளை போல் வளர்க்கக்கூடாது. அவர்களுக்கு அம்மா வேண்டும்ன்னு சொன்னாலும் அவர் கேட்க மாட்டேங்கிறார்.
பச்சபிள்ளைகளை சீதா தான் வளர்ந்தார். அவள் வீட்டு வேலைகளை கவனிக்க வேண்டும் என்பதால் தான் கேர் டேக்கரை வர வைத்தோம். ஆனால் பசங்களுக்கு யாரையும் பிடிக்கவில்லை. நல்ல வேலைம்மா நீ வந்து சமாளிச்ச..என்று கண்ணீருடன் ஆதி கதையை கூறி முடித்தார்.
என்னோட பிரச்சனையெல்லாம் ஆதிசார் பிரச்சனையை பார்த்தால் ரொம்ப சின்னதாக தெரியுது அப்பா. பாவம். அவர் எப்படி தான் தாங்கிக் கொண்டாரோ? என்று ரசிகா கேட்க, பிள்ளைகள் தான்ம்மா தாங்கிக் கொண்டு இருக்கார். அதிகமாக பேசவில்லை என்றாலும் அவருக்கு பிள்ளைகள் என்றால் உயிர்.
காலை எழுந்ததும் முதலில் பிள்ளைகளை தான் பார்ப்பார். இரவும் வேலை முடித்து எவ்வளவு அலுப்பாக வந்தாலும் பிள்ளைகளை பார்க்காமல் தூங்க செல்ல மாட்டார். பிள்ளைகளிடம் அவருக்கு பழக தெரியலை என்றார் தமிழரசன்.
அப்பா, நீங்க கவலையே படாதீங்க. நான் இங்கிருந்து செல்லும் முன் கண்டிப்பாக ஆதி சாரும் லிது நிதுவும் அதிக நெருக்கமாகி விட்டு தான் செல்வேன் என்றாள்.
எங்கம்மா போக போற? அவர் கேட்க, எத்தனை நாள் இங்கே இருப்பேன் அப்பா. பார்ப்பவர்கள் தவறாக எண்ண மாட்டார்கள். ஆதி சாருக்கு அவர் அம்மாவையும், பிள்ளைகளையும் நெருக்கமாக்கி விட்டு தான் செல்வேன் என்றாள். அவர் கண்ணீருடன் ரசிகாவை பார்த்தார்.
அப்பா, உங்க பொண்ணு நான் இருக்கேன் அழலாமா? என்று ரசிகா அவர் கண்ணீரை துடைக்க, தாத்தா எதுக்கு அழுறீங்க? நிது அவரிடம் வந்து தாவினாள்.
“ஒன்றுமில்லைடா கண்ணம்மா”..அவர் சொல்ல, நிது தாத்தாவுக்கு கிச்சு கிச்சு மூட்டுவோமா? ரசிகா கேட்க, இருவரும் அவரை சிரிக்க வைக்க முயன்றனர்.
அதே நேரம் ரெசார்ட்டில் துகிலன், “எல்லாரும் போங்க” என்று கத்தினான்.
இவனுக்கு பைத்தியம் பிடிச்சிருச்சுடி. வாங்க போயிடலாம் என்று பொண்ணுங்க அறையை விட்டு வெளியேற, எனக்கு அவ வேணும் என கத்திக் கொண்டே மப்புடன் விழுந்தான்.
எங்க போன? எனக்கு நீ வேண்டும்..வேண்டும்..என புலம்பிக் கொண்டே மயங்கினான்.
ஆதி மீட்டிங்கை முடித்து விட்டு வீட்டிற்கு கிளம்ப, நானும் வருவேன் என்று அகரனும் ஆதியின் காரில் ஏறினான். ஆதி அவனை முறைக்க, சும்மா முறைக்காதீங்க பாஸ். நீங்க ஒத்துக்கலைன்னா எனக்கு போட்டி நீங்கன்னு நினைச்சாலே எனக்கு சிரிப்பு தான் வருது என்றான்.
என் வேதனை சிரிப்பாக இருக்காடா உனக்கு? என்று மனதினுள் எண்ணிய ஆதிக்கு ரசிகாவை அவனுக்கு பிடித்துள்ளது என உணர்ந்து கொண்டான்.
இருவரும் வீட்டினுள் நுழைந்தனர். ஓடி வந்த ரசிகா ஆதியை பார்த்து, சார் இங்க வாங்க என அவனை இழுத்து ஓர் அறைக்கு பின் மறைய வைத்து அவனுடன் மறைந்து கொண்டான். இதை பார்த்த அகரன் அதிர்ச்சி நிறைந்த கோபத்துடன் நின்றான்.
என்ன பண்ற? ஆதி கேட்க, அவள் அவன் கையை விடவேயில்லை. ஆதி ரசிகாவை பார்க்க, அவள் வெளியே எட்டிப் பார்ப்பதும் ஆதியை பார்ப்பதுமாக இருந்தாள்.
சார், முன்னே வாங்க என அவனை முன்னே நிறுத்தி அவள் பின்னே நின்றாள். திடீரென ஆதியை அறையிலிருந்து வெளியே தள்ளினாள் ரசிகா. அவன் புரியாமல் அவளை பார்த்தான்.
அப்பா என்று லிதுவும் நிதுவும் ஆதியின் மீது தண்ணீரை ஊற்ற, அவன் திணறி பயந்து நின்றான். பசங்க ஓடி விட்டனர்.
சார் பசங்க என்ட்ரி எப்படி? அவள் கேட்க, அவளை முறைத்த ஆதி, நான் நிறைய சாக்லெட்ஸ் கொண்டு வந்திருக்கேன். யாருக்கும் வேண்டாமாம் அகரா இந்தா நீ வச்சுக்கோ என்று ஆதி சத்தமாக சொன்னான்.
அகரனா? என்று அவனை பார்த்த ரசிகா, அவனை முறைத்துக் கொண்டே உள்ளே செல்ல, அகரனும் அவள் பின்னே ஓடினான். பசங்க அவ்விடம் வர ஆதிரேயன் இருவரையும் பார்த்து நகர முடியாமல் அங்கேயே அமர்ந்தான்.
லிது, ரசிகா அழைக்க, அவள் ரசிகாவிடம் ஆதி கொடுத்த சாக்லெட்டுடன் ஓடினாள்.
இந்தா லிது, அப்பாவுக்கு துடைத்து விடு என்று அவளிடம் ஆதிக்காக துவாலையை கொடுத்து விட்டு கோபமாக திரும்பி அமர்ந்தாள்.
ஆதியை விட்டு கொஞ்சம் தள்ளி தான் இருவரும் இருந்தனர். ஆதி பார்வை அவர்கள் மீது பட, அண்ணா கஷ்டமா இருக்கா? என்று மெல்லினா கேட்டுக் கொண்டே அவனருகே அமர்ந்தாள்.
கஷ்டமா? எனக்கு என்னம்மா கஷ்டம்? நீ தான் வருத்தமாகவே இருக்க? மித்திரனை தேடிக்கிட்டு தான் இருக்காங்க. அவன் எங்கு இருக்கான் என்றே தெரியலை. ஆனால் சீக்கிரம் கண்டுபிடிச்சிருவாங்க. கவலைப்படாத என்று மெல்லினாவை சமாதானப்படுத்தினான் ஆதிரேயன். அவள் தன் அண்ணன் தோளில் சாய்ந்து கொண்டாள். இருவரும் ரசிகா, அகரனை பார்த்தனர்.
ருச்சி அகரன் அழைக்க, சார் கோபமா போனீங்க? இப்ப என்னடா உன்னிடம் பேச்சு வேண்டி இருக்கு? போடா என்றாள்.
இங்க பாரு. உனக்கு நடந்தது திருமணமே இல்லை. யாரோ ஒருவன்..
ப்ளீஸ்டா. அவனை நினைவுப்படுத்தி என்னை கஷ்டப்படுத்தாதடா.
சரி, அவனை விடு. “கிவ் மீ ஒன் சான்ஸ்?” கேட்டான் அகரன்.
இல்லடா. நாம ப்ரெண்ட்ஸ்ஸா இருப்பது தான் நல்லது.
ரசிகாவின் இரு தோள்களையும் பற்றிய அகரன், அம்முவிற்கு நான் எழுதிய கடிதம் பிடிக்கலையா? கடிதம் எழுதிய இந்த அகரனை என் அம்முவிற்கு பிடிக்கலையா? என்னை விடு. என் கடிதம் அம்முவிற்கு கொஞ்சம் கூட காதலை வர வைக்க முடியலையா? அவன் கேட்க, ரசிகா கண்ணீருடன் அவனை பார்த்தாள்.
ருச்சி, உன்னோட கண்ணீர் உனக்கு என்னை பிடித்தது எனக் காட்டுகிறது என்றான்.
ரசிகா எழுந்து வேகமாக நகர, ருச்சி நில்லு. என்னை உன் நண்பன் அகரனாக பார்க்காதே. அம்முவிற்கு காதல் கடிதம் எழுதிய “சின்னா”வாக பாரு என்றான்.
என்னால முடியாதுடா. உன் இடத்தில் வேறு யாராவது இருந்தால் கூட என்னால் ஏத்துக்கமுடியும். ஆனால் உன்னை முடியாதுடா.
அப்படின்னா, உனக்கு சின்னா மீது காதல் வந்தது தான? அகரன் கேட்க ரசிகா அழுது கொண்டே, ஆமா சின்னாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். சின்னாவை காதலித்தேன். ஆனால் என் சின்னா நீ இல்லை என்றாள்.
நம்மை தவிர நம்ம ப்ரெண்ட்ஸூக்கு கூட நம்முடைய இந்த கடிதம் பற்றி யாருக்கும் தெரியாது.
அய்யோ, நான் சொல்றது உனக்கு புரியல அகரா. உன் வார்த்தைகளும் நீயும் தான் அந்த கடிதம் எழுதியது என்று புரியுது. ஆனால் அதை வாசிக்கும் போது எனக்குள் வந்த உணர்வுகள் வேறு விதம். என் சின்னாவை நான் உருவமாக கூட பார்க்கலை. இப்ப கூட எனக்கு சின்னாவை பிடிக்கும்.
என்ன பேசுற? நான் எழுதிய கடிதம். நம் காதல் உணர்வுகள் அகரன் சொன்னான்.
இல்லை என்று சத்தமிட்ட ரசிகா. உன்னை அந்த வார்த்தைக்கு உரியவனாக என்னால் உருவகப்படுத்த முடியாது. நீ என் தோழன் மட்டும் தான். எப்பொழுதும் நீ அப்படி பேச மாட்ட. எனக்காக என்னோட சின்னா அவன் வாழ்க்கையை மாற்ற மாட்டான். அவன் அவனாக தான் இருப்பான்.
மெண்டல் மாதிரி பேசாத அகரன் கத்த, கத்தாதடா என்றாள்.
கத்துகிறேனா? உனக்கு ஏன் புரிய மாட்டேங்குது? ஒரு வேலை வேறு யாரையும் என்னிடத்தில் உருவமாய் நினைத்து வைத்திருக்கிறாயா? அகரன் கேட்டான்.
இல்ல அகரா. அது நீ இல்லை. என் மனசு ஏத்துக்க மாட்டேங்குது. ஆனால் அவனை கண்டிப்பாக சந்திப்பேன் என்றும் என் மனது சொல்லுது. நீ என்னோட தோழன்டா. எல்லா இடத்திலும் எனக்கு துணையாக நின்றவன்.
துணை? அதுக்காக தான் நானும் இப்ப பேசிட்டு இருக்கேன்? அகரன் சினந்தான்.
துணை வேற உறுதுணை வேறடா. நீ என் தோழனாக துணையாக தான் இருக்க முடியும். ஆனால் அவன் மட்டும் தான் உறுதுணையாக இருப்பான்.
ஓ, அப்ப அடுத்த கல்யாணத்துக்கு தயாராகிட்ட போல? அகரன் கோபமாக வார்த்தைகளை கொட்ட, ரசிகா அவனை அறைந்து விட்டு அழுது கொண்டே அவளறைக்கு ஓடினாள்.
வீட்டிலிருந்த அனைவரும் வேடிக்கை பார்க்க, ரசி நில்லு என்று மெல்லினா அகரனை முறைத்துக் கொண்டே செல்ல, தெரியும்டா ஏதோ செய்யப் போறன்னு நினைச்சேன் என்று ஆதிரேயன் அகரனிடம் வந்தான்.
சார், நீங்களும் அவளை நெருங்க முடியாது என்று அகரன் கோபமாக வெளியேறினான். முதன் முறையாக ரசிகாவை பார்க்க அவளறைக்கு மெல்லினா பின் சென்றான் ஆதிரேயன். பிரபாகரனும் தமிழரசனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“ரசி கதவை திற” மெல்லினா சத்தம் கொடுக்க, வெளிய வா பேசிக்கலாம் என்று வெளியே வந்தாள் ரசிகா. கண்ணை நன்றாக துடைத்துக் கொண்டு கதவை திறந்து எட்டி பார்த்தாள் ரசிகா.
மெல்லி, அவன் போயிட்டான்ல்ல? ரசிகா கேட்க, ம்ம்..போயிட்டான் ரசி. நீ வருத்தப்படாத என்று மெல்லினா சொல்ல, வருத்தமா எனக்கா? இல்லையே? லிது, நிதுவை எங்க? ரசிகா சாதாரணமாக கேட்டாள்.
“ருச்சி யாரிடமும் வலியை அதிகம் காட்டிக் கொள்ள மாட்டாள்” என்று ஆதிக்கு அகரன் சொன்னது நினைவுக்கு வந்தது.
குட்டீஸ் கீழே நின்று இவர்களை பார்க்க, ரசிகா அவர்களை பார்த்து கீழே ஓடி வந்தாள்.
ஹே. ரசியும் அந்த அங்கிளும் சும்மா விளையாடினோம். பார்த்தேல்ல அங்கிள் விளையாட்டு முடியவும் வீட்டுக்கு கிளம்பிட்டாங்க என்று நிதுவை பார்த்தாள். ரசிகா அழுது கொண்டு செல்வதை பார்த்தவுடன் நிதுகுட்டி சாக்லெட்டை கீழே போட்டு விட்டாள். இப்பொழுது அதை பார்த்து அவள் அழ, லிதுவும் அவளை பார்த்து அழுதாள்.
அச்சோ, சாக்லெட் கீழ விழுந்திருச்சா. கீழ சாக்லெட் விழுந்தா அழக்கூடாது எங்கள் இளவரசிகளே! குப்பைப் பெட்டியில் போடணும் என்று ரசிகா சொல்ல, நீ அழுதேல்ல ரசி என்று கேட்டுக் கொண்டே லிது மேலும் அழுதாள்.
நான் அழுதேன்னா? இல்லையே?
பொய் சொல்லாத. நீயும் அந்த அங்கிளும் சண்டை போட்டீங்கல்ல. அங்கிள் ரொம்ப திட்டிட்டாரா? என்று நிது கேட்க, இவ்வளவு நேரம் சமாளித்து கலகலவென பேசிய ரசிகாவால் பேச முடியவில்லை.
நிதுவை தூக்கிய ஆதி, ரசியும் அந்த அங்கிளும் விளையாடினாங்கடா. சும்மா விளையாட்டுக்கு அழுவது போல் அழுது காட்டிட்டு போனாடா ரசி. ஆனால் பாரேன். சீக்கிரம் வெளிய வந்துட்டா. அப்ப உண்மையிலே அழலை தான? அவன் கேட்க, ஆமா நிது, நாம அழுதா அழுகையை நிறுத்தவே முடியாதுல்ல. சும்மா நடித்து விளையாடி இருக்கா ரசி என்று லிது கூறினாள்.
ம்ம், கரெக்ட் என்று லிதுவையும் தூக்கிக் கொண்டே ரசிகாவை பார்த்தான் ஆதிரேயன்.
ரசி, அடுத்த முறை அந்த அங்கிளுடன் விளையாடும் போது எங்களையும் விளையாட்டில் சேர்த்துக்கோ என்று லிது சொல்ல, அடுத்த முறை அங்கிள் விளையாட வர மாட்டாங்கன்னு நினைக்கிறேன். அங்கிளுக்கு நிறைய வேலை இருக்கும் என்று வாயிலை பார்த்தாள் ரசிகா.
சரி, நீங்க அப்பாவுடன் விளையாடுங்க. நான் நம் எல்லாருக்கும் சாப்பாடு தயார் செய்கிறேன் என்று சமையலறைக்கு சென்றாள் ரசிகா.
ரசிம்மா, சிம்பிளா ஏதாவது போதும்மா என்று தமிழரசன் சொல்லி விட்டு எல்லாரையும் பார்த்தார். ஆமா என்று எல்லாரும் சொன்னார்கள்.
அனைவருக்கும் சாப்பாடு பரிமாறி விட்டு பசங்களுடன் சாதாரணமாக விளையாடினாள். அவர்களுக்கு படம் வரைய சொல்லிக் கொடுத்தாள். இரவு உணவை தயார் செய்து அனைவருக்கும் பரிமாறி விட்டு பசங்களை தூங்க வைக்க சென்றாள். அங்கே மெல்லினாவும் இருந்தாள்.
மெல்லி, இங்க என்ன செய்ற?
கொஞ்ச நாள் நானும் உன்னுடன் படுத்துக்கவா? என்னால தனியா தூங்கவே முடியல ரசி.
சரி, ஆனால் பசங்க அறைக்கு வந்திருக்க?
ஆமா ரசி. எனக்காக நீயும் எங்களுடன் தூங்குறியா?
இங்கேயா?
ஆமா.
ஏதோ சொல்ல வந்த ரசிகா குழந்தைகளை பார்த்து மென்று விழுங்கி விட்டு, சரி என்று அவளும் அவர்களுடன் படுத்துக் கொண்டாள். கதை கூறி தூங்க வைத்து விட்டு அவளும் தூங்கினாள்.
சற்று நேரம் கழித்து குழந்தைகளை காண வந்த ஆதிரேயன் மெல்லினாவும் ரசிகாவும் தூங்குவதை பார்த்து, முதலில் தன் தங்கை மெல்லினாவிடம் வந்து அவளை பார்த்து விட்டு நெற்றியில் முத்தமிட்டான்.
பின் தன் குழந்தைகளை பார்த்தான். அவர்கள் ரசிகா மீது காலை போட்டு தூங்கிக் கொண்டிருந்தனர். மெதுவாக காலை எடுத்து நீட்டி படுக்க வைத்தான். அதன் பின் ரசிகாவை பார்த்தான். மனதில் வலியை வைத்துக் கொண்டு வெளியே சொல்ல முடியாமல் தவிக்கிறாளே? என்று அன்புடன் அவள் தலையை மெதுவாக வருடினான்.
உடனே அவள், அப்பா “ஐ லவ் யூ” என்று ஆதியின் கையை இறுக பிடித்தாள்.
எழுந்தா தப்பா புரிஞ்சுப்பாளே? என்று கையை மெதுவாக உருவி விட்டு அவளது காயம் பட்ட உள்ளங்கையில் முத்தமிட்டான். அவள் முகம் சுருங்க, பட்டென கையை விட்டு நகர்ந்தான். இதில் லிது குட்டிம்மா விழித்து விட்டாள்.
ஷ்..என்று சைகை செய்து லிதியாவை தூக்கி தோளில் போட்டு நாற்காலி ஒன்றில் அமர்ந்தான். கொஞ்சம் கொஞ்சமாக சாய்ந்தவன் பாப்பாவை அவன் மார்பில் போட்டுக் கொண்டே தூங்கி விட்டான்.
மறுநாள் எழுந்த ரசிகா அவன் லிதுவுடன் அவர்கள் அறையிலே தூங்குவதை பார்த்து அதிர்ந்தாலும் வேகமாக வெளியேறினாள்.
சற்று நேரத்தில் விழித்த மெல்லினா புன்னகையுடன் தன் அண்ணனை பார்த்து, அவனை எழுப்பி படுக்கையில் படுக்க சொல்லி அவளும் அவனுடன் படுத்துக் கொண்டாள்.
அவன் ரசிகாவை தேட, அண்ணா ரசி வேலைய பார்க்க போயிட்டா என்றாள் மெல்லினா.
இந்த நேரமேவா?
ம்ம் என்று அவள் தூங்க, அவளுக்கு தட்டிக் கொடுத்துக் கொண்டே தங்கை, பிள்ளைகளுடன் தூங்கியவன் எழுந்து பார்த்த போது மணி நேரமாகி இருந்தது.
வேகமாக அவனறைக்கு சென்றான் ஆதிரேயன். சார்..என்று சத்தம் கேட்டு அவன் அறைக்கதவை திறந்தான். தேனீர் சார். சாரி சார் நேரமாகிடுச்சு என்றாள்.
“இட்ஸ் ஓ.கே” என்றான். அவள் செல்லாமல் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.
என்ன? எதுவும் தேவையா?
சார், இரு நாட்கள் மட்டும் விடுப்பு எடுக்க முடியுமா? ஆதிரேயனிடம் ரசிகா கேட்க, எங்க போக போறீங்க? என்று கடுமையாக கேட்டான்.
சார், விடுப்பு எனக்கில்லை. உங்களுக்கு என்றாள்.
வாட்? அவன் அதிர்ந்து கேட்டான்.
எஸ் சார், பசங்களுக்காக, அப்புறம் மெல்லியும் ரொம்ப கஷ்டப்படுறா. கொஞ்சம் வெளிய போயிட்டு வந்தா நல்லா இருக்கும்ன்னு அப்பா சொன்னாங்க என்றாள்.
அப்பாவா?
ஆமா சார், தமிழப்பா தான். அவருக்கு உங்களோட குடும்பம் மேல எவ்வளவு அக்கறை தெரியுமா? என்று எதற்காக இதை சொன்னார் என்று புரியாமல் ரசிகா அப்பாவியாய் கூற, ஆதிரேயனுக்கு புரிந்தது. அவனுக்கு ஏற்கனவே ரசிகாவுடன் அவனை கோர்த்து விட பார்ப்பதை கவனித்து இருப்பான். அவனுக்கும் அவளை பிடிக்கும் தானே?
ஆனால் ரசிகா சொன்ன காரணம் உண்மை தான் என்று யோசனையுடன் தேனீரை அருந்தியவாறு அமர்ந்திருந்தான்.
ஷ்..சும்மா இருங்கப்பா என்று மெதுவாக பல்லை கடித்துக் கொண்டு ரசிகா சொன்னதை கவனித்து விட்டான்.
யார்கிட்ட பேசுற?
யாரிடமும் இல்லையே? என்று அவள் சொல்ல, அவளது போனை பிடுங்கி காதில் வைத்தான்.
மாமா, நீங்க தான? என்ன செய்றீங்க? ஆதிரேயன் கோபமாக கேட்க, சார் அப்பாவை திட்டாதீங்க. உங்களுக்காகவும் பசங்களுக்காகவும் தான சொல்றாங்க? அவங்களும் வெளியே சென்று வந்தால் சந்தோசமா இருப்பாங்கல்ல என்று ரசிகா இடைபுகுந்தாள். இவர் செய்வது உனக்கு தெரிந்தால் அவ்வளவு தான் என்று மனதினுள் நினைத்த ஆதி, நான் வொர்க்கை பார்த்துட்டு சொல்றேன் என்று தம்ளரை ரசிகாவிடம் கொடுத்து திரும்பி நின்று அவளுக்கு தெரியாமல் புன்னகைத்தான்.
ஆதிரேயன் அகரனிடம் விசயத்தை கூற, சார் உங்களுக்கு எவ்வளவு தைரியம்? என கத்தியவனை நிறுத்திய ஆதிரேயன் உனக்கு நான் கொடுத்த வேலையை முடித்தால் கிளம்பி விடலாம். நீயும் வா. நான் இந்த வாரம் முழுவதும் ஃபீரி தானே? உனக்கு தான் தெரியுமே? என்றான்.
நானுமா? நிஜமாக தான் சொல்றீங்களா? அகரன் கேட்டு விட்டு, பணம் ஏதும் கேட்பீங்களா? அவன் கேட்க, சிரித்த ஆதிரேயன் வேலைய முடிச்சிட்டு சொல்லுடா என்றான்.
வாவ் சூப்பர். இப்பவே வேலைய முடித்து விடுகிறேன் என்று அவன் குதிக்க, ஆதிரேயன் புன்னகையுடன், வாடா மச்சான் உனக்கு இருக்கு என மனதில் நினைத்தான்.
ஆதிரேயன், அகரன், ரசிகா, மெல்லினா, லிது, நிது எல்லாரும் தன் வீட்டினரிடம் சொல்லி விட்டு, சீதாம்மாவுடன் உதவிக்கு ஓர் பெண்மணியை விட்டு சென்றனர்.
ஹப்பாடா, இனி எல்லாம் உன் சித்தம் ஈஸ்வரா? எங்க பையனுக்கு ரசிம்மாவை பிடிச்சிருக்கு. அதே போல் ரசிம்மாவுக்கும் ஆதியை பிடிக்கணும் ஏதாவது செய்யுப்பா என்று தமிழரசன் வேண்ட, பிரபாகரன் புன்னகையுடன் அவரை என்ன வேலை பாக்க சொல்ற? என்று தன் நண்பரை அடித்தார்.
ஊட்டியில் ஆதிரேயனை தெரியாதவர் யாரும் இருக்க மாட்டாங்க. அதனால் அவர்களது சொந்த மலைப்பாதை வீட்டிலே தங்கினர். பின் ஊட்டி பொட்டானிக்கல் கார்டன், பைக்காரா நீர்வீழ்ச்சி, ஏரியில் படகு சவாரியும் அவனுடைய டீ எஸ்டேட், ஸ்டோன் ஹவுஸ் மியூசியம், பைன் காட்டுப்பகுதி கடைசியாக அவலாஞ்சி ஏரியும் பார்த்து வருவதாக திட்டம் செய்தனர்.
அகரனும் ரசிகாவும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு காரில் ஏறினர்.
ரசி, இந்த அங்கிள் விளையாட வர மாட்டார்ன்னு சொன்ன? வந்துட்டாரு என்று லிது கேட்க, சார் இவனை எதுக்கு கூட்டிட்டு வந்தீங்க? ரசிகா கோபமாக ஆதிரேயனிடம் கேட்டாள்.
ஆமா, மேடமுக்கு நான் வர்றதுல்ல அவங்க சொத்து அழிஞ்சு போயிடும் பாரு அகரன் சொல்ல, சார் அவனை அமைதியா வர சொல்லுங்க என்றாள் ரசிகா.
ஆமா பாஸ், அமைதியா போகலைன்னா மேடன் காரிலிருந்து என்னை கீழே தள்ளி விட்டுவா என்று மேலும் வம்புக்கு இழுத்தான் அகரன் ரசிகாவை.
ஆமாடா, உன்னை தள்ளி தான் விடப் போறேன் என்று முன் சீட்டில் தலையை நீட்ட அதே நேரம் ஆதிரேயனும் அவளை பார்க்கிறேன் என்று திரும்பினான். இருவரும் முட்டிக் கொள்ள, உன்னால ஒரு இடத்துல இருக்கவே முடியாதா? அகரன் கோபமாக சத்தமிட்டான்.
ரசிகா அவனை கண்டு கொள்ளாமல் சாரி சார் என்று ஆதிரேயன் நெற்றியில் கையை வைத்தாள்.
ஏய், என்னோட பாஸை என்ன செய்ற? அகரன் கேட்க, கோபமாக அவள் இடத்தில் அமர்ந்து கொண்டாள்.
எதுக்கு இப்ப இருவரும் சின்னப்பிள்ளைகள் போல் சண்டை போடுறீங்க? மெல்லினா கேட்க, இருவரும் கையை கட்டிக் கொண்டு திரும்பி அமர்ந்தனர்.
“திடீர்ன்னு பைத்தியம் மாதிரி புரியாம பேசுறான் பாரு” ரசிகா திட்ட, ஆமா மேடம் ரொம்ப ஜீனியஸ் பாரு. நான் காரை செலுத்துகிறேன் என்று அகரன் கூற, நோ..என்று ஆதியும் மெல்லியும் சத்தமிட்டனர். மற்றவர்கள் இருவரையும் பார்த்தனர்.
இது மலைப்பாதை உங்க சண்டையில எல்லாரும் போய் சேர வேண்டியது தான் என்று ஆதி சொல்லி விட்டு புன்னகையுடன் அகரனையும் ரசிகாவையும் பார்த்தான்.
பார்த்தேல்ல உன்னோட அண்ணா சிரிக்கிறாரு. இதுக்கு தான் சொன்னேன் என்று ரசிகா புருவத்தை உயர்த்தி காலரே இல்லாத டாப்பில் காலரை தூக்கி விட, மெல்லினாவோ தன் அண்ணன் புன்னகையுடன் அவளை கவனிப்பதை பார்த்து “நீ நடத்துடா” என ரசிகாவை பார்த்தாள் மெல்லினா.
ரசிகா அவள் பெயருக்கு ஏற்றவாறு எல்லாவற்றையும் ரசித்து இப்பயணத்தை தன் நினைவில் சேகரித்துக் கொண்டிருந்தாள்.
முதலில் காரை பொட்டானிக்கல் கார்டனில் நிறுத்தி உள்ளே சென்று செடி, கொடிகள், வண்ண வண்ண மலர்கள், அதை அலங்கரிக்க பட்டிருக்கும் விதம் என அனைத்தையும் ரசித்து பார்த்தனர். புகைப்படம் எடுக்கும் போதும் இருவருக்கும் சண்டை வர, ரசிகா ஆதிரேயன் மெல்லினாவிற்கு இடையே நிதுவையும், ஆதி லிதுவையும், ஆதி பக்கம் நின்ற அகரன் மனதில் வருத்தம் இருந்தாலும் சிரிப்புடன் நின்றான்.
அகரன் ஆதியின் காதலால் ரசிகா பாதிக்கக் கூடாது என்பதற்காக தான் வந்தானே தவிர அவளை காதலிக்க வைக்க அல்ல. ஆதியும் இருவரின் நட்பையும் சேர்த்து வைக்க எண்ணி அழைத்து வர, மெல்லினாவோ தன் அண்ணா காதலை ரசிகா புரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் வந்தனர். ரசிகாவோ ஆதிக்கு தன் தங்கை, குழந்தையுடனான நெருக்கத்தை அதிகரிக்க அழைத்து வந்தாள். இதில் யார் விருப்பம் நிறைவேறப் போகிறது பார்க்கலாம்?